30.11.05

குஷ்பு-நகைச்சுவை கலந்துரையாடல்!! - 4

கலந்துரையாடலின் நடுவர்: சாலமன் பாப்பையா

பங்கு கொள்வோர்:

நடிகவேள் எம்.ஆர்.ராதா (எம்.ஆர்)
டி.எஸ். பாலையா (பா)
தங்கவேல், (தங்)
கவுண்டமனி, (கவு)
செந்தில், (செந்)
ஜனகராஜ் (ஜன)
வடிவேல் & (வடி)
பார்த்திபன். (பார்)

--

நடு: (பார்த்திபனையும் கவுண்டமனியையும் மாறி, மாறி பார்க்கிறார்) என்னய்யா.. யார் பேசறதுன்னு தீர்மானிச்சிட்டீங்களா?

பார் & கவு: (ஒரே நேரத்தில்) அவரு பேசட்டும்.

(நடுவரோடு சேர்ந்து அரங்கத்தில் இருந்தவர் அனைவரும் சிரிக்கின்றனர்.)

நடு: அதான்யா வேணும். ஒருத்தர் இன்னொருத்தருக்காக விட்டு கொடுக்கறது.. எய்யா, பார்த்திபன் நீங்க வாங்க.. ஏன்னா இதுவரைக்கும் பேசினவங்க எல்லாம் காமடியாத்தான் பேசினாங்க.. பெருசா ஒன்னும் எடுபடல.. நீங்க சீரியசாவும் நடிச்சிருக்கீங்க.. (வடிவேலுவை காட்டி) இவரோட சேர்ந்து காமெடியும் பண்ணியிருக்கீங்க.. அதனால (கவுண்டமனியை காட்டி) அய்யா உங்களுக்கப்புறம் பேசட்டும். நீங்க வாங்க.

பார்: (கவுண்டமனியைப் பார்த்து ஒரு நன்றி பார்வையை வீசிவிட்டு மேடையேறுகிறார்) அய்யா நடுவர் அவர்களே நீங்கள் தலைமையேற்றி நடத்தியிருக்கின்ற நிறைய பட்டி மன்றங்களை நான் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். உங்களுடைய தலைமையில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் முதற்கண் நன்றி கூறிக்கொள்கிறேன். உங்களுக்கும் என் திரைப்பட நண்பர்களுக்கும் வணக்கம்.

வடி: (தனக்குள்) இவன் என்னா பெரிய பேச்சாளி மாதிரி ஆரம்பிக்கிறான்? நல்லா மனப்பாடம் பண்ணிக்கிட்டு வந்திருக்கான் போலருக்குது. டீப்பா கேப்போம். அப்பத்தான் நம்ம டர்ன் வர்றப்போ பேசறதுக்கு வசதியா இருக்கும்.

கவு: (செந்திலிடம்) டேய் என்னாடா இவன் பெரிசா டைலாக்கெல்லாம் உடுறான்.

செந்: ஆமான்ணே.. உங்களால இப்படியெல்லாம் பேசமுடியுமாண்ணே, பாத்துக்குங்க, அப்புறம் மைக்கை புடிச்சிக்கிட்டு முளிக்காதீங்க?.

கவு: இவனை மாதிரி இவன்தான்டா பேசுவான். நான் எப்படி பேசறது?

செந்: என்னண்ணே ஜோக்கா? பேசாம அவரு பேசறத கேளுங்க.

பார்: நான் இப்போது பேச வந்திருக்கும் தலைப்பைப் பற்றி ஒரு நிமிடம். திருமதி குஷ்புவின் கருத்துக்கள் சரியா, தவறா என்பதல்ல நடுவர் அவர்களே முக்கியம். அவர் எந்த சூழலில் அப்படி பேசினார் என்பதையும் பார்க்க வேண்டும்.

நடு: (குறுக்கிட்டு) சரியா சொன்னார்யா. (தங்கவேலு, பாலையாவை பார்க்கிறார்) இந்த விஷயத்த கோட்டை விட்டுட்டீங்களேய்யா..(சிரிக்கிறார். தங்கவேலுவும், பாலையாவும் ஒருவரையொருவர் பார்த்துகொள்கிறார்கள்.)

பார்: ஆம் நடுவர் அவர்களே. வட இந்திய பத்திரிகையான இந்தியா டுடே.. அந்த பத்திரிகையின் பெயரைப் பாருங்கள். ‘இன்றைய இந்தியா’. அந்த பத்திரிகையில வருகிற கட்டுரைகள் எல்லாமே முற்போக்கான சிந்தனைகளை பரப்புகின்றவைகள்தாம். திருமதி குஷ்பு அவர்களை இன்று இந்தியாவில் மிகவும் கவலையளிக்கின்ற வகையில் பரவியிருக்கும் எய்ட்ஸ் நோய்க்கொல்லியைப் பற்றி பத்திரிகை நிரூபர் சில கேள்விகளைக் கேட்கின்றார். திருமதி குஷ்பு அவர்கள் அவற்றுக்கு பொருத்தமான பதில்களை அளிக்கிறார். சில பதில்கள் சர்ச்சைக்குரியதாகிப் போகிறது. மறுப்பதற்கில்லை. ஆனால் இன்று தமிழகத்திலுள்ள சில கட்சிகள் அவற்றை கொச்சைப்படுத்தி கொட்டமடிக்க துவங்கியிருக்கிறார்கள். இவையெல்லாம் தன்னிச்சையாக கட்சி சாரிபின்றி நடக்கிறதென்பதெல்லாம் காதில் பூச்சுட்டும் வேலை நடுவர் அவர்களே.

நடு: (சிரிப்புடன்) ஹாய்.. ஹாய்.. இப்பத்தான்யா சூடு பிடிக்கிது..

பார்: நடுவர் அவர்களே.. (குரலை உயர்த்தி) நம் நாட்டில் ஆண்டான்டு காலமாக கலாச்சாரம், கலாச்சாரம் என்ற ஒரு அழுக்குப் பிடித்த போர்வைக்கு பின்னால் சில பச்சோந்தி பகுத்தாளர்கள் ஒளிந்துகொண்டு நயவஞ்சக அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜாதிப் பின்னணியுடன் அட்டூழியங்கள் செய்துக்கொண்டிருக்கும் கட்சிகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்..

நடு:(குறுக்கிட்டு) எய்யா.. இதெல்லாம் தேவைதானா.. உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டு உங்களுக்கும் ஏதாவது..

பார்: (கோபத்துடன்) நடுவர் அவர்களே இக்கலந்துரையாடல் வெறும் வேடிக்கை பேசிவிட்டு செல்வதெற்கென்று நான் நினைக்கவில்லை. அதனால்தான் இது ஒரு நகைச்சுவை நடிகர்களின் கலந்துரையாடல் என்று தெரிந்திருந்தும் அழைப்பை ஏற்று வந்துள்ளேன். என் கருத்தை தெள்ளந்தெளிவாக கூறிவிட்டுத்தான் அமர்வேன். தயவு செய்து என்னை பேசவிடுங்கள் நடுவர் அவர்களே.. (உணர்ச்சிவசப்பட்டு கண்களில் ததும்பி நிற்கும் கண்ணீரை சுண்டிவிடுகிறார்)

கவு: (செந்திலிடம்) டேய் இவன் ஏதோ வசனம் எழுதிக்கிட்டு வந்து எடுத்துவிடறான்டா.. (செந்தில் மெய்மறந்து பார்த்திபனை பார்த்துக்கொண்டிருப்பதை பார்க்கிறார்) டேய்.. உன்னத்தாண்டா என்ன அப்படி வாய பொளந்துக்கிட்டு பாக்கறே.. ஈ, கீய் விழுந்துறப்போவுதுறா.. (அவர் கேட்காததுபோல் இருக்கவே) பார்றா.. கூப்டதுகூட காதுல விழல.. (சட்டையை பிடித்து இழுக்கிறார்) டேய்.. ஃபுட்பால் தலையா.. டேய்.. போறுன்டா அப்படியே போய் அவன் மேல ஒட்டிக்கப் போறே..

நடு: (கவுண்டமனியை பார்த்து சிரிக்கிறார்) எய்யா.. அவரை விட்டுருங்களேன்யா.. அவர்தான் மெய்மறந்து இருக்காருல்லே..

செந்: (திடுக்கிட்டு எழுந்து நிற்கிறார்) ஐயா.. கூப்டீங்களாய்யா..

கவு: அட கஷ்ட காலமே.. டேய், கண்ண திறந்துக்கிட்டே தூங்கறியா? அதான பார்த்தேன்.. உக்கார்றா.. பேச்ச கேளு.. என்னமா டயலாக் உடறான்டா..

பார்: (நடுவரைப் பார்க்கிறார்) நடுவர் அவர்களே நான் ஒன்று கேக்கறேன். எழுத்து சுதந்திரத்தை எத்தனையோ பத்திரிகைகள், குறிப்பாக தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகளை சார்ந்துள்ள பத்திரிகைகள் தவறாக பயன்படுத்தியுள்ளன. உண்டா, இல்லையா?

நடு: (சங்கடத்துடன் இருக்கையில் நெளிகிறார்) அய்யா.. நீங்க எங்க வர்றீங்கங்கறது புரியுது.. ஆனா அதுக்கு இது இடமில்லேயேய்யா?

பார்: (பிடிவாதத்துடன்) இல்லை ஐயா. நான் கேட்டதற்கு பதில் கூறுங்கள். உண்டா, இல்லையா?

நடு: (சிரிக்கிறார்) விடமாட்டீங்க போலருக்குதே.. உண்டுய்யா.. அது எல்லாருக்கும் தெரிஞ்ச கதையாச்சே..

பார்: அப்படி எழுதுகிற பத்திரிகைகள எதிர்த்து இந்த கட்சிகள் என்றைக்காவது போராட்டங்கள் நடத்தியிருக்கின்றனவா?

நடு: (சிரித்து மழுப்புகிறார்)

பார்: இல்லையே. நடிகைகளைப் பற்றி நாள் தவறாமல் கேவலப்படுத்தி எழுதி வருகிறது ஒரு பத்திரிகை. குறிப்பாக அதனுடைய வார இதழில் நடிக, நடிகைகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி கேவலமாக எழுதிக்கொண்டேதான் இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையில்லை. கேட்டால் பொது வாழ்க்கையென்று வந்துவிட்டால் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறார்கள். இதென்னய்யா நியாயம்?

கவு: (செந்திலிடம்) டேய்.. இவன் உண்மையிலேயே நல்லாத்தான் பேசறான். நம்மளால இந்த மாதிரி பேச முடியும்னு நினைக்கறே..

செந்: (பதிலில்லை)

கவு: டேய் மறுபடியும் தூங்கறியா?

செந்: (திடுக்கிட்டு திரும்புகிறார்) அண்ணே சும்மாருங்கண்ணே.. ஒரு நல்ல விஷயத்த கேக்க விடமாட்டீங்களே..

கவு: (சலிப்புடன்) சர்றா.. கேட்டுத் தொலை..

நடு: (சங்கடத்துடன்) அய்யா.. நீங்க சொல்றதும் நியாயமாத்தான் தெரியுது.. ஆனா..

பார்: அதப்பத்தியெல்லாம் பேசறதுக்கு இது ஏத்த இடமில்லேங்கறீங்க?

வடி: (எழுந்து நின்று பார்த்திபனை பார்க்கிறார்) ஏம்பா.. நடிகர் சங்கத்துல பேச வேண்டிய நேரத்துலயெல்லாம் பேசாம இருந்துட்டு இங்க வந்து எக்குத்தப்பா பேசறே?

பார்: (சிரிக்கிறார்) அய்யா.. என்னோட நண்பருக்கு இப்படி யாருக்கும் புரியாத பாஷையில் பேசுவதுதான் பிடிக்கும் (ஒரு கையால் முகத்தை நடுவரிடமிருந்து மறைத்துக்கொண்டு) டேய் உக்கார்றா..

கவு: (எழுந்து நிற்கிறார்) ஏம்பா அவரு கேக்கறது நியாயம்தானே.. உக்கார்றான்னா சரியாப் போச்சா.. (செந்திலிடம்) டேய் நீ என்னா சும்மாயிருக்கறே.. சொல்றா.. நம்ம சங்க கூட்டத்துல அந்த அம்மாவ பத்தி தீர்மானம் பாஸ் பண்ணப்ப இந்தாளு சும்மாத்தான இருந்தாரு?..

செந்: (கவுண்டமனியின் கையைப் பிடித்து அமரச் சொல்கிறார்) அண்ணே.. சும்மா இருங்கண்ணே.. நாமளே நமக்குள்ள சண்டை போட்டுக்கிட்டு.. பாருங்க.. எல்லாரும் நம்மளயே பாக்கறாங்க.. தயவு செஞ்சி உக்காருங்க..

பார்: (நடுவரை பார்த்து) இந்த இரு நண்பர்களும் கூறுவது சரிதான் நடுவர் அவர்களே.. நான் அன்று மெளனம் சாதித்தது உண்மைதான். அதற்காக வெட்கப்படுகிறேன். அது ஒரு கோழைத்தனமான செயல் என்பதை இப்போது உணர்கிறேன்.

கவு: பல்டியடிச்சிட்டான் பாத்தியா? பயங்கரமான ஆளுடா சாமி.

செந்: சரி விடுங்கண்ணே..

கவு: டேய் பின்ன என்ன பிடிச்சா வச்சிருக்க முடியும்? ஆனா ஒன்னுடா.. இவன் நம்ம சங்க மீட்டிங்க்ல வந்து இன்னைக்கி பேசினதுக்காக வெட்கப்படுகிறேன்னு சொன்னாலும் சொல்வான்.. பாத்துக்கிட்டேயிரு.

நடு: எய்யா பார்த்திபன். நீங்க சொல்லி முடிச்சாச்சாய்யா?

பார்: என்னுடைய கருத்து இதுதான் நடுவர் அவர்களே. குஷ்பு சொன்னது தப்பேயில்லை.. அவர்களுடைய உள் நோக்கம் நிச்சயம் எல்லா பெண்களும் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதல்ல.. மாறாக அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். அதை அவர்கள் எடுத்து கூறிய முறையில் வேண்டுமானால் தவறு நேர்ந்திருக்கலாம். அதற்கு நிரூபரின் தவறான கேள்வி கேட்கும் உத்திகளும் முக்கிய காரணம் என்றுதான் நான் சொல்வேன்.

நடு: (குழப்பத்துடன்) புரியலையேய்யா.

பார்: நடுவர் அவர்களே அரசியலில் மிகவும் அனுபவமுள்ள தலைவர்களே கூட சில சமயங்களில் நிரூபர்களின் கேள்வியின் பின்னாலுள்ள பொருளை சரிவர புரிந்துகொள்ளாமல் பதில் கூறிவிட்டு பிறகு சர்ச்சைக்குள்ளாயிருப்பதைப் பார்த்திருக்கிறோம். இல்லையா?

நடு: (ஆமாம் என்பதுபோல் தலையாட்டுகிறார்)

பார்: அதே மாதிரிதான் குஷ்புவும். அதற்காக அவர்கள் கண்களில் நீர் மல்க பகிரங்க மன்னிப்பு கேட்ட பிறகும் அவரை இப்படி நடுவீதிகளில் கொடும்பாவி எரித்தும், தமிழகத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களிலும் வழக்கு தொடுத்து அலைக்கழிப்பதும் அவமானப்படுத்துவதும் தேவைதானா? இதுதான் என் கருத்து. வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. வருகிறேன்.

(அரங்கத்திலிருந்த பார்வையாளர்களும், சக நடிகர்களும் (வடிவேலு, கவுண்டமனியை தவிர) கரஒலியெழுப்புகின்றனர்.

(செந்தில் தன்னை மறந்து கைதட்டுகிறார். கவுண்டமனி அவரை எரித்துவிடுவது போல் பார்க்கிறார்)

நடு: (சிரிக்கிறார்) சும்மா சொல்லக் கூடாது. பார்த்திபன் சும்மா விளாசிட்டார்யா.. நல்ல கருத்துடன் மட்டுமல்லாமல் நல்ல தமிழிலும் பேசினார். வாழ்த்துக்கள். இன்றைய சமுதாயத்தில் ஒரு பெண் இதைத்தான் பேசலாம் என்றுள்ள கட்டுப்பாடு அகல வேண்டும் என்பதை நானும் வழிமொழிகிறேன். (கவுண்டமனியை பார்க்கிறார்) அய்யா நீங்க என்ன சொல்ல போறீங்க.. வாங்கய்யா..

தொடரும்

பி.கு: தொலைக்காட்சியில் ஒலிபரப்பான கலந்த்ரையாடலை கண்ட சில கட்சித்தொண்டர்கள் தன்னிச்சையாக 'பலான' நிலையத்திற்கு முன் குழுமி கையில் 'பலான', 'பலான' பொருட்களுடன் கலந்துரையாடல் முடிந்து வெளியே வரும் பார்த்திபனை 'கவனிப்பதற்காக' காத்திருக்கிறார்கள். அக்கட்சிகளின் சட்ட ஆலோசகர்களும் தன்னிச்சையாக அவர்மேல் வழக்கு தொடரவேண்டுமென்ற நல்லெண்ணத்தில் த.நாட்டின் மூலை முடுக்குகளிலுள்ள எல்லா வழக்காடு மன்றங்களின் விலாசங்களை தேடிப்பிடிக்கும் வேலையை மும்முரமாய் துவக்குகிறார்கள்

29.11.05

(48)குஷ்பு- கலந்துரையாடல்!! - 3

கலந்துரையாடலின் நடுவர்: சாலமன் பாப்பையா (ஏற்கனவே மன்னிப்பு கேட்டாகிவிட்டது!)

பங்கு கொள்வோர்:

நடிகவேள் எம்.ஆர்.ராதா (எம்.ஆர்)
டிஎஸ். பாலையா (பா)
தங்கவேல், (தங்)
கவுண்டமனி, (கவு)
செந்தில், (செந்)
ஜனகராஜ் (ஜன)
வடிவேல் & (வடி)
பார்த்திபன். (பார்)

--

நடு: (தங்கவேலுவை பார்க்கிறார்) வாங்கய்யா. நீங்க என்ன சொல்றீங்கன்னு கேப்போம்.

தங்கவேலு: (தனக்கே உரிய பாணியில் ஒரு நக்கல் சிரிப்புடன் எல்லோரையும் பார்க்கிறார். ஒரு அரசியல்வாதியின் குரலில் துவக்குகிறார்) என் அருமை நடுவர் அவர்களே

நடு: (சந்தோஷத்துடன்) ஹாய், ஹாய். பாருய்யா..

தங்: (நடிகவேள் அமர்ந்திருந்த இருக்கையை காட்டி) முதலிலே அமர்க்களமாய் பேசிவிட்டு இடையிலேயே ஓடிப்போன என் அருமை அண்ணன் நடிகவேள் அவர்களே.. (பாலையாவை காட்டி) பேசுவதற்குக்கூட வீட்டில் பர்மிஷன் கேட்டுவிட்டு வந்து பேசுவதா வேண்டாமா என்று தவித்துப்போன என் அருமை நண்பர் பாலையா அவர்களே.. (பாலையா தனக்கே உரிய பாணியில் தலைய சடக்கென்று கவிழ்த்துக்கொள்கிறார்)

கவு: (செந்திலை பார்க்கிறார்) பார்றா இந்தாளோட லொள்ள..

தங்: (கவுண்டமனியை காட்டி) நான் பேசுவதை பார்த்து கமெண்ட் அடிக்கும் தம்பி கவுண்டமனி மற்றும் அவருடைய அடிதாங்கும் (குரலை ஒருகட்டை கீழிறக்கி) புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். தம்பி செந்தில் அவர்களே..

செந்: (கவுண்டமனியை நக்கலுடன் பார்க்கிறார்) இது உங்களுக்கு தேவையாண்ணே.. மாட்டிக்கிட்டீங்கல்லே.

கவு: (செந்திலை பார்க்காமல்) டேய்.. வேணாம்.. எனக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமில்லே.. அப்ப பாத்துக்கறேன் இந்தாள..

தங்: (பார்த்திபனை பார்த்து) கிறுக்கல் தம்பி பார்த்திபன் அவர்களே..

வடி: (நமட்டு சிரிப்புடன்) பார்த்திபா.. நீ ஏதோ கவிதை தொகுப்புன்னு கிறுக்கினியே அத்த சொல்றார் போலருக்குது..

பார்: (திரும்பாமல்) டேய், வேணாம் பொத்திக்கிட்டிரு.. அவரு யார்றா? பெரிய நகைச்சுவை மன்னன். அவர் சொல்லட்டுமே.. நீ ஏதாச்சும் இதுக்குமேல பேசுன? மவனே இங்கயே பொலி போட்ருவேன்.. மூடிக்கிட்டு சும்மாயிரு..

வடி:(தனக்குள்) ஆமா.. இங்கன பாஞ்சி என்னா பண்றது? கிளிஞ்சது லம்பாடி லுங்கில்ல..

பார்: டேய்.. என்ன முனவுற?

வடி: ஒன்னுமில்லப்பா. நீ நேரா பாரு.. அப்புறம் இதுக்கும் எதுனாச்சும் சொல்லிடபோறாரு.. (தங்கவேலுவை பார்த்து முப்பத்திரண்டு பற்களையும் காட்டுகிறார்)

தங்:என்னைக் குறித்து பேசுவதையெல்லாம் பேசிவிட்டு இப்போது பொய் சிரிப்பு சிரிக்கும் மதுரைக்கார தம்பி வடிவேலு அவர்களே.

(அரங்கில் இருக்கும் எல்லோரும் சிரித்துக்கொண்டே வடிவேலுவைப் பார்க்க அவர் அவமானத்தால் சிறுத்து தலையை குனிகிறார்)

பார்: வேணுன்டா உனக்கு.

தங்: ஜோடியில்லாமல் தனியே அமர்ந்திருக்கும் தம்பி ஜனகராஜ் அவர்களே..

ஜன: (தங்கவேலுவை பார்த்து கண்ணடிக்கிறார்) நாம எப்பவுமே ஒண்டிக்கட்டைதான்ணே..

தங்: (நடுவரை பார்க்கிறார்) யாரையாச்சும்யும் உட்டுட்டேனா நடுவர்ர்ர்ர் அவர்களே?

நடு:(சிரிக்கிறார்) ஹாய்.. இப்பத்தான்யா களை கட்டுது.. நீங்க இதே பாணியிலேயே பேசுங்கய்யா..

தங்: (சலித்துக்கொள்கிறார்) என்னத்தய்யா பேசச் சொல்றீங்க? இப்படித்தான் ஒரு நாள் நான் மேடையில பேசிட்டு அங்க போட்ட மாலையோட வீட்டுக்கு போனேன். வீட்ல நம்பலையே.. எங்கடா வாங்கிக்கிட்டு வந்தேன்னு கேட்டு காறித்துப்பிட்டாங்க.. அதுலருந்தே இந்த மேடை பேச்சுன்னாலேயே நமக்கு அலர்ஜிங்க (தன் பாணியில் தன் கண்களை உருட்டுகிறார். நடுவர் உட்பட எல்லோரும் சிரிக்கிறார்கள்).

நடு: அதுதான் எல்லாருக்கும் தெரிஞ்சதாச்சே.. ‘நீங்க தட்டுறான் தட்டுறான் தட்டிக்கிட்டே இருந்தான்னு கைதட்டுனத சொல்வீங்க. உங்க வீட்டம்மா நக்கலா உங்க முதுகையாம்பாங்க.. அதத்தான சொல்ல வர்றீங்க? தெரியும்யா, எல்லாருக்கும் தெரியும்.

தங்:(ஆச்சரியத்துடன் நடுவரை பார்க்கிறார்) அதெப்படிய்யா எங்க வீட்டம்மா சொன்னத அப்படியே கிட்டருந்து கேட்டா மாதிரி சொல்றீங்க? இருந்தாலும் நீங்க அசகாய சூரன்தாங்க. ஒன்னா ரெண்டா, இதுமாதிரி எத்தன பாட்டி.. தப்பு தப்பு. பட்டி மன்றம் நடத்திறீங்க..

நடு: (உரக்க சிரிக்கிறார்) உங்க பாணியே தனிய்யா.. சந்தடி சாக்குல என்ன பாட்டி மன்றம் நடத்தவராக்கிட்டீங்க.. சரி விஷயத்துக்கு வாங்க. நேரமாவுதில்ல..

தங்: அட என்ன நடுவரய்யா? விஷயத்துக்கு வர பயந்துக்கிட்டுத்தானே இப்படி சுத்தி, சுத்தி வரேன்.

கவு: (செந்திலை பார்க்கிறார்) அப்படி போடு அறுவாள.. பாத்தியாடா இந்தாளோட லொள்ள?

செந்: (நேரே பார்த்துக்கொண்டு) அண்ணே வேனாண்ணே.. அவரு நம்ம ரெண்டு பேரையும்தான் பார்க்கிறாரு.. பேசாம பேச்ச கேளுங்க..

தங்: சரிய்யா.. நான் என்ன நினைக்கறேன்னா..

கவு: (தங்கவேலுவை பார்த்து) அதத்தானய்யா கேக்கறதுக்கு காத்துக்கிட்டிருக்கோம்.. அத வுட்டுட்டு..

தங்: (கவுண்டமனியை பார்த்து சிரிக்கிறார்) வரேன் தம்பி.. பொறுங்க.. (நடுவரை பார்க்கிறார்) அய்யா நான் என்ன சொல்ல வரேன்னா..

நடு: (எல்லோரையும் பார்த்து சிரிக்கிறார்) வாங்கய்யா.. சீக்கிரம் வாங்க.. வரவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சா என்ன பண்றது?

தங்: அதாவது நடுவரய்யா.. அந்த புள்ள குஷ்பு நம்ம அண்ணன் நடிகவேள் சொன்னாமாதிரி..

கவு: (எரிச்சலுடன் பல்லைக்கடித்துக்கொண்டு ரகசிய குரலில் பேசுகிறார்) யோவ் நீ என்ன சொல்ல வரேன்னு கேட்டா நடிகவேள் சொன்னார் கடிகவேள் சொன்னார்னுட்டு.. (செந்திலை ஓரக்கண்ணால் பார்க்கிறார்.)

செந்: அண்ணே.. நான் இந்த விளையாட்டுக்கு வரலை.. என்ன விட்டுருங்க..

தங்: அந்த புள்ள சொன்னதுல தப்பு இருக்கா இல்லையான்னு அவங்கவங்களா பார்த்து தப்புன்னா விட்டுருங்க.. சரின்னா அதமாதிரியே செஞ்சிட்டு போங்க.. அம்புடுதேன்.. இதுல நீங்களும் நானும் என்னத்த சொல்றது?

வடி: (பார்த்திபனை சீண்டுகிறார்) ஏம்ப்பா பார்த்திபா.. அவரு சொல்றது ஏதாவது புரிஞ்சிதா?

பார்: (திரும்பி முறைக்கிறார்) என்ன புரியல உனக்கு?

வடி: புரியாமத்தானப்பா கேக்கேன்? என்ன புரியலைன்னு என்னையே கேக்கே?

பார்: அதான்டா.. என்ன புரியலை.. தமிழ்லதானே சொன்னாரு?

வடி: (தனக்கே உரிய பாணியில் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு) உக்கும்.. பார்றா.. எளவு உனக்கும் புரியலையாக்கும். அப்படி சொல்லிற வேண்டியதுதானே. இந்த பம்மாத்து வேலதானே வேண்டாங்கறது?

பார்: அதென்னடா பம்மாத்து.. நாசமா போறவனே.. இந்த மாதிரி புரியாத பாஷையிலல்லாம் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்றது?

நடு: (அவர்கள் இருவரையும் பார்த்து சிரிக்கிறார்) என்ன தம்பிகளா, நீங்க தனியா எதாச்சும் பட்டி மன்றம் நடத்துறீங்களா? சொல்லுங்களேன் எல்லாரும் கேப்போம்..

(பார்த்திபனும் வடிவேலுவும் அசடு வழிகிறார்கள். கவுண்டமனியும் செந்திலும் ஒருவர் ஒருவரைப் பார்த்து கண்ணடிக்கிறார்கள்)

தங்: (கேலி சிரிப்புடன்) எங்க காலத்துல ஒவ்வொருத்தருக்கும் பொம்பள ஜோடி இருந்திச்சி.. இப்ப எல்லாம் ஆம்பளைங்கதான் ஜோடியாயிடறாங்க..

(நடுவர் பதறிப்போய் தங்கவேலுவை பார்க்கிறார். அரங்கத்தில் நிசப்தம்)

நடு: (தங்கவேலுவை பயத்துடன் பார்க்கிறார்) எய்யா.. இதென்ன குண்ட தூக்கி போடுறீங்க?

தங்: (உரக்க சிரிக்கிறார். பார்த்திபன் - வடிவேலு, கவுண்டமனி-செந்தில் ஜோடியை காட்டுகிறார்) நான் இவங்களையில்ல சொன்னேன்.

நடு: வயித்துல பால வார்த்தீங்கய்யா.. எங்க வெளியில ஒரு கூட்டத்த விளக்குமாத்தோட நிக்க வச்சிருவீங்களோன்னு ஒரு நிமிஷம் ஆடியில்ல போயிட்டேன். சரிய்யா.. நீங்க சொல்ல வந்தத சொல்லி முடிச்சாச்சா?

தங்: தோ முடிச்சிட்டேன். அந்த புள்ள சொன்னதுல தப்பும் இருக்கு ரைட்டும் இருக்கு.

நடு: இதென்னவோ ஐயரை ரெண்டறைன்னு ஒரு படத்துல தமாஷ் பண்ணுவீங்களே அதுமாதிரியில்ல இருக்கு. தெளிவா சொல்லுங்கய்யா..

தங்: (தனக்கே உரிய பாணியில் கேலி கலந்த குரலில்) அதாவது நடுவரய்ய்ய்ய்ய்ய்ய்யா...

நடு: (சிரிக்கிறார்) ரொம்ம்ம்ம்ம்ப இழுத்துறாதீங்க கிழிஞ்சரப் போவுது..

தங்: (சிரிக்கிறார்) நீங்க எங்களவிட எமகாதன்யா..

நடு: (குழப்பத்துடன்) எதுலய்யா?

தங்: தமாஸ் பண்றதுல..

நடு: (நிம்மதியுடன்) அதான பார்த்தேன். நான் என்னமோ ஏதோன்னு பயந்திட்டேன். சொல்லுங்க.. எது சரி, எது தப்பு?

தங்: (குழப்பத்துடன்) என்னய்யா?

நடு: அதான்யா.. அந்த புள்ள சொன்னதுல ரைட்டும் இருக்கு ராங்கும் இருக்குன்னீங்களே.. அது..

தங்: ஆங். அதா. சொல்றேன். அந்த புள்ள கல்யாணத்துக்கு முன்னால என்னமோ பண்ணலாம்னு சொல்லிச்சே அது தப்பு..

நடு: சரிஈஈஈ (வேடிக்கையாக இழுக்கிறார்)

தங்: என்னமோ பாதுக்காப்பா எதையோ போட்டுக்கிட்டு வேணும்னா என்னமோ செய்யணும்னு சொல்லிச்சே அது சரி..

கவு: (செந்திலை பார்க்கிறார்) என்னடா சொல்றான் இந்தாளு.. ஒரு எளவும் புரியலை.. டேய் முள்ளம்பன்றித் தலையா.. என்னடா? எல்லாம் புரிஞ்சா மாதிரி உன் மட்காட் தலைய இந்த ஆட்டு ஆட்றே?

செந்: (நெற்றிப்பொட்டை தொட்டு) அதுக்கெல்லாம் இது வேணும்ணே..

கவு: எது.. நெத்தியா?

செந்: பாத்தீங்களா? சைகை காட்டியும் உங்களால புரிஞ்சிக்க முடியலே..

கவு: (பற்களைக் கடிக்கிறார்) டேய்.. புகாரித்தலையா.. மூளை நெத்திலயாடா இருக்கு? உன்னை.. மவனே, வெளியே வா பாத்துக்கறேன்.

தங்: என்னய்யா.. நான் சொல்றது சரிதானே.. அது வேணாம்னா விட்டுருங்க.. வேணும்னா பாதுகாப்பா இருந்துக்குங்க..

நடு: (சிரிக்கிறார்) நீங்க சினிமாலத்தான் தெளிவா பேசுவீங்க போலருக்குது.. புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு.. நன்றி. போய் உக்காருங்க.. (பார்த்திபனையும் கவுண்ட மனியையும் பார்க்கிறார்) உங்க ரெண்டு பேர்ல யாருய்யா சீனியர்? பின்னால டைட்டில் ப்ராப்ளம் வந்துரக்கூடாது பாருங்க. அதான் கேக்கேன்.

(பார்த்திபனும் கவுண்டமனியும் ஒரே நேரத்தில் எழுந்திருக்க அரங்கத்தில் எல்லோரும் சிரிக்கின்றனர்)

தொடரும்..

(48)குஷ்பு - நகைச்சுவை கலந்துரையாடல்!! - 3

கலந்துரையாடலின் நடுவர்: சாலமன் பாப்பையா (ஏற்கனவே மன்னிப்பு கேட்டாகிவிட்டது!)

பங்கு கொள்வோர்:

நடிகவேள் எம்.ஆர்.ராதா (எம்.ஆர்)
டிஎஸ். பாலையா (பா)
தங்கவேல், (தங்)
கவுண்டமனி, (கவு)
செந்தில், (செந்)
ஜனகராஜ் (ஜன)
வடிவேல் & (வடி)
பார்த்திபன். (பார்)

--

நடு: (தங்கவேலுவை பார்க்கிறார்) வாங்கய்யா. நீங்க என்ன சொல்றீங்கன்னு கேப்போம்.

தங்கவேலு: (தனக்கே உரிய பாணியில் ஒரு நக்கல் சிரிப்புடன் எல்லோரையும் பார்க்கிறார். ஒரு அரசியல்வாதியின் குரலில் துவக்குகிறார்) என் அருமை நடுவர் அவர்களே

நடு: (சந்தோஷத்துடன்) ஹாய், ஹாய்.  பாருய்யா..

தங்: (நடிகவேள் அமர்ந்திருந்த இருக்கையை காட்டி) முதலிலே அமர்க்களமாய் பேசிவிட்டு இடையிலேயே ஓடிப்போன என் அருமை அண்ணன் நடிகவேள் அவர்களே.. (பாலையாவை காட்டி) பேசுவதற்குக்கூட வீட்டில் பர்மிஷன் கேட்டுவிட்டு வந்து பேசுவதா வேண்டாமா என்று தவித்துப்போன என் அருமை நண்பர் பாலையா அவர்களே.. (பாலையா தனக்கே உரிய பாணியில் தலைய சடக்கென்று கவிழ்த்துக்கொள்கிறார்)

கவு: (செந்திலை பார்க்கிறார்) பார்றா இந்தாளோட லொள்ள..

தங்: (கவுண்டமனியை காட்டி) நான் பேசுவதை பார்த்து கமெண்ட் அடிக்கும் தம்பி கவுண்டமனி மற்றும் அவருடைய அடிதாங்கும் (குரலை ஒருகட்டை கீழிறக்கி) புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். தம்பி செந்தில் அவர்களே..

செந்: (கவுண்டமனியை நக்கலுடன் பார்க்கிறார்) இது உங்களுக்கு தேவையாண்ணே.. மாட்டிக்கிட்டீங்கல்லே.

கவு: (செந்திலை பார்க்காமல்) டேய்.. வேணாம்.. எனக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமில்லே.. அப்ப பாத்துக்கறேன் இந்தாள..

தங்: (பார்த்திபனை பார்த்து) கிறுக்கல் தம்பி பார்த்திபன் அவர்களே..

வடி: (நமட்டு சிரிப்புடன்) பார்த்திபா.. நீ ஏதோ கவிதை தொகுப்புன்னு கிறுக்கினியே அத்த சொல்றார் போலருக்குது..

பார்: (திரும்பாமல்) டேய், வேணாம் பொத்திக்கிட்டிரு.. அவரு யார்றா? பெரிய நகைச்சுவை மன்னன். அவர் சொல்லட்டுமே.. நீ ஏதாச்சும் இதுக்குமேல பேசுன? மவனே இங்கயே பொலி போட்ருவேன்.. மூடிக்கிட்டு சும்மாயிரு..

வடி:(தனக்குள்) ஆமா.. இங்கன பாஞ்சி என்னா பண்றது? கிளிஞ்சது லம்பாடி லுங்கில்ல..

பார்: டேய்.. என்ன முனவுற?

வடி: ஒன்னுமில்லப்பா. நீ நேரா பாரு.. அப்புறம் இதுக்கும் எதுனாச்சும் சொல்லிடபோறாரு.. (தங்கவேலுவை பார்த்து முப்பத்திரண்டு பற்களையும் காட்டுகிறார்)

தங்:என்னைக் குறித்து பேசுவதையெல்லாம் பேசிவிட்டு இப்போது பொய் சிரிப்பு சிரிக்கும் மதுரைக்கார தம்பி வடிவேலு அவர்களே.

(அரங்கில் இருக்கும் எல்லோரும் சிரித்துக்கொண்டே வடிவேலுவைப் பார்க்க அவர் அவமானத்தால் சிறுத்து தலையை குனிகிறார்)

பார்: வேணுன்டா உனக்கு.

தங்: ஜோடியில்லாமல் தனியே அமர்ந்திருக்கும் தம்பி ஜனகராஜ் அவர்களே..

ஜன: (தங்கவேலுவை பார்த்து கண்ணடிக்கிறார்) நாம எப்பவுமே ஒண்டிக்கட்டைதான்ணே..

தங்: (நடுவரை பார்க்கிறார்) யாரையாச்சும்யும் உட்டுட்டேனா நடுவர்ர்ர்ர் அவர்களே?

நடு:(சிரிக்கிறார்) ஹாய்.. இப்பத்தான்யா களை கட்டுது.. நீங்க இதே பாணியிலேயே பேசுங்கய்யா..

தங்: (சலித்துக்கொள்கிறார்) என்னத்தய்யா பேசச் சொல்றீங்க? இப்படித்தான் ஒரு நாள் நான் மேடையில பேசிட்டு அங்க போட்ட மாலையோட வீட்டுக்கு போனேன். வீட்ல நம்பலையே.. எங்கடா வாங்கிக்கிட்டு வந்தேன்னு கேட்டு காறித்துப்பிட்டாங்க.. அதுலருந்தே இந்த மேடை பேச்சுன்னாலேயே நமக்கு அலர்ஜிங்க (தன் பாணியில் தன் கண்களை உருட்டுகிறார். நடுவர் உட்பட எல்லோரும் சிரிக்கிறார்கள்).

நடு: அதுதான் எல்லாருக்கும் தெரிஞ்சதாச்சே.. ‘நீங்க தட்டுறான் தட்டுறான் தட்டிக்கிட்டே இருந்தான்னு கைதட்டுனத சொல்வீங்க. உங்க வீட்டம்மா நக்கலா உங்க முதுகையாம்பாங்க.. அதத்தான சொல்ல வர்றீங்க? தெரியும்யா, எல்லாருக்கும் தெரியும்.

தங்:(ஆச்சரியத்துடன் நடுவரை பார்க்கிறார்) அதெப்படிய்யா எங்க வீட்டம்மா சொன்னத அப்படியே கிட்டருந்து கேட்டா மாதிரி சொல்றீங்க? இருந்தாலும் நீங்க அசகாய சூரன்தாங்க. ஒன்னா ரெண்டா, இதுமாதிரி எத்தன பாட்டி.. தப்பு தப்பு. பட்டி மன்றம் நடத்திறீங்க..

நடு: (உரக்க சிரிக்கிறார்) உங்க பாணியே தனிய்யா.. சந்தடி சாக்குல என்ன பாட்டி மன்றம் நடத்தவராக்கிட்டீங்க.. சரி விஷயத்துக்கு வாங்க. நேரமாவுதில்ல..

தங்: அட என்ன நடுவரய்யா? விஷயத்துக்கு வர பயந்துக்கிட்டுத்தானே இப்படி சுத்தி, சுத்தி வரேன்.

கவு: (செந்திலை பார்க்கிறார்) அப்படி போடு அறுவாள.. பாத்தியாடா இந்தாளோட லொள்ள?

செந்: (நேரே பார்த்துக்கொண்டு) அண்ணே வேனாண்ணே.. அவரு நம்ம ரெண்டு பேரையும்தான் பார்க்கிறாரு.. பேசாம பேச்ச கேளுங்க..

தங்: சரிய்யா.. நான் என்ன நினைக்கறேன்னா..

கவு: (தங்கவேலுவை பார்த்து) அதத்தானய்யா கேக்கறதுக்கு காத்துக்கிட்டிருக்கோம்.. அத வுட்டுட்டு..

தங்: (கவுண்டமனியை பார்த்து சிரிக்கிறார்) வரேன் தம்பி.. பொறுங்க.. (நடுவரை பார்க்கிறார்) அய்யா நான் என்ன சொல்ல வரேன்னா..

நடு: (எல்லோரையும் பார்த்து சிரிக்கிறார்) வாங்கய்யா.. சீக்கிரம் வாங்க.. வரவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சா என்ன பண்றது?

தங்: அதாவது நடுவரய்யா.. அந்த புள்ள குஷ்பு நம்ம அண்ணன் நடிகவேள் சொன்னாமாதிரி..

கவு: (எரிச்சலுடன் பல்லைக்கடித்துக்கொண்டு ரகசிய குரலில் பேசுகிறார்) யோவ் நீ என்ன சொல்ல வரேன்னு கேட்டா நடிகவேள் சொன்னார் கடிகவேள் சொன்னார்னுட்டு.. (செந்திலை ஓரக்கண்ணால் பார்க்கிறார்.)

செந்: அண்ணே.. நான் இந்த விளையாட்டுக்கு வரலை.. என்ன விட்டுருங்க..

தங்: அந்த புள்ள சொன்னதுல தப்பு இருக்கா இல்லையான்னு அவங்கவங்களா பார்த்து தப்புன்னா விட்டுருங்க.. சரின்னா அதமாதிரியே செஞ்சிட்டு போங்க.. அம்புடுதேன்.. இதுல நீங்களும் நானும் என்னத்த சொல்றது?

வடி: (பார்த்திபனை சீண்டுகிறார்) ஏம்ப்பா பார்த்திபா.. அவரு சொல்றது ஏதாவது புரிஞ்சிதா?

பார்: (திரும்பி முறைக்கிறார்) என்ன புரியல உனக்கு?

வடி: புரியாமத்தானப்பா கேக்கேன்? என்ன புரியலைன்னு என்னையே கேக்கே?

பார்: அதான்டா.. என்ன புரியலை.. தமிழ்லதானே சொன்னாரு?

வடி: (தனக்கே உரிய பாணியில் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு) உக்கும்.. பார்றா.. எளவு உனக்கும் புரியலையாக்கும். அப்படி சொல்லிற வேண்டியதுதானே. இந்த பம்மாத்து வேலதானே வேண்டாங்கறது?

பார்: அதென்னடா பம்மாத்து.. நாசமா போறவனே.. இந்த மாதிரி புரியாத பாஷையிலல்லாம் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்றது?

நடு: (அவர்கள் இருவரையும் பார்த்து சிரிக்கிறார்) என்ன தம்பிகளா, நீங்க தனியா எதாச்சும் பட்டி மன்றம் நடத்துறீங்களா? சொல்லுங்களேன் எல்லாரும் கேப்போம்..

(பார்த்திபனும் வடிவேலுவும் அசடு வழிகிறார்கள். கவுண்டமனியும் செந்திலும் ஒருவர் ஒருவரைப் பார்த்து கண்ணடிக்கிறார்கள்)

தங்: (கேலி சிரிப்புடன்) எங்க காலத்துல ஒவ்வொருத்தருக்கும் பொம்பள ஜோடி இருந்திச்சி.. இப்ப எல்லாம் ஆம்பளைங்கதான் ஜோடியாயிடறாங்க..

(நடுவர் பதறிப்போய் தங்கவேலுவை பார்க்கிறார். அரங்கத்தில் நிசப்தம்)

நடு: (தங்கவேலுவை பயத்துடன் பார்க்கிறார்) எய்யா.. இதென்ன குண்ட தூக்கி போடுறீங்க?

தங்: (உரக்க சிரிக்கிறார். பார்த்திபன் - வடிவேலு, கவுண்டமனி-செந்தில் ஜோடியை காட்டுகிறார்) நான் இவங்களையில்ல சொன்னேன்.

நடு: வயித்துல பால வார்த்தீங்கய்யா.. எங்க வெளியில ஒரு கூட்டத்த விளக்குமாத்தோட நிக்க வச்சிருவீங்களோன்னு ஒரு நிமிஷம் ஆடியில்ல போயிட்டேன். சரிய்யா.. நீங்க சொல்ல வந்தத சொல்லி முடிச்சாச்சா?

தங்: தோ முடிச்சிட்டேன். அந்த புள்ள சொன்னதுல தப்பும் இருக்கு ரைட்டும் இருக்கு.

நடு: இதென்னவோ ஐயரை ரெண்டறைன்னு ஒரு படத்துல தமாஷ் பண்ணுவீங்களே அதுமாதிரியில்ல இருக்கு. தெளிவா சொல்லுங்கய்யா..

தங்: (தனக்கே உரிய பாணியில் கேலி கலந்த குரலில்) அதாவது நடுவரய்ய்ய்ய்ய்ய்ய்யா...

நடு: (சிரிக்கிறார்) ரொம்ம்ம்ம்ம்ப இழுத்துறாதீங்க கிழிஞ்சரப் போவுது..

தங்: (சிரிக்கிறார்) நீங்க எங்களவிட எமகாதன்யா..

நடு: (குழப்பத்துடன்) எதுலய்யா?

தங்: தமாஸ் பண்றதுல..

தங்: (நிம்மதியுடன்) அதான பார்த்தேன். நான் என்னமோ ஏதோன்னு பயந்திட்டேன். சொல்லுங்க.. எது சரி, எது தப்பு?

தங்: (குழப்பத்துடன்) என்னய்யா?

நடு: அதான்யா.. அந்த புள்ள சொன்னதுல ரைட்டும் இருக்கு ராங்கும் இருக்குன்னீங்களே.. அது..

தங்: ஆங். அதா.  சொல்றேன். அந்த புள்ள கல்யாணத்துக்கு முன்னால என்னமோ பண்ணலாம்னு சொல்லிச்சே அது தப்பு..

நடு: சரிஈஈஈ (வேடிக்கையாக இழுக்கிறார்)

தங்: என்னமோ பாதுக்காப்பா எதையோ போட்டுக்கிட்டு வேணும்னா என்னமோ செய்யணும்னு சொல்லிச்சே அது சரி..

கவு: (செந்திலை பார்க்கிறார்) என்னடா சொல்றான் இந்தாளு.. ஒரு எளவும் புரியலை.. டேய்  முள்ளம்பன்றித் தலையா.. என்னடா? எல்லாம் புரிஞ்சா மாதிரி உன் மட்காட் தலைய இந்த ஆட்டு ஆட்றே?

செந்: (நெற்றிப்பொட்டை தொட்டு) அதுக்கெல்லாம் இது வேணும்ணே..

கவு: எது.. நெத்தியா?

செந்: பாத்தீங்களா? சைகை காட்டியும் உங்களால புரிஞ்சிக்க முடியலே..

கவு: (பற்களைக் கடிக்கிறார்) டேய்.. புகாரித்தலையா.. மூளை நெத்திலயாடா இருக்கு? உன்னை.. மவனே, வெளியே வா பாத்துக்கறேன்.

தங்: என்னய்யா.. நான் சொல்றது சரிதானே.. அது வேணாம்னா விட்டுருங்க.. வேணும்னா பாதுகாப்பா இருந்துக்குங்க..

நடு: (சிரிக்கிறார்) நீங்க சினிமாலத்தான் தெளிவா பேசுவீங்க போலருக்குது.. புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு.. நன்றி. போய் உக்காருங்க.. (பார்த்திபனையும் கவுண்ட மனியையும் பார்க்கிறார்)  உங்க ரெண்டு பேர்ல யாருய்யா சீனியர்? பின்னால டைட்டில் ப்ராப்ளம் வந்துரக்கூடாது பாருங்க. அதான் கேக்கேன்.

(பார்த்திபனும் கவுண்டமனியும் ஒரே நேரத்தில் எழுந்திருக்க அரங்கத்தில் எல்லோரும் சிரிக்கின்றனர்)

தொடரும்..

(48)குஷ்பு - நகைச்சுவை கலந்துரையாடல்!! - 3

கலந்துரையாடலின் நடுவர்: சாலமன் பாப்பையா (ஏற்கனவே மன்னிப்பு கேட்டாகிவிட்டது!)

பங்கு கொள்வோர்:

நடிகவேள் எம்.ஆர்.ராதா (எம்.ஆர்)
டிஎஸ். பாலையா (பா)
தங்கவேல், (தங்)
கவுண்டமனி, (கவு)
செந்தில், (செந்)
ஜனகராஜ் (ஜன)
வடிவேல் & (வடி)
பார்த்திபன். (பார்)

--

நடு: (தங்கவேலுவை பார்க்கிறார்) வாங்கய்யா. நீங்க என்ன சொல்றீங்கன்னு கேப்போம்.

தங்கவேலு: (தனக்கே உரிய பாணியில் ஒரு நக்கல் சிரிப்புடன் எல்லோரையும் பார்க்கிறார். ஒரு அரசியல்வாதியின் குரலில் துவக்குகிறார்) என் அருமை நடுவர் அவர்களே

நடு: (சந்தோஷத்துடன்) ஹாய், ஹாய். பாருய்யா..

தங்: (நடிகவேள் அமர்ந்திருந்த இருக்கையை காட்டி) முதலிலே அமர்க்களமாய் பேசிவிட்டு இடையிலேயே ஓடிப்போன என் அருமை அண்ணன் நடிகவேள் அவர்களே.. (பாலையாவை காட்டி) பேசுவதற்குக்கூட வீட்டில் பர்மிஷன் கேட்டுவிட்டு வந்து பேசுவதா வேண்டாமா என்று தவித்துப்போன என் அருமை நண்பர் பாலையா அவர்களே.. (பாலையா தனக்கே உரிய பாணியில் தலைய சடக்கென்று கவிழ்த்துக்கொள்கிறார்)

கவு: (செந்திலை பார்க்கிறார்) பார்றா இந்தாளோட லொள்ள..

தங்: (கவுண்டமனியை காட்டி) நான் பேசுவதை பார்த்து கமெண்ட் அடிக்கும் தம்பி கவுண்டமனி மற்றும் அவருடைய அடிதாங்கும் (குரலை ஒருகட்டை கீழிறக்கி) புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். தம்பி செந்தில் அவர்களே..

செந்: (கவுண்டமனியை நக்கலுடன் பார்க்கிறார்) இது உங்களுக்கு தேவையாண்ணே.. மாட்டிக்கிட்டீங்கல்லே.

கவு: (செந்திலை பார்க்காமல்) டேய்.. வேணாம்.. எனக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமில்லே.. அப்ப பாத்துக்கறேன் இந்தாள..

தங்: (பார்த்திபனை பார்த்து) கிறுக்கல் தம்பி பார்த்திபன் அவர்களே..

வடி: (நமட்டு சிரிப்புடன்) பார்த்திபா.. நீ ஏதோ கவிதை தொகுப்புன்னு கிறுக்கினியே அத்த சொல்றார் போலருக்குது..

பார்: (திரும்பாமல்) டேய், வேணாம் பொத்திக்கிட்டிரு.. அவரு யார்றா? பெரிய நகைச்சுவை மன்னன். அவர் சொல்லட்டுமே.. நீ ஏதாச்சும் இதுக்குமேல பேசுன? மவனே இங்கயே பொலி போட்ருவேன்.. மூடிக்கிட்டு சும்மாயிரு..

வடி:(தனக்குள்) ஆமா.. இங்கன பாஞ்சி என்னா பண்றது? கிளிஞ்சது லம்பாடி லுங்கில்ல..

பார்: டேய்.. என்ன முனவுற?

வடி: ஒன்னுமில்லப்பா. நீ நேரா பாரு.. அப்புறம் இதுக்கும் எதுனாச்சும் சொல்லிடபோறாரு.. (தங்கவேலுவை பார்த்து முப்பத்திரண்டு பற்களையும் காட்டுகிறார்)

தங்:என்னைக் குறித்து பேசுவதையெல்லாம் பேசிவிட்டு இப்போது பொய் சிரிப்பு சிரிக்கும் மதுரைக்கார தம்பி வடிவேலு அவர்களே.

(அரங்கில் இருக்கும் எல்லோரும் சிரித்துக்கொண்டே வடிவேலுவைப் பார்க்க அவர் அவமானத்தால் சிறுத்து தலையை குனிகிறார்)

பார்: வேணுன்டா உனக்கு.

தங்: ஜோடியில்லாமல் தனியே அமர்ந்திருக்கும் தம்பி ஜனகராஜ் அவர்களே..

ஜன: (தங்கவேலுவை பார்த்து கண்ணடிக்கிறார்) நாம எப்பவுமே ஒண்டிக்கட்டைதான்ணே..

தங்: (நடுவரை பார்க்கிறார்) யாரையாச்சும்யும் உட்டுட்டேனா நடுவர்ர்ர்ர் அவர்களே?

நடு:(சிரிக்கிறார்) ஹாய்.. இப்பத்தான்யா களை கட்டுது.. நீங்க இதே பாணியிலேயே பேசுங்கய்யா..

தங்: (சலித்துக்கொள்கிறார்) என்னத்தய்யா பேசச் சொல்றீங்க? இப்படித்தான் ஒரு நாள் நான் மேடையில பேசிட்டு அங்க போட்ட மாலையோட வீட்டுக்கு போனேன். வீட்ல நம்பலையே.. எங்கடா வாங்கிக்கிட்டு வந்தேன்னு கேட்டு காறித்துப்பிட்டாங்க.. அதுலருந்தே இந்த மேடை பேச்சுன்னாலேயே நமக்கு அலர்ஜிங்க (தன் பாணியில் தன் கண்களை உருட்டுகிறார். நடுவர் உட்பட எல்லோரும் சிரிக்கிறார்கள்).

நடு: அதுதான் எல்லாருக்கும் தெரிஞ்சதாச்சே.. ‘நீங்க தட்டுறான் தட்டுறான் தட்டிக்கிட்டே இருந்தான்னு கைதட்டுனத சொல்வீங்க. உங்க வீட்டம்மா நக்கலா உங்க முதுகையாம்பாங்க.. அதத்தான சொல்ல வர்றீங்க? தெரியும்யா, எல்லாருக்கும் தெரியும்.

தங்:(ஆச்சரியத்துடன் நடுவரை பார்க்கிறார்) அதெப்படிய்யா எங்க வீட்டம்மா சொன்னத அப்படியே கிட்டருந்து கேட்டா மாதிரி சொல்றீங்க? இருந்தாலும் நீங்க அசகாய சூரன்தாங்க. ஒன்னா ரெண்டா, இதுமாதிரி எத்தன பாட்டி.. தப்பு தப்பு. பட்டி மன்றம் நடத்திறீங்க..

நடு: (உரக்க சிரிக்கிறார்) உங்க பாணியே தனிய்யா.. சந்தடி சாக்குல என்ன பாட்டி மன்றம் நடத்தவராக்கிட்டீங்க.. சரி விஷயத்துக்கு வாங்க. நேரமாவுதில்ல..

தங்: அட என்ன நடுவரய்யா? விஷயத்துக்கு வர பயந்துக்கிட்டுத்தானே இப்படி சுத்தி, சுத்தி வரேன்.

கவு: (செந்திலை பார்க்கிறார்) அப்படி போடு அறுவாள.. பாத்தியாடா இந்தாளோட லொள்ள?

செந்: (நேரே பார்த்துக்கொண்டு) அண்ணே வேனாண்ணே.. அவரு நம்ம ரெண்டு பேரையும்தான் பார்க்கிறாரு.. பேசாம பேச்ச கேளுங்க..

தங்: சரிய்யா.. நான் என்ன நினைக்கறேன்னா..

கவு: (தங்கவேலுவை பார்த்து) அதத்தானய்யா கேக்கறதுக்கு காத்துக்கிட்டிருக்கோம்.. அத வுட்டுட்டு..

தங்: (கவுண்டமனியை பார்த்து சிரிக்கிறார்) வரேன் தம்பி.. பொறுங்க.. (நடுவரை பார்க்கிறார்) அய்யா நான் என்ன சொல்ல வரேன்னா..

நடு: (எல்லோரையும் பார்த்து சிரிக்கிறார்) வாங்கய்யா.. சீக்கிரம் வாங்க.. வரவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சா என்ன பண்றது?

தங்: அதாவது நடுவரய்யா.. அந்த புள்ள குஷ்பு நம்ம அண்ணன் நடிகவேள் சொன்னாமாதிரி..

கவு: (எரிச்சலுடன் பல்லைக்கடித்துக்கொண்டு ரகசிய குரலில் பேசுகிறார்) யோவ் நீ என்ன சொல்ல வரேன்னு கேட்டா நடிகவேள் சொன்னார் கடிகவேள் சொன்னார்னுட்டு.. (செந்திலை ஓரக்கண்ணால் பார்க்கிறார்.)

செந்: அண்ணே.. நான் இந்த விளையாட்டுக்கு வரலை.. என்ன விட்டுருங்க..

தங்: அந்த புள்ள சொன்னதுல தப்பு இருக்கா இல்லையான்னு அவங்கவங்களா பார்த்து தப்புன்னா விட்டுருங்க.. சரின்னா அதமாதிரியே செஞ்சிட்டு போங்க.. அம்புடுதேன்.. இதுல நீங்களும் நானும் என்னத்த சொல்றது?

வடி: (பார்த்திபனை சீண்டுகிறார்) ஏம்ப்பா பார்த்திபா.. அவரு சொல்றது ஏதாவது புரிஞ்சிதா?

பார்: (திரும்பி முறைக்கிறார்) என்ன புரியல உனக்கு?

வடி: புரியாமத்தானப்பா கேக்கேன்? என்ன புரியலைன்னு என்னையே கேக்கே?

பார்: அதான்டா.. என்ன புரியலை.. தமிழ்லதானே சொன்னாரு?

வடி: (தனக்கே உரிய பாணியில் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு) உக்கும்.. பார்றா.. எளவு உனக்கும் புரியலையாக்கும். அப்படி சொல்லிற வேண்டியதுதானே. இந்த பம்மாத்து வேலதானே வேண்டாங்கறது?

பார்: அதென்னடா பம்மாத்து.. நாசமா போறவனே.. இந்த மாதிரி புரியாத பாஷையிலல்லாம் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்றது?

நடு: (அவர்கள் இருவரையும் பார்த்து சிரிக்கிறார்) என்ன தம்பிகளா, நீங்க தனியா எதாச்சும் பட்டி மன்றம் நடத்துறீங்களா? சொல்லுங்களேன் எல்லாரும் கேப்போம்..

(பார்த்திபனும் வடிவேலுவும் அசடு வழிகிறார்கள். கவுண்டமனியும் செந்திலும் ஒருவர் ஒருவரைப் பார்த்து கண்ணடிக்கிறார்கள்)

தங்: (கேலி சிரிப்புடன்) எங்க காலத்துல ஒவ்வொருத்தருக்கும் பொம்பள ஜோடி இருந்திச்சி.. இப்ப எல்லாம் ஆம்பளைங்கதான் ஜோடியாயிடறாங்க..

(நடுவர் பதறிப்போய் தங்கவேலுவை பார்க்கிறார். அரங்கத்தில் நிசப்தம்)

நடு: (தங்கவேலுவை பயத்துடன் பார்க்கிறார்) எய்யா.. இதென்ன குண்ட தூக்கி போடுறீங்க?

தங்: (உரக்க சிரிக்கிறார். பார்த்திபன் - வடிவேலு, கவுண்டமனி-செந்தில் ஜோடியை காட்டுகிறார்) நான் இவங்களையில்ல சொன்னேன்.

நடு: வயித்துல பால வார்த்தீங்கய்யா.. எங்க வெளியில ஒரு கூட்டத்த விளக்குமாத்தோட நிக்க வச்சிருவீங்களோன்னு ஒரு நிமிஷம் ஆடியில்ல போயிட்டேன். சரிய்யா.. நீங்க சொல்ல வந்தத சொல்லி முடிச்சாச்சா?

தங்: தோ முடிச்சிட்டேன். அந்த புள்ள சொன்னதுல தப்பும் இருக்கு ரைட்டும் இருக்கு.

நடு: இதென்னவோ ஐயரை ரெண்டறைன்னு ஒரு படத்துல தமாஷ் பண்ணுவீங்களே அதுமாதிரியில்ல இருக்கு. தெளிவா சொல்லுங்கய்யா..

தங்: (தனக்கே உரிய பாணியில் கேலி கலந்த குரலில்) அதாவது நடுவரய்ய்ய்ய்ய்ய்ய்யா...

நடு: (சிரிக்கிறார்) ரொம்ம்ம்ம்ம்ப இழுத்துறாதீங்க கிழிஞ்சரப் போவுது..

தங்: (சிரிக்கிறார்) நீங்க எங்களவிட எமகாதன்யா..

நடு: (குழப்பத்துடன்) எதுலய்யா?

தங்: தமாஸ் பண்றதுல..

தங்: (நிம்மதியுடன்) அதான பார்த்தேன். நான் என்னமோ ஏதோன்னு பயந்திட்டேன். சொல்லுங்க.. எது சரி, எது தப்பு?

தங்: (குழப்பத்துடன்) என்னய்யா?

நடு: அதான்யா.. அந்த புள்ள சொன்னதுல ரைட்டும் இருக்கு ராங்கும் இருக்குன்னீங்களே.. அது..

தங்: ஆங். அதா. சொல்றேன். அந்த புள்ள கல்யாணத்துக்கு முன்னால என்னமோ பண்ணலாம்னு சொல்லிச்சே அது தப்பு..

நடு: சரிஈஈஈ (வேடிக்கையாக இழுக்கிறார்)

தங்: என்னமோ பாதுக்காப்பா எதையோ போட்டுக்கிட்டு வேணும்னா என்னமோ செய்யணும்னு சொல்லிச்சே அது சரி..

கவு: (செந்திலை பார்க்கிறார்) என்னடா சொல்றான் இந்தாளு.. ஒரு எளவும் புரியலை.. டேய் முள்ளம்பன்றித் தலையா.. என்னடா? எல்லாம் புரிஞ்சா மாதிரி உன் மட்காட் தலைய இந்த ஆட்டு ஆட்றே?

செந்: (நெற்றிப்பொட்டை தொட்டு) அதுக்கெல்லாம் இது வேணும்ணே..

கவு: எது.. நெத்தியா?

செந்: பாத்தீங்களா? சைகை காட்டியும் உங்களால புரிஞ்சிக்க முடியலே..

கவு: (பற்களைக் கடிக்கிறார்) டேய்.. புகாரித்தலையா.. மூளை நெத்திலயாடா இருக்கு? உன்னை.. மவனே, வெளியே வா பாத்துக்கறேன்.

தங்: என்னய்யா.. நான் சொல்றது சரிதானே.. அது வேணாம்னா விட்டுருங்க.. வேணும்னா பாதுகாப்பா இருந்துக்குங்க..

நடு: (சிரிக்கிறார்) நீங்க சினிமாலத்தான் தெளிவா பேசுவீங்க போலருக்குது.. புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு.. நன்றி. போய் உக்காருங்க.. (பார்த்திபனையும் கவுண்ட மனியையும் பார்க்கிறார்) உங்க ரெண்டு பேர்ல யாருய்யா சீனியர்? பின்னால டைட்டில் ப்ராப்ளம் வந்துரக்கூடாது பாருங்க. அதான் கேக்கேன்.

(பார்த்திபனும் கவுண்டமனியும் ஒரே நேரத்தில் எழுந்திருக்க அரங்கத்தில் எல்லோரும் சிரிக்கின்றனர்)

தொடரும்..

குஷ்பு - நகைச்சுவை கலந்துரையாடல்!! - 2

இத்தொடரின் முதல் பதிவைப் படிக்காதவர்களுக்கு:

இது முழுக்க முழுக்க உங்களை சிரிக்க வைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் என் கற்பனையில் உருவான கலந்துரையாடல். இதில் தெரிவிக்கப்படும் கருத்துகள் சம்பந்தப்பட்ட நடிகர்களுடையதல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த பதிவில் காலம் சென்ற நடிகவேள் எம்.ஆர். தெரிவித்த கருத்துக்களும் அப்படியே. அவர் கூறுவதாக எழுதப்பட்ட வசனங்கள் அவருடைய அந்தஸ்த்தை எந்த அளவுக்கும் தரம் தாழ்த்த எழுதப்பட்டவையல்ல.

இனி இன்னைக்கு மறைந்த நடிகர் டி.எஸ். பாலையா அவர்கள் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

கலந்துரையாடலின் நடுவர்: சாலமன் பாப்பையா (மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா!)

பங்கு கொள்வோர்:

நடிகவேள் எம்.ர்.ராதா (எம்.ஆர்)
டி.ஸ். பாலையா (பா)
தங்கவேல், (தங்)
கவுண்டமனி, (கவு)
செந்தில், (செந்)
ஜனகராஜ் (ஜன)
வடிவேல் & (வடி)
பார்த்திபன். (பார்)

நடு: (பாலையாவை பார்க்கிறார்) சொல்லுங்கய்யா.

பா: வீட்லருந்து வர்றப்பவே எங்க வீட்டம்மா ஒன்னு சொன்னாங்க.. இங்க அத சொல்லலாங்களா?

நடு: (சிரிக்கிறார்) என்னய்யா? எங்க வீட்டாளு சொல்லியனுப்பிச்சதத்தான அங்கயும் சொல்லியிருப்பாங்க. என்ன சரிதானே? தாராளமா சொல்லுங்க.

வடி: (தன்னருகே அமர்ந்திருந்த பார்த்திபனின் காதை கடிக்கிறார்) என்னத்த சொல்லியிருக்க போறாக, ஏதாச்சும் ஏடாகூடமா பேசினீங்க பொறவு வீட்டுப்படி ஏத்தமாட்டேன்னு சொல்லியிருப்பாக.. என்ன பார்த்திபா, அப்படித்தானே?

பார்: (திரும்பிபார்த்து முறைக்கிறார்) டேய் பொத்திக்கிட்டிரு.. அதென்ன ஏடா கூடமா?

வடி: (தனக்குள்) இவன்கிட்ட வாய் குடுத்துட்டு பேச்சு வாங்கி கட்டிக்கறதே எனக்கு பொளப்பா போயிருச்சி. (பார்த்திபனை பார்க்கிறார். அவர் வேண்டுமென்றே நேரே மேடையை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார்) பெரீய இவன்னு நினைப்பு. வச்சிக்கறேன்.

பா: அந்த பொண்ணு சொன்னது சரிதான்னு சொல்லிட்டு வீட்டுக்கு வரமுடியும்னு நினைச்சிருந்தீங்கன்னா அத இப்பவே மறந்திருங்கன்னாங்க.. அதான்.. (நடிகவேளை பார்க்கிறார்) அண்ணே நான் இப்ப சொல்லப் போறத உங்களுக்கு எதிரா பேசறதா எடுத்துக்கப்படாது...

(நடிகவேள் எகத்தாளமாக உரக்க சிரித்தவாறே கவுண்டமனியை பார்க்கிறார்.)

எம்.ர்: (பிறருக்கு கேட்கும் வண்ணம்) பொண்டாட்டிக்கு பயந்த பயக.. (பாலையாவை பார்க்கிறார்) பேசு, பேசு.. என்ன பேசப் போறே.. பாக்கறேன்..

பா: (பயந்தது போல் முகத்தை வைத்துக்கொண்டு நடுவரை பார்க்கிறார்) அய்யா..

நடு: (சிரிக்கிறார்) தைரியமா சொல்லுங்க.. நடிகவேளை பாக்காதீங்க.. என்னை பாருங்க, அவர் இருக்கற பக்கமே பாக்காமத்தானே இருக்கேன்? அதே மாதிரி அவர பாக்காம சும்மா உங்க கருத்த சொல்லுங்கய்யா..

பா: எனக்கும் பொண்ணு பிள்ளைங்கன்னு இருக்காங்கய்யா.. அதனால சொல்லுறேன்.. அந்த பொண்ணு அப்படி சொன்னது, தப்புத்தான், தப்புத்தான்.. ஆனா அதுக்காக இவங்க செஞ்சது சரியாய்யா.. அதுவும் தப்புத்தான், தப்புத்தான்.

எம்.ர்: (உரக்க சிரிக்கிறார்) டேய் பாலு.. எதனாச்சும் ஒன்னு சொல்லு.. அதென்ன முல்லா நசருதீன் மாதிரி இவன் சொல்றதும் சரி, அவன் சொல்றதும் சரிங்கறே..

நடு: (நடிகவேளை மேலே பேசவிடாமல் குறுக்கிடுகிறார்) அய்யா.. உங்க முறை முடிஞ்சிருச்சிய்யா.. மத்தவங்களும் பேசணுமில்ல..?

கவு: (எழுந்து நிற்கிறார்) அதானே.. இவரே பேசிக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? (செந்திலை கிள்ளுகிறார்) டேய் தகரடப்பா தலையா, சொல்லேண்டா..

எம்.ஆர்:(கோபத்துடன் எழுந்து நின்று கவுண்டமனியை முறைக்கிறார்) டேய்.. என்னா.. பெரியவன், சின்னவங்கற மரியாதையில்லாம.. உக்கார்றா..

கவு: (கோபத்துடன் நடுவரைப் பார்க்கிறார்) ஐயா.. இது நல்லால்ல.. இந்த ஆளு பேசி முடிச்சிட்டாருல்ல.. சும்மா இருக்க சொல்லுங்க..இல்லன்னா..

வடி: (பார்த்திபனிடம்) இல்லன்னா இவன் என்ன பண்ணிருவான்னு கேளு பார்த்திபா..

பார்: (முறைக்கிறார்) டேய் வாய பொத்திக்கிட்டு சும்மாயிரு..

நடு: (என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார்) (தனக்குள்) இதெல்லாம் எனக்கு தேவையா.. பாட்டிகள் முக்கியமா, தாத்தாக்கள் முக்கியமாங்கற தலைப்புல சன் டிவியில பட்டிமன்றம் நடத்த கூப்பிட்டாங்களே அதுக்கே போயிருக்கலாம் போலருக்குது.. கொடுமைடா.. (அகண்ட சிரிப்புடன் நடிகவேளைப் பார்க்கிறார்) அய்யா.. (கவுண்டமனியை காட்டுகிறார்) அவர் சொல்றது சரிதான்.. உங்க முறை முடிஞ்சிருச்சில்ல.. உக்காருங்கய்யா..

(நடிகவேள் கோபத்துடன் எழுந்து எல்லோரையும் ஒருமுறை பார்க்கிறார். பிறகு நடுவரை பார்க்கிறார்)

எம்.ஆர்: (எகத்தாளமாய்) அய்யா.. உங்க தீர்ப்பை ஒத்துக்க மாட்டேன்.. இந்த எச்ச (நடுவர் தடுப்பதற்கு முன்பு கெட்ட வார்த்தை வந்து விழுந்துவிடுகிறது. நடுவர் தலையில் அடித்துக்கொள்கிறார்.) பயலுகளோட ஒக்காந்திருக்கணும்னு எனக்கொன்னும் தலையெழுத்தில்லைய்யா.. நான் போறேன்.. நீங்களே நடத்தி என்ன எளவு (நடுவர் முகம் சுளிக்கிறார்) தீர்ப்பையும் சொல்லிக்கங்க.. நான் வெளிநடப்பு செய்யறேன். (நடுவர் அவரை நோக்கி ‘அய்யா, அய்யா.. நில்லுங்க’ என்று கூப்பிடுவதை உதாசீனப்படுத்திவிட்டு வெளியேறுகிறார்)

(வடிவேலு தனக்கு முன்னால் அமர்ந்திருந்த தங்கவேலுவை தோளில் தட்டுகிறார். அவர் ‘என்ன’ என்பதுபோல் திரும்பி பார்க்கிறார்.)

வடி: (ரகசிய குரலில்) இவரு செட்டுலயும் இப்படித்தான் பந்தா பண்ணுவாருங்களாய்யா?

தங்: (சிரிக்கிறார்)அமா, ஆமா. ஆனா அங்க யாரும் இவரை கண்டுக்கிடவே மாட்டாங்க.. முக்கியமா சிவாஜியும், எம்.ஜிஆரும் செட்டுல இருந்தா வாய்ல ஒரு பீடிய வச்சிக்கிட்டு வாலை சுருட்டிக்கிட்டு ஒரு ஓரமா உக்காந்திருப்பாரு..

வடி: (பார்த்திபனை சீண்டுகிறார்) பாத்தியா பார்த்திபா.. சார் சொல்றத..

(பார்த்திபன் அவர் கையை தட்டிவிட்டு முறைக்கிறார். மேடையை நோக்கி சைகை செய்கிறார்)

வடி: (தனக்குள்) இவனும் பந்தா பார்ட்டிதானே.. அதான் குத்துது..

பார்: டேய்.. வாயை பொத்துறியா இல்ல உன் கக்கூஸ் வண்டவாளத்த எடுத்து விடவா?

(வடிவேலு வாயைப் பொத்திக்கொண்டு கப்சிப்)

கவு: (செந்திலிடம்) பார்த்தியாடா.. இந்த ஆளு நான் போட்ட போடுல பயந்து ஓடறான்..

செந்: ஆமாண்ணே.. உங்கள பாத்துட்டு பயந்து ஓடாத ஒரே ஆளு நாந்தண்ணே...

கவு: டேய் தார் டப்பா மாதிரி இருக்கற உன்ன பாத்து நான் பயந்து ஓடாம இருக்கேனே அதுக்கென்ன என்ன சொல்றே?

செந்: சரிண்ணே. ஆரம்பிச்சிராதீங்க.. அங்க பாருங்க.. பாலய்யா ஐயா என்ன சொல்றதுன்னு தெரியாம முளிக்கிறார் பாருங்க.. பாவம்ணே அவர்.

கவு: ஆமாடா.. நம்ம வீட்டம்மாவே மேலு போலருக்குது..

செந்: உங்க முறை வரும்ல அப்ப பாக்கலாம்.

கவு: எனக்கென்னடா பயம்?

செந்: வேண்டாம்ணே, அக்காவுக்கு கேட்டுரப்போவுது..

கவு: சரிடா.. டென்ஷனாகாத.. அங்க ஐயாவ பாரு.. ஏதோ சொல்ல வராற்னு நினைக்கறேன்.

பா: அய்யா.. நா என்ன சொல்ல வரேன்னா..

நடு: அதான் எல்லா கலாட்டாவும் முடிஞ்சிருசில்லய்யா.. நீங்க தைரியமா சொல்லுங்க..

பா: அந்த பொண்ணு பாவம் என்ன அர்த்தத்துல சொல்லுச்சோ.. அதே அர்த்தத்துல பாத்திருந்தா வெணையே இருந்துருக்காது, இருந்துருக்காது.. அத வுட்டுட்டு .. இதெல்லாத்தயும் விட பெருசா.. நாட்டுல நெறய இருக்குதுய்யா, இருக்குது.. அத பாத்தா நல்லாருகும்யா.. நல்லாருக்கும். அம்புடுதேன்.. போறுங்களா?

கவு: (செந்திலிடம்) என்னடா இவர் நம்மள போறுமான்னு கேக்கறார்? நீ என்ன சொல்றே.. போறும்ங்கற?

செந்: பாவம்ணே.. இத சொல்றதுக்குள்ளயே அவருக்கு எப்படி வேர்த்து போயிருச்சி பாருங்க..

கவு: (மேடையை பார்க்கிறார்) ஆமாம்டா..

நடு: (சிரிக்கிறார்) போறும்யா.. நல்லா நறுக்குன்னு சொல்லிட்டீங்க.. (அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்களை பார்க்கிறார்) பாலைய்யா அய்யா சொன்ன கருத்தைதான் இன்னைக்கி வெளியில எல்லாரும் சொல்லிக்கிட்டிருக்காங்க.. (தங்கவேலுவை பார்க்கிறார்) என்னய்யா சரிதானே.. வாங்க உங்க கருத்தை சொல்லுங்க..

தொடரும்

26.11.05

குஷ்பு - நகைச்சுவை கலந்துரையாடல்!!

இரண்டு தினங்களுக்கு முன்பு சன் நியூஸ் சானலில் குஷ்பு விவகாரத்தைப் பற்றி ஒரு காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அநேகமாய் எல்லா ண்களும் மிகவும் நகைச்சுவையாகவும் (கோமாளித்தனமாக மற்றும் கேவலமாக என்றும் கூறலாம்) பெண்கள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் அவரவர் கருத்தை எடுத்து கூறினர். உரையாடல் சில சமயங்களில் இரு நடுவர்களாலும் கட்டுப்படுத்த முடியாமல் ஒரு கீழ்த்தரமான (முக்கியமாய் ஒரு பத்திரிகையாளர் மற்றும் ஒரு அரசியல்வாதியால்) லெவலுக்கு இறங்கியதும் உண்மை. இடை இடையே நடிகரின் பிரசங்கம் வேறு. மொத்தத்தில் ஒரு கதம்பமான, குழப்பமான விவாதமாயிருந்தது.

இதே கருத்தை மையமாக வைத்து அக்கால, இக்கால நகைச்சுவை நடிகர்கள் கலந்துகொள்ளும் ஒரு கலாட்டா கலந்துரையாடலை கற்பனை செய்திருக்கிறேன்.

ஒரு எச்சரிக்கை: பெண்மையைப் பற்றியும் பெண்ணியத்தை பற்றியும் ஒரு சில நடிகர்களுடைய கருத்து பெரும்பாலோருடைய கருத்துடன் ஒத்துபோகாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கு நான் பொறுப்பல்ல. கலந்துரையாடலின் வேகத்தில் சில தவறான வார்த்தைகள் (சன் டிவி கலந்துரையாடலில் நடந்ததுபோல) வந்து விழ வாய்ப்புண்டு. நடுவர் அதை தடைசெய்தால் சந்தோஷம். இல்லையென்றால் கேட்டுக்கொள்ள, சாரி வாசிக்க, வேண்டியதுதான். பின்னூட்டமிட்டு என்னை திட்ட கூடாது!!

கலந்துரையாடலின் நடுவர்: சாலமன் பாப்பையா (மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா!)

பங்கு கொள்வோர்:

நடிகவேள் எம்.ஆர்.ராதா (எம்.ஆர்)
டி.ஸ். பாலையா (டி.எஸ்)
தங்கவேல், (தங்)
கவுண்டமனி, (கவு)
செந்தில், (செந்)
ஜனகராஜ் (ஜன)
வடிவேல் & (வடி)
பார்த்திபன். (பார்)

நடுவர்: வாங்கய்யா, வாங்க. பெரிய பெரிய ஆளுங்கள்லாம் வந்திருக்கறத பாக்கும்போது சந்தோஷமா இருக்கய்யா. இன்னைக்கி என்னத்த பத்தி பேசப்போறோம்னு பாத்தா பயமாயிருக்குய்யா. நான் எக்குத்தப்பா என்னத்தையாவது சொல்லப்போயி எனக்கு எதிரா எங்க வீட்டாளும் சேந்துக்கிட்டு விளக்குமாத்த தூக்காம இருக்கணும். அதனால பாத்து பேசுங்கய்யா?

கவு: (அருகிலிருந்த செந்திலிடம்) டேய் சல்பேட் தலையா, இந்தாளுகூட வீட்டுலருக்கற ளுக்கு பயப்படுராறு பாத்தியா? என்ன சொல்றியே?

செந்: (ரகசிய குரலில் வாயை மறைத்துக்கொண்டு) அண்ணே அவரு என்னைக்காவதுதாண்ணே பயப்படுவாரு.. நீங்க தெனக்குமில்ல பயப்படுறீங்க?

கவு: (திரும்பி முறைக்கிறான்) டேய்.. வேணாம்.. எல்லாரும் இருக்காங்களே பாக்கறேன். வாயையும் அதையும் (சென்சாருக்கு பயந்துட்டார் போலருக்கு) மூடிக்கிட்டு இரு.

செந்: (வேண்டுமென்றே) வாயை சரி மூடிக்கறேன். என்னமோ அதையும்னீங்களே அதென்னண்ணே?

கவு: (செந்திலின் காதில் சொல்கிறார்)

செந்: அதான பாத்தேன். என்னடா அண்ணன் சுத்த தமிழ்ல பேசராறேன்னு.. வந்துருச்சு பாத்தீங்களா? அதான்ணே உங்க ஒரிஜினாலிட்டி.. அப்படியே இங்கயும் பேசுங்க.. எல்லரும் மெச்சிக்குவாங்க..

கவு: (ரகசியக்குரலில்) டேய் வேணாம்..

(நடிகவேள் இருவரையும் பார்த்து தன்னுடைய ஒரு கண்ணை மூடி ஒரு கண்ணை திறந்து ஓரக்கண்ணால் முறைக்கிறார். இருவரும் கப்சிப்)

நடு: (நடிகவேளை பார்க்கிறார்) ஐயா.. இருக்கறவுகள்ல மூத்தவரே வாங்க.. வந்து உங்க கருத்த சொல்லுங்க..

எம்.ஆர்: (எழுந்து எல்லாரையும் ஒரு பார்வை பார்க்கிறார். மைக்கை பிடித்து இப்படியும் அப்படியும் ட்டிவிட்டு) எவன்டா அவன் இந்த மைக்கை வச்சது? என் குரலுக்கு இது ஒத்துவராதுன்னு தெரியாது.. மடப்பய மவன். (நடுவரை பார்க்கிறார்) என்னைய்யா இது.. இப்படீன்னு தெரிஞ்சா வந்திருக்கவே மாட்டேனே..

நடு: (அவரைப்பார்த்து தன் அகண்ட சிரிப்பு ஒன்றை உதிர்க்கிறார்) உங்க குரலுக்கு மைக்குன்னு ஒன்னு வேணுமாய்யா? தள்ளிவச்சிட்டு விஷயத்துக்கு வாங்கய்யா!

எம்.ஆர்: சரி.. நீங்க பெரியவங்களாச்சேன்னு ஒத்துக்கறேன். முதல்ல யார்றா இந்த பொம்பள? குஸ்புவா, கிஸ்புவா? அவ யாரு தமிழச்சியா? வெளியூருலருந்து வந்தவதானே, என்னத்தையோ சொல்லிட்டு போறான்னு விட்டுத்தள்ளாம நீங்க பண்றதல்லாம் சரியாடா? (பேசிக்கொண்டே கவுண்டமனியை பார்க்கிறார்)

கவு: (செந்திலிடம் ரகசிய குரலில்) டேய் இந்தாளு என்னா என்கிட்ட சொல்றாமாதிரி சொல்றான். நானா இந்த பொம்பளை சொன்னத பிடிச்சிக்கிட்டிருக்கே?

செந்: (வாயை மூடிக்கொண்டு) அண்ணே வேணாம். அந்த ஆளு ஏற்கனவே நம்மள பாத்து மொறச்சாரு.. சும்மா வாய மூடிக்கிட்டு கேளுங்க. சொல்லிட்டேன்.

எம்.ஆர்: (தனக்கே உரிய பாணியில் தோளை குலுக்கிக்கொள்கிறார்) டேய் இதெல்லாம் பெரிய விஷயமாடா? பாரின்லல்லாம் ..

கவு: (செந்திலிடம் ரகசிய குரலில்) ஆமா .. இவரு அப்படியே உலகம் முழுசும் சுத்திவந்திட்டாரு.. சென்னைய விட்டு வெளிய போயிருப்பானாடா இந்த ஆளு? வர்ற த்திரத்துல ஏதாவது பண்ணிருவனோன்னு பயமாயிருக்குடா. எதுக்கும் என்னை கெட்டியா பிடிச்சுக்கோ.. (செந்தில் அவருடைய கையை பிடித்துக்கொள்கிறார்)

எம்.ஆர்: (தொடர்கிறார்) அவனவன் சந்திரனுக்கு போலாமா.. சூரியனுக்கு போலாமான்னு ரிசர்ச் பண்ணிக்கிட்டிருக்கான்.. இவனுங்க என்னடான்னா (அரங்கத்திலிருந்த எல்லாரையும் சுட்டிக்காட்டுகிறார்.) ஒரு பொம்பள கல்யாணத்துக்கு முன்னாலயும் பின்னாலயும் எத்தன பேர் கூட வேணும்னாலும் படுக்கலாம்னு சொன்னத பெருசா எடுத்துக்கிட்டு.. டேய் (பெண்குரலில் உச்சஸ்தாயியில் பேசுகிறார்) தொடப்பக்கட்டய தூக்கிக்கிட்டு அலையறீங்களே.. உங்கள என்னன்னு சொல்றதுடா.. போக்கத்த பய மவனுவளா.. போங்கடா போய் வேலைய பாருங்க.. வந்துட்டானுங்க.. (கவுண்டமனியை பார்க்கிறார்) டேய்.. என்னா மொறைக்கிற? நேத்து பொறந்த பய.. ரெண்டு வாளப்பளத்த வச்சிக்கிட்டு ஒரு சொத்த சோக்கை சொல்லிட்டு.. என்னாடா.. பெரிய மனுஷன் மாதிரி நா பேசற எடத்துல நிக்கறதுக்கு ஒனக்கு யோக்கியத இருக்காடா? என்னா மொறக்கிற?

(கவுண்டமனி கோபத்துடன் எழுந்திருக்க செந்தில் ‘அண்ணே வேணாம்.’ என்றவாறு அவருடைய கையைப்பிடித்து அமர்த்துகிறார். சிறிது நேரம் அரங்கத்தில் கசமுசா சத்தம்.)

நடு: (தன் ட்ரேட் மார்க் புன்னகையுடன் குறுக்கிட்டு) அமைதி, அமைதி. நடிக வேள் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டார்.. அவ்வளவுதான். (எம்.ர் ஐ பார்த்து) நீங்க தொடருங்கய்யா..

எம்.ஆர்: (அலட்சியத்துடன் எல்லோரையும் பார்க்கிறார்) என்னாங்கடா.. எல்லாருக்கும் நான் பேசறத பாத்தா கோபம் வருதா? யார்ரா இந்த பசங்கல்லாம்?

நடு: யாரையா சொல்றீங்க.. பிள்ளைங்க மிரள்துகள்ல?

எம்.ஆர்: (தன் பாணியில் கேலியுடன் வாயை கோணிக்கொண்டு தன் உடம்பு முழுவது குலுங்க உரக்க சிரிக்கிறார்) டேய் சின்ன பசங்களா! பயந்துட்டீங்களா? (அடிக்குரலில்) உங்கள இல்லடா.. (கைகளை தன் பின்னால் நீட்டி) தோ.. வெளியில அந்த பொம்பளைக்கி எதிரா கையில தொடப்பத்த வச்சிக்கிட்டு நிக்கறானுங்களே..

ஜன:(குறுக்கிடுகிறார்)ஐயா.. அவனுங்க, அவனுங்கன்னு சொல்லாதீங்கோ.. கோவம் வந்துறப்போவுது..

எம்.ஆர்: (குறுக்கே பேசியது பிடிக்காமல் கோபத்தின் உச்சிக்கே செல்கிறார். ஜனகராஜை எரித்துவிடுவதுபோல் பார்க்கிறார். குரல் உயர்ந்து பெண் குரலாகிறது.) டேய்.. யார்ரா நீ? பேசிக்கிட்டிருக்கும்போதே குறுக்கால பேசுறே? கண் வேற உள்ள போய் உள்ள போய் வருது? நான் பேசி முடிச்சிட்டதுக்கப்புறம்தான் இங்க எல்லாரும் பேசணும். புரிஞ்சிதா.. தொலைச்சிப்புடுவேன், சாக்கிரதை (விரலை உயர்த்தி காட்டி எச்சரிக்கிறார். திரும்பி மிரண்டுபோய் அமர்ந்திருந்த நடுவரை பார்க்கிறார்.) ஐயா நடுவர் அவர்களே இந்த படுபாவி பய குறுக்கால பூந்ததுல நான் பேசிக்கிட்டிருந்ததையே மறந்துட்டேன். நான் என்னாய்யா சொல்லிக்கிட்டிருந்தேன்?

நடுவர்: (தயக்கத்துடன்) கையில தொடப்பம்..

எம்.ஆர்: ஆங்.. தொடப்பத்த வச்சிக்கிட்டு நிக்கறானுங்களே அவனுங்கள சொன்னேன்.. அவனுங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன்.. டேய்.. போங்கடா போயி உம் பொண்டாட்டிங்க ஒளுங்கா இருக்கானுங்களான்னு பாருங்க.. (அடிக்குரலில் கண்ணடித்தவாறு) அவளுக எங்கங்க போறாளுகளோ யாரு கண்டா?

நடு: (தர்மசங்கடத்துடன் குறுக்கிடுகிறார்) ஐயா.. நாம பேசவேண்டியது குஷ்புவைப் பத்தின்னு நினைக்கிறேன்.

எம்.ஆர்: (தோள்களை உயர்த்தி, தலையை கவிழ்த்து நடுவரைப் பார்த்து கூழை கும்பிடு என்பார்களே அதுபோல் கும்பிடுகிறார்) மன்னிக்கணும் நடுவர் அவர்களே மன்னிக்கணும்.. கொஞ்சம் அதிகமா உணர்ச்சி (குரல் பெண் குரலாகிறது) வசப்பட்டுட்டேன் போலருக்குது.. இத்தோடு முடிச்சிக்கறேன்.. கடைசியா ஒன்னு சொல்லிக்கறேன்யா..

நடு: உங்கள தடுப்பேனாய்யா.. சொல்லுங்க..

எம்.ஆர்: இந்த பொம்பள என்னாய்யா பேரு சொன்னீங்க.. கிஸ்புவா?

நடு: (தன்னுடைய ட்ரேட் மார்க் குரலில்) ஹாய்.. பாருய்யா.. பேரையே மறந்துட்டீங்க.. கிஸ்புன்னு சொல்லி வம்ப வெலைக்கி வாங்கிறாதீங்கய்யா? அவங்க பேரு குஷ்பு!

எம்.ஆர்: (அலட்சியத்துடன்) என்ன பேர் வச்சிக்கிறாளுகளோ.. பேர்லயே வில்லங்கம் இருக்குதே.. சரி.. ஏதோ ஒன்னு.. அந்த பொம்பள சொன்னது இந்த காலத்துக்கு ரொம்பவும் பொருத்தம்யா.. அதுல எந்த தப்பும் இல்ல.. (முழு உடலையும் ட்டிக்கொண்டு எல்லோரையும் பார்த்து கும்பிடுகிறார்) நா சொன்னதுல தப்பு இருந்தா, இருக்கும், கண்டிப்பா இருக்கும்.. மன்னிச்சிக்குங்க.. நா வரேன், நடுவர் அவர்களே..

(மேடையை விட்டு இறங்கி தன் இருக்கைக்கு செல்லும் வழியில் கவுண்டமனியையும் ஜனகராஜையும் முறைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்து அலட்சியத்துடன் தன்னுடன் அமர்ந்திருந்த அனைவரையும் ‘எப்படி என் பேச்சு?’ என்பதுபோல் பார்க்கிறார். எல்லோரும் அவருடைய முகத்தை பார்க்க பயந்துகொண்டு எல்லோரும் நடுவரையே பார்க்கின்றனர்)

நடு: என்னா அருமையா பேசினார்யா நம்ம நடிகவேள். அவரு பேசுனத நா திருப்பி சொன்னா அது நல்லாருக்காதுய்யா. அது அவரோட கருத்துன்னு விட்டுருவோம்.. (தங்கவேலுவை பார்க்கிறார்) அடுத்த சீனியரய்யா நீங்க வாங்கய்யா..

(தொடரும்)

24.11.05

குன்டக்க மன்டக்க!!

முக்கிய கதாபாத்திரங்கள்:

நபர் 1 – வடிவேலு
நபர் 3 –பார்த்திபன்
நபர் 2 – துணை நடிகர்

(சாலையின் வலப்புறத்திலிருந்து நபர்1 வந்துகொண்டிருக்கிறார். வானத்தைப் பார்த்தவாறு தனக்குள் பேசிக்கொள்கிறார்)

நபர்1: எப்பா சாமி. நா இன்னைக்கி போற காரியத்த நீதாம்பா நல்லபடியா முடிச்சித்தரணும். முடிச்சி தந்தேன்னா, திரப்பி வரப்ப என்னால முடிஞ்சத உங்கோயில் உண்டியல்ல போடறேம்பா..

(எதிரில் வரும் நபர் 2 அவரை கடந்து செல்ல, நபர்1 அவர் காலரைப் பிடித்து தன் பக்கம் இழுத்து அவருடைய கன்னத்தில் அறைகிறார்.)

நபர்2: (கோபத்துடன்) யோவ். உனக்கென்ன பைத்தியமா? ஏன்யா சும்மா போறவன பிடிச்சி அடிக்கறே

நபர்1: டேய் நா யாரு?

நபர்2: யாருன்னா?

நபர்1: நான் யார்ரா? (தன் நெஞ்சில் கைவைத்து) நானு, நானு.

நபர்2: யோவ் சுத்த இவனா இருக்கியே.. பேசாம ரோட்ல போயிட்ருக்கவன இழுத்து பிடிச்சி கன்னத்துல அறஞ்சிட்டு.. நா யாரு, நா யாருன்னு கேக்கற?

நபர்1: (கன்னத்தில் அறைகிறான்) சரியா பாத்து சொல்லு.. நா யாருன்னு தெரியல?

நபர்2: (அழுகிறான்) யோவ் தெரியலையா.. நீதான் யார்னு சொல்லித் தொலையேன்.

நபர்1: உண்மையிலயே நா யாருன்னு தெரியலை?

நபர்2: தெரியலையா..

நபர்1: சரி நீ போ..

நபர்2: (தனக்குள்) யார்ரா இவன்? ரோட்ல போய்க்கிட்டிருந்தவன நிறுத்தி கன்னத்துல அடிக்கிறான். ஏன்டா அடிச்சேன்னு கேட்டா நான் யார்ராங்கறான். தெரியலன்னு சொன்னா சரி போடாங்கறான். சுத்த பைத்தியக்காரனாயிருப்பான் போலருக்குதே.. இவன்கிட்ட நின்னு பேசினதே தப்பு.. போயிருவம்.. (திரும்பி திரும்பி பார்த்தவாறே அடிபட்ட கன்னத்தை தடவிக்கொண்டு செல்கிறான்)

நபர்1: (தனக்குள்) அப்பாடா. இந்த ஊர்ல நம்மளை தெரிஞ்சவன் யாருமில்ல போலருக்குது. தைரியமா நடமாடலாம்.

(காலரை தூக்கிவிட்டுக்கொள்கிறான். அலட்சியமாக சாலையில் போவோர் வருவோரை பார்க்கிறான். கால்களை அகல வைத்து தெனாவட்டாக சாலையின் நடுவில் நடக்கிறான். ஏற்கனவே அவன் ஒருவனை அடித்ததை பார்த்தவர்கள் அவனை விட்டு சற்று தள்ளியே செல்கின்றனர். அதைப் பார்த்த நபர்1 ‘அது.. அந்த பயம் இருக்கணும்..’ என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறான். திடீரென்று பின்னாலிருந்து சைக்கிளில் வந்த ஒருவர் அவன்மேல் இடிக்க முகம் குப்புற விழுகிறான். அவன் அணிந்திருந்த வெள்ளை சட்டை, வெள்ளை முழுவதுமாக அழுக்கடைகிறது. கீழே விழுந்தவன் கோபத்துடன் எழுந்து தன்னை இடித்துவிட்டு நிற்பவனை ஓரக்கண்ணால் பார்க்கிறான். அடுத்த நொடியில் அவன் முகம் இருளடைகிறது. தனக்குள் பேசிக்கொள்கிறான்) ஐயோ, இவனா? நம்ம எங்க போனாலும் மோப்பம் பிடிச்சிக்கிட்டு வந்திற்ரானடா சாமி. இன்னைக்கி என்னல்லாம் குன்டக்க மன்டக்கன்னு பேசப் போறானோ தெரியலையே. திறக்கப்படாது.. அவன் என்ன பேசுனாலும் நம்ம வாயவே தெறக்கப்படாது..

நபர்3: (சைக்கிளில் அமர்ந்தவாறே) டேய்.. என்ன ரோடு உனக்காகத் தான் போட்ருக்குன்னு நெனப்பா உனக்கு? நடு ரோட்ல பெரிய இவன் மாதிரி.. யார்ரா நீ?

நபர்1: (அவனுக்கு முதுகை காட்டிக்கொண்டு நிற்கிறான்) அட ஒன்னுமில்லப்பா.. நான் ஊருக்கு புதுசு.. நீ போ.. (அந்த இடத்தைவிட்டு வேகமாக செல்ல முயல்கிறான்)

நபர்3: டேய் நில்றா? நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்கே?

நபர்1: (அப்படியே நிற்கிறான். திரும்பாமலே பதில் சொல்கிறான்) நீ என்ன கேட்டே, நான் யாருன்னுதானே? அதான் நான் ஊருக்கு புதுசுன்னு சொல்லிட்டேன்லயா.. பிறவென்ன? (தனக்குள்) விடமாட்டான் போலருக்குதே சாமி..

நபர்3: ஏன், முகத்த பாத்து பேசமாட்டீங்களோ?

நபர்1: என் முகத்த பாத்து என்னய்யா செய்யப் போறே?

நபர்3: அத நான் பாத்துக்கறேன். நீ முதல்ல திரும்பி என்ன பாத்து பேசுடா.

நபர்1: (திரும்பி முழுவதுமாக சுற்றிக்கொண்டு மீண்டும் முதுகையே காண்பிக்கிறான்) போதுமா? பாத்துட்டேல்ல? நான் போட்டா? அர்ஜண்டா ஒரு சோலிக்கி போயிட்டிருக்கேன்யா? என்ன உட்டுறேன் (அழுகிறான்).

நபர்3: டேய்.. முகத்த காட்றான்னா மறுபடியும் முதுகையே காட்றே? என்ன நக்கலா? அதுவும் ஏன்கிட்டயே?

நபர்1: இப்ப என்னய்யா பண்ணணும்கற?

நபர்3: ஸ்லோ மோஷன்ல திரும்பு.

(நபர்1 ஸ்லோ மோஷன்ல மீண்டும் முழு வட்டமடித்து திரும்ப முயல.. நபர் 3 அவனுடைய தோளைப் பிடித்து நிறுத்துகிறான். நபர்1 தன் இரு கண்களையும் ஒன்றரை கண்ணுள்ளவன்போல் மாற்றிக்கொண்டு நிற்கிறான்.)

நபர்3: (ஆச்சரியத்துடன்) டேய் நீயா?

நபர்1: நீயான்னா? நீ நெனக்கற ஆள் நானில்லையா? என்ன உட்டுறு.

நபர்3: டேய்.. நான் நீ யாருன்னு நெனச்சேன்னு உனக்கெப்படி தெரியும்? நீ நான் நீன்னு நெனச்ச ஆள்தான நீ?

நபர்1: (தனக்குள்) மறுபடியும் ஆரம்பிச்சிட்டான்யா. இப்படி குண்டக்க மண்டக்கன்னு பேசி எத்தனை நாளைக்கித்தான் இவன் என் கழுத்த அறுக்க போறான்னே தெரியலையே (நபர் 3ஐ பார்க்கிறான்) என்னய்யா சொல்ற? ஒரெழவும் விளங்க மாட்டேங்குதே..

நபர்3: சரி மெதுவா உன் மர மண்டைக்கு விளங்கமாதிரி சொல்றேன். நீ நான் நீன்னு நெனச்ச ஆள்தானே நீ?

நபர்1: நீ.. நீன்னு.. எளவு வரமாட்டேங்குதே.. சரி ஏதோ ஒன்னு.. வேணாம். என்ன விட்டுரு..

நபர்3: என்ன வேணாம்?

நபர்1: என்ன வேணாம்னா?

நபர்3: இல்ல.. இப்ப ஏதோ வேணாம்னியே?

நபர்1: நானா? எப்ப?

நபர்3: டேய்.. என்ன விளையாடறியா? இப்ப நீதானடா வேணாம் என்ன விட்டுருன்னே? அதான் கேக்கறேன். சொல்லு, என்ன வேணாம்?

நபர்1: (அழுகிறான்) யோவ், ஏதோ ஒரு பேச்சுக்கு சொன்னேன்யா?

நபர்3: பேச்சுக்கா? அதென்ன பேச்சுக்கு? நாங்க மட்டும் பேசாமயா சொன்னோம்? சொல்றா?

நபர்1: (தனக்குள்) என்னடா இவன்.. முன்னால போன முட்டுறான்.. பின்னால போன ஒதைக்கிறான்.. இன்னைக்கி விடிஞ்சாப்பலதான்.. இப்ப என்ன கேக்க வராங்கறத மறந்து போயிருச்சே..

நபர்3: (நபர்1ன் தலையில் தட்டுகிறான்) டேய் என்ன சத்தத்தையே காணோம். சரி, அத விடு.. நீ நான் நெனச்ச ஆளா இல்லையா அத சொல்லு..

நபர்1: முதல்ல நான் யாருன்னு நீ நினச்சு பேசிக்கிட்டிருக்க.. அதச் சொல்லு..

நபர்3: டேய், என்னையே மடக்கறியா? மவனே.. அப்ப எதுக்கு நீ நெனச்ச ஆள் நான் இல்லன்னு சொன்னே?

நபர்1: நான் ஒரு குத்து மதிப்பா கேக்கறியாக்கும்னு சொன்னேன்.

நபர்3: குத்து மதிப்பா? அதென்னா குத்து, மதிப்பு?

நபர்1: யோவ் ஒரு பேச்சுக்கு சொன்னேன்யா..

நபர்3: டேய் சொன்ன டையலாக்கையே சொன்னே.. கொன்னுருவேன். சரி அதையும் விடு.. நான் சொல்றேன். நீ அந்த துபாய் கக்கூஸ் பார்ட்டிதானே..

நபர்1: (தனக்குள்) ஹா.. மாட்டிக்கிட்டம்யா.. எமகாதகானாயிருப்பான் போலருக்குதே.. (நபர்3ஐ பார்க்கிறான்) துபாயா? கக்கூசா? நீ என்னய்யா சொல்றே? நான் மெட்றாசே பாத்ததுல்ல.. இதுல துபாயில போயி.. நீ நெனக்கற ஆளு நான் இல்லையா.. உலகத்துல ஒருத்தன மாதிரி ஏழு பேர் இருப்பாங்கன்னு நீ கேட்டதில்ல அதுல ஒருத்தன் நான்னு வச்சிக்கயேன்..

நபர்3: சரி வச்சிக்கறேன்.. அதுக்குன்னு அவன் மேல அடிச்ச அதே கக்கூஸ் நாத்தமுமா ஏழுபேர் மேலயும் அடிக்கும்?

நபர்1: (தன் மேல் முகர்ந்து பார்க்கிறான். எனக்கு அடிக்காத நாத்தம் இவனுக்கு மட்டும் எப்படி அடிக்குதுன்னே தெரியலையே)

நபர்3: என்ன அடிக்குதா?

நபர்1: எது?

நபர்3: அதான்டா.. மோந்து பாத்தியே.. அது..

நபர்1: (விறைப்புடன் திரும்பி பார்க்கிறான்) ஆமாய்யா நீ நெனக்கற ஆளு நான்தான்.. இப்ப என்னாங்கற?

நபர்3: (வியப்புடன்) தோ பார்றா, கோபங்கூட வருமா உனக்கு?

நபர்1: பின்னே.. நான் என்ன ஒன்னுக்கும் பெறாத ஆளுன்னு நினைச்சியா.. வேணாம். சொல்லிட்டேன்.

நபர்3: ஒன்னுக்கு போவாத ஆளா? அது வேறயா? தள்ளி நில்றா!

நபர்1: (தனக்குள்) ஐயோ.. நானே வாய் குடுத்துட்டு, குடுத்துட்டு மாட்டிக்கறனே.. (கன்னத்தில் அடித்துக்கொள்கிறான்) சும்மா வாய வச்சிக்கிட்டு இரேன்டா..

நபர்3: டேய் யார சொல்றே?

நபர்1: என்னது நானா?

நபர்3: இப்ப ஏதோ வாய்க்குள்ளயே சொன்னியே?

நபர்1: (வாயை மூடிக்கொள்கிறான்) 'இல்லை' என்று தலையை அசைக்கிறான்.

நபர்3: (நபர்1ன் பின்னந்தலையில் அடிக்கிறான்) வாயை தொறந்து சொல்றா?

நபர்1: (கோபத்துடன் முறைக்கிறான்) யோவ். பேசிக்கிட்டிருக்கப்பவே.. கையை நீட்டுற.. வேணாம்.. சொல்லிட்டேன்.

நபர்3: என்ன வேணாம்? என்ன சொல்லிட்டே? அடிக்கடி இதே டயலாக்க சொல்றே? என்ன வேணாம்? நான் இந்தான்னு எதையோ குடுத்தா மாதிரி!

நபர்1: (கைகளை தலைக்குமேலே உயர்த்தி கும்பிட்டவாறு தரையில் விழுகிறான்) ஐயோ சாமி.. தெரியாம சொல்லிட்டேன்.. ஆள விடுய்யா..

நபர்3: (வலது கரத்தை உயர்த்தி சீர்வதிக்கிறான்) தீர்க்காயுசு பவ.. நீ சாவாம நூறு வருஷம் இரு.. (தனக்குள்) அப்பத்தான அடிக்கடி எங்கிட்ட மாட்டுவே..

நபர்1: (எழுந்து முற்றிலும் அழுக்காகிப்போன தன் உடைகளைப் பார்க்கிறான்) இப்ப திருப்தியா?

நபர்3: (நபர் 1ஐ மேலும் கீழும் பார்க்கிறான்) இப்பத்தான் சரியான கக்கூஸ் பார்ட்டி மாதிரி இருக்கே.. இப்படியோ போ..

(நபர் 1 தலையை குனிந்தவாறே சாலையின் ஓரத்துக்கு சென்று ஓரக்கண்ணால் நபர்3 ஐ பார்க்கிறான்)

நபர்3: டேய் என்ன பாக்கறே?

நபர்1: ஒன்னுமில்லயா.. இதோ போய்கிட்டேயிருக்கேன்.. (செல்கிறான்)

(நபர்3 ஒரு விஷம புன்னகையுடன் சைக்கிளை திருப்பிக்கொண்டு வந்த வழியே திரும்புகிறான்)

முடிவு

23.11.05

போடாங்.. உன் ஐடியாவும் நீயும்

காட்சி 1

பாத்திரங்கள்
திருடன் 1: கவுண்டமனி
திருடன் 2: செந்தில்.
காவற்காரர் (Police): எஸ்.எஸ். சந்திரன்.


திருடன் 1 & 2 சாலையில் சென்றுக்கொண்டிருக்கிறார்கள். நேரம் நள்ளிரவு.

திரு1: டேய் திரிசூலத் தலையா!

திரு2: என்னண்ண நீங்க? பழைய ஸ்டைல்லயே கூப்டுக்கிட்டு..எல்லாத்துலயும் ஒரு புதுபாணி வேணும்ணே.

திரு1: பார்றா? திட்டுறதுலகூட புதுபாணி வேணுமாக்கும்? சரி நீயே சொல்லு, உன்ன மாதிரி ஆளுங்கள என்னன்னு சொல்லி திட்டுறது?

திரு2: கம்ப்யூட்டர் தலையா, சாட்டிலைட் தலையான்னு சொல்லுங்க.. ஒரு கெளரவுமா இருக்கும்லே..

திரு1: கம்ப்யூட்டர், சாட்டிலைட்டுன்னு சொல்லி திட்டறதுக்கும் ஒரு கெட்டப் வேணும்டா.. உன்னப் போயி .. சரி, சரி.. நாம இன்னைய வேலைய பார்ப்போம்.. நா சொன்னது நினைவிருக்கா?

திரு2: (பின்னந்தலையை சொறிந்துக்கொண்டு மேலே வானத்தைப் பார்க்கிறான்) என்னண்ணே சொன்னீங்க?

திரு1: (வானத்தைப் பார்க்கிறான்) அதென்னடா மேல வானத்த பாக்குற? அங்க எங்கயாச்சும் நா சொன்னத எழுதி கிழுதி வச்சிருக்கியா என்ன?

திரு2: அதில்லண்ண?

திரு1: என்ன நொன்னண்ன? சரி, சரி. மறுபடியும் சொல்றேன் கேட்டுக்க. அங்க வந்து ஏதாவது ஏடாகூடமா செஞ்சே, மவனே. (சென்சாரில் நீக்கி விட்டதால்.. வாயசைப்பு மட்டும்)

திரு2: (கோபத்துடன்) அண்ணே, என்னை என்ன வேணும்னா சொல்லுங்க.. அனாவசியமா.. வீட்லருக்கறவங்கள இழுக்காதீங்க.. வேனாண்ண, சொல்லிட்டேன்.

திரு1: (திரு2 தோளில் கைவைத்து) சரிடா.. டென்ஷனாகாத..

திரு2: சரி பரவால்ல, சொல்லுங்க.

திரு1: (சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து வாசிக்கிறான்) மஞ்சள் 100 கிராம், அரிசி 1 கிலோ ... பருப்பு..

திரு2: (கேலியுடன்) என்னண்ணே? அக்கா வீட்டுக்கு திரும்பி வரும்போது வாங்கிட்டு வரச்சொன்ன லிஸ்டாட்டம் இருக்குது..

திரு1: (கோபத்துடன்) சை.. சட்டைய மாத்தி போட்டுட்டு வந்துட்டேன் போலருக்குடா..

திரு2: இப்ப என்னண்ண பண்ண போறீங்க? பேசாம நம்ம ப்ளான நாளைக்கி வச்சிக்கலாம்ணே..

திரு1: டேய், என்ன விளையாடறியா?

திரு2: பின்ன என்னன்ன பண்ண சொல்றீங்க? பெருசா திட்டம் போட்டேன்னு சொன்னீங்க.. இப்ப ப்ளான வீட்ல வச்சிட்டு வந்து நிக்கறீங்க? இதே நானாயிருந்தா என்ன பண்ணிருப்பேன் தெரியுமா?

திரு1: கம்ப்யூட்டர் தலையா, என்ன நக்கலா? !

திரு2: (கேலியுடன்) நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் கம்ப்யூட்டர் தாண்ணே. அப்படியே ப்ளான மூளையிலயே பதிஞ்சி வச்சிருப்பேன்.. உங்களால அதெல்லாம் முடியாதுண்ணே..

திரு1: போடாங்... அப்புறம் ஏதாச்சும் சொல்லிடப் போறேன். கடுப்பேத்தாம சும்மா வா.. (சட்டென்று நின்று நேர் எதிர்புறமாய் திரும்பிக்கொள்கிறான். திரு2 விழிக்கிறான்)

திரு2: என்னன்ன தேள் கொட்டினாமாதிரி நின்னுட்டீங்க?

திரு1: டேய் சாட்டிலைட் தலையா.. நேரா பாரு.. வர்றது யாருன்னு தெரியுதா?

திரு2: எங்கண்ணே? (கண்களுக்கு மேல் கையை வைத்து உற்று பார்க்கிறான்) அண்ணே... (பீதியுடன் பின்வாங்குகிறான்) நம்ம தாணாக்காரருண்ணே.. அதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்.. திரும்பிப் போயிரலாம்னு..

திரு1: (திரும்பாமல் அப்படியே ஓரக்கண்ணால் பின்னால் பார்க்கிறான்) டேய்.. இந்த பக்கம்தான் வர்றானா பாரு..

திரு2: (பயத்துடன் அலர்கிறான்) ஆமாண்ணே.. ஐயையோ.. இப்ப என்னன்னே பண்றது.. அந்த குப்பைத்தொட்டியில ஒக்காந்துக்கறேன்.. அவரு வந்தார்னா நா இல்லேன்னு சொல்லிருங்கண்ணே.. (குப்பைத் தொட்டியை நோக்கி ஓடுகிறான்.)

திரு1: (திரு2ஐ பாய்ந்து பிடித்து அமுக்குகிறான்) டேய். என்ன மாட்டிவுட்டுட்டு நீ மட்டும் எஸ்கேப் ஆயிடலாம்னு பாக்கறயா? நில்றா..

(இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு நிற்க.. அவர்களை நோக்கி சைக்கிளில் வந்த காவற்காரர் அவர்களைப் பார்த்துவிட்டு சைக்கிளில் இருந்து கீழே இறங்குகிறார். அதைப் பார்த்துவிட்டு இருவரும் அவருக்கு முதுகை காட்டிக்கொண்டு நிற்கின்றனர்)

காவல்: டேய் யார்றா நீங்க? இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க? (அவர்களுடைய முகத்தைப் பார்க்க ஏதுவாக அவர்களைச் சுற்றிக்கொண்டு முன்புறம் செல்ல இருவரும் திரும்பி நிற்க காவல்காரருக்கு அவர்களுடைய முதுகு மட்டுமே தெரிகிறது) (தனக்குள்) என்ன இவனுங்களுக்கு முகமே இல்ல? (முனகுகிறார்)

திரு1: போலீஸ்காரர், போலீஸ்காரர். நாங்க ரெண்டு பேரும் முகமே இல்லாத அதிசயப் பிறவிங்க போலீஸ்காரர்.

திரு2: ஆமாஞ்சார்.. எனக்கு கூட கடவுள் மூஞ்சே படைக்காம விட்டுட்டான் சார்.

காவல்: (தனக்குள்) நாம நெனச்சது சரிதான். இவன்களுக்கு மூஞ்சே இல்ல.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய் தன்னுடைய கையிலிருந்த லட்டியால் அவர்களுடைய முதுகில் ஓங்கி அடிக்கிறார். இருவரும் வலியைப் பொறுத்துக்கொண்டு நிற்கின்றனர்) டேய், தப்பா நெனச்சுக்காதீங்க. வலிச்சா கத்துறதுக்கு வாயாவது இருக்கான்னு பார்த்தேன். (சத்தமே வராததால்) சரிதான். வாய்கூட இல்ல போலருக்குது.. நாமதான் நம்ம டைம வேஸ்ட் பண்ணிட்டோம்.. (நகர்கிறார். திருடர்கள் இருவரும் நிம்மதி பெருமூச்சுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். நகர ஆரம்பித்த காவல்காரர் அவர்களைச் சுற்றி வந்து தன்னுடைய சைக்கிள் ஸ்டான்டை விலக்கி சைக்கிள் மீது ஏறி அமர்ந்து மீண்டும் அவர்களைப் பார்க்க அவர்கள் மீண்டும் திரும்பி அவருக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.) சரி, சரி. நாம இன்னைக்கி முழிச்ச மூஞ்சே.. (அவர்களைத் திரும்பி பார்க்கிறார்) சீச்சீ, பாத்த முதுகே சரியில்லன்னு நினைக்கறேன். (அவர்கள் தோளில் லட்டியால் தட்டி) டேய், முகமில்லா பசங்களா, ஒழுங்கா வூட்டுக்கு போய் சேருங்க.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய்) அதான் உங்களுக்கு முகமே இல்லையே.. எப்படிறா வூட்டுக்கு போய் சேருவீங்க?

(திருடர்கள் ஒருவரை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு விழிக்கிறார்கள்.)

திரு1: (அடிக்குரலில்) இப்ப என்னடா பண்றது? இந்த தொப்பித்தலையன் நம்மள ஒருவழி பண்ணாம போமாட்டான் போலருக்குதே.

திரு2: (அதே அடிக்குரலில்)ஆமாண்ணே.. என்ன பண்லாம்? (ஒரு விநாடி யோசித்துவிட்டு..) அண்ணே, ஒரு ஐடியா?

திரு1: உனக்கா? வேண்டாம்டா..

திரு2: அண்ணே நான் சொல்றத கேளுங்க. இல்லன்னா நாம இவரு கிட்டருந்து தப்பிக்கவே முடியாது

திரு1: சரி, சொல்றா... சொல்றத வாய திறக்காம சொல்லு..

திரு2: அதெப்படின்னே வாய திறக்காம..

காவல்: (தனக்குள்) மாசக் கடைசியில ஏதாவது ஒரு கேஸ் மாட்டும்னு பாத்தா ஒன்னும் படியமாட்டேங்குதே.. (திரும்பி முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கும் இருவரையும் பார்க்கிறார்) மூஞ்சில்லாட்டி என்ன? இவனுங்களையே தள்ளிக்கிட்டு போனா என்னா? மூஞ்ச பாக்காமயே திருடன்ங்கதான்னு முடிவு பண்றதுக்கே ஒரு சாமர்த்தியம் வேணுமில்ல? இன்னொருதரம் மூஞ்ச தெரியுதான்னு பார்த்துரலாம்.. (இருவரையும் பார்த்து) டேய்.. அப்படியே திரும்புங்க..

திரு1: டேய் நீ முதல்ல திரும்பு..

திரு2: முதல்ல நீங்க திரும்புங்கண்ணே.

காவல்: டேய் என்னங்கடா.. நான் சொல்லிக்கிட்டேருக்கேன்.. இப்ப மவனே திரும்பல.. (அவர்களை சுற்றிக்கொண்டு செல்கிறார். அவர்கள் இருவரும் திரும்பி மீண்டும் முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கின்றனர்)

காவல்: சுத்தம்.. இவனுகளுக்கு மூஞ்சே இல்லை.. டேய் அப்படியே ஸ்டேஷனுக்கு நடங்கடா.. அங்க போயாவது மூஞ்சி தெரியுதான்னு பார்ப்பம்..

திரு1: இப்ப என்னடா பண்றது?

திரு2: நீங்கதான் நான் சொல்ல வந்த ஐடியாவ வேணாம்னுட்டீங்களே?

திரு1: சரி சொல்லுடா..

திரு2: சார்.. போலீஸ் சார் உங்களத்தான்..

காவல்: டேய் என்கிட்டயா பேசறீங்க?

திரு2: ஆமா சார்..

காவல்: அதெப்படிறா மூஞ்சே இல்லாம பேசறீங்க? சரி சொல்லு..

திரு2: சார் இன்னைக்கி என்ன கிழமை?

காவல்: ஏன் நாள் நல்லாங்கலைங்கறியா?

திரு2: அதில்ல சார்.

காவல்: எதில்ல சார்?

திரு2: இன்னைக்கி செவ்வா கிழமைதானே?

காவல்: ஆமா..அதுக்கென்ன இப்போ?

திரு2: செவ்வாய் வெறுவாய்னு நீங்க கேள்வி பட்டதில்லே?

காவல்: வெறுவாயா.. அப்படீன்னா.. வாயே இல்லைங்கறியா?

திரு2: கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க சார்.. செவ்வாய் கிழமை அன்னிக்கி எங்க ரெண்டு பேரோட வாயும் பேசத்தான் செய்யும், தெரியாது..

காவல்: தெரியாதுன்னா.. உனக்கும் கூடவா?

திரு2: ஆமா சார் தெரியாது.

காவல்: அப்ப சாப்பாடு?

திரு1: பட்டினிதான்.. அதுமட்டுமில்ல சார்.. எங்க மூஞ்ச எங்களுக்கே தெரியாது.. அதுனாலதான் தூங்க கூட முடியாம இப்படி பேயா அலைஞ்சிட்டிருக்கோம்.. இன்னும் ஒரு மணி நேரத்துல பொழுது விடிஞ்சுருமில்ல.. அப்ப மூஞ்சி, கண்ணு, மூக்கு, வாயி எல்லாம் தெரிய ஆரம்பிச்சிரும். வீட்ட கண்டுபிடிச்சி போயிருவோம். என்னண்ணே எப்படி என் ஐடியா? (பேசிக்கொண்டே காவற்காரர் நிற்கும் திசையை நோக்கி திரும்பிவிடுகிறான். காவற்காரர் இனம் கண்டுகொள்ள இருவரும் பிடிபடுகின்றனர்.)

காவல்: டேய்.. டேய்.. உங்கள மாதிரி எத்தன பேர நான் பாத்திருக்கேன்? எப்படி கணக்கு பண்ணி புடிச்சேன் பாத்தியா? மவனே.. மூஞ்சா இல்ல மூஞ்சி.. நடங்கடா.. ஸ்டேஷனுக்கு போனா தெரிஞ்சிரும் மூஞ்சி இருக்கா இல்லையான்னு..

(இரு திருடர்களையும் அழைத்துக்கொண்டு செல்கிறார்)

திரு1: டேய் பணங்கொட்டை தலையா, நீ ஐடியா சொல்றேன் சொன்னப்பவே தெரியும்டா இப்படித்தான் முடியும்னு.. டேய் மவனே.. லாக்கப்பில போய் வச்சிக்கறேன் உன்ன...

முடிவு

22.11.05

ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 16

காட்சி - 22

(இறுதிப் பகுதி)

(இந்நாடகத்தில் வரும் நந்துவும், பிந்துவும் நிஜம்... பெயர்களை மட்டுமே மாற்றியிருக்கிறேன். இது என் நண்பர் ஒருவர் குடும்பத்தில் நடந்தது. ஆனால் அது பிராமண குடும்பம் அல்ல.

என் நண்பரின் மூத்த மகன் தனக்கு தன் பெற்றோர் பார்த்த பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் என்று தெரிந்தும் தன் குடும்பத்திலிருந்து அதை மறைத்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இப்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.. அவருடைய தங்கை இக்கதையில் வரும் பிந்துவைப் போலவே பெற்றோர்களை எதிர்த்துக்கொண்டு ஜாதகத்தில் தோஷம் என்று தன் குடும்ப ஜோஸ்யர் சொன்னவரை திருமணம் செய்து கொண்டாள்.. அவர்கள் இருவரும் சந்தோஷத்துடன் குடும்பம் நடத்துகிறார்கள். ஆனால் குழந்தைப் பேறு இல்லை.

ஜாதகத்தில் நம்பிக்கை வைக்கவேண்டுமா இல்லையா என்பதல்ல என்னுடைய வாதம். இத்தலைமுறையினர் அதை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள், முக்கியம் கொடுக்கிறார்கள் என்பதை இந்த நிஜ வாழ்க்கையில் ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவங்களை வைத்து எழுதினால் என்ன என்று எனக்கு தோன்றியது.. அதன் விளைவுதான் இந்த நாடகம்.)

மேலே படியுங்கள்

பாத்திரங்கள்: விஷால், பிந்து.

(பிந்துவும் விஷாலும் எதிர் எதிரே அமர்ந்திருக்கிறார்கள்)

பிந்து: சொல்லு விஷால். அப்படியென்ன அர்ஜண்டான விஷயம்?

விஷால்: (சில நொடிகள் பிந்துவையே பார்த்துக்கொண்டிருக்கிறான்) எனக்கு உன் கிட்ட ஸ்ட்ரெய்ட்டா ஒன்னு கேக்கணும் பிந்து. அதான்..

பிந்து: கேளேன்.

விஷால்: டு யூ லைக் திஸ் அரேஞ்மெண்ட் ஆர் நாட்?

பிந்து: நம்ம விஷயத்த சொல்றியா விஷால்?

விஷால்: ஆமாம். ஐ நீட் எ ஸ்ட்ரெய்ட், ஹானஸ்ட் ஆன்சர்.

பிந்து: உன்னோட அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு விஷால். நானும் உன்கிட்ட சில விஷயங்கள வெளிப்படையா பேசணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். அதனாலதான் நீ கேட்டப்போ ஒத்துக்கிட்டேன்.

விஷால்: ப்ளீஸ் பிந்து. முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்.

பிந்து: இல்ல விஷால். இந்த அரேஞ்ச்மெண்ட்ல எனக்கு விருப்பமில்லை... ஏன்னா...

விஷால்: போறும் பிந்து.. எனக்கு வேறொன்னும் தெரிஞ்சிக்க தேவையில்லை.. அது எதுவாயிருந்தாலும் உன்னோட சொந்த விஷயம்.. ஐ டோன்ட் வான்டு டு கெட் இன்வால்வ்ட் இன் தட்.. ஐ ஆம் சாரி பிந்து.. டோன்ட் மிஸ்டேக் மி. (எழுந்து புறப்பட தயாராகிறான்)

பிந்து: (அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்கிறாள். அவன் கையைப் பிடித்து அமரச் செய்கிறாள்) ஏய் விஷால், வாட் ஈஸ் திஸ்? நீ இப்படி ரியாக்ட் செய்வேன்னு நான் நினைக்கவேயில்லை.. ஐ தாட் யூ வுட் பி மோர் ஸ்போர்ட்டிவ். நீ சொல்ல வேண்டியத சொல்லிட்ட.. என்னையும் பேசவிடேன். என்ன ஒரு குற்ற உணர்வோட விட்டுட்டு போறதால உனக்கு என்ன லாபம் விஷால்? பி ரீசனபிள். என்னோட சைட்லருக்கற ரீசனையும் கேளேன். ப்ளீஸ் லெட் மி ஸ்பீக்.

விஷால்: (புன்னகையுடன்) சாரி.. பிந்து.. ஐ வாஸ் ஸ்டுப்பிட், ஃபர்கிவ் மி. கோ அஹெட்.. உன் மனசுல இருக்கறது யாரு? சொல்லு..

பிந்து: (சந்தோஷத்துடன் மேசையின் குறுக்கே கரங்களை நீட்டி அவன் கரங்களைப் சிநேகத்துடன் பற்றிக்கொள்கிறாள்) தட்ஸ் தி ஸ்பிரிட் விஷால். எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் விஷால். ஆஸ் எ ஃப்ரென்ட்.. நாம ரெண்டு பேரும் சின்ன வயசுல ஓடி பிடிச்சி விளையாடுனதெல்லாம் நான் இப்பவும் நினைச்சி பாத்துக்குவேன். ஆனா நீ எப்பனாச்சும் ஒருதரம் வந்து போனதாலயோ என்னவோ உன்ன ஒரு சின்ன வயசு ஃப்ரெண்டா மட்டுமே என்னால நினைச்சு பாக்க முடிஞ்சிருக்கு.. ஐ அம் இன் லவ் விஷால்.. ஹிஸ் நேம் ஈஸ் பாஸ்கர்..

விஷால்: (வியப்புடன்) ஈஸ் இட்? கன்கிராட்ஸ்.

பிந்து: (சந்தோஷத்துடன்) தாங்க்யூ விஷால். இது நந்துவை தவிர வீட்ல யாருக்கும் தெரியாது.. நந்துகிட்ட கூட ரெண்டு நாளைக்கி முன்னாலதான் சொன்னேன்.. அதுல ஒரு சிக்கல் இருக்கு விஷால். அதனாலத்தான் இன்னும் வீட்ல அப்பாக்கிட்ட சொல்ல முடியலை..

விஷால்: சிக்கலா? அப்படீன்னா?

பிந்து: அண்ணா எங்க ரெண்டு பேரோட ஜாதகத்தையும் நம்ம ஜோஸ்யர்கிட்ட காண்பிச்சப்போ அவர் பொருந்தலைன்னு சொல்லிட்டாராம்.

விஷால்: (சிரிக்கிறான்) வாட் இஸ் திஸ் பிந்து? நீயுமா இந்த ஜாதகத்த நம்பறே? எல்லாம் சுத்த ஹம்பக்.. இஃப் யூ ரியலி லவ் ஹிம் யூ ஷ¤ட் கோ அஹெட் அன்ட் மேர்ரி ஹிம். வீட்ல சம்மதிச்சா வெல்.. இல்லன்னா இருக்கவே இருக்கு ரெஜிஸ்டர் மேரேஜ்..

பிந்து: (சந்தோஷத்துடன்) வாவ்! என் மனசுலருக்கறது அப்படியே சொல்லிட்ட விஷால். ஆனாலும் வேறொரு சிக்கல் இருக்கே.. அத உன் உதவியோடத்தான் தீர்க்க முடியும்.

விஷால்: (தீர்மானத்துடன்) ஐ அண்டர்ஸ்டாண்ட்.. லீவ் இட் டு மீ.. நீ இன்னைக்கி சாயந்திரம் வீட்டுக்கு வரச்சே நான் மட்டுமில்ல.. அப்பாவும் அம்மாவும் கூட இருக்க மாட்டோம்.. போறுமா?

பிந்து: (குழப்பத்துடன்) நீ என்ன சொல்றே விஷால்?

விஷால்: யெஸ்.. இப்ப வீட்ல ஏற்பாடு பண்ணியிருக்கற நிச்சயதார்த்தத்த நிறுத்தணும். அதுக்கு ஒரே வழி நாங்க மூனு பேரும் திரும்பி போறதுதான். ஆனா இந்த கல்யாண ஏற்பாட நிறுத்திட்டதா வீட்டுல யாரும் தெரிஞ்சிக்க கூடாது.. நிச்சய தேதிய மட்டும் ஒரு ரெண்டு மாசத்துக்கு தள்ளி போடறா மாதிரி செஞ்சிடறேன்.. யூ நீட் அட்லீஸ்ட் ஃபார்ட்டிஃபை டேஸ் டு ரெஜிஸ்டர் யுவர் மேரேஜ், ரைட்?

பிந்து: ஏய், அதெப்படி நோக்கு இதெல்லாம் தெரியும்?

விஷால்: நான் என்னோட ஒரு ஃப்ரெண்டோட ரிஜிஸ்டர் மாரேஜ்ல விட்னஸா இருந்திருக்கேன். உனக்கும் ஒரு விட்னஸ் தேவையில்ல? டேட் ஃபைனலைஸ் பண்ணிட்டு எனக்கு சொல்லு, டெல்லியென்ன வேர்ல்ட்ல எங்கருந்தாலும் பறந்து வந்துடறேன். என்ன சொல்ற?

பிந்து: (கண்களில் கண்ணீருடன் அவன் கரங்களை பற்றுகிறாள்) யூ ர் ரியலி க்ரேட் விஷால்.. தாங்க்யூ சோ மச்..

விஷால்: ஹேய், டோண்ட்.. நான் கிளம்பறேன். ஐ வில் ஹேவ் டு கோ டு ஜெட் ஏர்வேஸ் ஆஃபீஸ் அன்ட் புக் தி டிக்கட்ஸ்.. அப்பாதான் ஏன்டா ப்ளைட்டும்பார்.. ப்ளாசிபிளா ஒரு ரீசன கண்டுபிடிக்கணும். தட்ஸ் மை ஜாப்.. ஐ மீன் பொய் சொல்றது.. எதிராளி சந்தேகப்படாத மாதிரி பொய் சொல்றதுதான் நம்ம மார்க்கெட்டிங்க் வேலையோட ஸ்பெஷாலிட்டியே.. ஆல் தி பெஸ்ட் பிந்து.. கன்வே மை ரிகார்ட்ஸ் டு.. அவர் பேர் என்ன சொன்னே?

பிந்து: பாஸ்கர்

விஷால்: யெஸ்.. பாஸ்கர்.. உன்கிட்டருந்து மாரேஜ் டேட்டை எதிர்பார்ப்பேன்.. வரேன்..

(பிந்து பரபரப்புடன் வெளியேறும் விஷாலையே சில விநாடிகள் பார்த்துக்கொண்டிருக்கிறாள். பிறகு கைத்தொலைபேசியை எடுக்கிறாள்)

பிந்து: பாஸ்கர்.. ஒரு ஹாப்பி நியூஸ்..

பாஸ்கர்: (தொலைப் பேசி குரல்) என்னை வேண்டாம்னு சொல்ல போறியா?

பிந்து: (கோபத்துடன்) கொன்னுருவேன். அது உங்களுக்கு ஹாப்பி நியூசா?

பாஸ்கர்: (கேலியுடன்) இல்லையா பின்ன?

பிந்து: சரி. சரி. கேளுங்கோ.. விஷால் இப்பத்தான் இங்கருந்து போறான்.

பாஸ்கர்: இங்கருந்துன்னா?

(பிந்து விஷாலுடனான சந்திப்பை பற்றி சுருக்கமாக கூறுகிறாள்)

பாஸ்கர்: (சிறுது நேர இடைவெளிக்குப் பிறகு) அப்போ உன்னோட டிசிஷன்ல ரொம்ப உறுதியா இருக்கே?

பிந்து: (கோபத்துடன்) அதென்ன உன்னோட டிசிஷன்? நேத்தைக்கு இது நம்ம ரெண்டு பேரோட டிசிஷன்னு சொன்னேன்.. மறந்து போச்சா?

பாஸ்கர்: ஒகே, ஒகே.. டென்ஷனாகாத..

பிந்து: இங்க பாருங்க பாஸ்கர்.. ஆர் யூ, ஆர் யூ நாட் வித் மி இன் திஸ்? தெளிவா சொல்லிருங்கோ..

பாஸ்கர்: (பெருமூச்சுடன்) ஐ ஆம் வித் யூ பிந்து.. ஏன்னா ஐ லவ் யூ சோ மச். என்னால உன்ன மறக்க முடியலடா.. அதனாலத்தான நீ என்ன சொன்னாலும் மறுக்க முடியாம தவிக்கறேன்..

பிந்து: ஹேய்.. என்ன? ரொம்பத்தான் உணர்ச்சி வசப்படாதேள்.. பக்கத்துல யாரும் இல்லையா?

பாஸ்கர்: இல்ல. பிந்து ஒரு விஷயம்.

பிந்து: என்னது?

பாஸ்கர்: நான் வீட்ல அப்பாகிட்ட இதப்பத்தி இன்னைக்கி டிஸ்கஸ் பண்ணலாம்னு இருக்கேன்.. நீ என்ன சொல்றே?

பிந்து: அது உங்க இஷ்டம்.. ஆனா அதுக்கப்புறம் உங்கப்பா இப்படி சொல்றார், அப்படி சொல்றார்னுட்டு அழப்படாது.. சொல்லிட்டேன்.. நாம எடுத்த முடிவுல நாம நெலச்சி நிக்கணும்.. உங்க வீட்ல என்ன சொன்னாலும்.. என்ன சொல்றேள்?

பாஸ்கர்: (சுரத்தில்லாமல்) சரி.

பிந்து: என்ன சுரத்தேயில்லாம சொல்றேள்?

பாஸ்கர்: (உரக்க) யெஸ் மேடம். சரி மேடம்..

பிந்து: (கேலியுடன்) ஹ¥ம்.. அது. வச்சிடறேன். நாளைக்கு கூப்பிடறேன். இனியும் தாமசிக்காம ரிஜிஸ்ட்ரார் ஆஃபீசுக்கு போய் நோட்டீஸ் குடுக்கணும்.

பாஸ்கர்: ஓகே.. நான் வீட்ல இப்ப சொல்லலை..

பிந்து: உங்க இஷ்டம்..

பாஸ்கர்: பை..

பிந்து: பை..

காட்சி முடிவு

காட்சி 23

பத்மநாபம் குடும்பத்தினர்.

(சுவர் கடிகாரம் எட்டு முறை அடித்து ஓய்கிறது. பிந்து வாசற்கதவை திறந்துகொண்டு நுழைகிறாள். ஹாலில் யாருமில்லை..)

பிந்து: (வியப்புடன்) என்ன இது.. வீடு திறந்த மடமாட்டம் இருக்கு! யாரையும் காணோம்? (மாடியை பார்க்கிறாள்) அம்மா வீட்ல இருக்கியா?

(சில விநாடிகள் கழித்து அம்புஜம் இறங்கி வருகிறாள்.)

பிந்து: என்னம்மா.. வீடு திறந்து கிடக்கு? நீ மேல இருந்து வரே.. வீட்ல வேற யாரும் இல்லையா? மன்னி எங்கே? மாமி, மாமா, விஷால் யாரையும் காணோம்!

(அம்புஜம் படியிறங்கி வந்து சோபாவில் அமர்ந்து தன் மகளையே சில நிமிடங்கள் பார்க்கிறாள். பிந்து அருகில் சென்றமர்ந்து கைகளைப் பிடிக்கிறாள். அம்புஜம் கைகளை உதறிவிட்டு சற்று நகர்ந்து அமர்கிறாள்)

பிந்து: என்னம்மா, என்னாச்சி? ஏன் ஒரு மாதிரியா இருக்கே? அப்பா எங்கே?

அம்புஜம்: (கோபத்துடன் மகளை பார்க்கிறாள்) ஏய்.. உண்மையை சொல்லு.. விஷால் திடீர்னு புறப்பட்டு போனதுல உனக்கு பங்கிருக்கா?எங்கே அம்மாவை பாத்து சொல்லு?

பிந்து: (தனக்குள்) தாங்க்யூ விஷால். (அம்புஜத்திடம்) நீ என்னம்மா சொல்றே? விஷால் கிளம்பி போயிட்டானா?

அம்புஜம்: நீ எதையோ மறைக்கிறே.. விஷால் எங்கயோ கிளம்பி போனான். திரும்பி வந்து ஆஃபீஸ்லருந்து அர்ஜண்டா என்னமோ எஸ்.ஓ.எஸ் வந்துது.. உடனே கிளம்பணும்னு ஒத்தகால்ல நின்னு அண்ணாவையும் மன்னியையும் சேர்த்து கூட்டிக்கிட்டு போயிட்டான். அப்ப அப்பா கூட ஆத்துல இல்ல.. அவன் வரச்சேயே ப்ளைட் டிக்கட்டும் எடுத்துக்கிட்டு வந்துட்டதால இவாளாலயும் தட்ட முடியல.. ஊருக்கு போயிட்டு கூப்பிடறோம்னு சொல்லிட்டு அரக்க பரக்க துணிமனியெல்லாத்தையும் பேக் பண்ணிக்கிட்டு கால் டாக்சியை கூப்பிட்டுக்கிட்டு போயிட்டாடி.. (அழுகிறாள்)

பிந்து: (அம்புஜத்தை நெருங்கி அவளை அணைத்துக்கொள்கிறாள்) அம்மா ப்ளீஸ். நீயா எதையாச்சும் கற்பனை பண்ணிக்கிட்டு அழாதே.. ஒன்னுமிருக்காது.. அவால்லாம் எத்தனை மணிக்கு போனா? மன்னி எங்கே?

அம்புஜம்: அவோ நந்துவை ஃபோன் பண்ணி வரச்சொல்லிட்டு அவாளோட கிளம்பி ஏர்போர்ட்டுக்கு போயிருக்கா.. அவா புறப்பட்டுண்டிருக்கச்சே அப்பாவும் வந்தாரா அவரையும் அழைச்சிண்டு போயிட்டா. இன்னமும் வரலை.. நான் ஏதோ ஞாபகத்துல வாசற்கதவகூட மூடாம மாடியில போய் படுத்துட்டேன். நீ வந்ததுகூட நேக்கு தெரியலை.. உன் சத்தத்த கேட்டுட்டுதான் இறங்கி வந்தேன்..

பிந்து: (எழுந்து நிற்கிறாள்.) நீ காப்பி குடிக்கறயாம்மா.. நேக்கு தலைய வலிக்கறது.. இரு கலந்துண்டு வரேன்..

(உள்ளே போகிறாள். வாசலில் மணி அடிக்க.. ஓடிப்போய் திறக்கிறாள். பத்மநாபன், நந்து, சிந்து உள்ளே வருகிறார்கள். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் பத்மநாபன் சோபாவில் அமர, நந்து பிந்துவை முறைத்து பார்த்துவிட்டு மாடிக்கு செல்கிறான். சிந்து யார் முகத்தையும் பார்க்காமல் ஒரு மூலையில் அமர்ந்துக்கொள்கிறாள்.)

பிந்து: (பத்மநாபனிடம்) உங்களுக்கு காப்பி வேணுமாப்பா? கலந்துண்டு வரேன்..

பத்மநாபன்: (சலிப்புடன்) நீ ஒன்னும் செய்ய வேணாம்.. நீ செஞ்சதெல்லாம் போறும்.. உனக்கு என்ன விருப்பமோ.. அத நீ செஞ்சுக்கோ.. ஆனா ஒன்னு.. பின்னால ஏதாச்சும் பிரச்சினைன்னு வந்து நின்னா.. நா கண்டுக்கவே மாட்டேன். சொல்லிட்டேன்..

அம்புஜம்: (திடுக்கிட்டு தன் கணவரைப் பார்க்கிறாள்) நீங்க என்னன்னா ஏதேதோ சொல்றேள்?

பத்மநாபன்: (சிலையாய் நிற்கும் தன் மகளை பார்க்கிறாள்) என்ன பிந்து? இந்த முட்டாள் அப்பாவுக்கு எப்படி தெரியும்னு பாக்கறயா? நீயும் நந்துவும் சேந்து செஞ்சிட்டிருக்கற துரோகத்த நம்ம தரகர் புட்டு புட்டு வச்சிட்டார்.. நீங்கள்லாம் என் பிள்ளைங்க.. சொல்லிக்கவே நேக்கு வெக்கமாருக்கு... எப்படியோ போங்க.. (அம்புஜத்தை பார்க்கிறார்) நீ ஒன்னும் கவலைப் படாதேடி.. எல்லாம் அந்த ஈஸ்வரன்கிட்ட விட்டாச்சு.. மகனும், மகளும், மருமகளும், சம்மந்தி வீட்டாரும் நம்ம ரெண்டு பேரையும் பைத்தியக்காரங்களாக்கிட்டாடி.. வீட்ல மூத்ததே சரியில்லை.. இளையத சொல்லி என்ன பண்றது.. (பிந்துவை பார்க்கிறார்) உன் கல்யாணத்துக்காவது எங்கள கூப்பிடுவியா? இல்ல..

பிந்து: (கண்களில் கண்ணீருடன் தன் தந்தையை பார்க்கிறாள்) சாரிப்பா.. நீங்க சம்மதிக்க மாட்டீங்களோன்னு.. (தந்தையின் அருகில் சென்று தரையில் அமர்ந்து அவருடைய கரங்களைப் பற்றிக்கொண்டு அழுகிறாள்) என்ன மன்னிச்சிருங்கப்பா ப்ளீஸ்.. பாஸ்கர என்னால மறக்க முடியலப்பா.. அதான்..

(பத்மநாபன் தன் மகளின் தலையை கோதிவிட்டவாறே தன் மனைவியை நோக்கி தன் அருகே வரும்படி சாடை செய்கிறார். அம்புஜம் பிரம்மைப் பிடித்தவள்போல் இருந்த இடத்திலேயே இருக்கிறாள்)

பத்து: ஏய் அம்பு, என்ன பித்து பிடிச்சா மாதிரி பாக்கறே. இவா ரெண்டு பேரையும் விட்டா நமக்கு யார்டி இருக்கா? இவா ரெண்டு பேரும் நம்ம குழந்தைங்கடி.. தப்பு செஞ்சிட்டா..இவளாவது பரவால்லை.. இன்னும் பண்ணிக்கலை.. உம் புள்ள நந்து.. கல்யாணம் ஆயி முழுசா ஒரு மாசம் ஆறது.. எவ்வளவு பெரிசா பண்ணிட்டு ஒன்னும் பண்ணாத மாதிரி.. தங்கைக்கு புத்தி சொல்ல வேண்டியவன் அவளோட கூட சேந்துக்கிட்டு நம்ம ரெண்டு பேரையும் ஏமாத்திண்டிருக்கான்டி.. போட்டும் விடு.. நன்னாருந்தா சரிதான். விஷாலோட ஜாதகமும் பிந்துவோட ஜாதகமும் பேஷா பொருந்தியிருக்கு இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்னார்.. என்னாச்சி? அது நின்னு போச்சி.. இப்போ இவளுக்கும் அந்த பிள்ளையாண்டானுக்கும்.. நடக்கும்னு சொல்றது நடக்காதுடி.. தெய்வ சங்கல்ப்பம் இருந்தா நடக்காதுன்னு சொல்றதுகூட நடந்துரும்.. பாப்பம்.. (பிந்துவின் முகத்தை தன் கைகளில் ஏந்திக்கொள்கிறார்) நோக்கு தலைல என்ன எழுதி வச்சிருக்குதோ அதுதாம்மா நடக்கும்.. இந்த அப்பன் என்ன பண்ண முடியும்.. போ.. சந்தோஷமா நீ என்ன செய்யணும்னு நினைக்கறயோ செஞ்சிக்கோ.. ஆனா இந்த அப்பனால முழு மனசோட வாழ்த்தத்தான் முடியும்.. நீ நெனச்சத நடத்தி வைக்க முடியாது.. காலங்காலமா ஜாதகத்துலருக்கற என்னோட நம்பிக்கையை என்னால விட்டுரமுடியாது. என்னால ஆல் தி பெஸ்ட்டுன்னு மட்டும்தான் சொல்ல முடியும். ஆனா அத என் முழு மனசோட சொல்றேன்.. (நா தழுதழுக்க) ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் மேரிட் லைஃப்.. (தன் மனைவியை பார்க்கிறார்) நேக்கு பசிக்கலைடி.. நான் படுத்துக்க போறேன். (எழுந்து மாடிப்படியில் ஏறுகிறார். ஹாலில் இருந்த அனைவரும் அவரையே பார்த்துக்கொண்டு நிற்கின்றனர்)

(சுபம்)

18.11.05

ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 15

காட்சி-20

பாத்திரங்கள்: அம்புஜம், பங்கஜம், பிந்து, விஷால், சிந்து

(பிந்து அலுவலகத்திற்கு புறப்பட தயாராகி தன்னுடைய ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு வாசல் கதவைத் திறந்துகொண்டு வெளியேறுகிறாள்.)

அம்புஜம்: (அவசர அவசரமாய் சமையற்கட்டிலிருந்து வருகிறாள். கையில் பிந்துவின் டிபன் டப்பா.) ஏய், ஏய் பிந்து.. எங்கடி கிளம்புற.. சாப்பாடு வேண்டாம்?

பிந்து: (நின்று, திரும்பி தன் தாயை பார்க்கிறாள்) வேண்டாம்மா.. நான் லஞ்ச் டைம்ல வெளிய இருப்பேன்.. எங்கயாவது ஒட்டல்லதான் டிபன் பண்ணிக்கணும்.

அம்புஜம்: (ரகசியக்குரலில்) ஏன்டி.. உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டிருக்கே?

பிந்து: (குழப்பத்துடன்) என்னம்மா சொல்றே? எதுவாருந்தாலும் சாயந்திரம் ஆஃபீஸ்லருந்து வந்தப்புறம் பேசிக்கலாம். எனக்கிப்போ ஆபீசுக்கு லேட்டாவுது..

அம்புஜம்: (மாடியை பார்த்துவிட்டு) விஷால் ரொம்பவும் டல்லாருக்கா மாதிரி தெரியுதுடி.. பாவம்டி அவன்.. இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயம் வச்சிருக்கோம்.. இப்பவும் நீ ஆஃபீஸ், கீபீஸ்னு ஓடின்டிருக்கே.. டில்லிக்கு போக வேண்டியவதானடி நீ.. எதுக்கு இப்பவும் காலணா பொறாத இந்த வேலைக்கி ஓடின்டிருக்கே? விஷால் இருக்கற வரைக்குமாவது வீட்ல இரேன்..

பிந்து: (எரிச்சலுடன்) அம்மா இத சொல்றதுக்கு இதுவா நேரம்? சாயந்திரமா பேசிக்கலாம்.. நான் வரேன்.. (கதவைத் திறந்துக்கொண்டு போகிறாள்)

அம்புஜம்: (தனக்குள்) ஈஸ்வரா.. இவளுக்கு நீதான் நல்ல புத்திய குடுக்கணும்.. இந்த மனுஷனாவது கண்டிச்சி சொல்லி புரிய வைக்கிறாரா? எல்லாத்தையும் என் தலையிலயே போட்டுட்டு அவர் பாட்டுக்கு சின்ன குழந்தையாட்டமா..

(பங்கஜமும் விஷாலும் மாடியிலிருந்து இறங்கி வருகின்றனர். அம்புஜம் தனக்குள் முனகுவதைப் பார்த்து கேலியுடன் புன்னகை செய்கிறாள் பங்கஜம்.. விஷால் இதை பார்த்தும் பாராததுபோல் நேரே போய் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து தன் கையில் இருந்த புத்தகத்தை திறந்து படிக்கிறான்)

பங்கஜம்: டேய் என்ன சோபாவுல போய் உக்காந்துட்டே? புத்தகத்த திறந்துட்டேனா அதுலய மூழ்கி போயிருவே.. அப்புறம் இடியே இடிச்சாலும் உன்ன எழுப்ப முடியாது.. வா, வந்து சாப்டுட்டு போ.. (அம்புஜத்திடம்) என்ன அம்புஜம் உனக்குள்ளேயே பேசிக்கற போலருக்குது.. என்ன விஷயம்?

அம்புஜம்: நா என்னத்த புலம்பப் போறேன்? எல்லாம் இந்த பிந்துவை பத்தித்தான்.. விஷால் இருக்கற வரைக்கும் வீட்ல இரேன்டின்னேன். கேட்டாத்தானே.. இவ ரெண்டு நாள் இல்லாட்டி ஆஃபீசே மூடிடுவாங்கறா மாதிரி கால்ல ரெக்கைய கட்டிண்டு ஓடறா. இந்த நந்து என்னடான்னா நிச்சயம் யாருக்கோங்கறா மாதிரி விட்டேத்தியா இருக்கான்.. எப்படித்தான் இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயத்துக்கு வேண்டியத எல்லாம் செஞ்சி முடிக்க போறேனோ தெரியல.. அதான் புலம்பின்டே இருக்கேன்.

(பங்கஜம் தன் முகத்தை சுளிப்பதைப் பார்த்துவிடுகிறாள் அம்புஜம்)

அம்புஜம்: என்ன மன்னி நான் சொல்றத பிடிக்காத மாதிரி முகத்த வச்சிண்டிருக்கேள்? என்ன நினைக்கறேள்? எதுவாருந்தாலும் சொல்லிருங்கோ..

பங்கஜம்: அம்புஜம், நா ஒன்னு சொன்னா கோச்சுக்கமாட்டியே?

அம்புஜம்: (குழப்பத்துடன்) என்ன மன்னி புதிர் போடறேள்? சொல்லுங்கோ.

பங்கஜம்: எனக்கென்னமோ பிந்துவுக்கு இந்த சம்மந்தத்துல இஷ்டம் இல்லேன்னுதான் தோன்றது.. (விஷாலை திரும்பி பார்க்கிறாள். விஷால் புத்தகத்திலிருந்து நிமிர்ந்து இருவரையும் பார்த்துவிட்டு சட்டென்று எழுந்து மாடிக்கு போகிறான். சமையற்கட்டில் வேலையாயிருந்த சிந்து வேலையை நிறுத்திவிட்டு ஹாலில் பேசுவதை கேட்க முயல்கிறாள்).

அம்புஜம்: (அதிர்ச்சியுடன் எழுந்து செல்லும் விஷாலைப் பார்த்தவாறு பங்கஜத்தை நெருங்கி ரகசிய குரலில்) என்ன மன்னி நீங்கள்? பாருங்கோ விஷால் முகத்துல சட்டுன்னு ஒரு ஏமாத்தம் வந்து கப்பிண்டுருச்சு.. அதுசரி.. நீங்க எத வச்சி பிந்துக்கு இதுல இஷ்டம் இல்லேன்னு கண்டுபிடிச்சேள்?

பங்கஜம்: அவ முகத்துலதான் சந்தோஷத்தையே காணோமே.. விஷால பாத்தாலே மூஞ்ச திருப்பிண்டு போயிடறாளே.. உங்கண்ணாவும் நானும் நேத்து பெட்ரூம்ல இதத்தான் பேசிண்டிருந்தோம்.. உங்கண்ணா இப்ப அவசரப்பட்டு இந்த நிச்சயத்த நடத்தணுமாங்கறார்..

அம்புஜம்: (பதட்டத்துடன்) ஐயையோ.. அண்ணாவா இப்படி சொன்னார்? நீங்க ரெண்டு பேரும் நினைக்கறா மாதிரி இருக்காது.. பகவானே.. அவ வரட்டும். இன்னைக்கி..

பங்கஜம்: இங்க பாரு அம்புஜம்.. இந்த காலத்து பசங்க மனசுல என்ன இருக்குன்னு நம்மளால சொல்ல முடியாது.. அதத்தான நா ஆரம்பத்துலருந்தே சொல்லிண்டிருக்கேன்? நீதான் அதெல்லாம் வேண்டாம்னுட்டே.

அம்புஜம்: ஆமாம் மன்னி.. நீங்க சொல்றது சரிதான்னு தோண்றது.. ரெண்டு, மூனு நாளாவே பிந்து என்னவோ மாதிரிதான் இருக்கா.. இன்னைக்கி வந்ததும் கேட்டுடறேன். பாவம் விஷால நினைச்சாத்தான் பாவமாயிருக்கு.. (பங்கஜத்தை பார்க்கிறாள்) மன்னி.. நான் ஒன்னு சொல்லட்டுமா?

பங்கஜம்: என்ன சொல்லு?

அம்புஜம்: (ரகசிய குரலில்) இப்போதைக்கு இது நமக்குள்ளயே இருக்கட்டும். முக்கியமா அவருக்கு தெரியவேண்டாம்..

பங்கஜம்: நீ சொல்றதும் சரிதான். நமக்குள்ளயே இருக்கட்டும்..

காட்சி முடிவு.


காட்சி - 21

பாத்திரங்கள் பிந்து, விஷால்

(பிந்து தன் அலுவலகத்தை அடைந்து வண்டியிலிருந்து இறங்குகிறாள். கைத்தொலைபேசி அடிக்கிறது.. எடுத்து யார் என்று பார்க்கிறாள். அவளுக்கு அறிமுகமில்லாத தொலைப்பேசி எண்.)

பிந்து: (தயக்கத்துடன்) ஹலோ..

(தொலைப்பேசி குரல்) பிந்து நான் விஷால் பேசறேன்.

பிந்து: (வியப்புடன்) ஹாய் விஷால். என்ன ஃபோன்ல கூப்டறே.. எங்க இருக்கே?

விஷால்: ஹாய் பிந்து.. எனக்கு உன்கூட கொஞ்சம் பேசணுமே.. இப்பவே.. எங்க வந்தா பாக்கலாம்?

பிந்து: ஒன் செக்கன்ட் விஷால். (குழப்பத்துடன் வண்டியை ஸ்டான்டில் பார்க் செய்கிறாள். அலுவலகத்தினுள் செல்லாமல் வெளி வாசலை நோக்கி செல்கிறாள்)

விஷால்: பிந்து?

பிந்து: சொல்லு விஷால்.. சாயந்திரம் பேசினா போறாதா? எனக்கு ஆஃபீசுக்கு டைம் ஆயிருச்சு விஷால்.

விஷால்: நோ பிந்து.. இட் இஸ் அர்ஜன்ட்.. ஒரு ஹாஃப் எ டே லீவ் போடேன்.. ஐ வான்ட் டு சீ யூ.. ஐ நீட் டு டாக் டு யூ. ப்ளீஸ் பிந்து..

பிந்து: (ஒரு முடிவுடன்) ஓகே.. விஷால்.. நான் ஆஃபீஸ்ல போய் சொல்லிட்டு பக்கத்துலருக்கற ரெஸ்டரண்ட் வாசல்ல நிக்கறேன். உனக்கு என் ஆஃபீஸ் தெரியுமா?

விஷால்: சரியா தெரியாது.. அட்ரஸ் குடேன். நான் கண்டுபிடிச்சிக்கறேன்.

பிந்து: (அலுவலக விலாசத்தை கூறுகிறாள்) எழுதிக்கிட்டியா? நான் வாசல்லத்தான் நிக்கறேன்.. கண்டுபிடிக்க முடியலைனா கிட்ட வந்ததும் மொபைல்ல கூப்பிடு.. வச்சிடறேன்.

விஷால்: தாங்க் யூ பிந்து.. ஐ வில் பி தேர் இன் அபவுட் டென் மினிட்ஸ்.. அவ்வளவு தானே எடுக்கும்?

பிந்து: ஆமா..

விஷால்: ஓகே.. பை.. ஐ வில் பி தேர்.

பிந்து: பை.. (தனக்குள்) இவன் ஏதாவது குழப்புவானா? கம் வாட் மே.. ஐ வில் டெல் ஹிம் தி ஹோல் திங்.. (அலுவலகத்திற்குள் நுழைகிறாள்)

காட்சி முடிவு

(சாரிங்க.. அடுத்த பதிவில கண்டிப்பா முடிஞ்சிரும்..)

ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 14

காட்சி - 19


(ஒரு பூங்காவின் முன்னால் பாஸ்கர் காத்திருக்கிறான். பிந்து ஓட்டமும் நடையுமாய் வருவதை பார்த்துவிட்டு அவளை நோக்கி செல்கிறான்.)

பிந்து: (மூச்சு வாங்குகிறது) சாரி பாஸ்கர். என் வண்டி ரிப்பேராயிருச்சி.. வொர்க் ஷாப்பில குடுத்துட்டு பஸ் பிடிச்சி வர்றதுக்குள்ள.. நீங்க வந்து ரொம்ப நேரமாச்சா?

பாஸ்கர்: (கேலியுடன்) நீ என்னைக்கி சொன்ன நேரத்துக்கு வந்திருக்கே.. மகாராணியோட தரிசனத்துக்கு காத்திருக்கறதுதானே இந்த மகாராஜா, சாரி, கூஜாவுக்கு வேலை?

பிந்து: (போலி கோபத்துடன் பாஸ்கரை அடிக்க கை ஓங்குகிறாள்) உங்களுக்கு எப்ப பாத்தாலும் கேலியும் கிண்டலும்தான்.. உங்கள கட்டிக்கிட்டு என்ன பாடுபட போறனோ தெரியல.. சரி, அது இருக்கட்டும்.. நந்து அண்ணா என்ன சொன்னான்? அத சொல்லுங்க முதல்ல..

பாஸ்கர்: அது பெரிய கதை.. வா, பார்க் உள்ள போய் உக்கார்ந்து பேசலாம். (இருவரும் பூங்காவினுள் நுழைந்து காலியாயிருந்த ஒரு மர பெஞ்சில் அமர்கிறார்கள்.)

பிந்து: சொல்லுங்க. அண்ணா ஏதாவது எசகு பிசகா பேசினானா?

பாஸ்கர்: (கேலியுடன்) உன் அண்ணாவாச்சே, வேற எப்படி பேசுவான்? நான் கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதே உங்காத்துல எல்லாருமே இப்படிதானா.. இல்ல ..

பிந்து: உங்க கேலி போறும் பாஸ்கர்.. உங்காத்து மாதுவ மறந்துட்டு பேசாதேள்.

பாஸ்கர்: சரி, சரி. விஷயத்துக்கு வரேன்.

பிந்து: அதத்தான் நானும் சொல்றேன். அண்ணா என்ன சொன்னான். ஒன்னுவிடாம சொல்லுங்கோ.

பாஸ்கர்: உங்கண்ணா வந்தாரா.. வந்து ஹலோ பாஸ்கர்னு கையை குடுத்தார். அப்பாடா. அந்த இறுக்க்க்க்கமான பிடியிலயே அவர் என்ன சொல்ல வரார்னு புரிஞ்சிட்டது...

பிந்து: (எரிச்சலுடன்) இதையெல்லாம் யார் கேட்டா..

பாஸ்கர்: (கேலியுடன்) நீதானே ஒன்னுவிடாம சொல்லுங்கோன்னே..

பிந்து: ஐயோ பாஸ்கர், நேரம் காலம் தெரியாம விளையாடின்டு.. விஷயத்துக்கு வாங்கோ.. இப்பவே ஆறு மணியாயிடுத்து.. நான் ஆத்துல ஏழு மணிக்குள்ள இருக்கலனா எங்க பங்கஜம் மாமிக்கு மூக்குல வேத்துரும்.. ப்ளீஸ் விளையாடம விஷயத்துக்கு வாங்கோ..

பாஸ்கர்: எதுக்கு விளையாடாம? விளையாடின்டே வரேனே.. விஷயத்துக்கு..

பிந்து: (கோபத்துடன்) நீங்க ஒன்னும் சொல்லவேணாம்.. நான் போறேன். (எழுந்து நிற்கிறாள்)

பாஸ்கர்: (அவளுடைய கையைப் பிடித்து அமர்த்துகிறான்) இடுக்கண் வருங்கால் நகுகன்னு அவ்வையார் சொல்லியிருக்கார் தெரியுமோல்லியோ.. அதான் நகுறேன்.

பிந்து: (தலையிலடித்துக்கொள்கிறாள்) ஐயோ அது அவ்வையார் இல்ல.. வள்ளுவர்..

பாஸ்கர்: யாரோ ஒர்த்தர்.. சொன்னாரா இல்லையா?

பிந்து: அதுக்கும் நீங்க சொல்லப் போற விஷயத்துக்கும் என்ன பாஸ்கர் சம்மந்தம்?

பாஸ்கர்: இருக்கே.. உங்க அண்ணா ஒரு இடுக்கண் தானே.. அதான் அவர் வந்தப்போ நகுன்னு சொல்லிட்டு நகுவுறேன்..

பிந்து: (ஒன்றும் பேசாமல் பாஸ்கரை பார்த்து முறைக்கிறாள்) நான் என்னவோ ஏதோன்னு இருக்கற வேலையையெல்லாம் அப்படியே போட்டுட்டு ஓடி வரேன்.. நீங்க என்னடான்னா நகு, கிகுன்னு வெறுப்பேத்தறேள்.. நா இப்ப இருக்கறதா போறதா?

பாஸ்கர்: ஓகே, ஓகே.. சொல்றேன்.

பிந்து: சீக்கிரம் சொல்லுங்கோ..

பாஸ்கர்: சுருக்கமாவா.. விலாவாரியாவா..

பிந்து: எப்படியோ ஒன்னு.. என் பொறுமையை சோதிக்காம சொல்லுங்கோ..

பாஸ்கர்: சரி, ஒரே வரியில சொல்றேன்.. நான் உன்னை மறந்திரணுமாம்.

பிந்து: (திடுக்கிட்டு) அப்படியா சொன்னான் அண்ணா?

பாஸ்கர்: அப்படீன்னு வெளிப்படையா சொல்லலை..

பிந்து: பின்னே?

பாஸ்கர்: பூடகமா சொன்னார்.

பிந்து: என்ன பாஸ்கர் சொல்றேள்? பூடகமான்னா?

பாஸ்கர்: பூடகமான்னா, பூடகமாத்தான். இத எப்படி டிரான்ஸ்லேட் பண்றதுன்னு நேக்கு தெரியலை..

பிந்து: ஐயோ நான் அத கேக்கலை..

பாஸ்கர்: பின்னே.. வேற எத கேக்கறே? உங்கண்ணா என்கிட்ட சொன்னதத்தானே கேக்கறே? அதத்தான் நானும் சொல்லிக்கிட்டிருக்கேன்..

பிந்து: (கோபத்துடன்) அதில்ல பாஸ்கர்..

பாஸ்கர்: எது அதில்ல..

பிந்து: ஏன் பாஸ்கர் என்ன இப்படி சித்ரவதை பண்றேள்.(முகத்தை மூடிக்கொண்டு விசும்புகிறாள்)

பாஸ்கர்: (பதறிப்போய் அவளுடைய கைகளை விலக்கி முகத்தை துடைத்து விடுகிறான்) பிந்து.. ஐ ம் சாரி.. உன்னை கொஞ்சம் சீண்டி பாக்கலாம்னுட்டுதான்...

பிந்து: உங்களுடைய இந்த கிண்டல் பேச்சுத்தான் உங்க கிட்ட எனக்கு பிடித்தமான ஒன்னு, ஒத்துக்கறேன். ஆனா, அதுக்கு இதுவா நேரம்? விளையாடாம விஷயத்துக்கு வாங்க பாஸ்கர்.

பாஸ்கர்: சரி, சொல்றேன். உங்கண்ணா ரொம்ப நேரம் ஒன்னும் பேசலை.. நீ ·போன்ல சொன்னா மாதிரி நோக்கும் விஷாலுக்கும் ஜாதக பொருத்தமல்லாம் பாத்து நிச்சயத்துக்கு கூட தேதி பாத்துட்டு இந்த நேரத்துல கல்யாணம் நின்னு போச்சினா.. அப்பாவால தாங்கிக்க முடியாது.. அதனால..

பிந்து: அதனால என்னவாம்?

பாஸ்கர்: நான் உனக்கு அட்வைஸ் பண்ணி இதுக்கு ஒத்துக்க சொல்லணுமாம்..

பிந்து: நீங்க என்ன சொன்னேள்?

பாஸ்கர்: (விஷமத்துடன்) நான் என்ன சொல்லியிருப்பேன்னு நீயே சொல்லேன்?

பிந்து: அதெல்லாம் முடியாது.. நானும் பிந்துவும் ரெண்டு வருஷமா உயிருக்குயிரா காதலிக்கிறோம். அதனால முடியாதுன்னு சொல்லியிருக்கணும்.. ஆனா நீங்க சொல்லலை. அப்படித்தானே?

பாஸ்கர்: (கேலியுடன்) பின்ன? ரெண்டு வருஷமா பழகிட்டு என்ன பத்தி உனக்கு தெரியாதா என்ன?

பிந்து: (கோபத்துடன்) விளையாடாதேள்.. என்ன சொன்னேள்?

பாஸ்கர்: நான் என்ன சொல்லமுடியும்? லெட் மி ட்ரை.. பட் ஐ கான்ட் ப்ராமிஸ் எனிதிங்க்னு சொல்லிட்டு வந்திட்டேன்..

பிந்து: ஓகே.. ஆர் யு கோயிங் டு ட்ரை?

பாஸ்கர்: (குழப்பத்துடன் பிந்துவை பார்க்கிறான்) வாட்?

பிந்து: என்ன ப்ரெய்ன் வாஷ் பண்ண ட்ரை பண்ண போறீங்களான்னேன்?

பாஸ்கர்: உன் மனசை மாத்தறதுக்கா?

பிந்து: ஆமாம்.

பாஸ்கர்: அது சக்சஸ் ஆகுமான்னுதான் யோசிக்கறேன்..

பிந்து: ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

பாஸ்கர்: (பிந்துவின் முகத்தை உற்று பார்த்துவிட்டு திரும்பிக்கொள்கிறான்) வேண்டாம்ப்பா..

பிந்து: (கோபத்துடன்) என்ன வேண்டாம்.. என் முகமா?

பாஸ்கர்: (கேலியுடன்) உன் முகம் சுமார்தான். இருந்தாலும் நான் அத சொல்லலை..

பிந்து: பின்னே..

பாஸ்கர்: நான் ட்ரை பண்ணலைன்னு சொல்ல வந்தேன்..

பிந்து: அதான பாத்தேன்.. இங்க பாருங்க பாஸ்கர்.. எனக்கு ஜாதகம், தோஷம் இதிலெல்லாம் நம்பிக்கையில்லை.. எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.. பண்ணா, உங்களத்தான் பண்ணிக்கணும்கறதுல பிடிவாதமா இருக்கேன்.. நீங்க எப்படி? எனக்கு அதுதான் தெரியணும்.. சொல்லுங்கோ..

பாஸ்கர்: (சிறிது நேரம் பிந்துவையே பார்க்கிறான்) நீ சொல்றது சாத்தியமா பிந்து?

பிந்து: (கோபத்துடன்) ஏன் அப்படி கேக்கறேள்?

பாஸ்கர்: என்னோட நிலமையையும் நீ கொஞ்சம் யோசித்து பாரேன்..

பிந்து: என்ன உங்க நிலைமை?

பாஸ்கர்: என் தங்கையோட கல்யாணம்.. நான்தான் உங்கிட்ட சொல்லியிருக்கேனே..

பிந்து: (கோபத்துடன் எழுந்து நிற்கிறாள்) அப்ப என்னத்தான் சொல்ல வரேள்? என்னை மறந்துருன்னா? சொல்லுங்கோ..

(பாஸ்கரும் எழுந்து அவளை விட்டு சற்று தள்ளி போகிறான். பிந்து அவனருகில் சென்று கையைப் பிடித்து தன் பக்கம் திருப்புகிறாள். அவனுடைய கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்து திடுக்கிடுகிறாள்)

பிந்து: என்ன பாஸ்கர் இது குழந்தையாட்டமா? என்னாச்சி?

பாஸ்கர்: பிந்து.. உங்கண்ணா சொன்னத நான் ரொம்ப நேரம் யோசிச்சேன்.. எனக்கும் ஜாதகத்துல நம்பிக்கையில்லைதான்.. ஜாதகம் பொருந்தி கல்யாணம் பண்றவா மாத்திரம் நல்லாவா வாழ்ந்திண்டிருக்கா? ஏன் என் அண்ணாவோட கல்யாணத்தையே எடுத்துக்கயேன்.. டேஸ்ட்டுல மன்னிக்கும்அண்ணாவுக்கும் எட்டாம் பொருத்தம் ஏழாம் பொருத்தம். கல்யாணம் பண்ணி இத்தனை வருஷத்துல ஒரு நாளாவது அவா ரெண்டு பேருக்கும் நடுவில என்னைக்காவது ஒரு சந்தோஷம்? பொழுது விடிஞ்சா, பொழுதுபோனா.. எந்த விஷயத்துலதான் அவா ஒத்து போயிருக்கா..

பிந்து: அப்புறமென்ன? ஏன் தயங்கறேள்?

பாஸ்கர்: அப்படியில்லை பிந்து.. உங்காத்துல இப்ப இருக்கற சூழ்நிலையில திடீர்னு நீ விஷால வேண்டாம்னு சொல்லிட்டு என்னை பாஸ்கருக்கு கட்டி வையுங்கோன்னு நீ கேக்க போயி உங்கப்பாவுக்கு ஏதாவது ஆயிருச்சினா நம்ம ரெண்டு பேராலயும் சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்க முடியும்னு நீ நினைக்கிறியா பிந்து.. சொல்லு?

(என்ன சொல்வதென்று தெரியாமல் பாஸ்கரையே பார்த்துக்கொண்டு நிற்கிறாள் பிந்து)

பாஸ்கர்: உன்னால பதில் சொல்ல முடியாது பிந்து.. தி சிச்சுவேஷன் இஸ் லைக் தட்.. எனக்கும் என் தங்கையோட கல்யாணமே இழுபறியா நிக்கற நேரத்துல நம்மளோட கல்யாணத்த பத்தி அதுவும் நம்ம ரெண்டு பேர் வீட்டையும் எதுத்துக்கிட்டு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கற சூழ்நிலையில கண்டிப்பா நான் இல்ல பிந்து.. ப்ளீஸ் ட்ரை டு அன்டர்ஸ்டான்ட் மி..

பிந்து: அதுக்கு இப்ப என்னதான் வழி?

பாஸ்கர்: நம்ம ரெண்டு பேர் குடும்பத்தோட நிம்மதிக்காக நம்முடைய நிம்மதியை சாக்ரிஃபைஸ் பண்றதுதான் இந்த சிக்கலுக்கு வழி..

பிந்து: (கோபத்துடன்) என்னால முடியறது இருக்கட்டும். உங்களால அது முடியுமா பாஸ்கர்? எங்க, என் முகத்த பாத்து என்ன மறந்துருன்னு சொல்லுங்க?

பாஸ்கர்: (பிந்துவின் முகத்தை பார்க்காமல் திரும்பிக் கொள்கிறான்) ஐ டோன்ட் நோ.. மே பி ஓவர் அ பீரியட் ஆஃப் டைம்..

பிந்து: (வெறுப்புடன்) எதுக்கு பாஸ்கர்? ஒய் ஷ¤ட் வி சாக்ரிஃபைஸ் அவர் ஹாப்பினஸ் ஃபார் அதர்ஸ்? இது என்ன முட்டாள்தனமான டிசிஷன்? ஐ கான்ட் பி எ பார்ட்டி டு திஸ் ஸ்டுப்பிடிட்டி. என்னோட முடிவுக்கு எங்க வீட்டுல ஒத்துக்காத பட்சத்துல நான் வீட்டை விட்டு வெளியேறவும் தயார்.. விஷாலுக்கு நான் இல்லன்னா வேற ஒருத்தி.. டில்லியில பெண் இல்லாமயா போகபோகுது.. ஐ மைசெல்ஃப் வில் டாக் டு ஹிம். ஹி வில் அன்டர்ஸ்டான்ட்.. நீங்கதான் ஒரு முடிவுக்கு வரணும்.. நம்ம கல்யாணத்தினால உங்க தங்கையோட வாழ்வு பாதிக்கணும்னு இல்ல.. இந்த மாப்பிள்ளையில்லன்னா வேற ஒரு மாப்பிள்ளைய பாப்போம்.. உங்காத்துல நம்மள ஏத்துக்கிட மாட்டாங்கன்னு நீங்க நெனச்சேள்னா.. உங்க தங்கைய நாம நம்மளோட கூட்டிக்கிட்டு போயிரலாம் பாஸ்கர். நான் அவளுக்கு நல்ல மாப்பிள்ளைய பாத்து கட்டி வைக்கறேன்.. வி வில் டூ இட் டுகெதர்..

பாஸ்கர்: (பிந்துவை திருப்பி பார்க்கிறான்) நீ எல்லாத்துக்கும் தயாராத்தான் வந்திருக்கே போலருக்குது..

பிந்து: (தீர்மானமான குரலில்) ஆமாம்.. பாஸ்கர்.. இதுதான் என் முடிவு.. உங்க முடிவும் கூட.. லெட் அஸ் கோ அஹெட்.. கமான் லெட் அஸ் கோ.. மேல மேல பேசிக்கிட்டேயிருந்தா.. கன்ஃப்யூஷன்தான்..

(பாஸ்கர் குழப்பத்துடன் பிந்துவை பார்க்க, பிந்து அவனுடைய கைகளில் தன் கைகளை கோர்த்துக்கொண்டு அழைத்து செல்கிறாள்)

(இருவரும் கைகைளை கோர்த்தவாறு பூங்காவை விட்டு வெளியேறுகின்றனர்)

காட்சி முடிவு

(அடுத்த பதிவில் முடியும்)