24.3.06

சூரியன் 47

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் சின்னதாய் ஒரு மனிதக் கூட்டம் தெரிய வாகனத்தை நடைபாதையில் ஏற்றி நிறுத்திவிட்டு காலிலிருந்த ஹை ஹீல்சை கையில் எடுத்துக் கொண்டு ஓட்டமாய் கூட்டத்தை நோக்கி ஓடினாள் மைதிலி, ‘Please god. Let it be Sreeni.’ என்ற பிரார்த்தனையுடன்..

கூட்டத்தை நெருங்கி குழுமியிருந்தோரை விலக்கிக்கொண்டு பார்த்தாள். சீனியேதான்.

நல்லவேளை பெரிதாய் காயம் ஒன்றும் பட்டதாய் தெரியவில்லை. மயக்கமடித்து விழுந்திருப்பான்போலும். குனிந்து அவனுடைய தோளைத் தொட்டாள்.. ‘சீனி are you ok?’ என்றாள்.

சீனிவாசன் சிரமத்துடன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். முகத்தில் சட்டென்று தோன்றி மறைந்த அந்த பிரகாசம் அருகில் குழுமியிருந்த அனைவரையும் மைதிலியை நோக்கி திருப்பியது.

‘I am ok My.. I think I just lost my balance.. I am Ok now. Thanks for coming.’

யே ஆப்கா ஆத்மி ஹை க்யா? க்யா ஹோகயா இஸ்க்கோ.. பீமார் ஹை க்யா? என்ற கேள்விகள் சுற்றிலும் இருந்து வர மைதிலி அவர்களை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தாள். ‘குச் நயி ஹை பாய் சாப்.. He must have lost his balance. Nothing serious I presume. Please help me to take him to a nearby Clinic or Hospital.. I need to take to him to a Doctor.. Just to be on the safer side.. Is there anybody nearby?’

மும்பைவாசிகளின் அசல் குணம் உடனே தெரிய ஆரம்பித்தது.. வேடிக்கை பார்க்க வந்தால் உதவி கேட்கிறாளே. நமக்கு தலைக்கு மேல இருக்கு.. இதுல இவள எங்க கூட்டிக்கிட்டு போறது என்று நினைத்தார்களோ என்னவோ, அடுத்த சில நொடிகளில் அனைவரும் கலைந்து செல்ல மைதிலி ஒரு சிறு கேலி புன்னகையுடன், ‘பார்த்தியா சீனி, இவா ஓடறத?’ என்றாள்..

சீனிவாசன் ஒரு பலவீன பார்வை பார்த்தான். தானாகவே எழுந்திருக்க முயன்று முடியாமல் மீண்டும் நடைபாதையிலேயே அமர்ந்தான்..

மைதிலி பதறிப்போய் அவனுடைய கைகளுக்கடியில் கைகொடுத்து தூக்கினாள்.. சீனிவாசன் வேதனையில் முகத்தைச் சுளித்தவாறு அவளை நிமிர்ந்துப் பார்த்தான். ‘My.. I think I have sprained my ankle.. I am unable to get up. Can you please get your scooter? I’ll wait here..’

மைதிலி சந்தேகத்துடன் அவனைப் பார்த்தாள். ‘உன்னால ஸ்கூட்டர்ல மட்டும் ஏறி உக்கார முடியுமா. அதெல்லாம் வேணாம். நாம டாக்சி பிடிச்சி செம்பூர்க்கே போயிரலாம். கார்டன் பக்கத்துல எனக்குத் தெரிஞ்ச தமிழாள் டாக்டர் ஒருத்தர் இருக்கார். அவராண்ட போனா நல்லா பார்ப்பார். ஒன்ன டாக்சியில ஏத்திட்டு நா என் ஸ்கூட்டர்ல வரேன்.. என்ன சொல்றே?’

சீனிவாசனுக்கு வேற வழி தெரியாததால், ‘Ok. Call a taxi.’ என்றான்.

********

வத்ஸ்லா வாகனத்தை போர்ட்டிக்கோவில் ஏற்றி நிறுத்திவிட்டு எஞ்ஜினை அணைத்தாள். ரியர்வியூ கண்ணாடியில் தன்னுடைய தாயின் கடுகடு முகத்தைப் பார்த்தாள்.

அம்மா ஃப்ளைட்டுக் கிளம்பறதுக்குள்ள இன்னும் என்னென்ன ப்ராப்ளம் க்ரியேட் பண்ணப் போறாளோ தெரியலையே..

தன் தாயின் அருகில் அமர்ந்திருந்த தன்னுடைய தந்தையின் முகத்தில் படர்ந்திருந்த கவலையும் அவளுக்குத் தெரிந்தது. அப்பா எப்படி சட்டுன்னு சீனி கேட்டதுக்கு ஒத்துக்கிட்டார்? சீனிக்கும் மைதிலிக்கும் இருந்த உறவு.. அது உறவுதானா அல்லது வெறும் ஃப்ரென்ட்ஷிப்பா? சீனி என்ன நினைக்கிறான்னு தெரியும்.. ஆனா மைதிலி மனசுல என்ன இருக்கோ யாருக்கு தெரியும்?

காரிலிருந்து இறங்கி போர்ட்டிகோ படியேறிக்கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்தாள். ‘டாட்.. ஒரு ரெண்டு  மூனு நாளைக்கு வேண்டிய ட்ரெஸ் மட்டும் எடுத்தா போறும்லே..?’

மாதவன் பதிலேதும் கூறாமல் தன் முன்னால் கோபத்துடன் சென்ற தன் மனைவியைப் பார்த்தார். What should I do to appease her?

‘டாட்.. நா கேட்டதுக்கு பதில் சொல்லாம அம்மாவையே பார்த்துக்கிட்டிருக்கீங்க?’

மாதவன் சட்டென்று நின்று திரும்பி தன் மகளைப் பார்த்தார். ‘என்னடா கேட்டே.. சாரி.. I was just thinking about your mom..’

வத்ஸலா தன் தந்தையைப் பார்த்து ஆறுதலுடன் புன்னகைத்தாள், ‘அம்மாவ மறந்துருங்க டாட்.. she will be all right. அம்மாவுக்கு நீங்க சென்னைக்கு போறதப்பத்தி முதல்லயே டிஸ்கஸ் பண்லேங்கற கோபம்தான்.. அது மாறிடும்.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.. ஒரு ரெண்டு மூனு நாளக்கு ட்ரெஸ் எடுத்துக்கிட்டா போறுமா?’

மாதவன் சில விநாடிகள் யோசித்தார். ‘போறும் வத்ஸ்.. நீ எப்படி இருந்தாலும் திரும்பி வந்து உன் ப்ராஜக்ட் ஹெட் கிட்டருந்து ரிலீவ் வாங்கணுமில்லே..?’

வத்ஸலா சிரித்தாள்.. ‘டாட்.. என்ன பெரிய ப்ராஜக்ட்? இதென்ன ஐ.டி. கம்பெனியா?  I am only a voluntary worker dad. I don’t get paid for my work.. you know that, no?’

மாதவன் பதில் பேசாமல் போய் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து தனக்கருகில் அமரும்படி அவளுக்கு சைகை காண்பித்தார்.

வத்ஸ்லா அவர் காண்பித்த இடத்தில் அமராமல் எதிரில் சுமார் பத்தடி தூரம் தள்ளியிருந்த சோபாவில் அமர்ந்து படிக்கட்டுகளில் ஏறிச் சென்றுக்கொண்டிருந்த தன் தாயையே சில விநாடிகள் பார்த்துக்கொண்டிருந்தாள்..

பிறகு, திரும்பி தன் தந்தையைப் பார்த்தாள், ‘Yes Dad.. you wanted to say something?’

மாதவன் இல்லையென்பதுபோல் தலையை அசைத்தார். ‘Nothing in particular. அம்மாவப்பத்திதான்.. What do you think? Should I leave her here so that she could come along with Srini?’

வத்ஸலா வியப்புடன் அவரைப் பார்த்தார். What’s happening? அப்பா எப்படி ஒரே நாள்ல மாறிட்டார்? அம்மா என்ன சொன்னாலும் மைண்ட் பண்ணாத அப்பாவா இது?

‘என்னடா யோசிக்கறே?’

வத்ஸலா சில நொடிகள் என்ன சொல்வதென யோசித்தாள். அப்பா சொல்றா மாதிரி அம்மா 'நீ இருந்து சீனியோட வரியா'ன்னா சரின்னுதான் சொல்லுவா? ஆனா வருவான்னு நிச்சயம் இல்லை.. சீனியும் அப்படித்தான். அவனால மைதிலிய விட்டுட்டு வரமுடியும்னு தோனலை.. அதையே சாக்கா வச்சிக்கிட்டு அம்மாவும் நானும் சீனியும் இங்கவே இருந்திடறோம்னு சொன்னாலும் சொல்லிருவா.. அது சரிவராது..

அதுமட்டுமில்ல. சீனி-மைதிலி மேரேஜ் நடக்கறதுக்கு சான்சே இல்ல.. அவ பேரண்ட்ஸ் நிச்சயம் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க.. அவங்க ரெண்டு பேரையும் பார்த்தா பயங்கர conservativeஆட்டம் தெரியுதே..

சோ.. அப்பாவோட இந்த போஸ்ட்டிங் நல்ல டைம்லதான் வந்திருக்கு.. சீனி மைதிலிய மறக்கறதுக்கு இதுதான் நல்ல சான்ஸ்.. If he doesn’t see her for some time, he might forget her.. அம்மாவுக்கும் இதான் நல்லது.. அப்பா இறங்கி வந்திருக்கற நேரத்துல அம்மாவும் மாறிட்டா எவ்வளவு நல்லாருக்கும்.. அதுக்கு அம்மாவ இப்ப இருக்கற இந்த க்ளப் ப்ரெண்ட்சோட கம்பெனியிலருந்து செப்பரேட் பண்ணனும்.. அதுக்கு இங்கருந்து கொஞ்ச காலத்துக்கு சென்னையில செட்டில் ஆறதுதான் சரி..

What about you Vaths? என்று கேட்ட தன்னுடைய மனதிடம், Yes I also need to settle down in my life.. How long can I be like this, tell me? என்று எதிர்கேள்வி தொடுத்தாள்.. Am I not getting old?

‘என்ன யோசிச்சிக்கிட்டிருக்கற வத்ஸ்?’

தன்னுடைய நினைவுகளில் மூழ்கிப்போயிருந்த வத்ஸலா திடுக்கிட்டு தன் தந்தையைப் பார்த்தாள். ‘என்ன டாட்?’

மாதவன் லேசாக சிரித்தார்.. ‘என்ன வத்ஸ்.. நீயும் வரலாமா வேணாமான்னு யோசிக்கறயா? நான் மட்டும் தனியா அங்க போய் நின்னா நல்லாவா இருக்கும்? நாளைக்கு ஈவ்னிங் நம்ம எல்லாருக்கும் ஒரு ரிசெப்ஷன் ஏற்பாடு பண்ணியிருக்கறதா என்னோட பி.ஏ. ஃபோன் பண்ணியிருக்கா தெரியுமா?’

வத்ஸலா இல்லை என்பதுபோல் தலையை அசைத்தாள். ‘No Dad. I am not thinking about not coming. அம்மாவ இங்க விட்டுட்டு போவேண்டாம்னு சொன்னேன்.. சீனியக்கூட இங்க விட்டுட்டு போறதுக்கு எனக்கு இஷ்டமில்ல டாட்.. He and Mythili.. It won’t work.. I know.. It is bound to leave both of them..’

‘ஏய்.. வத்ஸ்.. நீ என்ன பெரிய மனுஷியாட்டமா.. உனக்கு தேவையில்லாத விஷயத்துல தலையிட்டுகிட்டு..’ என்றவாறு கோபத்துடன் மாடியிலிருந்து வந்து சோபாவில் அமர்ந்த தன் தாயைப் பார்த்தாள்.

‘சாரி மம்மி.. நான் என் மனசுல பட்டத சொன்னேன்.. நான் சொல்றது சரின்னும் உனக்கே தெரியும்.. ஆனா வேணும்னே ஒத்துக்க மாட்டேங்கறே..’

மாதவன் போறும் என்பதுபோல் கையை காட்டிவிட்டு எழுந்து நின்றார். இருவரையும் மாறி, மாறி பார்த்தார். ‘We will discuss this leisurely in Chennai.. When Srini also reaches Chennai.. என்ன சொல்றே சரோ.. We will have a thorough and a frank discussion and then decide..’

சரோஜா வியப்புடன் தன் கணவனைப் பார்த்தாள்.. என்னாச்சி இந்த மனுஷனுக்கு? சட்டுன்னு ஒரே ராத்திரியில இப்படி மாறிட்டார்? இந்த மாற்றம் உண்மையானதுதானா? இல்ல இதுக்கு பின்னால வேற ஏதாச்சும் மாஸ்டர் ப்ளான்  இருக்கா?

வத்ஸலாவும் வியப்புடன் தன் தந்தையை பார்த்தவாறு அமர்ந்திருந்த தன் தாயை பார்த்தாள். அம்மாவுக்கும் அப்பாவோட மாற்றம் ஆச்சரியமாத்தான் இருக்குபோல.. The surprise shows in her face.. நீயும் மாறிடேம்மா.. என்றாள் மனதுக்குள்..

‘என்ன சரோ.. ரெடியாவலையா.. We hardly have another two hours’ time to pack..’ என்ற தன் தந்தையைப் பார்த்து புன்னகைத்தவாறே எழுந்து நின்றாள் வத்ஸலா..

‘நான் இன்னும் அரை மணியில ரெடியாயிருவேன் டாட்.. அம்மாதான் லேட் பண்ணுவா.. நீங்க போங்க நான் அம்மாவ கூட்டிகிட்டு வரேன்..’

சரோஜா அவளை முறைத்துப் பார்ப்பதைப் பார்த்து தயங்கி நின்ற மாதவனைப் பிடித்து அவருடைய அறை இருந்த திசையில் லேசாக தள்ளிவிட்டாள்.. பிறகு தன் தாயிடம் சென்று அமர்ந்தாள்..

‘மம்மி.. சீனிய பத்தி நான் சொன்னது தப்பாருந்தா மன்னிச்சிரு.. இப்ப தயவு செஞ்சி கிளம்பு.. அப்பாதான் சீனி சென்னைக்கு வந்ததும் டிஸ்கஸ் பண்ணலாம்னு சொல்றாரே..’

சரோஜா தன் மகளையே சில விநாடிகள் பார்த்தாள்.. பிறகு ஒரு சிறு புன்னகையுடன் எழுந்து நின்றாள். ‘ஓகே.. போலாம்.. எனக்கும் இங்கருந்து போய்தான் பார்ப்போமேன்னு தோன்றுது.. It may be good for all of us.’

வத்ஸலா சந்தோஷத்துடன் குதித்து எழுந்தாள்.. ‘Yes mummy. It will be good for all us..’  என்றவாறு தன்னுடைய வலது கரத்தால் தன் தாயின் தோளைச் சுற்றி வளைத்து மாடியை நோக்கி அழைத்துச் சென்றாள்..

தொடரும்..




2 comments:

டிபிஆர்.ஜோசப் said...

sivagnanamji 23 Mar
adhu eppadi sooriyan 46 m sooriyan 14 m ore samayathil varuginrana?//

vandhana pavam.........
kamali,kamali thodarba ezhudhum eduvum...........
sory

G.Ragavan - 23 Mar

அந்த நம்பர் கலியோட அண்ணன் ஃபோன் பண்ணுனதா?

ம்ம்ம்...பிரச்சனைன்னு தெரியுது...வந்தனாவப் பாசம் இழுக்குதே...பாவம்...


இந்த மூன்று பின்னூட்டங்களும் நேற்றைய பதிவிற்கு வந்தவை..

நான் நேற்றே இவற்றை பப்ளிஷ் செய்தும் அவை ஒன்றும் இதுவரை பிரசுரமாகவில்லை. அதனால்தான் மீண்டும் இவற்றை பதிந்துள்ளேன்.

என்னுடைய பதில் பின்னூட்டங்களும் பதிவாகமலே போய்விட்டன..

டிபிஆர்.ஜோசப் said...

என்னுடைய பதில்கள் இதோ..

adhu eppadi sooriyan 46 m sooriyan 14 m ore samayathil varuginrana?//

அதான் எனக்கும் தெரிய்லை ஜி! ஏதாச்சும் ஆவி கீவி வேலை செய்தோ என்னவோ? :-))

adhu eppadi sooriyan 46 m sooriyan 14 m ore samayathil varuginrana?//

நீங்க சொல்றது சரிதான். எல்லாம் விதிதான்..

ராகவன்..

அந்த நம்பர் கலியோட அண்ணன் ஃபோன் பண்ணுனதா?//

இன்னும் கொஞ்சம் பொறுத்துக்குங்க.. சொல்றேன்.

ம்ம்ம்...பிரச்சனைன்னு தெரியுது...

நிச்சயமா? ஆனா அது வந்தனவாக்கு தெரியலையே..

வந்தனாவப் பாசம் இழுக்குதே...பாவம்...//

உண்மைதான்..

அன்புடன்
ஜோசப்