'ஒனக்கு என்னைக்கி கவுன்சிலிங் வருது?'
ஜோதிகா பதிலளிக்காமல் டி.வியையே பார்த்தவாறு அமர்ந்திருக்க ராம்குமார் எரிச்சலுடன் எழுந்து சமையல்கட்டில் வேலையாயிருந்த தன் மனைவியிடம் சென்றார். 'ஏய்.. என்னாச்சி அவளுக்கு? ஏன் உம்முன்னு ஒக்காந்திருக்கா?'
'அவளுக்கு கவுன்சிலிங் வரும்போது எல்லா நல்ல காலேஜுலயும் சீட் முடிஞ்சிருக்கும் போலருக்கு... அதான் கோபம்.... நீங்க வேற எதையாவது சொல்லி எரிச்சல் மூட்டிறாதீங்க?' என்றாள் லலிதா.
சுர்ரென்று எழுந்த கோபத்துடன் வரவேற்பறைக்குள் நுழைந்து டி.வி பெட்டியை அணைத்துவிட்டு தன் அறையை நோக்கி நடந்தார் ராம்.
தந்தைக்கு ஒன்றும் சளைத்தவளல்ல என்பதை நிரூபித்தாள் ஜோதிகா. உடனே எழுந்து அவரை பிந்தொடர்ந்து சென்று இறைந்தாள். 'எதுக்கு இப்ப டிவிய ஆஃப் பண்ணீங்க?'
ராம்குமார் அடக்க முடியாத கோபத்துடன், 'ஏய் என்ன என்னைய எதுத்து பேசற அளவுக்கு ஆய்ட்டியா?' என்றவாறு தன் மகளை கன்னத்தில் ஓங்கி அறைய அதை முற்றிலும் எதிர்பாராத ஜோதிகா கன்னத்தைப் பிடித்தவாறு சுவரோடு சரிந்தாள்....
பதறிப் போய் சமையலறையில் ஓடி வந்தாள் லலிதா... 'என்னங்க நீங்க? எதுக்கு இப்ப இப்படி கோபப் படுறீங்க?'
'பின்ன என்னடி...? இவளுக்கு கவுன்சிலிங் துவங்குன முதல் வாரத்துலயே கால் வரணும்னா எண்ட்றன்சுக்கு ப்ரிப்பேர் பண்றப்ப அதே கவனமா இருக்கணும்.. அத விட்டுப்போட்டு எந்த நேரமும் டிவியே கதின்னு கெடக்கறது...மார்க் கொறஞ்சி போச்சினா... எதுக்கு சாதி பேர சர்டிஃபிகேட்ல போடலன்னு அப்பனையே குத்தம் சொல்றது? நானும் பொறுத்து, பொறுத்து பாக்கேன்... இவ போக்கும் சரியில்ல... பேச்சும் சரியில்ல... ஒழுங்கு மரியாதையா இருக்கச் சொல்லு.. இல்ல படிச்சது போறும்னு கட்டி வச்சிருவேன்....'
கணவருக்கு இரத்த அழுத்தம் இருப்பது லலிதாவுக்கு தெரிந்தாலும் அவருடைய வார்த்தைகளில் தெறித்த க்ரோதம் அவளையும் தாக்கவே, 'ஏங்க... தெரியாமத்தான் கேக்கேன்.. ஜோதி சொல்றதுல என்ன தப்பு இருக்கு? ஒங்களுக்கு கவுரவம்தான முக்கியமா போச்சிது... ஊர் முழுக்க சாதி, சாதின்னு கட்டிக்கிட்டு அலையறாங்க... நீங்க ஒருத்தர் சாதிய காட்டி சீட் வாங்கறதில்லேன்னு டிசைட் பண்ணா போறுமா? யூனிவர்சிட்டியிலருந்து அட்மிஷன் ஃபார்ம் வாங்கிட்டு வந்த அன்னைக்கி ஜோதி சொன்னது ஞாபகம் இருக்கா... அவ ஃப்ரெண்ட் விஜி... அவளும் இவள மாதிரித்தான் எண்ட்ரன்ஸ்ல மார்க் வாங்கிருக்கா... அவளுக்கு கேஸ்ட் கோட்டாவுல சீக்கிரமாவே கவுன்சிலிங் வந்து நல்ல காலேஜ்ல சேர்ந்துருவாளேன்னு ஜோதி நினைக்கறா... நம்ம அப்பாவாலதான் நமக்கு கிடைக்க வேண்டிய சீட் போயிருச்சின்னு அவ நினைக்கறதுல என்னங்க தப்பு? அதச் சொன்னா ஒங்களுக்கு ஏன் இவ்வளவு கோவம் வருது... கவலைய மறக்க டிவி பார்த்துக்கிட்டுருக்கறது கூட பொறுக்காம டிவிய ஆஃப் பண்ணதும் இல்லாம அத கேக்க வந்த பொண்ண கை நீட்டி அடிக்கற அளவுக்கு என்னங்க கோவம்?'
ராமுக்கு தான் செய்தது தவறு என்று தெரிந்தும் அவருடைய சுயகவுரவம் அதை ஏற்றுக்கொள்ள தடுத்தது. அதனாலேயே விளைந்த கோபம் அதிகரிக்க தன்னை தன்னுடைய மனைவியும் குற்றம் சாட்டுவதாக நினைத்தார். 'ஏய்... என்ன நீயும் புத்தி கெட்டத்தனமா பேசறே? இவ ப்ளஸ் டூவுல ஒழுங்கா ஒக்காந்து படிச்சதாலத்தான தொன்னூறுக்கு மேல வாங்க முடிஞ்சிது? அப்ப சாதிய பத்தி கவலைப் பட்டாளா? நா கீழ்ச்சாதின்னு சொல்லிக்கிட்டு கூனிக் குறுகி யார் முன்னாலயும் என் பிள்ளைங்க நிக்கக் கூடாதுன்னு நா நெனச்சது தப்பா? காலெஜ்ல வேணும்னா கீழ்சாதிக்காரனுக்கு சீட் கிடைக்கும்டி... ஆனா ஒரு வேலைன்னு ஆய்ட்டா நம்மள எந்த மேல்சாதிப் பயலும் மதிக்க மாட்டான்.. மாடா ஒளச்சாலும் நீ கீழ்சாதிக்கார பயதானேன்னு சொல்லி எளப்பமா பாப்பான்... நா இவளுக்கு என்னடி செஞ்சி குடுக்கல... மெரிட்லயே இவ சீட் வாங்கணும்னுதானடி சிட்டியிலயே பெஸ்ட் இன்ஸ்ட்டியூட்ல கோச்சிங்குக்கு சேத்து விட்டேன்... ப்ள்ஸ் டூவுல படிச்ச மாதிரியே ஒழுங்கா ஒக்காந்து படிச்சிருந்தா எண்ட்ரன்ஸ்லயும் நல்லா மார்க் வாங்கிருக்கலாமே... அத விட்டுப் போட்டு இவ டிவி பாத்துக்கிட்டு ஒக்காந்துருக்கப்பல்லாம் தல பாடா அடிச்சிக்கிட்டேன்... அப்பல்லாம் ப்ளஸ் டூவுலயும் இப்படித்தான பாத்துக்கிட்டிருந்தேன் மார்க் வாங்காமயா போய்ட்டேன்... ஒங்களுக்கு வேற வேலயில்லப்பான்னு சொன்னா... நீயும் எம்பொண்ணு புத்திசாலின்னுதான பீத்திக்கிட்டே... இப்போ மார்க் கொறஞ்சதும் எதுக்கு எம்மேல குத்தம் சொல்றீங்க...?'
கோபத்தின் உச்சியில் விகாரமாகிப் போன முகத்துடன் தன்னை எரித்துவிடுவதுபோல் பார்த்தவாறு நின்ற அவருடைய கோலம் லலிதாவையே ஒரு நொடி திகைப்புற செய்தது. அவர் ஹைப்பர்டென்சிவ் என்பது நினைவுக்கு வர இனியும் விவாதத்தை வளர்ப்பது ஆபத்து என்பதை உணர்ந்தவளாய் பதில் பேசாமால் தன் காலடியில் சுவரில் சாய்ந்தவாறு தலை குனிந்து அமர்ந்திருந்த ஜோதிகாவின் அருகில் அமர்ந்தாள்.... 'ஏய்... ஜோதி அழாத...' என்றவாறு அவளுடைய தலையை தடவி விட்டாள்... ஜோதிகா அப்படியே தன் தாயைக் கட்டிக்கொண்டு துக்கம் தாளாமல் குலுங்கி அழ லலிதா தன் மகளை இறுக அணைத்துக்கொண்டு கலங்கிய கண்களுடன் தன் கணவனை நிமிர்ந்துப் பார்த்தாள்... 'நீங்க ஒங்க ரூமுக்கு போங்க... நா இவள பாத்துக்கறேன்... அப்பறமா பேசிக்கலாம்.'
சுர்ரென்று தலை வரை ஏறி நின்ற கோபம் சடுதியில் இறங்கிவிட குனிந்து தன் மகளைப் பார்த்தார் ராம்குமார். 'ச்சே... என்னாச்சி எனக்கு...?' தன் மீதே கோபம் வந்தது.. தன்னுடைய கோபம் தவறானது என்பது தெரிந்தது.... இருப்பினும் இறங்கி வந்து தன் மகளிடம் மன்னிப்பு கேட்க விடாமல் அவருடைய தன்மானம் தடுத்தது. 'எப்படியோ ஒழிஞ்சி போங்க.. என் நிம்மதியே போயிருச்சி...' என்றவாறு தன் அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட.. 'பாத்தியாம்மா இந்தப்பா சொல்லிட்டுப் போறத... ஒழிஞ்சிபோயிடறேன்... என்னாலதான அப்பாவுக்கு நிம்மதி போயிரிச்சி... போறேன்... எங்கயாச்சும் போயிடறேன்...' என்றவாறு ஜோதிகா எழுந்து தன் அறையை நோக்கி ஓடிப் போய் அறைக்கதவுகளை தாளிட செய்வதறியாமல் ஒரு நொடி திகைத்து நின்றாள் லலிதா...
பிறகு சுதாரித்துக்கொண்டு ராம்குமாரின் அறைக்கதவைத் தட்டினாள், 'ஏங்க... ஜோதிகா அழுதுக்கிட்டே போயி கதவ சாத்திக்கிட்டாங்க... அவ இருக்கற மூடுல எதையாச்சும் செஞ்சிக்கப் போறாங்க... வந்து அவள கூப்டுங்க..' என்றாள் உச்ச குரலில்.
மனைவியின் குரலைக் கேட்ட ராம் அந்த குடியிருப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கதவுகள் திறக்கப்படுவதை உணர்ந்தார். இதுதான் குடியிருப்பில் வசிப்பவர்களுடைய தர்மசங்கடம்... சற்றே குரலை உயர்த்தினால் போதும்... ஒட்டுக் கேட்பதற்கென்றே சில ஜன்மங்கள் காத்திருப்பதுண்டு...
கழற்றவிருந்த சட்டையை மீண்டும் அணிந்துக்கொண்டு கதவுகளை திறந்துக்கொண்டு வெளியே வந்தார். 'ஏய்... எதுக்குடி இப்ப கூப்பாடு போடுற... பார் எதுர்த்த ஃப்ளாட்ல, பக்கத்து ப்ளாட்டுலருக்கறவங்கல்லாம் பாக்கறத. நீ போ... நா அவள பாத்துக்கறேன்...'
ஜோதிகாவின் அறைக்கதவை தட்டி அழைத்தால் நிச்சயம் அவள் வீம்பு பண்ணுவதுடன் அதுவே அக்கம்பக்கத்து ஆட்களின் கவனத்தை மீண்டும் ஈர்க்கும் என்று நினைத்தவராய் என்ன செய்யலாம் என்று யோசித்தார். சட்டென்று ஒரு யோசனை நினைவுக்கு வர தன் செல்ஃபோனை எடுத்து மகளின் எண்ணை டயல் செய்தார். ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண்களை எடுத்ததற்காக அவர் பரிசாக வாங்கி அளித்த செல்ஃபோன் அது!
எதிர் முனையில் அடித்துக்கொண்டே இருப்பது கேட்டது. வரவேற்பறையில் ஜோதிகா அமர்ந்திருந்த இடத்தில் செல்ஃபோன் கிடக்கிறதா என்று பார்த்தார்... ஊஹும்.... அப்ப அவ ரூம்லதான் இருக்கணும்... ஸ்க்ரீன்ல பாத்துட்டு பேசாம இருக்கா போலருக்கு... அடிச்சிக்கிட்டே இருப்போம்... எப்படியும் எடுப்பா....
அவருடைய செய்கையை மவுனத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தாள் லலிதா... அவளுக்கும் கணவனைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருந்தது. அவருடைய குணமே அப்படித்தான்... எதற்கெடுத்தாலும் கோபப்படுவதும், கோபத்தில் வார்த்தைகளால் எதிராளியின் மனதை புண்படுத்துவதும்... அடுத்த நொடியே கோபம் இறங்கி மன்னிப்பு கோருவதும்... தாஜா செய்து வழிக்கு கொண்டு வருவதும்... இருபதாண்டு கால தாம்பத்தியத்தில் அவள் காண்பதுதானே...
'எதுக்குங்க இப்படி கோபப்படுறீங்க... சமயத்துல கையையும் நீட்டுறீங்க.. பெண்டாட்டி நாந்தான் சரின்னுட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போறேன்... பிள்ளைகளுமா?' என்றால் அடிக்கற கைதான் அணைக்கும் சொல்றதுல இன்னொரு அர்த்தம் இருக்கு தெரியும்லே.... அணைக்கற கை அடிக்கவும் செய்யும்... அதான் அர்த்தம்... அணைக்கறதுக்கு எப்படி உரிமையிருக்கோ அதுபோலத்தாண்டி அடிக்கறதுக்கும் என்பார்... எதுக்கு அடிக்கறது, எதுக்கு அணைக்கறது? என்ன ஆம்பிளையோ என்று மாய்ந்துபோவாள்....
'ஏய்... ஜோதி.. வச்சிராத...' ராம்குமார் செல்ஃபோனில் பேசுவது கேட்கவே கணவனை நெருங்கி நின்றாள்...
'சாரிடா... அப்பா ஏதோ மூட்ல அடிச்சிட்டேன்... நாம போட்ட சத்ததுல அக்கம் பக்கத்துலருக்கறவங்கள்லாம் பாக்கறாங்க பார்... அழாதே... அதான் அப்பா சாரி கேட்டுட்டேன்லே... வெளியில வா...'
இதற்கெனவே காத்திருந்ததுபோல் ஜோதிகா கதவுகளைத் திறந்துக்கொண்டு வெளியே வர ராம்குமார் மகளை நெருங்கி அணைத்துக்கொண்டார்... 'சாரிடா.... அப்பா ஒரு இடியட்டுன்னுதான் தெரியும் இல்ல.... கோபம் வந்தா என்ன பண்றேன்னே சில சமயத்துல தெரியமாட்டேங்குதுடா... I am terribly sorry... அப்பாவ மன்னிச்சிரு... வா... ஒக்காந்து பேசலாம்..' என்றவாறு மகளை அழைத்துக்கொண்டு வரவேற்பறையிலிருந்த சோபாவில் அமர்த்திவிட்டு அருகிலேயே அமர்ந்தார். 'லலி.. நீயும் ஒக்கார்... என் மனசுலருக்கறத வெளிப்படையாவே சொல்றேன்..' என்று ஆரம்பித்தார். 'இங்க பார் ஜோதி, அப்பா எது செஞ்சாலும் அதுக்கு பின்னால ஏதாச்சும் ஒரு காரணம் இருக்கும்.... சாதி பேர ஒன் சர்ட்டிஃபிகேட்ல போடாம இருக்கறதுக்கு காரணம் இருக்கு. நீ என்னதான் மார்க் வாங்கி மெரிட்ல ஃப்ரீ சீட் வாங்கினாலும் நீ சாதி அடிப்படையிலதான் சீட் வாங்குனேன்னு ஒன் ஃப்ரெண்ட்சே பின்னால கேலி பண்ணாலும் பண்ணுவாங்க... சீட் வாங்கறதுக்கு வேணும்னா இது பிரயோஜனப் படலாம். ஆனா படிச்சி முடிஞ்சி வேலைன்னு போறப்போ இதெல்லாம் ஒன்னும் செல்லுபடியாகாது... அதுக்கு நீ வாங்கற மார்க்கும்.. இண்டர்வ்யூல நீ ஆன்சர் பண்றதுலயும்தான் இருக்கு... ஒனக்கு ஏதாவது ஒரு காலெஜ்ல சீட் கிடைச்சிரும்... ஃப்ரீ சீட் கிடைக்கலன்னா பேமெண்ட் சீட் வாங்கிரலாம்... ஒருவேளை நீ பெரிய காலேஜ்னு நினைச்சிக்கிட்டிருக்கறதுல கிடைக்காம போயிரலாம்... உன் ஃப்ரெண்டுக்கு அங்க கிடைக்கவும் செய்யலாம்... ஆனா அதப்பத்தியெல்லாம் கவலைப்பட்டு எந்த யூசும் இல்லை... நமக்கு கிடைக்கற வாய்ப்ப சரியா யூஸ் பண்ணிக்கணும்... அதுதான் புத்திசாலித்தனம்.. நீ அன்னைக்கி கொண்டு வந்த லிஸ்ட்லருக்கற காலேஜுகள நாளைக்கி போய் அப்பா பாத்துட்டு வரேன்... நீயும் வரதான்னா வா.. அதுல ஏதாச்சும் ஒரு காலேஜ்ல சீட் கிடைக்காம போயிராது... போன வருசம் மாதிரியே சி.எஸ்.சிக்கு இந்த வருசமும் பெருசா டிமாண்ட் இருக்காதுன்னு சொல்லிக்கறாங்க... அதனால ஒன் ஃப்ரெண்ட்சுக்கு எங்க கிடைக்குதுங்கறத பத்தி டென்ஷனாவாம இருக்கணும்... சரியா...?'
'ஆமா ஜோதி.. அப்பா சொல்றதும் சரியாத்தான் இருக்கு... நீ இந்த நேரத்துலதான் டென்ஷனாகாம இருக்கணும்... விஜிக்கி எங்க கிடைச்சா நமக்கென்ன...' என்றாள் லலிதா...
ஜோதிகா மவுனமாக தன் பெற்றோர்களை பார்த்தாள்... அம்மா சொல்றது சரிதான்.. விஜி சேரப்போற காலேஜ்ல நாம சேராம இருக்கறதுதான் நல்லது... அவ மட்டுமில்ல... எந்த ஸ்கூல் ஃப்ரெண்ட்சும் நமக்கு வேணாம்... It might help me to start an altogether new chapter... எதுக்கு பழைய ஃப்ரெண்ட்ஷிப்... அப்பா சொன்ன மாதிரியே செஞ்சுருவோம்... 'சாரிப்பா... நானும் மரியாதையில்லாமத்தான் நடந்துக்கிட்டேன்... மன்னிச்சிருங்க...' என்றாள் கலங்கிய கண்களுடன்... 'நீங்களே போயி காலேஜ பார்த்துட்டு வாங்க.. நீங்க பாத்தா போறும்... வேணும்னா அம்மாவையும் கூட்டிக்கிட்டு போங்க... என்னம்மா?' அவளுடைய கலங்கிய கண்கள் லலிதாவின் கண்களையும் குளமாக்கின...
இருவரையும் மாறி, மாறி பார்த்த ராம்குமார் ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்து நின்றார்... 'நா போய் குளிச்சிட்டு வரேன் லலி...' என்றவாறு குளியலறையை நோக்கி நடக்க, 'நா ஒன் மடியில படுத்துக்கறேம்மா...' என்றவாறு ஜோதிகா தன் தாயில் மடிமீது சாய... லலிதா வாஞ்சையுடன் தன் மகளின் தலையை கோதிவிட்டவாறே குளியலறையை நோக்கி நடந்த தன் கணவனைப் பார்த்தாள்...
தொடரும்...
நாளையும் வரும்..
29.6.07
14.6.07
நாளை நமதே - 11
'Your parents have not come with you?'
எதுக்கு வரணும் என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தாலும் பணிவுடன் பதிலளித்தாள் ப்ரியா. 'No Madam... I am staying with my Mother. She is not in station.'
அவளுடைய பதிலில் திருப்தியடையாமல் சந்தேகத்துடன் அவளைப் பார்த்தார் சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி முதல்வர். 'Your father?'
ப்ரியாவுக்கு எரிச்சல் மண்டிக்கொண்டு வந்தது. தளபதியில் ரஜினி ஓ! நீ அப்பன், ஆத்தா இல்லாதவனா என்றதும் கொடுப்பாரே அந்த மாதிரி கொடுத்தா என்ன என்று நினைத்தாள். 'He is not with us Mam..'
'What do you mean by that?'
'My parents are divorced Mam...'
சட்டென்று நிமிர்ந்து பார்த்த முதல்வரின் கண்களில் இரக்கம் லேசாக எட்டிப் பார்ப்பதை உணர்ந்தாள் ப்ரியா... யாருக்கு வேணும் ஒங்க இரக்கம்? என்னோட மார்க்குக்குத்தான இங்க சீட் குடுப்பீங்க... பி.சி., எம்.பி.சி மாதிரி டைவேர்ஸ்டு பேரண்ட்சோட சில்ரன்னா ப்ரையாரிட்டி ஏதாச்சும் இருக்கா என்ன? எல்லாம் ஹிப்பாக்ரசி...
'Could you tell me why you choose to join BCA when your high marks in the plus two could easily get you an engineering seat ..... எஞ்சினீயரிங் சீட் கிடைச்சிருச்சின்னா இத விட்டுட்டு போக மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?'
ச்சை... எதுக்கு இந்த கேள்வியெல்லாம்... அந்தாள் பணத்துல எஞ்சினியரீங்கும் வேணாம்.. ஒரு மண்ணும் வேணாம்னுதான அம்மாவுக்கு கூட தெரியாம இங்க வந்து நிக்கேன்? முதல்லயே இந்த அப்ளிகேஷன அனுப்பிவச்சதும் இதுக்குத்தான? 'No madam... நிச்சயமா போக மாட்டேன்... நீங்க நம்பலாம்.'
அப்போதும் திருப்தியடையாமல் சில நிமிடங்கள் தன்னையே பார்த்தவாறு அமர்ந்திருந்த கல்லூரி முதல்வரைப் பார்த்தாள் ப்ரியா... மனதுக்குள் முடியாதுன்னு சொல்லிரக் கூடாதே.. அட்மிஷன் வாங்கிட்டு ஃபீசையும் கட்டிட்டுத்தான் அம்மாட்ட சொல்லணும்... இல்லன்னா தடுத்துறுவா... அட்மிஷன் ஆனதும்... இங்கயே ஹாஸ்ட்டல்ல இடம் கிடைக்குமான்னு பாக்கணும்... போறும் இந்த லைஃப்... எனக்காத்தான் அம்மா இப்படியொரு ஷேம்லெஸ் லைஃப லீட் பண்றான்னா... அது நமக்கு வேணாம்...
'ஓக்கே...' என்றவாறு 'Admitted' என்ற ரப்பர் ஸ்டாம்ப்பை அவளுடைய அட்மிஷன் விண்ணப்பத்தில் அழுத்தி அதை அவளிடம் திருப்பித் தந்த கல்லூரி முதல்வர் 'ஆல் தி பெஸ்ட் ப்ரியா..' என்றார் புன்னகையுடன். 'இத அடுத்த ப்ளாக்குலருக்கற கவுண்டர்ல குடுத்தேன்னா எவ்வளவு கட்டணும்னு சொல்வாங்க... இன்னைக்கே வேணும்னா கட்டிரலாம்.. இல்லன்னா பிஃபோர் திஸ் சாட்டர்டே... மண்டேய்லருந்து க்ளாசஸ் ஸ்டார்ட்டாயிரும்... காலேஜ் பஸ்சுல வரணும்னா அதயும் அங்கயே சொல்லிரும்மா... ஆல் தி பெஸ்ட் once again..'
ப்ரியா வலுவில் வரவழைத்த புன்னகையுடன் நன்றியை தெரிவித்துவிட்டு வெளியேறி பணம் செலுத்தும் கவுண்டரை தேடிக்கொண்டு சென்றாள். கவுண்டருக்கு முன் நின்ற நீண்ட வரிசையைப் பார்த்ததுமே எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும் என்று நினைத்தாள்.... தலைவிதியை நொந்துக்கொண்டு வரிசையில் இறுதி ஆளாக சென்று நின்றாள்..
முந்தைய நாள் மாலையில் தன் தாயுடன் நடந்த வாக்குவாதம் அவள் கண் முன் விரிந்தது...
காலையிலிருந்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கால் கடுக்க நின்று வாங்கி வந்த விண்ணப்ப படிவத்திலிருந்த அட்மிஷன் நியதிகள் அவளை மிகவும் சோர்வடையச் செய்திருந்தன...
அத்துடன் மாலையில் வெகு நேரம் கழித்து வந்த மாலதி, 'ப்ரியா, அட்மிஷன் ஃபார்ம வாங்கிண்டு வந்துட்டியா...' என்றபோது பதிலளிக்க விருப்பமில்லாமல் அமர்ந்திருந்தாள்...
'ஏன் டல்லாருக்கே? வாங்கினியா இல்லையா?'
ப்ரியா எரிச்சலுடன் தன் தாயைப் பார்த்தாள். 'ஆமா வாங்கினேன்.. அதுக்கு என்ன இப்போ?'
மாலதி வியப்புடன், 'இப்ப என்ன கேட்டுட்டேன்னு இப்பிடி எரிஞ்சி விழறே?' என்றவாறு கையை நீட்டினாள். 'எங்க வச்சிருக்கே... குடு என்னல்லாம் பேப்பர்ஸ் ரெடி பண்ணணும்னு பாக்கலாம்.'
ப்ரியா சட்டென்று எழுந்து நின்றாள். 'நேக்கு தலைய வலிக்கறது... நா தூங்க போறேன்...' என்றவாறு தன்னுடைய படுக்கை அறையை நோக்கி நகர்ந்தாள்...
இதை சற்றும் எதிர்பாராத மாலதி எழுந்து அவள் பின்னே சென்றாள்... 'ஏய்... ப்ரியா, என்னாச்சி? ஏன் இப்படி பிஹேவ் பண்றே? நா அப்ளிகேஷன் ஃபார்ம காட்டுன்னுதான கேட்டேன்....?'
ப்ரியா தன் தோளிலிருந்த மாலதியின் கைகளை தட்டிவிட்டாள்... 'எதுக்கு? படிச்சி என்ன செய்யப் போறே? ஒன்னும் வேணாம்... எனக்கு சீட் கிடைக்கப் போறதில்ல... எதுக்கு வீணா... நா ஏதாச்சும் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேந்துக்கறேன்...'
'என்னடி சொல்றே? ஏன் சீட் கிடைக்காது... எப்படியும் கவுன்சிலிங்க்கு இன்வைட் பண்ணித்தான ஆவணும்?'
'ஆமா... இன்விட்டேஷன் வந்துட்டா மட்டும் சீட் கிடைச்சிருமாக்கும்... அப்படியே கிடைச்சாலும் ஏதாச்சும் டுபாக்கூர் காலேஜ்ல கிடைக்கும்... யாருக்கு வேணும்? கிடைச்சா அண்ணாவுல கிடைக்கணும்... இல்லையா மெட்றாஸ்லருக்கற ஏதாச்சும் அசோசியேட் காலேஜஸ்ல... இதல்லாத்தையும் விட்டுட்டு வேற எதுலயும் படிக்க மாட்டேன்... இப்பவே சொல்லிட்டேன்...'
மாலதி தன் மகளுடைய தோள்களைப் பற்றி மீண்டும் சோபாவில் அமர்த்தினாள்... 'சரிடி...கவர்ன்மெண்ட் காலேஜஸ்லயே சேர்ந்துரலாம்.. கவலைப்படாதே... எல்லாத்தையும் அங்கிள் கிட்ட சொல்லிருக்கேன்.. அவர் பார்த்துப்பார்...'
'எப்படீம்மா இவ்வளவு கன்ஃபர்ம்டா சொல்றே... செத்த இரு... சீட் அலாக்கேஷன் க்ரைட்டீரியாவ கொண்டு வந்து காட்டறேன்... அப்புறமா சொல்லு...' என்றவாறு எழுந்து தன்னுடைய அறையிலிருந்த பல்கலைக்கழகத்தின் படிவத்தைக் கொண்டு வந்து தன் தாயிடம் நீட்டினாள். 'இங்க பார் என்ன போட்டுருக்கான்னு...நமக்கெல்லாம் ஓப்பன் கேட்டகரியிலதான் கிடைக்கும்.. ஆனா பிசி, எம்பிசி ஆளுங்களும் இந்த கேட்டகரியில வந்து காம்ப்பீட் பண்ணுவாளாம்.. அவாளுக்குன்னு சீட்டுங்க வேற இருக்கு... அதுல கெடைக்கலன்னு வச்சிக்கோயேன்... ஓப்பன்லயும் வந்து நிப்பாளாம்.. என்ன அக்கிரமம் பாரு.. இத படிச்சுட்டு அழுகையே வந்துருச்சி... நீ என்னடான்னா....'
மாலதி பதிலளிக்காமல் விண்ணப்பத்தில் ப்ரியா சிவப்பு பென்சிலால் கோடிட்டு வைத்திருந்த பகுதியைப் படித்தாள்... அவளுக்கும் எரிச்சல் ஏற்பட்டது. எதுக்கு இவா இப்படியெல்லாம் அக்கிரம் பண்றா? ப்ராமணாளா பொறந்ததுதான் இவ செஞ்ச குத்தமா? எப்படியெல்லாம் படிச்சா? இப்ப என்ன பண்ணலாம்... பாஸ்கர் கிட்ட சொன்னா ஏதாச்சும் நடக்குமா? 'அதல்லாம் கவுன்சிலிங் போறப் பசங்க கவலைப்பட வேண்டியது... நமக்கெதுக்கு அதெல்லாம்.. குடுக்க வேண்டியது குடுத்தா மேனேஜ்மெண்ட் கோட்டாவுல கிடைச்சிட்டுப் போறது...மாலதி ப்ரியாவ பேசாம ஜாலியா இருக்கச் சொல்லு... வேணும்னா மூனு பேருமா சேந்து ஒரு ஊட்டி டூர் அடிச்சிட்டு வருவோம்... கேட்டுச் சொல்லு...'
பாஸ்கருக்கு கொஞ்ச நாளாகவே தளதளவென்று வளர்ந்து நிற்கும் ப்ரியா மீது ஒரு கண் இருந்ததை அவ்வப்போது கவனித்திருக்கிறாள் மாலதி. படவா ராஸ்கல், ஒனக்கு நானே ஜாஸ்தி இதுல ப்ரியாவ கேக்குதா என்று நினைத்துக்கொள்வாள்...இருந்தும் அவனை விட்டுவிட முடியாத சூழல்... இன்னும் ஒரு ரெண்டே வருசம்... ப்ரியாவ காலேஜ்ல சேத்து ரெண்டு வருசத்துக்கு ஃபீச கட்டிட்டா போறும்... அதுக்கப்புறம் சமாளிச்சிக்கலாம்... ஆனா இவ ஏதும் ஏடாகூடமா செய்யாம இருக்கணுமே...
'என்னம்மா... ஷாக்காருக்கா?' என்ற மகளைப் பார்த்தாள்...
'கவுன்சிலிங்குக்கு இன்விட்டேஷன் வரட்டும் ப்ரியா, பாக்கலாம்...இல்லன்னா இருக்கவே இருக்கு மேனேஜ்மெண்ட் கோட்டா...'
ப்ரியா எரிச்சலுடன் தன் தாயைப் பார்த்தாள். 'ஏம்மா யோசிச்சித்தான் பேசறியா? மேனேஜ்மெண்ட் கோட்டாவுல கொறஞ்சது அஞ்சி லட்சம் கேப்பானாம்.. என் ஃப்ரெண்டோட அண்ணா போன வருசம்தான் சேந்தான்... காலேஜும் யூஸ்லெஸ்சாம்..'
'அத நா பாத்துக்கறேன் ப்ரியா... நீ ஏன் ஒர்றி பண்றே?'
ப்ரியா கேலியுடன் புன்னகைத்தவாறு எழுந்து நின்றாள்... 'நீ என்ன சொல்ல வரேன்னு புரியுதும்மா.... But I don't need his charity... நேக்கு அப்படியொரு படிப்பு தேவையில்லை.... சொல்லிட்டேன்... காலைலருந்து க்யூவுல நின்னதுல மண்டைய பொளக்கறது... படுக்கப் போறேன்... என்னைய டிஸ்டர்ப் பண்ணாத.'
*****
'மிஸ் ஒங்க அப்ளிகேஷன குடுங்கன்னு சொன்னேனே காதுல விழலையா? ஒங்க பின்னால எவ்வளவு பேர் நிக்காங்க பாருங்க.. டிலே பண்ணாம மேடம் குடுத்த அப்ளிகேஷன குடுங்க..'
முந்தைய நாள் நினைவுகளில் மூழ்கியிருந்த ப்ரியா திடுக்கிட்டு எரிச்சலுடன் தன்னை முறைத்தவாறு அமர்ந்திருந்த குமாஸ்தாவைப் பார்த்தாள். 'I am sorry... இதோ.' என்றவாறு தன் கையிலிருந்த விண்ணப்பப் படிவத்தை நீட்டினாள்..
தொடரும்..
எதுக்கு வரணும் என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தாலும் பணிவுடன் பதிலளித்தாள் ப்ரியா. 'No Madam... I am staying with my Mother. She is not in station.'
அவளுடைய பதிலில் திருப்தியடையாமல் சந்தேகத்துடன் அவளைப் பார்த்தார் சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி முதல்வர். 'Your father?'
ப்ரியாவுக்கு எரிச்சல் மண்டிக்கொண்டு வந்தது. தளபதியில் ரஜினி ஓ! நீ அப்பன், ஆத்தா இல்லாதவனா என்றதும் கொடுப்பாரே அந்த மாதிரி கொடுத்தா என்ன என்று நினைத்தாள். 'He is not with us Mam..'
'What do you mean by that?'
'My parents are divorced Mam...'
சட்டென்று நிமிர்ந்து பார்த்த முதல்வரின் கண்களில் இரக்கம் லேசாக எட்டிப் பார்ப்பதை உணர்ந்தாள் ப்ரியா... யாருக்கு வேணும் ஒங்க இரக்கம்? என்னோட மார்க்குக்குத்தான இங்க சீட் குடுப்பீங்க... பி.சி., எம்.பி.சி மாதிரி டைவேர்ஸ்டு பேரண்ட்சோட சில்ரன்னா ப்ரையாரிட்டி ஏதாச்சும் இருக்கா என்ன? எல்லாம் ஹிப்பாக்ரசி...
'Could you tell me why you choose to join BCA when your high marks in the plus two could easily get you an engineering seat ..... எஞ்சினீயரிங் சீட் கிடைச்சிருச்சின்னா இத விட்டுட்டு போக மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?'
ச்சை... எதுக்கு இந்த கேள்வியெல்லாம்... அந்தாள் பணத்துல எஞ்சினியரீங்கும் வேணாம்.. ஒரு மண்ணும் வேணாம்னுதான அம்மாவுக்கு கூட தெரியாம இங்க வந்து நிக்கேன்? முதல்லயே இந்த அப்ளிகேஷன அனுப்பிவச்சதும் இதுக்குத்தான? 'No madam... நிச்சயமா போக மாட்டேன்... நீங்க நம்பலாம்.'
அப்போதும் திருப்தியடையாமல் சில நிமிடங்கள் தன்னையே பார்த்தவாறு அமர்ந்திருந்த கல்லூரி முதல்வரைப் பார்த்தாள் ப்ரியா... மனதுக்குள் முடியாதுன்னு சொல்லிரக் கூடாதே.. அட்மிஷன் வாங்கிட்டு ஃபீசையும் கட்டிட்டுத்தான் அம்மாட்ட சொல்லணும்... இல்லன்னா தடுத்துறுவா... அட்மிஷன் ஆனதும்... இங்கயே ஹாஸ்ட்டல்ல இடம் கிடைக்குமான்னு பாக்கணும்... போறும் இந்த லைஃப்... எனக்காத்தான் அம்மா இப்படியொரு ஷேம்லெஸ் லைஃப லீட் பண்றான்னா... அது நமக்கு வேணாம்...
'ஓக்கே...' என்றவாறு 'Admitted' என்ற ரப்பர் ஸ்டாம்ப்பை அவளுடைய அட்மிஷன் விண்ணப்பத்தில் அழுத்தி அதை அவளிடம் திருப்பித் தந்த கல்லூரி முதல்வர் 'ஆல் தி பெஸ்ட் ப்ரியா..' என்றார் புன்னகையுடன். 'இத அடுத்த ப்ளாக்குலருக்கற கவுண்டர்ல குடுத்தேன்னா எவ்வளவு கட்டணும்னு சொல்வாங்க... இன்னைக்கே வேணும்னா கட்டிரலாம்.. இல்லன்னா பிஃபோர் திஸ் சாட்டர்டே... மண்டேய்லருந்து க்ளாசஸ் ஸ்டார்ட்டாயிரும்... காலேஜ் பஸ்சுல வரணும்னா அதயும் அங்கயே சொல்லிரும்மா... ஆல் தி பெஸ்ட் once again..'
ப்ரியா வலுவில் வரவழைத்த புன்னகையுடன் நன்றியை தெரிவித்துவிட்டு வெளியேறி பணம் செலுத்தும் கவுண்டரை தேடிக்கொண்டு சென்றாள். கவுண்டருக்கு முன் நின்ற நீண்ட வரிசையைப் பார்த்ததுமே எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும் என்று நினைத்தாள்.... தலைவிதியை நொந்துக்கொண்டு வரிசையில் இறுதி ஆளாக சென்று நின்றாள்..
முந்தைய நாள் மாலையில் தன் தாயுடன் நடந்த வாக்குவாதம் அவள் கண் முன் விரிந்தது...
காலையிலிருந்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கால் கடுக்க நின்று வாங்கி வந்த விண்ணப்ப படிவத்திலிருந்த அட்மிஷன் நியதிகள் அவளை மிகவும் சோர்வடையச் செய்திருந்தன...
அத்துடன் மாலையில் வெகு நேரம் கழித்து வந்த மாலதி, 'ப்ரியா, அட்மிஷன் ஃபார்ம வாங்கிண்டு வந்துட்டியா...' என்றபோது பதிலளிக்க விருப்பமில்லாமல் அமர்ந்திருந்தாள்...
'ஏன் டல்லாருக்கே? வாங்கினியா இல்லையா?'
ப்ரியா எரிச்சலுடன் தன் தாயைப் பார்த்தாள். 'ஆமா வாங்கினேன்.. அதுக்கு என்ன இப்போ?'
மாலதி வியப்புடன், 'இப்ப என்ன கேட்டுட்டேன்னு இப்பிடி எரிஞ்சி விழறே?' என்றவாறு கையை நீட்டினாள். 'எங்க வச்சிருக்கே... குடு என்னல்லாம் பேப்பர்ஸ் ரெடி பண்ணணும்னு பாக்கலாம்.'
ப்ரியா சட்டென்று எழுந்து நின்றாள். 'நேக்கு தலைய வலிக்கறது... நா தூங்க போறேன்...' என்றவாறு தன்னுடைய படுக்கை அறையை நோக்கி நகர்ந்தாள்...
இதை சற்றும் எதிர்பாராத மாலதி எழுந்து அவள் பின்னே சென்றாள்... 'ஏய்... ப்ரியா, என்னாச்சி? ஏன் இப்படி பிஹேவ் பண்றே? நா அப்ளிகேஷன் ஃபார்ம காட்டுன்னுதான கேட்டேன்....?'
ப்ரியா தன் தோளிலிருந்த மாலதியின் கைகளை தட்டிவிட்டாள்... 'எதுக்கு? படிச்சி என்ன செய்யப் போறே? ஒன்னும் வேணாம்... எனக்கு சீட் கிடைக்கப் போறதில்ல... எதுக்கு வீணா... நா ஏதாச்சும் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேந்துக்கறேன்...'
'என்னடி சொல்றே? ஏன் சீட் கிடைக்காது... எப்படியும் கவுன்சிலிங்க்கு இன்வைட் பண்ணித்தான ஆவணும்?'
'ஆமா... இன்விட்டேஷன் வந்துட்டா மட்டும் சீட் கிடைச்சிருமாக்கும்... அப்படியே கிடைச்சாலும் ஏதாச்சும் டுபாக்கூர் காலேஜ்ல கிடைக்கும்... யாருக்கு வேணும்? கிடைச்சா அண்ணாவுல கிடைக்கணும்... இல்லையா மெட்றாஸ்லருக்கற ஏதாச்சும் அசோசியேட் காலேஜஸ்ல... இதல்லாத்தையும் விட்டுட்டு வேற எதுலயும் படிக்க மாட்டேன்... இப்பவே சொல்லிட்டேன்...'
மாலதி தன் மகளுடைய தோள்களைப் பற்றி மீண்டும் சோபாவில் அமர்த்தினாள்... 'சரிடி...கவர்ன்மெண்ட் காலேஜஸ்லயே சேர்ந்துரலாம்.. கவலைப்படாதே... எல்லாத்தையும் அங்கிள் கிட்ட சொல்லிருக்கேன்.. அவர் பார்த்துப்பார்...'
'எப்படீம்மா இவ்வளவு கன்ஃபர்ம்டா சொல்றே... செத்த இரு... சீட் அலாக்கேஷன் க்ரைட்டீரியாவ கொண்டு வந்து காட்டறேன்... அப்புறமா சொல்லு...' என்றவாறு எழுந்து தன்னுடைய அறையிலிருந்த பல்கலைக்கழகத்தின் படிவத்தைக் கொண்டு வந்து தன் தாயிடம் நீட்டினாள். 'இங்க பார் என்ன போட்டுருக்கான்னு...நமக்கெல்லாம் ஓப்பன் கேட்டகரியிலதான் கிடைக்கும்.. ஆனா பிசி, எம்பிசி ஆளுங்களும் இந்த கேட்டகரியில வந்து காம்ப்பீட் பண்ணுவாளாம்.. அவாளுக்குன்னு சீட்டுங்க வேற இருக்கு... அதுல கெடைக்கலன்னு வச்சிக்கோயேன்... ஓப்பன்லயும் வந்து நிப்பாளாம்.. என்ன அக்கிரமம் பாரு.. இத படிச்சுட்டு அழுகையே வந்துருச்சி... நீ என்னடான்னா....'
மாலதி பதிலளிக்காமல் விண்ணப்பத்தில் ப்ரியா சிவப்பு பென்சிலால் கோடிட்டு வைத்திருந்த பகுதியைப் படித்தாள்... அவளுக்கும் எரிச்சல் ஏற்பட்டது. எதுக்கு இவா இப்படியெல்லாம் அக்கிரம் பண்றா? ப்ராமணாளா பொறந்ததுதான் இவ செஞ்ச குத்தமா? எப்படியெல்லாம் படிச்சா? இப்ப என்ன பண்ணலாம்... பாஸ்கர் கிட்ட சொன்னா ஏதாச்சும் நடக்குமா? 'அதல்லாம் கவுன்சிலிங் போறப் பசங்க கவலைப்பட வேண்டியது... நமக்கெதுக்கு அதெல்லாம்.. குடுக்க வேண்டியது குடுத்தா மேனேஜ்மெண்ட் கோட்டாவுல கிடைச்சிட்டுப் போறது...மாலதி ப்ரியாவ பேசாம ஜாலியா இருக்கச் சொல்லு... வேணும்னா மூனு பேருமா சேந்து ஒரு ஊட்டி டூர் அடிச்சிட்டு வருவோம்... கேட்டுச் சொல்லு...'
பாஸ்கருக்கு கொஞ்ச நாளாகவே தளதளவென்று வளர்ந்து நிற்கும் ப்ரியா மீது ஒரு கண் இருந்ததை அவ்வப்போது கவனித்திருக்கிறாள் மாலதி. படவா ராஸ்கல், ஒனக்கு நானே ஜாஸ்தி இதுல ப்ரியாவ கேக்குதா என்று நினைத்துக்கொள்வாள்...இருந்தும் அவனை விட்டுவிட முடியாத சூழல்... இன்னும் ஒரு ரெண்டே வருசம்... ப்ரியாவ காலேஜ்ல சேத்து ரெண்டு வருசத்துக்கு ஃபீச கட்டிட்டா போறும்... அதுக்கப்புறம் சமாளிச்சிக்கலாம்... ஆனா இவ ஏதும் ஏடாகூடமா செய்யாம இருக்கணுமே...
'என்னம்மா... ஷாக்காருக்கா?' என்ற மகளைப் பார்த்தாள்...
'கவுன்சிலிங்குக்கு இன்விட்டேஷன் வரட்டும் ப்ரியா, பாக்கலாம்...இல்லன்னா இருக்கவே இருக்கு மேனேஜ்மெண்ட் கோட்டா...'
ப்ரியா எரிச்சலுடன் தன் தாயைப் பார்த்தாள். 'ஏம்மா யோசிச்சித்தான் பேசறியா? மேனேஜ்மெண்ட் கோட்டாவுல கொறஞ்சது அஞ்சி லட்சம் கேப்பானாம்.. என் ஃப்ரெண்டோட அண்ணா போன வருசம்தான் சேந்தான்... காலேஜும் யூஸ்லெஸ்சாம்..'
'அத நா பாத்துக்கறேன் ப்ரியா... நீ ஏன் ஒர்றி பண்றே?'
ப்ரியா கேலியுடன் புன்னகைத்தவாறு எழுந்து நின்றாள்... 'நீ என்ன சொல்ல வரேன்னு புரியுதும்மா.... But I don't need his charity... நேக்கு அப்படியொரு படிப்பு தேவையில்லை.... சொல்லிட்டேன்... காலைலருந்து க்யூவுல நின்னதுல மண்டைய பொளக்கறது... படுக்கப் போறேன்... என்னைய டிஸ்டர்ப் பண்ணாத.'
*****
'மிஸ் ஒங்க அப்ளிகேஷன குடுங்கன்னு சொன்னேனே காதுல விழலையா? ஒங்க பின்னால எவ்வளவு பேர் நிக்காங்க பாருங்க.. டிலே பண்ணாம மேடம் குடுத்த அப்ளிகேஷன குடுங்க..'
முந்தைய நாள் நினைவுகளில் மூழ்கியிருந்த ப்ரியா திடுக்கிட்டு எரிச்சலுடன் தன்னை முறைத்தவாறு அமர்ந்திருந்த குமாஸ்தாவைப் பார்த்தாள். 'I am sorry... இதோ.' என்றவாறு தன் கையிலிருந்த விண்ணப்பப் படிவத்தை நீட்டினாள்..
தொடரும்..
13.6.07
நாளை நமதே - 10
'ஏய் ஜோதி, என்ன டல்லாருக்கே?'
ஜோதிகா தன் தோழி விஜியைப் பார்த்தாள். 'பின்னெ என்னடி? நா எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சேன் தெரியுமா? ப்ளஸ் டூவுல என்னெ விட கம்மியா வாங்குனவளுங்களவிட எனக்கு என்ட்ரஸ்சுல கம்மியா போயிருச்சுடி.. அத நினைச்சாத்தான் மனசு ஆறல...'
'சரிடி... அதான் தெரியுதே.. எனக்குந்தா கம்மியாயிருச்சி.. அத விடு.. எந்த காலேஜ்னு டிசைட் பண்ணிட்டியா?'
ஜோதிகா பதிலளிக்காமல் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வாங்கிய நுழைவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வழங்கப்பட்டிருந்த படிவத்தை வாசிப்பதில் ஈடுபட்டாள்.
'என்னடி... நா கேட்டது காதுல விழுந்துச்சா இல்லையா... நீ பாட்டுக்கு அத படிச்சிக்கிட்டு இருக்கே?'
ஜோதிகா நிமிர்ந்து தன் தோழியைப் பார்த்தாள் எரிச்சலுடன். அவர்கள் இருவரும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் இணைந்து படித்தவர்கள். அவள் எப்போதுமே தன்னைவிடவும் சுமார்தான் என்று நினைத்திருந்தாள். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் எதிர்ப்பார்த்திருந்ததை விடவும் குறைவாக வாங்க அவளும் இப்போது தனக்கு நிகராக ஆகிவிட்டாளே என்ற எரிச்சல். போறாததற்கு விஜி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவள்... எங்கே அந்த அடிப்படையில் அவளுக்கு தனக்கும் முன்பாக கவுன்சிலிங் வந்துவிடுமோ என்ற அச்சமும் இருந்தது..
'ஏய் ஜோதி... இங்கதா இருக்கியா? இல்லே...'
விஜியின் குரலிலிருந்த கேலி ஜோதிகாவை மேலும் எரிச்சல்கொள்ள செய்தது. ஆயினும் கோபப்படுவதில் எவ்வித பயனும் இல்லை என்பதை உணர்ந்தாள். 'இல்லடி... Allocation of seatsனு போட்டிருக்குல்ல? அத படிச்சிக்கிட்டு இருந்தேன்....'
விஜி என்கிற விஜயாவுக்கு புரிந்தது. ஒனக்கு இது வேணும்டி.. ப்ளஸ் டூவுல ஒரு அம்பது மார்க் ஜாஸ்தி வாங்கிட்டேன்னு என்னமா அல்ட்டிக்கினே. எல்லாம் மக்கப் பண்ணி வாங்குனதுதானே.. எண்ட்ரன்ஸ்ல அது பலிக்கல... மவளே இரு... எனக்கு மட்டும் ஒனக்கு முன்னால கவுன்சிலிங் வரட்டும்... ஒன்னெ விட நல்ல காலேஜ்ல சீட் வாங்கி காட்டறேன்...
'எங்க ஒனக்கு முன்னால எனக்கு கவுன்சிலிங் வந்துருமோன்னு பயப்படறே? அதானே?'
ஜோதிகாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. 'ஆமாடி... அதான்.. இப்ப என்னங்கறே?' என்றாள் எரிச்சலுடன்.
இதான்.. இதான் வேணும்...மவள நீ வயிறெறியணும்... 'ஏய்.. எதுக்குடி கோபப்படறே? நீயும் என்னெ மாதிரி பேக்வர்ட் காஸ்ட்தான்னு நீயே சொல்லியிருக்கே... ஆனா ஸ்கூல் சேர்றப்ப என்ன கேஸ்ட்டுன்னு போட்டுக்காதது ஒங்கப்பா செஞ்ச தப்பு... அதுக்கு என்னைய எதுக்கு கோச்சிக்கறே?'
ச்சை... அப்பா செஞ்ச தப்புக்கு இவ கிட்டல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்குதே என்று மனதுக்குள் நொந்துப்போனாள்... அப்பா எப்பவுமே இப்படித்தான். கேட்டா பெருசா லெக்சர் அடிப்பார். 'சாதிய காட்டி முன்னுக்கு வரணும்னு நினைக்கறதே கேவலம். நீங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சி, மார்க் வாங்கி காலேஜ்ல சீட் புடிக்கணும். அத விட்டுட்டு நா கீழ்சாதிக்காரன்னு சொல்லிக்கிட்டு நிக்கக் கூடாது. அது நம்மள மாதிரி ஆளுங்களுக்கு இல்ல... ஏழைங்களுக்கு.. புரிஞ்சிதா?' என்று ஒருமுறை தன்னையும் தன் அண்ணாவையும் அப்பா எச்சரித்தது நினைவுக்கு வந்தது.
இதோ இருக்காளே விஜி, இவ மட்டும் என்ன ஏழையா? இவ போய் வர்றதுக்குன்னே தனியா ஒரு ஸ்கூட்டி.. குடும்பத்தோட போறதுக்கு ஒரு கார்.. அப்பா சம்பாதிக்கார், அண்ணா இவள மாதிரியே சாதிய காட்டி எஞ்சினியாராகி இப்ப வேலை பாக்கான்... வீட்டுல இவளுக்குன்னு ஒரு பி.சி.. இண்டெர் நெட்...
ஹூம்... நமக்குன்னு வந்து வாச்ச அப்பா இப்படி... நேர்மை திலகம்னு நினைப்பு... இப்ப அனுபவிக்கறது யாரு, நாந்தானே?
'ஏய் என்னடி ஜோதி... நா சொன்னது சரிதானே? பதிலையே காணம்?'
இனியும் மேற்கொண்டு இவளிடம் விவாதத்தை வளர்ப்பதில் பயனில்லை என்று நினைத்தாள் ஜோதிகா.. 'சாரிடி...' என்றாள். 'சரி... அத விடு... எந்த காலேஜ்ல சேர்றதுன்னு ஏதாச்சும் டிசைட் பண்ணியா? யூனிவர்சிட்டி சைட்டுல லிஸ்ட் இருக்காமே.. ஒங்க வீட்ல நெட் இருக்குல்ல... பாத்தியா?'
அப்படி வா வழிக்கி இன்றைக்கு இது போதும் என்ற நினைப்பில் விஜி லேசாக புன்னகைத்தாள்...'லிஸ்ட்ட பாத்தேன்... ஆனா நம்மள கவுன்சிலிங்கு கூப்டறதுக்குள்ள நல்ல காலேஜ் எல்லாம் போயிரும் போலருக்கு... ஃபர்ஸ்ட் அம்பது ராங்ல இருக்கற காலேஜ்ங்களோட வெப் சைட் அட்றஸ் எல்லாம் டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன்.. அதுல எதுலயாச்சும் கிடைச்சிரணும்.. இல்லன்னா அவ்வளவுதான்..'
முதல் அம்பது ராங்குக்குள்ள கூட கிடைக்காதா என்று மனதுக்குள் நினைத்து சோர்ந்துப் போனாள் ஜோதிகா... விஜிக்கும் தனக்கும் ஒரே மதிப்பெண்கள் இருக்கின்ற நிலையில் அவள் எம்பிசி என்பதால் அவளுக்கு எப்படியும் தன்னைவிட இரண்டு மூன்று நாட்கள் முன்பாகவே கவுன்சிலிங்கிற்கு அழைப்பு வந்துவிடும் என்று நினைத்தாள். அப்படியானால் தன்னைவிடவும் நல்ல கல்லூரியில் அவளுக்கு இடம் கிடைத்துவிடுமோ என்று நினைத்தாள்.. 'அந்த லிஸ்ட்லருந்து நீ ஏதாச்சும் செலக்ட் பண்ணி வச்சிருப்பியே... சொல்லேன்...'
விஜி சொல்வதா வேண்டாமா என்று ஒரு நொடி யோசித்தாள். ஆனால் ஜோதிகாவும் அவள் சேரவிருக்கும் கல்லூரியிலேயே சேர்ந்தால் தனக்கும் நல்லதுதானே என்று நினைத்தாள்... எண்ட்ரன்ஸ்ல என்னளவுக்கே எடுத்திருந்தாலும் க்ளாஸ்ல நமக்கு முன்னால ரேங்க் எடுக்கறவளாச்சே... நாம செலக்ட் செஞ்சி வச்சிருக்கற ரெண்டு மூனு காலேஜஸ் பேர சொல்றதால நமக்கென்ன நஷ்டம்? அவளுக்கு கவுன்சிலிங் வர்ற வரைக்கும் சீட்
இருந்தா கெடச்சிட்டுப் போவுது?
'ஆமாடி அதுலருந்து மூனு காலேஜஸ் செலக்ட் பண்ணி வச்சிருக்கேன்...' என்றவள் தான் குறித்து வைத்திருந்த கல்லூரிகளின் பெயர்களை நினைவிலிருந்து சொல்ல ஜோதிகா குறித்துக்கொண்டாள்...
'என்னடி எல்லாமே ஒரே பேரா இருக்கு?'
'ஆமாடி... எல்லாம் ஒரே க்ரூப்போடதுதானாம்... எங்கப்பா சொன்னார்...' என்றாள் விஜி புன்னகையுடன்...'வெப் சைட்டுங்கள பாத்ததோட எங்கப்பா நேர்லயே போய் பாத்துட்டு வந்தார். மூனு காலேஜும் பக்கத்து பக்கத்து காம்பவுண்ட்ல இருக்காம். எஞ்சினீயரிங்ல எல்லா ப்ராஞ்சஸ்லயும் நிறைய சீட்டுங்க இருக்குதாம்... அதோட மொத்த சீட்டுல எழுபது பர்செண்ட் கவுன்சிலிங் வழியாத்தான் செலக்ட் பண்றாங்களாம்... போன ரெண்டு வருசமும் எல்லா சீட்டும் ஃபில்லாயிருக்கு... அதுல ஃபர்ஸ்ட்ல இருக்குதே வேல் முருகன்... அந்த காலேஜ்ல பக்காவா கம்ப்யூட்டர் லேப் எல்லாம் இருக்காம். எங்கப்பாவோட ஃப்ரெண்ட் பையன் ஒருத்தன் படிக்கானாம்... மெட்றாஸ்ல எல்லா ரூட்டுக்கும் பஸ்சும் இருக்காம்... அந்த க்ரூப்லருக்கற எந்த காலேஜ்ல சீட் இருந்தாலும் எடுத்துரலாம்னு சொன்னார் எங்கப்பா... ஒங்கப்பாவையும் வேணும்னா போய் பாக்க சொல்லு...'
'பயங்கரமான ஆளுடி நீ... இவ்வளவு வேலையும் பாத்து வச்சிருக்கியா?' என்றாள் ஜோதிகா உண்மையான ஆச்சரியத்துடன்..
விஜி பெருமையுடன் புன்னகைத்தாள்... ஒனக்கு உருப்போடத்தாண்டி தெரியும்... நா அப்படியில்ல... 'சரிடி... நா வரேன்... லேட்டாயிருச்சி...' என்றாள் மனதில் தோன்றியதை வெளியில் சொல்லாமல். 'அப்ளிகேஷன நேர்ல கொண்டு வந்து குடுக்கப் போறியா இல்ல தபால்ல அனுப்பிருவியா?'
'நான் நேர்லதான் கொண்டு வந்து குடுப்பேன்... நீ?'
'நானுந்தான்... தபால்ல அனுப்பி கிடைக்கலன்னா?'
'சரி... என்னைக்கி வருவேன்னு ஃபோன் பண்ணி சொல்றேன்... ஒன்னாவே குடுக்கலாம்.. சரியா?'
'சரி... பை..' என்றவாறு விஜி தன்னுடைய ஸ்கூட்டியில் கிளம்ப மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவள் செல்வதையே பார்த்தவாறு சிறிது நேரம் நின்றுவிட்டு சாலையைக் கடந்து எதிர்புறத்திலிருந்த பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தாள் ஜோதிகா...
தொடரும்..
ஜோதிகா தன் தோழி விஜியைப் பார்த்தாள். 'பின்னெ என்னடி? நா எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சேன் தெரியுமா? ப்ளஸ் டூவுல என்னெ விட கம்மியா வாங்குனவளுங்களவிட எனக்கு என்ட்ரஸ்சுல கம்மியா போயிருச்சுடி.. அத நினைச்சாத்தான் மனசு ஆறல...'
'சரிடி... அதான் தெரியுதே.. எனக்குந்தா கம்மியாயிருச்சி.. அத விடு.. எந்த காலேஜ்னு டிசைட் பண்ணிட்டியா?'
ஜோதிகா பதிலளிக்காமல் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வாங்கிய நுழைவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வழங்கப்பட்டிருந்த படிவத்தை வாசிப்பதில் ஈடுபட்டாள்.
'என்னடி... நா கேட்டது காதுல விழுந்துச்சா இல்லையா... நீ பாட்டுக்கு அத படிச்சிக்கிட்டு இருக்கே?'
ஜோதிகா நிமிர்ந்து தன் தோழியைப் பார்த்தாள் எரிச்சலுடன். அவர்கள் இருவரும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் இணைந்து படித்தவர்கள். அவள் எப்போதுமே தன்னைவிடவும் சுமார்தான் என்று நினைத்திருந்தாள். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் எதிர்ப்பார்த்திருந்ததை விடவும் குறைவாக வாங்க அவளும் இப்போது தனக்கு நிகராக ஆகிவிட்டாளே என்ற எரிச்சல். போறாததற்கு விஜி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவள்... எங்கே அந்த அடிப்படையில் அவளுக்கு தனக்கும் முன்பாக கவுன்சிலிங் வந்துவிடுமோ என்ற அச்சமும் இருந்தது..
'ஏய் ஜோதி... இங்கதா இருக்கியா? இல்லே...'
விஜியின் குரலிலிருந்த கேலி ஜோதிகாவை மேலும் எரிச்சல்கொள்ள செய்தது. ஆயினும் கோபப்படுவதில் எவ்வித பயனும் இல்லை என்பதை உணர்ந்தாள். 'இல்லடி... Allocation of seatsனு போட்டிருக்குல்ல? அத படிச்சிக்கிட்டு இருந்தேன்....'
விஜி என்கிற விஜயாவுக்கு புரிந்தது. ஒனக்கு இது வேணும்டி.. ப்ளஸ் டூவுல ஒரு அம்பது மார்க் ஜாஸ்தி வாங்கிட்டேன்னு என்னமா அல்ட்டிக்கினே. எல்லாம் மக்கப் பண்ணி வாங்குனதுதானே.. எண்ட்ரன்ஸ்ல அது பலிக்கல... மவளே இரு... எனக்கு மட்டும் ஒனக்கு முன்னால கவுன்சிலிங் வரட்டும்... ஒன்னெ விட நல்ல காலேஜ்ல சீட் வாங்கி காட்டறேன்...
'எங்க ஒனக்கு முன்னால எனக்கு கவுன்சிலிங் வந்துருமோன்னு பயப்படறே? அதானே?'
ஜோதிகாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. 'ஆமாடி... அதான்.. இப்ப என்னங்கறே?' என்றாள் எரிச்சலுடன்.
இதான்.. இதான் வேணும்...மவள நீ வயிறெறியணும்... 'ஏய்.. எதுக்குடி கோபப்படறே? நீயும் என்னெ மாதிரி பேக்வர்ட் காஸ்ட்தான்னு நீயே சொல்லியிருக்கே... ஆனா ஸ்கூல் சேர்றப்ப என்ன கேஸ்ட்டுன்னு போட்டுக்காதது ஒங்கப்பா செஞ்ச தப்பு... அதுக்கு என்னைய எதுக்கு கோச்சிக்கறே?'
ச்சை... அப்பா செஞ்ச தப்புக்கு இவ கிட்டல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்குதே என்று மனதுக்குள் நொந்துப்போனாள்... அப்பா எப்பவுமே இப்படித்தான். கேட்டா பெருசா லெக்சர் அடிப்பார். 'சாதிய காட்டி முன்னுக்கு வரணும்னு நினைக்கறதே கேவலம். நீங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சி, மார்க் வாங்கி காலேஜ்ல சீட் புடிக்கணும். அத விட்டுட்டு நா கீழ்சாதிக்காரன்னு சொல்லிக்கிட்டு நிக்கக் கூடாது. அது நம்மள மாதிரி ஆளுங்களுக்கு இல்ல... ஏழைங்களுக்கு.. புரிஞ்சிதா?' என்று ஒருமுறை தன்னையும் தன் அண்ணாவையும் அப்பா எச்சரித்தது நினைவுக்கு வந்தது.
இதோ இருக்காளே விஜி, இவ மட்டும் என்ன ஏழையா? இவ போய் வர்றதுக்குன்னே தனியா ஒரு ஸ்கூட்டி.. குடும்பத்தோட போறதுக்கு ஒரு கார்.. அப்பா சம்பாதிக்கார், அண்ணா இவள மாதிரியே சாதிய காட்டி எஞ்சினியாராகி இப்ப வேலை பாக்கான்... வீட்டுல இவளுக்குன்னு ஒரு பி.சி.. இண்டெர் நெட்...
ஹூம்... நமக்குன்னு வந்து வாச்ச அப்பா இப்படி... நேர்மை திலகம்னு நினைப்பு... இப்ப அனுபவிக்கறது யாரு, நாந்தானே?
'ஏய் என்னடி ஜோதி... நா சொன்னது சரிதானே? பதிலையே காணம்?'
இனியும் மேற்கொண்டு இவளிடம் விவாதத்தை வளர்ப்பதில் பயனில்லை என்று நினைத்தாள் ஜோதிகா.. 'சாரிடி...' என்றாள். 'சரி... அத விடு... எந்த காலேஜ்ல சேர்றதுன்னு ஏதாச்சும் டிசைட் பண்ணியா? யூனிவர்சிட்டி சைட்டுல லிஸ்ட் இருக்காமே.. ஒங்க வீட்ல நெட் இருக்குல்ல... பாத்தியா?'
அப்படி வா வழிக்கி இன்றைக்கு இது போதும் என்ற நினைப்பில் விஜி லேசாக புன்னகைத்தாள்...'லிஸ்ட்ட பாத்தேன்... ஆனா நம்மள கவுன்சிலிங்கு கூப்டறதுக்குள்ள நல்ல காலேஜ் எல்லாம் போயிரும் போலருக்கு... ஃபர்ஸ்ட் அம்பது ராங்ல இருக்கற காலேஜ்ங்களோட வெப் சைட் அட்றஸ் எல்லாம் டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன்.. அதுல எதுலயாச்சும் கிடைச்சிரணும்.. இல்லன்னா அவ்வளவுதான்..'
முதல் அம்பது ராங்குக்குள்ள கூட கிடைக்காதா என்று மனதுக்குள் நினைத்து சோர்ந்துப் போனாள் ஜோதிகா... விஜிக்கும் தனக்கும் ஒரே மதிப்பெண்கள் இருக்கின்ற நிலையில் அவள் எம்பிசி என்பதால் அவளுக்கு எப்படியும் தன்னைவிட இரண்டு மூன்று நாட்கள் முன்பாகவே கவுன்சிலிங்கிற்கு அழைப்பு வந்துவிடும் என்று நினைத்தாள். அப்படியானால் தன்னைவிடவும் நல்ல கல்லூரியில் அவளுக்கு இடம் கிடைத்துவிடுமோ என்று நினைத்தாள்.. 'அந்த லிஸ்ட்லருந்து நீ ஏதாச்சும் செலக்ட் பண்ணி வச்சிருப்பியே... சொல்லேன்...'
விஜி சொல்வதா வேண்டாமா என்று ஒரு நொடி யோசித்தாள். ஆனால் ஜோதிகாவும் அவள் சேரவிருக்கும் கல்லூரியிலேயே சேர்ந்தால் தனக்கும் நல்லதுதானே என்று நினைத்தாள்... எண்ட்ரன்ஸ்ல என்னளவுக்கே எடுத்திருந்தாலும் க்ளாஸ்ல நமக்கு முன்னால ரேங்க் எடுக்கறவளாச்சே... நாம செலக்ட் செஞ்சி வச்சிருக்கற ரெண்டு மூனு காலேஜஸ் பேர சொல்றதால நமக்கென்ன நஷ்டம்? அவளுக்கு கவுன்சிலிங் வர்ற வரைக்கும் சீட்
இருந்தா கெடச்சிட்டுப் போவுது?
'ஆமாடி அதுலருந்து மூனு காலேஜஸ் செலக்ட் பண்ணி வச்சிருக்கேன்...' என்றவள் தான் குறித்து வைத்திருந்த கல்லூரிகளின் பெயர்களை நினைவிலிருந்து சொல்ல ஜோதிகா குறித்துக்கொண்டாள்...
'என்னடி எல்லாமே ஒரே பேரா இருக்கு?'
'ஆமாடி... எல்லாம் ஒரே க்ரூப்போடதுதானாம்... எங்கப்பா சொன்னார்...' என்றாள் விஜி புன்னகையுடன்...'வெப் சைட்டுங்கள பாத்ததோட எங்கப்பா நேர்லயே போய் பாத்துட்டு வந்தார். மூனு காலேஜும் பக்கத்து பக்கத்து காம்பவுண்ட்ல இருக்காம். எஞ்சினீயரிங்ல எல்லா ப்ராஞ்சஸ்லயும் நிறைய சீட்டுங்க இருக்குதாம்... அதோட மொத்த சீட்டுல எழுபது பர்செண்ட் கவுன்சிலிங் வழியாத்தான் செலக்ட் பண்றாங்களாம்... போன ரெண்டு வருசமும் எல்லா சீட்டும் ஃபில்லாயிருக்கு... அதுல ஃபர்ஸ்ட்ல இருக்குதே வேல் முருகன்... அந்த காலேஜ்ல பக்காவா கம்ப்யூட்டர் லேப் எல்லாம் இருக்காம். எங்கப்பாவோட ஃப்ரெண்ட் பையன் ஒருத்தன் படிக்கானாம்... மெட்றாஸ்ல எல்லா ரூட்டுக்கும் பஸ்சும் இருக்காம்... அந்த க்ரூப்லருக்கற எந்த காலேஜ்ல சீட் இருந்தாலும் எடுத்துரலாம்னு சொன்னார் எங்கப்பா... ஒங்கப்பாவையும் வேணும்னா போய் பாக்க சொல்லு...'
'பயங்கரமான ஆளுடி நீ... இவ்வளவு வேலையும் பாத்து வச்சிருக்கியா?' என்றாள் ஜோதிகா உண்மையான ஆச்சரியத்துடன்..
விஜி பெருமையுடன் புன்னகைத்தாள்... ஒனக்கு உருப்போடத்தாண்டி தெரியும்... நா அப்படியில்ல... 'சரிடி... நா வரேன்... லேட்டாயிருச்சி...' என்றாள் மனதில் தோன்றியதை வெளியில் சொல்லாமல். 'அப்ளிகேஷன நேர்ல கொண்டு வந்து குடுக்கப் போறியா இல்ல தபால்ல அனுப்பிருவியா?'
'நான் நேர்லதான் கொண்டு வந்து குடுப்பேன்... நீ?'
'நானுந்தான்... தபால்ல அனுப்பி கிடைக்கலன்னா?'
'சரி... என்னைக்கி வருவேன்னு ஃபோன் பண்ணி சொல்றேன்... ஒன்னாவே குடுக்கலாம்.. சரியா?'
'சரி... பை..' என்றவாறு விஜி தன்னுடைய ஸ்கூட்டியில் கிளம்ப மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவள் செல்வதையே பார்த்தவாறு சிறிது நேரம் நின்றுவிட்டு சாலையைக் கடந்து எதிர்புறத்திலிருந்த பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தாள் ஜோதிகா...
தொடரும்..
8.6.07
நாளை நமதே - 9
'டேய் வாசன்.. என்னாச்சி? ஏன் நிறுத்திட்டே மேல படிடா..'
இரண்டு மணி நேரத்திற்கும் மேல் கால்கள் கடுக்க அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வரிசையில் நின்று விண்ணப்ப படிவத்தை வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது 'டேய், எங்கயாவது பக்கத்துல ஹோட்டல்ல ஒக்காந்து இத படிக்கலாம்டா... எங்கள்ல பாதி பேருக்கு இதுல எழுதியிருக்கறதே புரியாது... நீதான் நம்ம க்ரூப்ல அறிவுஜீவி... நீ படிச்சிட்டு சொல்லு...' என்றது நண்பர்கள் குழு வாசனைப் பார்த்து...
பிற்பகல் வேளை என்பதால் அடுத்திருந்த உணவகத்தில் கூட்டம் சற்றே குறைந்திருந்தது.. தேவைப்பட்ட இருக்கைகளை அருகிலிருந்த மேசைகளிலிருந்து இழுத்து கூட்டமாய் அமர்ந்துக்கொண்டது அந்த கும்பல்...
வாசன் தன் கையிலிருந்த அண்ணா பல்கலைக்கழக விதிகள் பட்டியலில் இருந்த அடுத்த விதியையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான்... பிறகு நிமிர்ந்து நண்பர்கள் குழுவிலிருந்து சற்று தள்ளி அடுத்திருந்த மேசையில் தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்த வின்செண்ட் முருகனைப் பார்த்தான்
அவனும் அவனுடைய குடும்பத்தாரும் சில மாதங்களுக்கு முன்புதான் கிறிஸ்த்துவ மதத்தை தழுவியிருந்தனர் என்பது அவனுக்கு தெரியும். 'ஏண்டா திடீர்னு?'
'எங்க சேரியில நிறைய பேர் சேர்ந்தாங்கடா.. அதான் அம்மாவும் நாமளும் அப்படியே செஞ்சிரலாம்னு...'
'அதான் ஏன்னு கேக்கேன்...?'
முருகன் தயக்கத்துடன் பதிலளிக்க விருப்பமில்லாதவனைப் போல் நின்றான்...
'சரிடா இஷ்டமில்லன்னா சொல்ல வேணாம்... இப்ப இருக்கற வீட்ல இனியும் இருப்பியா இல்ல....'
'எங்கள மாதிரி ஒரு பத்து ஃபேமிலிக்கு புதுசா குடிச போட்டு குடுத்துருக்காங்கடா. அங்கக்கி ஷிப்ட் பண்ணப் போறோம்... அதான் ஒங்கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்...'
முருகனை அவனுக்கு பள்ளிப் பருவத்திலிருந்தே தெரியும். அவன் குடியிருந்த தெரு முனையில் இருந்த குடிசைப் பகுதியில் தாய் மற்றும் தன்னுடைய மூன்று சகோதரர்களுடன் வசித்தவன். திடீரென்று யாரோ ஒருவர் வந்து சொந்தமாக குடிசை அமைத்துத் தருகிறேன் வாழ வசதிகளை ஏற்படுத்தி தருகிறேன் என்பதற்காக காலங்காலமாய் இருந்த தெய்வ நம்பிக்கையை மாற்றிக்கொள்ள முடியுமா என்ன?
'சரிடா... அப்ப இனி ஒன்னெ பாக்க முடியாது... அதானே சொல்ல வரே?'
'இல்லடா.....'
'பின்னே... பரீட்சை முடிஞ்சிருச்சி... இனி எங்க பாக்கறது..' என்ற வாசன் தொடர்ந்து, 'அதுசரி... அப்புறம் என்ன பண்றதா உத்தேசம்?'
முருகன் தயக்கத்துடன் எங்கோ பார்த்தவாறு பதிலளித்தான்... 'தெரியலடா... ரிசல்ட் வந்ததுக்கப்புறந்தான்... அதப்பத்தி யோசிக்கணும்..'
அப்போது பார்த்ததுதான்... ப்ளஸ் டூ ரிசல்ட் வந்ததும் மீண்டும் ஒருமுறை பள்ளி வளாகத்தில்.... பிறகு சற்று முன்பு..
அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பப் படிவங்களை பெறுவதற்கு வரிசையில் நின்றபோது....
விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொண்டு அவனை தவிர்க்கும் நோக்கத்துடன் நழுவ முயன்றவனை எட்டிப் பிடித்தான் வாசன்... 'டேய்... எங்க போற... ஒன்னெ இப்ப எப்படி கூப்பிடறதுன்னு தெரியல... பேர மாத்திட்டியா இல்ல அதே பேர்தானா?' என்றான் புன்னகையுடன்...
'சேச்சே... பேர மாத்திக்கலடா... முருகன்கற பேரோட வின்செண்ட்டுன்னு சேத்துக்க சொல்லிட்டார்... ஆனா சர்ட்டிஃபிக்கேட்ல மாத்த வேணாமாம்...'
'ஏன்... கெஜட்ல போட்டுட்டா போறுமேடா...'
முருகன் தயக்கத்துடன் தலையைக் குனிந்தவாறு.... 'இல்லடா அதுல ஒரு சிக்கல் இருக்கு.... சர்ட்டிஃபிகேட்ட பொருத்தவரைக்கும் நான் இந்து தலித்தாத்தான் இருக்கணுமாம்... இல்லன்னா எஸ்.சி.. பெனிஃபிட்ஸ் கிடைக்காதாம்... ப்ரீச்சர்தான் சொன்னார்....'
தன் கையிலிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகளை மீண்டும் ஒருமுறை பார்த்தான் வாசன்.... எத்தனை சரியாக படித்து வைத்திருக்கிறார் அந்த பாதிரியார்?
உண்மைதானே... ஒரு இந்து கீழ்ச்சாதிக்காரனாக சேரியில் வறுமையில் உழன்றுக்கொண்டிருந்த பத்து குடும்பங்களுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்த ஒரு சின்ன மதமாற்றம் உதவுமானால் அதில் தவறேதும் இல்லையே...
ஆனால் அரசு விதித்துள்ள நியதிகளின் படி கிடைக்கக் கூடிய சலுகைகளை தொடர்ந்து அனுபவிக்கவும் வேண்டும் என்ற முருகனின் எண்ணத்துடன் அவனுக்கு உடன்பாடில்லை என்றாலும்.... ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்த போது அரசின் முடிவில்தான் குளறுபடி என்று சமாதானமடைந்தான் வாசன்...
'டேய்... வாசா.... நீ இங்க இல்ல போலருக்கு.... ஒன் கண்ணெ பாத்தா என்னமோ ஸ்லோ மோஷன் ஃப்ளாஷ் பேக்ல இருக்கா மாதிரி இருக்கு... இந்த ஒலகத்துலதான் இருக்கியா... இல்ல...'
நண்பர்களின் கேலிக் குரல் வாசனை நினைவுகளிலிருந்து மீட்டது.... திடுக்கிட்டு தன் கையிலிருந்த படிவத்தைப் பார்த்தான்..
'சாரிடா... இந்த கண்டிஷன படிச்சதும்... ஏதோ பழைய நினைவு...' என்ற வாசன் 'படிச்சிட்டு நீங்களே சொல்லுங்கடா...' என்றான்...
'சரி படி.. அப்படி என்னதான் இருக்கு அந்த கண்டிஷன்ல..?' என்றான் ஒருவன்...
"No person who professes a religion different from Hinduism or Sikhism or Buddhism shall be deemed to be a member of a Scheduled caste."
வாசன் சற்று நேரம் நிறுத்திவிட்டு தன் நண்பர்களைப் பார்த்தான்... எவ்வித ரியாக்ஷனும் இல்லை... அங்கிருந்தவர்களுள் யாருமே இந்த வகுப்பில் வரவில்லை என்கிற மெத்தனம்... முருகன் புரிந்துக்கொண்டு வாசனைப் பார்த்தான்... ஆனால் பதிலேதும் பேசாமல் அமர்ந்திருந்தான்..
வாசன் தொடர்ந்தான்..
"A member of the Scheduled Caste on conversion to Christianity will be considered only under Backward class and not under Scheduled caste, for admission purposes."
நாந்தான் சொன்னேனே என்பதுபோல் தன்னை முருகன் பார்ப்பதை உணர்ந்த வாசன் அவனைப் பார்த்து அர்த்தத்துடன் புன்னகைத்தான்..
அவனுடைய பார்வை சென்ற திசையில் ஒட்டுமொத்த கும்பலும் திரும்பி அடுத்த மேசையில் தனியே அமர்ந்திருந்த முருகனைப் பார்த்தது... அவனும் அவர்கள் படித்த அதே பள்ளியில் படித்தவன் என்று பலருக்கு தெரிந்திருந்தாலும் அவனுடைய ஏழ்மைக் கோலம் அவனை விலைக்கியே வைத்திருந்தது...
வாசன் தன்னுடன் அமர்ந்திருந்த நண்பர்களைப் பார்த்தான்.. 'என்னடா ஒரு ரியாக்ஷனையும் காணம்? இந்த கண்டிஷன் inhumanஆ தெரியல?'
நண்பர்களுள் ஒருவனாக அமர்ந்திருந்த வாசனின் அண்ணன் மூர்த்தி அலட்சியத்துடன், 'இதுல என்னடா மனுஷத்தனம் இல்ல ஒனக்கு? பணம் கிடைக்கிதேன்னுட்டு கும்பிடற சாமியவே மாத்திக்கறவங்களுக்கு எதுக்குடா ரிசர்வேஷன்? என்னெ கேட்டா அவனுங்களுமக்கு நம்மள மாதிரியே பிசி ஸ்டேட்டஸ் குடுக்கறது கூட தேவையில்லைன்னு சொல்வேன்..' என்றாவறு ,குழுமியிருந்த கும்பலைப் பார்த்தான்... 'என்னடா சொல்றீங்க?'
அவன் சொல்வது சரிதான் என்பதுபோல் தலையசைத்தது ஒட்டுமொத்த கும்பலும்...
முருகன் சட்டென்று எழுந்து வாசலை நோக்கி நடந்தான்..
'யார்றா அவன்? ஒன் ஃப்ரெண்டா?' என்றான் வாசனின் நண்பன் ஒருவன்.. 'ஒங்க ஸ்கூல்ல படிச்சவனா? நா இதுக்கு முன்னால பாத்ததில்லையே..?'
மூர்த்தி கேலியாய் சிரித்தான்.. 'அவன் ஒரு --பயடா... எங்க ரோட்டு முனையிலருக்கற சேரியிலதான் இருந்தான்.. இப்ப கொஞ்ச நாளா காணம்... வாசனுக்குத்தான் அவன் ஃப்ரெண்ட்... இவருக்கு அவர் சிஷ்யர்... அப்பப்ப டவுட் கேக்க வருவான்... நா வீட்டுக்குள்ளயே விட மாட்டேன்... அவனும் அவன் மூஞ்சியும்...'
அவனுடைய பேச்சில் தெரிந்த அநாகரீகத்தை அங்கிருந்த பலரும் விரும்பவில்லையென்றாலும் எதற்கு வம்பு என்று மவுனமாக அமர்ந்திருந்தார்கள்..
வாசன் வாசலைப் பார்த்தான்... முருகன் சாலையை கடந்து சென்றுக்கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி ஏறுவது தெரிந்தது... வசதியாத்தான் இருக்கான் போல என்று நினைத்தவாறு தன் கையிலிருந்ததை தொடர்ந்து வாசித்தான்..
'A candidate who claims to belong to Scheduled Caste by virtue of reconversion should give full details regarding date of reconversion and whether the candidate on such reconversion is accepted by members of the particular community of the locality where he/she resides as belonging to the particular community.. என்ன அக்கிரமம் பாருங்கடா...'
'ஏன் இதுல என்ன அக்கிரமம்?' என்றான் மூர்த்தி கோபத்துடன்... 'காசு குடுத்தா மதத்த மாத்திக்கறது... அப்புறம் கிடைச்சிக்கிட்டிருக்கற கன்செஷன் கிடைக்காதேன்னதும் மறுபடியும் இருந்த இடத்துக்கே வந்துட்டேங்கறது.. .இதென்னா சட்டையா? போடறதும் கழட்டறதும்... இவன் மறுபடியும் இந்துவாய்ட்டேன்னு சொன்னா போறுமா? கூட இருக்கறவங்க ஏத்துக்க வேணாமா?'
வாசனையும் மூர்த்தியையும் மாறி மாறி பார்த்தது நண்பர்கள் குழு... 'டேய் என்னங்கடா நீங்க சம்பந்தமேயில்லாத விஷயத்துக்காக அடிச்சிக்கறீங்க? அவந்தான் எழுந்து போய்ட்டானே.... நம்ம விஷயத்த படிங்கடா...' என்றான் அவர்களுள் ஒருவன்..
வாசனுக்கும் அதுதான் சரி என்று தோன்றியது... நுழைவுத் தேர்வில் அவனை விடவும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றதிலிருந்தே கடுகடுவென்று இருந்த மூர்த்தியுடன் வாதத்தை தொடர்வதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தவன் அடுத்த நியதியை வாசித்தான்..
'ST/SC/MBC & DNC/BC candidates are eligible for selection under Open Competition in addition to the reservations made for them.'
'அப்படிப் போடு' என்றான் மூர்த்தி உரக்க... 'இது நம்மள மாதிரி ஆளுங்களோட காலம்டா... மேல் சாதிக்கார பயலுங்களுக்குத்தான் அப்பன் ஆத்தா சேத்து வச்ச துட்டு இருக்குல்லே... குடுத்து படிக்கட்டுமே... என்ன நா சொல்றது?' நண்பர்கள் குழுவும் புன்னகையுடன் ஆமோதித்தது...
மூர்த்தியின் இந்த கருத்திலும் உடன்பாடில்லாவிடினும் வாசன் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாசிக்கலானான்...
தொடரும்...
இரண்டு மணி நேரத்திற்கும் மேல் கால்கள் கடுக்க அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வரிசையில் நின்று விண்ணப்ப படிவத்தை வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது 'டேய், எங்கயாவது பக்கத்துல ஹோட்டல்ல ஒக்காந்து இத படிக்கலாம்டா... எங்கள்ல பாதி பேருக்கு இதுல எழுதியிருக்கறதே புரியாது... நீதான் நம்ம க்ரூப்ல அறிவுஜீவி... நீ படிச்சிட்டு சொல்லு...' என்றது நண்பர்கள் குழு வாசனைப் பார்த்து...
பிற்பகல் வேளை என்பதால் அடுத்திருந்த உணவகத்தில் கூட்டம் சற்றே குறைந்திருந்தது.. தேவைப்பட்ட இருக்கைகளை அருகிலிருந்த மேசைகளிலிருந்து இழுத்து கூட்டமாய் அமர்ந்துக்கொண்டது அந்த கும்பல்...
வாசன் தன் கையிலிருந்த அண்ணா பல்கலைக்கழக விதிகள் பட்டியலில் இருந்த அடுத்த விதியையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான்... பிறகு நிமிர்ந்து நண்பர்கள் குழுவிலிருந்து சற்று தள்ளி அடுத்திருந்த மேசையில் தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்த வின்செண்ட் முருகனைப் பார்த்தான்
அவனும் அவனுடைய குடும்பத்தாரும் சில மாதங்களுக்கு முன்புதான் கிறிஸ்த்துவ மதத்தை தழுவியிருந்தனர் என்பது அவனுக்கு தெரியும். 'ஏண்டா திடீர்னு?'
'எங்க சேரியில நிறைய பேர் சேர்ந்தாங்கடா.. அதான் அம்மாவும் நாமளும் அப்படியே செஞ்சிரலாம்னு...'
'அதான் ஏன்னு கேக்கேன்...?'
முருகன் தயக்கத்துடன் பதிலளிக்க விருப்பமில்லாதவனைப் போல் நின்றான்...
'சரிடா இஷ்டமில்லன்னா சொல்ல வேணாம்... இப்ப இருக்கற வீட்ல இனியும் இருப்பியா இல்ல....'
'எங்கள மாதிரி ஒரு பத்து ஃபேமிலிக்கு புதுசா குடிச போட்டு குடுத்துருக்காங்கடா. அங்கக்கி ஷிப்ட் பண்ணப் போறோம்... அதான் ஒங்கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்...'
முருகனை அவனுக்கு பள்ளிப் பருவத்திலிருந்தே தெரியும். அவன் குடியிருந்த தெரு முனையில் இருந்த குடிசைப் பகுதியில் தாய் மற்றும் தன்னுடைய மூன்று சகோதரர்களுடன் வசித்தவன். திடீரென்று யாரோ ஒருவர் வந்து சொந்தமாக குடிசை அமைத்துத் தருகிறேன் வாழ வசதிகளை ஏற்படுத்தி தருகிறேன் என்பதற்காக காலங்காலமாய் இருந்த தெய்வ நம்பிக்கையை மாற்றிக்கொள்ள முடியுமா என்ன?
'சரிடா... அப்ப இனி ஒன்னெ பாக்க முடியாது... அதானே சொல்ல வரே?'
'இல்லடா.....'
'பின்னே... பரீட்சை முடிஞ்சிருச்சி... இனி எங்க பாக்கறது..' என்ற வாசன் தொடர்ந்து, 'அதுசரி... அப்புறம் என்ன பண்றதா உத்தேசம்?'
முருகன் தயக்கத்துடன் எங்கோ பார்த்தவாறு பதிலளித்தான்... 'தெரியலடா... ரிசல்ட் வந்ததுக்கப்புறந்தான்... அதப்பத்தி யோசிக்கணும்..'
அப்போது பார்த்ததுதான்... ப்ளஸ் டூ ரிசல்ட் வந்ததும் மீண்டும் ஒருமுறை பள்ளி வளாகத்தில்.... பிறகு சற்று முன்பு..
அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பப் படிவங்களை பெறுவதற்கு வரிசையில் நின்றபோது....
விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொண்டு அவனை தவிர்க்கும் நோக்கத்துடன் நழுவ முயன்றவனை எட்டிப் பிடித்தான் வாசன்... 'டேய்... எங்க போற... ஒன்னெ இப்ப எப்படி கூப்பிடறதுன்னு தெரியல... பேர மாத்திட்டியா இல்ல அதே பேர்தானா?' என்றான் புன்னகையுடன்...
'சேச்சே... பேர மாத்திக்கலடா... முருகன்கற பேரோட வின்செண்ட்டுன்னு சேத்துக்க சொல்லிட்டார்... ஆனா சர்ட்டிஃபிக்கேட்ல மாத்த வேணாமாம்...'
'ஏன்... கெஜட்ல போட்டுட்டா போறுமேடா...'
முருகன் தயக்கத்துடன் தலையைக் குனிந்தவாறு.... 'இல்லடா அதுல ஒரு சிக்கல் இருக்கு.... சர்ட்டிஃபிகேட்ட பொருத்தவரைக்கும் நான் இந்து தலித்தாத்தான் இருக்கணுமாம்... இல்லன்னா எஸ்.சி.. பெனிஃபிட்ஸ் கிடைக்காதாம்... ப்ரீச்சர்தான் சொன்னார்....'
தன் கையிலிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகளை மீண்டும் ஒருமுறை பார்த்தான் வாசன்.... எத்தனை சரியாக படித்து வைத்திருக்கிறார் அந்த பாதிரியார்?
உண்மைதானே... ஒரு இந்து கீழ்ச்சாதிக்காரனாக சேரியில் வறுமையில் உழன்றுக்கொண்டிருந்த பத்து குடும்பங்களுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்த ஒரு சின்ன மதமாற்றம் உதவுமானால் அதில் தவறேதும் இல்லையே...
ஆனால் அரசு விதித்துள்ள நியதிகளின் படி கிடைக்கக் கூடிய சலுகைகளை தொடர்ந்து அனுபவிக்கவும் வேண்டும் என்ற முருகனின் எண்ணத்துடன் அவனுக்கு உடன்பாடில்லை என்றாலும்.... ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்த போது அரசின் முடிவில்தான் குளறுபடி என்று சமாதானமடைந்தான் வாசன்...
'டேய்... வாசா.... நீ இங்க இல்ல போலருக்கு.... ஒன் கண்ணெ பாத்தா என்னமோ ஸ்லோ மோஷன் ஃப்ளாஷ் பேக்ல இருக்கா மாதிரி இருக்கு... இந்த ஒலகத்துலதான் இருக்கியா... இல்ல...'
நண்பர்களின் கேலிக் குரல் வாசனை நினைவுகளிலிருந்து மீட்டது.... திடுக்கிட்டு தன் கையிலிருந்த படிவத்தைப் பார்த்தான்..
'சாரிடா... இந்த கண்டிஷன படிச்சதும்... ஏதோ பழைய நினைவு...' என்ற வாசன் 'படிச்சிட்டு நீங்களே சொல்லுங்கடா...' என்றான்...
'சரி படி.. அப்படி என்னதான் இருக்கு அந்த கண்டிஷன்ல..?' என்றான் ஒருவன்...
"No person who professes a religion different from Hinduism or Sikhism or Buddhism shall be deemed to be a member of a Scheduled caste."
வாசன் சற்று நேரம் நிறுத்திவிட்டு தன் நண்பர்களைப் பார்த்தான்... எவ்வித ரியாக்ஷனும் இல்லை... அங்கிருந்தவர்களுள் யாருமே இந்த வகுப்பில் வரவில்லை என்கிற மெத்தனம்... முருகன் புரிந்துக்கொண்டு வாசனைப் பார்த்தான்... ஆனால் பதிலேதும் பேசாமல் அமர்ந்திருந்தான்..
வாசன் தொடர்ந்தான்..
"A member of the Scheduled Caste on conversion to Christianity will be considered only under Backward class and not under Scheduled caste, for admission purposes."
நாந்தான் சொன்னேனே என்பதுபோல் தன்னை முருகன் பார்ப்பதை உணர்ந்த வாசன் அவனைப் பார்த்து அர்த்தத்துடன் புன்னகைத்தான்..
அவனுடைய பார்வை சென்ற திசையில் ஒட்டுமொத்த கும்பலும் திரும்பி அடுத்த மேசையில் தனியே அமர்ந்திருந்த முருகனைப் பார்த்தது... அவனும் அவர்கள் படித்த அதே பள்ளியில் படித்தவன் என்று பலருக்கு தெரிந்திருந்தாலும் அவனுடைய ஏழ்மைக் கோலம் அவனை விலைக்கியே வைத்திருந்தது...
வாசன் தன்னுடன் அமர்ந்திருந்த நண்பர்களைப் பார்த்தான்.. 'என்னடா ஒரு ரியாக்ஷனையும் காணம்? இந்த கண்டிஷன் inhumanஆ தெரியல?'
நண்பர்களுள் ஒருவனாக அமர்ந்திருந்த வாசனின் அண்ணன் மூர்த்தி அலட்சியத்துடன், 'இதுல என்னடா மனுஷத்தனம் இல்ல ஒனக்கு? பணம் கிடைக்கிதேன்னுட்டு கும்பிடற சாமியவே மாத்திக்கறவங்களுக்கு எதுக்குடா ரிசர்வேஷன்? என்னெ கேட்டா அவனுங்களுமக்கு நம்மள மாதிரியே பிசி ஸ்டேட்டஸ் குடுக்கறது கூட தேவையில்லைன்னு சொல்வேன்..' என்றாவறு ,குழுமியிருந்த கும்பலைப் பார்த்தான்... 'என்னடா சொல்றீங்க?'
அவன் சொல்வது சரிதான் என்பதுபோல் தலையசைத்தது ஒட்டுமொத்த கும்பலும்...
முருகன் சட்டென்று எழுந்து வாசலை நோக்கி நடந்தான்..
'யார்றா அவன்? ஒன் ஃப்ரெண்டா?' என்றான் வாசனின் நண்பன் ஒருவன்.. 'ஒங்க ஸ்கூல்ல படிச்சவனா? நா இதுக்கு முன்னால பாத்ததில்லையே..?'
மூர்த்தி கேலியாய் சிரித்தான்.. 'அவன் ஒரு --பயடா... எங்க ரோட்டு முனையிலருக்கற சேரியிலதான் இருந்தான்.. இப்ப கொஞ்ச நாளா காணம்... வாசனுக்குத்தான் அவன் ஃப்ரெண்ட்... இவருக்கு அவர் சிஷ்யர்... அப்பப்ப டவுட் கேக்க வருவான்... நா வீட்டுக்குள்ளயே விட மாட்டேன்... அவனும் அவன் மூஞ்சியும்...'
அவனுடைய பேச்சில் தெரிந்த அநாகரீகத்தை அங்கிருந்த பலரும் விரும்பவில்லையென்றாலும் எதற்கு வம்பு என்று மவுனமாக அமர்ந்திருந்தார்கள்..
வாசன் வாசலைப் பார்த்தான்... முருகன் சாலையை கடந்து சென்றுக்கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி ஏறுவது தெரிந்தது... வசதியாத்தான் இருக்கான் போல என்று நினைத்தவாறு தன் கையிலிருந்ததை தொடர்ந்து வாசித்தான்..
'A candidate who claims to belong to Scheduled Caste by virtue of reconversion should give full details regarding date of reconversion and whether the candidate on such reconversion is accepted by members of the particular community of the locality where he/she resides as belonging to the particular community.. என்ன அக்கிரமம் பாருங்கடா...'
'ஏன் இதுல என்ன அக்கிரமம்?' என்றான் மூர்த்தி கோபத்துடன்... 'காசு குடுத்தா மதத்த மாத்திக்கறது... அப்புறம் கிடைச்சிக்கிட்டிருக்கற கன்செஷன் கிடைக்காதேன்னதும் மறுபடியும் இருந்த இடத்துக்கே வந்துட்டேங்கறது.. .இதென்னா சட்டையா? போடறதும் கழட்டறதும்... இவன் மறுபடியும் இந்துவாய்ட்டேன்னு சொன்னா போறுமா? கூட இருக்கறவங்க ஏத்துக்க வேணாமா?'
வாசனையும் மூர்த்தியையும் மாறி மாறி பார்த்தது நண்பர்கள் குழு... 'டேய் என்னங்கடா நீங்க சம்பந்தமேயில்லாத விஷயத்துக்காக அடிச்சிக்கறீங்க? அவந்தான் எழுந்து போய்ட்டானே.... நம்ம விஷயத்த படிங்கடா...' என்றான் அவர்களுள் ஒருவன்..
வாசனுக்கும் அதுதான் சரி என்று தோன்றியது... நுழைவுத் தேர்வில் அவனை விடவும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றதிலிருந்தே கடுகடுவென்று இருந்த மூர்த்தியுடன் வாதத்தை தொடர்வதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தவன் அடுத்த நியதியை வாசித்தான்..
'ST/SC/MBC & DNC/BC candidates are eligible for selection under Open Competition in addition to the reservations made for them.'
'அப்படிப் போடு' என்றான் மூர்த்தி உரக்க... 'இது நம்மள மாதிரி ஆளுங்களோட காலம்டா... மேல் சாதிக்கார பயலுங்களுக்குத்தான் அப்பன் ஆத்தா சேத்து வச்ச துட்டு இருக்குல்லே... குடுத்து படிக்கட்டுமே... என்ன நா சொல்றது?' நண்பர்கள் குழுவும் புன்னகையுடன் ஆமோதித்தது...
மூர்த்தியின் இந்த கருத்திலும் உடன்பாடில்லாவிடினும் வாசன் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாசிக்கலானான்...
தொடரும்...
7.6.07
நாளை நமதே - 8
கணினி முன் அமர்ந்திருந்த பரத்தைச் சுற்றிலும் அவனுடைய நண்பர்கள்....
'என்னடா இன்னுமா டவுன்லோட் ஆவுது...?' என்றான் ஒருவன்...
'பின்னே... அண்ணா யூனிவர்சிட்டின்னா சும்மாவா... எவ்வளவு இன்ஸ்ட்ரக்ஷன் இருக்கும்? பெரிய ஃபைலா இருக்கும் பாரேன்.. அதான் இவ்வளவு நேரம்....' என்றான் இன்னொருவன்...
'அடப் போடா.. என்ன இன்ஸ்டரக்ஷன் இருக்கப் போவுது பெருசா... நமக்கெல்லாம் கெடைக்கப் போறதில்ல... எதுக்கு இதையெல்லாம் டவுன்லோட் பண்ணிக்கிட்டு..' என்றான் மற்றொருவன்...
அவர்கள் கூறுவதைப் பொருட்படுத்தாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர விதிக்கப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நுழைவு விண்ணப்பம் அடங்கிய கோப்பை இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்வதில் முனைந்திருந்தான் பரத்...
ஒருவழியாக அடுத்த சில நிமிடங்களில் 'download complete' என்ற அறிவிப்பு திரையில் தோன்ற.... 'சக்சஸ்...' என்று ஒருவன் முழங்க எல்லோரும் கரவொலி எழுப்பி ஆரவாரித்தனர்...
நல்லவேளையாக பரத்தின் தந்தை வீட்டில் இல்லை...
பரத் தரவிறக்கம் செய்த கோப்பை அச்செடுத்துக்கொண்டு தன்னுடைய படுக்கையறையில் குழுமியிருந்த நண்பர்களை நோக்கி திரும்பினான்.
'என்னடா இவ்வளவு பெருசா இருக்கு... அப்ளிகேஷனும் சேந்து இருக்கா?' என்ற நண்பனைப் பார்த்து புன்னகைத்தான்..
'பின்னே... அண்ணா யூனிவர்சிட்டின்னா சும்மாவா?' என்றவன் விலா எலும்பில் இடித்தான் அவனுடைய நண்பர்களுள் ஒருவன். 'டேய் இதையே பத்து தடவ சொல்லிட்டே... மொதல்ல ஒனக்கு சீட் கிடைக்குதான்னு பாப்பம்... அப்புறமா அண்ணா யூனிவர்சிட்டிய பத்தி பீத்திக்கோ..'
பரத் உதடுகளில் தவழ்ந்த புன்னகையுடன் தன்னுடைய நண்பர்களை 'சும்மாருங்கடா...' என்று உரிமையுடன் அதட்டினான்... உடனே எல்லோரும் வாயை மூடிக்கொண்டனர்... பரத் மீது அவர்களுக்கு அத்தனை அன்பு, மதிப்பு.. 'நா இப்ப ஒவ்வொரு கண்டிஷனா படிக்கறேன்.. கேளுங்க...அப்புறமா என்ன பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்லாம்... என்ன படிக்கவா?' என்றான்...
சரி என்பதுபோல் தலையை அசைத்த நண்பர்கள் சிலர் அவனுடைய படுக்கையிலும் வேறு சிலர் அப்படியே தரையிலும் அமர்ந்தனர்...
பரத் தொண்டையை கனைத்துக்கொண்டு தன் கையிலிருந்ததிலிருந்து வாசிக்க துவங்கினான்...
துவக்கத்திலிருந்த பொது நியதிகளை மேலெழுந்த வாரியாக படித்த பரத் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு தன்னுடைய நண்பர்களைப் பார்த்தான். 'டேய்... இப்பத்தான் மெய்ன் பாய்ண்டுக்கு வரோம்... கேர்ஃபுல்லா கேளுங்க...'
'படி.. கேக்கறோம்..' என்றான் கூட்டத்திலிருந்து ஒருவன்..
'இது யூனிவர்சிட்டியிலருக்கற அட்மிஷன் கேட்டகரிய (category) பத்தி...
முதல் கேட்டகரி: கவர்ன்மெண்ட் காலேஜ்.. அப்புறம் கவர்ன்மெண்ட் ஏய்டட் காலேஜ்... அதாண்டா மெட்றாஸ், அப்புறம் சேலம், கோயம்புத்தூர், திருச்சிலருக்கற மத்த கவர்ன்மெண்ட் காலேஜுங்க...
ரெண்டாவது கேட்டகரி: இதுல முதலாவது.. கவர்ன்மெண்ட் எய்டட் காலேஜஸ்லருக்கற செல்ஃப் சப்போர்ட்டிங் கோர்சஸ்.... செல்ஃ ஃபைனான்ஸ் காலேஜ்லருக்கற பேமெண்ட் சீட் மாதிரி போலருக்கு...
இதுலயே ரெண்டாவது... நமக்கெல்லாம் சீட் கிடைக்கப் போற செல்ஃப் பைனான்ஸ் காலேஜஸ்... இதுலயும் ஃப்ரீ சீட்டும் இருக்கும்... பேமெண்ட் சீட்டும் இருக்கும்...
'டேய்.. பரத்.. அப்ப மேனேஜ்மெண்ட் கோட்டாங்கறது?' என்றான் ஒருவன்...
பரத் அவனைப் பார்த்தான்... அவன்தான் அந்த கூட்டத்திலேயே செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தவன்... அவனுக்கு அவனுடைய கவலை!
'டேய்... அது இதுல வராது...' என்றான் பரத்.. 'சாதாரணமா செல்ஃப் பைனான்ஸ் காலேஜ்காரங்க.. ஒரு பெர்சண்டேஜ் சீட்டுங்கள மேனேஜ்மெண்ட் கோட்டாவா வச்சிக்கிட்டு மத்தத அண்ணா யூனிவர்சிட்டி நடத்தற கவுன்சிலிங்குக்கு சரண்டர் பண்ணிருவாங்க... அப்படி சரண்டர் பண்ண சீட்டுங்கதான் கவுன்சிலிங்குக்கு போற எங்கள மாதிரி பசங்களுக்கு கிடைக்கும்.. ஒன்னெ மாதிரி பணக்கார பசங்களுக்குத்தான் அந்த மேனேஜ்மெண்ட் கோட்டா... பி.ஈ சீட்டுக்கு கொறஞ்சது அஞ்சி லட்சமாவது கறந்துருவாங்க... சரியா?'
கேட்டவனுடைய முகம் தொங்கிப் போனது...'டேய் கிண்டலடிக்காதீங்க... எனக்கு இருக்கற மார்க்குக்கு அதவிட்டா வேற வழியில்லடா... எங்கப்பா கிட்ட ஏற்கனவே சொல்லியாச்சு....'
'டேய் தெரியாமத்தான் கேக்கேன்... ப்ளஸ் டூவுல நீ பாசானதே அபூர்வம்... எண்ட்ரன்ஸ்ல நம்ம க்ரூப்லயே நீதான் கொறச்சல் மார்க் வாங்கியிருக்கெ... இதுல பி.ஈ.. ஒன்னால படிக்க முடியும்னு நினைக்கே...' என்றான் ஒருவன் நக்கலுடன்..
பரத் அவனை முறைத்தான்... 'டேய்... don't be too smart... நாமல்லாம் ஃப்ரெண்ட்ஸ்... நமக்குள்ள இந்த மாதிரி பேச்செல்லாம் வேணாம்...'
'ஆமாடா.. பரத் வாங்கியிருக்கற மார்க்குக்கு முதல் நாளே கவுன்சிலிங்குக்கு இன்விடேஷன் வந்துரும்... அவன் நெனச்சா அண்ணாவிலயே வாங்கிருவான்.. இருந்தாலும் நமக்காக... நமக்கு எங்க கிடைக்குதோ அங்கயே சேரப்போறேன்னு அவங்கப்பாக்கிட்ட பெர்மிஷன் வாங்கியிருக்கான்... அவனே அப்படி நினைக்கறப்போ நாம இவனெ கிண்டலடிக்கறது சரியில்லடா... பேசாம பரத் சொல்றதெ கேப்போம்...' கூட்டத்திலிருந்த ஒருவன் பரத்தைப் பார்த்தான்... 'நீ மேல படி பரத்... இவன் கிடக்கான்..'
பரத் தொடர்ந்தான்...
'சரிடா.. .இப்ப அட்மிஷன் எப்படி நடக்குது, இதுல எவ்வளவு ரிசர்வேஷன் கோட்டா இருக்கு யார், யார் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கணும் படிக்கறேன்.....'
ஒருவன் இடைமறித்தான்... 'இது வேறயா... கொடுமைடா... நாமல்லாம் ராத்திரி பகல் பாக்காம படிக்கோம்... நம்மளவிட கொறச்சலா மார்க் வாங்கிட்டு... பிசி, எம்பிசின்னு சொல்லிக்கிட்டு இவனுங்களுக்கு நல்ல காலேஜஸ்ல கிடைச்சிரும்...'
பரத் அவனை முறைத்தான்... 'டேய்... மறுபடியும் எல்லாருக்கும் சொல்றேன்.. நம்ம க்ரூப்புல எஸ்.டி, பிசி, எம்பிசின்னு எல்லாரும் இருக்கோம்... ஒன்னெய மாதிரி எஃபி.சியும் இருக்கோம்... அதனால பேசறப்ப ஜாக்கிரதையா பேசு...'
'அடப் போடா என் கஷ்டம் எனக்குத்தான தெரியும்?' என்றவனை கூட்டமே முறைத்தது...
'டேய் வேணாம்... பூணூல் புத்திய காட்டாத.. சொல்லிட்டேன்...' என்றான் கூட்டத்தில் ஒருவன்...
பரத் குறுக்கிட்டான்... 'டேய், அவனுக்கு சொன்னதுதான் ஒங்களுக்கும்.. .ஃப்ரென்ஷிப் நடுவுல இந்த பாழாப்போன ஜாதி வர வேணாம்.... இதனாலதானடா நா இப்படி அனாதையா நிக்கேன்...'
நண்பர்கள் குழு சட்டென்று அமைதியாகிப் போனது... பரத்தின் பெற்றோர்களுடைய கலப்பு திருமணத்தைப் பற்றியும் அவனுடைய தாயின் பெற்றோர் அவரை புறக்கணித்ததைப் பற்றியும் ஏற்கனவே கேட்டிருந்ததால் எல்லோரும் இந்த பிரச்சினையை கூட்டத்தில் எழுப்பிய இரு நண்பர்களையும் பார்த்து முறைத்தனர்... அதில் ஒருவன்... 'ஆமாடா.. பரத் சொல்றா மாதிரி நமக்குள்ள இந்த பிரச்சினை வேணாம்... நம்மால சால்வ் பண்ண முடியாத பிரச்சினை இது... we will have to accept the reality.... பரத் சாரிடா... We never thought this would hurt your sentiments...'
பரத் புன்னகையுடன் தன் நண்பர்களைப் பார்த்தான்... 'டேய்... இதனாலயே எனக்கு எங்கப்பா, அம்மாமேல மதிப்பு ஜாஸ்தி... அப்பவே அவங்க இந்த ஆங்கிள்ல யோசிச்சிருக்கறப்ப.. நம்மால ஏண்டா அந்த மாதிரி திங்க் பண்ண முடியாது.... இது நம்ம தலைமுறையில தீர்க்க முடியாத விஷயம்... Let us forget about this and go ahead... கொஞ்ச நேரம் சும்மா இருந்தீங்கன்னா... இத படிச்சி முடிச்சிட்டு அப்புறம் என்ன பண்லாம்னு டிசைட் பண்லாம்.. என்ன படிக்கவா?'
'ஆமாம்.. நீ சொல்றதுதான் சரி... 'என்றனர் கோரசாக அனைவரும்...
'தென்.. ஒக்கே... லிசன்..' என்றவாறு தன் கையிலிருந்த நகலில் இருந்து படிக்கலானான் பரத்...
மினிமம் எலிஜிபில் மார்க்...
எஸ்.சி/எஸ்.டி.. பாஸ் பண்ணா போறும்... இங்க யாருக்கும் இது பொருந்தாதுன்னு நினைக்கேன்...
பிசி: 55% பர்சண்ட் இருக்கணும். இதுல இங்க எத்தன பேர்றா?' பரபரவென்று அறையில் உயர்ந்த கரங்களை எண்ணினான்.... 'பத்துக்கு மேல இருக்கமா? சரி... அடுத்தது..
எம்பிசி: 50% பர்சண்ட். இதுலயும் இருக்கம் இல்லே? அங்கொன்றும் இங்கொன்றுமாக கரங்கள் உயர்ந்தன... 'இவ்வளவுதானா? இதுல என்னையும் சேத்துக்கறேன்...'
'நீயா... டேய்... வெளையாடாத... இது ஒனக்கெல்லாம் இல்லை... எங்கள மாதிரி வீக் பசங்களுக்கு...'
கிண்டலடித்தவனைப் பார்த்து புன்னகைத்தான் பரத்...
'டேய்.. என்ன நக்கலா? தோருக்கானே பூணூல்... அவனுங்களுக்குன்னு ஒரு கட் ஆஃப் மார்க் வச்சிருந்தா பரத்துக்கு அதுக்கு மேல இருக்கு... ஏதோ அவன் நல்ல கொணம்... நாம சேரப்போற காலேஜ்லயே சேரப் போறேன்னு நிக்கிறான்...' என்றான் பரத்தின் நெருங்கிய நண்பன் கனேசன்....
'பரவால்லைடா கணேஷ்... சும்மா லெக் புல்லிங்தானே.. I don't mind...' என்றவாறு மேலே தொடர்ந்தான் பரத்....
தொடரும்...
'என்னடா இன்னுமா டவுன்லோட் ஆவுது...?' என்றான் ஒருவன்...
'பின்னே... அண்ணா யூனிவர்சிட்டின்னா சும்மாவா... எவ்வளவு இன்ஸ்ட்ரக்ஷன் இருக்கும்? பெரிய ஃபைலா இருக்கும் பாரேன்.. அதான் இவ்வளவு நேரம்....' என்றான் இன்னொருவன்...
'அடப் போடா.. என்ன இன்ஸ்டரக்ஷன் இருக்கப் போவுது பெருசா... நமக்கெல்லாம் கெடைக்கப் போறதில்ல... எதுக்கு இதையெல்லாம் டவுன்லோட் பண்ணிக்கிட்டு..' என்றான் மற்றொருவன்...
அவர்கள் கூறுவதைப் பொருட்படுத்தாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர விதிக்கப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நுழைவு விண்ணப்பம் அடங்கிய கோப்பை இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்வதில் முனைந்திருந்தான் பரத்...
ஒருவழியாக அடுத்த சில நிமிடங்களில் 'download complete' என்ற அறிவிப்பு திரையில் தோன்ற.... 'சக்சஸ்...' என்று ஒருவன் முழங்க எல்லோரும் கரவொலி எழுப்பி ஆரவாரித்தனர்...
நல்லவேளையாக பரத்தின் தந்தை வீட்டில் இல்லை...
பரத் தரவிறக்கம் செய்த கோப்பை அச்செடுத்துக்கொண்டு தன்னுடைய படுக்கையறையில் குழுமியிருந்த நண்பர்களை நோக்கி திரும்பினான்.
'என்னடா இவ்வளவு பெருசா இருக்கு... அப்ளிகேஷனும் சேந்து இருக்கா?' என்ற நண்பனைப் பார்த்து புன்னகைத்தான்..
'பின்னே... அண்ணா யூனிவர்சிட்டின்னா சும்மாவா?' என்றவன் விலா எலும்பில் இடித்தான் அவனுடைய நண்பர்களுள் ஒருவன். 'டேய் இதையே பத்து தடவ சொல்லிட்டே... மொதல்ல ஒனக்கு சீட் கிடைக்குதான்னு பாப்பம்... அப்புறமா அண்ணா யூனிவர்சிட்டிய பத்தி பீத்திக்கோ..'
பரத் உதடுகளில் தவழ்ந்த புன்னகையுடன் தன்னுடைய நண்பர்களை 'சும்மாருங்கடா...' என்று உரிமையுடன் அதட்டினான்... உடனே எல்லோரும் வாயை மூடிக்கொண்டனர்... பரத் மீது அவர்களுக்கு அத்தனை அன்பு, மதிப்பு.. 'நா இப்ப ஒவ்வொரு கண்டிஷனா படிக்கறேன்.. கேளுங்க...அப்புறமா என்ன பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்லாம்... என்ன படிக்கவா?' என்றான்...
சரி என்பதுபோல் தலையை அசைத்த நண்பர்கள் சிலர் அவனுடைய படுக்கையிலும் வேறு சிலர் அப்படியே தரையிலும் அமர்ந்தனர்...
பரத் தொண்டையை கனைத்துக்கொண்டு தன் கையிலிருந்ததிலிருந்து வாசிக்க துவங்கினான்...
துவக்கத்திலிருந்த பொது நியதிகளை மேலெழுந்த வாரியாக படித்த பரத் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு தன்னுடைய நண்பர்களைப் பார்த்தான். 'டேய்... இப்பத்தான் மெய்ன் பாய்ண்டுக்கு வரோம்... கேர்ஃபுல்லா கேளுங்க...'
'படி.. கேக்கறோம்..' என்றான் கூட்டத்திலிருந்து ஒருவன்..
'இது யூனிவர்சிட்டியிலருக்கற அட்மிஷன் கேட்டகரிய (category) பத்தி...
முதல் கேட்டகரி: கவர்ன்மெண்ட் காலேஜ்.. அப்புறம் கவர்ன்மெண்ட் ஏய்டட் காலேஜ்... அதாண்டா மெட்றாஸ், அப்புறம் சேலம், கோயம்புத்தூர், திருச்சிலருக்கற மத்த கவர்ன்மெண்ட் காலேஜுங்க...
ரெண்டாவது கேட்டகரி: இதுல முதலாவது.. கவர்ன்மெண்ட் எய்டட் காலேஜஸ்லருக்கற செல்ஃப் சப்போர்ட்டிங் கோர்சஸ்.... செல்ஃ ஃபைனான்ஸ் காலேஜ்லருக்கற பேமெண்ட் சீட் மாதிரி போலருக்கு...
இதுலயே ரெண்டாவது... நமக்கெல்லாம் சீட் கிடைக்கப் போற செல்ஃப் பைனான்ஸ் காலேஜஸ்... இதுலயும் ஃப்ரீ சீட்டும் இருக்கும்... பேமெண்ட் சீட்டும் இருக்கும்...
'டேய்.. பரத்.. அப்ப மேனேஜ்மெண்ட் கோட்டாங்கறது?' என்றான் ஒருவன்...
பரத் அவனைப் பார்த்தான்... அவன்தான் அந்த கூட்டத்திலேயே செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தவன்... அவனுக்கு அவனுடைய கவலை!
'டேய்... அது இதுல வராது...' என்றான் பரத்.. 'சாதாரணமா செல்ஃப் பைனான்ஸ் காலேஜ்காரங்க.. ஒரு பெர்சண்டேஜ் சீட்டுங்கள மேனேஜ்மெண்ட் கோட்டாவா வச்சிக்கிட்டு மத்தத அண்ணா யூனிவர்சிட்டி நடத்தற கவுன்சிலிங்குக்கு சரண்டர் பண்ணிருவாங்க... அப்படி சரண்டர் பண்ண சீட்டுங்கதான் கவுன்சிலிங்குக்கு போற எங்கள மாதிரி பசங்களுக்கு கிடைக்கும்.. ஒன்னெ மாதிரி பணக்கார பசங்களுக்குத்தான் அந்த மேனேஜ்மெண்ட் கோட்டா... பி.ஈ சீட்டுக்கு கொறஞ்சது அஞ்சி லட்சமாவது கறந்துருவாங்க... சரியா?'
கேட்டவனுடைய முகம் தொங்கிப் போனது...'டேய் கிண்டலடிக்காதீங்க... எனக்கு இருக்கற மார்க்குக்கு அதவிட்டா வேற வழியில்லடா... எங்கப்பா கிட்ட ஏற்கனவே சொல்லியாச்சு....'
'டேய் தெரியாமத்தான் கேக்கேன்... ப்ளஸ் டூவுல நீ பாசானதே அபூர்வம்... எண்ட்ரன்ஸ்ல நம்ம க்ரூப்லயே நீதான் கொறச்சல் மார்க் வாங்கியிருக்கெ... இதுல பி.ஈ.. ஒன்னால படிக்க முடியும்னு நினைக்கே...' என்றான் ஒருவன் நக்கலுடன்..
பரத் அவனை முறைத்தான்... 'டேய்... don't be too smart... நாமல்லாம் ஃப்ரெண்ட்ஸ்... நமக்குள்ள இந்த மாதிரி பேச்செல்லாம் வேணாம்...'
'ஆமாடா.. பரத் வாங்கியிருக்கற மார்க்குக்கு முதல் நாளே கவுன்சிலிங்குக்கு இன்விடேஷன் வந்துரும்... அவன் நெனச்சா அண்ணாவிலயே வாங்கிருவான்.. இருந்தாலும் நமக்காக... நமக்கு எங்க கிடைக்குதோ அங்கயே சேரப்போறேன்னு அவங்கப்பாக்கிட்ட பெர்மிஷன் வாங்கியிருக்கான்... அவனே அப்படி நினைக்கறப்போ நாம இவனெ கிண்டலடிக்கறது சரியில்லடா... பேசாம பரத் சொல்றதெ கேப்போம்...' கூட்டத்திலிருந்த ஒருவன் பரத்தைப் பார்த்தான்... 'நீ மேல படி பரத்... இவன் கிடக்கான்..'
பரத் தொடர்ந்தான்...
'சரிடா.. .இப்ப அட்மிஷன் எப்படி நடக்குது, இதுல எவ்வளவு ரிசர்வேஷன் கோட்டா இருக்கு யார், யார் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கணும் படிக்கறேன்.....'
ஒருவன் இடைமறித்தான்... 'இது வேறயா... கொடுமைடா... நாமல்லாம் ராத்திரி பகல் பாக்காம படிக்கோம்... நம்மளவிட கொறச்சலா மார்க் வாங்கிட்டு... பிசி, எம்பிசின்னு சொல்லிக்கிட்டு இவனுங்களுக்கு நல்ல காலேஜஸ்ல கிடைச்சிரும்...'
பரத் அவனை முறைத்தான்... 'டேய்... மறுபடியும் எல்லாருக்கும் சொல்றேன்.. நம்ம க்ரூப்புல எஸ்.டி, பிசி, எம்பிசின்னு எல்லாரும் இருக்கோம்... ஒன்னெய மாதிரி எஃபி.சியும் இருக்கோம்... அதனால பேசறப்ப ஜாக்கிரதையா பேசு...'
'அடப் போடா என் கஷ்டம் எனக்குத்தான தெரியும்?' என்றவனை கூட்டமே முறைத்தது...
'டேய் வேணாம்... பூணூல் புத்திய காட்டாத.. சொல்லிட்டேன்...' என்றான் கூட்டத்தில் ஒருவன்...
பரத் குறுக்கிட்டான்... 'டேய், அவனுக்கு சொன்னதுதான் ஒங்களுக்கும்.. .ஃப்ரென்ஷிப் நடுவுல இந்த பாழாப்போன ஜாதி வர வேணாம்.... இதனாலதானடா நா இப்படி அனாதையா நிக்கேன்...'
நண்பர்கள் குழு சட்டென்று அமைதியாகிப் போனது... பரத்தின் பெற்றோர்களுடைய கலப்பு திருமணத்தைப் பற்றியும் அவனுடைய தாயின் பெற்றோர் அவரை புறக்கணித்ததைப் பற்றியும் ஏற்கனவே கேட்டிருந்ததால் எல்லோரும் இந்த பிரச்சினையை கூட்டத்தில் எழுப்பிய இரு நண்பர்களையும் பார்த்து முறைத்தனர்... அதில் ஒருவன்... 'ஆமாடா.. பரத் சொல்றா மாதிரி நமக்குள்ள இந்த பிரச்சினை வேணாம்... நம்மால சால்வ் பண்ண முடியாத பிரச்சினை இது... we will have to accept the reality.... பரத் சாரிடா... We never thought this would hurt your sentiments...'
பரத் புன்னகையுடன் தன் நண்பர்களைப் பார்த்தான்... 'டேய்... இதனாலயே எனக்கு எங்கப்பா, அம்மாமேல மதிப்பு ஜாஸ்தி... அப்பவே அவங்க இந்த ஆங்கிள்ல யோசிச்சிருக்கறப்ப.. நம்மால ஏண்டா அந்த மாதிரி திங்க் பண்ண முடியாது.... இது நம்ம தலைமுறையில தீர்க்க முடியாத விஷயம்... Let us forget about this and go ahead... கொஞ்ச நேரம் சும்மா இருந்தீங்கன்னா... இத படிச்சி முடிச்சிட்டு அப்புறம் என்ன பண்லாம்னு டிசைட் பண்லாம்.. என்ன படிக்கவா?'
'ஆமாம்.. நீ சொல்றதுதான் சரி... 'என்றனர் கோரசாக அனைவரும்...
'தென்.. ஒக்கே... லிசன்..' என்றவாறு தன் கையிலிருந்த நகலில் இருந்து படிக்கலானான் பரத்...
மினிமம் எலிஜிபில் மார்க்...
எஸ்.சி/எஸ்.டி.. பாஸ் பண்ணா போறும்... இங்க யாருக்கும் இது பொருந்தாதுன்னு நினைக்கேன்...
பிசி: 55% பர்சண்ட் இருக்கணும். இதுல இங்க எத்தன பேர்றா?' பரபரவென்று அறையில் உயர்ந்த கரங்களை எண்ணினான்.... 'பத்துக்கு மேல இருக்கமா? சரி... அடுத்தது..
எம்பிசி: 50% பர்சண்ட். இதுலயும் இருக்கம் இல்லே? அங்கொன்றும் இங்கொன்றுமாக கரங்கள் உயர்ந்தன... 'இவ்வளவுதானா? இதுல என்னையும் சேத்துக்கறேன்...'
'நீயா... டேய்... வெளையாடாத... இது ஒனக்கெல்லாம் இல்லை... எங்கள மாதிரி வீக் பசங்களுக்கு...'
கிண்டலடித்தவனைப் பார்த்து புன்னகைத்தான் பரத்...
'டேய்.. என்ன நக்கலா? தோருக்கானே பூணூல்... அவனுங்களுக்குன்னு ஒரு கட் ஆஃப் மார்க் வச்சிருந்தா பரத்துக்கு அதுக்கு மேல இருக்கு... ஏதோ அவன் நல்ல கொணம்... நாம சேரப்போற காலேஜ்லயே சேரப் போறேன்னு நிக்கிறான்...' என்றான் பரத்தின் நெருங்கிய நண்பன் கனேசன்....
'பரவால்லைடா கணேஷ்... சும்மா லெக் புல்லிங்தானே.. I don't mind...' என்றவாறு மேலே தொடர்ந்தான் பரத்....
தொடரும்...
Subscribe to:
Posts (Atom)