25.9.06

சூரியன் 126

மாதவன் வங்கியின் இயக்குனர்கள் கூட்டம் முடிவுற்றதும் நேரே தன்னுடைய அறைக்கு திரும்பி கடந்த ஒரு மணி நேரமாக வங்கியின் கடந்த மூன்றாண்டு கால பொருளாதார அறிக்கைகளை ஆராய்ந்துக்கொண்டிருந்தார்.

தனக்கு முன்பு இருந்த முதல்வர் வர்த்தகம் செய்வதில் படு சூரராக இருந்திருக்கிறார் என்பது அறிக்கையைப் பார்த்தாலே தெரிந்தது. அதற்கு ஈடாக வர்த்தகத்தை நடத்திச் செல்வதே சிரமமாக இருக்கும் போலிருக்கிறதே என்று நினைத்தார்.

அதுதான் தன்னுடைய முதல் இலக்கு என்று குறித்துக்கொண்டார். நல்ல வேளையாக அவர் பதவியேற்ற நேரம் புது நிதியாண்டு துவங்கி நாற்பத்தைந்து நாட்களே கடந்திருந்தன. எதிர் வரும் வருடத்திற்கென முந்தைய முதல்வர் குறித்திருந்த இலக்கை நிதியாண்டின் அரையாண்டிற்குள்ளாகவே அடைந்தால் மட்டுமே அவருடைய கடந்த வருட வெற்றியை தம்மால் முறியடிக்க முடியும் என்று நினைத்தார்.

அடுத்து அதற்கு தாம் என்னென்ன செய்யவேண்டும் என்று சிந்திக்கலானார்.

முதல் முதலாக அவருக்கு தேவைப்பட்டது தனக்கு வங்கியின் வர்த்தகத்தைக் குறித்து உடனடியான (Instant)  அதே சமயம் நம்பத் தகுந்த (Dependable) புள்ளி விவரங்கள்..

அவருக்கு முன்னாலிருந்த அறிக்கைகளின் மென் நகல்கள் (Soft copy) கிடைத்தால் அதை தன்னுடைய மடிக்கணினியில் சேர்த்துக்கொள்ளலாமே என்று நினைத்த மாதவான் காரியதரிசி சுபோத்தை இண்டர்காமில் அழைத்தார்.

அவருடைய தேவையை கேட்ட சுபோத் சங்கடத்துடன் நெளிந்தான்.

‘என்ன சுபோத்.. If you don’t have it tell me so.. Don’t feel embarrassed..’

சுபோத் தயக்கத்துடன், ‘Yes Sir, I don’t have it.’ என்றான்.

‘Will anyone in the Bank have it? EDP? Or Accounts?’

‘No Sir.. Our computerisation is not uptodate. We still collect data either over phone or by emails from the branches.’

‘Phones and emails?’ என்று சிரித்தார் மாதவன். ‘Which century are you living in? You don’t have a centralised banking software where the data is available at HO at the day-end?’

‘No Sir.. We don’t have.. We used to gather data through the weekly Friday Statements received from the branches, tabulate it  in the format required by our earlier Chairman and present to him. He never required that in softcopy.. That’s why..’

மாதவன் பதில் பேசாமல் அவனையே பார்த்தார் சிறிது நேரம்.. ‘OK that’s it then.. No use in worrying about something which is not there.. Well.. you do one thing.. take all these reports.. feed it in your PC.. prepare a spread sheet and give it me in a floppy..’

சுபோத்துக்கு அவர் கூறியது பாதிதான் புரிந்தது என்றாலும் சரி, சரி என்று தலையை அசைத்துவிட்டு அவருடைய மேசையின் மீதிருந்த அறிக்கைகள் அடங்கிய கோப்பை எடுத்துக்கொண்டு நகர மாதவன் அவனை தடுத்து நிறுத்தினார்.

‘Subodh, do we have central Server in our building which anyone in the building could access?’

சுபோத் ஒன்றும் விளங்காமல் விழிக்க மாதவன் வாய்விட்டுச் சிரித்தார். முதலில் இவனை மாற்ற வேண்டும்..

‘It appears you are hearing this concept for the first time in your life.. Am I right Subodh?’

சுபோத் பரிதாபமாக தலையை அசைக்க.. ‘சரி நீங்க போய் நான் செய்த காரியத்த செஞ்சிக்கிட்டு வாங்க.. And find out whether anyone who has some knowledge about computers in this building and ask him to come to my cabin.. Fast..’

‘Sir, shall I send the head of EDP?’

சரி என்று மாதவன் தலையை அசைக்க தப்பித்தால் போதும் என்று சுபோத் தலைமறைவானான்.

சற்று நேரத்தில் வந்து சேர்ந்த EDP தலைவரைப் பார்த்தான். முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன்.

மாதவன் சற்று முன் சுபோத்திடம் கேட்ட அதே கேள்விகளை அவரிடமும் கேட்டார்.

அவர் தயக்கத்துடன், ‘Sir I might require at least ten minutes to explain what we do here. Could you spare Sir?’ என மாதவன் தன் அருகில் இருந்த இருக்கைகளில் ஒன்றைக் காண்பித்தார்.

அந்த இளைஞர் அடுத்த பத்து நிமிடங்களில் சுருக்கமாக, அதே சமயம் கோர்வையாக வங்கியில் இருந்த கணினி மயமாக்கலை விவரித்த விதம் மாதவனுக்கு மிகவும் பிடித்தது.. Poor Guy.. He deserves a break.. என்று மனதுக்குள் நினைத்தார்.

‘OK Mr...?’

‘Siva Sir.. Sivaramakrishnan.. I am a MCA.. Banking Officer only.. But just like Fernando Sir.. I took up to learing computer myself.. I did my MCA through distance education..’

அவர் கேட்காமலே வந்து விழுந்த விவரங்களைக் கேட்ட மாதவன், ‘You said something about one Mr.Fernando.. Is he the Principal of our Training College?’

‘Yes Sir.. அவரே தான்.. சீனியர் லெவல்ல இருக்கற எக்ஸ்க்யூட்டிவ்ஸ்ல அவர் மட்டும் தான் இதுல இண்ட்ரஸ்ட் இருக்கறவர்.. ஆனால் அவர் எவ்வளவு முயற்சி பண்ணியும் மேலருக்கற எக்ஸ்க்யூட்டிவ்ஸ் யாருமே சப்போர்ட் பண்ணாததுனால மேற்கொண்டு ஒன்னும் செய்ய முடியல சார்..’

மாதவனுக்கு முழுவதும் புரிந்தது.. So.. that’s where I should start.. Carryout massive computerisation.. That’s the need of the hour.. I should first start with the HO..

தன் எதிரில் நின்ற இளைஞரைப் பார்த்தார்.. அவருடைய முகத்திலிருந்த எதிர்பார்ப்பு மாதவனுக்கு புரிந்தது.. இவராவது தன்னுடைய அபிலாஷைகளை நிறைவேற்றி வைப்பாரா என்ற அந்த எதிர்பார்ப்பை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானித்தார்.

‘ஓக்கே.. சிவா.. I am going to give you a free hand.. If you want to take the help of Mr.Fernando.. go to the Training College and sit with him.. I will give you two weeks.. Come back with a comprehensive, cost effective project to set up a hundred node LAN in our building.. We should be able to start with the automation of at least ten to fifteen percent of our operation in this building.. Find out whether any suitable software is available in the market and give me the total cost to set up such a system in our building..’

அவர் பேசப் பேச சிவராமகிருஷ்ணனின் முகத்தில் ஏற்பட்ட பிரகாசம் அவரையும் தொற்றிக்கொள்ள புன்னகையுடன் எழுந்து சென்று அவரைத் தோளில் தட்டிக்கொடுத்து.. ‘Go ahead.. But keep this secret.. No one other than Mr.Fernando should know anything about this assignment.. Is that clear?’ என்றார்.

‘Yes Sir.. I will be careful Sir..’ என்றவாறு மகிழ்ச்சியுடன் அவர் விடைபெற்று செல்ல.. Yes.. At least I could do something positive today.. after a dreadful day... என்றவாறு தன் இருக்கைக்கு திரும்பி சட்டென்று நினைவுக்கு வந்தவராய் தன்னுடைய செல்qபோனை எடுத்து தன் மகளுக்கு டயல் செய்தார்..

****

சோமசுந்தரத்தின் ராஜிநாமாவை தலைமையகத்திலிருந்த தன்னுடைய நண்பர் வழியாக கேள்விப்பட்ட பாபு சுரேஷ் ஒரு நிமிடம் தன்னையே நம்பமுடியாமல் தன்னுடைய செல்qபோன் திரையைப் பார்த்தார், ‘என்ன சாம் சொல்றீங்க? ஏன் என்ன காரணம்?’ என்றார்..

‘சரியா தெரியல சார்.. போர்ட் மீட்டிங் முடிஞ்சி வெளிய வந்த நம்ம ஏ.ஜி.எம் தான் சொன்னார்.  சார் போர்ட்லருந்து ரிட்டையர் ஆவறதுக்கு இன்னும் ஆறுமாசம் இருக்கற சமயத்துல எதுக்கு திடீர்னு இந்த டிசிஷன்னு யாருக்குமே புரியல.. அதான் ஒங்களுக்கு ஏதாச்சும் தெரியுமான்னு கேக்கலாம்னுதான் கூப்ட்டேன்.. இப்பத்தான் தெரியுது ஒங்களுக்கும் இது தெரியாதுன்னு.. வச்சிடறேன் சார்..’

தான் அமர்ந்திருந்த சோஃபாவில் இருந்து எழுந்து ஹாலில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தார். அவருடைய மனைவியும் மகளும் திருமண பர்சேசுக்காக சென்றிருக்கவே அமைதியாய் இருந்த வீட்டில் அவரால் நிதானமாக சிந்திக்க முடிந்தது.

சோமசுந்தரத்தின் ராஜிநாமாவின் பின்னால் என்ன இருக்கிறது? இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரை சந்தித்தபோதுகூட மனிதர் இதைப் பற்றி கோடிட்டுக்கூட காட்டவில்லையே..

அப்படியொரு எண்ணம் அவருக்கு இருந்திருந்தால் எதற்காக இன்று காலையில் தன்னை மனித வள இலாக்காவிற்கு தலைவராக்க வேண்டும்?

எங்கயோ இடிக்குதே..

இது ஒருவேளை அந்த நாடாருடைய வேலையாக இருக்குமோ.. இருக்கும்.. காலையில் சேர்மனின் காபினில் வைத்து டாக்டர் தன்னை பரிந்துரைத்தபோதே அவருடைய முகம் முற்றிலுமாக மாறிப்போனதை கவனிக்க தவறவில்லை அவர்..

அவருடைய வேலையாகத்தான் இருக்கும். ஒருவேளை டாக்டருடைய ஆட்களை சேர்க்கும் திட்டம் அவருக்கு தெரிந்திருக்குமோ..

டாக்டர் அவரைக் கலந்தாலோசிக்காமலா இந்த திட்டத்தை வகுத்திருப்பார்? இருக்காது.. அவர் தலைகீழாக நின்றாலும், எத்தனைத்தான் ரகசியமாக வைத்திருந்தாலும் அந்த நாடாருடைய கழுகுக் கண்களிலிருந்து எதுவுமே தப்பாது என்று வங்கியின் எல்லா அதிகாரிகளுக்கும் தெரிந்துதானிருந்தது..

ஆகவே அது காரணமாயிருக்க முடியாது..

வேறென்ன?

சை.. இன்னும் சற்று நேரம் அலுவலகத்திலேயே இருந்திருக்கலாம். அவசரப்பட்டு கிளம்பி வந்தது தவறாகப் போய்விட்டது..

சோமசுந்தரம்தான் தன்னுடைய பாதுகாவலர் என்பது அவருக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது. இப்போது அவர் இயக்குனர் குழுவில் இல்லாதது தம்மை எந்தவிதத்தில் பாதிக்கப் போகிறதோ என்று நினைத்து கலங்கினார் பாபு சுரேஷ்..

நான்கைந்து வருடங்களுக்கு முன் சோமசுந்தரத்தின் மருத்துவமனைக்கு அவர் நியதிகளை மீறி கடனளித்த விவரத்தை, ஏற்கனவே ரிசர்வ் வங்கி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்த விவரத்தை, மீண்டும் ஆராய்ந்து தன் மீது பாய்வார்களோ என்ற அச்சம் அவரை வெகுவாக கலக்க.. சோமசுந்தரத்தை தொலைப்பேசியில் அழைத்தாலென்ன என்ற ஆலோசனையுடன் ஹாலின் மறுகோடியிலிருந்த தொலைப்பேசியை நோக்கி நடந்தார்..

அதற்கெனவே காத்திருந்ததுபோல தொலைப்பேசி ஒலிக்க பதற்றத்துடன் சென்று எடுத்தார். ‘என்ன சம்பந்தி இந்த நேரத்துல வீட்ல இருக்கீங்க?’ என்ற குரல் அவரை திடுக்கிட வைத்தது..

சமாளித்துக்கொண்டு, ‘சொல்லுங்க சம்பந்தி.. நான் இன்னையிலருந்து ஒரு வாரத்துக்கு லீவ் போட்டுருக்கேன்.. கல்யாண பர்சேசெல்லாம் இருக்கில்லையா, அதான்.. சொல்லுங்க..’ என்றார்..

‘அவசரமா ஒன்னுமில்ல.. ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.. அதான் ஒங்கள கூப்ட்டேன்..’

இதென்னடா சோதனை என்று நினைத்த பாபு சுரேஷ்.. ‘என்ன சொல்லுங்க?’ என்றார்.

‘ஒங்க பேங்க பத்தி ஒரு நியூஸ் பேப்பர் சைட்ல வந்திருக்காம். என் பையந்தான் ஃபோன் பண்ணி சொன்னான்.. அதான் ஒங்களுக்கு சொல்லலாம்னு கூப்ட்டேன்.. யாரோ சோமசுந்தரமாமே ஒங்க போர்ட் மெம்பராம்.. ஒரு ஃபைனான்ஸ் கம்பெனியில லோன் வாங்கிட்டு கட்டாமயே இருக்காராம்..’

ஓ! அதான் விஷயமா? அவருக்கும் அந்த விஷயம் தெரிந்துதானிருந்தது.. ஏதோ ஒரு கடனை அடைக்கத்தான் புதிதாய் பணிக்கு ஆட்களை சேர்க்கும் திட்டத்தைக் கொண்டுவருவதாக சோமசுந்தரம் தன்னிடம் கூறியது நினைவுக்கு வர.. இதுதான் அதுவா?

‘சரிங்க சம்பந்தி.. இன்ஃபர்மேஷனுக்கு ரொம்ப நன்றி..’ என்றவர் உடனே இணைப்பைத் துண்டித்தால் நன்றாயிருக்காதே என்று நினைத்து, ‘கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது..?’ என்றார்..

தொடரும்..


2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

//திங்கள்,புதன்,வெள்ளியில் சூரியன்
உதிக்கும்//

இன்று புதன் இரவு 8=15

"வார்த்தை தவறிவிட்டாய்-கண்ணம்மா
மார்பு துடிக்குதடி...."-பாரதியார்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

"வார்த்தை தவறிவிட்டாய்"//

நான் சொன்ன டைம் ஷெட்யூல் 1.10.06 முதல்தான்..:)

நாளை சூரியன் உதிக்கும்..