14.12.07

நாளை நமதே 33

அதிகாலையிலேயே விழிப்பு வந்தும் படுக்கையில் இருந்து எழுந்திருக்க மனமில்லாமல் விட்டத்தில் சுழலும் மின்விசிறியையே பார்த்தவாறு படுத்துக்கிடந்தாள் ஜோதிகா.

அம்மா, அப்பா, ராஜ் எல்லாரும் கிளம்பி சென்றிருந்ததால் வீடு அமைதியாக இருந்தது.

இந்த இரண்டு வாரங்களில்தான் என்னவெல்லாம் நடந்து முடிந்திருக்கிறது என்று நினைத்தாள். இன்னையோட காலேஜ டெம்பரவரியா மூடி ஒரு வாரமாவுது.

ரெண்டு வாரத்துக்கு முன்னால க்ளாசுக்குள்ள பரத்த அடிக்கற அளவுக்கு போயி அடுத்த நாள் சஸ்பெண்ட் ஆன குமார் அன்னைக்கி ராத்திரியே யாரோ ரவுடிப் பசங்க அடிச்சி போட்டது.... அதுக்கு பரத்தும் அவன் க்ரூப்பும்தான் காரணம்னு போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் போயி பரத் போலீஸ் காலேஜ் காம்பஸ்ல வச்சே அரெஸ்ட் பண்ணது..

அதே நாள் வாசனோட ட்வின் ப்ரதர் அடுத்த காம்பஸ்ல அவன் ஃப்ரெண்ட்சோட சேந்து கலாட்டா பண்ண அங்கயும் போலீஸ் புகுந்து தடியடி பண்ணது.

அத்துமீறி ரெண்டு காலேஜ் காம்பஸ்க்குள்ளயும் போலீஸ் நுழைஞ்சத எதுர்த்து டேவிட் மத்த பசங்கள சேத்துக்கிட்டு டெமோ பண்ண எல்லாரையும் ஒட்டுமொத்தமா ஜோதிகாவையும் வாசனையும் சேர்த்து காலேஜ்லருந்து சஸ்பெண்ட் பண்ணது... விஷயம் தெரிஞ்சி அப்பா கோபத்துல தலகால் தெரியாம, காலேஜ்ல போயி படிடின்னு சொல்லி அனுப்புனா பசங்களோட சேந்துக்கிட்டு கலாட்டா பண்ணி சஸ்பெண்ட் ஆயி என் மானத்தையே வாங்கிட்டியடின்னு சொல்லி அவளெ அடிச்சி குடியிருப்புக்கே தெரிஞ்சி அவமானப்பட்டது.

அதுக்கப்புறம் குமார அடிச்சி போட்டது காலேஜ் செக்யூரிட்டி ஆளுங்கதான் பரத்தோட அப்பா கண்டுபிடிச்சி அண்ணா வைஸ் சான்சலர பாத்து காலேஜ் அட்மினுக்கு எதுரா கம்ப்ளெய்ண்ட் குடுத்தது. அதுக்கப்புறம் யூனிவர்சிட்டி ஒரு சின்னவிசாரனை நடத்தி காலேஜ் அட்மினுக்கு வார்னிங் குடுத்தது. ஸ்டூடண்ட்ஸ் அன்ரெஸ்ட்டுன்னு காரணம் காட்டி காலேஜ் மேனெஜெமெண்ட் அடுத்தடுத்த காம்பஸ்லருந்த ரெண்டு காலேஜையுமே லாக்கவுட் பண்ணது.....

இன்னையோட ரெண்டு வாரமாச்சு காலேஜுக்கு போயி....

ஜோதிகாவின் நினைவுகளை கலைத்தது அவளுடைய செல்ஃபோன்... எடுத்து 'சொல்லு... என்ன விஷயம்? பரத்த மீட் பண்ணியா?' என்றாள் எதிர்முனையிலிருந்த டேவிட்டிடம்.

'ஆமா....'

'எப்படியிருக்கான்.'

'கொஞ்சம் டல்லாத்தான் இருந்தான். ஆனா இப்ப பரவால்லை... இன்னைக்கி ஒன்னெ மீட் பண்ண முடியுமான்னு கேட்டான்.'

'எங்க?'

'ஒனக்கு எங்க சவுகரியப்படுமோ அங்க... வாசனும் வருவான். சுந்தரும் வரேன்னு சொல்லியிருக்கான்.'

'சுந்தரா?' ஜோதிகாவுக்கு வியப்பாக இருந்தது. 'அவனெ எங்க மீட் பண்ணே?'

டேவிட் சிரித்தான். 'ஏய், நாம நெனச்சா மாதிரியில்ல அவன். நல்ல விவரமான ஆளாருக்கான். ஆனா அவன் லைஃப்லயும் ப்ராப்ளம்ஸ். போன ரெண்டு வாரத்துல அவன் வீட்டுக்கு ரெண்டு மூனுதரம் போயிருந்தேன். அப்பத்தான் தெரிஞ்சது ஏன் அவ்ளோ சைலண்டாருக்கான்னு... நல்ல பையன் ஜோதி... He was very helpful to us....பரத் வீட்டுக்கும் ரெண்டுதரம் வந்துருக்கான். பரத்தோட டாடிக்கும் அவனெ ரொம்ப புடிச்சி

போயிருச்சி...'

'பரவால்லையே.. இவ்வளவு நடந்துருக்கா?' என்ற ஜோதிகா படுக்கையில் இருந்து எழுந்து செல்ஃபோனுடன் ஹாலை நோக்கி நடந்தாள். ‘சுந்தர் லைஃப்லயும் பிரச்சினைன்னு சொன்னியே.. என்ன பிரச்சினை?’

'அத வேற ஒரு டைம் சொல்றேன்.... எங்க மீட் பண்ணலாம் அத சொல்லு.’'

'எனக்கு எங்கன்னாலும் ஓக்கே. ஆனா அப்பா திரும்பி வர்றதுக்குள்ள நா வீட்டுக்கு வந்துரணும்... இல்லன்னா டேஞ்சர்...'

டேவிட் சிரித்தான். 'ஏன், அங்கிள் இன்னும் திட்டிக்கிட்டேத்தான் இருக்காரா?'

'ஆமா டேவிட்... ஆல்மோஸ்ட் ஒருவாரமா பயங்கர டார்ச்சர். இனி மறுபடியும் காலேஜ் திறந்தாத்தான் நிக்கும் போலருக்கு. இதுனாலயே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட அடிக்கடி ஆர்க்யூமெண்ட் வந்துருது.... வீட்ல ஒரு வாரமா நிம்மதியே இல்ல டேவிட்....' ஜோதிகாவின் குரல் உணர்ச்சி மிகுதியால் நடுங்க டேவிட் ஆறுதலாக பேசினான்.

'நா கேள்விப்பட்டேன் ஜோதி... அம்மா சொன்னாங்க...But don't worry.... Things would work out... பொறுமையாயிரு...'

'தாங்ஸ் டேவிட்....' என்றாள் ஜோதிகா சுதாரித்துக்கொண்டு. 'சொல்லு... எங்க வரணும்?'

ஒரு நொடி தாமதத்திற்குப் பிறகு எதிர் முனையிலிருந்து பதில் வந்தது. 'பரத் வீடு பரவால்லையா?'

அவ்வளவு தூரமா என்று ஒரு நொடி தயங்கினாள் ஜோதிகா. போய் வரவே ரெண்டு மணி நேரம் ஆயிருமே. இருந்தாலும் பரவால்லை.... எனக்கும் ஒரு ரிலீஃப் வேணும். எவ்வளவு நேரந்தான் தனியா ஒக்காந்துருக்கறது? 'நாலு மணிக்குள்ள முடிஞ்சிருமா?'

டேவிட் சிரித்தான். 'ஏய்... எதுக்கு அவ்வளவு நேரம்? ஒரு பதினோரு மணிக்கு துவங்குனா லஞ்சோட முடிச்சிட்டு நீ வேணும்னா போயிரு... நா வேணும்னா வந்து பிக்கப் பண்ணவா?'

அவனுடைய தொனியில் இருந்த கேலி ஜோதிகாவுக்கு புரிந்தது. 'ஏன் இன்னொரு பிரச்சினைய தரலாம்னு பாக்கியா?' என்றாள் புன்னகையுடன்.

டேவிட் குடும்பம் முழுவதையும் ஜோதிகாவின் பெற்றோர்க்கும் பழக்கம் என்றாலும் அவனுடைய பைக்கில் சேர்ந்து செல்லும் அளவுக்கு அத்தனை நெருக்கும் இல்லையே.... ஏற்கனவே பழங்காலத்து ஆளான அப்பா இது தெரிஞ்சா கேக்கவே வேணாம்....

'ஒங்கப்பாவ எனக்கு தெரியாதா என்ன? சும்மா தமாஷுக்கு கேட்டேன்...' என்றான் டேவிட். 'சரி... இன்னும் ஒரு மணி நேரத்துல பாக்கலாம். வழி தெரியலன்னா மறுபடியும் ஃபோன் பண்ணு.... நா வந்து ஒன் ஆட்டோவ கைட் பண்றேன்... பை...'

இணைப்பை துண்டித்துவிட்டு குளித்து ஜோதிகா புறப்படுவதற்கு முன் தன் தாயை செல்ஃபோனில் அழைத்து அனுமதி கோரினாள்... 'எதுக்குடி, அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்சினை பண்ணுவாரே...' என்று லதா ஆரம்பத்தில் தடுத்தாலும் 'சரி போனோம் வந்தோம்னு இரு... திடீர்னு அப்பா

வீட்டுக்கு போன் பண்ணி நீ இருக்கியான்னு செக் பண்ணா பிரச்சினைதான்.' என்று அனுமதியளித்தாள்.

'பயப்படாதேம்மா... நா சீக்கிரம் வந்துருவேன்.' என்று சமாதானம் சொல்லிவிட்டு வீட்டு தொலைபேசியின் ஒலிவாங்கியை எடுத்து வைத்துவிட்டு வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினாள். கூப்ட்டா எங்கேஜ்டு நினைச்சிக்கட்டும்... 'நீ வீட்ல இருந்தா ஃபோன் பேசறத தவிர வேற வேலையே இருக்காதே...' என்று ஏற்கனவே பலமுறை அவளை கோபித்துக்கொண்டிருக்கிறார் ராம்குமார். என்ன மிஞ்சிப்போனா மறுபடியும் ஒரு திட்டு

விழப்போவுது....

பரத்தின் வீட்டைக் கண்டுபிடித்து சேரும்போது நண்பகலை தாண்டியிருந்தது.

பரத் வசதியானவன் என்பது தெரிந்திருந்தாலும் இத்தனை வசதிபடைத்தவனா நம்முடன் ஒரே கல்லூரியில் படிக்கிறான் என்று வியந்துபோனாள் ஜோதிகா. அத்தனை விசாலமாக இருந்தது பரத்தின் பங்களா!

அவள் சென்றடைந்தபோது வீட்டு முன் வரவேற்பறையில் பரத்துடன், டேவிட், வாசன், சுந்தர் ஆகியோருடன் அதிசயமாக ப்ரியாவும் அமர்ந்திருந்தாள்.... ஜோதிகா வியப்புடன், 'ஏய் ப்ரியா நீயுமா... எப்ப வந்தே?' என்ற விசாரனையுடன் அவள் அருகில் சென்று அமர்ந்துக்கொண்டாள்.

பரத் இரண்டு நாள் ஷேவ் செய்யாத முகத்துடன் பார்க்கவே பரிதாபமாக இருந்ததுபோல் பட்டது ஜோதிகாவுக்கு..... பாவம் இவனுக்கென்ன தலையெழுத்தா இவன் இருக்கற ஸ்டேட்டசுக்கும், மார்க்குக்கும் யூனிவர்சிட்டியிலயே கெடச்சிருக்கும்... எதுக்கு நம்மளமாதிரி இந்த காலேஜ்ல சேந்து

லோல் படறான்... 'என்ன பரத் டல்லாருக்கே....' என்றாள் ஆதரவாக..

'I am OK now...' என்றான் பரத் புன்னகையுடன். 'அப்பாதான் ரொம்ப அப்செட்டாய்ட்டாங்க.... He never thought I would be roughed up by the Police... That was a shocking experience..... But அடுத்த நாளே பெய்ல் கெடச்சி இதுக்கு நிஜமா யார் காரணம்னு தெரிஞ்சதும்..... Now it's ok...'

'யூ ஆர் ரைட்...எங்க வீட்லயும் இது ஒரு பெரிய பிரச்சினையையே உண்டாக்கிருச்சி...' என்றான் வாசன். 'ஒங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமான்னு தெரியலை.'

'இப்ப அது தேவையா வாசன்...' என்று இடைமறித்தான் டேவிட்... 'இனி என்ன பண்றதுன்னு பேசுவமே?'

ஜோதிகா விடவில்லை. 'இரு டேவிட்... அவன் சொல்ல வந்தத சொல்லட்டுமே.... சொல்லு வாசன் என்ன நடந்தது?'

வாசன் துவங்குவதற்கு முன் டேவிட் பதிலளித்தான். 'இவன் மூர்த்தி மாதிரியே இருக்கறதால ரெண்டு நாளைக்கு முன்னால குமார அடிச்சமாதிரி இவனெயும் ஒரு கும்பல் அட்டாக் பண்ணியிருக்கு... நல்லவேளையா பகல் நேரமானதால ரோட்ல இருந்தவங்க தலையிட்டு இவனெ ரெஸ்க்யூ பண்ணியிருக்காங்க....'

'ஐயையோ' என்றாள் ஜோதிகா பதற்றத்துடன். 'மூர்த்திக்கி இது தெரியுமா?'

'தெரியும்' என்றான் வாசன். 'ஆனா அவனுக்கு இதெல்லாம் சகஜம் ஜோதி... அப்பாவுக்கும் எம்மேலதான் கோவம்... என்னமோ இதுக்கு நாந்தான் காரணம்கறா மாதிரி... இதுல வேற ஒரு பிரச்சினை என்னன்னா மறுபடியும் மூர்த்திய அவங்க காலேஜ்ல சேத்துக்குவாங்களான்னே தெரியல... குமார அவங்கப்பா நம்ம காலேஜ்லருந்தே ரிலீஃப் வாங்கிட்டாராம்.. வேற எங்கயோ சேக்கப் போறதா கேள்வி... அதனாலதான் மூர்த்தி விஷயம் சீரியசாருக்கு... மூர்த்திய டிஸ்மிஸ் பண்ணா அவனுக்கு எங்க கிடைக்கிதோ நீயும் அங்கதான் படிக்கணும்னு அப்பா கம்பெல் பண்றார். அம்மாவுக்கும் நா அந்த காலேஜ்லயே கண்டினியூ பண்ணா எங்க என்னெ மறுபடியும் யாராச்சும் அட்டாக் பண்ணுவாங்களோங்கற பயம். அதான் என்ன பண்றதுன்னே தெரியல...'

வாசனின் குரலில் இருந்த விரக்தி ஹாலில் அமர்ந்திருந்த அனைவரையும் தொற்றிக்கொள்ள சற்று நேரம் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

'We all understand your feelings Vasan.' என்றான் பரத் ஆறுதலாக. 'ஆனா எனக்கென்னவோ ஒங்கம்மாவோட பயம் நியாயமானதுன்னுதான் படுது.'

'என்ன பரத் நீயும் இப்படி சொல்றே?' என்றான் டேவிட். 'யார் என்ன பண்ணப் போறா? எனக்கென்னவோ வாசனப்பத்தி நம்ம காலேஜ்ல யாருக்கும் தப்பான ஒப்பீனியன் இல்லேன்னுதான் படுது. அப்படியே இருந்தாலும் we can mediate and solve it.'

சுந்தர் சிரித்தான். 'நீ பயங்கரமான ஆப்டிமிஸ்றா டேவிட்.... நம்மளையே சஸ்பென்ஷன்ல வச்சிருக்காங்க.... மறுபடியும் என்க்வயரின்னு எதையாவது வச்சி காலேஜ்லயே சேர விடாம பண்ணாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல.... நீ என்னடான்னா?'

ப்ரியா புன்னகையுடன் ஜோதிகாவைப் பார்த்தாள். 'டேவிட் பயங்கரமான ஆப்டிமிஸ்ட்னா சுந்தர் பயங்கரமான பெஸ்சிமிஸ்ட்... என்ன சொல்றே?'

ஜோதிகா வாய்விட்டு சிரிக்க அனைவரும் சிரித்தனர். அறையில் அதுவரை இருந்த சங்கடம் அந்த சிரிப்பில் கரைந்துபோனது.

அதன் பிறகு அந்த வார இறுதியுடன் முடியவிருந்த சஸ்பென்ஷன் காலத்திற்குப் பிறகு அனைவரும் கல்லூரிக்கு திரும்புவது என்றும் கல்லூரி நிர்வாகம் எடுக்கவிருந்த எத்தகைய நடவடிக்கைகளையும் ஒரே குழுவாக இணைந்து சந்திப்பது என்றும் முடிவானது.

ஜோதிகாவும் ப்ரியாவும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட 'திங்கள் கிழமை காலேஜ்ல பாக்கலாம்.' என்றவாறு அனைவரும் விடைகொடுத்தனர்.

தொடரும்...

 

Technorati Tags:

3 comments:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

(வழக்கம்போல)நல்லாருக்கு.

Anonymous said...

Aaga rendu vaarathula college la evlo nadakuthu.. mmm sooper fast express maaadhiri nagarathu.. venkateswaralu thingatkilamai enna panna kaathitu irukaar barath and Co ku??

TBR. JOSPEH said...

மிக்க நன்றி நரசிம்மன்.

இன்று எழுத முடியவில்லை. அடுத்த பதிவு வரும் திங்களன்று.... நான் இப்போது கோலாலம்பூரில் உள்ளேன். இரண்டு வாரங்கள் விடுமுறை. ஆகவே எழுத நேரம் கிடைக்கும் என்று கருதுகிறேன்.