26.12.07

நாளை நமதே - 35

அன்று பகல் காவல்துறை அத்துமீறி கல்லூரி வளாகத்தினுள் நுழைந்து பரத்தை கைது செய்ததை எதிர்த்து டேவிட் தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாணவர்களை ஒட்டுமொத்தமாக காவல்துறையினரின் உதவியுடன் கல்லூரியிலிருந்து அகற்றியிருந்தது. ஆயினும் கல்லூரி வாசலில் நின்று தொடர்ந்து ட்ட மாணவர் காவல்துறை கும்பலை வேனில் அள்ளிக்கொண்டு செல்ல மறியலில் நேரடியாக பங்குபெறாவிட்டாலும் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த ப்ரியா, சுந்தர் போன்றவர்களையும் கல்லூரி நிர்வாகம் கல்லூரியிலிருந்து இருவாரங்களுக்கு சஸ்பெண்ட் செய்துவிடவே என்ன செய்வதென தெரியாமல் கல்லூரி வாசலில் நின்றிருந்தாள் ப்ரியா.

ஏற்கனவே அன்று காலையில் தன் தாயுடன் நடந்து முடிந்திருந்த வாக்குவாதம் வேறு அவளை நிலைகுலை செய்திருந்தது. இனியும் தன் தாயுடன் ஒரே வீட்டில் இருக்க முடியுமா என்பதிலேயே கல்லூரிக்கு வரும் வழியெல்லாம் அவளுடைய மனம் உழன்றுக்கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் ஜோதிகா கூறிய அறிவுரையும் அவளுக்கு நினைவு வரவே ஜோதிகாவிடம் தன்னுடைய நிலைமையை விளக்கிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிவிட வேண்டுமென்று என்ற தீர்மானத்துடந்தான் கல்லூரிக்கே வந்திருந்தாள் ப்ரியா.

அவள் இருந்த மனநிலையில் கல்லூரியில் நடந்த மறியலில் கலந்துக்கொள்ள வேண்டுமென்று தோன்றவில்லை. ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக சம்பவங்கள் நடந்துமுடிந்துவிட தன்னுடைய தலைவிதியை நொந்துக்கொண்டு கல்லூரி பேருந்தும் இல்லாத நிலையில் எங்கு செல்வது, எப்படி செல்வது என்பது புரியாமல் நின்றிருந்தவள் துக்கம் மேலிட முகத்தை மூடிக்கொண்டு விசும்ப துவங்கினாள் தன்னையுமறியாமல்.

அவள் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி நின்றிருந்த சுந்தர் அவளை தயக்கத்துடன் திரும்பி பார்த்தான். அவனுடன் சிறு கும்பலாக நின்றிருந்த மாணவர்களுள் ஒருவன் 'தோ பார்றா.... இதுக்கெல்லாம் போயி எமோஷனலாயி எல்.கே.ஜி பொண்ணாட்டம் அழுவறத...' என்றான் கேலியுடன்.

ப்ரியாவின் காதுகளில் அவனுடைய கேலி பேச்சு விழ சட்டென்று மூண்ட கோபத்தில் அவனை நெருங்கி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

'Mind your business....' என்றாள் கோபம் அடங்காமல்.

இதை எதிர்பாராத மாணவன் கன்னத்தை பிடித்தவாறு அங்கிருந்த அகல அவனுடன் நின்றிருந்த மாணவ கும்பல் அதிர்ச்சியுடன் ப்ரியாவை பார்த்தது.

சுந்தர் என்ன நினைத்தானோ, 'என்ன ப்ரியா இப்படி செஞ்சிட்டீங்க... Control yourself...' என்றான் தன்னையுமறியாமல்.

'மிஸ்டர், ஒங்க வேலைய பாத்துக்கிட்டு போங்க...'

இதை சுந்தர் எதிர்பார்க்கவில்லையென்பது அவன் சட்டென்று விலகி நடந்ததிலிருந்தே தெரிந்தது. அவனைத் தொடர்ந்து குழுமியிருந்த மாணவர் கும்பல் அவளை வெறுப்புடன் பார்த்துவிட்டு கலைந்து செல்ல ஒரு நிமிடத்தில் தன்னையிழந்து நடந்துக்கொண்ட விதத்திற்காக தன்னையே

நொந்துக்கொண்டு நின்றாள் ப்ரியா....'ச்சே.... What a stupid thing to do.... சுந்தர் சொன்னாமாதிரி I should have controlled myself... என் ப்ராப்ளம் கமெண்ட் அடிச்சவனுக்கு தெரிய சான்ஸ் இல்லையே.... இப்ப என்ன பண்றது? காலேஜுக்குள்ளயும் போமுடியாது... ஜோதிகாவையும் வேன்ல ஏத்திக்கிட்டு போய்ட்டாங்க... ஸ்டேஷன் வரைக்கும் கொண்டுபோயிருப்பாங்க போலருக்கு... போலீஸ் ஸ்டேஷன் எங்கருக்குன்னு தெரிஞ்சாலாவது போய் பாக்கலாம்...'

சுற்றும் முற்றும் பார்த்தாள். கல்லூரியை தவிர வேறெந்த கட்டிடங்களும் அருகில் இல்லாததால் தூரத்தில் சென்றுக் கொண்டிருந்த ஓரிருவர்களைத் தவிர ஆள் அரவம் இல்லாமல் பகல் பொழுதிலும் அச்சத்தை உண்டுபண்ணியது. தனக்கு முன்னால் சாலையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த சக மாணவர்களை பார்த்தாள். இவர்களுடன் சேர்ந்து சென்றால்தான் தனக்கு பாதுகாப்பு என்பதை உணர்ந்தவளாய் துப்பட்டாவால் முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டு சாலையை நோக்கி நடந்தாள்.

தனக்கு முன்னால் சென்ற மாணவ கும்பல் நான்கைந்து சிறு குழுக்களாக பிரிந்து சற்று முன் நடந்த சம்பவங்களை அலசியவாறு கல்லூரியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த நகர பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க அவர்களிடமிருந்து சற்று தொலைவில் நடந்து பேருந்து நிலையத்தை ப்ரியா அடைந்தபோது களைத்துப்போயிருந்தாள். காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருந்ததோ அல்லது சுட்டெரிக்கும் வெயிலில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்துவந்ததோ அல்லது அவள் இருந்த மனநிலையோ பேருந்து நிலைய வாசலில் மயங்கி விழுந்தாள்.

அதற்குப் பிறகு அவள் கண்விழித்தபோது பேருந்து நிலையத்திலிருந்த இருக்கைகளுள் ஒன்றில் அவளும் அவளுக்கெதிரில் சுந்தரும் அவனுடன் சற்று முன்பு அவள் கோபித்துக்கொண்ட சக மாணவர்களும்.....

பேருந்துகளுக்காக காத்திருந்தவர்களுள் பலரும் தன்னை நோக்கி பார்ப்பது தெரிய கலைந்துக் கிடந்த ஆடைகளை சரிசெய்துக்கொண்டு எழுந்திருக்க முயன்று முடியாமல் இருக்கையிலேயே அமர்ந்தாள். 'எனக்கு என்னாச்சி?' என்றாள் நடுங்கும் குரலில்.

'எழுந்துக்காதீங்க இத குடிங்க.. வெயில்ல நடந்துவந்த களைப்புன்னு நினைக்கேன். மயங்கி விழுந்துட்டீங்க... நம்ம ஸ்டூடன்ஸ்தான் உங்கள இங்க

கொண்டு வந்து ஒக்கார வச்சோம்... இப்படியே கொஞ்ச நேரம் ஒக்காந்து இருந்தீங்கன்னா சரியாயிரும்னு நினைக்கேன்.' என்று பதிலளித்த சுந்தர் எழுந்து நின்றான்.

குழுமியிருந்த மாணவ, மாணவிகள் பலரும் ஒருவித கேலியுடன் தன்னை பார்ப்பதுபோல் உணர்ந்தாள் ப்ரியா. ஆனாலும் சுந்தரின் கரிசனம் அவளை தொட்டது. 'Thanks Sundar....' என்றாள் மெல்லிய குரலில். பிறகு தன்னை சூழ்ந்து நின்ற மாணவர்களைப் பார்த்தாள். 'I feel ashamed of myself for what happened at the College. Sorry friends..'

மாணவர்கள் குழு சட்டென்று நடந்ததை மறந்து புன்னகைத்தது. 'It's OK.' என்றான் சுந்தர் உடனே. 'ஒங்களால பஸ்ல போக முடியுமா இல்ல ஆட்டோ ஏதாச்சும் வேணுமா?'

ப்ரியா மெல்லிய புன்னகையுடன் அவனை நன்றியுடன் பார்த்தாள் 'If you could get me an auto...'

'I'll do that' என்றவாறு சுந்தர் கூட்டத்திலிருந்து விலகி ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தான். 'பார்றா... இதான் சாக்குன்னு இவன் லைன்

போடறத? காலேஜ் தொடங்குன நாள்லருந்து இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்தான்... திடீர்னு ஹீரோவாய்ட்டான்... ஹூம்...' என்றது கும்பலிலிருந்து ஒரு குரல்...

ப்ரியாவின் உதடுகளில் அவளையுமறியாமல் ஒரு புன்னகை விரிந்தது... ஆட்டோ ஸ்டாண்டில் நின்றிருந்த ஒரு ஆட்டோ டிரைவரிடம் அவளை நோக்கி சைகை செய்து பேசிக்கொண்டிருந்த சுந்தரைப் பார்த்தாள்...

அதன் பிறகு ஆட்டோவில் ஏறவும் அவள் சிரமப்பட, 'பிரதர் இவ்வளவு செஞ்சீங்க கூடவே போய் வீட்ல ட்ராப் பண்ணிருங்க...' என்றவாறு சில மாணவர்கள் கிண்டலடித்தது.... இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் சங்கடத்துடன் சுந்தர் அவளைப் பார்த்தது... 'வாங்களேன் ப்ளீஸ்'

என்பதுபோல் அவள் அவனைப் பார்த்தது... பிறகு தயக்கத்துடன் அவளுடன் ஆட்டோவில் அவன் ஏறியது.... தன்னையுமறியாமல் தன்னுடைய பிரச்சினைகளை ஒன்றுவிடாமல் அவனிடம் கொட்டி தீர்த்தது.. அவளை தடை செய்யாமல் முழுவதையும் அனுதாபத்துடன் கேட்டுவிட்டு...

இறுதியில்.. 'I fully understand your problems Priya....Give me one or two days.. I will try to help you. ஒங்க மொபைல் நமபர மட்டும் குடுங்க...If you don't mind.' என்று பதிலளித்தது....

'நான் முதல்ல சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொல்றான்னு நினைச்சேன் ஜோதி. ஆனா அடுத்த நாளே என்னெ மொபைல்ல கூப்ட்டு ------- டிவி ஸ்டேஷன் அட்றச குடுத்து 'இங்க போய் ப்ரேமா மேடம்னு கேளுங்க... அவங்கக்கிட்ட ஒங்களபத்தி சொல்லியிருக்கேன்.. She will help you.' னு சொன்னப்ப கூட நா நம்பல. இருந்தாலும் போய்த்தான் பாப்பமேன்னு போனேன். ப்ரியா மேடம்னு சுந்தர் சொன்னவங்கள நீ கூட டிவியில பாத்துருப்பே... வாரம் ஒரு சினி ஆக்ட்ரோட சேந்து ப்ரோக்ராம் குடுப்பாங்க... டிவியில பாக்கறத விட யங்கா, செகப்பா... She was very sweet when I introduced myself....போன அன்னைக்கே ஒரு ஸ்க்ரீன் டெஸ்ட்டுன்னு சொல்லி ஒரு ஷீட்ட கைல குடுத்து இதுலருக்கற மனப்பாடம் செஞ்சி சொல்லுன்னு சொன்னாங்க... எனக்கு எப்படியும் அந்த வேலை வேணும்னு ஒரு வைராக்கியம்... ஒரே டேக்குலயே ஓக்கே ஆயிருச்சி... டேக் முடிஞ்சதும் அந்த மேடம் என்னெ கட்டிபுடிச்சிட்டு ஒன் வயசுலதாம்மா நானும் இந்த ஃபீல்டுக்கு வந்தேன்.. நா அப்ப இருந்தா மாதிரியே நீ இருக்கேன்னு சொன்னப்ப I was very thrilled Jothi...'

அவள் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்பதுபோன்ற முகபாவனையுடன் அவளை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் ஜோதிகா...

சட்டென்று நினைவுக்கு வந்தவளாய் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள் நான்கு மணியை கடந்திருந்தது. ஏறக்குறைய ஒரு மணி நேரம்! நேரம் போனதே தெரியவில்லை...

'என்னடி அப்படி பாக்கறே... நம்ப முடியல இல்ல?'

'ஆமாடி... ஆனா நம்பித்தான ஆவணும்? காலையில ஒன்னெ பாக்கறப்பவே என்ன இது இவ்வளவு பளிச்சின்னு இருக்கான்னு நெனைச்சேன்... எப்படியோ நீ சந்தோஷமா இருக்கறத பாத்து மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடி.' என்றவாறு எழுந்து நின்றாள் ஜோதிகா. 'ஏய் ஒரு மணி நேரத்துக்கும் மேல இங்க ஒக்காந்துருந்துருக்கோம் இப்பவே கெளம்புனாத்தான் அப்பா வர்றதுக்குள்ள நா வீடு போய் சேர முடியும்...'

அப்போதுதான் தன்னுடைய வாட்சைப் பார்த்தாள் ப்ரியா. 'ஏய் ஆமாடி....' என்றவள் பதற்றத்துடன், 'ஐயையோ... அந்த ஆட்டோ டிரைவர்...' என்றவாறு பூங்கா வாசலை நோக்கி ஓடினாள். ஆட்டோ நின்றிருந்த இடம் காலியாயிருந்தது. 'ச்சே.. பணத்து குடுத்துட்டாவது போயிருக்கலாம்...'

'என்னடி ஆட்டோவையே காணோம்... நொந்துபோயி போய்ட்டார் போலருக்கு... சரி வா வேற ஒரு ஆட்டோவ புடிப்போம்... ஒன்னெ இறக்கிவிட்டுட்டு நா போறேன்....' என்றவாறு ஜோதிகா சாலையில் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ நோக்கி கையசைத்தாள்...

இருவரும் சிறிது நேரம் மவுனமாக பயணித்தனர். சட்டென்று, 'ஏய் ஒங்கிட்ட சொல்ல மறந்துட்டேன்...' என்றாள் ப்ரியா.

'என்ன... மூவி ஆஃபர் ஏதாச்சும் வந்துருக்கா?' என்றாள் ஜோதிகா கிண்டலுடன்..

'ச்சீ இல்லடி... அந்த ப்ரேமா மேடம் யார் தெரியுமா?'

'எனக்கென்ன தெரியும்?'

'நம்ம சுந்தரோட அம்மா....'

ஜோதிகா திடுக்கிட்டு தன் தோழியைப் பார்த்தாள். 'என்னடி சொல்றே?'

'ஆமாடி... ஆனா அவங்கதான் நம்ம சுந்தரோட பிரச்சினையே....'

'அப்படீன்னா?'

'We are in the same boatடுன்னு சொன்னனே....'

'ஆமா...'

'எங்கம்மா மாதிரிதான்... ஆனா இது வேற மாதிரி...'

'என்னடி சொல்றே? ஒன்னும் புரியல... This is differentடுன்னு tomatto ketchup ஆட்ல சொல்றா மாதிரி இருக்கு...'

'ஏய் வெளையாடாத... I am serious...'

‘சொல்லு...’

தொடரும்...

 

Technorati Tags:

24.12.07

நாளை நமதே - 34

ஜோதிகாவும் ப்ரியாவும் எதிர் எதிர் திசையில் செல்ல வேண்டியவர்கள் என்பதாலும் ஜோதிகா எப்படியாவது தன்னுடைய தந்தை வீடு திரும்புவதற்குள் வீட்டை சென்றடையவேண்டும் என்று கருதியதாலும், 'சரிடி ப்ரியா, மண்டே காலேஜ்ல வச்சி பாக்கலாம்.' என்றாள் விடைபெறும் நோக்குடன்.

ஆனால் ப்ரியா விடவில்லை. 'ஏய், இரு. நானும் ஒங்க வீடு இருக்கற டைரக்ஷன்லதான் போணும்.' என்றாள்.

'ஏன்... ஒங்க வீடு ஆப்போசிட் டைரக்ஷன்லதான இருக்கு?' என்றாள் ஜோதிகா வியப்புடன்.

'இல்லடி... நீ போற டைரக்ஷன்லதான்.'

'என்னடி சொல்றே?'

ப்ரியா அவளுடைய முகத்தை தவிர்த்து எதிரில் ஆட்டோ ஸ்டாண்டில் வரிசையாக நின்ற ஆட்டோக்களில் ஒன்றை கையசைத்து அழைத்தாள். அதிசயமாக என்ன, ஏது என்று கேட்காமல் ஆட்டோ வட்டமடித்து அவர்கள் முன் வந்து நின்றது. 'வா சொல்றேன்.' என்று ஜோதிகாவை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறினாள்.

'எங்கம்மா போகணும்?' என்றார் ஆட்டோ டிரைவர்.

'சொல்றேன் இப்படியே போங்க..' என்றாள் ப்ரியா.

'இல்லம்மா.... எங்கன்னு சொன்னாதான எவ்வளவு குடுப்பீங்கன்னு....'

'நீங்க கேக்கறத குடுக்கறேன், போறுமா?' என்றாள் ப்ரியா எரிச்சலுடன், 'வண்டிய எடுங்க....'

வாகனம் நகரும்வரை காத்திருந்த ஜோதிகா, 'நா சொல்லட்டுமா... இப்ப நீ ஒங்க வீட்ல இல்லை... சரியா?' என்றாள்.

'ஆமா.....'

'நா அன்னைக்கி அவ்வளவு தூரம் சொல்லியும்......'

ப்ரியா ஜோதிகாவின் கரங்களைப் பற்றினாள். 'அந்த அங்கிள் இப்ப வீட்டுக்கே வந்துட்டார்டி.... இதுக்கப்புறம் நா எப்படி....?'

ஜோதிகா திடுக்கிட்டு தன் தோழியைப் பார்த்தாள்.... சாலையில் செல்லும் வாகனங்களை பார்த்தபடி அமர்ந்திருந்த ப்ரியாவின் கண்கள் கலங்கி இருப்பதை காண முடிந்தது. அவளாக மேலே தொடரும் வரை காத்திருப்பது என தீர்மானித்தாள். இந்த மனநிலையில் அவளை விட்டுவிட்டு செல்ல மனம் வரவில்லை அவளுக்கு. இருவரும் சிறிது நேரம் மவுனமாக சாலையை பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். இதற்கு மேலும் ஆட்டோவில் அமர்ந்து தங்களுடைய பர்சனல் விஷயங்களை பேசுவது அத்தனை உசிதமாக படவில்லை அவளுக்கு.

'இறங்கி எங்கயாவது ஒக்காந்து பேசலாமா ப்ரியா?'

ப்ரியாவும் சரியென்று தலையை அசைத்தாள். ஆட்டோ டிரைவருக்கு புரிந்தது. வேகத்தை குறைத்து சாலையின் இடதுபுறம் ஒதுங்கி நின்றார். அவர்கள் கடந்திருந்த தூரம் சிறிதளவேதான் என்றாலும் முப்பது ரூபாயை எடுத்து நீட்டினாள் ப்ரியா. 'வேணாம்மா.... ஒங்க கண்ணுல கண்ணீர பாத்ததுக்கப்புறம் ஒங்கக் கிட்ட காசு வாங்க மனசு வரல.... வேணும்னா பக்கத்துலருக்கற பார்க்ல ட்ராப் பண்ணிட்டு வெய்ட் பண்றேன்... சாவகாசமா பேசிட்டு வாங்க... எங்க கொண்டு வுடணுமோ வுட்டுடறேன்....'

ப்ரியாவும் ஜோதிகாவும் சென்னையில் இப்படியும் ஒரு ஆட்டோ டிரைவரா என்பதுபோல் அவரை பார்க்க....'எனக்கும் ஒங்க வயசுல ஒரு பொண்ணு இருக்கும்மா... ஒங்க வீட்டுல ஏதோ பிரச்சினைன்னு தெரியுது... மனசு கேக்கல... அதான்....' என்றார் ஆட்டோ டிரைவர்.

'தாங்ஸ்ங்க.... ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பண்லாம்னா...' என்றாள் ப்ரியா தயக்கத்துடன்..

'வெய்ட் பண்றேன்.... இருங்க பக்கத்துலதான் பார்க்...'

அடுத்த சில நிமிடங்களில் ஆட்டோ அருகில் இருந்த பூங்கா ஒன்றில் நிறுத்த இருவரும் இறங்கி காலியாய் இருந்த பூங்காவுக்குள் நுழைந்து புல் தரையில் அமர்ந்தனர். ஆட்டோ டிரைவர் இறங்கி ஒரு பீடியை பற்றவைத்தார்.

ப்ரியா தலை குனிந்தவாறு சிறிது நேரம் அமர்ந்திருக்க....'ஒங்கம்மா எப்படிறி இதுக்கு ஒத்துக்கறாங்க?' என்றாள் ஜோதிகா.

'I think she is being blackmailed by him....'

'அப்ப போலீசுக்கு போவேண்டியதுதானே....?'

ப்ரியா கேலி புன்னகையுடன் தன் தோழியைப் பார்த்தாள். 'என்னன்னு கம்ப்ளைண்ட் பண்ண? எங்கம்மாதான் ஏறக்குறைய ரெண்டு வருசமா அந்த அங்கிளோட ரிலேஷன்ஷிப் வச்சிருக்காங்களே.... I think he is having some photos with him.... அம்மா அந்தாள் சொல்றத கேக்கலன்னா சைட்ல போட்டுருவேன்னு மிரட்டறான்னு சொல்றாங்க...'

அவள் கூறுவதில் இருந்த நியாயம் ஜோதிகாவுக்கு புரிந்தது. 'சரிடி... வீட்ட வெளிய வந்துட்டே.... பணத்துக்கு? காலேஜ் ஃபீஸ் வேற இருக்கு....எப்படி மேனேஜ் பண்ணுவ?'

'சுந்தர் மூலமா ஒரு ஜாப் கிடைச்சிருக்குடி....'

ஜோதிகா வியப்புடன் பார்த்தாள். 'என்னடி சொல்ற? சுந்தர் மூலமாவா? என்ன வேல?'

'------- டிவியில ஜாக்கியா..... வாரத்துல மூனு ப்ரோக்ராம்...'

ஜோதிகாவின் விழிகள் வியப்பால் விரிந்தன. 'அப்படியா வெரி குட்... ஆனா ஸ்டடீஸ் அஃபெக்ட் ஆகாதா?'

'இல்லடி..... ஈவ்னிங்லதான் ரெக்கார்டிங் வச்சிக்கறாங்க... சுந்தரோட அம்மாதான் ப்ரொட்யூசர்.. அவங்க ரெக்கமெண்டேஷன்லதான்.....'

'என்னடி சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைசா தரே... சுந்தரோட அம்மா டிவி ப்ரொட்யூசரா?'

'ஆமாடி.... தற்செயலாத்தான் கேட்டேன்.... சுந்தர் was very understanding....'

ஜோதிகாவால் தான் கேட்பதை ஜீரனிக்க முடியவில்லை. 'சரிடி... ஆனா சுந்தருக்கு ஒன் விஷயம் எப்படி தெரியும்? எங்கிட்ட சொன்னா மாதிரியே அவங்கிட்டயும் ஒங்க அம்மாவப்பத்தி சொன்னியா என்ன?'

ப்ரியா சோகத்துடன் தன் தோழியைப் பார்த்தாள். 'We are in the same boat ஜோதி.... அதான் அவனால எனக்கு ஹெல்ப் பண்ணணும்னு தோனியிருக்கு...'

'என்னடி சொல்றே? அப்படீன்னா?'

ப்ரியா பதிலளிக்காமல் சற்று தூரத்தில் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த இரு சிறுவர்களை பார்த்தாள். இப்படியே இருந்துருந்தா எவ்வளவு நன்னாருந்துருக்கும்..... அவளையுமறியாமல் இரு வாரங்களுக்கு முன்னால் சுந்தரை சந்தித்த அந்த நாளை நினைத்துப் பார்த்தாள்....

தொடரும்...

 

Technorati Tags:

14.12.07

நாளை நமதே 33

அதிகாலையிலேயே விழிப்பு வந்தும் படுக்கையில் இருந்து எழுந்திருக்க மனமில்லாமல் விட்டத்தில் சுழலும் மின்விசிறியையே பார்த்தவாறு படுத்துக்கிடந்தாள் ஜோதிகா.

அம்மா, அப்பா, ராஜ் எல்லாரும் கிளம்பி சென்றிருந்ததால் வீடு அமைதியாக இருந்தது.

இந்த இரண்டு வாரங்களில்தான் என்னவெல்லாம் நடந்து முடிந்திருக்கிறது என்று நினைத்தாள். இன்னையோட காலேஜ டெம்பரவரியா மூடி ஒரு வாரமாவுது.

ரெண்டு வாரத்துக்கு முன்னால க்ளாசுக்குள்ள பரத்த அடிக்கற அளவுக்கு போயி அடுத்த நாள் சஸ்பெண்ட் ஆன குமார் அன்னைக்கி ராத்திரியே யாரோ ரவுடிப் பசங்க அடிச்சி போட்டது.... அதுக்கு பரத்தும் அவன் க்ரூப்பும்தான் காரணம்னு போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் போயி பரத் போலீஸ் காலேஜ் காம்பஸ்ல வச்சே அரெஸ்ட் பண்ணது..

அதே நாள் வாசனோட ட்வின் ப்ரதர் அடுத்த காம்பஸ்ல அவன் ஃப்ரெண்ட்சோட சேந்து கலாட்டா பண்ண அங்கயும் போலீஸ் புகுந்து தடியடி பண்ணது.

அத்துமீறி ரெண்டு காலேஜ் காம்பஸ்க்குள்ளயும் போலீஸ் நுழைஞ்சத எதுர்த்து டேவிட் மத்த பசங்கள சேத்துக்கிட்டு டெமோ பண்ண எல்லாரையும் ஒட்டுமொத்தமா ஜோதிகாவையும் வாசனையும் சேர்த்து காலேஜ்லருந்து சஸ்பெண்ட் பண்ணது... விஷயம் தெரிஞ்சி அப்பா கோபத்துல தலகால் தெரியாம, காலேஜ்ல போயி படிடின்னு சொல்லி அனுப்புனா பசங்களோட சேந்துக்கிட்டு கலாட்டா பண்ணி சஸ்பெண்ட் ஆயி என் மானத்தையே வாங்கிட்டியடின்னு சொல்லி அவளெ அடிச்சி குடியிருப்புக்கே தெரிஞ்சி அவமானப்பட்டது.

அதுக்கப்புறம் குமார அடிச்சி போட்டது காலேஜ் செக்யூரிட்டி ஆளுங்கதான் பரத்தோட அப்பா கண்டுபிடிச்சி அண்ணா வைஸ் சான்சலர பாத்து காலேஜ் அட்மினுக்கு எதுரா கம்ப்ளெய்ண்ட் குடுத்தது. அதுக்கப்புறம் யூனிவர்சிட்டி ஒரு சின்னவிசாரனை நடத்தி காலேஜ் அட்மினுக்கு வார்னிங் குடுத்தது. ஸ்டூடண்ட்ஸ் அன்ரெஸ்ட்டுன்னு காரணம் காட்டி காலேஜ் மேனெஜெமெண்ட் அடுத்தடுத்த காம்பஸ்லருந்த ரெண்டு காலேஜையுமே லாக்கவுட் பண்ணது.....

இன்னையோட ரெண்டு வாரமாச்சு காலேஜுக்கு போயி....

ஜோதிகாவின் நினைவுகளை கலைத்தது அவளுடைய செல்ஃபோன்... எடுத்து 'சொல்லு... என்ன விஷயம்? பரத்த மீட் பண்ணியா?' என்றாள் எதிர்முனையிலிருந்த டேவிட்டிடம்.

'ஆமா....'

'எப்படியிருக்கான்.'

'கொஞ்சம் டல்லாத்தான் இருந்தான். ஆனா இப்ப பரவால்லை... இன்னைக்கி ஒன்னெ மீட் பண்ண முடியுமான்னு கேட்டான்.'

'எங்க?'

'ஒனக்கு எங்க சவுகரியப்படுமோ அங்க... வாசனும் வருவான். சுந்தரும் வரேன்னு சொல்லியிருக்கான்.'

'சுந்தரா?' ஜோதிகாவுக்கு வியப்பாக இருந்தது. 'அவனெ எங்க மீட் பண்ணே?'

டேவிட் சிரித்தான். 'ஏய், நாம நெனச்சா மாதிரியில்ல அவன். நல்ல விவரமான ஆளாருக்கான். ஆனா அவன் லைஃப்லயும் ப்ராப்ளம்ஸ். போன ரெண்டு வாரத்துல அவன் வீட்டுக்கு ரெண்டு மூனுதரம் போயிருந்தேன். அப்பத்தான் தெரிஞ்சது ஏன் அவ்ளோ சைலண்டாருக்கான்னு... நல்ல பையன் ஜோதி... He was very helpful to us....பரத் வீட்டுக்கும் ரெண்டுதரம் வந்துருக்கான். பரத்தோட டாடிக்கும் அவனெ ரொம்ப புடிச்சி

போயிருச்சி...'

'பரவால்லையே.. இவ்வளவு நடந்துருக்கா?' என்ற ஜோதிகா படுக்கையில் இருந்து எழுந்து செல்ஃபோனுடன் ஹாலை நோக்கி நடந்தாள். ‘சுந்தர் லைஃப்லயும் பிரச்சினைன்னு சொன்னியே.. என்ன பிரச்சினை?’

'அத வேற ஒரு டைம் சொல்றேன்.... எங்க மீட் பண்ணலாம் அத சொல்லு.’'

'எனக்கு எங்கன்னாலும் ஓக்கே. ஆனா அப்பா திரும்பி வர்றதுக்குள்ள நா வீட்டுக்கு வந்துரணும்... இல்லன்னா டேஞ்சர்...'

டேவிட் சிரித்தான். 'ஏன், அங்கிள் இன்னும் திட்டிக்கிட்டேத்தான் இருக்காரா?'

'ஆமா டேவிட்... ஆல்மோஸ்ட் ஒருவாரமா பயங்கர டார்ச்சர். இனி மறுபடியும் காலேஜ் திறந்தாத்தான் நிக்கும் போலருக்கு. இதுனாலயே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட அடிக்கடி ஆர்க்யூமெண்ட் வந்துருது.... வீட்ல ஒரு வாரமா நிம்மதியே இல்ல டேவிட்....' ஜோதிகாவின் குரல் உணர்ச்சி மிகுதியால் நடுங்க டேவிட் ஆறுதலாக பேசினான்.

'நா கேள்விப்பட்டேன் ஜோதி... அம்மா சொன்னாங்க...But don't worry.... Things would work out... பொறுமையாயிரு...'

'தாங்ஸ் டேவிட்....' என்றாள் ஜோதிகா சுதாரித்துக்கொண்டு. 'சொல்லு... எங்க வரணும்?'

ஒரு நொடி தாமதத்திற்குப் பிறகு எதிர் முனையிலிருந்து பதில் வந்தது. 'பரத் வீடு பரவால்லையா?'

அவ்வளவு தூரமா என்று ஒரு நொடி தயங்கினாள் ஜோதிகா. போய் வரவே ரெண்டு மணி நேரம் ஆயிருமே. இருந்தாலும் பரவால்லை.... எனக்கும் ஒரு ரிலீஃப் வேணும். எவ்வளவு நேரந்தான் தனியா ஒக்காந்துருக்கறது? 'நாலு மணிக்குள்ள முடிஞ்சிருமா?'

டேவிட் சிரித்தான். 'ஏய்... எதுக்கு அவ்வளவு நேரம்? ஒரு பதினோரு மணிக்கு துவங்குனா லஞ்சோட முடிச்சிட்டு நீ வேணும்னா போயிரு... நா வேணும்னா வந்து பிக்கப் பண்ணவா?'

அவனுடைய தொனியில் இருந்த கேலி ஜோதிகாவுக்கு புரிந்தது. 'ஏன் இன்னொரு பிரச்சினைய தரலாம்னு பாக்கியா?' என்றாள் புன்னகையுடன்.

டேவிட் குடும்பம் முழுவதையும் ஜோதிகாவின் பெற்றோர்க்கும் பழக்கம் என்றாலும் அவனுடைய பைக்கில் சேர்ந்து செல்லும் அளவுக்கு அத்தனை நெருக்கும் இல்லையே.... ஏற்கனவே பழங்காலத்து ஆளான அப்பா இது தெரிஞ்சா கேக்கவே வேணாம்....

'ஒங்கப்பாவ எனக்கு தெரியாதா என்ன? சும்மா தமாஷுக்கு கேட்டேன்...' என்றான் டேவிட். 'சரி... இன்னும் ஒரு மணி நேரத்துல பாக்கலாம். வழி தெரியலன்னா மறுபடியும் ஃபோன் பண்ணு.... நா வந்து ஒன் ஆட்டோவ கைட் பண்றேன்... பை...'

இணைப்பை துண்டித்துவிட்டு குளித்து ஜோதிகா புறப்படுவதற்கு முன் தன் தாயை செல்ஃபோனில் அழைத்து அனுமதி கோரினாள்... 'எதுக்குடி, அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்சினை பண்ணுவாரே...' என்று லதா ஆரம்பத்தில் தடுத்தாலும் 'சரி போனோம் வந்தோம்னு இரு... திடீர்னு அப்பா

வீட்டுக்கு போன் பண்ணி நீ இருக்கியான்னு செக் பண்ணா பிரச்சினைதான்.' என்று அனுமதியளித்தாள்.

'பயப்படாதேம்மா... நா சீக்கிரம் வந்துருவேன்.' என்று சமாதானம் சொல்லிவிட்டு வீட்டு தொலைபேசியின் ஒலிவாங்கியை எடுத்து வைத்துவிட்டு வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினாள். கூப்ட்டா எங்கேஜ்டு நினைச்சிக்கட்டும்... 'நீ வீட்ல இருந்தா ஃபோன் பேசறத தவிர வேற வேலையே இருக்காதே...' என்று ஏற்கனவே பலமுறை அவளை கோபித்துக்கொண்டிருக்கிறார் ராம்குமார். என்ன மிஞ்சிப்போனா மறுபடியும் ஒரு திட்டு

விழப்போவுது....

பரத்தின் வீட்டைக் கண்டுபிடித்து சேரும்போது நண்பகலை தாண்டியிருந்தது.

பரத் வசதியானவன் என்பது தெரிந்திருந்தாலும் இத்தனை வசதிபடைத்தவனா நம்முடன் ஒரே கல்லூரியில் படிக்கிறான் என்று வியந்துபோனாள் ஜோதிகா. அத்தனை விசாலமாக இருந்தது பரத்தின் பங்களா!

அவள் சென்றடைந்தபோது வீட்டு முன் வரவேற்பறையில் பரத்துடன், டேவிட், வாசன், சுந்தர் ஆகியோருடன் அதிசயமாக ப்ரியாவும் அமர்ந்திருந்தாள்.... ஜோதிகா வியப்புடன், 'ஏய் ப்ரியா நீயுமா... எப்ப வந்தே?' என்ற விசாரனையுடன் அவள் அருகில் சென்று அமர்ந்துக்கொண்டாள்.

பரத் இரண்டு நாள் ஷேவ் செய்யாத முகத்துடன் பார்க்கவே பரிதாபமாக இருந்ததுபோல் பட்டது ஜோதிகாவுக்கு..... பாவம் இவனுக்கென்ன தலையெழுத்தா இவன் இருக்கற ஸ்டேட்டசுக்கும், மார்க்குக்கும் யூனிவர்சிட்டியிலயே கெடச்சிருக்கும்... எதுக்கு நம்மளமாதிரி இந்த காலேஜ்ல சேந்து

லோல் படறான்... 'என்ன பரத் டல்லாருக்கே....' என்றாள் ஆதரவாக..

'I am OK now...' என்றான் பரத் புன்னகையுடன். 'அப்பாதான் ரொம்ப அப்செட்டாய்ட்டாங்க.... He never thought I would be roughed up by the Police... That was a shocking experience..... But அடுத்த நாளே பெய்ல் கெடச்சி இதுக்கு நிஜமா யார் காரணம்னு தெரிஞ்சதும்..... Now it's ok...'

'யூ ஆர் ரைட்...எங்க வீட்லயும் இது ஒரு பெரிய பிரச்சினையையே உண்டாக்கிருச்சி...' என்றான் வாசன். 'ஒங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமான்னு தெரியலை.'

'இப்ப அது தேவையா வாசன்...' என்று இடைமறித்தான் டேவிட்... 'இனி என்ன பண்றதுன்னு பேசுவமே?'

ஜோதிகா விடவில்லை. 'இரு டேவிட்... அவன் சொல்ல வந்தத சொல்லட்டுமே.... சொல்லு வாசன் என்ன நடந்தது?'

வாசன் துவங்குவதற்கு முன் டேவிட் பதிலளித்தான். 'இவன் மூர்த்தி மாதிரியே இருக்கறதால ரெண்டு நாளைக்கு முன்னால குமார அடிச்சமாதிரி இவனெயும் ஒரு கும்பல் அட்டாக் பண்ணியிருக்கு... நல்லவேளையா பகல் நேரமானதால ரோட்ல இருந்தவங்க தலையிட்டு இவனெ ரெஸ்க்யூ பண்ணியிருக்காங்க....'

'ஐயையோ' என்றாள் ஜோதிகா பதற்றத்துடன். 'மூர்த்திக்கி இது தெரியுமா?'

'தெரியும்' என்றான் வாசன். 'ஆனா அவனுக்கு இதெல்லாம் சகஜம் ஜோதி... அப்பாவுக்கும் எம்மேலதான் கோவம்... என்னமோ இதுக்கு நாந்தான் காரணம்கறா மாதிரி... இதுல வேற ஒரு பிரச்சினை என்னன்னா மறுபடியும் மூர்த்திய அவங்க காலேஜ்ல சேத்துக்குவாங்களான்னே தெரியல... குமார அவங்கப்பா நம்ம காலேஜ்லருந்தே ரிலீஃப் வாங்கிட்டாராம்.. வேற எங்கயோ சேக்கப் போறதா கேள்வி... அதனாலதான் மூர்த்தி விஷயம் சீரியசாருக்கு... மூர்த்திய டிஸ்மிஸ் பண்ணா அவனுக்கு எங்க கிடைக்கிதோ நீயும் அங்கதான் படிக்கணும்னு அப்பா கம்பெல் பண்றார். அம்மாவுக்கும் நா அந்த காலேஜ்லயே கண்டினியூ பண்ணா எங்க என்னெ மறுபடியும் யாராச்சும் அட்டாக் பண்ணுவாங்களோங்கற பயம். அதான் என்ன பண்றதுன்னே தெரியல...'

வாசனின் குரலில் இருந்த விரக்தி ஹாலில் அமர்ந்திருந்த அனைவரையும் தொற்றிக்கொள்ள சற்று நேரம் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

'We all understand your feelings Vasan.' என்றான் பரத் ஆறுதலாக. 'ஆனா எனக்கென்னவோ ஒங்கம்மாவோட பயம் நியாயமானதுன்னுதான் படுது.'

'என்ன பரத் நீயும் இப்படி சொல்றே?' என்றான் டேவிட். 'யார் என்ன பண்ணப் போறா? எனக்கென்னவோ வாசனப்பத்தி நம்ம காலேஜ்ல யாருக்கும் தப்பான ஒப்பீனியன் இல்லேன்னுதான் படுது. அப்படியே இருந்தாலும் we can mediate and solve it.'

சுந்தர் சிரித்தான். 'நீ பயங்கரமான ஆப்டிமிஸ்றா டேவிட்.... நம்மளையே சஸ்பென்ஷன்ல வச்சிருக்காங்க.... மறுபடியும் என்க்வயரின்னு எதையாவது வச்சி காலேஜ்லயே சேர விடாம பண்ணாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல.... நீ என்னடான்னா?'

ப்ரியா புன்னகையுடன் ஜோதிகாவைப் பார்த்தாள். 'டேவிட் பயங்கரமான ஆப்டிமிஸ்ட்னா சுந்தர் பயங்கரமான பெஸ்சிமிஸ்ட்... என்ன சொல்றே?'

ஜோதிகா வாய்விட்டு சிரிக்க அனைவரும் சிரித்தனர். அறையில் அதுவரை இருந்த சங்கடம் அந்த சிரிப்பில் கரைந்துபோனது.

அதன் பிறகு அந்த வார இறுதியுடன் முடியவிருந்த சஸ்பென்ஷன் காலத்திற்குப் பிறகு அனைவரும் கல்லூரிக்கு திரும்புவது என்றும் கல்லூரி நிர்வாகம் எடுக்கவிருந்த எத்தகைய நடவடிக்கைகளையும் ஒரே குழுவாக இணைந்து சந்திப்பது என்றும் முடிவானது.

ஜோதிகாவும் ப்ரியாவும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட 'திங்கள் கிழமை காலேஜ்ல பாக்கலாம்.' என்றவாறு அனைவரும் விடைகொடுத்தனர்.

தொடரும்...

 

Technorati Tags:

7.12.07

நாளை நமதே 32

 

Technorati Tags:

இவ்வளவு நடக்கற வரைக்கும் நீங்கல்லாம் என்ன செஞ்சிக்கிட்டிருந்தீங்க?' என்று எரிச்சலுடன் இரைந்தார் வெங்கடேஸ்வரலு. ஏற்கனவே 'உள்ளே' சென்றிருந்த அரை பாட்டில் உயர் ரக மது அவரை உசுப்பிவிட்டிருந்தது. தன்னுடைய மருமகன்கள் இருவரையும் எரித்துவிடுவதுபோல் பார்த்தார்.

மேசையை சுற்றிலும் அமர்ந்திருந்த வெங்கடேஸ்வரலுவின் குடும்பத்தினர், முக்கியமாக மருமகன்கள் இருவரும் தலையைக் குனிந்துக்கொண்டனர்.

தெண்ட பசங்க. வெள்ளையும் சொள்ளையுமா இருக்கானுங்களேங்கற ஒரே காரணத்துக்காக ஊர்லருந்து புடிச்சி கட்டி வச்சதுக்கு இது தேவைதான். காலேஜ்ல சேந்து மூனு மாசம் கூட ஆகாத வெத்து பசங்க காலேஜுக்குள்ளவே ரகள பண்ணிருக்கானுங்க. அங்கயே நாலு மொத்து மொத்தி தொரத்திவிடாம... இதுக்கு இடியன் தடியன் மாதிரி செக்யூரிட்டி வேற.

உள்ளுக்குள் புகைந்த வெங்கடேஸ்வரலு ஹாலின் மறுகோடியில் தலையைக் குனிந்தவாறு நின்ற கல்லூரி வாட்ச் அண்ட் வார்ட் தலைவனை பார்த்தார். 'யோவ்... ஒன்னெ நம்பித்தான நா காலேஜையே விட்டுருக்கேன். அந்த காலிப் பயலுங்க லேபூக்குள்ள பூந்து எல்லாத்தையும் போட்டு ஒடச்சிருந்தா என்னய்யா ஆவறது?'

செக்யூரிடி ஆஃபீசர் முருகேசன் தயக்கத்துடன் திரும்பி அவரைப் பார்த்தார். 'அந்த அளவுக்கு போயிருவானுங்களாய்யா?'

'கிளிச்சிருப்பே.... போய்யா... வாய்ல சும்மா வந்துறப்போவுது...' வெங்கடேஸ்வரலு மேலும் இரைந்தார். வசவுகள் சரமாரியாக வந்து விழுந்தன.

மேசையை சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் மூவரும் காதுகளைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டியது.... ஆனால் இது நாளும் நடக்கும் நிகழ்வுகளாயிற்றே.... ஒன்றும் நடவாததுபோல் அமர்ந்திருந்தனர்.

'சரிங்க... இப்புடு என்னெ பண்றது?' அவரை அப்படியொரு கேள்வி கேட்கக் கூடிய ஒரே ஆள் கற்பகம்..

'என்னையவே கேளு.. ஏன் காலேஜ் அட்மினிஸ்ட்ரேட்டர கேக்கறது? டிப் டாப்பா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு கார்ல போய் வறாங்கள்லே?'

நாகராஜுலு இருக்கையில் நெளிந்தார். அடுத்து அமர்ந்திருந்த அவருடைய மனைவி ரோகினி இடுப்பில் இடித்தாள். அதற்கு 'வாயை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கவும்' என்று அர்த்தம். இவர் எங்க எதையாவது ஒளறிக்கொட்டி அப்பாவோட எரிச்சலை கூட்டிவிடுவாரோ என்ற பயம் அவளுக்கு. ஓரக்கண்ணால் தன் தங்கை ரோஜாவைப் பார்த்தாள். ஏதாச்சும் சொல்லி அப்பாவ சமாதானப்படுத்தேன் என்று கெஞ்சியது அவளுடைய பார்வை. இருந்தும் கண்டுக்கொள்ளாமல் அமர்ந்திருந்தாள் ரோஜா. அவளுக்கு எப்படியாவது கல்லூரி நிர்வாகி பொறுப்பு தன்னுடைய கணவனை வந்தால் போதும் என்ற எண்ணம்.

'அதில்லீங்க... நம்ம மருமக புள்ளைங்களுக்கு ஒங்கள மாதிரி வயசும் விவரம் இல்லீங்களே.... அதான் கேக்கேன்.' என்றாள் கற்பகம். 'அந்த பையனத்தான் ஏற்கனவே ஒரு தடவ டிஸ்மிஸ் செஞ்சி அத வித்ட்றா பண்ணமே... அதான் யோசனையாருக்கு....'

வெங்கடேஸ்வரலுவுக்கும் இந்த பிரச்சினையிலிருந்த தீவிரம் தெரிந்துதானிருந்தது. இருந்தும் இதை தவிர்த்திருக்கலாமே என்ற ஆதங்கம்தான் ஆத்திரமாக வெளிவந்தது. 'அது தெரியுதுல்ல... அப்ப என்ன பண்ணியிருக்கணும்? அந்த பையன ஆஃபீஸ் ரூமுக்கு கூப்ட்டு கடுப்படிச்சிருக்க வேணாம்லே... ரெண்டாம் வருச பசங்கள விட்டே அவனுங்கள மொத்தியிருக்க வேணாம்... இல்லையா செக்யூரிட்டிங்கள விட்டு ரெண்டு போட்டுருக்கணும். ஏதாச்சும் பிரச்சினையாயிருந்தா ரெண்டு மூனு செக்யூரிட்டிங்கள வேலைய விட்டு தூக்கி நாம தப்பிச்சிருக்கலாம். அத விட்டுட்டு இவங்க ரெண்டு பேரும் நேரடியா தலையிட்டு...' என்றவர் மீதமிருந்த மதுவை ஒரே மூச்சில் அடித்துவிட்டு அறையிலிருந்த அனைவரையும் எரித்துவிடுவதுபோல் பார்த்தார்.

கற்பகம் தன் இருக்கையிலிருந்து எழுந்து தன் கணவனை நெருங்கினாள். 'சரிங்க... தப்புத்தான்... அதான் சொன்னேனே.... விவரம் பத்தாம இவங்க....' என்றவள் அவருக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து மேசையில் மீது இருந்த மது பாட்டிலை மூடி விலக்கி வைத்தாள்.

'ஏய்... என்ன பண்றே.... இன்னும் ரெண்டு பாக்கி இருக்கே...' என்றார் இதை எதிர்பாராத வெங்கடேஸ்வரலு நாக்குழற...

'இருக்கட்டும்.' என்றாள் கற்பகம் புன்னகையுடன். 'நீங்க மொதல்ல இந்த எம்.எல்.ஏவ கூப்ட்டு அந்த பையன் செஞ்சத பத்தி சொல்லுங்க. அவர் ஏதாச்சும் சொன்னார்னா நம்ம 'அய்யாவ' கூப்ட வேண்டியிருக்கும்னு சொல்லுங்க... அவர் பேர சொன்னா வாய மூடிக்கிருவான்...'

'அய்யா' என்ற வார்த்தையை கேட்டதுமே போதை கலைந்துபோக நிமிர்ந்து அமர்ந்தார் வெங்கடேஸ்வரலு. 'ஏண்டி ஒனக்கென்ன பைத்தியமா? ஒங்கய்யாவுக்கு முளுசா சொளையா குடுத்து ரெண்டு மாசம் கூட ஆவல... இந்த லட்சணத்துல இதுக்கு தனியா கறந்துருவாண்டி... நீயே அந்த எம்.எல்.ஏ கிட்ட பேசி சமாளி. சரிவரலையா அவனுக்கு ஏதாச்சும் குடுத்துடறேன், அந்த பையன் விஷயத்துல தலையிடாதீங்கன்னு சொல்லு....என்னால முடியாது... நா ரூமுக்கு போறேன்.'

விருட்டென்று இருக்கையை பின்னுக்கு தள்ளிவிட்டு எழுந்து தடுமாறியவாறு வெங்கடேஸ்வரலு தன் அறையை நோக்கி செல்ல கற்பகம் வேறு வழியின்றி மேசை மீதிருந்த தன் செல்போனை கையில் எடுத்தாள்.

********

'இப்ப என்னடா செய்யப் போறே?' என்றாள் பார்வதி எரிச்சலுடன்.

மூர்த்தி அவளுடைய கோபத்தை பொருட்படுத்தாமல் டிவியைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

'டேய் ஒன்னத்தான்...' சாதாரணமாக எந்த சூழலிலும் பதற்றப்படாமல் இருக்கும் பார்வதி எழுந்து சென்று தொலைக்காட்சி பெட்டியை அணைத்தாள்.

'இப்ப சொல்லு... என்ன நடந்திச்சி?'

மூர்த்தி கோபத்துடன் வாசனைப் பார்த்தான். 'டேய் இது ஒன் வேலைதான? வந்ததும் வராததுமா போட்டுக் குடுத்துட்டியா?'

'டேய்... அவனுக்கே நா சொல்லித்தான் விஷயம் தெரியும்.' இடைமறித்தாள் பார்வதி. 'இவ்வளவு நடந்துருக்கு, வீடு வந்து சேர்ற வரைக்கும் அவங்கிட்ட கூட சொல்லல நீ...'

'அவன் சொல்லலனா ஒனக்கு எப்படி தெரியும்?'

'அப்பவே போன் வந்துருச்சி... ஒங்க கரஸ்பாண்டண்ட் ஆஃபீஸ்லருந்து....அதான் நம்ம வீட்டு ஃபோன் நம்பர் அவங்க ரெக்கார்ட்ல இருக்கே... இப்ப சொல்லு... என்ன நடந்திச்சி? ஒங்கப்பாவுக்கு ஒடனே ஃபோன் பண்ணி சொன்னாத்தான் இந்த சனிக்கிழமையாவது வந்து சேர்வார்...'

'அவர் எதுக்கு? பைசா பொறாத விஷயம்... எல்லாம் நானே பாத்துப்பேன்...' என்றவாறு மூர்த்தி எழுந்து தன் அறையை நோக்கி செல்ல பார்வதி அவனை இடைமறித்தாள்.

'டேய்.. நீ நெனக்கறா மாதிரி இல்ல....ரிஜிஸ்தர் தபால்ல எக்ஸ்ப்ளனேஷன் லெட்டர் வருதாம்... ஒங்கப்பா நேர்ல வந்து எக்ஸ்பிளனேஷன் குடுத்து எம் பையன் இனி இப்படி செய்யமாட்டான்னு எழுதி குடுத்தாத்தான் ஒன்னெ மறுபடியும் காலேஜ்ல சேத்துக்குவாங்களாம்......'

மூர்த்தி வாய்விட்டு சிரித்தான். 'என்னது..... எக்ஸ்ப்ளனேஷன் லெட்டரா? அதுவும் அப்பா வந்தா? என்ன புருடா விடறியா? இல்ல இவன் சொல்லி குடுத்து நீ சொல்றியா?'

வாசன் அவனுடைய குற்றச்சாட்டைப் பொருட்படுத்தாமல் அன்று அவனுடைய கல்லூரியில் நடந்ததை விவரித்தான். 'இங்க பார் மூர்த்தி... அவனையும் சஸ்பெண்ட் பண்ணிருவாங்கன்னுதான் நெனைக்கேன்... ஆனா அவனுக்கு யாரோ பொலிடிஷியன் சப்போர்ட் இருக்காம். ஒன் கேஸ் அப்படியில்லை...அத்தோட நீ காலேஜ் ப்ராப்பர்ட்டிய வேற ஏதோ டேமேஜ் பண்ணிருக்கியாம்... ஃபோன்ல சொல்லியிருக்காங்க... அதனாலதான் பயமாருக்கு...'

மூர்த்தி மீண்டும் சிரித்தான். 'போடா டேய்... போடா... ஒன்னைய மாதிரின்னு நினைச்சியா...' என்றவன் தன் தாயை பார்த்தான். 'இங்க பார்மா... அப்பாவுக்கெல்லாம் ஒன்னும் சொல்ல வேணாம்.... நம்ம தெரு பசங்கள விட்டு மறுபடியும் ஒரு கலாட்டா பண்ணா எல்லா சரியாயிரும்... இரு சொல்லிட்டு வரேன்...'

பார்வதி தடுத்தும் கேளாமல் வாசலில் கிடந்த செருப்பை அணிந்துக்கொண்டு வெளியேறினான்.

'என்னடா வாசன்... இப்ப என்ன செய்யிறது?' என்றாள் பார்வதி...

வாசன் எழுந்து நின்றான். 'நீங்க கவலைப் பட்டு என்னம்மா பிரயோசனம்.... அவனா நாம சொல்றத கேக்கப் போறான்... அவன் திரும்பி வர்றதுக்குள்ள அப்பாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லிருவோம்... வாங்க...'

'இவன் திரும்பி வந்து குதிப்பானடா?'

வாசன் தன் தாயை நெருங்கி அவளுடைய தோள்களை அணைத்துக்கொண்டான். 'அதுக்கெல்லாம் பயந்தா சரி வராதும்மா.... இவன் பாட்டுக்கு அந்த பசங்களோட சேந்துக்கிட்டு மறுபடியும் ஏதாச்சும் செஞ்சான்.... இவன் கூட பொறந்த பாவத்துக்கு என்னையும் வெளியில தள்ளிருவாங்க...அப்பா வந்தாத்தான் இதுக்கு சொலுஷன்... திட்டுனா திட்டிக்கட்டும்... நீங்க வாங்க...' தன் பெற்றோர்களுடைய படுக்கையறையில் இருந்த தொலைபேசியை நோக்கி அவன் நடக்க பார்வதி வேறு வழியின்றி தன் கணவர் என்னவெல்லாம் பேசுவாரோ என்ற அச்சத்துடன் அவனை பின் தொடர்ந்தாள்.

தொடரும்...

1.12.07

நாளை நம்தே 31

அண்ணாநகர் பூங்கா. இளம் மாலை நேரம் என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது.

தன் எதிரில் அமர்ந்திருந்த ப்ரியாவை மவுனமாக பார்த்தாள் ஜோதிகா. கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீருடன் எங்கோ சூன்யத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்த அவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இவளோட கம்பேர் பண்றப்ப நம்ம அம்மா, அப்பா எவ்வளவு நல்லவங்க! அப்பா எடுத்ததுக்கொல்லாம் பயங்கரமா கோபப்படறவர்தான். நம்ம முன்னாலயே அம்மாவ கை நீட்டி அடிச்சிருக்கார். எத்தனையோ தரம்... ஆனாலும் அப்பாவுக்கு அம்மா மோல எத்தன பிரியம்னும் எத்தன தர தரம் அடிவாங்கினாலும் அம்மா அப்பாவை எந்த அளவுக்கு விரும்புறாங்கணும் நாமளே பாத்துருக்கமே. அப்பாவோட கோவம் அம்மாக்கிட்ட மாத்திரம் இல்லையே, நானும் ராஜும் கூட அவரோட கோபத்துக்கு எத்தன தரம் பலியாயிருக்கோம். ஆனாலும் அப்பாவோட கோவத்துக்கு பின்னால இருக்கற பாசத்தை எப்படி மறக்கறது?

'எனக்கு வீட்டுக்கு போறதுக்கே என்னவோ மாதிரி இருக்கு ஜோதி....'

தன் நினைவுகளில் மூழ்கியிருந்த ஜோதிகார் சட்டென்று நிமிர்ந்து தன் தோழியைப் பார்த்தாள்.

'அதனால?'

'தனியா ஏதாச்சும் ஹாஸ்டல்ல இருந்துரலாம்னு தோனுது.'

'ஹாஸ்டல் ரூமுக்கு ரெண்ட், காலேஜ் ஃபீஸ், இதுகெல்லாம் பணத்துக்கு எங்க போவே?'

'எங்கயாச்சும் வேலைக்கு போலாம்னு....'

ஜோதிகா திடுக்கிட்டு ப்ரியாவைப் பார்த்தாள். 'அப்ப காலேஜ்?'

ப்ரியா விரக்தியுடன் புன்னகைத்தாள். 'I'll drop out. வேற வழி?'

'உங்கம்மா இதுக்கு ஒத்துக்குவாங்களா?'

ப்ரியா எழுந்து நின்றாள். 'அவங்கக்கிட்ட சொன்னாத்தான?'

ஜோதிகாவும் தன் கைப்பையுடன் எழுந்தாள். 'நீ நல்லா யோசிச்சித்தான் இந்த டிசிஷனுக்கு வந்துருக்கியா ப்ரியா?'

'ஆமா.. இத விட எனக்கு வேற வழி தெரியல...'

ஜோதிகாவுக்கு தன் தோழியின் முடிவை எப்படி மாற்றுவது என தெரியாமல் குழம்பினாள். There should be some way to tackle this issue without droping out of the college... there should be... ஆனால் அது எப்படி என்பதுதான் விளங்கவில்லை.... இருவரும் மவுனமாக பூங்கா வாசலை நெருங்கினர்.

'நீ நினைக்கிற மாதிரி ஒங்க வீட்டுலருந்து வெளிய வராமயே இதுக்கு ஒரு சொலுஷன் இருக்கு ப்ரியா.' என்றாள் ஜோதிகா சட்டென்று.

ப்ரியா நின்று அவளை நோக்கி திரும்பினாள். 'என்ன?'

'அந்த அங்கிள பாத்து பேசலாம் இல்லையா? I mean ஒங்கம்மாவுக்கு தெரியாம?'

ப்ரியா கேலியுடன் அவளைப் பார்த்தாள். 'அந்த அங்கிளோட ஏய்மே நாந்தானடி? எங்கம்மா ஒரு இண்டரிம்... நா ரெடின்னு சொல்ற வரைக்கும்.'

ஜோதிகா இதை எதிர்பார்க்கவில்லை. ப்ரியாவின் தாய் தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதாக வாக்குறுதியளித்துவிட்டு மீண்டும் அவளுடைய பழைய பாதையிலேயே சென்றுக்கொண்டிருப்பதை தான் கண்டுபிடித்துவிட்டதாகவும் ஆகவே வீட்டை விட்டு வெளியேறுவதாக முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தபோது இதில் இப்படியொரு கோணம் இருக்கும் என்று நினைக்கவில்லை.

'இதவும் ஒங்கம்மாவுக்கு தெரியுமா?'

ப்ரியா படிலளிக்காமல் யோசனையில் ஆழ்ந்தாள். எதிர் திசையில் தன் வீட்டுக்கு செல்லும் பேருந்து வருவது தெரிந்தது. தன் மணிக்கட்டைப் பார்த்தாள். ஏழரை என்றது வாட்ச். திரும்பி ஜோதிகாவைப் பார்த்தாள். இவளுடன் பழகி மூன்று மாதங்கள் கூட பூர்த்தியாகாத நிலையில் இவளிடம் மனம்விட்டு பேசவேண்டும் என்று எப்படி தோன்றியது? தன்னுடைய வயதொத்த இவளால மட்டும் எப்படி பதறாமல் இந்த விஷயத்தை அணுக முடியுது? இந்த மூனு மாசத்துல காலேஜ்ல இவளுக்கு எவ்வளவெல்லாம் அவமானம் ஏற்பட்டுருக்கு. இருந்தாலும் அதுக்கெல்லாம் அசராம... அந்த ட்ரப்ள்சம் எச்.ஓ.டிய கூட டாக்ட்ஃபுல்லா ஹேண்டில் பண்ணி.... அதனாலதான் இவகிட்ட நம்ம பிரச்சினைய டிஸ்கஸ் பண்ணணும்னு தோனுச்சோ....

'தெரியல ஜோதி.... அப்படியே தெரிஞ்சாலும் அம்மா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு என்னால சொல்ல முடியல.'

ஜோதிகா ஒரு முடிவுக்கு வந்தாள். 'நா ஒன்னு சொல்லட்டுமா?' என்றாள்.

அவள் ஏற வேண்டிய பேருந்து பஸ் நிறுத்தத்திலிருந்து கிளம்புவது தெரிந்தது. ஆட்டோ புடிச்சித்தான் போணும் போலருக்கு. 'சொல்லு...'

'ஒன் ப்ளேஸ்ல நா இருந்தா இத கண்டுக்காம இருந்துரு....' ப்ரியாவின் முகத்தில் சட்டென்று தோன்றிய கோபம் ஜோதிகாவை மேலே தொடர விடாமல் தடுத்தது. ப்ரியா பதிலளிக்காமல் கிளம்பி சாலைய கடக்க முயல ஜோதிகா திடுக்கிட்டு அவளுடைய கையைப் பிடித்து நிறுத்தினாள். 'ஏய் மறுபடியும் கோச்சிக்கிட்டு போகாத... நா சொல்ல வந்தத முழுசா கேளு.'

ப்ரியா மனமில்லாமல் நின்று தன் தோழியைப் பார்த்தாள். 'சொல்லு...'

'நீ விட்ட விட்டு வர்றதுனால இந்த பிரச்சினை தீர்ந்துடப் போறதில்ல ப்ரியா. அதுவே ஒங்கம்மாவுக்கு அவங்க ரூட்ல போறதுக்கு ஈசியாயிரும்... அதனால நீ எந்த காரணத்த முன்னிட்டும் வீட்ட விட்டு வெளியேறக் கூடாது. காலேஜ்லருந்தும் ட்ராப் ஆகக் கூடாது.'

'எங்கம்மா குடுக்கற காசுல படிக்கச் சொல்றியா? அருவருப்பா இருக்குடி...' ப்ரியாவின் கண்கள் கலங்கி குரல் நடுங்கியது.

ஜோதிகாவுக்கு அவளை பார்க்கவே பாவமாக இருந்தது. அப்படியொரு தாய்க்கு இப்படியொரு மகளா? இருப்பினும் ப்ரியாவின் தற்போதைய தேவை கல்லூரி படிப்பை முடிப்பது. அதற்கு அவள் தொடர்ந்து வீட்டில் இருப்பது அவசியம். ' இங்க பார் ப்ரியா. You have to put up with this just for three more years... அதுக்குள்ள ஒங்கம்மாவும் சேஞ்ச் ஆயிருவாங்கன்னுதான் நா நெனக்கேன்... இல்லையா, இப்ப டிசைட் பண்ணாமாதிரி தனியா வந்துரு....'

'சொல்றது ஈசிடி... அனுபவிச்சி பாத்தாத்தான் தெரியும்... இப்பல்லாம் எங்கம்மாவ பாக்கறதுக்கே பிடிக்கல... இந்த லட்சணத்துல ஒரே வீட்ல....'

ஜோதிகா வாட்சைப் பார்த்தாள். திடுக்கிட்டாள். நேரம் போனதே தெரியாமல்.... இப்ப பொறப்பட்டா கூட வீடு போய் சேர ஒன்பது மணியாயிறும்.

'சாரி ப்ரியா.... இப்ப கெளம்புனாத்தான் ஒன்பது மணிக்குள்ள வீட்டுக்கு போய் சேர முடியும்.... நீ டிஸ்டர்ப் ஆகாம வீட்டுக்கு போ... நாளைக்கி பேசிக்கலாம்....'

தன்னுடைய பதிலுக்கு காத்திராமல் வழியில் சென்றுக்கொண்டிருந்த ஒரு ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி ஜோதிகா ஏறிக்கொள்ள ப்ரியா சாலையை கடந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள்...

தொடரும்....