கணினி முன் அமர்ந்திருந்த பரத்தைச் சுற்றிலும் அவனுடைய நண்பர்கள்....
'என்னடா இன்னுமா டவுன்லோட் ஆவுது...?' என்றான் ஒருவன்...
'பின்னே... அண்ணா யூனிவர்சிட்டின்னா சும்மாவா... எவ்வளவு இன்ஸ்ட்ரக்ஷன் இருக்கும்? பெரிய ஃபைலா இருக்கும் பாரேன்.. அதான் இவ்வளவு நேரம்....' என்றான் இன்னொருவன்...
'அடப் போடா.. என்ன இன்ஸ்டரக்ஷன் இருக்கப் போவுது பெருசா... நமக்கெல்லாம் கெடைக்கப் போறதில்ல... எதுக்கு இதையெல்லாம் டவுன்லோட் பண்ணிக்கிட்டு..' என்றான் மற்றொருவன்...
அவர்கள் கூறுவதைப் பொருட்படுத்தாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர விதிக்கப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நுழைவு விண்ணப்பம் அடங்கிய கோப்பை இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்வதில் முனைந்திருந்தான் பரத்...
ஒருவழியாக அடுத்த சில நிமிடங்களில் 'download complete' என்ற அறிவிப்பு திரையில் தோன்ற.... 'சக்சஸ்...' என்று ஒருவன் முழங்க எல்லோரும் கரவொலி எழுப்பி ஆரவாரித்தனர்...
நல்லவேளையாக பரத்தின் தந்தை வீட்டில் இல்லை...
பரத் தரவிறக்கம் செய்த கோப்பை அச்செடுத்துக்கொண்டு தன்னுடைய படுக்கையறையில் குழுமியிருந்த நண்பர்களை நோக்கி திரும்பினான்.
'என்னடா இவ்வளவு பெருசா இருக்கு... அப்ளிகேஷனும் சேந்து இருக்கா?' என்ற நண்பனைப் பார்த்து புன்னகைத்தான்..
'பின்னே... அண்ணா யூனிவர்சிட்டின்னா சும்மாவா?' என்றவன் விலா எலும்பில் இடித்தான் அவனுடைய நண்பர்களுள் ஒருவன். 'டேய் இதையே பத்து தடவ சொல்லிட்டே... மொதல்ல ஒனக்கு சீட் கிடைக்குதான்னு பாப்பம்... அப்புறமா அண்ணா யூனிவர்சிட்டிய பத்தி பீத்திக்கோ..'
பரத் உதடுகளில் தவழ்ந்த புன்னகையுடன் தன்னுடைய நண்பர்களை 'சும்மாருங்கடா...' என்று உரிமையுடன் அதட்டினான்... உடனே எல்லோரும் வாயை மூடிக்கொண்டனர்... பரத் மீது அவர்களுக்கு அத்தனை அன்பு, மதிப்பு.. 'நா இப்ப ஒவ்வொரு கண்டிஷனா படிக்கறேன்.. கேளுங்க...அப்புறமா என்ன பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்லாம்... என்ன படிக்கவா?' என்றான்...
சரி என்பதுபோல் தலையை அசைத்த நண்பர்கள் சிலர் அவனுடைய படுக்கையிலும் வேறு சிலர் அப்படியே தரையிலும் அமர்ந்தனர்...
பரத் தொண்டையை கனைத்துக்கொண்டு தன் கையிலிருந்ததிலிருந்து வாசிக்க துவங்கினான்...
துவக்கத்திலிருந்த பொது நியதிகளை மேலெழுந்த வாரியாக படித்த பரத் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு தன்னுடைய நண்பர்களைப் பார்த்தான். 'டேய்... இப்பத்தான் மெய்ன் பாய்ண்டுக்கு வரோம்... கேர்ஃபுல்லா கேளுங்க...'
'படி.. கேக்கறோம்..' என்றான் கூட்டத்திலிருந்து ஒருவன்..
'இது யூனிவர்சிட்டியிலருக்கற அட்மிஷன் கேட்டகரிய (category) பத்தி...
முதல் கேட்டகரி: கவர்ன்மெண்ட் காலேஜ்.. அப்புறம் கவர்ன்மெண்ட் ஏய்டட் காலேஜ்... அதாண்டா மெட்றாஸ், அப்புறம் சேலம், கோயம்புத்தூர், திருச்சிலருக்கற மத்த கவர்ன்மெண்ட் காலேஜுங்க...
ரெண்டாவது கேட்டகரி: இதுல முதலாவது.. கவர்ன்மெண்ட் எய்டட் காலேஜஸ்லருக்கற செல்ஃப் சப்போர்ட்டிங் கோர்சஸ்.... செல்ஃ ஃபைனான்ஸ் காலேஜ்லருக்கற பேமெண்ட் சீட் மாதிரி போலருக்கு...
இதுலயே ரெண்டாவது... நமக்கெல்லாம் சீட் கிடைக்கப் போற செல்ஃப் பைனான்ஸ் காலேஜஸ்... இதுலயும் ஃப்ரீ சீட்டும் இருக்கும்... பேமெண்ட் சீட்டும் இருக்கும்...
'டேய்.. பரத்.. அப்ப மேனேஜ்மெண்ட் கோட்டாங்கறது?' என்றான் ஒருவன்...
பரத் அவனைப் பார்த்தான்... அவன்தான் அந்த கூட்டத்திலேயே செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தவன்... அவனுக்கு அவனுடைய கவலை!
'டேய்... அது இதுல வராது...' என்றான் பரத்.. 'சாதாரணமா செல்ஃப் பைனான்ஸ் காலேஜ்காரங்க.. ஒரு பெர்சண்டேஜ் சீட்டுங்கள மேனேஜ்மெண்ட் கோட்டாவா வச்சிக்கிட்டு மத்தத அண்ணா யூனிவர்சிட்டி நடத்தற கவுன்சிலிங்குக்கு சரண்டர் பண்ணிருவாங்க... அப்படி சரண்டர் பண்ண சீட்டுங்கதான் கவுன்சிலிங்குக்கு போற எங்கள மாதிரி பசங்களுக்கு கிடைக்கும்.. ஒன்னெ மாதிரி பணக்கார பசங்களுக்குத்தான் அந்த மேனேஜ்மெண்ட் கோட்டா... பி.ஈ சீட்டுக்கு கொறஞ்சது அஞ்சி லட்சமாவது கறந்துருவாங்க... சரியா?'
கேட்டவனுடைய முகம் தொங்கிப் போனது...'டேய் கிண்டலடிக்காதீங்க... எனக்கு இருக்கற மார்க்குக்கு அதவிட்டா வேற வழியில்லடா... எங்கப்பா கிட்ட ஏற்கனவே சொல்லியாச்சு....'
'டேய் தெரியாமத்தான் கேக்கேன்... ப்ளஸ் டூவுல நீ பாசானதே அபூர்வம்... எண்ட்ரன்ஸ்ல நம்ம க்ரூப்லயே நீதான் கொறச்சல் மார்க் வாங்கியிருக்கெ... இதுல பி.ஈ.. ஒன்னால படிக்க முடியும்னு நினைக்கே...' என்றான் ஒருவன் நக்கலுடன்..
பரத் அவனை முறைத்தான்... 'டேய்... don't be too smart... நாமல்லாம் ஃப்ரெண்ட்ஸ்... நமக்குள்ள இந்த மாதிரி பேச்செல்லாம் வேணாம்...'
'ஆமாடா.. பரத் வாங்கியிருக்கற மார்க்குக்கு முதல் நாளே கவுன்சிலிங்குக்கு இன்விடேஷன் வந்துரும்... அவன் நெனச்சா அண்ணாவிலயே வாங்கிருவான்.. இருந்தாலும் நமக்காக... நமக்கு எங்க கிடைக்குதோ அங்கயே சேரப்போறேன்னு அவங்கப்பாக்கிட்ட பெர்மிஷன் வாங்கியிருக்கான்... அவனே அப்படி நினைக்கறப்போ நாம இவனெ கிண்டலடிக்கறது சரியில்லடா... பேசாம பரத் சொல்றதெ கேப்போம்...' கூட்டத்திலிருந்த ஒருவன் பரத்தைப் பார்த்தான்... 'நீ மேல படி பரத்... இவன் கிடக்கான்..'
பரத் தொடர்ந்தான்...
'சரிடா.. .இப்ப அட்மிஷன் எப்படி நடக்குது, இதுல எவ்வளவு ரிசர்வேஷன் கோட்டா இருக்கு யார், யார் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கணும் படிக்கறேன்.....'
ஒருவன் இடைமறித்தான்... 'இது வேறயா... கொடுமைடா... நாமல்லாம் ராத்திரி பகல் பாக்காம படிக்கோம்... நம்மளவிட கொறச்சலா மார்க் வாங்கிட்டு... பிசி, எம்பிசின்னு சொல்லிக்கிட்டு இவனுங்களுக்கு நல்ல காலேஜஸ்ல கிடைச்சிரும்...'
பரத் அவனை முறைத்தான்... 'டேய்... மறுபடியும் எல்லாருக்கும் சொல்றேன்.. நம்ம க்ரூப்புல எஸ்.டி, பிசி, எம்பிசின்னு எல்லாரும் இருக்கோம்... ஒன்னெய மாதிரி எஃபி.சியும் இருக்கோம்... அதனால பேசறப்ப ஜாக்கிரதையா பேசு...'
'அடப் போடா என் கஷ்டம் எனக்குத்தான தெரியும்?' என்றவனை கூட்டமே முறைத்தது...
'டேய் வேணாம்... பூணூல் புத்திய காட்டாத.. சொல்லிட்டேன்...' என்றான் கூட்டத்தில் ஒருவன்...
பரத் குறுக்கிட்டான்... 'டேய், அவனுக்கு சொன்னதுதான் ஒங்களுக்கும்.. .ஃப்ரென்ஷிப் நடுவுல இந்த பாழாப்போன ஜாதி வர வேணாம்.... இதனாலதானடா நா இப்படி அனாதையா நிக்கேன்...'
நண்பர்கள் குழு சட்டென்று அமைதியாகிப் போனது... பரத்தின் பெற்றோர்களுடைய கலப்பு திருமணத்தைப் பற்றியும் அவனுடைய தாயின் பெற்றோர் அவரை புறக்கணித்ததைப் பற்றியும் ஏற்கனவே கேட்டிருந்ததால் எல்லோரும் இந்த பிரச்சினையை கூட்டத்தில் எழுப்பிய இரு நண்பர்களையும் பார்த்து முறைத்தனர்... அதில் ஒருவன்... 'ஆமாடா.. பரத் சொல்றா மாதிரி நமக்குள்ள இந்த பிரச்சினை வேணாம்... நம்மால சால்வ் பண்ண முடியாத பிரச்சினை இது... we will have to accept the reality.... பரத் சாரிடா... We never thought this would hurt your sentiments...'
பரத் புன்னகையுடன் தன் நண்பர்களைப் பார்த்தான்... 'டேய்... இதனாலயே எனக்கு எங்கப்பா, அம்மாமேல மதிப்பு ஜாஸ்தி... அப்பவே அவங்க இந்த ஆங்கிள்ல யோசிச்சிருக்கறப்ப.. நம்மால ஏண்டா அந்த மாதிரி திங்க் பண்ண முடியாது.... இது நம்ம தலைமுறையில தீர்க்க முடியாத விஷயம்... Let us forget about this and go ahead... கொஞ்ச நேரம் சும்மா இருந்தீங்கன்னா... இத படிச்சி முடிச்சிட்டு அப்புறம் என்ன பண்லாம்னு டிசைட் பண்லாம்.. என்ன படிக்கவா?'
'ஆமாம்.. நீ சொல்றதுதான் சரி... 'என்றனர் கோரசாக அனைவரும்...
'தென்.. ஒக்கே... லிசன்..' என்றவாறு தன் கையிலிருந்த நகலில் இருந்து படிக்கலானான் பரத்...
மினிமம் எலிஜிபில் மார்க்...
எஸ்.சி/எஸ்.டி.. பாஸ் பண்ணா போறும்... இங்க யாருக்கும் இது பொருந்தாதுன்னு நினைக்கேன்...
பிசி: 55% பர்சண்ட் இருக்கணும். இதுல இங்க எத்தன பேர்றா?' பரபரவென்று அறையில் உயர்ந்த கரங்களை எண்ணினான்.... 'பத்துக்கு மேல இருக்கமா? சரி... அடுத்தது..
எம்பிசி: 50% பர்சண்ட். இதுலயும் இருக்கம் இல்லே? அங்கொன்றும் இங்கொன்றுமாக கரங்கள் உயர்ந்தன... 'இவ்வளவுதானா? இதுல என்னையும் சேத்துக்கறேன்...'
'நீயா... டேய்... வெளையாடாத... இது ஒனக்கெல்லாம் இல்லை... எங்கள மாதிரி வீக் பசங்களுக்கு...'
கிண்டலடித்தவனைப் பார்த்து புன்னகைத்தான் பரத்...
'டேய்.. என்ன நக்கலா? தோருக்கானே பூணூல்... அவனுங்களுக்குன்னு ஒரு கட் ஆஃப் மார்க் வச்சிருந்தா பரத்துக்கு அதுக்கு மேல இருக்கு... ஏதோ அவன் நல்ல கொணம்... நாம சேரப்போற காலேஜ்லயே சேரப் போறேன்னு நிக்கிறான்...' என்றான் பரத்தின் நெருங்கிய நண்பன் கனேசன்....
'பரவால்லைடா கணேஷ்... சும்மா லெக் புல்லிங்தானே.. I don't mind...' என்றவாறு மேலே தொடர்ந்தான் பரத்....
தொடரும்...
4 comments:
//பரத் வாங்கியிருக்கும் மார்க்கிற்கு முதல் நாளிலேயே கவுன்ஸலிங் வந்துடும்//
கவுன்ஸலிங்பொழுதே கல்லூரிய தேர்வு செய்யனுமே..நண்பர்கள் மார்க்கிற்குக் கிடைக்கக் கூடிய கல்லூரிய
எப்படி guess பண்ணி இவன் இப்பொழுதே சேரமுடியும்?
வாங்க ஜி!
நண்பர்கள் மார்க்கிற்குக் கிடைக்கக் கூடிய கல்லூரிய
எப்படி guess பண்ணி இவன் இப்பொழுதே சேரமுடியும்...//
உண்மைதான்... இதற்கு அடுத்து வரும் சில பதிவுகளில் விடை கிடைக்கும் :))
"bharath thambi intelligentelly" ellaiya saarval (Thanavelu , gemini padathula ippadi oru dialogue vandha niyabagam)
வாங்க ஆணி,
Thanavelu , gemini padathula ippadi oru dialogue vandha niyabagam//
என்ன சொல்ல வறீங்கன்னு புரியலை...
கொஞ்சம் விளக்குங்களேன்..
Post a Comment