ராம்குமார் குடியிருப்புக்குள் நுழைந்ததும் அமைதியாக இருந்த டி.வி. பெட்டியை பார்த்தார்.
'ஜோதி இன்னும் வரலையா?' என்றார்.
'இல்லைங்க.' சமையலறையிலிருந்து வந்தது லதாவின் குரல்.
'எட்டு மணிக்கு மேல ஆவுதே?'
லதா படபடப்புடன் வெளியில் வந்தார். 'ஏன் சொல்ல மாட்டீங்க? அவ அன்னைக்கி காலேஜ் பஸ்சுக்கு பணம் கட்டிருங்கப்பான்னு கெஞ்சுனப்போ என்ன சொன்னீங்க?'
கடுகடுவென்றிருந்த மனைவியின் முகத்தைப் பார்த்ததுமே, 'சரி, சரி.... கத்தாதே... எதுக்கு வீணா மாசம் ஆயிரம் ரூபாவ கட்டணும்னு பார்த்தேன்.'
'என்ன சொல்றீங்க நீங்க? இங்கருந்து ஒரு பஸ் ஸ்டேஷன் வரைக்கும். அங்கருந்து செண்ட்ரல் வரை ஒரு ட்ரெய்ன், அப்புறம் பார்க் வரைக்கும் போயி வேறொரு ட்ரெய்ன். மறுபடியும் ஸ்டேஷன்லருந்து பஸ்... டெய்லி எப்படியும் அம்பதுக்கு மேல ஆவும். இதுல ஏதாவது ஒரு பஸ்ச மிஸ் பண்ணா போறும். காலேஜுக்கு லீவ் போட வேண்டியதுதான். டெய்லி அம்பதுன்னாலும் மாசம் ஆயிரம் ஆயிரும். நீங்களும் ஒங்க கணக்கும்...' லதாவின் குரலில் கோபத்தை விட சலிப்பே மேலோங்கியிருந்தது. இந்த மனுசனுக்கு வாக்கப்பட்டு நாம அனுபவிக்கறது போறாதுன்னு இப்ப பிள்ளைங்களும்... ச்சே...
'சரி... நாளைக்கே காலேஜ் பஸ்சுக்கு கட்டிறலாம்.' என்று இறங்கி வந்த ராம்குமார் தன் மனைவியை பார்த்தார். 'இவ கிட்டதான் மொபைல் இருக்குல்லே... லேட்டாயிருச்சின்னு போன் பண்ணலாம் இல்ல?'
'அதான் எனக்கும் புரியலீங்க. காலேஜ் போய் சேர்ந்ததும் ஃபோன் பண்ணுடின்னு சொல்லி விட்டேன். அதுகூட பண்ணல...' என்றார் லதா கவலையுடன்.
'நான் வேணும்னா ஸ்டேஷன் வரைக்கும் போய் பார்க்கவா?'
'வேணாங்க... அப்புறம் ஒங்கள வேற நா தேடிக்கிட்டுருக்கணும்...ராஜ் இப்ப வந்துருவான். அவனெ வேணும்னா போய் பார்த்துட்டு வாடான்னு அனுப்புவம்.'
வாசலில் மணி அடித்தது.
'ஜோதிதானோ என்னவோ... கதவ திறங்க.'
ராம் கதவை திறந்ததும் வேகமாக உள்ளே நுழைந்த ஜோதிகா காலிலிருந்து காலனிகளை மட்டும் உதறியெறிந்துவிட்டு தன்னுடைய அறைக்குள் ஓடிப்போய் கட்டிலில் விழுந்து அழுவதைப் பார்த்த ராம்குமார் திகைப்புடன் தன் மனைவியைப் பார்த்தார். போய் என்னன்னு கேளு... என்பதுபோல் கண்சாடை செய்தார்.
*********
'என்ன நடந்தது பரத். நிதானமா பதட்டப்படாம சொல்லு.' என்றார் ராஜசேகர்.
பரத் அன்று காலையில் கல்லூரியில் நடந்தவற்றை விவரித்தான்.
***
அன்று காலை வரவேற்பு கூட்டத்தின் இறுதியில் 'காலேஜுக்கு மோட்டர் சைக்கிள்ல வந்தவங்கள தவிர மத்த ஸ்டூடன்ஸ் அவங்கவங்க பேட்ஜில போட்டுருக்கற ரூமுக்கு போலாம்.' என்ற அறிவுப்பு விடுக்கப்பட்டதும் பரத் திரும்பி தன் நண்பன் வாசனைப் பார்த்தான்.
'எதுக்கு வாசன் எங்கள நிக்க சொல்றாங்க?'
'ஒருவேளை ஒங்க வண்டி நம்பர குறிச்சிக்கிறதுக்காக இருக்குமோ என்னவோ? நீ குடுத்துட்டு வா.. நா க்ளாசுக்கு போறேன்.'
ஹாலிலிருந்த மாணவர்கள் அவரவர் வகுப்புகளுக்கு செல்ல சுமார் ஐம்பது மாணவ, மாணவியர் மேடையில் நின்றிருந்தவரைப் பார்த்தனர். அவர் மேடையிலிருந்து இறங்கி வந்து, 'எல்லாரும் பக்கத்துல வாங்க.' என்றார் அதிகாரத்துடன்.
அடுத்த சில நொடிகளில் ஹாலில் இருந்த மாணவ, மாணவியர்கள் அவரை நெருங்கினர்.
'ஒங்க வண்டி சாவிய அந்த பெட்டியில போட்டுட்டு க்ளாசுக்கு போங்க.' என்றவாறு அவர் அருகிலிருந்த மேசையிலிருந்த ஒரு பெட்டியைக் காட்ட குழுமியிருந்த மாணவ கும்பல் திகைப்புடன் ஒவ்வொருவரையும் பார்த்தனர்.
'எதுக்கு?' என்ற குரல் வந்த திசையை நோக்கி, 'யார் மேன் அது எதிர் கேள்வி கேக்கறது?' என்று அறிவிப்பு விடுத்தவர் கோபத்துடன் திரும்ப மாணவர் கும்பல் அச்சத்துடன் அவரையே பார்த்தது. 'அவங்கவங்க வண்டி நம்பர ஒரு பேப்பர்ல எழுதி சாவியோட சேர்த்து கட்டிட்டு போட்டுட்டு க்ளாசுக்கு போயிரணும். நாளைக்கி ஒங்க பேரண்ட்ஸ்கிட்டருந்து இனிமே காலேஜுக்கு எங்க பசங்க வண்டியில வரமாட்டாங்கன்னு ஒரு லெட்டர் வாங்கிக்கிட்டு வந்து பிரின்ஸ்பால் கிட்ட குடுத்துட்டு ஒங்க வண்டிய எடுத்துக்கிட்டு போலாம்.'
என்னது பேரண்ட்ஸ் கிட்டருந்து லெட்டரா, எதுக்கு? என்ன சொல்றாங்க? என்று அருகில் இருந்து கிசுகிசுத்த மாணவனை பார்த்தான் பரத். பேசாம இருங்க என்பதுபோல் சைகை காட்டிவிட்டு தன்னுடைய வாகனத்தின் எண்ணை ஒரு துண்டு சீட்டில் எழுதி அதை சாவி வளையத்துடன் இணைத்து மேசை மீதிருந்த பெட்டியில் இட்டுவிட்டு வாசலை நோக்கி நகர்ந்தான்.
அவனைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் பிற மாணவர்களும் செய்துவிட்டு வெளியேற பரத்தை நோக்கி ஓடி வந்தான் ஒரு மாணவன். 'என்ன பிரதர் என்ன ஏதுன்னு கேக்கலாம்னா நீங்க முந்திக்கிட்டு சாவிய போட்டுட்டீங்க, இதென்ன காலேஜா ஸ்கூலா?'
பரத் திரும்பாமலே பதிலளித்தான். 'நீங்கதானே எதுக்குன்னு கேட்டீங்க? அவர் சத்தம் போட்டதும் சைலண்டாய்ட்டீங்க. சரிதானே?'
'ஆமாம் பிரதர். அவனெ பார்த்தாலே ரவுடியாட்டம் இருக்கான். மொதல் நாளே நாம எதையாவது பேசிட்டு... அப்புறம் வில்லங்கமாகி...'
பரத் புன்னகையுடன் அவனை திரும்பி பார்த்தான். 'அதான்... அதுக்குத்தான் நானும் சாவிய போட்டுட்டு வெளியே வந்தேன்.... When you realise that there is no use in objecting..... வாதம் பண்ணி பலன் இல்லேன்னு தெரிஞ்சதுக்கப்புறம் சைலண்டா இருந்துரணும்...'
'ஒங்க வீட்ல பிரச்சினை ஒன்னும் வராதா... ஒங்க வீட்டுக்கு தெரிஞ்சிதான் வண்டியில வந்தீங்களா?'
பரத் வியப்புடன் தன் அருகில் நின்றவனைப் பார்த்தான். 'ஏன்... நீங்க வீட்டுக்கு தெரியாம வண்டியில வந்தீங்களா?'
'வேற வழி? எங்கப்பா அட்மிஷன் அன்றைக்கே காலேஜ் பஸ்சுலதான் போணும், வரணும்னு ஃபீசோட சேர்த்து பஸ்சுக்கும் கட்டிட்டார். நாந்தான் ஃபர்ஸ்ட் டேதானேன்னு அவர் குளிச்சிக்கிட்டிருக்கறப்ப சாவிய எடுத்துக்கிட்டு வந்துட்டேன்... இப்ப வண்டியில்லாம எப்படி போறதுன்னுதான் யோசனையா இருக்கு...'
பரத் அமைதியாகிப் போனான்.... டாடியும் காலையில வீட்லருந்து கெளம்பறப்பவே சொன்னாங்களே... வண்டி வேணுமான்னு... How am I going to explain to him.....
****
'இவ்வளவுதானே பரத்? ஒரு லெட்டர் எழுதி குடுத்துட்டா போறது... இதுக்கா இவ்வளவு டென்ஷனாருக்கே....' என்றவாறு தன் மகனைப் பார்த்தார் ராஜசேகர். 'If I am not mistaken... there is something else? Am I correct பரத்?'
பரத் தலையை அசைத்தான். 'Yes Dad...'
thodarum..
4 comments:
அருமை அருமை.
காலேஜ் பஸ் ல மட்டும் தான் வரணும் வண்டில எல்லாம் வர கூடாதுனு சொல்ற காலேஜ்லாம் சென்னை ல இருக்கா என்ன??
வாங்க நரசிம்மன்,
காலேஜ் பஸ் ல மட்டும் தான் வரணும் வண்டில எல்லாம் வர கூடாதுனு சொல்ற காலேஜ்லாம் சென்னை ல இருக்கா என்ன??//
காலேஜ் பஸ்லதான் வரணுங்கற கட்டாயம்லாம் இல்லை. வண்டியில வரக்கூடாதுன்னுதான் கண்டிஷன்.
இந்த மாதிரி காலேஜ்லாம் இன்னும் இருக்கத்தான் செய்யிது. இந்த இன்சிடெண்ட மறந்துராதீங்க. இதுவே ஒரு பெரிய விஷயமா வெடிக்கும்.
இன்னொன்னு. இந்த தொடர்ல வர்றதெல்லாம் உண்மை. பெயர்கள் மட்டுமே கற்பனை.
இதில் வரும் பல விஷயங்கள் இப்படியும் நடக்குதான்னு கேக்க வைக்கும். ஆனா நடக்குதுங்கறதுதான் மறுக்க முடியாத உண்மை.
Saarval,
Naa MBA partimenu UK lerndhu padichaen sometime back in one of college in madras, anga kelvipata varaikum indha ladies , gents pesakudadhu, pesina Rs.500 fine, ippadi egapatta gallata, collegebus-la examku pogumbodhu kuda gents thani, ladies thani, i felt it like a more than a school. Heard prof had luv with bus driver and married and quit their job, so many things happen only when there is too much control. By the way andha collegela naa UK-la fulltime work pannaraen, want to join partime collegenu sonnaen, onum sollalai, when u pay fees any can joinnu sollitaanga. Unfortunately i stopped my studeis after two yrs (got married by that time), so couldnt come that frequently to madras and write exam.
வாங்க ஆணி,
ladies , gents pesakudadhu, pesina Rs.500 fine, ippadi egapatta gallata, collegebus-la examku pogumbodhu kuda gents thani, ladies thani,//
உண்மைதான்..
Post a Comment