சேதுமாதவனின் வசவு வார்த்தைகள் அவருடைய கோபத்தை விட அவர் குடித்திருந்த மதுவின் தாக்கம்தான் என்பதைப் புரிந்துக்கொண்ட பத்மநாபன் பதில் ஏதும் பேசாமல் காத்திருந்தான்.
சேதுமாதவனின் குணம் பிடித்திருந்ததோ இல்லையோ அவர் ஏவும் வேலைகளுக்கு சற்று அதிகமாகவே அவர் அள்ளி வீசும் சன்மானம் அவனுக்கு மிகவும் பிடித்திருத்ததால்தானே அவரை இன்னமும் பொறுத்துக்கொண்டிருக்கிறான்? இல்லெங்கில் இயாளெ கொன்னு குவிக்கான் எத்தனெ மினிட்டு வேணும்.. பட்டி.. பிராந்தன்..
அவன் எதிர்பார்த்தது போலவே சற்று நேரத்தி சேதுமாதவனின் வேகம் குறைய, ‘எடோ எந்தா நோக்கி நிக்கனெ.. ரெண்டன்னம் எடுத்து வீசு.. தண்டெடுத்து பறயனோ..’ என்றவாறு குறுமேசையில் காலியாயிருந்த இரண்டு காலி தம்ளர்களில் ஒன்றைக் காட்டினார்.
‘இதான், இதான்.. சாரு.. தேஷ்யத்தோட சீத்த பறஞ்சாலும்.. இங்ஙனயும் கொடுக்கண்டல்லோ..’ என்று மனதுக்குள் அவரை புகழ்ந்தவாறு அவர் கூறுவதற்கென்றே காத்திருந்தது போல மணக்க, மணக்க மேலைநாட்டு சரக்கை சற்று தாராளமாகவே உற்றி சோடா கலந்து ஒரே மூச்சில் குடித்துவிட்டு வைத்தான். சூடாக தொண்டைக்குள் இறங்கிய மது அளித்த உற்சாக தலைக்கு ஏற கண்கள் சிவக்க சேதுமாதவனைப் பார்த்தான் பத்மநாபன்.
‘பறயு சார்.. ஞான் எந்தா ச்செய்யேண்டே..?’
சேதுமாதவன் அவன் விறைப்புடன் நின்ற தோரணையைப் பார்த்து வாய்விட்டு சிரித்தார். ‘எடோ பப்பா.. இதா, இதா, இதாண்ட வேண்டது..’ என்றவர் படு சீரியசானார். குரலை இறக்கி அவனை அருகில் வரும்படி அழைத்தார். நான்கு பெக்குகள் உள்ளே சென்ற தாக்கத்தில் நாக்கு குளறினாலும் கட்டுப்படுத்திக் கொண்டு பேசலானார்.
‘எடோ.. .. எஸ்.பி.. அயாள்டெ பேரெந்தான?’
பத்மநாபனுக்கு அவர் குறிப்பிட்ட எஸ்.பி முந்தைய தினம் தன்னை மடக்கிப்பிடித்த தனபால் சாராகத்தான் இருக்க வேண்டும் என்று புரிந்துக்கொள்ள முடிந்தது. ‘யாரா சாரே.. தனபாலான்னோ..’
‘அதே..ஆத் தெண்டியான.. அவன் இன்னு நம்மள்ட ஓஃபீசுக்கு வந்நிருந்நு..’
பத்மநாபனின் விழிகள் வியப்பால் விரிந்தன.. ‘எந்தா சாரெ பறயனெ? அத்தேஹம் எந்துனா..’
சேதுமாதவன் எரிச்சலுடன் அவனைப் பார்த்தார். ‘அத்தேஹமோ.. அவனெந்தா அத்தெறெ வெல்லிய ஆளானோ.. தனிக்கெந்தா அயாள்டெடுத்து அத்தெற ரெஸ்பெக்ட்டு.. அயாள்னு பறஞ்சா போறே?’
பத்மநாபனுக்கு தன்னுடைய தவறு புரிந்தது.. ‘இல்ல சார்.. சாரி சார்..’
சேதுமாதவனின் கோபம் அப்போதும் குறையவில்லை. ‘எடோ தான் ஒரு தெண்டியான.. தனிக்கி வேணங்கிலு அயாளு வெலிதாவாம்.. எனிக்கி அவன் ஒரு புல்லா.. அறியோ.. எண்டெ லெவலுக்கு அயாளு ஒரு.. ஒரு.. எந்தா பறயா..’ மேற்கொண்டு தனபால் எஸ்.பியை அர்ச்சிக்க வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறிவிட்டு சட்டென்று, ‘அது போட்டே.. தான் அயாள்டெடுத்து எண்டே பேரு பறஞ்சிண்டாயிருந்நோ..?’ என்றார்.
இந்த நேரடி தாக்குதலை முற்றிலும் எதிர்பார்த்திராத பத்மநாபன் சட்டென்று சமாளித்துக்கொண்டு, ‘ஞானா.. இல்லல்லோ சாரே..’ என்று பதிலளித்தான்..
சேதுமாதவன் அவனுடைய பதிலில் திருப்தியில்லாமல் அவனையே பார்த்தார். இவன் சொல்லியிருப்பான்.. ராஸ்க்கல்.. இவன் இல்லன்னா இவனோட லீடர் .. யாரவன்? பாஸ்கரன்.. கிடுக்கி பாஸ்கரன்..
‘தானில்லங்கில் தண்டெ நேத்தா உண்டல்லோ.. பாஸ்கரன்.. அவனானோ?’
சேதுமாதவனின் இத்தகைய விசாரனை உத்தி பத்மநாபன் அறிந்திருந்ததுதான். தன்னை தனியாக விசாரித்துவிட்டு அவன் அளிக்கும் பதிலைக் கொண்டே பாஸ்கரனிடமிருந்து பதிலை வரவழைக்கும் டெக்னிக் அவனுக்கு தெரியாதா என்ன?
‘இல்ல சார்.. யாரும் பறஞ்சில்லா..’ என்றான் உறுதியாக..
சேதுமாதன் நடுங்கும் கைகளுடன் அடுத்த பெக்கை ஊற்றுவதிலேயே குறியாயிருக்க பத்மநாபன் மீண்டும் இத்தகைய கேள்விகள் வந்தால் எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தான்.
‘ஷரி போட்டே.. எங்ஙனயோ.. அயாளு வந்நிருந்து.. ஆத்தெண்டி சேர்மனெ கண்டேச்சி போயி.. எந்தா சோய்ச்சிண்டாவும்? தனிக்கி எந்தெங்கிலும் தோனுனுண்டோ..?’
பத்மநாபன் உஷாராக, ‘அறியில்லா சார்..’ என்றான். நாமாக எதையாவது சொல்லப் போய் இந்தாளு மறுபடியும் முருங்கை மரம் ஏறிட்டா நம்ம பாடு திண்டாட்டமாயிருமே என்ற நினைப்பு அவனுக்கு.
‘ஷரி.. எந்தெங்கிலும் பறஞ்சோட்டே... நமக்கு எந்து போயி.. ஞான் தன்னெ விளிச்ச காரியம் பறஞ்சேக்காம்..’ என்ற சேதுமாதவன் சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு, ‘எடோ தான் இவ்விட வந்து இருக்கி.. ஞான் பறஞ்சோட்டே..’ என்றவாறு தன்னுடைய காலடியைக் காட்ட பத்மனாபன் தன் தலைவிதியை நொந்துக்கொண்டு அவர் காலடியில் அமர்ந்தான்.
‘எடோ.. முரளியுண்டுல்லே..’ என்று ஆரம்பித்து அடுத்த சில நிமிடங்களில் அவர் இட்ட ஆணைகள் ஒரு நிமிடம் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..
முரளியையா.. இந்தாளுக்கு ஏதாச்சும் பைத்தியம், கிய்த்தியம் பிடிச்சிருச்சா..
முரளி யாரு? நம்மள்டெ நாட்டுக்காரன்.. போறாததுக்கு ஒரு பேங்க்கோட யூனியன் லீடர். அவனெப் போயி..
இருப்பினும் மறுபேச்சு பேசாமல் அவர் சொல்லி முடிக்கும்வரை காத்திருந்தான். அவர் இறுதியில், ‘எந்தா ஞான் பறஞ்சது மனசாலாயோ?’ என்ற கேட்ட கேள்விக்கு பலமாக தலையை அசைத்துவிட்டு எழுந்து நின்றான்.
அவன் பதிலளிக்க முயல்வதற்குள் வாசலில் மணியடிக்கும் ஓசை கேட்டது.
‘எடோ.. விஷ்வன் சாராயிருக்கும்.. தான் பொக்கோ.. ஞான் பறஞ்ச காரியம் நாளெ நடந்திருக்கணும்.. ஆத் தெண்டி நம்மள க்ராஸ் ச்செய்யான் நோக்குவா.. விடாம் பாடில்லா.. மனசிலாயோ..’
பத்மநாபனுக்கு அவர் கூறிய வேலையை முடிப்பதில் ஆர்வம் இல்லாவிடினும் வேறு வழியில்லாமல், ‘சரி சாரே..’ என்றவாறு கிளம்பினான்.
‘எடோ நிக்கு.. வேறொரு காரியம்..’ என்றார் சேதுமாதவன். ‘ஞான் இப்போ பறஞ்ச காரியம் பாஸ்கரன் அறியேண்டா.. கேட்டோ..’
பத்மநாபனுக்கு அவருடைய எண்ணம் விளங்கியது. ‘சரி.. சார்.. பறயில்லா.’ என்றவாறு விடைபெற்றுக்கொண்டு படிகளில் வேகமாக இறங்க எதிரே வந்த விஸ்வநாதன் அவனை முறைத்தார். ‘இந்த பொறுக்கி எங்க இந்த நேரத்துல.. இவனுங்க சகவாசம் வேணாம்னு எத்தனெ தரம் சொன்னாலும் இவருக்கு புரிய மாட்டேங்குதே..’ என்று முனகியவாறு மேலே செல்ல கீழே ஹாலில் நின்றிருந்த திருவும் தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்திருந்த மாயாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
திருவுக்கு பத்மநாபனை அடியோடு பிடிக்காதென்றால் மாயாவுக்கோ விஸ்வநாதனையும் பிடிக்காது.. ‘Parasites..’ என்று முனகியவாறு ஏஷியாநெட்டில் அடக்க மாட்டாமல் அழுதவாறே சிரிவித்யா பேசும் டயலாக்கைக் கேட்பதில் கவனத்தைத் திருப்பினாள்..
********
‘என்னடா ஒன் தோஸ்த்துங்க ஒருத்தனையும் காணம்? வெளக்கு வச்சதும் டாண்ணு வந்து நின்னுருவாய்ங்க..? என்னாச்சி இன்னைக்கி? அப்பன் வந்திருக்கான்.. அதனால வெளியில வச்சிக்கலாம்னு சொல்லிட்டியோ?’
இன்னைக்கி தாகசாந்தி செஞ்சிக்க முடியாது போலருக்கே என்று கடுப்புடன் சோபாவில் அமர்ந்திருந்த ராசேந்திரன் எரிச்சலுடன் தன் தந்தையைப் பார்த்தான். மனுஷன் எங்கயாச்சும் வெளியில போவாரு நாம நடைய கட்டலாம்னு பார்த்தா நடக்காது போலருக்கே..
‘என்னடா என்ன யோசிக்கறே.. நா எங்கயாச்சும் வெளியில போனா தோஸ்த்துங்கள பாக்க போயிரலாமேன்னுதானே..’
ராசேந்திரன் அவருடைய பேச்சைத் தவிர்க்கும் நோக்கத்துடன் எதிரே இருந்த தொலைக்காட்சி பெட்டியை முடுக்கிவிட்டான்..
சன் டிவியில் யாரோ அழுதுக்கொண்டிருக்க, அடுத்த சானலுக்கு தாவினான்.. ஜெயாவில் குஷ்பு அழுதுக்கொண்டிருந்தார்.. அடுத்த சானல்.. அடுத்த சானல் என எல்லாவற்றிலும் யாராவது ஒருத்தர் கண்ணீரும் கம்பலையுமாய் நின்றுக்கொண்டிருக்க வெறுத்துப்போய் அணைத்துவிட்டு ரிமோட்டை தூர எறிந்தான்..
‘எலேய்.. அவளுங்களாவது துட்டெ வாங்கிக்கிட்டு அளுவறாளுங்க.. நீ செஞ்சி வச்சிருக்கற காரியத்துக்கு சீக்கிரமே விடிவு வரலைன்னு வச்சிக்கோ.. நானும் ஒங்கம்மாளும் சம்பளம் வாங்காமயே அளுவ வேண்டியதுதான்..’
இவர் வேற.. என்று மனதுக்குள் எரிச்சலுடன் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்தான்..
‘என்ன ராசேந்திரா.. நா பேசறது வெளங்குதாலே. என் களுத்த பிடிச்சி நெரிச்சிரலாம்னு வருமே.’
அப்போதும் பதில் பேசாமல் அமர்ந்திருந்தான் ராசேந்திரன். அவன் பதில் பேசினால் நிச்சயம் அது வாக்குவாதத்தில் சென்றுதான் முடியும் என்று நினைத்தான்.
தனக்கு இப்படியொரு துர்பார்க்கிய நிலை ஏற்படும் என்று கடந்த மாதம் வரை நினைத்திருக்கவில்லை. ராசம்மாளை தான் புரிந்துக்கொள்ள தவறியதன் விளைவே இது என்று நினைத்தான்.
எல்லாம் அந்த செல்வத்தால வந்ததுதான். இருடா லேய்.. எப்படி என் பெஞ்சாதிய தூண்டிவிட்டு இந்த அளவுக்கு அவள வளத்துவிட்டியோ அதே மாதிரி ஒம்பொஞ்சாதியையும் பண்றேன்.. அவளும் படிச்சவதான..
ராசம்மா என்னெ பளிவாங்கணும்னு எறங்க ஆரம்பிச்சா அதுக்கு ஒன் தொனையில்லாம முடியாதுன்னும் அதுக்காக வேண்டி நீ இங்கயே வந்து செட்டிலாவேன்னும் எனக்கு தெரியும்லே.. நீ இங்கன இருக்கறப்போ நா அங்க போறேன்.. ஒம்பொஞ்சாதி மனச மாத்தறேன்.. ஒன்னால முடிஞ்சது என்னால முடியாதாக்கும்..
‘என்னலே பலமா யோசிக்கற போலருக்கு? ராசம்மா நம்மள மாட்டிவிட்ட சுத்தல்லருந்து எப்படி தப்பிக்கலாம்னா.. இல்ல இன்னைக்கி பொளுது குடிக்க முடியாம போயிருச்சேன்னா..’
இவர் வேற. இடைக்கிடையில. அசரீரி மாதிரி.. பேசாம ஊர்லயே கிடக்க வேண்டியதுதானே.. என்னமோ தனக்குத்தான் எல்லாந் தெரியுங்கறா மாதிரி.. போவீயளா..
என்ன நினைத்தாரோ ரத்தினவேல் சட்டென்று எழுந்து நின்றார். ராசேந்திரன் அவரை நிமிர்ந்து பார்த்தான் என்ன என்பதுபோல்..
‘நா போயி ஒன் வக்கீல பார்த்துட்டு வரேன்.. காலையில போன பய.. என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கூட கூப்ட்டு சொல்லலே.. அந்த சேட்ட பாத்துட்டு அப்படியே பேங்குக்கு போய்ட்டு வரேன்னுதானே ரெண்டு பேரும் பொறப்பட்டு போனானுவ?’
ராசேந்திரன் அவர் புறப்பட்டு போனால் போறும் என்று நினைத்தான். ‘சரிப்பா.. நீங்க போய் பார்த்துட்டு வாங்க..’
ரத்தினவேல் உரக்கச் சிரித்தார்.. ‘அதான பார்த்தேன்.. அண்ணன் எப்ப சாவான்.. திண்ணை எப்ப காலியாவுங்கறா மாதிரிதானெ நீ சிந்திக்கே.. அப்பன் இந்த பக்கம் போனதும்.. நாம எளுந்து நம்ம பசங்கள பாக்க போயிரணும்.. அதான ஒன் நெனப்பு?’
‘ஆமா அதுக்கென்ன இப்போ..? என்றான் ராசேந்திரன் எரிச்சலுடன்..எனக்கு என் ஃப்ரெண்ட்ஸ்தான் முக்கியம்.. அவன்களோட ஒரு அஞ்சு நிமிசம் பேசினா எனக்கு ஏதாச்சும் ஐடியா கெடைக்கும்..’
‘அது என்னமோ சரிதான்..’ என்றார் ரத்தினவேலு கேலியுடன்.. ‘சரக்க உள்ள தள்ளினாத்தானல்லே வண்டி ஓடும்.. போ.. தாராளமா போய்ட்டு வா..’
விட்டால் போதும் என்று நினைத்த அவர் மீண்டும் மனம் மாறுவதற்குள் புறப்படும் நோக்கத்துடன் டீப்பாயில் கிடந்த தன்னுடைய கார் சாவையை எடுத்துக்கொண்டு எழுந்தான்..
‘ஆனா ஒன்னுலே..’ என்று ரத்தினவேல் குறிக்கிட என்ன என்பதுபோல் எரிச்சலுடன் பார்த்தான்.
‘நீ திரும்பி வரும்போது ஒங்கப்பன் போயிருப்பான்.. அப்புறம் நீயாச்சும் ஒம்பொஞ்சாதியாச்சி.. ஒன் பிரச்சினையில இந்தப்பன் தலையிடமாட்டாங்கறது மட்டுமில்ல.. இவன் என் பிள்ளையே இல்லேன்னு காலையில பத்திரிகையில வராமாதிரி செஞ்சிருவேன்.. அப்புறம் ஒன் இஷ்டம்..’
ராசேந்திரனுக்கு இது கேட்டு, கேட்டு புளித்துப் போயிருந்தது. இதையே சொல்லி, சொல்லி இந்த மனுசன் எத்தனெ வருசத்துக்குத்தான் மிரட்டுவாரு.. போய்யா நீயும் ஒன் சொத்தும்னு போய்ட்டா என்ன? என்று சிந்தித்தான்..
ஆனால் அடுத்த நொடியே அடுத்த வேளை குடிக்க என்ன சாப்பாட்டுக்கே வழியிருக்காதே என்ற நினைப்பு வர சுருதியிறங்கி, ‘இப்ப என்ன பண்ணணும்னு சொல்றீங்க? அதையாவது சொல்லுங்க.’ என்றான்.
நாடார் சிரித்தார். ‘அப்படி வாடா மவனே.. போயி.. கார எடு.. நாம ரெண்டு பேருமாவே போயி பாத்துட்டு வருவோம்..’
ராசேந்திரன் தன்னுடைய தலைவிதியை நொந்துக்கொண்டே கையில் சாவியுடன் வாசலை நோக்கி நடக்க ரத்தினவேல் தனக்குள் சிரித்துக்கொண்டே அவன் பின்னால் நடந்தார் வீட்டைப் பூட்டிக்கொண்டு.
தொடரும்..
29.11.06
25.9.06
சூரியன் 126
மாதவன் வங்கியின் இயக்குனர்கள் கூட்டம் முடிவுற்றதும் நேரே தன்னுடைய அறைக்கு திரும்பி கடந்த ஒரு மணி நேரமாக வங்கியின் கடந்த மூன்றாண்டு கால பொருளாதார அறிக்கைகளை ஆராய்ந்துக்கொண்டிருந்தார்.
தனக்கு முன்பு இருந்த முதல்வர் வர்த்தகம் செய்வதில் படு சூரராக இருந்திருக்கிறார் என்பது அறிக்கையைப் பார்த்தாலே தெரிந்தது. அதற்கு ஈடாக வர்த்தகத்தை நடத்திச் செல்வதே சிரமமாக இருக்கும் போலிருக்கிறதே என்று நினைத்தார்.
அதுதான் தன்னுடைய முதல் இலக்கு என்று குறித்துக்கொண்டார். நல்ல வேளையாக அவர் பதவியேற்ற நேரம் புது நிதியாண்டு துவங்கி நாற்பத்தைந்து நாட்களே கடந்திருந்தன. எதிர் வரும் வருடத்திற்கென முந்தைய முதல்வர் குறித்திருந்த இலக்கை நிதியாண்டின் அரையாண்டிற்குள்ளாகவே அடைந்தால் மட்டுமே அவருடைய கடந்த வருட வெற்றியை தம்மால் முறியடிக்க முடியும் என்று நினைத்தார்.
அடுத்து அதற்கு தாம் என்னென்ன செய்யவேண்டும் என்று சிந்திக்கலானார்.
முதல் முதலாக அவருக்கு தேவைப்பட்டது தனக்கு வங்கியின் வர்த்தகத்தைக் குறித்து உடனடியான (Instant) அதே சமயம் நம்பத் தகுந்த (Dependable) புள்ளி விவரங்கள்..
அவருக்கு முன்னாலிருந்த அறிக்கைகளின் மென் நகல்கள் (Soft copy) கிடைத்தால் அதை தன்னுடைய மடிக்கணினியில் சேர்த்துக்கொள்ளலாமே என்று நினைத்த மாதவான் காரியதரிசி சுபோத்தை இண்டர்காமில் அழைத்தார்.
அவருடைய தேவையை கேட்ட சுபோத் சங்கடத்துடன் நெளிந்தான்.
‘என்ன சுபோத்.. If you don’t have it tell me so.. Don’t feel embarrassed..’
சுபோத் தயக்கத்துடன், ‘Yes Sir, I don’t have it.’ என்றான்.
‘Will anyone in the Bank have it? EDP? Or Accounts?’
‘No Sir.. Our computerisation is not uptodate. We still collect data either over phone or by emails from the branches.’
‘Phones and emails?’ என்று சிரித்தார் மாதவன். ‘Which century are you living in? You don’t have a centralised banking software where the data is available at HO at the day-end?’
‘No Sir.. We don’t have.. We used to gather data through the weekly Friday Statements received from the branches, tabulate it in the format required by our earlier Chairman and present to him. He never required that in softcopy.. That’s why..’
மாதவன் பதில் பேசாமல் அவனையே பார்த்தார் சிறிது நேரம்.. ‘OK that’s it then.. No use in worrying about something which is not there.. Well.. you do one thing.. take all these reports.. feed it in your PC.. prepare a spread sheet and give it me in a floppy..’
சுபோத்துக்கு அவர் கூறியது பாதிதான் புரிந்தது என்றாலும் சரி, சரி என்று தலையை அசைத்துவிட்டு அவருடைய மேசையின் மீதிருந்த அறிக்கைகள் அடங்கிய கோப்பை எடுத்துக்கொண்டு நகர மாதவன் அவனை தடுத்து நிறுத்தினார்.
‘Subodh, do we have central Server in our building which anyone in the building could access?’
சுபோத் ஒன்றும் விளங்காமல் விழிக்க மாதவன் வாய்விட்டுச் சிரித்தார். முதலில் இவனை மாற்ற வேண்டும்..
‘It appears you are hearing this concept for the first time in your life.. Am I right Subodh?’
சுபோத் பரிதாபமாக தலையை அசைக்க.. ‘சரி நீங்க போய் நான் செய்த காரியத்த செஞ்சிக்கிட்டு வாங்க.. And find out whether anyone who has some knowledge about computers in this building and ask him to come to my cabin.. Fast..’
‘Sir, shall I send the head of EDP?’
சரி என்று மாதவன் தலையை அசைக்க தப்பித்தால் போதும் என்று சுபோத் தலைமறைவானான்.
சற்று நேரத்தில் வந்து சேர்ந்த EDP தலைவரைப் பார்த்தான். முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன்.
மாதவன் சற்று முன் சுபோத்திடம் கேட்ட அதே கேள்விகளை அவரிடமும் கேட்டார்.
அவர் தயக்கத்துடன், ‘Sir I might require at least ten minutes to explain what we do here. Could you spare Sir?’ என மாதவன் தன் அருகில் இருந்த இருக்கைகளில் ஒன்றைக் காண்பித்தார்.
அந்த இளைஞர் அடுத்த பத்து நிமிடங்களில் சுருக்கமாக, அதே சமயம் கோர்வையாக வங்கியில் இருந்த கணினி மயமாக்கலை விவரித்த விதம் மாதவனுக்கு மிகவும் பிடித்தது.. Poor Guy.. He deserves a break.. என்று மனதுக்குள் நினைத்தார்.
‘OK Mr...?’
‘Siva Sir.. Sivaramakrishnan.. I am a MCA.. Banking Officer only.. But just like Fernando Sir.. I took up to learing computer myself.. I did my MCA through distance education..’
அவர் கேட்காமலே வந்து விழுந்த விவரங்களைக் கேட்ட மாதவன், ‘You said something about one Mr.Fernando.. Is he the Principal of our Training College?’
‘Yes Sir.. அவரே தான்.. சீனியர் லெவல்ல இருக்கற எக்ஸ்க்யூட்டிவ்ஸ்ல அவர் மட்டும் தான் இதுல இண்ட்ரஸ்ட் இருக்கறவர்.. ஆனால் அவர் எவ்வளவு முயற்சி பண்ணியும் மேலருக்கற எக்ஸ்க்யூட்டிவ்ஸ் யாருமே சப்போர்ட் பண்ணாததுனால மேற்கொண்டு ஒன்னும் செய்ய முடியல சார்..’
மாதவனுக்கு முழுவதும் புரிந்தது.. So.. that’s where I should start.. Carryout massive computerisation.. That’s the need of the hour.. I should first start with the HO..
தன் எதிரில் நின்ற இளைஞரைப் பார்த்தார்.. அவருடைய முகத்திலிருந்த எதிர்பார்ப்பு மாதவனுக்கு புரிந்தது.. இவராவது தன்னுடைய அபிலாஷைகளை நிறைவேற்றி வைப்பாரா என்ற அந்த எதிர்பார்ப்பை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானித்தார்.
‘ஓக்கே.. சிவா.. I am going to give you a free hand.. If you want to take the help of Mr.Fernando.. go to the Training College and sit with him.. I will give you two weeks.. Come back with a comprehensive, cost effective project to set up a hundred node LAN in our building.. We should be able to start with the automation of at least ten to fifteen percent of our operation in this building.. Find out whether any suitable software is available in the market and give me the total cost to set up such a system in our building..’
அவர் பேசப் பேச சிவராமகிருஷ்ணனின் முகத்தில் ஏற்பட்ட பிரகாசம் அவரையும் தொற்றிக்கொள்ள புன்னகையுடன் எழுந்து சென்று அவரைத் தோளில் தட்டிக்கொடுத்து.. ‘Go ahead.. But keep this secret.. No one other than Mr.Fernando should know anything about this assignment.. Is that clear?’ என்றார்.
‘Yes Sir.. I will be careful Sir..’ என்றவாறு மகிழ்ச்சியுடன் அவர் விடைபெற்று செல்ல.. Yes.. At least I could do something positive today.. after a dreadful day... என்றவாறு தன் இருக்கைக்கு திரும்பி சட்டென்று நினைவுக்கு வந்தவராய் தன்னுடைய செல்qபோனை எடுத்து தன் மகளுக்கு டயல் செய்தார்..
****
சோமசுந்தரத்தின் ராஜிநாமாவை தலைமையகத்திலிருந்த தன்னுடைய நண்பர் வழியாக கேள்விப்பட்ட பாபு சுரேஷ் ஒரு நிமிடம் தன்னையே நம்பமுடியாமல் தன்னுடைய செல்qபோன் திரையைப் பார்த்தார், ‘என்ன சாம் சொல்றீங்க? ஏன் என்ன காரணம்?’ என்றார்..
‘சரியா தெரியல சார்.. போர்ட் மீட்டிங் முடிஞ்சி வெளிய வந்த நம்ம ஏ.ஜி.எம் தான் சொன்னார். சார் போர்ட்லருந்து ரிட்டையர் ஆவறதுக்கு இன்னும் ஆறுமாசம் இருக்கற சமயத்துல எதுக்கு திடீர்னு இந்த டிசிஷன்னு யாருக்குமே புரியல.. அதான் ஒங்களுக்கு ஏதாச்சும் தெரியுமான்னு கேக்கலாம்னுதான் கூப்ட்டேன்.. இப்பத்தான் தெரியுது ஒங்களுக்கும் இது தெரியாதுன்னு.. வச்சிடறேன் சார்..’
தான் அமர்ந்திருந்த சோஃபாவில் இருந்து எழுந்து ஹாலில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தார். அவருடைய மனைவியும் மகளும் திருமண பர்சேசுக்காக சென்றிருக்கவே அமைதியாய் இருந்த வீட்டில் அவரால் நிதானமாக சிந்திக்க முடிந்தது.
சோமசுந்தரத்தின் ராஜிநாமாவின் பின்னால் என்ன இருக்கிறது? இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரை சந்தித்தபோதுகூட மனிதர் இதைப் பற்றி கோடிட்டுக்கூட காட்டவில்லையே..
அப்படியொரு எண்ணம் அவருக்கு இருந்திருந்தால் எதற்காக இன்று காலையில் தன்னை மனித வள இலாக்காவிற்கு தலைவராக்க வேண்டும்?
எங்கயோ இடிக்குதே..
இது ஒருவேளை அந்த நாடாருடைய வேலையாக இருக்குமோ.. இருக்கும்.. காலையில் சேர்மனின் காபினில் வைத்து டாக்டர் தன்னை பரிந்துரைத்தபோதே அவருடைய முகம் முற்றிலுமாக மாறிப்போனதை கவனிக்க தவறவில்லை அவர்..
அவருடைய வேலையாகத்தான் இருக்கும். ஒருவேளை டாக்டருடைய ஆட்களை சேர்க்கும் திட்டம் அவருக்கு தெரிந்திருக்குமோ..
டாக்டர் அவரைக் கலந்தாலோசிக்காமலா இந்த திட்டத்தை வகுத்திருப்பார்? இருக்காது.. அவர் தலைகீழாக நின்றாலும், எத்தனைத்தான் ரகசியமாக வைத்திருந்தாலும் அந்த நாடாருடைய கழுகுக் கண்களிலிருந்து எதுவுமே தப்பாது என்று வங்கியின் எல்லா அதிகாரிகளுக்கும் தெரிந்துதானிருந்தது..
ஆகவே அது காரணமாயிருக்க முடியாது..
வேறென்ன?
சை.. இன்னும் சற்று நேரம் அலுவலகத்திலேயே இருந்திருக்கலாம். அவசரப்பட்டு கிளம்பி வந்தது தவறாகப் போய்விட்டது..
சோமசுந்தரம்தான் தன்னுடைய பாதுகாவலர் என்பது அவருக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது. இப்போது அவர் இயக்குனர் குழுவில் இல்லாதது தம்மை எந்தவிதத்தில் பாதிக்கப் போகிறதோ என்று நினைத்து கலங்கினார் பாபு சுரேஷ்..
நான்கைந்து வருடங்களுக்கு முன் சோமசுந்தரத்தின் மருத்துவமனைக்கு அவர் நியதிகளை மீறி கடனளித்த விவரத்தை, ஏற்கனவே ரிசர்வ் வங்கி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்த விவரத்தை, மீண்டும் ஆராய்ந்து தன் மீது பாய்வார்களோ என்ற அச்சம் அவரை வெகுவாக கலக்க.. சோமசுந்தரத்தை தொலைப்பேசியில் அழைத்தாலென்ன என்ற ஆலோசனையுடன் ஹாலின் மறுகோடியிலிருந்த தொலைப்பேசியை நோக்கி நடந்தார்..
அதற்கெனவே காத்திருந்ததுபோல தொலைப்பேசி ஒலிக்க பதற்றத்துடன் சென்று எடுத்தார். ‘என்ன சம்பந்தி இந்த நேரத்துல வீட்ல இருக்கீங்க?’ என்ற குரல் அவரை திடுக்கிட வைத்தது..
சமாளித்துக்கொண்டு, ‘சொல்லுங்க சம்பந்தி.. நான் இன்னையிலருந்து ஒரு வாரத்துக்கு லீவ் போட்டுருக்கேன்.. கல்யாண பர்சேசெல்லாம் இருக்கில்லையா, அதான்.. சொல்லுங்க..’ என்றார்..
‘அவசரமா ஒன்னுமில்ல.. ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.. அதான் ஒங்கள கூப்ட்டேன்..’
இதென்னடா சோதனை என்று நினைத்த பாபு சுரேஷ்.. ‘என்ன சொல்லுங்க?’ என்றார்.
‘ஒங்க பேங்க பத்தி ஒரு நியூஸ் பேப்பர் சைட்ல வந்திருக்காம். என் பையந்தான் ஃபோன் பண்ணி சொன்னான்.. அதான் ஒங்களுக்கு சொல்லலாம்னு கூப்ட்டேன்.. யாரோ சோமசுந்தரமாமே ஒங்க போர்ட் மெம்பராம்.. ஒரு ஃபைனான்ஸ் கம்பெனியில லோன் வாங்கிட்டு கட்டாமயே இருக்காராம்..’
ஓ! அதான் விஷயமா? அவருக்கும் அந்த விஷயம் தெரிந்துதானிருந்தது.. ஏதோ ஒரு கடனை அடைக்கத்தான் புதிதாய் பணிக்கு ஆட்களை சேர்க்கும் திட்டத்தைக் கொண்டுவருவதாக சோமசுந்தரம் தன்னிடம் கூறியது நினைவுக்கு வர.. இதுதான் அதுவா?
‘சரிங்க சம்பந்தி.. இன்ஃபர்மேஷனுக்கு ரொம்ப நன்றி..’ என்றவர் உடனே இணைப்பைத் துண்டித்தால் நன்றாயிருக்காதே என்று நினைத்து, ‘கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது..?’ என்றார்..
தொடரும்..
தனக்கு முன்பு இருந்த முதல்வர் வர்த்தகம் செய்வதில் படு சூரராக இருந்திருக்கிறார் என்பது அறிக்கையைப் பார்த்தாலே தெரிந்தது. அதற்கு ஈடாக வர்த்தகத்தை நடத்திச் செல்வதே சிரமமாக இருக்கும் போலிருக்கிறதே என்று நினைத்தார்.
அதுதான் தன்னுடைய முதல் இலக்கு என்று குறித்துக்கொண்டார். நல்ல வேளையாக அவர் பதவியேற்ற நேரம் புது நிதியாண்டு துவங்கி நாற்பத்தைந்து நாட்களே கடந்திருந்தன. எதிர் வரும் வருடத்திற்கென முந்தைய முதல்வர் குறித்திருந்த இலக்கை நிதியாண்டின் அரையாண்டிற்குள்ளாகவே அடைந்தால் மட்டுமே அவருடைய கடந்த வருட வெற்றியை தம்மால் முறியடிக்க முடியும் என்று நினைத்தார்.
அடுத்து அதற்கு தாம் என்னென்ன செய்யவேண்டும் என்று சிந்திக்கலானார்.
முதல் முதலாக அவருக்கு தேவைப்பட்டது தனக்கு வங்கியின் வர்த்தகத்தைக் குறித்து உடனடியான (Instant) அதே சமயம் நம்பத் தகுந்த (Dependable) புள்ளி விவரங்கள்..
அவருக்கு முன்னாலிருந்த அறிக்கைகளின் மென் நகல்கள் (Soft copy) கிடைத்தால் அதை தன்னுடைய மடிக்கணினியில் சேர்த்துக்கொள்ளலாமே என்று நினைத்த மாதவான் காரியதரிசி சுபோத்தை இண்டர்காமில் அழைத்தார்.
அவருடைய தேவையை கேட்ட சுபோத் சங்கடத்துடன் நெளிந்தான்.
‘என்ன சுபோத்.. If you don’t have it tell me so.. Don’t feel embarrassed..’
சுபோத் தயக்கத்துடன், ‘Yes Sir, I don’t have it.’ என்றான்.
‘Will anyone in the Bank have it? EDP? Or Accounts?’
‘No Sir.. Our computerisation is not uptodate. We still collect data either over phone or by emails from the branches.’
‘Phones and emails?’ என்று சிரித்தார் மாதவன். ‘Which century are you living in? You don’t have a centralised banking software where the data is available at HO at the day-end?’
‘No Sir.. We don’t have.. We used to gather data through the weekly Friday Statements received from the branches, tabulate it in the format required by our earlier Chairman and present to him. He never required that in softcopy.. That’s why..’
மாதவன் பதில் பேசாமல் அவனையே பார்த்தார் சிறிது நேரம்.. ‘OK that’s it then.. No use in worrying about something which is not there.. Well.. you do one thing.. take all these reports.. feed it in your PC.. prepare a spread sheet and give it me in a floppy..’
சுபோத்துக்கு அவர் கூறியது பாதிதான் புரிந்தது என்றாலும் சரி, சரி என்று தலையை அசைத்துவிட்டு அவருடைய மேசையின் மீதிருந்த அறிக்கைகள் அடங்கிய கோப்பை எடுத்துக்கொண்டு நகர மாதவன் அவனை தடுத்து நிறுத்தினார்.
‘Subodh, do we have central Server in our building which anyone in the building could access?’
சுபோத் ஒன்றும் விளங்காமல் விழிக்க மாதவன் வாய்விட்டுச் சிரித்தார். முதலில் இவனை மாற்ற வேண்டும்..
‘It appears you are hearing this concept for the first time in your life.. Am I right Subodh?’
சுபோத் பரிதாபமாக தலையை அசைக்க.. ‘சரி நீங்க போய் நான் செய்த காரியத்த செஞ்சிக்கிட்டு வாங்க.. And find out whether anyone who has some knowledge about computers in this building and ask him to come to my cabin.. Fast..’
‘Sir, shall I send the head of EDP?’
சரி என்று மாதவன் தலையை அசைக்க தப்பித்தால் போதும் என்று சுபோத் தலைமறைவானான்.
சற்று நேரத்தில் வந்து சேர்ந்த EDP தலைவரைப் பார்த்தான். முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன்.
மாதவன் சற்று முன் சுபோத்திடம் கேட்ட அதே கேள்விகளை அவரிடமும் கேட்டார்.
அவர் தயக்கத்துடன், ‘Sir I might require at least ten minutes to explain what we do here. Could you spare Sir?’ என மாதவன் தன் அருகில் இருந்த இருக்கைகளில் ஒன்றைக் காண்பித்தார்.
அந்த இளைஞர் அடுத்த பத்து நிமிடங்களில் சுருக்கமாக, அதே சமயம் கோர்வையாக வங்கியில் இருந்த கணினி மயமாக்கலை விவரித்த விதம் மாதவனுக்கு மிகவும் பிடித்தது.. Poor Guy.. He deserves a break.. என்று மனதுக்குள் நினைத்தார்.
‘OK Mr...?’
‘Siva Sir.. Sivaramakrishnan.. I am a MCA.. Banking Officer only.. But just like Fernando Sir.. I took up to learing computer myself.. I did my MCA through distance education..’
அவர் கேட்காமலே வந்து விழுந்த விவரங்களைக் கேட்ட மாதவன், ‘You said something about one Mr.Fernando.. Is he the Principal of our Training College?’
‘Yes Sir.. அவரே தான்.. சீனியர் லெவல்ல இருக்கற எக்ஸ்க்யூட்டிவ்ஸ்ல அவர் மட்டும் தான் இதுல இண்ட்ரஸ்ட் இருக்கறவர்.. ஆனால் அவர் எவ்வளவு முயற்சி பண்ணியும் மேலருக்கற எக்ஸ்க்யூட்டிவ்ஸ் யாருமே சப்போர்ட் பண்ணாததுனால மேற்கொண்டு ஒன்னும் செய்ய முடியல சார்..’
மாதவனுக்கு முழுவதும் புரிந்தது.. So.. that’s where I should start.. Carryout massive computerisation.. That’s the need of the hour.. I should first start with the HO..
தன் எதிரில் நின்ற இளைஞரைப் பார்த்தார்.. அவருடைய முகத்திலிருந்த எதிர்பார்ப்பு மாதவனுக்கு புரிந்தது.. இவராவது தன்னுடைய அபிலாஷைகளை நிறைவேற்றி வைப்பாரா என்ற அந்த எதிர்பார்ப்பை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானித்தார்.
‘ஓக்கே.. சிவா.. I am going to give you a free hand.. If you want to take the help of Mr.Fernando.. go to the Training College and sit with him.. I will give you two weeks.. Come back with a comprehensive, cost effective project to set up a hundred node LAN in our building.. We should be able to start with the automation of at least ten to fifteen percent of our operation in this building.. Find out whether any suitable software is available in the market and give me the total cost to set up such a system in our building..’
அவர் பேசப் பேச சிவராமகிருஷ்ணனின் முகத்தில் ஏற்பட்ட பிரகாசம் அவரையும் தொற்றிக்கொள்ள புன்னகையுடன் எழுந்து சென்று அவரைத் தோளில் தட்டிக்கொடுத்து.. ‘Go ahead.. But keep this secret.. No one other than Mr.Fernando should know anything about this assignment.. Is that clear?’ என்றார்.
‘Yes Sir.. I will be careful Sir..’ என்றவாறு மகிழ்ச்சியுடன் அவர் விடைபெற்று செல்ல.. Yes.. At least I could do something positive today.. after a dreadful day... என்றவாறு தன் இருக்கைக்கு திரும்பி சட்டென்று நினைவுக்கு வந்தவராய் தன்னுடைய செல்qபோனை எடுத்து தன் மகளுக்கு டயல் செய்தார்..
****
சோமசுந்தரத்தின் ராஜிநாமாவை தலைமையகத்திலிருந்த தன்னுடைய நண்பர் வழியாக கேள்விப்பட்ட பாபு சுரேஷ் ஒரு நிமிடம் தன்னையே நம்பமுடியாமல் தன்னுடைய செல்qபோன் திரையைப் பார்த்தார், ‘என்ன சாம் சொல்றீங்க? ஏன் என்ன காரணம்?’ என்றார்..
‘சரியா தெரியல சார்.. போர்ட் மீட்டிங் முடிஞ்சி வெளிய வந்த நம்ம ஏ.ஜி.எம் தான் சொன்னார். சார் போர்ட்லருந்து ரிட்டையர் ஆவறதுக்கு இன்னும் ஆறுமாசம் இருக்கற சமயத்துல எதுக்கு திடீர்னு இந்த டிசிஷன்னு யாருக்குமே புரியல.. அதான் ஒங்களுக்கு ஏதாச்சும் தெரியுமான்னு கேக்கலாம்னுதான் கூப்ட்டேன்.. இப்பத்தான் தெரியுது ஒங்களுக்கும் இது தெரியாதுன்னு.. வச்சிடறேன் சார்..’
தான் அமர்ந்திருந்த சோஃபாவில் இருந்து எழுந்து ஹாலில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தார். அவருடைய மனைவியும் மகளும் திருமண பர்சேசுக்காக சென்றிருக்கவே அமைதியாய் இருந்த வீட்டில் அவரால் நிதானமாக சிந்திக்க முடிந்தது.
சோமசுந்தரத்தின் ராஜிநாமாவின் பின்னால் என்ன இருக்கிறது? இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரை சந்தித்தபோதுகூட மனிதர் இதைப் பற்றி கோடிட்டுக்கூட காட்டவில்லையே..
அப்படியொரு எண்ணம் அவருக்கு இருந்திருந்தால் எதற்காக இன்று காலையில் தன்னை மனித வள இலாக்காவிற்கு தலைவராக்க வேண்டும்?
எங்கயோ இடிக்குதே..
இது ஒருவேளை அந்த நாடாருடைய வேலையாக இருக்குமோ.. இருக்கும்.. காலையில் சேர்மனின் காபினில் வைத்து டாக்டர் தன்னை பரிந்துரைத்தபோதே அவருடைய முகம் முற்றிலுமாக மாறிப்போனதை கவனிக்க தவறவில்லை அவர்..
அவருடைய வேலையாகத்தான் இருக்கும். ஒருவேளை டாக்டருடைய ஆட்களை சேர்க்கும் திட்டம் அவருக்கு தெரிந்திருக்குமோ..
டாக்டர் அவரைக் கலந்தாலோசிக்காமலா இந்த திட்டத்தை வகுத்திருப்பார்? இருக்காது.. அவர் தலைகீழாக நின்றாலும், எத்தனைத்தான் ரகசியமாக வைத்திருந்தாலும் அந்த நாடாருடைய கழுகுக் கண்களிலிருந்து எதுவுமே தப்பாது என்று வங்கியின் எல்லா அதிகாரிகளுக்கும் தெரிந்துதானிருந்தது..
ஆகவே அது காரணமாயிருக்க முடியாது..
வேறென்ன?
சை.. இன்னும் சற்று நேரம் அலுவலகத்திலேயே இருந்திருக்கலாம். அவசரப்பட்டு கிளம்பி வந்தது தவறாகப் போய்விட்டது..
சோமசுந்தரம்தான் தன்னுடைய பாதுகாவலர் என்பது அவருக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது. இப்போது அவர் இயக்குனர் குழுவில் இல்லாதது தம்மை எந்தவிதத்தில் பாதிக்கப் போகிறதோ என்று நினைத்து கலங்கினார் பாபு சுரேஷ்..
நான்கைந்து வருடங்களுக்கு முன் சோமசுந்தரத்தின் மருத்துவமனைக்கு அவர் நியதிகளை மீறி கடனளித்த விவரத்தை, ஏற்கனவே ரிசர்வ் வங்கி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்த விவரத்தை, மீண்டும் ஆராய்ந்து தன் மீது பாய்வார்களோ என்ற அச்சம் அவரை வெகுவாக கலக்க.. சோமசுந்தரத்தை தொலைப்பேசியில் அழைத்தாலென்ன என்ற ஆலோசனையுடன் ஹாலின் மறுகோடியிலிருந்த தொலைப்பேசியை நோக்கி நடந்தார்..
அதற்கெனவே காத்திருந்ததுபோல தொலைப்பேசி ஒலிக்க பதற்றத்துடன் சென்று எடுத்தார். ‘என்ன சம்பந்தி இந்த நேரத்துல வீட்ல இருக்கீங்க?’ என்ற குரல் அவரை திடுக்கிட வைத்தது..
சமாளித்துக்கொண்டு, ‘சொல்லுங்க சம்பந்தி.. நான் இன்னையிலருந்து ஒரு வாரத்துக்கு லீவ் போட்டுருக்கேன்.. கல்யாண பர்சேசெல்லாம் இருக்கில்லையா, அதான்.. சொல்லுங்க..’ என்றார்..
‘அவசரமா ஒன்னுமில்ல.. ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.. அதான் ஒங்கள கூப்ட்டேன்..’
இதென்னடா சோதனை என்று நினைத்த பாபு சுரேஷ்.. ‘என்ன சொல்லுங்க?’ என்றார்.
‘ஒங்க பேங்க பத்தி ஒரு நியூஸ் பேப்பர் சைட்ல வந்திருக்காம். என் பையந்தான் ஃபோன் பண்ணி சொன்னான்.. அதான் ஒங்களுக்கு சொல்லலாம்னு கூப்ட்டேன்.. யாரோ சோமசுந்தரமாமே ஒங்க போர்ட் மெம்பராம்.. ஒரு ஃபைனான்ஸ் கம்பெனியில லோன் வாங்கிட்டு கட்டாமயே இருக்காராம்..’
ஓ! அதான் விஷயமா? அவருக்கும் அந்த விஷயம் தெரிந்துதானிருந்தது.. ஏதோ ஒரு கடனை அடைக்கத்தான் புதிதாய் பணிக்கு ஆட்களை சேர்க்கும் திட்டத்தைக் கொண்டுவருவதாக சோமசுந்தரம் தன்னிடம் கூறியது நினைவுக்கு வர.. இதுதான் அதுவா?
‘சரிங்க சம்பந்தி.. இன்ஃபர்மேஷனுக்கு ரொம்ப நன்றி..’ என்றவர் உடனே இணைப்பைத் துண்டித்தால் நன்றாயிருக்காதே என்று நினைத்து, ‘கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது..?’ என்றார்..
தொடரும்..
22.7.06
மு.கவுடன் ஒரு பேட்டி 2(நகைச்சுவை)
(தன் சட்டை பையிலிருந்து சற்று முன் காவல் அதிகாரியிடம் காட்டிய கடிதத்தை எடுத்து விறைப்புடன் நீட்டுகிறார். அது அங்கிருந்த கானா பூனா குழுவினருள் எவருக்கும் விளங்காமல் நிற்க அப்போதுதான் முதலமைச்சர் வீட்டிலிருந்து வெளியே வரும் தயாநிதி மாறன் புன்னகையுடன் இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து செல்கிறார்.)
கவு: (செந்திலைப் பார்க்கிறார்) டேய்.. இந்தாளுக்கு டெல்லியில வேற வேலையே இருக்காதாடா?
செந்: (சிரிக்கிறார்) சோனியாம்மா இந்தியாவுல இப்ப இல்ல போலருக்குண்ணே.. அதான்..
கவு: (வியப்புடன்) அட.. தோ பார்றா.. ஒனக்குக் கூட ஒலக விசயமெல்லாம் தெரிஞ்சிருக்கு? டேய் நீ தேறிட்டடா..
செந்: (பெருந்தன்மையுடன்) என்னண்ணே நீங்க.. கிட்னியில்லாத ஒங்களுக்கே இதெல்லாம் தெரிஞ்சிருக்கறப்போ.. எனக்கு.. இதெல்லாம் வெரி பிம்பிள்ணே..
கவு: (திரும்பி முறைக்கிறார்) டேய்.. அது பிம்பிள் இல்ல.. சிம்பிள்.. இதுக்குத்தான் சொல்றது ஒன்னெய மாதிரி ஆளுங்கள கொஞ்சம் தள்ளியே வச்சிருங்கணுங்கறது.. பொத்திக்கிட்டு வா.. அங்க அவருக்கு முன்னால வச்சிக்கிட்டு இந்த மாதிரி எதையாச்சும் ஒளறுனே மவனே அங்கயே பொலி போட்டுருவேன், சொல்லிட்டேன்.
(எதிரே தயாநிதி மாறன் அவர்களுக்காக முதலமைச்சரின் அறை வாசலில் காத்திருப்பது தெரிகிறது. கவுண்டர் அவசர, அவசரமாக அவரை நோக்கி செல்ல அவரை ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்த செந்திலின் கையிலிருந்த மைக்கிலிருந்து நீளமாக தொங்கிய கேபிள் ஹாலிலிருந்த பளபளவென்று பாலிஷ் செய்யப்பட்டு மலர்கொத்தை தாங்கி நின்ற பித்தளை பூச்செம்பில் சுற்றிக்கொள்ள அது அப்படியே சாய்ந்து அதிலிருந்த பூக்கொத்தும், தண்ணீரும் அறையெங்கும் சிதறுகிறது. பூச்செம்பு விழுந்த ஒலி வீடெங்கும் எதிரொலிக்க வாசலில் நின்ற கானா பூனா படை வீரர்கள் பதற்றத்துடன் செந்திலை நோக்கி விரைந்து நீட்டிய துப்பாக்கிகளுடன் அவரை சூழ்ந்துக்கொள்ள சற்று நேரத்தில் அந்த இடமே பரபரப்பாகிறது. தயாநிதி மாறனுடைய தோள்களைப் பற்றியவாறு அறையை விட்டு வெளியே வந்த முதலமைச்சர் கீழே விழுந்துகிடந்த பூச்செம்பையும் செந்திலை சுற்றி நின்ற வீரர்களையும் பார்த்து தனக்கே உரிய பாணியில் புன்னகை செய்கிறார்.)
மு.அ: என்னப்பா செந்தில்.. படத்துலன்னா இப்ப நீங்க செஞ்சத பார்த்து தியேட்டரே கைதட்டல்ல அதிர்ந்து போயிருக்கும்.. இது முதலமைச்சர் வீடாயிற்றே.. ஏதோ தற்கொலைப் படையோ என்று இவர்கள் பதறிப்போய்ட்டாங்க போலருக்கு.. (என்றவாறு சிரிக்க தயாநிதி மாறனும் அவருடன் ஹாலில் இருந்த மு.அவின் காரியதரிசி மற்றும் அதிகாரிகளும் அவருடைய சிரிப்பில் கலந்துக்கொள்கின்றனர். வேறு வழியில்லாமல் கவுண்டரும், செந்திலும் சிரிக்க கானா பூனா படையினர் குழப்பத்துடன் வாசலை நோக்கி செல்கின்றனர்).
(மு.அ.வும் தயாநிதியும் திரும்பி அவருடைய அறைக்குள் திரும்ப கவுண்டர் செந்திலை முறைக்கிறார்)
கவு: டேய்.. ஏண்டா நா போற எடத்துலல்லாம் வந்து மானத்த வாங்கறே? (பல்லைக் கடிக்கிறார்)
செந்: சரிண்ணே.. ஏதோ அவசரம்.. அதுக்காக போன வாரம் சொன்ன அதே டைலாக்கையே எடுத்துவிடாதீங்க.. போங்க.. அய்யா காத்துக்கிட்டிருக்காருல்லே.. (அவர் கவுண்டரை முந்திக்கொண்டு செல்ல முயல.. கவுண்டர் அவரை பிடித்து நிறுத்துகிறார்..)
கவு: டேய்.. நிதானமா போடா.. நீ பாட்டுக்கு அவர் மேலயே போய் விழுந்துருவ போலருக்கு..
மு.அ:(புன்னகையுடன் அவர்களை அமருமாறு பணிக்கிறார்) என்ன கவுண்டர் இவரோட ஜோடியா வந்துருக்கீங்க? நேத்து ஒங்க பேப்பர்லருந்து பேட்டிக்கு ரெண்டு பேர் வராங்கன்னுதான் சொன்னதா நினைவு.. ஆனா அது நீங்களாருப்பீங்கன்னு நான் நெனச்சுக்கூட பாக்கல.. பகுதி நேர பணியாக இதை செய்கிறீர்களோ?
கவு: (தனக்குள்) ஆம்மா.. முழு நேர பணியே இதுதான்னு இவருக்கு தெரியாது போலருக்கு.. (அசடு வழிகிறார்) இல்லீங்கய்யா.. இந்த மாதிரி நட்சத்திர பேட்டிங்களுக்கு மட்டுந்தான் போறது.. ஒங்க பேட்டிதான் எங்களுக்கு மொதல்..
செந்: (பதற்றத்துடன்) எண்ணே.. போன வாரம் மேடத்த புடிச்சோமே..
கவு: (அவரைப் பார்த்து பல்லை நறநறவென கடிக்கிறார்) அடிக்குரலில் டேய்.. சும்மா பொத்திக்கிட்டு இருன்னு சொன்னேன்லே..
(மு.அ. புன்னகையுடன் தன் பேரனை பார்க்கிறார். அவரும் சிரிக்கிறார்)
கவு: (அசடு வழிந்தவாறு) இந்த மாதிரிதாங்க. சமயா சமயம் தெரியாம ஒளறிக்கிட்டே இருப்பான்.. நீங்க கண்டுக்குறாதீங்க..
(மு.அ. சிரித்துக்கொண்டே சரி என்பதுபோல் தலையை அசைக்கிறார். பேட்டி துவங்கட்டும் என்பதுபோல் சைகை காட்டுகிறார். செந்தில் எழுந்து அவரையும் மாறனையும் சேர்த்து புகைப்படம் எடுக்க போஸ் தேட.. கவுண்டர் தொண்டையை கனைத்துக்கொண்டு துவங்குகிறார்)
கவு: (தயக்கத்துடன்) அய்யா ஒங்களுக்கு நாங்க எந்த பேப்பர்லருந்து வரோம்னு தெரியும்லயா?
மு.அ: (ஆம் என்றவாறு தலையை அசைக்கிறார்) நமது எம்.ஜி.ஆர் பத்திரிகைதானே? மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று அண்ணா சொன்னார். அதற்காக உங்களுடைய பத்திரிகையை மணக்கும் என்று சொல்ல மாட்டேன்.. அதனுடைய துர்நாற்றம்தான் தமிழகமெங்கும் வீசுகிறதே.. ஒரு நாளாவது என்னுடைய பேட்டி அதில் வந்து மணம் வீசட்டுமே என்றுதான் ஒத்துக்கொண்டேன். (சட்டென்று நினைவுக்கு வந்தவராய்) ஒலிப்பதிவு இயந்திரத்தைக் கொண்டு வந்துள்ளீர்களா?
கவு: ஆமாங்கய்யா.. டேய், அத அய்யாக்கிட்ட காண்பியேண்டா.. (செந்தில் தன் ஜோல்னா பையிலிருந்த பழைய காலத்து ரெக்கார்டரை எடுத்து தன் மடியில் வைத்து ஆன் செய்ய அதிலிருந்து கரமுரா சப்தத்துடன் முந்தைய வாரம் பதிவு செய்திருந்த ஜெ. மேடத்தின் குரல் கேட்கிறது. அதில் அவர் மு.க. வுக்கு எதிராக சற்றே கேவலமான வார்த்தைகளால் கூறியிருந்த ஒரு சில கருத்துகள் ஒலிக்க கவுண்டர் பாய்ந்து சென்று அதை நிறுத்திவிட்டு அடிக்குரலில் ‘டேய்.. --------------- தலையா.. என்னைய அடிவாங்க வைக்கறதுன்னே முடிவு பண்ணிட்டியா? வர்றப்போதே இந்த சனியன மாத்திருக்கக் கூடாது..?’ என்கிறார்)
(ஜெ. மேடத்தின் வார்த்தைகளை கேட்டதும் கோபத்தில் சிவந்துபோன முதலமைச்சரின் முகம் அடுத்த நிமிடமே சகஜ நிலைக்கு வருகிறது. ஆனால் மாறனின் சிவந்த முகம் கோபத்தில் மேலும் சிவக்க கவுண்டர் கதிகலங்கிப் போகிறார்.)
மு.க: (பெருந்தன்மையுடன் மாறனை பார்க்கிறார்) போகட்டும் விடு. இதைத்தான் நாற்றம் என்று சொன்னேன்.. எ.க தலைவி இப்படி பேசாவிட்டால்தான் ஆச்சரியப்படவேண்டும்.. (கவுண்டரைப் பார்க்கிறார்) கவுண்டரே.. நா புதுசா ஒரு பாக்கெட் டேப் ரெக்கார்டரை தரேன்.. அதுல ரெக்கார்ட் செஞ்சி ஒங்க எடிட்டர் கிட்ட குடுத்து அசத்துங்க.. (மாறனைப் பார்க்கிறார்) தம்பி சென்ற முறை டெல்லியிலிருந்து கொண்டுவந்தாயே அந்த கையடக்க ஒலிப்பதிவியை இவரிடம் கொண்டுவந்து கொடு..
கவு:(தனக்குள்) அதென்ன பதிவி.. கிதிவின்னுட்டு.. எல்லாத்துக்கும் ஒரு தமிழ் பேர் வச்சிருவாங்கய்யா. வாய்லயே நொளையமட்டேங்குது
மு.அ: (சிரிக்கிறார்) அய்யா கவுண்டரே.. தமிழை செம்மொழியாக்க நாம் என்ன பாடுபட்டோம் என்பது உங்களுக்கு தெரியாது.. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதுதான் நம் தாரகை மந்திரம். ஆகவே டேப் ரெக்கார்டரை ஒலிப்பதிவி என்பதுதான் சரி.. நீங்கள் கேளுங்கள்.. (மாறன் தான் கொண்டுவந்த ரெக்கார்டரை குனிந்து மு.க. வின் வாய்க்கு சற்று முன்பு பிடித்துக்கொள்கிறார்)
கவு: (தயக்கத்துடன்) அய்யா.. நேத்தைக்கு நம்ம பேப்பர்ல ஒரு நியூஸ் பாத்தேங்க.. அதப்பத்தி ஒங்கக்கிட்ட ரெண்டு வார்த்தை...
மு.க: (புன்னகையுடன்) தயங்காமல் கேளுங்கள்..
கவு: ஒங்க உத்தரவின்பேர்ல அமைச்சரவை கூட்டம் நடத்தற எடத்த வாஸ்த்து காரணமா மாத்தனீங்கன்னு மேடம் குத்தம் சொல்லியிருக்காங்களே அதப்பத்தி..
(முதலமைச்சர் பதிலளிக்க முனைவதற்குள் மாறன் குறுக்கிட்டு): யார்யா மேடம்? (முதலமைச்சர் உடனே அவரை அமர்த்துகிறார்)
மு.க: (மாறனைக் காட்டி) இள ரத்தம் அல்லவா? அவர் கூறியதை எழுதிவிடாதீர்கள். இதற்கு நான் நேற்றே பதிலளித்துவிட்டேன்.. இன்றைய தினத்தாள்களிலும் வந்திருக்கின்றன.. இருந்தாலும் கூறுகிறேன். வாஸ்து என்பதெல்லாம் உங்கள் மேடத்திற்குத்தான் அத்துப்படி.. கற்புக்கரசி கண்ணகியின் சிலையையே அடியோடு பெயர்த்தெடுத்தவராயிற்றே.. நான் செய்ததெல்லாம் வெறும் இட வசதிக்காகவே என்பது அவருக்கும் தெரியும். என்றாலும் எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்ற கொள்கையுடையவரல்லாவா? அவர் அப்படித்தான் பேசுவார். அடுத்த கேள்வி..
(கவுண்டர் தனக்கே உரிய பாணியில் நக்கலாக தொடர்ந்து கேள்விகளைக் கேட்கிறார். மாறன் ஒவ்வொரு கேள்வியின் இறுதியிலும் கோபத்துடன் அவரை முறைக்க முதலமைச்சர் பதற்றமடையாமல் அதே மாறாத புன்னகையுடன் பதிலளிக்கிறார். செந்தில் தலையிலடித்துக்கொண்டு கவுண்டரின் கேள்விகளையும் முதலமைச்சரின் பதில்களையும் தான் கொண்டுவந்திருந்த பேடில் (pad) அவருக்கே விளங்காதவகையில் கிறுக்கிவைக்கிறார்)
(இறுதியில் வழக்கம் போலவே கவுண்டர் செந்திலைப் பார்க்கிறார்.)
கவு: டேய்.. நீ ஏதாச்சும் கேக்கணுமாடா?
செந்: (வெளியே ஓடுவதற்கு தயாராக எழுந்து நின்றுகொள்கிறார்) அய்யா.. நான் கொஞ்சம் எடக்கு மடக்காத்தான் கேப்பேன்.. இவர நெனச்சாத்தான் பயமாருக்கு அதான்.. (மாறனை காட்டுகிறார்)
(முதலமைச்சர் புன்னகையுடன் மாறனை பார்த்து உள்ளே போ என்று சைகை காட்டுகிறார். ஆனால் அவர் நகர்வதாய் தெரியவில்லை. ஆகவே நிலமையை சமாளிக்க சாதுரியமாக முதலமைச்சர் செந்திலைப் பார்க்கிறார்): கேளுங்க செந்தில். ஆனா அதுக்கு முன்னால அந்த வாழப்பழ காட்சியை கொஞ்சம் நீங்க ரெண்டு பேரும் நடிச்சி காட்டணும்.. அதுக்கப்புறந்தான் ஒங்க கேள்விக்கு பதில்.. என்ன கவுண்டரே?
கவு: (தனக்குள்) ஆம்மா, ரொம்ப முக்கியம். இதுவரைக்கும் இவர் சொன்ன பதிலுங்கள கொண்டு கொடுத்தாலே எடிட்டர் என்ன பண்ணுவார்னு தெரியல.. இதுல இது வேறயா... (முதலமைச்சர் தன்னையே பார்ப்பது தெரிய.. சமாளித்துக்கொண்டு பல்லை காட்டுகிறார்) என்னய்யா.. அதுவா? செஞ்சிரலாங்கய்யா.. (செந்திலை பார்த்து முறைக்கிறார்) டேய்.. என்ன டைலாக்கெல்லாம் ஞாபகம் இருக்கா.. இங்க ப்ரம்டிங்லாம் கெடைக்காதுறா..
செந்: (கேலியுடன் சிரிக்கிறார்) என்னண்ணே.. அதான் கிட்னிய தட்டிவிட்டுக்கிட்டேருக்கேன்லே.. (தலையை தட்டிக்கொள்கிறார்)
(விவரம் புரியாமல் முதலமைச்சரும் மாறனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள.. மாறன் புரிந்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்.. பிறகு ‘’மூளை’ என்று வாயசைக்க முதலமைச்சரும் புரிந்துக்கொண்டு வாய்விட்டு சிரிக்கிறார். கவுண்டரின் முகம் அஷ்டகோணலாகிறது. செந்திலைப் பார்த்து முறைத்தவாறு தன் தலையில் அடித்துக்கொள்கிறார்)
செந்: என்னண்ணே.. ஒங்களுக்கும் கிட்னி ப்ராப்ளமா?
(முதலமைச்சர், மாறன் இருவரும் வாய்விட்டு உரக்க சிரிக்க வீட்டினுள் இருந்த தயாளு அம்மாள் மற்றும் குடும்பத்தினரும், வாயிலிலிருந்த காரியதரிசியும் அதிகாரிகளும் ஓடிவந்து மு.க. மற்றும் மாறனின் சிரிப்பின் அர்த்தம் விளங்காமல் கவுண்டர் மற்றும் செந்தில் ஜோடியின் முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்து ஏதோ காமடி செய்திருக்கிறார்கள் என்பதுமட்டும் விளங்க அவர்களும் உரக்க சிரிக்க செந்தில் கேட்கவந்த கேள்வியை மறந்து போகிறார்.)
கவு: (தனக்குள்) அப்பாடா. எப்படியோ போன வாரம் மாதிரி இவன் எதையாச்சும் எடக்கு மடக்கா கேட்டு அடிவாங்காம தப்பிச்சோமே.. இத்தோட போயிருவோம். (செந்திலைப் பார்த்து வாடா போயிரலாம் என்பதுபோல் சைகைக் காட்டுகிறார். அவரும் புரிந்துக்கொண்டு தன்னுடன் கொண்டுவந்திருந்த சகலதையும் அள்ளிக்கொண்டு வாயிலை நோக்கி நகர்கிறார்)
(மாறன் தன் கையில் இருந்த ஒலிப்பதிவியை அணைத்து கவுண்டரிடம் நீட்டுகிறார். ஏதோ தீயை தொட்டதுபோல் பின்வாங்குகிறார் கவுண்டர்)
மு.அ: (புன் சிரிப்புடன்) என்ன கவுண்டரே. ஒலிப்பதிவி வேண்டாமா? பிறகு என்ன எழுதுவீர்கள்?
கவு: (கும்பிடுகிறார்) அய்யா.. வேணாம்யா.. நாங்களே எதையாச்சும் எங்க பாணியில எழுதிக்கறோம்.. நீங்க பாட்டுக்கு என்னென்னமோ சொல்லி வச்சிருக்கீங்க.. அத கொண்டு போனேன்னு வச்சிக்குங்க.. நம்ம கதி அதோகதிதான்.. ஆள விடுங்க.. டேய் வாடா.. போன வாரம் மாதிரி ஆகித்தொலையப் போவுது..
மு.அ: (புன்சிரிப்புடன்) அதென்ன கவுண்டரே போன வாரம்? இதுதான் முதல் நட்சத்திர பேட்டின்னீங்க?
கவு: (அவசரமாக நடையைக் கட்டுகிறார்) வாய் தவறி வந்திருச்சிய்யா.. ஆள விடுங்க.. நாங்க அம்பேல்.. (அவருடைய ஒட்டத்தைக் கண்டு வாசலில் நின்றிருந்த கானா பூனா படையினர் பதறியடித்து அவரை வழிமறிக்க மாறன் புன்சிரிப்புடன் அவர்களை விட்டுவிடுங்கள் என்று சைகை காட்டுகிறார்).
(இருவரும் தட்டு தடுமாறி அவர்களுடைய வாகனத்தில் ஏறி அமர வாகனம் வேகமெடுத்து பறக்கிறது. மாறனும் உடனிருந்தவர்களும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டு கலைந்து செல்கின்றனர்)
(அடுத்த நாள் காலை நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் வெளியாயிருந்த தன்னுடைய பேட்டியை படித்து வாய்விட்டு சிரிக்கிறார் முதலமைச்சர். பத்திரிகையலுவலகத்திலோ போயஸ் கார்டனிலிருந்து சற்று முன் தொலைப்பேசியில் வந்த கோபக்கணைகளில் காயமுற்று நொந்துபோய் தலையை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார் எடிட்டர் . சட்டசபையில் அ.இ.அ.தி.மு.கவினர் இதை குறித்து விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானத்தைக் கொண்டுவருகின்றனர். ஆளுங்கட்சியினரின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட இருக்கையில் இருக்க வேண்டிவந்த தன்னுடைய தலைவிதியை நொந்துக்கொண்டு மவுன சிலையாய் அமர்ந்திருக்கிறார் எ.க. தலைவி..)
நிறைவு.
கவு: (செந்திலைப் பார்க்கிறார்) டேய்.. இந்தாளுக்கு டெல்லியில வேற வேலையே இருக்காதாடா?
செந்: (சிரிக்கிறார்) சோனியாம்மா இந்தியாவுல இப்ப இல்ல போலருக்குண்ணே.. அதான்..
கவு: (வியப்புடன்) அட.. தோ பார்றா.. ஒனக்குக் கூட ஒலக விசயமெல்லாம் தெரிஞ்சிருக்கு? டேய் நீ தேறிட்டடா..
செந்: (பெருந்தன்மையுடன்) என்னண்ணே நீங்க.. கிட்னியில்லாத ஒங்களுக்கே இதெல்லாம் தெரிஞ்சிருக்கறப்போ.. எனக்கு.. இதெல்லாம் வெரி பிம்பிள்ணே..
கவு: (திரும்பி முறைக்கிறார்) டேய்.. அது பிம்பிள் இல்ல.. சிம்பிள்.. இதுக்குத்தான் சொல்றது ஒன்னெய மாதிரி ஆளுங்கள கொஞ்சம் தள்ளியே வச்சிருங்கணுங்கறது.. பொத்திக்கிட்டு வா.. அங்க அவருக்கு முன்னால வச்சிக்கிட்டு இந்த மாதிரி எதையாச்சும் ஒளறுனே மவனே அங்கயே பொலி போட்டுருவேன், சொல்லிட்டேன்.
(எதிரே தயாநிதி மாறன் அவர்களுக்காக முதலமைச்சரின் அறை வாசலில் காத்திருப்பது தெரிகிறது. கவுண்டர் அவசர, அவசரமாக அவரை நோக்கி செல்ல அவரை ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்த செந்திலின் கையிலிருந்த மைக்கிலிருந்து நீளமாக தொங்கிய கேபிள் ஹாலிலிருந்த பளபளவென்று பாலிஷ் செய்யப்பட்டு மலர்கொத்தை தாங்கி நின்ற பித்தளை பூச்செம்பில் சுற்றிக்கொள்ள அது அப்படியே சாய்ந்து அதிலிருந்த பூக்கொத்தும், தண்ணீரும் அறையெங்கும் சிதறுகிறது. பூச்செம்பு விழுந்த ஒலி வீடெங்கும் எதிரொலிக்க வாசலில் நின்ற கானா பூனா படை வீரர்கள் பதற்றத்துடன் செந்திலை நோக்கி விரைந்து நீட்டிய துப்பாக்கிகளுடன் அவரை சூழ்ந்துக்கொள்ள சற்று நேரத்தில் அந்த இடமே பரபரப்பாகிறது. தயாநிதி மாறனுடைய தோள்களைப் பற்றியவாறு அறையை விட்டு வெளியே வந்த முதலமைச்சர் கீழே விழுந்துகிடந்த பூச்செம்பையும் செந்திலை சுற்றி நின்ற வீரர்களையும் பார்த்து தனக்கே உரிய பாணியில் புன்னகை செய்கிறார்.)
மு.அ: என்னப்பா செந்தில்.. படத்துலன்னா இப்ப நீங்க செஞ்சத பார்த்து தியேட்டரே கைதட்டல்ல அதிர்ந்து போயிருக்கும்.. இது முதலமைச்சர் வீடாயிற்றே.. ஏதோ தற்கொலைப் படையோ என்று இவர்கள் பதறிப்போய்ட்டாங்க போலருக்கு.. (என்றவாறு சிரிக்க தயாநிதி மாறனும் அவருடன் ஹாலில் இருந்த மு.அவின் காரியதரிசி மற்றும் அதிகாரிகளும் அவருடைய சிரிப்பில் கலந்துக்கொள்கின்றனர். வேறு வழியில்லாமல் கவுண்டரும், செந்திலும் சிரிக்க கானா பூனா படையினர் குழப்பத்துடன் வாசலை நோக்கி செல்கின்றனர்).
(மு.அ.வும் தயாநிதியும் திரும்பி அவருடைய அறைக்குள் திரும்ப கவுண்டர் செந்திலை முறைக்கிறார்)
கவு: டேய்.. ஏண்டா நா போற எடத்துலல்லாம் வந்து மானத்த வாங்கறே? (பல்லைக் கடிக்கிறார்)
செந்: சரிண்ணே.. ஏதோ அவசரம்.. அதுக்காக போன வாரம் சொன்ன அதே டைலாக்கையே எடுத்துவிடாதீங்க.. போங்க.. அய்யா காத்துக்கிட்டிருக்காருல்லே.. (அவர் கவுண்டரை முந்திக்கொண்டு செல்ல முயல.. கவுண்டர் அவரை பிடித்து நிறுத்துகிறார்..)
கவு: டேய்.. நிதானமா போடா.. நீ பாட்டுக்கு அவர் மேலயே போய் விழுந்துருவ போலருக்கு..
மு.அ:(புன்னகையுடன் அவர்களை அமருமாறு பணிக்கிறார்) என்ன கவுண்டர் இவரோட ஜோடியா வந்துருக்கீங்க? நேத்து ஒங்க பேப்பர்லருந்து பேட்டிக்கு ரெண்டு பேர் வராங்கன்னுதான் சொன்னதா நினைவு.. ஆனா அது நீங்களாருப்பீங்கன்னு நான் நெனச்சுக்கூட பாக்கல.. பகுதி நேர பணியாக இதை செய்கிறீர்களோ?
கவு: (தனக்குள்) ஆம்மா.. முழு நேர பணியே இதுதான்னு இவருக்கு தெரியாது போலருக்கு.. (அசடு வழிகிறார்) இல்லீங்கய்யா.. இந்த மாதிரி நட்சத்திர பேட்டிங்களுக்கு மட்டுந்தான் போறது.. ஒங்க பேட்டிதான் எங்களுக்கு மொதல்..
செந்: (பதற்றத்துடன்) எண்ணே.. போன வாரம் மேடத்த புடிச்சோமே..
கவு: (அவரைப் பார்த்து பல்லை நறநறவென கடிக்கிறார்) அடிக்குரலில் டேய்.. சும்மா பொத்திக்கிட்டு இருன்னு சொன்னேன்லே..
(மு.அ. புன்னகையுடன் தன் பேரனை பார்க்கிறார். அவரும் சிரிக்கிறார்)
கவு: (அசடு வழிந்தவாறு) இந்த மாதிரிதாங்க. சமயா சமயம் தெரியாம ஒளறிக்கிட்டே இருப்பான்.. நீங்க கண்டுக்குறாதீங்க..
(மு.அ. சிரித்துக்கொண்டே சரி என்பதுபோல் தலையை அசைக்கிறார். பேட்டி துவங்கட்டும் என்பதுபோல் சைகை காட்டுகிறார். செந்தில் எழுந்து அவரையும் மாறனையும் சேர்த்து புகைப்படம் எடுக்க போஸ் தேட.. கவுண்டர் தொண்டையை கனைத்துக்கொண்டு துவங்குகிறார்)
கவு: (தயக்கத்துடன்) அய்யா ஒங்களுக்கு நாங்க எந்த பேப்பர்லருந்து வரோம்னு தெரியும்லயா?
மு.அ: (ஆம் என்றவாறு தலையை அசைக்கிறார்) நமது எம்.ஜி.ஆர் பத்திரிகைதானே? மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று அண்ணா சொன்னார். அதற்காக உங்களுடைய பத்திரிகையை மணக்கும் என்று சொல்ல மாட்டேன்.. அதனுடைய துர்நாற்றம்தான் தமிழகமெங்கும் வீசுகிறதே.. ஒரு நாளாவது என்னுடைய பேட்டி அதில் வந்து மணம் வீசட்டுமே என்றுதான் ஒத்துக்கொண்டேன். (சட்டென்று நினைவுக்கு வந்தவராய்) ஒலிப்பதிவு இயந்திரத்தைக் கொண்டு வந்துள்ளீர்களா?
கவு: ஆமாங்கய்யா.. டேய், அத அய்யாக்கிட்ட காண்பியேண்டா.. (செந்தில் தன் ஜோல்னா பையிலிருந்த பழைய காலத்து ரெக்கார்டரை எடுத்து தன் மடியில் வைத்து ஆன் செய்ய அதிலிருந்து கரமுரா சப்தத்துடன் முந்தைய வாரம் பதிவு செய்திருந்த ஜெ. மேடத்தின் குரல் கேட்கிறது. அதில் அவர் மு.க. வுக்கு எதிராக சற்றே கேவலமான வார்த்தைகளால் கூறியிருந்த ஒரு சில கருத்துகள் ஒலிக்க கவுண்டர் பாய்ந்து சென்று அதை நிறுத்திவிட்டு அடிக்குரலில் ‘டேய்.. --------------- தலையா.. என்னைய அடிவாங்க வைக்கறதுன்னே முடிவு பண்ணிட்டியா? வர்றப்போதே இந்த சனியன மாத்திருக்கக் கூடாது..?’ என்கிறார்)
(ஜெ. மேடத்தின் வார்த்தைகளை கேட்டதும் கோபத்தில் சிவந்துபோன முதலமைச்சரின் முகம் அடுத்த நிமிடமே சகஜ நிலைக்கு வருகிறது. ஆனால் மாறனின் சிவந்த முகம் கோபத்தில் மேலும் சிவக்க கவுண்டர் கதிகலங்கிப் போகிறார்.)
மு.க: (பெருந்தன்மையுடன் மாறனை பார்க்கிறார்) போகட்டும் விடு. இதைத்தான் நாற்றம் என்று சொன்னேன்.. எ.க தலைவி இப்படி பேசாவிட்டால்தான் ஆச்சரியப்படவேண்டும்.. (கவுண்டரைப் பார்க்கிறார்) கவுண்டரே.. நா புதுசா ஒரு பாக்கெட் டேப் ரெக்கார்டரை தரேன்.. அதுல ரெக்கார்ட் செஞ்சி ஒங்க எடிட்டர் கிட்ட குடுத்து அசத்துங்க.. (மாறனைப் பார்க்கிறார்) தம்பி சென்ற முறை டெல்லியிலிருந்து கொண்டுவந்தாயே அந்த கையடக்க ஒலிப்பதிவியை இவரிடம் கொண்டுவந்து கொடு..
கவு:(தனக்குள்) அதென்ன பதிவி.. கிதிவின்னுட்டு.. எல்லாத்துக்கும் ஒரு தமிழ் பேர் வச்சிருவாங்கய்யா. வாய்லயே நொளையமட்டேங்குது
மு.அ: (சிரிக்கிறார்) அய்யா கவுண்டரே.. தமிழை செம்மொழியாக்க நாம் என்ன பாடுபட்டோம் என்பது உங்களுக்கு தெரியாது.. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதுதான் நம் தாரகை மந்திரம். ஆகவே டேப் ரெக்கார்டரை ஒலிப்பதிவி என்பதுதான் சரி.. நீங்கள் கேளுங்கள்.. (மாறன் தான் கொண்டுவந்த ரெக்கார்டரை குனிந்து மு.க. வின் வாய்க்கு சற்று முன்பு பிடித்துக்கொள்கிறார்)
கவு: (தயக்கத்துடன்) அய்யா.. நேத்தைக்கு நம்ம பேப்பர்ல ஒரு நியூஸ் பாத்தேங்க.. அதப்பத்தி ஒங்கக்கிட்ட ரெண்டு வார்த்தை...
மு.க: (புன்னகையுடன்) தயங்காமல் கேளுங்கள்..
கவு: ஒங்க உத்தரவின்பேர்ல அமைச்சரவை கூட்டம் நடத்தற எடத்த வாஸ்த்து காரணமா மாத்தனீங்கன்னு மேடம் குத்தம் சொல்லியிருக்காங்களே அதப்பத்தி..
(முதலமைச்சர் பதிலளிக்க முனைவதற்குள் மாறன் குறுக்கிட்டு): யார்யா மேடம்? (முதலமைச்சர் உடனே அவரை அமர்த்துகிறார்)
மு.க: (மாறனைக் காட்டி) இள ரத்தம் அல்லவா? அவர் கூறியதை எழுதிவிடாதீர்கள். இதற்கு நான் நேற்றே பதிலளித்துவிட்டேன்.. இன்றைய தினத்தாள்களிலும் வந்திருக்கின்றன.. இருந்தாலும் கூறுகிறேன். வாஸ்து என்பதெல்லாம் உங்கள் மேடத்திற்குத்தான் அத்துப்படி.. கற்புக்கரசி கண்ணகியின் சிலையையே அடியோடு பெயர்த்தெடுத்தவராயிற்றே.. நான் செய்ததெல்லாம் வெறும் இட வசதிக்காகவே என்பது அவருக்கும் தெரியும். என்றாலும் எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்ற கொள்கையுடையவரல்லாவா? அவர் அப்படித்தான் பேசுவார். அடுத்த கேள்வி..
(கவுண்டர் தனக்கே உரிய பாணியில் நக்கலாக தொடர்ந்து கேள்விகளைக் கேட்கிறார். மாறன் ஒவ்வொரு கேள்வியின் இறுதியிலும் கோபத்துடன் அவரை முறைக்க முதலமைச்சர் பதற்றமடையாமல் அதே மாறாத புன்னகையுடன் பதிலளிக்கிறார். செந்தில் தலையிலடித்துக்கொண்டு கவுண்டரின் கேள்விகளையும் முதலமைச்சரின் பதில்களையும் தான் கொண்டுவந்திருந்த பேடில் (pad) அவருக்கே விளங்காதவகையில் கிறுக்கிவைக்கிறார்)
(இறுதியில் வழக்கம் போலவே கவுண்டர் செந்திலைப் பார்க்கிறார்.)
கவு: டேய்.. நீ ஏதாச்சும் கேக்கணுமாடா?
செந்: (வெளியே ஓடுவதற்கு தயாராக எழுந்து நின்றுகொள்கிறார்) அய்யா.. நான் கொஞ்சம் எடக்கு மடக்காத்தான் கேப்பேன்.. இவர நெனச்சாத்தான் பயமாருக்கு அதான்.. (மாறனை காட்டுகிறார்)
(முதலமைச்சர் புன்னகையுடன் மாறனை பார்த்து உள்ளே போ என்று சைகை காட்டுகிறார். ஆனால் அவர் நகர்வதாய் தெரியவில்லை. ஆகவே நிலமையை சமாளிக்க சாதுரியமாக முதலமைச்சர் செந்திலைப் பார்க்கிறார்): கேளுங்க செந்தில். ஆனா அதுக்கு முன்னால அந்த வாழப்பழ காட்சியை கொஞ்சம் நீங்க ரெண்டு பேரும் நடிச்சி காட்டணும்.. அதுக்கப்புறந்தான் ஒங்க கேள்விக்கு பதில்.. என்ன கவுண்டரே?
கவு: (தனக்குள்) ஆம்மா, ரொம்ப முக்கியம். இதுவரைக்கும் இவர் சொன்ன பதிலுங்கள கொண்டு கொடுத்தாலே எடிட்டர் என்ன பண்ணுவார்னு தெரியல.. இதுல இது வேறயா... (முதலமைச்சர் தன்னையே பார்ப்பது தெரிய.. சமாளித்துக்கொண்டு பல்லை காட்டுகிறார்) என்னய்யா.. அதுவா? செஞ்சிரலாங்கய்யா.. (செந்திலை பார்த்து முறைக்கிறார்) டேய்.. என்ன டைலாக்கெல்லாம் ஞாபகம் இருக்கா.. இங்க ப்ரம்டிங்லாம் கெடைக்காதுறா..
செந்: (கேலியுடன் சிரிக்கிறார்) என்னண்ணே.. அதான் கிட்னிய தட்டிவிட்டுக்கிட்டேருக்கேன்லே.. (தலையை தட்டிக்கொள்கிறார்)
(விவரம் புரியாமல் முதலமைச்சரும் மாறனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள.. மாறன் புரிந்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்.. பிறகு ‘’மூளை’ என்று வாயசைக்க முதலமைச்சரும் புரிந்துக்கொண்டு வாய்விட்டு சிரிக்கிறார். கவுண்டரின் முகம் அஷ்டகோணலாகிறது. செந்திலைப் பார்த்து முறைத்தவாறு தன் தலையில் அடித்துக்கொள்கிறார்)
செந்: என்னண்ணே.. ஒங்களுக்கும் கிட்னி ப்ராப்ளமா?
(முதலமைச்சர், மாறன் இருவரும் வாய்விட்டு உரக்க சிரிக்க வீட்டினுள் இருந்த தயாளு அம்மாள் மற்றும் குடும்பத்தினரும், வாயிலிலிருந்த காரியதரிசியும் அதிகாரிகளும் ஓடிவந்து மு.க. மற்றும் மாறனின் சிரிப்பின் அர்த்தம் விளங்காமல் கவுண்டர் மற்றும் செந்தில் ஜோடியின் முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்து ஏதோ காமடி செய்திருக்கிறார்கள் என்பதுமட்டும் விளங்க அவர்களும் உரக்க சிரிக்க செந்தில் கேட்கவந்த கேள்வியை மறந்து போகிறார்.)
கவு: (தனக்குள்) அப்பாடா. எப்படியோ போன வாரம் மாதிரி இவன் எதையாச்சும் எடக்கு மடக்கா கேட்டு அடிவாங்காம தப்பிச்சோமே.. இத்தோட போயிருவோம். (செந்திலைப் பார்த்து வாடா போயிரலாம் என்பதுபோல் சைகைக் காட்டுகிறார். அவரும் புரிந்துக்கொண்டு தன்னுடன் கொண்டுவந்திருந்த சகலதையும் அள்ளிக்கொண்டு வாயிலை நோக்கி நகர்கிறார்)
(மாறன் தன் கையில் இருந்த ஒலிப்பதிவியை அணைத்து கவுண்டரிடம் நீட்டுகிறார். ஏதோ தீயை தொட்டதுபோல் பின்வாங்குகிறார் கவுண்டர்)
மு.அ: (புன் சிரிப்புடன்) என்ன கவுண்டரே. ஒலிப்பதிவி வேண்டாமா? பிறகு என்ன எழுதுவீர்கள்?
கவு: (கும்பிடுகிறார்) அய்யா.. வேணாம்யா.. நாங்களே எதையாச்சும் எங்க பாணியில எழுதிக்கறோம்.. நீங்க பாட்டுக்கு என்னென்னமோ சொல்லி வச்சிருக்கீங்க.. அத கொண்டு போனேன்னு வச்சிக்குங்க.. நம்ம கதி அதோகதிதான்.. ஆள விடுங்க.. டேய் வாடா.. போன வாரம் மாதிரி ஆகித்தொலையப் போவுது..
மு.அ: (புன்சிரிப்புடன்) அதென்ன கவுண்டரே போன வாரம்? இதுதான் முதல் நட்சத்திர பேட்டின்னீங்க?
கவு: (அவசரமாக நடையைக் கட்டுகிறார்) வாய் தவறி வந்திருச்சிய்யா.. ஆள விடுங்க.. நாங்க அம்பேல்.. (அவருடைய ஒட்டத்தைக் கண்டு வாசலில் நின்றிருந்த கானா பூனா படையினர் பதறியடித்து அவரை வழிமறிக்க மாறன் புன்சிரிப்புடன் அவர்களை விட்டுவிடுங்கள் என்று சைகை காட்டுகிறார்).
(இருவரும் தட்டு தடுமாறி அவர்களுடைய வாகனத்தில் ஏறி அமர வாகனம் வேகமெடுத்து பறக்கிறது. மாறனும் உடனிருந்தவர்களும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டு கலைந்து செல்கின்றனர்)
(அடுத்த நாள் காலை நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் வெளியாயிருந்த தன்னுடைய பேட்டியை படித்து வாய்விட்டு சிரிக்கிறார் முதலமைச்சர். பத்திரிகையலுவலகத்திலோ போயஸ் கார்டனிலிருந்து சற்று முன் தொலைப்பேசியில் வந்த கோபக்கணைகளில் காயமுற்று நொந்துபோய் தலையை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார் எடிட்டர் . சட்டசபையில் அ.இ.அ.தி.மு.கவினர் இதை குறித்து விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானத்தைக் கொண்டுவருகின்றனர். ஆளுங்கட்சியினரின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட இருக்கையில் இருக்க வேண்டிவந்த தன்னுடைய தலைவிதியை நொந்துக்கொண்டு மவுன சிலையாய் அமர்ந்திருக்கிறார் எ.க. தலைவி..)
நிறைவு.
21.7.06
மு.கவுடன் சந்திப்பு (நகைச்சுவை)
கவுண்டரும் செந்திலும் முதலமைச்சரை பேட்டி காண தயாரகிறார்கள்.
கவு: டேய்.. போன வாரம் அந்தம்மாவ இண்டர்வ்யூ பண்ண போனப்ப சொதப்புனா மாதிரி சொதப்புனே, மவனெ அங்கயே வச்சி பொலி போட்ருவேன் (காலை உயர்த்தி மிதிப்பதுபோல் பாவனை செய்கிறார்)
செந்: (தன்னைச் சுற்றி தரையில் வைத்திருந்த ஸ்டில் காமரா, மைக், டேப் ரிக்கார்டர் பலானவற்றை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிவிட்டு நெற்றியை தன் சுட்டுவிரலால் தட்டிக்கொண்டு) என்னைத்தையோ மறந்தாப்பல இருக்கே.. ஏன்ணே.. ஒங்களுக்கு ஞாபகம் வருதா?
கவு: (தன்னுடைய டையை சரி செய்துக்கொண்டு ஆளுயர கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்க்கிறார்) டேய், உண்மையிலயே நமக்கு வயசாருச்சிறா..
செந்: (கேலியுடன் சிரிக்கிறார்) ஹெஹ்ஹே.. யண்ணே.. நமக்குன்னு சொல்லாதீங்க. ஒங்களுக்குன்னு சொல்லுங்க. கன்னமெல்லாம் டொங்குழுந்து போயிருச்சின்னே.. என்னைய பாருங்க.. தோளுக்கு மேல வளர்ந்த பசங்க ரெண்டு பேர் இருக்காங்க.. இருந்தாலும் (நெஞ்சை நிமிர்த்தி புஜங்களை உயர்த்தி காட்டுகிறார்) எத்தனெ இளசா.. காலேஜ் பையன் மாதிரி..
கவு: (ஒரக்கண்ணால் செந்திலை பார்க்கிறார்) யாரு.. நீயி? டேய்.. வேணாம். போற நேரத்துல மூட கெடுக்காத. சரி.. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டியாடா?
செந்: (தன் நெற்றியை தட்டிக்கொண்டு) அதான்ணே.. ஏதோ ஒன்ன மறந்தாப்பலருக்கு.. ஒங்களுக்கு ஞாபகம் வருதான்னு பாருங்கன்ன்னேன்.. நீங்க என்னடான்னா வயசு, கியசுன்னு சொல்லி..
கவு: (எரிச்சலுடன்) டேய்.. ஒன் மனசுலருக்கறத நான் எப்படிறா.. நா என்ன ஞானியா? நான் ஒன்னொன்னா கேக்கேன்.. இருக்கு, இல்லன்னு சொல்லு.. என்ன ரெடியா?
செந்: ஹ¥ம்.. சொல்லுங்கண்ணே.. (ஒரு காலை முன்னும் மறு காலை பின்னும் வைத்துக்கொண்டு ரெடியாகிறார்)
கவு: (அவருக்கே உரிய பாணியில் நெஞ்சை ஒரு சைடாக சாய்த்துக்கொண்டு ஒவ்வொரு கேள்விக்கும் முன்னும் பின்னும் டுகிறார்) ஸ்டில் காமரா?
செந்: இருக்கு
கவு: மைக்?
செந்: இருக்கு
(இப்படி பேட்டி எடுக்க தேவையான எல்லா பொருட்கள¨யும் ஒவ்வொன்றாக கவுண்டர் கூற செந்தில் இருக்கு, இருக்கு என்கிறார்)
கவு: சரிடா.. ஏறக்குறைய எல்லாமே இருக்கு.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய் உரத்த குரலில்) டேய், அவருக்கு மஞ்சள் துண்டுன்னா ரொம்ப புடிக்குமேன்னு எடிட்டர் சொன்னாரே.. அத வாங்கிட்டியா?
செந்: (கேலியாக சிரிக்கிறார்) என்னண்ணே நீங்க? அத மறப்பனா? இங்கருக்கு பாருங்க. (மஞ்சள் கலர் துவாலையை எடுத்து காட்டுகிறார்) எப்படி என் செலக்ஷன்?
கவு: (திடுக்கிட்டு) டேய்.. இது துண்டில்லடா டவல். டேய்.. பாத்ரூம் டவலையாடா ஒரு சீஃப் மினிஸ்டருக்கு போத்துவாங்க? பட்டுல வேணும்டா பட்டுல..
செந்: (சலிப்புடன்) அட போங்கண்ணே. எடிட்டர் குடுத்த காசுல இத வாங்கறதுக்கே பெரும்பாடா போயிருச்சி. பட்டுக்கு எங்க போறது? அதுக்கெல்லாம் அஞ்சாயிரமாவது வேணும்னே.. ஒங்கக்கிட்டருந்தா குடுங்க.. வாங்கிரலாம்..
கவு: (எரிச்சலுடன்) டேய் என்ன நக்கலா? ஏதோ சினிமாவுலருந்து தொரத்திவுட்டதுக்கு இதாச்சும் கெடச்சுதேன்னு கிடச்ச வரைக்கும் போறும்னு செஞ்சிக்கிட்டிருக்கேன்.. இதல்லாம் ஒரு கால் ஷீட்டாடா.. ஒரு காலத்துல நம்ம கால்ஷீட்டுக்காக லட்ச கணக்குல கையிலயும் பையிலயும் வச்சிக்கிட்டு தவமா தவமிருந்தான்க.. இப்ப என்னடான்னா..
செந்: (கேலியுடன் சிரிக்கிறார்) என்னண்ணே நீங்க. கால்ஷீட்டு கை ஷீட்டுன்னுக்கிட்டு.. இதுக்கு பேரு அசைன்மெண்ட்டுன்ணே.. (தனக்குள்) ஒங்களுக்கெங்க தெரிய போவுது? நீங்களே அஞ்சாம்ப்பு.. அதுவும் மூனுதடவ பெயிலு..
கவு: (எரிச்சலுடன்) என்ன பெரிய அசைன்மெண்ட்டு.. பெப்பர்மிண்ட்டு.. எல்லாத்தையும் எடுத்து வெளிய கொண்டு வச்சிட்டு எவனாச்சும் ரிக்ஷ¡ நிக்கறான்னு பார்றா, கூட கூட பேசிக்கிட்டு... (செந்தில் நகர) டேய்.. போன வாரம் மாதிரி ஒரு லொட லொட வண்டியையும் லொக்கு, லொக்கு கெளவனையும் கூட்டியாந்துராத.. அந்தாளு இருமி, இருமியே எனக்கு காச நோய் வந்துருமோன்னு பயந்துட்டேன்.. நல்லா ஆளா கூட்டியா போ.. (தனக்குள்) இந்த காலத்து எளசுங்க என்னென்னத்தையோ ஓட்டுதுங்க இந்த மாதிரி ரிக்ஷ¡வையும் ஓட்டக்கூடாது? ச்சை..
(அடுத்த நொடியில் செந்தில் உள்ளே வருகிறார்)
கவு: (வியப்புடன்) என்னடா அதுக்குள்ள கூட்டியாந்துட்டியா? என்ன அதே ரிக்ஷவா?
செந்:(சிரிக்கிறார்) இல்லண்ணே.. நம்ம எடிட்டர் இந்த தடவ ஒரு காரையே அனுப்பியிருக்கார்ணே. நாம புடிக்க போறது முதலமைச்சராச்சே..
கவு: (திடுக்கிட்டு) டேய்.. புடிக்கிறேன், கிடிகிறேன்னு சொல்லாதேன்னு போன வாரமே சொன்னேன்ல?
செந்: (பின்னந்தலையில் தட்டிக்கொள்கிறார்) சாரின்ணே.. இப்பல்லாம் அடிக்கடி இந்த கிட்னி வேல செய்ய மாட்டேங்குதுண்ணே.. அதான் அப்பப்போ தட்டி குடுக்குத்துக்கறேன்.
கவு: (சலிப்புடன்) பாத்துறா.. நீ தட்டுற தட்டுல தலையிலருக்கற கிட்னி வயித்துக்கு வந்துரப்போவுது.. சரி.. சரி நீ முன்னால போ..
(அவர்களுடைய வாகனம் கோபாலபுரத்திலுள்ள முதலமைச்சரின் வீட்டை நெருங்க காவலுக்கு நிற்கும் காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர். ஒரேயொரு அதிகாரி காருக்குள் தலையை விட்டு பார்க்கிறார். ஏற்கனவே கவுண்டரையும் செந்திலையும் ஒரு சேர பல படங்களில் பார்த்திருந்தாலும் வேண்டுமென்றே இருவரையும் அலட்சியத்துடன் பார்க்கிறார். ‘யார் மேன் நீங்க?’ என்கிறார் அதிகாரத்துடன்.)
கவு: (அடிக்குரலில்) பாத்தியாடா நம்ம நெலமைய.. பேசாம அஞ்சு நிமிச கால்ஷீட் கெடச்சா போறும்னு சினிமாவுலயே தலையோ வாலோ எதையாச்சும் காட்டிக்கிட்டு இருந்துருக்கலாம். இப்ப பார்.. எவனெவனோ நம்மள பாத்து யாருங்கறான்.. ஹ¥ம் நம்ம நேரம்டா (அதிகாரியைப் பார்த்து முப்பத்திரண்டு பற்களும் தெரிய சிரிக்கிறார்) என்ன ச்சார் கேட்டீங்க? நான் கவுண்டபெல், சாரி, கவுண்டமனி இவன் பறட்டை தலையன், சாரி செந்தில்.. முதலமைச்சர பேட்டியெடுக்க வந்திருக்கோம். இங்க பாருங்க.. அவரோட கன்பர்மேசன்.. (சட்டைப் பாக்கெட்டிலிருந்து முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து வந்திருந்த பேட்டிக்கான அனுமதி கடிதத்தை காட்டுகிறார். அதை அலட்சியமாக படித்து முடித்த அதிகாரி, ‘சரி, சரி.. ஒங்கள பாத்தா எங்கயோ பாத்த மாதிரிவேற இருக்கு.. போய்ட்டு வம்பு பண்ணாம சீக்கிரம் வந்துருங்க’ என்றவாறு வாகனத்தை மேலே செல்ல அனுமதிக்கிறார்)
கவு: (நொந்துபோய்) பாத்தியாடா அந்த போலீஸ்காரன் நக்கல.. நம்மள எங்கயோ பாத்திருக்கானாம்.. பண்ணிப்பய.. டேய், நாம ரெண்டு பேரும் சேர்ந்து கொறஞ்ச பட்சம் ஒரு நூறு நூத்தம்பது படத்துல காமடி பண்ணிருக்க மாட்டோம்..? கடைசியில நம்ம நெலமைய பாத்தியாடா..
செந்: விட்டுத் தள்ளுங்கண்ணே.. வாங்க, வீடு வந்துருச்சி.. கேள்விய நீங்க கேக்கறீங்களா..
கவு: டேய், இந்த நக்கல்தான வேணாங்கறது? எறங்குடா..
(செந்தில் தான் கொண்டு வந்திருந்த காமார, மைக், ரெக்கார்டர் கியவற்றை எடுத்துக்கொண்டு அதனுடைய கேபிள்களை தன் கழுத்தில் சுற்றுகிறார்)
கவு: (எரிச்சலுடன்) டேய்.. டேய்.. --------------- தலையா. இன்னைக்கும் அத கழட்டமுடியாம அண்ணே, நொண்ணேன்னு கத்த போறியா? கையில அப்படியே சுத்தி புடிடா.. நீயெல்லாம் எங்கிட்ட அடி வாங்கிக்கிட்டே இருந்தாத்தான் ஒளுங்காருப்பே.. இப்பல்லாம் அத நிறுத்திட்டேம் பாரு.. அதான்..
செந்: (செல்லத்துடன் கவுண்டரை தோளில் குத்துகிறார்) கோச்சிக்காதீங்கண்ணே..
கவு: சரி, சரி.. பாத்து எறங்கு.. வாசல்ல நிக்கானுங்க பாரு.. கானா பூனா காரங்க.. (அவர்களைக் கூர்ந்து பார்க்கிறார்) டேய்.. இவனுங்கள பாத்தா போனவாரம் அந்தம்மா வீட்ல பாத்தவனுங்கள மாதிரியே இல்ல?
செந்:(சிரிக்கிறார்) நீங்க வேறண்ணே.. எல்லா பயலுவளுக்கும் கருப்பு ட்ரெஸ்லருக்கறதுனால அப்படி தெரியுதுண்ணே.. நீங்க பயப்படாம வாங்க.. நா இருக்கேன்ல?
கவு: (முறைக்கிறார்) யாரு? நீயி? எல்லாம் என் நேரம்டா..
(கவுண்டர் இறங்கி முதலமைச்சரின் வீட்டு வாசலை நெருங்க கானா பூனா படையினர் அவரை வழிமறிக்கின்றனர். அவருக்கு பின்னால் காமரா, மைக் சகிதம் வந்துக்கொண்டிருந்த செந்தில் விரைந்து சென்று தப்பு தப்பான ஹிந்தியில் ஏதோ பேசுகிறார். கானா பூனா ட்கள் விளங்காமல் விழிக்கின்றனர்)
கவு: (கோபத்துடன் திரும்பி) டேய்.. நீ இப்ப எதுக்கு ஹிந்தியில பேசின? இவனுங்க மூஞ்ச பாத்தா ஹிந்திகாரன்க மாதிரியாடா தெரியுது? ஒன்னைய மாதிரி கரிச்சட்டி மூஞ்சிய வச்சிக்கிட்டு நிக்கற இவனுங்களாடா வடக்கத்தியாளுங்க? இவனுங்க மூஞ்சிய பாத்தா குடியாத்ததுலருந்து புடிச்சிக்கிட்டு வந்தா மாதிரி தெரியது.. நீ வேற.. (தன் சட்டை பையிலிருந்து சற்று முன் காவல் அதிகாரியிடம் காட்டிய கடிதத்தை எடுத்து விறைப்புடன் நீட்டுகிறார். அது அங்கிருந்த கானா பூனா குழுவினருள் எவருக்கும் விளங்காமல் நிற்க அப்போதுதான் முதலமைச்சர் வீட்டிலிருந்து வெளியே வரும் தயாநிதி மாறன் புன்னகையுடன் இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து செல்கிறார்.)
நாளை நிறைவு பெறும்..
கவு: டேய்.. போன வாரம் அந்தம்மாவ இண்டர்வ்யூ பண்ண போனப்ப சொதப்புனா மாதிரி சொதப்புனே, மவனெ அங்கயே வச்சி பொலி போட்ருவேன் (காலை உயர்த்தி மிதிப்பதுபோல் பாவனை செய்கிறார்)
செந்: (தன்னைச் சுற்றி தரையில் வைத்திருந்த ஸ்டில் காமரா, மைக், டேப் ரிக்கார்டர் பலானவற்றை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிவிட்டு நெற்றியை தன் சுட்டுவிரலால் தட்டிக்கொண்டு) என்னைத்தையோ மறந்தாப்பல இருக்கே.. ஏன்ணே.. ஒங்களுக்கு ஞாபகம் வருதா?
கவு: (தன்னுடைய டையை சரி செய்துக்கொண்டு ஆளுயர கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்க்கிறார்) டேய், உண்மையிலயே நமக்கு வயசாருச்சிறா..
செந்: (கேலியுடன் சிரிக்கிறார்) ஹெஹ்ஹே.. யண்ணே.. நமக்குன்னு சொல்லாதீங்க. ஒங்களுக்குன்னு சொல்லுங்க. கன்னமெல்லாம் டொங்குழுந்து போயிருச்சின்னே.. என்னைய பாருங்க.. தோளுக்கு மேல வளர்ந்த பசங்க ரெண்டு பேர் இருக்காங்க.. இருந்தாலும் (நெஞ்சை நிமிர்த்தி புஜங்களை உயர்த்தி காட்டுகிறார்) எத்தனெ இளசா.. காலேஜ் பையன் மாதிரி..
கவு: (ஒரக்கண்ணால் செந்திலை பார்க்கிறார்) யாரு.. நீயி? டேய்.. வேணாம். போற நேரத்துல மூட கெடுக்காத. சரி.. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டியாடா?
செந்: (தன் நெற்றியை தட்டிக்கொண்டு) அதான்ணே.. ஏதோ ஒன்ன மறந்தாப்பலருக்கு.. ஒங்களுக்கு ஞாபகம் வருதான்னு பாருங்கன்ன்னேன்.. நீங்க என்னடான்னா வயசு, கியசுன்னு சொல்லி..
கவு: (எரிச்சலுடன்) டேய்.. ஒன் மனசுலருக்கறத நான் எப்படிறா.. நா என்ன ஞானியா? நான் ஒன்னொன்னா கேக்கேன்.. இருக்கு, இல்லன்னு சொல்லு.. என்ன ரெடியா?
செந்: ஹ¥ம்.. சொல்லுங்கண்ணே.. (ஒரு காலை முன்னும் மறு காலை பின்னும் வைத்துக்கொண்டு ரெடியாகிறார்)
கவு: (அவருக்கே உரிய பாணியில் நெஞ்சை ஒரு சைடாக சாய்த்துக்கொண்டு ஒவ்வொரு கேள்விக்கும் முன்னும் பின்னும் டுகிறார்) ஸ்டில் காமரா?
செந்: இருக்கு
கவு: மைக்?
செந்: இருக்கு
(இப்படி பேட்டி எடுக்க தேவையான எல்லா பொருட்கள¨யும் ஒவ்வொன்றாக கவுண்டர் கூற செந்தில் இருக்கு, இருக்கு என்கிறார்)
கவு: சரிடா.. ஏறக்குறைய எல்லாமே இருக்கு.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய் உரத்த குரலில்) டேய், அவருக்கு மஞ்சள் துண்டுன்னா ரொம்ப புடிக்குமேன்னு எடிட்டர் சொன்னாரே.. அத வாங்கிட்டியா?
செந்: (கேலியாக சிரிக்கிறார்) என்னண்ணே நீங்க? அத மறப்பனா? இங்கருக்கு பாருங்க. (மஞ்சள் கலர் துவாலையை எடுத்து காட்டுகிறார்) எப்படி என் செலக்ஷன்?
கவு: (திடுக்கிட்டு) டேய்.. இது துண்டில்லடா டவல். டேய்.. பாத்ரூம் டவலையாடா ஒரு சீஃப் மினிஸ்டருக்கு போத்துவாங்க? பட்டுல வேணும்டா பட்டுல..
செந்: (சலிப்புடன்) அட போங்கண்ணே. எடிட்டர் குடுத்த காசுல இத வாங்கறதுக்கே பெரும்பாடா போயிருச்சி. பட்டுக்கு எங்க போறது? அதுக்கெல்லாம் அஞ்சாயிரமாவது வேணும்னே.. ஒங்கக்கிட்டருந்தா குடுங்க.. வாங்கிரலாம்..
கவு: (எரிச்சலுடன்) டேய் என்ன நக்கலா? ஏதோ சினிமாவுலருந்து தொரத்திவுட்டதுக்கு இதாச்சும் கெடச்சுதேன்னு கிடச்ச வரைக்கும் போறும்னு செஞ்சிக்கிட்டிருக்கேன்.. இதல்லாம் ஒரு கால் ஷீட்டாடா.. ஒரு காலத்துல நம்ம கால்ஷீட்டுக்காக லட்ச கணக்குல கையிலயும் பையிலயும் வச்சிக்கிட்டு தவமா தவமிருந்தான்க.. இப்ப என்னடான்னா..
செந்: (கேலியுடன் சிரிக்கிறார்) என்னண்ணே நீங்க. கால்ஷீட்டு கை ஷீட்டுன்னுக்கிட்டு.. இதுக்கு பேரு அசைன்மெண்ட்டுன்ணே.. (தனக்குள்) ஒங்களுக்கெங்க தெரிய போவுது? நீங்களே அஞ்சாம்ப்பு.. அதுவும் மூனுதடவ பெயிலு..
கவு: (எரிச்சலுடன்) என்ன பெரிய அசைன்மெண்ட்டு.. பெப்பர்மிண்ட்டு.. எல்லாத்தையும் எடுத்து வெளிய கொண்டு வச்சிட்டு எவனாச்சும் ரிக்ஷ¡ நிக்கறான்னு பார்றா, கூட கூட பேசிக்கிட்டு... (செந்தில் நகர) டேய்.. போன வாரம் மாதிரி ஒரு லொட லொட வண்டியையும் லொக்கு, லொக்கு கெளவனையும் கூட்டியாந்துராத.. அந்தாளு இருமி, இருமியே எனக்கு காச நோய் வந்துருமோன்னு பயந்துட்டேன்.. நல்லா ஆளா கூட்டியா போ.. (தனக்குள்) இந்த காலத்து எளசுங்க என்னென்னத்தையோ ஓட்டுதுங்க இந்த மாதிரி ரிக்ஷ¡வையும் ஓட்டக்கூடாது? ச்சை..
(அடுத்த நொடியில் செந்தில் உள்ளே வருகிறார்)
கவு: (வியப்புடன்) என்னடா அதுக்குள்ள கூட்டியாந்துட்டியா? என்ன அதே ரிக்ஷவா?
செந்:(சிரிக்கிறார்) இல்லண்ணே.. நம்ம எடிட்டர் இந்த தடவ ஒரு காரையே அனுப்பியிருக்கார்ணே. நாம புடிக்க போறது முதலமைச்சராச்சே..
கவு: (திடுக்கிட்டு) டேய்.. புடிக்கிறேன், கிடிகிறேன்னு சொல்லாதேன்னு போன வாரமே சொன்னேன்ல?
செந்: (பின்னந்தலையில் தட்டிக்கொள்கிறார்) சாரின்ணே.. இப்பல்லாம் அடிக்கடி இந்த கிட்னி வேல செய்ய மாட்டேங்குதுண்ணே.. அதான் அப்பப்போ தட்டி குடுக்குத்துக்கறேன்.
கவு: (சலிப்புடன்) பாத்துறா.. நீ தட்டுற தட்டுல தலையிலருக்கற கிட்னி வயித்துக்கு வந்துரப்போவுது.. சரி.. சரி நீ முன்னால போ..
(அவர்களுடைய வாகனம் கோபாலபுரத்திலுள்ள முதலமைச்சரின் வீட்டை நெருங்க காவலுக்கு நிற்கும் காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர். ஒரேயொரு அதிகாரி காருக்குள் தலையை விட்டு பார்க்கிறார். ஏற்கனவே கவுண்டரையும் செந்திலையும் ஒரு சேர பல படங்களில் பார்த்திருந்தாலும் வேண்டுமென்றே இருவரையும் அலட்சியத்துடன் பார்க்கிறார். ‘யார் மேன் நீங்க?’ என்கிறார் அதிகாரத்துடன்.)
கவு: (அடிக்குரலில்) பாத்தியாடா நம்ம நெலமைய.. பேசாம அஞ்சு நிமிச கால்ஷீட் கெடச்சா போறும்னு சினிமாவுலயே தலையோ வாலோ எதையாச்சும் காட்டிக்கிட்டு இருந்துருக்கலாம். இப்ப பார்.. எவனெவனோ நம்மள பாத்து யாருங்கறான்.. ஹ¥ம் நம்ம நேரம்டா (அதிகாரியைப் பார்த்து முப்பத்திரண்டு பற்களும் தெரிய சிரிக்கிறார்) என்ன ச்சார் கேட்டீங்க? நான் கவுண்டபெல், சாரி, கவுண்டமனி இவன் பறட்டை தலையன், சாரி செந்தில்.. முதலமைச்சர பேட்டியெடுக்க வந்திருக்கோம். இங்க பாருங்க.. அவரோட கன்பர்மேசன்.. (சட்டைப் பாக்கெட்டிலிருந்து முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து வந்திருந்த பேட்டிக்கான அனுமதி கடிதத்தை காட்டுகிறார். அதை அலட்சியமாக படித்து முடித்த அதிகாரி, ‘சரி, சரி.. ஒங்கள பாத்தா எங்கயோ பாத்த மாதிரிவேற இருக்கு.. போய்ட்டு வம்பு பண்ணாம சீக்கிரம் வந்துருங்க’ என்றவாறு வாகனத்தை மேலே செல்ல அனுமதிக்கிறார்)
கவு: (நொந்துபோய்) பாத்தியாடா அந்த போலீஸ்காரன் நக்கல.. நம்மள எங்கயோ பாத்திருக்கானாம்.. பண்ணிப்பய.. டேய், நாம ரெண்டு பேரும் சேர்ந்து கொறஞ்ச பட்சம் ஒரு நூறு நூத்தம்பது படத்துல காமடி பண்ணிருக்க மாட்டோம்..? கடைசியில நம்ம நெலமைய பாத்தியாடா..
செந்: விட்டுத் தள்ளுங்கண்ணே.. வாங்க, வீடு வந்துருச்சி.. கேள்விய நீங்க கேக்கறீங்களா..
கவு: டேய், இந்த நக்கல்தான வேணாங்கறது? எறங்குடா..
(செந்தில் தான் கொண்டு வந்திருந்த காமார, மைக், ரெக்கார்டர் கியவற்றை எடுத்துக்கொண்டு அதனுடைய கேபிள்களை தன் கழுத்தில் சுற்றுகிறார்)
கவு: (எரிச்சலுடன்) டேய்.. டேய்.. --------------- தலையா. இன்னைக்கும் அத கழட்டமுடியாம அண்ணே, நொண்ணேன்னு கத்த போறியா? கையில அப்படியே சுத்தி புடிடா.. நீயெல்லாம் எங்கிட்ட அடி வாங்கிக்கிட்டே இருந்தாத்தான் ஒளுங்காருப்பே.. இப்பல்லாம் அத நிறுத்திட்டேம் பாரு.. அதான்..
செந்: (செல்லத்துடன் கவுண்டரை தோளில் குத்துகிறார்) கோச்சிக்காதீங்கண்ணே..
கவு: சரி, சரி.. பாத்து எறங்கு.. வாசல்ல நிக்கானுங்க பாரு.. கானா பூனா காரங்க.. (அவர்களைக் கூர்ந்து பார்க்கிறார்) டேய்.. இவனுங்கள பாத்தா போனவாரம் அந்தம்மா வீட்ல பாத்தவனுங்கள மாதிரியே இல்ல?
செந்:(சிரிக்கிறார்) நீங்க வேறண்ணே.. எல்லா பயலுவளுக்கும் கருப்பு ட்ரெஸ்லருக்கறதுனால அப்படி தெரியுதுண்ணே.. நீங்க பயப்படாம வாங்க.. நா இருக்கேன்ல?
கவு: (முறைக்கிறார்) யாரு? நீயி? எல்லாம் என் நேரம்டா..
(கவுண்டர் இறங்கி முதலமைச்சரின் வீட்டு வாசலை நெருங்க கானா பூனா படையினர் அவரை வழிமறிக்கின்றனர். அவருக்கு பின்னால் காமரா, மைக் சகிதம் வந்துக்கொண்டிருந்த செந்தில் விரைந்து சென்று தப்பு தப்பான ஹிந்தியில் ஏதோ பேசுகிறார். கானா பூனா ட்கள் விளங்காமல் விழிக்கின்றனர்)
கவு: (கோபத்துடன் திரும்பி) டேய்.. நீ இப்ப எதுக்கு ஹிந்தியில பேசின? இவனுங்க மூஞ்ச பாத்தா ஹிந்திகாரன்க மாதிரியாடா தெரியுது? ஒன்னைய மாதிரி கரிச்சட்டி மூஞ்சிய வச்சிக்கிட்டு நிக்கற இவனுங்களாடா வடக்கத்தியாளுங்க? இவனுங்க மூஞ்சிய பாத்தா குடியாத்ததுலருந்து புடிச்சிக்கிட்டு வந்தா மாதிரி தெரியது.. நீ வேற.. (தன் சட்டை பையிலிருந்து சற்று முன் காவல் அதிகாரியிடம் காட்டிய கடிதத்தை எடுத்து விறைப்புடன் நீட்டுகிறார். அது அங்கிருந்த கானா பூனா குழுவினருள் எவருக்கும் விளங்காமல் நிற்க அப்போதுதான் முதலமைச்சர் வீட்டிலிருந்து வெளியே வரும் தயாநிதி மாறன் புன்னகையுடன் இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து செல்கிறார்.)
நாளை நிறைவு பெறும்..
13.7.06
ஜெயுடன் ஒரு பேட்டி (காமடி)
ஒரு லொட, லொட சைக்கிள் ரிக்ஷ¡வில் கவுண்டரும் செந்திலும்..
செந்தில் கழுத்தில் கேபிள்கள் மாலையாக. வலது கையில் ஒரு மைக்.. இடது தோளில் ஒரு அரதப் பழசான காமரா.
கவுண்டர் கெத்தாக அருகில். டீக்காக உடையணிந்திருக்கிறார்.
ரிக்ஷ¡ போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் இன்னாள் எ.க. தலைவி (இந்த abbreviationஐ எக்குத்தப்பா நீங்க மொழிபெயர்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல) செல்வி ஜெயலலிதா அவர்களுடைய பங்களாவிற்கு முன்னால் வந்து நிற்கிறது.
வாசலில் நின்றிருந்த கானா பூனா வீரர்கள் பதறியடித்து ரிக்ஷ¡வை நிறுத்துகிறார்கள்.
கவுண்டர் கெத்தாக இறங்கி அவர்களை துச்சமாக பார்க்கிறார். செந்தில் கழுத்திலிருந்த கேபிள்களுக்குள் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் ‘அண்ணே.. அண்ணே.. காப்பாத்துங்க’ என்று அலறுகிறார்.
கவு: (எரிச்சலுடன்) டேய்.. டேய்.. ஒன்னெ அப்பவே சொன்னேன்.. நீ கேக்கல. இப்ப பார்.. என் மானத்த வாங்கறே.. சொன்னா என்னண்ணே, நொன்னண்ணேம்பே.. சரி இரு வரேன்..
(செந்திலை நெருங்கி செந்திலுடைய கழுத்திலிருந்த கேபிள்களை வெடுக்கென்று பிடித்து இழுக்க அவர் அப்படியே தலைகுப்புற சாலையில் விழுகிறார். கேமரா ஒரு பக்கமும், மைக் ஒருபக்கமும் தெறித்து விழுகின்றன)
கவு: டேய்.. டேய் காமராடா... (உடைந்து சிதறிய கேமராவை எடுத்து திருப்பி, திருப்பி பார்த்துவிட்டு சாலையோரம் வீசுகிறார். கானா பூனா வீரர்கள் பதற்றத்துடன் அதை எடுத்து ஏதோ வெடிகுண்டைப் பார்ப்பதுபோல் அக்கு வேறு ஆணி வேராக பிரிக்க செந்தில் பதற்றத்துடன் அவர்கள் கையிலிருந்து அதை பிடுங்கி பார்க்கிறார். பிறகு வெறுப்புடன் ரிக்ஷ¡வில் எறிகிறார்.)
செந்: போய்யா.. இத எடுத்துக்கிட்டு போயி காயலாங்கடையில வித்து ரிக்ஷ¡ கூலிக்கி வச்சிக்க.. (கவுண்டரை பார்த்து) என்னண்ணே.. நீங்க இப்பிடி செஞ்சிபுட்டீங்க.. இப்ப அம்மாவ எப்படி புடிக்கிறது?
கவு: (கானா பூனா வீரர்களை ஓரக்கண்ணால் பார்க்கிறார்) டேய்.. டேய் பாத்துறா.. நீ பாட்டுக்கு புடிக்கிறது, கிடிக்கிறதுன்னு சொல்லிட்டு இவனுங்கக்கிட்ட மாட்டிவிட்டுறாத.. நாம அம்மாவ பேட்டி எடுக்கத்தான் வந்துருக்கோம்.. புடிக்கறதுக்கில்ல..
செந்: (சாலையில் கிடந்த மைக்கையும் அதிலிருந்து அனுமார் வால் போல ஆடிய கேபிளையும் கையில் எடுத்துக்கொள்கிறார். பிறகு ஏதோ நினைவுக்கு வந்தவர்போல கலக்கத்துடன்) அண்ணே..
கவு: (எரிச்சலுடன்) அட ஏண்டா.. நீ வேற.. நான் இவனுங்களுக்கு டிமிக்கி குடுத்துட்டு எப்படிறா இந்த கோட்டைக்குள்ள பூருறதுன்னு (புகுவது) ப்ளான் பண்ணிக்கிட்டிருக்கேன்.. எதுக்குடா அலற்னே இப்ப?
செந்: (தயக்கத்துடன்) மைக் எடுத்தேனேயொழிய டேப் ரிக்கார்டர எடுக்க மறந்துட்டேண்ணே..
கவு: (காலால் எத்துகிறார். செந்தில் லாவகமாக நகர்ந்துக்கொள்கிறார்) டேய், ஒனக்கு ஏதாச்சும் இருக்காடா? ஏற்கனவே எடிட்டர்கிட்ட ஐயா அம்மாவ பேட்டி எடுக்கற அசைன்மெண்ட எங்க ரெண்டு பேருக்கும் தாங்கய்யான்னு கேட்டப்ப ஒங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே அம்மா வெரட்டியடிச்சிருவாங்க. எதுக்குய்யா ஒங்களுக்கு இந்த விபரீத ஆசைன்னார். இப்ப போட்டாவும் எடுக்காம.. டேப்பும் இல்லாம நாம உண்மையிலயே பேட்டி எடுத்துக்கிட்டு போனாக்கூட அவர் நம்பமாட்டாரேடா.. (புலம்புகிறார்) ஒன்னைய போயி.. போடா டேய்.. என் கண் முன்னால நிக்காத..(காலால் மீண்டும் எத்துகிறார். இந்த முறை செந்திலின் பின்புறம் வகையாய் உதைக்க கவுண்டர் உதைத்த வேகத்தில் அவர் கானா பூனா வீரர்களுடைய காலடியில் சென்று விழ அவர்கள் இவர் தற்கொலை படை வீரராயிருப்பாரோ என்ற ஐயத்தில் தங்களுடைய இயந்திர துப்பாக்கிகளை அவரை நோக்கி நீட்ட செந்தில் ‘என்னைய காப்பாத்துங்கண்ணே...’ என்று அலருகிறார். அவருடைய அலறல் பால்கணியில் அமர்ந்து அன்றைய நமது எம்.ஜி.ஆர் தினத்தாளை வாசித்துக்கொண்டிருந்த எ.க. தலைவி ஜெயலலிதா மேடத்தின் செவிகளில் விழ ‘யார் மேன் அங்க?’ என்று உரத்த குரலில் கேட்கிறார். வாசலில் நின்றிருந்த கானா பூனா வீரர் ஒருவர் கவண்டரையும் செந்திலையும் காட்டி ‘மேடம், ஒங்கள பேட்டியெடுக்க வந்துருக்காங்க.’ என்கிறார். அவருக்கு கவுண்டரைவிட தரையிலிருந்து எழுந்து சட்டெயெல்லாம் மண்ணுடன் பரிதாபமாக நிற்கும் செந்திலை பிடித்துப்போக புன்னகையுடன் தன் கையிலிருந்த தினத்தாளைக் காட்டி இங்கருந்தா வரீங்க என்று சைகைக் காட்டுகிறார்.. )
கவு: (தனக்குள்) ஆம்மா.. பின்னே ஒங்கள என்ன பிபிசியிலருந்தா பேட்டியெடுக்க வருவாங்க?
செந்: (உற்சாகத்துடன்) ஆமாங்க மேடம் (என்பதுபோல் வாயசைக்கிறார்)
(தொலைக்காட்சியில் தூரத்தில் காட்டப்படும் மு.கவின் உதட்டசைவிலிருந்தே அவர் தன்னைத்தான் சாடுகிறார் என்று உறுதிசெய்து எதிரறிக்கை விட்டே பழகிப்போன ஜெ.. அவருடைய உதட்டசைவை புரிந்துக்கொண்டு ‘அவங்கள உள்ள அனுப்பு மேன்’ என்று சைகை காட்டுகிறார். கானா பூனா வீரர்கள் பிரம்மாண்டமான வாசற்கதவை திறக்கிறார்கள்.)
செந்: வாங்கண்ணே.. பாத்தீங்களா? நம்மள பாத்ததுமே மேடம் உள்ள விட்டுருவாங்கன்னு சொன்னப்ப போடா நீயும் ஒன் மூஞ்சும்னு சொன்னீங்களே இப்ப பாருங்க.. ஒங்களுக்கு எப்பவுமே கிட்னி வேலை செய்றதில்லண்ணே.. சொன்னா மட்டும் கோவம் பொத்துக்கிட்டு வந்துருது.. சரி.. சரி.. வாங்க..
கவு: (தனக்குள்) ஒன்னைய மாதிரி ஆளுங்களுக்கு எப்பவுமே கிட்னிதாண்டா வேலை செய்யுது.. ஹ¥ம்.. எல்லாம் காலம்டா காலம்.. (செந்திலிடம்) டேய்.. அங்க வந்து இந்த அளுக்கு பிடிச்ச சட்டையோடயா நிக்கப்போற?.. தட்டி விடறா.. என்னமோ மெடல் குத்திவிட்டாமாதிரி நிமித்திக்கிட்டு போற?
செந்தில் (குனிந்து பார்க்கிறார்..) ஐயையோ என்னண்ண இது ரத்த களறியாருக்கு?.. அவனுங்க துப்பாக்கியால குத்திப்பிட்டானுவ போலருக்கு.. (தொட்டு பார்க்கிறார்) ச்சை.. மண்ணு.. தண்ணியும் கலந்துருச்சா.. அதான் ரத்தோமோன்னு நினைச்சிட்டேன்.. மன்னிச்சிருங்கண்ணே.. நீங்க போங்க.. தோ இந்த பைப்புல களுவிக்கிட்டு வாரேன்.. (அருகிலிருந்த தோட்டத்து குழாயை திறக்க வெறும் காற்று மட்டும் வருகிறது. ஆனாலும் அதுவே போறும் என்ற நினைப்பில் அதில் பொருத்தியிருந்த பைப்பின் ஒரு முனையை தன்னை நோக்கி திருப்ப அவருடைய சட்டையில் அப்பியிருந்த மண் பறந்துபோய் கவுண்டரின் கண்களில் விழுகிறது ஆனால் செந்திலின் சட்டை சுத்தமாகிறது..) பாத்தீங்களாண்ணே.. இதுக்குத்தான் கிட்னி வேணுங்கறது.. பாருங்க.. (பெருமையுடன் தன்னுடைய நெஞ்சை நிமிர்த்தி காட்டுகிறார். )
கவு: (கண்களில் விழுந்த தூசியை சிரமப்பட்டு தட்டிவிட்டு செந்திலை மீண்டும் எட்டி உதைக்க நினைத்தவர் நிமிர்ந்து பால்கணியைப் பார்க்கிறார். ஜெ மேடம் புன்சிரிப்புடன் அவர்கள் இருவரையும் பார்ப்பது தெரிகிறது. உதைக்க தூக்கிய காலை உதறிவிட்டுகொள்கிறார்.) டேய்.. டேய்.. மானத்த வாங்காத. அந்தம்மா அங்கருந்து பாத்துக்கிட்டேயிருக்கு.. அதனால தப்பிச்சே. மூடிக்கிட்டு நடறா.. (செந்தில் புன்னகையுடன் ஜெ மேடத்தை பார்த்தவாறே முன்னே வேகமாக நடக்கிறார்) டேய், டேய்.. நில்றா.. உள்ற போயி ஏதாச்சும் சில்மிஷம் செஞ்சே.. மவனே ஒன்னெ கொன்னு பொதச்சிருவேன்..
செந்: என்னண்ணே நீங்க.. நா அப்படியெல்லாம் செய்வனா.. (சட்டென்று நின்று) சரிஈஈஈ.. கேள்விய நீங்க கேக்கறீங்களா இல்ல நா கேக்கட்டுமா?
கவு: (முறைத்தவாறே மீண்டும் காலை எத்துகிறார்..) டேய்.. என்ன நக்கலா? போனா போவுதுன்னு கூட்டியாந்தா.. நடறா.. ஏதோ கொஞ்சம் போட்டோ பிடிப்பானேன்னு கூட்டியாந்தேன்.. காமராவையும் போட்டு ஒடச்சாச்சி.. சரி அந்தம்மா சொல்றத டேப்பாவாவது செய்வேன்னு பாத்தேன்.. அதுவும் இல்லன்னு ஆயிருச்சி.. ஒன்னைய நம்பி கையில ஒரு நோட்டு கூட இல்லாம நிக்கறனடா.. அப்படியே ஓடிப்போயிரலாம்னு பாத்தா அந்தம்மா என்னடான்னா நம்மள பாத்து உள்ளார வாங்கன்னுருச்சி.. (செந்தில் குறுக்கிட்டு) நம்மள இல்லண்ணே.. என்னைய பார்த்து..
கவு: ஆமாண்டா.. இவரு பெரிய.. டேய் வேணாம். அப்புறம் வாய்ல வர்றத சொல்லிருவேன்.. மூடிக்கோ. சொல்லிட்டேன்..
(செந்தில் வாயில் கைவைத்தவாறு முன்னே செல்ல அவர்களை வரவேற்று விருந்தினர் அறையில் அமரவைத்த ஜெ மேடத்தின் இணைபிரியா தோழி ச.க மேடத்தைப் பார்த்து ‘ஹவ் டு யு டூ?’ என்றவாறு கையை நீட்ட ச.க. மேடம் புன்னகையுடன் விலகிச் செல்கிறார்.)
கவு: (அடிக்குரலில்) டேய், அவங்க ஒன்னைய கேட்டாங்களாடா.. எதுக்குடா எங்க போனாலும் கூடவே வந்து மானத்த வாங்கறே..
ஜெ. மேடம் மிடுக்குடன் காற்றில் மிதந்து வருவதுபோல் வந்து அவர்கள் முன் வந்து அமர்ந்து பேட்டியை துவங்கலாம் என்று மெஜஸ்டிக்காக கைகளை அசைக்கிறார்.
(கவுண்டர் வாயை திறக்கிறார்.. ஆனால் காற்று மட்டுமே வருகிறது.)
செந்: (நக்கல் சிரிப்புடன்.. அவருடைய காதில்) என்னண்ணே.. மேடத்த பார்த்ததும் வார்த்தையே வரமாட்டேங்குது.. கேள்விய நீங்க கேக்கறீங்களா.. இல்ல...
கவு: (அடிக்குரலில்) டேய்.. மூடிக்கிட்டு ஒக்காரு.. தள்றா டெய்லி குளிடான்னா கேட்டாத்தான?
ஜெ: (பெருந்தன்மையுடன்) நீங்க கேக்க இருந்த மொதல் கேள்விக்கு நானே பதில் சொல்றேன்..
செந்: (பெருமையுடன்) நீங்க சொல்லுங்க மேடம்.. இவருக்கு எப்பவுமே ஸ்டார்ட்டிங் ட்ரபிள்.. மொதோ ரெண்டு கேள்விக்கு இப்படித்தான் சொதப்புவார்.. அப்புறம் சரியாயிரும்.. நீங்க சொல்லுங்க.. (மேல் பாக்கெட்டை தடவுகிறார். கொண்டு வந்திருந்தால்தானே இருப்பதற்கு? அவருடைய முளியை புரிந்துக்கொண்டு ஜெ மேடம் மெஜஸ்டிக்காக திரும்பி வாயிலையொட்டி நின்ற தன் தோழியை பார்க்கிறார். உடன்பிறவா பிறப்பாயிற்றே.. அவருடைய பார்வையைப் புரிந்துக்கொண்டு ஒரு சிறிய நிரூபர் நோட்டையும் ஒரு பேனாவையும் கொண்டு வந்து செந்திலிடம் கொடுக்கிறார்) தாங்ஸ் மேடம் (என்றவாறு செந்தில் பெற்றுக்கொள்கிறார்.)
பேட்டி தொடர்கிறது..
ஜெ: இப்போதிருக்கும் சிறுபான்மை அரசு நான் பார்த்து இட்ட பிச்சை.. அது நான் எப்போது நினைக்கிறேனோ அப்போது கவிழ்ந்துவிடும்.. என்னுடைய ஆஸ்தான ஜோசியர் பணிக்கர்தான் நாள் குறித்து கொடுப்பார்.. அது கிடைத்ததும் ஆட்சி கவிழ்ப்பை துவங்க வேண்டியதுதான்..
கவு: (உற்சாகத்துடன்) அட்றா சக்கை.. (செந்திலிடம்) டேய் எளுதிக்கிட்டியா? (ஜெ மேடத்தைப் பார்க்கிறார்) அப்ப அடுத்த கேள்விக்கு போலாங்களா?
(மேடம் புன்னகையுடன் தலையை அசைத்தவாறே எப்படி என் பதில் என்ற தோரணையில் தன் தோழியைப் பார்க்க. அவர் பேஷ் பேஷ் என்று தலையை அசைக்கிறார்.)
(கவுண்டர் வாயை திறக்கிறார்.. மீண்டும் காற்றுதான் வருகிறது. ஆனால் மேடம் புரிந்துக்கொண்டு பதிலை அளிக்கிறார்)
ஜெ: உங்களைப் போல்தான் தமிழகத்திலுள்ள என்னுடைய கோடானுகோடி உடன்பிறப்புகளும் கேட்கிறார்கள். நீங்கள் உம் என்று சொல்லுங்கள்.. மரிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று.. (குரலை இறக்கி) ஆனா தெரியாத்தனமா தற்கொல செஞ்சிக்கிட்டவுங்களுக்கு கொஞ்சம் பணத்த குடுத்து தொலைச்சிட்டேனே.. இப்படியே ஒவ்வொருத்தனும் செத்தா அவனுங்களுக்கு கொடுத்தே நா போண்டியாயிருவேன் போலருக்கே.. (செந்தில் அதையும் எழுதிக்கொள்ள மேடம் ஒரு முறை முறைக்கிறார். செந்தில் அரண்டு போய் இதுவரை எழுதியிருந்த பேப்பரை அப்படியே கிழித்து எறிகிறார். மேடம் தோழியை பார்க்க அவர் விரைந்து வந்து அந்த காகிதத்தை எடுத்து பத்திரப்படுத்துகிறார்)
பேட்டி தொடர்கிறது..
(கவுண்டர் மீண்டும் வாயை திறக்கிறார் இப்போது வார்த்தைகள் வருகின்றன.. ஆனால் அவர் கேள்வியை முடிக்கும் முன்பே அவருடைய கேள்விக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத பதில் வருகிறது.. கவுண்டரும் செந்திலும் ஒருவரையொருவர் பார்த்து விழிக்கின்றனர்.. இப்படியே நடக்கிறது ஒவ்வொரு முறையும். கவுண்டர் வெறுத்துப் போய் வாயை மூடிக்கொள்கிறார்.)
பேட்டியின் இறுதியில்..
மேடம்: (பெருந்தன்மையுடன்) இப்ப நீங்க கேளுங்க
கவு: (தனக்குள்) என்னத்த கேக்கறது? அதான் எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்களே.. (செந்திலைப் பார்க்கிறார்) டேய் ஏதாச்சும் கேளேன்.. மேடம் கேக்கறாங்கல்ல?
செந்: (பெருமையுடன் காலரை சரி செய்துகொள்கிறார்) மேடம்.. நீங்க எந்த கூட்டணியில இப்ப இருக்கீங்கன்னு....
(அவர் கேள்வியை முடிக்கும் முன்னரே ஜெ மேடத்தின் முகம் கோபத்தால் சிவந்து போக இருக்கையிலிருந்து எழுந்து அவரை அடிக்க கை ஓங்குகிறார்.. செந்திலும் கவுண்டரும் உயிர் பிழைத்தால் போதும் என்று குதிகால் பிடறியில் விழ வாசலை நோக்கி ஓடுகின்றனர். ச.க. மேடம் அவர்களை விரட்டிக் கொண்டு ஒடுகிறார். வாசலில் நிற்கும் கானா பூனா படை வாசற்கதவை சாத்திவிட இருவருக்கும் பொறியில் பிடிபட்ட எலிகளைப்போல விழிக்கின்றனர். )
நிறைவு..
********
செந்தில் கழுத்தில் கேபிள்கள் மாலையாக. வலது கையில் ஒரு மைக்.. இடது தோளில் ஒரு அரதப் பழசான காமரா.
கவுண்டர் கெத்தாக அருகில். டீக்காக உடையணிந்திருக்கிறார்.
ரிக்ஷ¡ போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் இன்னாள் எ.க. தலைவி (இந்த abbreviationஐ எக்குத்தப்பா நீங்க மொழிபெயர்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல) செல்வி ஜெயலலிதா அவர்களுடைய பங்களாவிற்கு முன்னால் வந்து நிற்கிறது.
வாசலில் நின்றிருந்த கானா பூனா வீரர்கள் பதறியடித்து ரிக்ஷ¡வை நிறுத்துகிறார்கள்.
கவுண்டர் கெத்தாக இறங்கி அவர்களை துச்சமாக பார்க்கிறார். செந்தில் கழுத்திலிருந்த கேபிள்களுக்குள் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் ‘அண்ணே.. அண்ணே.. காப்பாத்துங்க’ என்று அலறுகிறார்.
கவு: (எரிச்சலுடன்) டேய்.. டேய்.. ஒன்னெ அப்பவே சொன்னேன்.. நீ கேக்கல. இப்ப பார்.. என் மானத்த வாங்கறே.. சொன்னா என்னண்ணே, நொன்னண்ணேம்பே.. சரி இரு வரேன்..
(செந்திலை நெருங்கி செந்திலுடைய கழுத்திலிருந்த கேபிள்களை வெடுக்கென்று பிடித்து இழுக்க அவர் அப்படியே தலைகுப்புற சாலையில் விழுகிறார். கேமரா ஒரு பக்கமும், மைக் ஒருபக்கமும் தெறித்து விழுகின்றன)
கவு: டேய்.. டேய் காமராடா... (உடைந்து சிதறிய கேமராவை எடுத்து திருப்பி, திருப்பி பார்த்துவிட்டு சாலையோரம் வீசுகிறார். கானா பூனா வீரர்கள் பதற்றத்துடன் அதை எடுத்து ஏதோ வெடிகுண்டைப் பார்ப்பதுபோல் அக்கு வேறு ஆணி வேராக பிரிக்க செந்தில் பதற்றத்துடன் அவர்கள் கையிலிருந்து அதை பிடுங்கி பார்க்கிறார். பிறகு வெறுப்புடன் ரிக்ஷ¡வில் எறிகிறார்.)
செந்: போய்யா.. இத எடுத்துக்கிட்டு போயி காயலாங்கடையில வித்து ரிக்ஷ¡ கூலிக்கி வச்சிக்க.. (கவுண்டரை பார்த்து) என்னண்ணே.. நீங்க இப்பிடி செஞ்சிபுட்டீங்க.. இப்ப அம்மாவ எப்படி புடிக்கிறது?
கவு: (கானா பூனா வீரர்களை ஓரக்கண்ணால் பார்க்கிறார்) டேய்.. டேய் பாத்துறா.. நீ பாட்டுக்கு புடிக்கிறது, கிடிக்கிறதுன்னு சொல்லிட்டு இவனுங்கக்கிட்ட மாட்டிவிட்டுறாத.. நாம அம்மாவ பேட்டி எடுக்கத்தான் வந்துருக்கோம்.. புடிக்கறதுக்கில்ல..
செந்: (சாலையில் கிடந்த மைக்கையும் அதிலிருந்து அனுமார் வால் போல ஆடிய கேபிளையும் கையில் எடுத்துக்கொள்கிறார். பிறகு ஏதோ நினைவுக்கு வந்தவர்போல கலக்கத்துடன்) அண்ணே..
கவு: (எரிச்சலுடன்) அட ஏண்டா.. நீ வேற.. நான் இவனுங்களுக்கு டிமிக்கி குடுத்துட்டு எப்படிறா இந்த கோட்டைக்குள்ள பூருறதுன்னு (புகுவது) ப்ளான் பண்ணிக்கிட்டிருக்கேன்.. எதுக்குடா அலற்னே இப்ப?
செந்: (தயக்கத்துடன்) மைக் எடுத்தேனேயொழிய டேப் ரிக்கார்டர எடுக்க மறந்துட்டேண்ணே..
கவு: (காலால் எத்துகிறார். செந்தில் லாவகமாக நகர்ந்துக்கொள்கிறார்) டேய், ஒனக்கு ஏதாச்சும் இருக்காடா? ஏற்கனவே எடிட்டர்கிட்ட ஐயா அம்மாவ பேட்டி எடுக்கற அசைன்மெண்ட எங்க ரெண்டு பேருக்கும் தாங்கய்யான்னு கேட்டப்ப ஒங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே அம்மா வெரட்டியடிச்சிருவாங்க. எதுக்குய்யா ஒங்களுக்கு இந்த விபரீத ஆசைன்னார். இப்ப போட்டாவும் எடுக்காம.. டேப்பும் இல்லாம நாம உண்மையிலயே பேட்டி எடுத்துக்கிட்டு போனாக்கூட அவர் நம்பமாட்டாரேடா.. (புலம்புகிறார்) ஒன்னைய போயி.. போடா டேய்.. என் கண் முன்னால நிக்காத..(காலால் மீண்டும் எத்துகிறார். இந்த முறை செந்திலின் பின்புறம் வகையாய் உதைக்க கவுண்டர் உதைத்த வேகத்தில் அவர் கானா பூனா வீரர்களுடைய காலடியில் சென்று விழ அவர்கள் இவர் தற்கொலை படை வீரராயிருப்பாரோ என்ற ஐயத்தில் தங்களுடைய இயந்திர துப்பாக்கிகளை அவரை நோக்கி நீட்ட செந்தில் ‘என்னைய காப்பாத்துங்கண்ணே...’ என்று அலருகிறார். அவருடைய அலறல் பால்கணியில் அமர்ந்து அன்றைய நமது எம்.ஜி.ஆர் தினத்தாளை வாசித்துக்கொண்டிருந்த எ.க. தலைவி ஜெயலலிதா மேடத்தின் செவிகளில் விழ ‘யார் மேன் அங்க?’ என்று உரத்த குரலில் கேட்கிறார். வாசலில் நின்றிருந்த கானா பூனா வீரர் ஒருவர் கவண்டரையும் செந்திலையும் காட்டி ‘மேடம், ஒங்கள பேட்டியெடுக்க வந்துருக்காங்க.’ என்கிறார். அவருக்கு கவுண்டரைவிட தரையிலிருந்து எழுந்து சட்டெயெல்லாம் மண்ணுடன் பரிதாபமாக நிற்கும் செந்திலை பிடித்துப்போக புன்னகையுடன் தன் கையிலிருந்த தினத்தாளைக் காட்டி இங்கருந்தா வரீங்க என்று சைகைக் காட்டுகிறார்.. )
கவு: (தனக்குள்) ஆம்மா.. பின்னே ஒங்கள என்ன பிபிசியிலருந்தா பேட்டியெடுக்க வருவாங்க?
செந்: (உற்சாகத்துடன்) ஆமாங்க மேடம் (என்பதுபோல் வாயசைக்கிறார்)
(தொலைக்காட்சியில் தூரத்தில் காட்டப்படும் மு.கவின் உதட்டசைவிலிருந்தே அவர் தன்னைத்தான் சாடுகிறார் என்று உறுதிசெய்து எதிரறிக்கை விட்டே பழகிப்போன ஜெ.. அவருடைய உதட்டசைவை புரிந்துக்கொண்டு ‘அவங்கள உள்ள அனுப்பு மேன்’ என்று சைகை காட்டுகிறார். கானா பூனா வீரர்கள் பிரம்மாண்டமான வாசற்கதவை திறக்கிறார்கள்.)
செந்: வாங்கண்ணே.. பாத்தீங்களா? நம்மள பாத்ததுமே மேடம் உள்ள விட்டுருவாங்கன்னு சொன்னப்ப போடா நீயும் ஒன் மூஞ்சும்னு சொன்னீங்களே இப்ப பாருங்க.. ஒங்களுக்கு எப்பவுமே கிட்னி வேலை செய்றதில்லண்ணே.. சொன்னா மட்டும் கோவம் பொத்துக்கிட்டு வந்துருது.. சரி.. சரி.. வாங்க..
கவு: (தனக்குள்) ஒன்னைய மாதிரி ஆளுங்களுக்கு எப்பவுமே கிட்னிதாண்டா வேலை செய்யுது.. ஹ¥ம்.. எல்லாம் காலம்டா காலம்.. (செந்திலிடம்) டேய்.. அங்க வந்து இந்த அளுக்கு பிடிச்ச சட்டையோடயா நிக்கப்போற?.. தட்டி விடறா.. என்னமோ மெடல் குத்திவிட்டாமாதிரி நிமித்திக்கிட்டு போற?
செந்தில் (குனிந்து பார்க்கிறார்..) ஐயையோ என்னண்ண இது ரத்த களறியாருக்கு?.. அவனுங்க துப்பாக்கியால குத்திப்பிட்டானுவ போலருக்கு.. (தொட்டு பார்க்கிறார்) ச்சை.. மண்ணு.. தண்ணியும் கலந்துருச்சா.. அதான் ரத்தோமோன்னு நினைச்சிட்டேன்.. மன்னிச்சிருங்கண்ணே.. நீங்க போங்க.. தோ இந்த பைப்புல களுவிக்கிட்டு வாரேன்.. (அருகிலிருந்த தோட்டத்து குழாயை திறக்க வெறும் காற்று மட்டும் வருகிறது. ஆனாலும் அதுவே போறும் என்ற நினைப்பில் அதில் பொருத்தியிருந்த பைப்பின் ஒரு முனையை தன்னை நோக்கி திருப்ப அவருடைய சட்டையில் அப்பியிருந்த மண் பறந்துபோய் கவுண்டரின் கண்களில் விழுகிறது ஆனால் செந்திலின் சட்டை சுத்தமாகிறது..) பாத்தீங்களாண்ணே.. இதுக்குத்தான் கிட்னி வேணுங்கறது.. பாருங்க.. (பெருமையுடன் தன்னுடைய நெஞ்சை நிமிர்த்தி காட்டுகிறார். )
கவு: (கண்களில் விழுந்த தூசியை சிரமப்பட்டு தட்டிவிட்டு செந்திலை மீண்டும் எட்டி உதைக்க நினைத்தவர் நிமிர்ந்து பால்கணியைப் பார்க்கிறார். ஜெ மேடம் புன்சிரிப்புடன் அவர்கள் இருவரையும் பார்ப்பது தெரிகிறது. உதைக்க தூக்கிய காலை உதறிவிட்டுகொள்கிறார்.) டேய்.. டேய்.. மானத்த வாங்காத. அந்தம்மா அங்கருந்து பாத்துக்கிட்டேயிருக்கு.. அதனால தப்பிச்சே. மூடிக்கிட்டு நடறா.. (செந்தில் புன்னகையுடன் ஜெ மேடத்தை பார்த்தவாறே முன்னே வேகமாக நடக்கிறார்) டேய், டேய்.. நில்றா.. உள்ற போயி ஏதாச்சும் சில்மிஷம் செஞ்சே.. மவனே ஒன்னெ கொன்னு பொதச்சிருவேன்..
செந்: என்னண்ணே நீங்க.. நா அப்படியெல்லாம் செய்வனா.. (சட்டென்று நின்று) சரிஈஈஈ.. கேள்விய நீங்க கேக்கறீங்களா இல்ல நா கேக்கட்டுமா?
கவு: (முறைத்தவாறே மீண்டும் காலை எத்துகிறார்..) டேய்.. என்ன நக்கலா? போனா போவுதுன்னு கூட்டியாந்தா.. நடறா.. ஏதோ கொஞ்சம் போட்டோ பிடிப்பானேன்னு கூட்டியாந்தேன்.. காமராவையும் போட்டு ஒடச்சாச்சி.. சரி அந்தம்மா சொல்றத டேப்பாவாவது செய்வேன்னு பாத்தேன்.. அதுவும் இல்லன்னு ஆயிருச்சி.. ஒன்னைய நம்பி கையில ஒரு நோட்டு கூட இல்லாம நிக்கறனடா.. அப்படியே ஓடிப்போயிரலாம்னு பாத்தா அந்தம்மா என்னடான்னா நம்மள பாத்து உள்ளார வாங்கன்னுருச்சி.. (செந்தில் குறுக்கிட்டு) நம்மள இல்லண்ணே.. என்னைய பார்த்து..
கவு: ஆமாண்டா.. இவரு பெரிய.. டேய் வேணாம். அப்புறம் வாய்ல வர்றத சொல்லிருவேன்.. மூடிக்கோ. சொல்லிட்டேன்..
(செந்தில் வாயில் கைவைத்தவாறு முன்னே செல்ல அவர்களை வரவேற்று விருந்தினர் அறையில் அமரவைத்த ஜெ மேடத்தின் இணைபிரியா தோழி ச.க மேடத்தைப் பார்த்து ‘ஹவ் டு யு டூ?’ என்றவாறு கையை நீட்ட ச.க. மேடம் புன்னகையுடன் விலகிச் செல்கிறார்.)
கவு: (அடிக்குரலில்) டேய், அவங்க ஒன்னைய கேட்டாங்களாடா.. எதுக்குடா எங்க போனாலும் கூடவே வந்து மானத்த வாங்கறே..
ஜெ. மேடம் மிடுக்குடன் காற்றில் மிதந்து வருவதுபோல் வந்து அவர்கள் முன் வந்து அமர்ந்து பேட்டியை துவங்கலாம் என்று மெஜஸ்டிக்காக கைகளை அசைக்கிறார்.
(கவுண்டர் வாயை திறக்கிறார்.. ஆனால் காற்று மட்டுமே வருகிறது.)
செந்: (நக்கல் சிரிப்புடன்.. அவருடைய காதில்) என்னண்ணே.. மேடத்த பார்த்ததும் வார்த்தையே வரமாட்டேங்குது.. கேள்விய நீங்க கேக்கறீங்களா.. இல்ல...
கவு: (அடிக்குரலில்) டேய்.. மூடிக்கிட்டு ஒக்காரு.. தள்றா டெய்லி குளிடான்னா கேட்டாத்தான?
ஜெ: (பெருந்தன்மையுடன்) நீங்க கேக்க இருந்த மொதல் கேள்விக்கு நானே பதில் சொல்றேன்..
செந்: (பெருமையுடன்) நீங்க சொல்லுங்க மேடம்.. இவருக்கு எப்பவுமே ஸ்டார்ட்டிங் ட்ரபிள்.. மொதோ ரெண்டு கேள்விக்கு இப்படித்தான் சொதப்புவார்.. அப்புறம் சரியாயிரும்.. நீங்க சொல்லுங்க.. (மேல் பாக்கெட்டை தடவுகிறார். கொண்டு வந்திருந்தால்தானே இருப்பதற்கு? அவருடைய முளியை புரிந்துக்கொண்டு ஜெ மேடம் மெஜஸ்டிக்காக திரும்பி வாயிலையொட்டி நின்ற தன் தோழியை பார்க்கிறார். உடன்பிறவா பிறப்பாயிற்றே.. அவருடைய பார்வையைப் புரிந்துக்கொண்டு ஒரு சிறிய நிரூபர் நோட்டையும் ஒரு பேனாவையும் கொண்டு வந்து செந்திலிடம் கொடுக்கிறார்) தாங்ஸ் மேடம் (என்றவாறு செந்தில் பெற்றுக்கொள்கிறார்.)
பேட்டி தொடர்கிறது..
ஜெ: இப்போதிருக்கும் சிறுபான்மை அரசு நான் பார்த்து இட்ட பிச்சை.. அது நான் எப்போது நினைக்கிறேனோ அப்போது கவிழ்ந்துவிடும்.. என்னுடைய ஆஸ்தான ஜோசியர் பணிக்கர்தான் நாள் குறித்து கொடுப்பார்.. அது கிடைத்ததும் ஆட்சி கவிழ்ப்பை துவங்க வேண்டியதுதான்..
கவு: (உற்சாகத்துடன்) அட்றா சக்கை.. (செந்திலிடம்) டேய் எளுதிக்கிட்டியா? (ஜெ மேடத்தைப் பார்க்கிறார்) அப்ப அடுத்த கேள்விக்கு போலாங்களா?
(மேடம் புன்னகையுடன் தலையை அசைத்தவாறே எப்படி என் பதில் என்ற தோரணையில் தன் தோழியைப் பார்க்க. அவர் பேஷ் பேஷ் என்று தலையை அசைக்கிறார்.)
(கவுண்டர் வாயை திறக்கிறார்.. மீண்டும் காற்றுதான் வருகிறது. ஆனால் மேடம் புரிந்துக்கொண்டு பதிலை அளிக்கிறார்)
ஜெ: உங்களைப் போல்தான் தமிழகத்திலுள்ள என்னுடைய கோடானுகோடி உடன்பிறப்புகளும் கேட்கிறார்கள். நீங்கள் உம் என்று சொல்லுங்கள்.. மரிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று.. (குரலை இறக்கி) ஆனா தெரியாத்தனமா தற்கொல செஞ்சிக்கிட்டவுங்களுக்கு கொஞ்சம் பணத்த குடுத்து தொலைச்சிட்டேனே.. இப்படியே ஒவ்வொருத்தனும் செத்தா அவனுங்களுக்கு கொடுத்தே நா போண்டியாயிருவேன் போலருக்கே.. (செந்தில் அதையும் எழுதிக்கொள்ள மேடம் ஒரு முறை முறைக்கிறார். செந்தில் அரண்டு போய் இதுவரை எழுதியிருந்த பேப்பரை அப்படியே கிழித்து எறிகிறார். மேடம் தோழியை பார்க்க அவர் விரைந்து வந்து அந்த காகிதத்தை எடுத்து பத்திரப்படுத்துகிறார்)
பேட்டி தொடர்கிறது..
(கவுண்டர் மீண்டும் வாயை திறக்கிறார் இப்போது வார்த்தைகள் வருகின்றன.. ஆனால் அவர் கேள்வியை முடிக்கும் முன்பே அவருடைய கேள்விக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத பதில் வருகிறது.. கவுண்டரும் செந்திலும் ஒருவரையொருவர் பார்த்து விழிக்கின்றனர்.. இப்படியே நடக்கிறது ஒவ்வொரு முறையும். கவுண்டர் வெறுத்துப் போய் வாயை மூடிக்கொள்கிறார்.)
பேட்டியின் இறுதியில்..
மேடம்: (பெருந்தன்மையுடன்) இப்ப நீங்க கேளுங்க
கவு: (தனக்குள்) என்னத்த கேக்கறது? அதான் எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்களே.. (செந்திலைப் பார்க்கிறார்) டேய் ஏதாச்சும் கேளேன்.. மேடம் கேக்கறாங்கல்ல?
செந்: (பெருமையுடன் காலரை சரி செய்துகொள்கிறார்) மேடம்.. நீங்க எந்த கூட்டணியில இப்ப இருக்கீங்கன்னு....
(அவர் கேள்வியை முடிக்கும் முன்னரே ஜெ மேடத்தின் முகம் கோபத்தால் சிவந்து போக இருக்கையிலிருந்து எழுந்து அவரை அடிக்க கை ஓங்குகிறார்.. செந்திலும் கவுண்டரும் உயிர் பிழைத்தால் போதும் என்று குதிகால் பிடறியில் விழ வாசலை நோக்கி ஓடுகின்றனர். ச.க. மேடம் அவர்களை விரட்டிக் கொண்டு ஒடுகிறார். வாசலில் நிற்கும் கானா பூனா படை வாசற்கதவை சாத்திவிட இருவருக்கும் பொறியில் பிடிபட்ட எலிகளைப்போல விழிக்கின்றனர். )
நிறைவு..
********
27.6.06
Soorian 98
வங்கியின் போர்ட் மீட்டிங் நாட்களில் மருத்துவர். சோமசுந்தரம் தன்னுடைய மருத்துவமனை அலுவல்களையெல்லாம் தன்னுடைய மூத்த மகளிடம் ஒப்படைத்துவிடுவார்.
சென்னையிலும் அவருடைய சொந்த மாநிலமான ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்திலுமிருந்த மருத்துவமனைகள் அவற்றை சார்ந்திருந்த மூன்று நட்சத்திர உணவு விடுதிகள் மற்றும் சென்னையை முழுவதும் இயங்கிவந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மருந்து விற்பனைக் கடைகள், பத்துக்கும் மேற்பட்ட இரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் செண்டர்கள் எல்லாவற்றையும் நிர்வகிக்கும் பொறுப்பு மருத்துவத்துறையில் எம்.சி.எச் மற்றும் நிர்வாகத்துறையில் ஹார்வர்ட் எம்.பி.ஏ பட்டங்களை பெற்றிருந்த அவருடைய ஒரே மகள் பூர்னிமா ராவ்தான்.
அவருடைய பார்வையில் அவருடைய திரண்ட சொத்துக்கு ஒரே வாரிசான மகள் பூர்னிமா ஒரு மகனைப் போலத்தான் தென்பட்டாள்.
பூர்னிமாவும் தன்னை அதுபோல்தான் நினைத்திருந்தாள். ஆனால் அவளுடைய தந்தைக்கு இருந்த எந்தஒரு குறுக்கு புத்தியும் அவளுக்கு இல்லை. அத்தனை சொத்துக்கும் வாரிசாக இருந்தும் அவளுடைய மருத்துவமனையில் பணிபுரிந்த அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடைய பார்வையில் அவள் மிகவும் எளிமையானவள். ஆனால் அதே சமயம் கண்டிப்பானவள்.
சோமசுந்தரத்தின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அவருடைய மருத்துவமனையில் ஏழை எளியவர்களுக்கென இலவச மருத்துவ பகுதியை துவக்கியதுடன் நின்றுவிடாமல் சென்னையிலிருந்த பல தொண்டு நிறுவனங்களுடனும் கூட்டு சேர்ந்து இலவச மருத்துவ முகாம்களை இடைவிடாமல் நடத்துவதிலும் குறியாயிருந்தாள்..
‘இது அம்மாவோட கடைசி ஆசைப்பா.. இதுல நீங்க தலையிடாதீங்க.. நீங்க பணம் பண்றதுக்கு என்னவெல்லாம் செஞ்சிருக்கீங்க.. அதுக்கு ஒரு பிராயச்சித்தம்னு கூட நினைச்சிக்குங்களேன்..’
பூர்னிமாவின் இந்த மறைமுகத் தாக்குதல் அவருக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவளுடன் எந்தவித வாக்குவாதமும் செய்யமாட்டார். அவள் எது செய்தாலும் அது நன்மையில்தான் சென்று முடியும் என்பது அவருக்குத் தெரியும்..
‘இன்னைக்கி நம்ம பேங்குல புது சேர்மன் சார்ஜ் எடுக்கறார் பூர்னி.. அதனால் இன்னைக்கிம் நாளைக்கிம் அப்பா கொஞ்சம் பிசியா இருப்பேன்.. நீதான் இங்க பாத்துக்கணும்..’
பூர்னிமா காப்பி கோப்பையை டேபிளில் வைத்துவிட்டு தன் தந்தையைப் பார்த்தாள். ‘ஒங்களோட அட்ஜஸ்ட் பண்ண முடியாம பழைய சேர்மன் போனா மாதிரி இவரையும் ஓட வச்சிருவீங்களே..’
தன் மகள் மறைமுகமாக தன்னை தாக்குவது தெரிந்தும் அதைப் பொருட்படுத்தாமல், ‘நாளைக்கும் அடுத்த நாளும் நான் செய்யறதாருந்த சர்ஜரியையெல்லாம் நம்ம சந்திரபோஸ் அப்புறம் மாதவ ராவ் டாக்டர்ஸ்ச பாத்துக்க சொல்லியிருக்கேன்.. ஒரு இன்ஃபர்மேஷனுக்காகத்தான் ஒங்கிட்ட சொல்றேன்.. போஸ் ஆப்பரேட்டிவ் வார்ட்ல நீயும் அப்பப்போ போய் பார்த்துக்கிட்டா நல்லது..’ என்றார்.
‘லீவ் தட் ல் டு மி டாட்.. சொல்லுங்க.. எத்தன வருச காண்ட் ராக்ட்ல வரார் இந்த சேர்மன்..’
சோமசுந்தரம் வியப்புடன் தன் மகளைப் பார்த்தார்.. இவளையே நமக்கப்புறம் போர்ட்ல போட்டுரலாமா? எம்.பி.ஏ செஞ்சிருக்காளே?
சேச்சே.. இவள அப்படியே தூக்கி சாப்பிட்டுருவான் அந்த நாடார்.. மொதல்ல மாதவன வளைச்சிப் போட்டு நம்ம டேர்ம் முடியறதுக்குள்ள அந்த ரெக்ரூட்மெண்ட் ப்ராஜக்ட முடிச்சிரணும்.. அதுக்கப்புறம் போர்ட்ல யார நாமிநேட் பண்லாம்னு யோசிக்கலாம்..
‘என்ன டாட்.. சத்தத்தையே காணோம்.. என்னடா ஹாஸ்ப்பிடல், ஹோட்டல், மெடிக்கல் ஷாப்.. எல்லாம் போறாதுன்னு பேங்குல மூக்க நொழைக்கறாளேன்னு பாக்கறீங்களா?’
சோமசுந்தரம் தன் மகளைப் பார்த்தார்.. ‘சேச்சே.. அப்படியே நீ நொழைஞ்சாலும் தப்பில்ல பூர்னி.. If you are interested.. I will do something.’
பூர்னிமா இல்லையென்று தலையை அசைத்தாள். ‘ இல்ல டாட்.. சும்மாத்தான் கேட்டேன்..’
‘ரெண்டு வருசத்துக்குத்தான் போர்ட்லருந்து ரெக்கமெண்ட் பண்ணோம்.. ஆனா ரிசர்வ் பேங்கலருந்து நாலு வருசத்துக்குன்னு அப்பாய்ண்ட்மெண்ட் வந்திருக்கு.. முதல்ல அப்போஸ் பண்ணா என்னன்னு நினைச்சோம்.. அப்புறம் இப்போதைக்கு வேணாம்னு விட்டுட்டோம்.. பாப்போம்..ஆள் முன்னாலருந்த சேர்மன்மாதிரி ஒத்துவராத ஆளாருந்தா இருக்கவே இருக்கு ரிசிக்னேஷன் ரூட்.. போடான்னா போய்ட்டு போறார்...’
பூர்னிமா கலகலவென சிரித்தவாறே எழுந்து நின்றாள்.. ‘அதான பார்த்தேன்.. சோமசுந்தரமா கொக்கா.. ஓக்கே டாட்.. யூ கேர்ரி ஆன்.. பை..’
முழங்காலை தொடும் நெருக்கமாக ப்ளீட் வைத்து தைக்கப்பட்ட ஸ்கர்ட்.. அதற்கு ஜோடியாக அரைக்கை சட்டை.. ஹீல்ஸ் இல்லாத வெள்ளை நிற காலனி.. தோள்வரை குலுங்கும் பாப் தலை.. லிப்ஸ்ட்டிக், மேக்கப் இல்லாத பளிச் முகம்..
தன்னுடைய மகளின் ஆடம்பரமில்லாத அமைதியான இந்த தோற்றத்தைக் கண்டு சோமசுந்தரமே பிரமித்துபோயிருக்கிறார் தனக்கு இப்படியொரு மகளா என்று.. 'கல்யாணம் செஞ்சிக்கம்மா' என்று எத்தனைமுறையோ கெஞ்சி பார்த்துவிட்டார். மிரட்டியும் பார்த்தார். ஊஹும்.. ஒன்றுக்கும் மசியவில்லை.. 'என்னெ என் போக்குல விட்டுருங்கப்பா.. எப்ப எனக்கே தோணுதோ.. அப்ப செஞ்சிக்கறேன்..' வயது முப்பத்தஞ்சாகிறது... இனி எப்போதுதான் தோன்றுமோ என்று பலமுறை நினைத்திருக்கிறார்.
சென்னையிலிருந்த அனைத்து குடிகார க்ளப்பிலும் அவர் அங்கத்தினர் என்றால் நகரத்திலிருந்த அனைத்து சேவை சங்கங்களிலும் பூர்னிமா உறுப்பினராக இருந்தாள்.. அவர் சென்னை நகரின் ஷெரீஃபாக இருந்தார் என்றால் பூர்னிமா சென்னை மத்திய ரவுண்ட் டேபிளின் கவர்னராக இருந்தவள்..
எந்த வழியானாலும் பரவாயில்லை.. இறுதியில் பணம், சொத்து, புகழ் கிடைந்தால் போறும் என்று அவர் நினைத்தால்.. எத்தனை லட்சங்கள் செலவானாலும் பரவாயில்லை தனக்கு மனதிருப்தி கிடைத்தால் போறும் என்று பூர்னிமா நினைத்தாள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்..
‘அவ நம்ம மாதிரி இல்லைய்யா.. அப்படியே அவ அம்மா மாதிரி..’ என்பார் நண்பர்களிடம்..
பூர்னிமா புறப்பட்டுச் சென்றதும் சோமசுந்தரம் பரபரப்பானார்.. அவருடைய பதவிகாலம் முடிய இன்னும் ஆறு மாதங்களே இருந்தன. அதற்குள் அவர் நிறைவேற்றி முடிக்க வேண்டியவை ஒன்றிரண்டு இருந்தன..
தில்லி, மும்பை நகரங்களில் கிளை மருத்துவமனைகள் அதற்குத் தேவையான உபகரணங்களை சிலவற்றை ஜெர்மனியிலிருந்து தருவிக்க குறைந்தபட்சம் பதினைந்து கோடிகள் வேண்டியிருந்தது.
‘Why do you worry Dad.. we can borrow at a very competitive rate from a consortium of Banks.. I’ll manage it..’ என்று மகள் பொறுப்பேற்றுக்கொண்டாலும் பதினைந்து கோடி கடன் பெறவேண்டுமானால் அவருடயை பங்குக்கு மூன்று கோடி முதலீடு செய்ய வேண்டியிருந்தது. அதற்கு மூன்று மாத காலத்திற்கு சென்னை க்ரெடிட் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிதி நிறுவனத்திலிருந்து கடனாக பெற்றிருந்தார். கெடு முடிந்து ஒரு மாதமாகிறது. ஏற்கனவே நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நிறுவனம் இனியும் பொறுத்திருக்கும் என்று அவருக்கு தோன்றவில்லை. அவருடைய சி.ஏ வேணுகோபாலின் பரிந்துரையால்தான் அந்த நிறுவனம் இதுவரை பொறுத்திருந்தது என்பதும் அவருக்குத் தெரியும். நண்பர்கள், உறவினர்கள் என இரண்டு கோடியை திரட்டி அடைத்திருந்தார். இன்னும் ஒரு கோடி ரூபாய்.. அதற்கு அவர் தீட்டிய திட்டம்தான் வங்கிக்கு புதிய கடைநிலை அதிகாரிகளை ரெக்ரூட் செய்ய வகுத்த திட்டம்..
அதற்கு புதிய சேர்மனை சரிகட்டினால் போறாது அந்த நாடாரையும் சரிகட்டவேண்டும் என்று அவருக்கு தெரியும்.. அது எப்படி என்பதை இனிமேல் யோசித்து செயல்படுத்தவேண்டும் என்று நினைத்தவாறே தன் செல்ஃபோனை எடுத்து பாபு சுரேஷின் நம்பரை டயல் செய்தார்..
****
சென்னை கடற்கரைச் சாலையிலிருந்த வங்கியின் பயிற்சிக்கல்லூரி திறக்கப்பட்டு அன்றுடன் இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவுறுகிறது.
அன்று காலை வங்கிக்கு பொறுப்பேற்றதும் புதிய சேர்மனுடைய முதல் பொது அலுவல் இந்த வெள்ளி விழாவில் பங்கு கொள்வதுதான்.
கவே அன்று காலை முதலே பயிற்சிக் கல்லூரி பரபரப்பாக இருந்தது. கல்லூரி முதல்வர் சேவியர் ஃபெர்னாண்டோவின் நேரடி பொறுப்பில் அவருடைய துனை முதல்வரும், கல்லூரியில் பயிற்றுவிப்பாளராக இருந்த ஒரு டஜன் அதிகாரிகளும் விழாவிற்கான கடைசி நிமிட தயாரிப்பில் மும்முரமாக இருந்தார்கள்.
‘சீனியர் எக்ஸ்க்யூட்டிவ்ஸ் சேர்மனுக்கு எச்.ஓ லாபியில வச்சி சிம்பிளா ஒரு ரிசப்ஷன் குடுக்காங்களாம் சார்.. அது முடிஞ்சதும் சேர்மன் அவரோட சேம்பருக்கு போய் ஃபார்மலா சார்ஜ் எடுத்துட்டு நேரா இங்க வருவாராம்.. நம்ம ஆக்டிங் சேர்மன் ஃபோன்ல கூப்ட்டுருந்தார்.. நீங்க ஹால்ல இருந்ததால மிஸ்டர் ஃபெர்னாண்டோக்கிட்ட சொல்லிருங்கன்னு சொல்லிட்டு லைன கட் பண்ணிட்டார்..’
அவரை ஃபெர்னாண்டோ என்றுதான் வங்கியில் எல்லோருக்கும் தெரியும். அவருக்கே சேவியர் என்ற பெயர் மறந்துபோகும் அளவுக்கு அவருடைய குலப்பெயர் அவ்வளவு பிரசித்தம்...
அந்த பெயரால் வங்கியில் அவருக்கு நியாயமாக கிடைக்கவிருந்த பதவி உயர்வும் அங்கீகாரமும் கூட கிடைக்காமல் போனதை நினைத்து பலமுறை நொந்துபோயிருக்கிறார்..
அவருடைய நேரடி தலைவர் சி.ஜி.எம் பிலிப் சுந்தரத்தைத் தவிர வேறு எந்த அதிகாரியும் அவரை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை..
எல்லாம் இந்த கேடுகெட்ட சாதி துவேஷந்தான் காரணம் என்று நினைத்தபோது பேசாமல் வேலையை தூக்கியெறிந்துவிட்டு போனால் என்ன என்றும் பல சமயங்களிலும் அவருக்கு தோன்றியிருக்கிறது.
அப்போதெல்லாம் அவருக்கு ஆறுதலளிப்பது அவருடைய மனைவியும் மகள்களும்தான்..
அவருக்கு வாழ்க்கையில் கடவுள் அவருக்கு அளித்த அற்புதமான பரிசு அவருடைய மனைவியும் அவருடைய இரு மகள்களும்..
அவருடைய எந்த மனநிலைக்கும் ஈடுகொடுத்து செல்லும் அவருடைய மனைவியால்தான் அவர் அலுவலகத்தில் சந்தித்த எல்லா அவமானங்களையும் சகித்துக்கொள்ள முடிந்தது..
‘புது சேர்மனுக்கு ஒங்களப்பத்தி நல்லா தெரியுமில்லீங்க.. அவர்கிட்ட நீங்க வேல செஞ்சிருக்கீங்கல்ல.. கவலைப்படாம இருங்க.. அவராலதான் ஒங்களுக்கு மறுபடியும் ஒரு புதுவாழ்வு வரப்போவுது.. பாத்துக்கிட்டே இருங்க..’
நேற்று இரவு அவருடைய மனைவி கூறிய ஆறுதலான பேச்சு நினைவுக்கு வர.. மனம் தெளிவடைந்து சேர்மனை வரவேற்று அவர் ஆற்றவிருந்த உரையாடல் நேரத்தில் காட்ட அவர் தயாரித்திருந்த பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க ஆரம்பித்தார். பிறகு எழுந்து விழா ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருந்த அரங்கத்திற்கு விரைந்தார்..
தொடரும்..
சென்னையிலும் அவருடைய சொந்த மாநிலமான ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்திலுமிருந்த மருத்துவமனைகள் அவற்றை சார்ந்திருந்த மூன்று நட்சத்திர உணவு விடுதிகள் மற்றும் சென்னையை முழுவதும் இயங்கிவந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மருந்து விற்பனைக் கடைகள், பத்துக்கும் மேற்பட்ட இரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் செண்டர்கள் எல்லாவற்றையும் நிர்வகிக்கும் பொறுப்பு மருத்துவத்துறையில் எம்.சி.எச் மற்றும் நிர்வாகத்துறையில் ஹார்வர்ட் எம்.பி.ஏ பட்டங்களை பெற்றிருந்த அவருடைய ஒரே மகள் பூர்னிமா ராவ்தான்.
அவருடைய பார்வையில் அவருடைய திரண்ட சொத்துக்கு ஒரே வாரிசான மகள் பூர்னிமா ஒரு மகனைப் போலத்தான் தென்பட்டாள்.
பூர்னிமாவும் தன்னை அதுபோல்தான் நினைத்திருந்தாள். ஆனால் அவளுடைய தந்தைக்கு இருந்த எந்தஒரு குறுக்கு புத்தியும் அவளுக்கு இல்லை. அத்தனை சொத்துக்கும் வாரிசாக இருந்தும் அவளுடைய மருத்துவமனையில் பணிபுரிந்த அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடைய பார்வையில் அவள் மிகவும் எளிமையானவள். ஆனால் அதே சமயம் கண்டிப்பானவள்.
சோமசுந்தரத்தின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அவருடைய மருத்துவமனையில் ஏழை எளியவர்களுக்கென இலவச மருத்துவ பகுதியை துவக்கியதுடன் நின்றுவிடாமல் சென்னையிலிருந்த பல தொண்டு நிறுவனங்களுடனும் கூட்டு சேர்ந்து இலவச மருத்துவ முகாம்களை இடைவிடாமல் நடத்துவதிலும் குறியாயிருந்தாள்..
‘இது அம்மாவோட கடைசி ஆசைப்பா.. இதுல நீங்க தலையிடாதீங்க.. நீங்க பணம் பண்றதுக்கு என்னவெல்லாம் செஞ்சிருக்கீங்க.. அதுக்கு ஒரு பிராயச்சித்தம்னு கூட நினைச்சிக்குங்களேன்..’
பூர்னிமாவின் இந்த மறைமுகத் தாக்குதல் அவருக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவளுடன் எந்தவித வாக்குவாதமும் செய்யமாட்டார். அவள் எது செய்தாலும் அது நன்மையில்தான் சென்று முடியும் என்பது அவருக்குத் தெரியும்..
‘இன்னைக்கி நம்ம பேங்குல புது சேர்மன் சார்ஜ் எடுக்கறார் பூர்னி.. அதனால் இன்னைக்கிம் நாளைக்கிம் அப்பா கொஞ்சம் பிசியா இருப்பேன்.. நீதான் இங்க பாத்துக்கணும்..’
பூர்னிமா காப்பி கோப்பையை டேபிளில் வைத்துவிட்டு தன் தந்தையைப் பார்த்தாள். ‘ஒங்களோட அட்ஜஸ்ட் பண்ண முடியாம பழைய சேர்மன் போனா மாதிரி இவரையும் ஓட வச்சிருவீங்களே..’
தன் மகள் மறைமுகமாக தன்னை தாக்குவது தெரிந்தும் அதைப் பொருட்படுத்தாமல், ‘நாளைக்கும் அடுத்த நாளும் நான் செய்யறதாருந்த சர்ஜரியையெல்லாம் நம்ம சந்திரபோஸ் அப்புறம் மாதவ ராவ் டாக்டர்ஸ்ச பாத்துக்க சொல்லியிருக்கேன்.. ஒரு இன்ஃபர்மேஷனுக்காகத்தான் ஒங்கிட்ட சொல்றேன்.. போஸ் ஆப்பரேட்டிவ் வார்ட்ல நீயும் அப்பப்போ போய் பார்த்துக்கிட்டா நல்லது..’ என்றார்.
‘லீவ் தட் ல் டு மி டாட்.. சொல்லுங்க.. எத்தன வருச காண்ட் ராக்ட்ல வரார் இந்த சேர்மன்..’
சோமசுந்தரம் வியப்புடன் தன் மகளைப் பார்த்தார்.. இவளையே நமக்கப்புறம் போர்ட்ல போட்டுரலாமா? எம்.பி.ஏ செஞ்சிருக்காளே?
சேச்சே.. இவள அப்படியே தூக்கி சாப்பிட்டுருவான் அந்த நாடார்.. மொதல்ல மாதவன வளைச்சிப் போட்டு நம்ம டேர்ம் முடியறதுக்குள்ள அந்த ரெக்ரூட்மெண்ட் ப்ராஜக்ட முடிச்சிரணும்.. அதுக்கப்புறம் போர்ட்ல யார நாமிநேட் பண்லாம்னு யோசிக்கலாம்..
‘என்ன டாட்.. சத்தத்தையே காணோம்.. என்னடா ஹாஸ்ப்பிடல், ஹோட்டல், மெடிக்கல் ஷாப்.. எல்லாம் போறாதுன்னு பேங்குல மூக்க நொழைக்கறாளேன்னு பாக்கறீங்களா?’
சோமசுந்தரம் தன் மகளைப் பார்த்தார்.. ‘சேச்சே.. அப்படியே நீ நொழைஞ்சாலும் தப்பில்ல பூர்னி.. If you are interested.. I will do something.’
பூர்னிமா இல்லையென்று தலையை அசைத்தாள். ‘ இல்ல டாட்.. சும்மாத்தான் கேட்டேன்..’
‘ரெண்டு வருசத்துக்குத்தான் போர்ட்லருந்து ரெக்கமெண்ட் பண்ணோம்.. ஆனா ரிசர்வ் பேங்கலருந்து நாலு வருசத்துக்குன்னு அப்பாய்ண்ட்மெண்ட் வந்திருக்கு.. முதல்ல அப்போஸ் பண்ணா என்னன்னு நினைச்சோம்.. அப்புறம் இப்போதைக்கு வேணாம்னு விட்டுட்டோம்.. பாப்போம்..ஆள் முன்னாலருந்த சேர்மன்மாதிரி ஒத்துவராத ஆளாருந்தா இருக்கவே இருக்கு ரிசிக்னேஷன் ரூட்.. போடான்னா போய்ட்டு போறார்...’
பூர்னிமா கலகலவென சிரித்தவாறே எழுந்து நின்றாள்.. ‘அதான பார்த்தேன்.. சோமசுந்தரமா கொக்கா.. ஓக்கே டாட்.. யூ கேர்ரி ஆன்.. பை..’
முழங்காலை தொடும் நெருக்கமாக ப்ளீட் வைத்து தைக்கப்பட்ட ஸ்கர்ட்.. அதற்கு ஜோடியாக அரைக்கை சட்டை.. ஹீல்ஸ் இல்லாத வெள்ளை நிற காலனி.. தோள்வரை குலுங்கும் பாப் தலை.. லிப்ஸ்ட்டிக், மேக்கப் இல்லாத பளிச் முகம்..
தன்னுடைய மகளின் ஆடம்பரமில்லாத அமைதியான இந்த தோற்றத்தைக் கண்டு சோமசுந்தரமே பிரமித்துபோயிருக்கிறார் தனக்கு இப்படியொரு மகளா என்று.. 'கல்யாணம் செஞ்சிக்கம்மா' என்று எத்தனைமுறையோ கெஞ்சி பார்த்துவிட்டார். மிரட்டியும் பார்த்தார். ஊஹும்.. ஒன்றுக்கும் மசியவில்லை.. 'என்னெ என் போக்குல விட்டுருங்கப்பா.. எப்ப எனக்கே தோணுதோ.. அப்ப செஞ்சிக்கறேன்..' வயது முப்பத்தஞ்சாகிறது... இனி எப்போதுதான் தோன்றுமோ என்று பலமுறை நினைத்திருக்கிறார்.
சென்னையிலிருந்த அனைத்து குடிகார க்ளப்பிலும் அவர் அங்கத்தினர் என்றால் நகரத்திலிருந்த அனைத்து சேவை சங்கங்களிலும் பூர்னிமா உறுப்பினராக இருந்தாள்.. அவர் சென்னை நகரின் ஷெரீஃபாக இருந்தார் என்றால் பூர்னிமா சென்னை மத்திய ரவுண்ட் டேபிளின் கவர்னராக இருந்தவள்..
எந்த வழியானாலும் பரவாயில்லை.. இறுதியில் பணம், சொத்து, புகழ் கிடைந்தால் போறும் என்று அவர் நினைத்தால்.. எத்தனை லட்சங்கள் செலவானாலும் பரவாயில்லை தனக்கு மனதிருப்தி கிடைத்தால் போறும் என்று பூர்னிமா நினைத்தாள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்..
‘அவ நம்ம மாதிரி இல்லைய்யா.. அப்படியே அவ அம்மா மாதிரி..’ என்பார் நண்பர்களிடம்..
பூர்னிமா புறப்பட்டுச் சென்றதும் சோமசுந்தரம் பரபரப்பானார்.. அவருடைய பதவிகாலம் முடிய இன்னும் ஆறு மாதங்களே இருந்தன. அதற்குள் அவர் நிறைவேற்றி முடிக்க வேண்டியவை ஒன்றிரண்டு இருந்தன..
தில்லி, மும்பை நகரங்களில் கிளை மருத்துவமனைகள் அதற்குத் தேவையான உபகரணங்களை சிலவற்றை ஜெர்மனியிலிருந்து தருவிக்க குறைந்தபட்சம் பதினைந்து கோடிகள் வேண்டியிருந்தது.
‘Why do you worry Dad.. we can borrow at a very competitive rate from a consortium of Banks.. I’ll manage it..’ என்று மகள் பொறுப்பேற்றுக்கொண்டாலும் பதினைந்து கோடி கடன் பெறவேண்டுமானால் அவருடயை பங்குக்கு மூன்று கோடி முதலீடு செய்ய வேண்டியிருந்தது. அதற்கு மூன்று மாத காலத்திற்கு சென்னை க்ரெடிட் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிதி நிறுவனத்திலிருந்து கடனாக பெற்றிருந்தார். கெடு முடிந்து ஒரு மாதமாகிறது. ஏற்கனவே நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நிறுவனம் இனியும் பொறுத்திருக்கும் என்று அவருக்கு தோன்றவில்லை. அவருடைய சி.ஏ வேணுகோபாலின் பரிந்துரையால்தான் அந்த நிறுவனம் இதுவரை பொறுத்திருந்தது என்பதும் அவருக்குத் தெரியும். நண்பர்கள், உறவினர்கள் என இரண்டு கோடியை திரட்டி அடைத்திருந்தார். இன்னும் ஒரு கோடி ரூபாய்.. அதற்கு அவர் தீட்டிய திட்டம்தான் வங்கிக்கு புதிய கடைநிலை அதிகாரிகளை ரெக்ரூட் செய்ய வகுத்த திட்டம்..
அதற்கு புதிய சேர்மனை சரிகட்டினால் போறாது அந்த நாடாரையும் சரிகட்டவேண்டும் என்று அவருக்கு தெரியும்.. அது எப்படி என்பதை இனிமேல் யோசித்து செயல்படுத்தவேண்டும் என்று நினைத்தவாறே தன் செல்ஃபோனை எடுத்து பாபு சுரேஷின் நம்பரை டயல் செய்தார்..
****
சென்னை கடற்கரைச் சாலையிலிருந்த வங்கியின் பயிற்சிக்கல்லூரி திறக்கப்பட்டு அன்றுடன் இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவுறுகிறது.
அன்று காலை வங்கிக்கு பொறுப்பேற்றதும் புதிய சேர்மனுடைய முதல் பொது அலுவல் இந்த வெள்ளி விழாவில் பங்கு கொள்வதுதான்.
கவே அன்று காலை முதலே பயிற்சிக் கல்லூரி பரபரப்பாக இருந்தது. கல்லூரி முதல்வர் சேவியர் ஃபெர்னாண்டோவின் நேரடி பொறுப்பில் அவருடைய துனை முதல்வரும், கல்லூரியில் பயிற்றுவிப்பாளராக இருந்த ஒரு டஜன் அதிகாரிகளும் விழாவிற்கான கடைசி நிமிட தயாரிப்பில் மும்முரமாக இருந்தார்கள்.
‘சீனியர் எக்ஸ்க்யூட்டிவ்ஸ் சேர்மனுக்கு எச்.ஓ லாபியில வச்சி சிம்பிளா ஒரு ரிசப்ஷன் குடுக்காங்களாம் சார்.. அது முடிஞ்சதும் சேர்மன் அவரோட சேம்பருக்கு போய் ஃபார்மலா சார்ஜ் எடுத்துட்டு நேரா இங்க வருவாராம்.. நம்ம ஆக்டிங் சேர்மன் ஃபோன்ல கூப்ட்டுருந்தார்.. நீங்க ஹால்ல இருந்ததால மிஸ்டர் ஃபெர்னாண்டோக்கிட்ட சொல்லிருங்கன்னு சொல்லிட்டு லைன கட் பண்ணிட்டார்..’
அவரை ஃபெர்னாண்டோ என்றுதான் வங்கியில் எல்லோருக்கும் தெரியும். அவருக்கே சேவியர் என்ற பெயர் மறந்துபோகும் அளவுக்கு அவருடைய குலப்பெயர் அவ்வளவு பிரசித்தம்...
அந்த பெயரால் வங்கியில் அவருக்கு நியாயமாக கிடைக்கவிருந்த பதவி உயர்வும் அங்கீகாரமும் கூட கிடைக்காமல் போனதை நினைத்து பலமுறை நொந்துபோயிருக்கிறார்..
அவருடைய நேரடி தலைவர் சி.ஜி.எம் பிலிப் சுந்தரத்தைத் தவிர வேறு எந்த அதிகாரியும் அவரை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை..
எல்லாம் இந்த கேடுகெட்ட சாதி துவேஷந்தான் காரணம் என்று நினைத்தபோது பேசாமல் வேலையை தூக்கியெறிந்துவிட்டு போனால் என்ன என்றும் பல சமயங்களிலும் அவருக்கு தோன்றியிருக்கிறது.
அப்போதெல்லாம் அவருக்கு ஆறுதலளிப்பது அவருடைய மனைவியும் மகள்களும்தான்..
அவருக்கு வாழ்க்கையில் கடவுள் அவருக்கு அளித்த அற்புதமான பரிசு அவருடைய மனைவியும் அவருடைய இரு மகள்களும்..
அவருடைய எந்த மனநிலைக்கும் ஈடுகொடுத்து செல்லும் அவருடைய மனைவியால்தான் அவர் அலுவலகத்தில் சந்தித்த எல்லா அவமானங்களையும் சகித்துக்கொள்ள முடிந்தது..
‘புது சேர்மனுக்கு ஒங்களப்பத்தி நல்லா தெரியுமில்லீங்க.. அவர்கிட்ட நீங்க வேல செஞ்சிருக்கீங்கல்ல.. கவலைப்படாம இருங்க.. அவராலதான் ஒங்களுக்கு மறுபடியும் ஒரு புதுவாழ்வு வரப்போவுது.. பாத்துக்கிட்டே இருங்க..’
நேற்று இரவு அவருடைய மனைவி கூறிய ஆறுதலான பேச்சு நினைவுக்கு வர.. மனம் தெளிவடைந்து சேர்மனை வரவேற்று அவர் ஆற்றவிருந்த உரையாடல் நேரத்தில் காட்ட அவர் தயாரித்திருந்த பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க ஆரம்பித்தார். பிறகு எழுந்து விழா ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருந்த அரங்கத்திற்கு விரைந்தார்..
தொடரும்..
23.5.06
சூரியன் 82
ரவி குளித்துமுடித்த தலையுடன் குளியலறையிலிருந்து படுக்கையறைக்குள் நுழைந்தான்.
மஞ்சு படுக்கையில் படுத்துக்கொண்டு விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தது மெல்லிய ஒளியில் தெரிந்தது.
படுக்கையறைக்கு தெற்கே திறந்திருந்த பால்கணி வழியாக குளிர்ந்த காற்றுடன் பத்து மாடிகளுக்குக் கீழே சாலையில் அந்த நேரத்திலும் சென்றுகொண்டிருந்த வாகனங்களின் ஒலி லேசாய் கேட்டது.
ரவியின் கண்களுக்கு வெளியே பால்கணி வாசல் வழியாக வானம் மேகங்கள் ஏதும் இல்லாமல் நீலமாக, நட்சத்திரக் குவியலுடன் சட்டம் இடப்பட்ட சித்திரத்தைப் போல, அழகாகத் தெரிந்தது.
நேற்று இதே நேரத்தில் எதிர்காலத்தில் முற்றிலுமாக நம்பிக்கையிழந்து தவித்துக்கொண்டிருந்த தனக்கு இருபத்திநான்கு மணிநேரத்தில் மீண்டும் ஒரு புது வாழ்வு, ஒரு புது அத்தியாயம், ஒரு புது வாசல் திறக்கப்பட்டிருந்ததை நினைத்துப்பார்த்தான்..
தலையைத் துவட்டிக்கொண்டே படுக்கையறையிலிருந்து குட்டி மேசைக்கருகே சென்று நேரத்தைப் பார்த்தான். நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.
அன்று மாலை கமலியின் இறுதி யாத்திரையில் கலந்துக்கொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது ‘மனமும் உடம்பும் சோர்ந்துபோயிருக்குங்க. இப்படியே மைலாப்பூர் பீச்சு பக்கம் போங்க. மெரீனா வேணாம். கூட்டமாருக்கும்.. இப்படியே பீச்சு மணல்ல இருட்டற வரைக்கும் படுத்திருக்கணும் போலருக்கு..’ என்று மஞ்சு கூற அதுவும் நல்லதுக்குத்தான் என்று வண்டியை கடற்கரை நோக்கி திருப்பினான் ரவி.
மஞ்சு நினைத்தது போலவே சாந்தோம் தேவாலயத்திற்கு பின்னாலிருந்த கடற்கரையில் அவ்வளவாக கூட்டம் இல்லை. அன்று மாதத்தில் முதல் ஞாயிறானதால் இங்கிருந்து பார்த்தாலே மெரீனா விளக்குகளால் ஜொலிப்பது தெரிந்தது..
நேரம் ஏழு மணியைக் கடந்திருந்ததால் சாந்தோம் தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து வெளியே வருவோரைத் தவிர கடற்கரையிலும் அதனையொட்டியிருந்த சாலையிலும் கூட்டம் அவ்வளவாக இல்லாத அந்த அமைதி அவர்கள் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது.
என்றைக்குமில்லாமல் மஞ்சு அவனுடைய கரங்களை வலிய வந்து பற்றிக்கொண்டு கடல் மணலில் நடந்ததை இப்போது நினைத்துப் பார்த்தான். நினைத்தபோதே இவளை நான் எந்த அளவுக்கு உதாசீனப்படுத்தியிருக்கிறேன் என்ற குற்ற உணர்வும் தலைதூக்கியது.
கடற்கரை மணலில் கால்கள் புதையுற தொலைதூரத்தில் நடுக்கடலில் பிம்பமாய் தெரிந்த கப்பல்களைப் பார்த்துக்கொண்டே எவ்வளவு தூரம் நடந்தோம் என்ற நினைவேயில்லாமல், மவுனமாய் நடந்தது அவர்களுடைய இருவருடைய மனப்பாரத்தையுமே வெகுவாய் குறைத்ததாக உணர்ந்தனர்.
‘சாவற வயசாங்க அது? அந்த பொண்ணோட மொகத்த பார்த்தீங்களா? எவ்வளவு அமைதி, சாந்தம்.. அந்த உதடுகள்ல லேசான ஒரு புன்சிரிப்பு.. எத்தன அழகான கொழந்தைங்க அது? மூளையில ரத்த நாளங்கள் வெடிச்சிருந்தா அந்த கொழந்தை என்ன வேதனைய அனுபவிச்சிருக்கும்? அம்மா தூக்க மாத்திரைய போட்டுக்கிட்டு ஒரு ரூம்ல.. பெஞ்சாதியோட படுக்க போற நேரத்துல சண்டைய போட்டுக்கிட்டு அப்பா ஒரு ரூம்ல.. யாருக்கும் வேண்டாம வயசான தாத்தா ஒரு ரூம்ல.. தங்கச்சியோட வேதனைய தலைவலின்னு நெனச்சிக்கிட்டு காப்பிய போட்டு குடுத்துட்டு திரும்பிப் போன அண்ணன்.. வீட்டுக்குள்ள எல்லாரும் இருந்தும்.. அவசரத் தேவைன்னு வந்தப்போ யாரும் இல்லாத அனாதையா.. என்ன கொடுமைங்க.. ஆனாலும் அந்த மொகத்துல எத்தனை அமைதி.. எப்படீங்க?’
ரவி அவள் தன் மனதிலிருந்த வேதனைகளையெல்லாம் கொட்டி தீர்த்துவிடட்டும் என்று அமைதியாய் அவளுடைய உள்ளங்கையை அழுத்திக்கொடுத்தான் பதில் பேசாமல்..
மஞ்சு அமைதியாய் முகம் மறைக்கும் அந்த மெல்லிருட்டில் விசும்புவது தெரிந்தும் ரவி மவுனமாகவே இருந்தான்.
மஞ்சுவை மாதிரி எங்களுக்கு இடையிலும் ஒரு பெண்குழந்தை பிறந்திருந்தால்.. ஒருவேளை நான் வேலை, வேலையென்று ஓடிக்கொண்டிருக்க மாட்டேனோ.. எதிர்பாராமல் வந்த அந்த எண்ணம் அவனையே திடுக்கிட வைத்தது.
‘ரவி.. நமக்கு கமலிய மாதிரி ஒரு குழந்தையிருந்திருந்தா..?
அவன் நினைத்ததையே மஞ்சுவும் வாய்விட்டு கூற திடுக்கிட்டு அவளைப்பார்த்தான்.. அவள் கூறியதை ஆமோதிப்பதுபோல அவளுடைய கரத்தை லேசாக அழுத்தினான்.
‘நான் சாயந்திரம் சொன்னதப் பத்தி நினைச்சிப் பார்த்தீங்களா ரவி?’
மேசைக்கு சற்று மேலே சுவரில் பொருத்தப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னுடைய பிம்பத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ரவி திடுக்கிட்டு மஞ்சுவை திரும்பிப்பார்த்தான்.
‘எதப்பத்தி மஞ்சு?’
மஞ்சு படுக்கையில் படுத்தவாறே திரும்பி அவனைப் பார்த்தாள். ‘முதல்ல இங்க வந்து படுங்க. சொல்றேன்.’
ரவி புன்னகையுடன் தன் கையிலிருந்த துவாலையை இருக்கையில் போட்டுவிட்டு படுக்கையில் ஏறி அவளருகில் படுத்தான்.
இருவரும் அருகருகே ஒரே படுக்கையில் படுத்து எத்தனை வருடங்களாகிவிட்டன என்று நினைத்தான் .
ரவியுடனான தன்னுடைய உறவில் விரிசல் ஏற்பட்டதிலிருந்தே அவனுடன் ஒரே படுக்கையில் படுப்பதை நிறுத்திவிட்டாள் மஞ்சு. அவர்களுடைய குடியிருப்பில் ஒரேமாதிரியான இரண்டு படுக்கையறைகளை அமைத்தது இதற்காகத்தானோ என்று நினைக்கும் வகையில் அவர்கள் இருவருமே கடந்த சில வருடங்களாகவே தனித்தனி அறையில் உறங்கினர்.
அந்த ஏற்பாடு ரவிக்கும் சாதகமாகவே இருந்தது. அவன் தனக்கு தோன்றிய நேரத்தில் வீட்டுக்கு வர ஆரம்பித்தான். அவள் செய்து வைத்திருந்த இரவு உணவையும் அவன் புறக்கணிக்கவே அவள் அவனுக்கென சமைத்துவைத்து காத்திருப்பதையும் நிறுத்திவிட்டு அவள் உண்டு முடிந்ததும் அடுத்த குடியிருப்பிலிருந்த மாமியுடன் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு உறங்கச் செல்வது வழக்கமாகிப் போனது..
நாளடைவில் அவன் வீட்டுக்கு வருவதும் வாரத்தில் இரண்டோ மூன்றோ நாட்கள் என்ற நிலையையடைந்தபோதுதான் இனியும் தான் இந்த வீட்டில் இருந்து பயனில்லை என்று அவள் வெளியேறினாள்.
‘சாயந்திரம் நீ ஏதோ ஒரு மூடுல என்னவெல்லாமோ பேசினீயே.. சரி உன் மனப்பாரம் கொஞ்சம் கொறயட்டும்னுதான் நானும் பேசாம இருந்தேன். இப்ப சொல்லு.. நீ எத நினைச்சிப் பார்த்தீங்களான்னு கேக்கறே?’
மஞ்சு திரும்பி அவனைப் பார்த்தாள். ‘கமலி மாதிரி நமக்கு ஒரு கொழந்தை இருந்தா எப்படியிருக்கும்னு கேட்டேனே?’
ரவிக்கும் அப்படியொரு சிந்தனை அன்று மாலை கமலியின் உடலைப் பார்த்ததுமே ஏற்பட்டதென்னவோ உண்மைதான். தங்களுக்கிடையில் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட ஒரு குழந்தை வேண்டுமென்பதை மஞ்சு அவனை விட்டு பிரிந்ததுமே அவனுக்கு தோன்றியது..
ஆனால் இப்போது.. தன்னுடைய அலுவலக வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக இருக்கும் இந்த நேரத்திலா?
‘இப்ப ஆஃபீஸ்லருக்கற பிரச்சினையெல்லாம் தீர்ந்ததும் இதப் பத்தி யோசிக்கலாமே மஞ்சு..’
மஞ்சு பதில் பேசாமல் விட்டத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் பார்த்தான் ரவி. அவனுடைய பதில் அவளுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதை உணர்ந்தான்.
‘நா எதுக்கு சொல்றேன்னா...’
மஞ்சு திரும்பி அவனுடைய வாயைப் பொத்தினாள். ‘புரியுதுங்க.. ஒங்க வேதனை புரியுது.. நீங்க என்னோட யோசனை ஒதுக்கித் தள்ளாம.. சரிங்கறா மாதிரி பேசினதே போறுங்க.. நீங்க சொல்றதும் ஒருவகையில சரிதான். இப்ப இருக்கற பிரச்சினையெல்லாம் தீர்ந்ததுக்கப்புறம் இதப்பத்தி யோசிக்கலாம்கறது சரிதான். இவ்வளவு காலம் காத்திருந்திட்டோம்.. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே..’
கொஞ்ச நாளா? இந்த என்க்வயரி முடிஞ்சி.. அதுக்கப்புறம் என்ன டிசிஷன் ஆவுதோ.. இதுல புது சேர்மன் வேற.. அவர் எப்படி பட்டவரோ.. பழைய சேர்மனே கண்டினியூ பண்ணியிருந்தா அவன் பிசினஸ் பண்றதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்கறது தெரியும். அவார்ட் கொடுத்த அவர் கையாலயே நிச்சயம் பனிஷ்மெண்ட் குடுத்திருக்க மாட்டார்..
இந்த புது சேர்மனும் அவனுடைய வங்கியிலேயே முன்பு பணிபுரிந்தவர்தான் என்று கேள்விப்பட்டிருந்தாலும் அவன் வங்கியில் சேர்ந்து ஐந்தாறு வருடங்களே ஆகியிருந்தபோது அவர் ராஜினாமா செய்துவிட்டு சென்றிருந்ததால் அவருடன் பணிபுரிந்த அனுபவம் அவனுக்கில்லை..
எல்லாம் நல்லபடியாக முடிந்தால் நல்லது..
‘நீங்க எதையாவது நினைச்சி மனச போட்டு அலட்டிக்காதேள் ரவி.. நீங்க செஞ்சிருக்கிறது வெறும் ப்ரொசீஜரல் மிஸ்டேக்ஸ்தான். சாதாரணமா ஒரு மேனேஜர் பிசினஸ் பண்றப்போ எடுக்கக்கூடிய நியாயமான ரிஸ்க்கதான் நீங்க எடுத்துருக்கேள். சில முட்டாள்தனமான காரியங்களும் செஞ்சிருக்கேள் இல்லேன்னு சொல்லலே.. ஆனா அதற்கான வேலிட் ரீசன்சும் இருக்கறதாத்தான் நான் ஃபீல் பண்றேன். அதனால ஒங்கள என்க்வயரிலருந்து கம்ப்ளீட்டா விடுவிக்க முடியலைன்னாலும்.. நிச்சயமா பெரிய பாதகம் ஏற்படாமல் பாத்துக்க முடியும்னு நா நம்பறேன்.. ஒங்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்கணும். அப்பத்தான் நாம ஜெயிக்க முடியும்..’
வழக்கறிஞர் நாராயணசாமிக்கு இதிலிருந்த நம்பிக்கை தனக்கும் இன்னமும் ஏற்படாமலிருப்பதை ரவி நினைத்துப் பார்த்தான். இதற்குக் காரணம் அவனுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லாதிருந்ததுதான்.
‘நமக்கு இறைவன் தந்திருக்கற அதிகாரத்தை நமக்கு நண்பர்களை ஏற்படுத்திக்கறதுக்கு யூஸ் பண்ணிக்கணும் ரவி.. நீங்க அப்படி செஞ்சிருந்தீங்கன்னா நீங்க மேனேஜரா இருந்த ப்ராஞ்சுக்குள்ளவே போறதுக்கு இப்ப தயங்குவீங்களா?’
அவனுடைய துன்பநேரத்தில் தரவாக வந்த ஃபிலிப் சுந்தரத்தின் அறிவுரை எத்தனை உண்மையானது? அவன் நண்பர்களை சம்பாதிக்காதது மட்டுமல்ல.. விரோதிகளையுமல்லவா சம்பாதித்திருந்தான்?
‘என்ன ரவி யோசிக்கிறீங்க? இந்த என்க்வயரிய எப்படி ஃபேஸ் பண்றதுன்னா? நா இருக்கேன் ரவி.. நாம ரெண்டு பேருமா சேர்ந்து ஃபேஸ் பண்ணுவோம்.. கவலைய தூர தூக்கி வச்சிட்டு தூங்குங்க..’ என்றவாறு மஞ்சு அவனை இறுக அணைத்துக்கொள்ள அதை முற்றிலும் எதிர்பார்க்காத ரவியின் கண்கள் கலங்கி தலையணையை நனைத்தது..
தொடரும்..
மஞ்சு படுக்கையில் படுத்துக்கொண்டு விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தது மெல்லிய ஒளியில் தெரிந்தது.
படுக்கையறைக்கு தெற்கே திறந்திருந்த பால்கணி வழியாக குளிர்ந்த காற்றுடன் பத்து மாடிகளுக்குக் கீழே சாலையில் அந்த நேரத்திலும் சென்றுகொண்டிருந்த வாகனங்களின் ஒலி லேசாய் கேட்டது.
ரவியின் கண்களுக்கு வெளியே பால்கணி வாசல் வழியாக வானம் மேகங்கள் ஏதும் இல்லாமல் நீலமாக, நட்சத்திரக் குவியலுடன் சட்டம் இடப்பட்ட சித்திரத்தைப் போல, அழகாகத் தெரிந்தது.
நேற்று இதே நேரத்தில் எதிர்காலத்தில் முற்றிலுமாக நம்பிக்கையிழந்து தவித்துக்கொண்டிருந்த தனக்கு இருபத்திநான்கு மணிநேரத்தில் மீண்டும் ஒரு புது வாழ்வு, ஒரு புது அத்தியாயம், ஒரு புது வாசல் திறக்கப்பட்டிருந்ததை நினைத்துப்பார்த்தான்..
தலையைத் துவட்டிக்கொண்டே படுக்கையறையிலிருந்து குட்டி மேசைக்கருகே சென்று நேரத்தைப் பார்த்தான். நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.
அன்று மாலை கமலியின் இறுதி யாத்திரையில் கலந்துக்கொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது ‘மனமும் உடம்பும் சோர்ந்துபோயிருக்குங்க. இப்படியே மைலாப்பூர் பீச்சு பக்கம் போங்க. மெரீனா வேணாம். கூட்டமாருக்கும்.. இப்படியே பீச்சு மணல்ல இருட்டற வரைக்கும் படுத்திருக்கணும் போலருக்கு..’ என்று மஞ்சு கூற அதுவும் நல்லதுக்குத்தான் என்று வண்டியை கடற்கரை நோக்கி திருப்பினான் ரவி.
மஞ்சு நினைத்தது போலவே சாந்தோம் தேவாலயத்திற்கு பின்னாலிருந்த கடற்கரையில் அவ்வளவாக கூட்டம் இல்லை. அன்று மாதத்தில் முதல் ஞாயிறானதால் இங்கிருந்து பார்த்தாலே மெரீனா விளக்குகளால் ஜொலிப்பது தெரிந்தது..
நேரம் ஏழு மணியைக் கடந்திருந்ததால் சாந்தோம் தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து வெளியே வருவோரைத் தவிர கடற்கரையிலும் அதனையொட்டியிருந்த சாலையிலும் கூட்டம் அவ்வளவாக இல்லாத அந்த அமைதி அவர்கள் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது.
என்றைக்குமில்லாமல் மஞ்சு அவனுடைய கரங்களை வலிய வந்து பற்றிக்கொண்டு கடல் மணலில் நடந்ததை இப்போது நினைத்துப் பார்த்தான். நினைத்தபோதே இவளை நான் எந்த அளவுக்கு உதாசீனப்படுத்தியிருக்கிறேன் என்ற குற்ற உணர்வும் தலைதூக்கியது.
கடற்கரை மணலில் கால்கள் புதையுற தொலைதூரத்தில் நடுக்கடலில் பிம்பமாய் தெரிந்த கப்பல்களைப் பார்த்துக்கொண்டே எவ்வளவு தூரம் நடந்தோம் என்ற நினைவேயில்லாமல், மவுனமாய் நடந்தது அவர்களுடைய இருவருடைய மனப்பாரத்தையுமே வெகுவாய் குறைத்ததாக உணர்ந்தனர்.
‘சாவற வயசாங்க அது? அந்த பொண்ணோட மொகத்த பார்த்தீங்களா? எவ்வளவு அமைதி, சாந்தம்.. அந்த உதடுகள்ல லேசான ஒரு புன்சிரிப்பு.. எத்தன அழகான கொழந்தைங்க அது? மூளையில ரத்த நாளங்கள் வெடிச்சிருந்தா அந்த கொழந்தை என்ன வேதனைய அனுபவிச்சிருக்கும்? அம்மா தூக்க மாத்திரைய போட்டுக்கிட்டு ஒரு ரூம்ல.. பெஞ்சாதியோட படுக்க போற நேரத்துல சண்டைய போட்டுக்கிட்டு அப்பா ஒரு ரூம்ல.. யாருக்கும் வேண்டாம வயசான தாத்தா ஒரு ரூம்ல.. தங்கச்சியோட வேதனைய தலைவலின்னு நெனச்சிக்கிட்டு காப்பிய போட்டு குடுத்துட்டு திரும்பிப் போன அண்ணன்.. வீட்டுக்குள்ள எல்லாரும் இருந்தும்.. அவசரத் தேவைன்னு வந்தப்போ யாரும் இல்லாத அனாதையா.. என்ன கொடுமைங்க.. ஆனாலும் அந்த மொகத்துல எத்தனை அமைதி.. எப்படீங்க?’
ரவி அவள் தன் மனதிலிருந்த வேதனைகளையெல்லாம் கொட்டி தீர்த்துவிடட்டும் என்று அமைதியாய் அவளுடைய உள்ளங்கையை அழுத்திக்கொடுத்தான் பதில் பேசாமல்..
மஞ்சு அமைதியாய் முகம் மறைக்கும் அந்த மெல்லிருட்டில் விசும்புவது தெரிந்தும் ரவி மவுனமாகவே இருந்தான்.
மஞ்சுவை மாதிரி எங்களுக்கு இடையிலும் ஒரு பெண்குழந்தை பிறந்திருந்தால்.. ஒருவேளை நான் வேலை, வேலையென்று ஓடிக்கொண்டிருக்க மாட்டேனோ.. எதிர்பாராமல் வந்த அந்த எண்ணம் அவனையே திடுக்கிட வைத்தது.
‘ரவி.. நமக்கு கமலிய மாதிரி ஒரு குழந்தையிருந்திருந்தா..?
அவன் நினைத்ததையே மஞ்சுவும் வாய்விட்டு கூற திடுக்கிட்டு அவளைப்பார்த்தான்.. அவள் கூறியதை ஆமோதிப்பதுபோல அவளுடைய கரத்தை லேசாக அழுத்தினான்.
‘நான் சாயந்திரம் சொன்னதப் பத்தி நினைச்சிப் பார்த்தீங்களா ரவி?’
மேசைக்கு சற்று மேலே சுவரில் பொருத்தப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னுடைய பிம்பத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ரவி திடுக்கிட்டு மஞ்சுவை திரும்பிப்பார்த்தான்.
‘எதப்பத்தி மஞ்சு?’
மஞ்சு படுக்கையில் படுத்தவாறே திரும்பி அவனைப் பார்த்தாள். ‘முதல்ல இங்க வந்து படுங்க. சொல்றேன்.’
ரவி புன்னகையுடன் தன் கையிலிருந்த துவாலையை இருக்கையில் போட்டுவிட்டு படுக்கையில் ஏறி அவளருகில் படுத்தான்.
இருவரும் அருகருகே ஒரே படுக்கையில் படுத்து எத்தனை வருடங்களாகிவிட்டன என்று நினைத்தான் .
ரவியுடனான தன்னுடைய உறவில் விரிசல் ஏற்பட்டதிலிருந்தே அவனுடன் ஒரே படுக்கையில் படுப்பதை நிறுத்திவிட்டாள் மஞ்சு. அவர்களுடைய குடியிருப்பில் ஒரேமாதிரியான இரண்டு படுக்கையறைகளை அமைத்தது இதற்காகத்தானோ என்று நினைக்கும் வகையில் அவர்கள் இருவருமே கடந்த சில வருடங்களாகவே தனித்தனி அறையில் உறங்கினர்.
அந்த ஏற்பாடு ரவிக்கும் சாதகமாகவே இருந்தது. அவன் தனக்கு தோன்றிய நேரத்தில் வீட்டுக்கு வர ஆரம்பித்தான். அவள் செய்து வைத்திருந்த இரவு உணவையும் அவன் புறக்கணிக்கவே அவள் அவனுக்கென சமைத்துவைத்து காத்திருப்பதையும் நிறுத்திவிட்டு அவள் உண்டு முடிந்ததும் அடுத்த குடியிருப்பிலிருந்த மாமியுடன் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு உறங்கச் செல்வது வழக்கமாகிப் போனது..
நாளடைவில் அவன் வீட்டுக்கு வருவதும் வாரத்தில் இரண்டோ மூன்றோ நாட்கள் என்ற நிலையையடைந்தபோதுதான் இனியும் தான் இந்த வீட்டில் இருந்து பயனில்லை என்று அவள் வெளியேறினாள்.
‘சாயந்திரம் நீ ஏதோ ஒரு மூடுல என்னவெல்லாமோ பேசினீயே.. சரி உன் மனப்பாரம் கொஞ்சம் கொறயட்டும்னுதான் நானும் பேசாம இருந்தேன். இப்ப சொல்லு.. நீ எத நினைச்சிப் பார்த்தீங்களான்னு கேக்கறே?’
மஞ்சு திரும்பி அவனைப் பார்த்தாள். ‘கமலி மாதிரி நமக்கு ஒரு கொழந்தை இருந்தா எப்படியிருக்கும்னு கேட்டேனே?’
ரவிக்கும் அப்படியொரு சிந்தனை அன்று மாலை கமலியின் உடலைப் பார்த்ததுமே ஏற்பட்டதென்னவோ உண்மைதான். தங்களுக்கிடையில் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட ஒரு குழந்தை வேண்டுமென்பதை மஞ்சு அவனை விட்டு பிரிந்ததுமே அவனுக்கு தோன்றியது..
ஆனால் இப்போது.. தன்னுடைய அலுவலக வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக இருக்கும் இந்த நேரத்திலா?
‘இப்ப ஆஃபீஸ்லருக்கற பிரச்சினையெல்லாம் தீர்ந்ததும் இதப் பத்தி யோசிக்கலாமே மஞ்சு..’
மஞ்சு பதில் பேசாமல் விட்டத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் பார்த்தான் ரவி. அவனுடைய பதில் அவளுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதை உணர்ந்தான்.
‘நா எதுக்கு சொல்றேன்னா...’
மஞ்சு திரும்பி அவனுடைய வாயைப் பொத்தினாள். ‘புரியுதுங்க.. ஒங்க வேதனை புரியுது.. நீங்க என்னோட யோசனை ஒதுக்கித் தள்ளாம.. சரிங்கறா மாதிரி பேசினதே போறுங்க.. நீங்க சொல்றதும் ஒருவகையில சரிதான். இப்ப இருக்கற பிரச்சினையெல்லாம் தீர்ந்ததுக்கப்புறம் இதப்பத்தி யோசிக்கலாம்கறது சரிதான். இவ்வளவு காலம் காத்திருந்திட்டோம்.. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே..’
கொஞ்ச நாளா? இந்த என்க்வயரி முடிஞ்சி.. அதுக்கப்புறம் என்ன டிசிஷன் ஆவுதோ.. இதுல புது சேர்மன் வேற.. அவர் எப்படி பட்டவரோ.. பழைய சேர்மனே கண்டினியூ பண்ணியிருந்தா அவன் பிசினஸ் பண்றதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்கறது தெரியும். அவார்ட் கொடுத்த அவர் கையாலயே நிச்சயம் பனிஷ்மெண்ட் குடுத்திருக்க மாட்டார்..
இந்த புது சேர்மனும் அவனுடைய வங்கியிலேயே முன்பு பணிபுரிந்தவர்தான் என்று கேள்விப்பட்டிருந்தாலும் அவன் வங்கியில் சேர்ந்து ஐந்தாறு வருடங்களே ஆகியிருந்தபோது அவர் ராஜினாமா செய்துவிட்டு சென்றிருந்ததால் அவருடன் பணிபுரிந்த அனுபவம் அவனுக்கில்லை..
எல்லாம் நல்லபடியாக முடிந்தால் நல்லது..
‘நீங்க எதையாவது நினைச்சி மனச போட்டு அலட்டிக்காதேள் ரவி.. நீங்க செஞ்சிருக்கிறது வெறும் ப்ரொசீஜரல் மிஸ்டேக்ஸ்தான். சாதாரணமா ஒரு மேனேஜர் பிசினஸ் பண்றப்போ எடுக்கக்கூடிய நியாயமான ரிஸ்க்கதான் நீங்க எடுத்துருக்கேள். சில முட்டாள்தனமான காரியங்களும் செஞ்சிருக்கேள் இல்லேன்னு சொல்லலே.. ஆனா அதற்கான வேலிட் ரீசன்சும் இருக்கறதாத்தான் நான் ஃபீல் பண்றேன். அதனால ஒங்கள என்க்வயரிலருந்து கம்ப்ளீட்டா விடுவிக்க முடியலைன்னாலும்.. நிச்சயமா பெரிய பாதகம் ஏற்படாமல் பாத்துக்க முடியும்னு நா நம்பறேன்.. ஒங்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்கணும். அப்பத்தான் நாம ஜெயிக்க முடியும்..’
வழக்கறிஞர் நாராயணசாமிக்கு இதிலிருந்த நம்பிக்கை தனக்கும் இன்னமும் ஏற்படாமலிருப்பதை ரவி நினைத்துப் பார்த்தான். இதற்குக் காரணம் அவனுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லாதிருந்ததுதான்.
‘நமக்கு இறைவன் தந்திருக்கற அதிகாரத்தை நமக்கு நண்பர்களை ஏற்படுத்திக்கறதுக்கு யூஸ் பண்ணிக்கணும் ரவி.. நீங்க அப்படி செஞ்சிருந்தீங்கன்னா நீங்க மேனேஜரா இருந்த ப்ராஞ்சுக்குள்ளவே போறதுக்கு இப்ப தயங்குவீங்களா?’
அவனுடைய துன்பநேரத்தில் தரவாக வந்த ஃபிலிப் சுந்தரத்தின் அறிவுரை எத்தனை உண்மையானது? அவன் நண்பர்களை சம்பாதிக்காதது மட்டுமல்ல.. விரோதிகளையுமல்லவா சம்பாதித்திருந்தான்?
‘என்ன ரவி யோசிக்கிறீங்க? இந்த என்க்வயரிய எப்படி ஃபேஸ் பண்றதுன்னா? நா இருக்கேன் ரவி.. நாம ரெண்டு பேருமா சேர்ந்து ஃபேஸ் பண்ணுவோம்.. கவலைய தூர தூக்கி வச்சிட்டு தூங்குங்க..’ என்றவாறு மஞ்சு அவனை இறுக அணைத்துக்கொள்ள அதை முற்றிலும் எதிர்பார்க்காத ரவியின் கண்கள் கலங்கி தலையணையை நனைத்தது..
தொடரும்..
13.1.06
5.1.06
தினமலருக்கு நன்றி!

என்னுடைய பதிவைப் பற்றி 3.1.06 அன்றைய தினமலர் நாளிதழில் வந்த செய்தியை மேலே கொடுத்துள்ளேன்.
தினமலருக்கு என் நன்றி.
இத்தகவலை பின்னூட்டத்தின் மூலம் எனக்கு முதலில் தகவலளித்த சிங். ஜெயக்குமாருக்கும் என் நன்றி.
என்னுடைய மகிழ்ச்சியில் கலந்துக்கொண்டு பல தமிழ்மண நண்பர்கள் பின்னூட்டம் மூலமாகவும் மின்னஞ்சல் வழியாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் எல்லோருக்கும் என் நன்றி.
அன்புடன்,
டிபிஆர் ஜோசஃப்
2.1.06
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

என் எல்லா தமிழ்மண நண்பர்களுக்கும்,
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புலரும் இப் புத்தாண்டில் உலகமெங்கும் அமைதியும், சமாதானமும், வளமும் பொங்குவதாக என வாழ்த்தும்,
உங்கள் நண்பன்,
டிபிஆர். ஜோசஃப்
அப்பா ஒரு ஹிட்லர் - 15
மதனுக்கும் தன் மகளுடைய சிரிப்பு சந்தோஷத்தைத் தந்தது. தாழ்வாரத்தில் இருந்த வாளியை எடுத்து அடிபைப்பில் 'டபக், டபக்'கென்று தண்ணீர் நிரப்ப தொடங்கினான்.
***
‘மிஸ்டர் மதன். இவருக்கு ப்ரஷர் மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியாயிருக்கு. அதர்வைஸ் ஹி ஈஸ் ஓகே. ரெண்டு மூனு நாள் ரெஸ்ட் எடுத்தா போறும். இவர் இப்போ எடுத்திக்கிட்டிருக்கற டாப்லெட்சே போறும்னு நினைக்கிறேன். ஊருக்கு போனதும் ப்ளட் சுகர் லெவல் செக் பண்ணிடறது நல்லது. டென்ஷனாகாம இருக்கணும். அதான் முக்கியம்.’
மதனின் மாமனாரை பரிசோதித்த மருத்துவர் அவரை சற்று நேரம் கூர்ந்து பார்த்துவிட்டு கேட்டார். ‘அய்யா நீங்க தப்பா நினைக்கலேன்னா ஒன்னு கேக்கலாங்களா? எழுந்திருக்காமயே பதில் சொல்லுங்க போதும்.
‘கேளுங்க தம்பி.’
‘நீங்க தங்கபாண்டி நாடார் மளிகைக் கடை ஓனர் தானுங்களே.’
‘ஆமாம் தம்பி. நீங்க யாருன்னு தெரியலையே!’
மருத்துவர் அறையிலிருந்த எல்லோரையும் ஒருமுறை பார்த்து புன்னகையுடன் பார்த்தார்.
‘என்னை உங்களுக்கு அடையாளம் தெரியலீங்களாய்யா? அம்மா உங்களுக்கும் தெரியலையா?’
மரகதம் தன் கணவனைப் பார்த்தாள். பிறகு மீண்டும் மருத்துவரைப் பார்த்து சட்டென்று நினைவுக்கு வந்தவளைப் போல் வியப்புடன், ‘தம்பி நீங்க நம்ம ராஜம்மாவோட பிள்ளை.... உங்க பேருதான் தம்பி மறந்துபோச்சி..’ என்றாள்.
‘அட! நம்ம வீட்டுக்கு தெனம் வந்து என் தம்பி கூட வம்பு பண்ணிக்கிட்டு இருப்பீங்களே அந்த சவுந்தரா நீங்க?’ என்ற பத்மாவைப் பார்த்தார் மருத்துவர்.
‘ஆமாங்க.. நானேதான்.’ திரும்பி பத்மாவின் தந்தை தங்கபாண்டியைப் பார்த்த மருத்துவர் ‘ஐயா, சமயத்துல அன்னைக்கி நீங்க செய்த உதவிதாங்க என்னை இன்னைக்கி ஒரு டாக்டாரா இந்த நிலைமைக்கு ஒசத்தியிருக்கு. மதன் சார் உங்க மருமகன்னு தெரியாம போயிருச்சி. இல்லன்னா முன்னாலயே வந்து பார்த்திருப்பேன். இவ்வளவு பக்கத்துல இருந்துக்கிட்டும் முன்னே பின்னே தெரியாதவங்க மாதிரி இருந்திருக்கோம் பாருங்க. அதாங்கய்யா நம்ம ஊருக்கும் பட்டணத்துக்கும் இருக்கற வித்தியாசம்.’
தங்கபாண்டி ஒன்றும் சொல்லாமல் தன் மனைவியையே பார்த்தார். பிறகு, ‘தம்பி நீங்களே உங்கள அறிமுகப்படுத்திக்கிட்டதால கேக்கறேன். உங்கம்மா ராஜம்மா இப்ப எங்க இருக்காங்க?’
மருத்துவருடைய முகம் சட்டென்று மாறிப்போனது.
‘ஐயா அவங்க...’ என்று தடுமாறினார்.
‘தெரியும் தம்பி. நான் செஞ்சதா சொன்னீங்களே அந்த உதவி.. அதுக்கு உங்களுக்காக செஞ்சது இல்லே. எங்கப்பாரு காலத்துலருந்து எங்க வீட்டுல விசுவாசமா வேல செஞ்ச உங்கம்மா ராஜம்மாவுக்காக. நீங்களே சொன்னீங்க.. நீங்க இப்ப நல்ல நிலைமைல இருக்கறதுக்கு நான் காரணம்னு.. இல்ல தம்பி.. உங்கம்மாத்தான் காரணம். ஆனா.. இப்ப உங்கம்மா இருக்கற நிலைக்கு யார் காரணம் தம்பி? நீங்களா இல்ல ஒங்க பெஞ்சாதியா?’
பதில் பேசமுடியாமல் மருத்துவர் மவுனமாயிருக்க தங்கபாண்டி தொடர்ந்தார். ‘இதோ நிக்கறாளே என் மக பத்மா. இவள கல்யாணம் ஆன புதுசுல என் சம்மந்தியம்மா வீட்டு வேல செய்யச் சொன்னதுக்காக கோச்சிக்கிட்டு கூட்டிக்கிட்டு தனிக்குடித்தனம் வந்தாங்க மாப்பிள்ளை. இப்ப குழந்தைகளுக்கு ஒரு நல்லது, கெட்டதுக்கு என்ன செய்யணும், ஏது செய்யணும்னு சொல்றதுக்குக்கூட இவங்களுக்கு யாருமில்ல.. பெரியவங்கன்னு ஒருத்தர், ரெண்டுபேர் கூட இருந்தா இந்த அவலம் இருக்குமா தம்பி?’ என்றவர் மருத்துவருக்கு அருகில் தலைகுனிந்து நின்ற தன் மருமகனைப் பார்த்தார்.
‘ஐயோ, போதும் சும்மாயிருங்க’ என்று சாடையால் தன்னை எச்சரித்த தன் மனைவியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தார். ‘நீங்க தப்பா நினைச்சிக்கிட்டாலும் இத நான் சொல்லாம இருக்க முடியல மாப்பிள்ளை.. உங்களமாதிரியும் இதோ நிக்கற டாக்டர் மாதிரியுமான படிச்ச பிள்ளைங்களே பெத்தவங்களையும் பெரியவங்களையும் மதிக்காம உதாசீனப் படுத்தனா அது நல்லாவா இருக்கு? இப்ப பாருங்க.. மீனாக்குட்டியோட விஷயத்துக்கு ஊர்லருக்கற எங்கள கூப்பிட்ட எம்பொண்ணுக்கு இந்த ஊர்லயே இருக்கற தன் மாமியார கூப்பிட தோணலையே..’
மதன் பத்மாவைப் பார்த்து, ‘எல்லாம் உன்னால் வந்த வினை’ என்பதுபோல் பார்த்தான்.
மருத்தவர் சங்கடத்துடன் நெளிந்தார். பிறகு, ‘ஐயா.. நீங்க சொல்றது தப்புன்னு நான் சொல்லலைய்யா. எங்க குடும்பத்துல இப்படி நடந்ததுக்கு சில காரணங்கள் இருக்கு.. ஆனா அத விவாதிக்கறதுக்கு ஏத்த இடமும் நேரமும் இது இல்லன்னு நினைக்கிறேன். நீங்க உங்க உடம்ப பார்த்துக்குங்க.. நீங்க ஊருக்கு போறதுக்கு முன்னால என் பெஞ்சாதியையும் கூட்டிக்கிட்டு வரேன்.. நீங்களே அவகிட்டருந்து கேட்டுக்கலாம். அதுக்கப்புறம் நீங்க என்ன சொன்னாலும் அதுபோலவே செய்யறேன்.. நான் வரேன் பத்மா, நான் வரேம்மா.. மிஸ்டர் மதன், ப்ளீஸ் கம் வித் மி..’ என்றவாறு அறையை விட்டு வெளியேறிய மருத்துவரைப் பின்தொடர்ந்து மதனும் வெளியேற மரகதம் தன் கணவனைப் பார்த்தார்.
‘ஏங்க இது உங்களுக்கு தேவையா? அதுவும் இந்த நேரத்துல. நம்ம வீட்லருக்கற பிரச்சினைய பார்ப்பீங்களா? மருமகனைக் குத்தம் சொல்ற நேரமா இது? பேசாம படுத்து ஓய்வெடுங்க. மாணிக்கம் நான் சொன்ன ஜாமான்களையெல்லாம் வாங்கிட்டியா.. ஏய் பத்மா, இங்க என் கூட வா. பகல் சமையல் வேலையைப் பார்க்கலாம்.’ என்று இருவரும் அடுக்களைக்குள் நுழைய மாணிக்கம் நான் வாங்கி வந்திருந்த பைகளை இரண்டு கைகளிலும் எடுத்துக்கொண்டு அவர்கள் பின்னால் சென்றான்.
‘ஏய் வீனாக்குட்டி.. இந்த கலாட்டாவுல ஸ்கூலுக்கு நீ மட்டம் போட்டுட்டே இல்ல?’ என்றவாறு தன் செல்ல பேத்தியை அணைத்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்தார் தங்கபாண்டி..
***
‘ஏய் பத்மா. அப்பா சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது. எங்க உங்க மாமியார காணோம். நீ சொன்னியா இல்லையா?’
‘இல்லம்மா.. நீங்க வந்ததும் உங்கள் என்ன பண்ணலாம்னு கேட்டுக்கிட்டு கூப்பிடலாம்னு இருந்தேன்.’ என்றாள் பத்மா.
‘அவங்கள எதுக்கும்மா கூப்பிடணும்?’ என்றான் மாணிக்கம்.
மரகதம் தன் மகனையும் மகளையும் மாறி, மாறி பார்த்தாள்.
‘நீ சும்மா இரு மாணிக்கம். உனக்கு ஒன்னும் தெரியாது. இது உங்க மாமியார் வீடு மாதிரி இல்லே. நீ சொல்லுடி. இதுல எங்கள என்னடி கேக்க வேண்டியிருக்கு? இப்ப நீ கூப்பிட்டு அவங்க உடனே புறப்பட்டு வந்தாங்கன்னா, நாங்க இங்க இருக்கறத பார்த்துட்டு என்ன நினைப்பாங்க? அநாவசியமா பிரச்சினைதான் வரும். என்ன பொம்பளையோ நீ.’
‘இல்லம்மா. மீனா அப்பாவ பத்தி உங்களுக்கு தெரியாது.’
மரகதம் எரிச்சலுடன் தன் மகளைப் பார்த்தாள். ‘என்னடி தெரியாது? எதுக்கெடுத்தாலும் மாப்பிள்ளைய சாக்கா வச்சி நீ தப்பிச்சிக்க. ஒரு ஆம்பிளைய கைக்குள்ள போட்டுக்க தெரியாத பொம்பள என்ன பொம்பளடி? கல்யாணம் ஆயி பதினஞ்சு வருஷமாவுது. இப்பவும் ஆம்பளைக்கு பயந்து செத்தா அப்புறம் குடுத்தனம் எப்படி நடத்தறது? கூறு கெட்டவளே.’
‘ஆமா.. என்னையே குத்தம் சொல்லுங்க. அவர் கூட வேலை செய்யற ஆளுங்க அவருக்கு என்ன பேரு வச்சிருக்காங்க தெரியுமா உங்களுக்கு?’
மரகதத்திற்கு தன் மகள் மீது எரிச்சல் கூடியது. ‘என்னடி சொல்றே?’
‘அண்ணே நீங்களும் கேளுங்க. அவர்கூட வேலை செய்யறவரோட வீட்டு விசேஷத்து ஒரு நா கூட்டிக்கிட்டு போயிருந்தார். அங்க ரெண்டு பேர் எங்க ரெண்டு பேரையும் பார்த்ததும் என்ன பேசிக்கிட்டாங்க தெரியுமா?’
மாணிக்கம் ஆவலுடன் தன் தங்கையைப் பார்த்தான். ‘என்ன சொல்லு?’
‘ஒருத்தர் இன்னொருத்தர்கிட்ட சொல்றார். பார்த்தீங்களா நம்ம ஹிட்லரோட வொய்ஃப.. பாவம். என்ன சாதுவா இருக்காங்க? எப்படிதான் இவர் கூட இத்தனை வருஷமா எப்படித்தான் குடும்பம் நடத்தறாங்களோ..' அப்படீன்னு. அப்புறமா நான் அவங்க பின்னால நின்னுக்கிட்டிருந்தத ரெண்டு பேரும் பார்த்துட்டு எங்கிட்ட ‘மேடம், மேடம்..சார்கிட்ட சொல்லிறாதீங்க.. அப்புறம் எங்க கதி அதோகதிதான் மேடம்.. ப்ளீஸ் மேடம்னு அவங்க கெஞ்சினத நீங்க பார்க்கணுமே..’ அபிநயத்துடன் பத்மா கூற விழுந்து விழுந்து சிரித்தான் மாணிக்கம்.
மரகதம் ஒன்றும் புரியாமல் தன் மக்கள் இருவரையும் கோபத்துடன் பார்த்தாள். ‘டேய் மாணிக்கம், அவ தான் சொல்றான்னா நீயும் என்னடா சின்ன பிள்ளையாட்டம் சிரிச்சிக்கிட்டு? ஏய் பத்மா, போ போய் மாப்பிள்ளை வந்துட்டாரான்னு பார்.. டேய் மாணிக்கம், போறுண்டா சிரிச்சது.. ஹிட்லராம்.. யார்ரா அது?’
மாணிக்கம் குழப்பத்துடன் தன்னைப் பார்க்கும் தன் தாயைப் பார்த்து மீண்டும் சிரித்தான். பத்மா தலைநிமிர்ந்து அடுக்களைவாசலில் தங்களையே பார்த்துக்கொண்டு நின்ற மதனைப் பார்த்து வெளிறிப்போய் சிரித்துக்கொண்டிருக்கும் தன் அண்ணனைப் பார்த்து கையால் சைகை செய்ய.. மரகதம் பத்மாவின் பார்வை போன திசையை நோக்கினாள்.
கோபத்துடன் நின்ற மதனைப் பார்த்தவள் எழுந்து நின்றாள். ‘டேய் மாணிக்கம்.. சிரிச்சது போறும். எழுந்து சித்த வெளிய போ.. மாப்பிள்ளை வந்துட்டார்.’
சிரிப்பை சட்டென்று நிறுத்திவிட்டு திரும்பி வாசலைப் பார்த்த மாணிக்கம் எந்தவித பதற்றமும் இல்லாமல் எழுந்து மதனை முறைத்து பார்த்தவாறே வெளியேறி தன் மருமகள் மீனாவின் அருகில் சென்றமர்ந்தான். ‘என்ன மாமா?’ என்று பார்வையால் கேட்ட மீனாவைப் பார்த்து ரகசியமாய் கண்ணடித்தான். ‘ஆமா உங்கப்பாவுக்கு அவரோட ஆஃபீஸ்ல ஹிட்லர்னு பேர் வச்சிருக்காங்களாம்மே.. உண்மையா.. கரெக்டான பேர்தான்.. அத பத்மா சொன்னதும் சிரிப்பு தாங்கல..’ என்றான் ரகசிய குரலில்.
மீனா சிரிப்பதற்கு பதில் கோபப்பட்டாள். ‘என்ன மாமா நீங்க? அப்பா ஏற்கனவே கோபமா இருக்காங்க. இப்ப எதுக்கு இதப் போயி அம்மா உங்க கிட்ட சொல்லணும்?’ என்றாள்.
மாணிக்கம் சிரிப்பை சட்டென்று நிறுத்திவிட்டு தன் மருமகளை ஆச்சரியத்துடன் பார்த்தான். ‘பாரேன்.. ஏய் என்ன பெரிய மனுஷியாயிட்டியா?’ மீனா அவனைப் பார்த்து முறைக்க, ‘சரி, சரி. சிரிக்கலை.. உனக்கு ஏதாச்சும் சாப்பிட வேணாம்? இன்னும் கொஞ்ச நேரத்துல உங்கப்பா வெடிக்கப் போறார். உங்கம்மா சமையல் எங்க பண்ணப்போறா? மாமா வீனாவுக்கு வெளிய போயி சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வரப்போறேன்.. உனக்கும் வாங்கிட்டு வாரேன். உனக்கு என்ன பிடிக்கும்? சொல்லு, மாமா வாங்கி வாரேன்.’
மீனா முகத்தை முறுக்கிக் கொண்டு, ‘எனக்கு ஒன்னும் வேணாம்.’ என்றாள்.
மாணிக்கம் சிரித்துக்கொண்டு அவளுடைய தலையை பாசத்துடன் தடவி விட்டான். ‘சாரிடா கண்ணா.. மாமா சும்மா தமாஷ்தான் பண்ணேன். சத்தியமா உங்கப்பா கூட சண்டை போட மாட்டேன். அதனாலதானே இப்ப வெளியவே போறேன். மாமா இங்க இருந்தா நிச்சயமா சண்டை போடுவேன். நான் போயிட்டு அரை மணி நேரம் கழிச்சி வாரேன், என்ன?’
அவன் தடதடவென படியிறங்கி போவதைப் பார்த்த மீனா, ‘அப்பாடா.. இப்பவாவது மாமாவுக்கு புத்தி வந்துச்சே..’ என்று நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
***
‘நம்ம பேசிக்கிட்டிருந்தத கேட்டிருப்பாங்களோ...’ எதிர்பாராமல் வந்து நின்ற மதனின் முகத்திலிருந்த கோபத்தை பார்த்து தனக்குள் நினைத்தாள் பத்மா. ‘கேட்டா கேக்கட்டுமே.. நா கேட்டதைத் தானே சொன்னேன். எனக்கொன்னும் பயமில்லே.. இந்தம்மா வேற.. ஒரேயடியா மாப்பிள்ளைய தலையில தூக்கி வச்சிட்டு ஆடறதுனாலதான் இவர் ரொம்பவும் முறுக்கிக்கிராறு..’
மரகதம் பதற்றத்துடன் மதனை நெருங்கினாள். ‘நீங்க ஒன்னும் மனசுல வச்சிக்காதீங்க மாப்பிள்ளை. பத்மாவ பத்தித்தான் உங்களுக்கு தெரியுமே.. கூறு கெட்டவ.. நீங்க போய் முன் ரூம்புல இருங்க.. நான் மாமாவ கூப்பிட்டுக்கிட்டு வாரன்.’
மதன் நொடியில் முகம் மாறி சகஜ நிலைக்கு வந்தான். தன் மாமியாரைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தான். ‘மாமாவை எதுக்கு சிரமப்படுத்தணும்? எனக்கும் உங்க கூட கொஞ்சம் பேசணும். பத்மா இங்கயே இருக்கட்டும். நீங்க வாங்க.. தேவைப்பட்டா மாமாகிட்ட பேசலாம்.’ என்றவன் அவர்களுடைய பதிலுக்கு காத்திராமல் வெளியேறி தன் அறைக்குச் சென்றான்.
‘எதுக்கு என்ன வேணாம் சொல்றாருன்னு கேளுங்கம்மா. அவரு பேசப்போறது என் பொண்ணப்பத்தி. நா இல்லாம எப்படி? நானுந்தான் வருவேன்.’ என்று முரண்டு பிடித்த தன் மகளைப் பார்த்தாள் மரகதம்.
‘ஏய் என்ன நீ அவரு, இவருன்னு மாப்பிள்ளைய மரியாதையில்லாம பேசற? இரு, அவங்ககிட்ட பேசிட்டு வந்து பேசிக்கறேன். நீ வந்தா ஏட்டிக்கு போட்டியா பேசி வம்புதான் வளரும்.. நீ இங்கயே இரு.. இல்லன்னா அப்பாக்கிட்ட பேசிக்கிட்டிரு. நான் மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு வாரேன்..’
மரகதம் பத்மாவின் முறைப்பை லட்சியம் செய்யாமல் அடுத்திருந்த பிள்ளைகளுடைய அறைக்குள் நுழைந்து கட்டிலில் படுத்திருந்த தன் கணவரிடம் குசுகுசுத்தாள். ‘ஏங்க.. மாப்பிள்ளை ஒருவேளை இந்த சடங்கெல்லாம் வேணாம்னு சொல்லிட்டார்னா என்னங்க பண்றது?’
சிறிது நேரம் ஒன்றும் பதில் பேசாமல் தன் பேத்தியை பார்த்த தங்கபாண்டி, ‘வீனா, நீ போய் அக்காகிட்ட பேசிட்டிரு போ. தாத்தா கூப்பிடற வரைக்கும் வரக்கூடாது.. என்ன?’ என்றார்.
வீனா விருப்பமில்லாமல் கட்டிலைவிட்டு இறங்கி வெளியேற.. அவர் தன் மனைவியைப் பார்த்தார். ‘இங்க பார் மரகதம். நமக்கு இந்த சடங்க விட மாப்பிள்ளைக்கும் பத்மாவுக்கும் இடையிலருக்கற இந்த பிணக்க தீக்கறதுதான் இப்ப முக்கியம். முதல்ல அவர் என்ன சொல்றார்னு கேளு. அதுக்கப்புறம் நாம் என்ன செய்றதுன்னு முடிவு பண்ணலாம். போய் பேசிட்டு வா..’
‘சரிங்க.. நீங்க சொல்றதுதான் சரி.’ என்ற மரகதம் தாழ்வாரத்தில் வாளியிலிருந்த தண்ணீரை அள்ளி முகத்தை கழுவி துடைத்துக்கொண்டு ‘பழனி ஆண்டவா ஒரு குளப்பமுமில்லாம முடியணும்பா..’ என்று முனகியவாறு மூலையில் அமர்ந்திருந்த பேத்தியிடம் சென்று அவளுடைய தலையைப் பாசத்துடன் தடவி, முகத்தாடையில் விளையாட்டாய் தட்டினாள். ‘அம்மே அப்பாகிட்ட பேசிட்டு உனக்கு பிடிச்சத ஆக்கிப்போடறேண்டா செல்லம்..’என்று கொஞ்சினாள்.
மரகதத்தின் இரு கரங்களையும் பற்றிக்கொண்டு கண்கலங்கினாள் மீனா.. ‘எனக்கு ஒன்னும் வேணாம்மே.. நீங்க அப்பாவையும் அம்மாவையும் மறுபடியும் ஒன்னாக்கிருங்கம்மே.. அது போதும்..’
கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீருடன் தன் கரங்களைப் பற்றிக்கொண்டு விம்மும் மீனாவை தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக்கொண்டாள் மரகதம். ‘வேணாம்டி செல்லம். இந்த நேரத்துல நீ அழக்கூடாது. குதிர்ந்து நிக்கற நேரத்துல குமரிப் பொண்ணு கண்கலங்குனா குடும்பத்துக்கு ஆவாதுடீம்மா.. கண்ண துடைச்சிக்கிட்டு சாமி கிட்ட வேண்டிக்கோ.. எல்லாம் நல்ல படியா முடியும்..’ மீனாவின் கண்களைத் துடைத்துவிட்டாள். ‘இப்படியே சுவத்துல சாஞ்சி உக்காந்து சாமிகிட்ட வேண்டிக்கிட்டே இரு.. அம்மே வந்துட்டேன்.’
முன் அறையில் தன் இருக்கையிலமர்ந்து மீனாவின் வார்த்தைகளை ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த மதன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் ‘சொல்லுங்க மாப்பிள்ளை.’ என்று தன் எதிரில் வந்து நின்ற மரகதத்தை நோக்கினான்.
பத்மா அடுக்களைக்குள் இருந்து வெளியே வந்து தன் மகளைப் பார்த்தாள். மீனா, ‘நீங்க போங்கம்மா. ப்ளீஸ்..’ என்று சாடையால் கெஞ்ச... ‘நீ பேசாம இரு’ என்று சாடையால் பதிலளித்துவிட்டு முன் அறையை நோக்கி ஓசைபடாமல் முன்னேறினாள்.
தன் முன் யோசனையுடன் அமர்ந்திருந்த மதனைப் பார்த்த மரகதத்தின் மனம் வேதனையடைந்தது. ‘சொல்லுங்க மாப்பிள்ளை.. என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்களோ அத தயங்காம சொல்லுங்க..’
மதன் அவளைப் பார்க்காமல் பேசினான். ‘நேராவே சொல்லிடறேன் மாமி. எனக்கு இந்த சடங்கு சாஸ்திரத்திலெல்லாம் நம்பிக்கையில்லங்கறது உங்களுக்கும் மாமாவுக்கும் தெரியும். முக்கியமா மீனாவுக்கு நடத்தணும்னு நினைக்கற இந்த சடங்குல எனக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லே.. அதனாலதான் நான் எங்கம்மாவுக்கே சொல்லலை. ஒரு அம்பது வருஷத்துக்கு முன்னால வேணும்னா இந்த மாதிரியான சடங்கெல்லாம் தேவைப்பட்டிருக்கலாம். ஆனா இப்ப, அதுவும் மெட்றாஸ் மாதிரி பட்டணத்துலல்லாம் இது தேவையே இல்ல. அதுவுமில்லாம மீனாவுக்கு இன்னும் மூனு வாரத்துல முக்கியமான பரீட்சை வருது.. இந்த நேரத்துல அவளுடைய கவனத்த சிதற விடறாமாதிரியான இந்த மாதிரி விஷயங்கள நடத்துறதுல எனக்கு துளிகூட இஷ்டமில்ல.. மாமா, டாக்டர் முன்னால சொன்ன விஷயங்கள்ல கூட எனக்கு சம்மதமில்ல.. நான் என் அம்மாமேல இன்னமும் பாசத்தோடத்தான் இருக்கேன். டாக்டர் விஷயத்துல என்ன நடந்துச்சின்னு எனக்கு தெரியாது.. ஆனா என் அம்மாவுக்கு நான் இன்னும் நல்ல பிள்ளையாத்தான் இருக்கேன். ஆனா அதே நேரத்துல எனக்கு என் மனைவியும் குழந்தைகளும்தான் முக்கியம். என் மனைவிய நானா இஷ்டப்பட்டுத்தான் கட்டிக்கிட்டேன். அவ கிட்ட எந்த குறை இருந்தாலும் எனக்கு ஒரு நல்ல மனைவியா, என் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல அம்மாவா இருந்திருக்கா.. நான் என் பிள்ளைங்கள விட்டுட்டு ஊருக்கு தைரியமா போயிட்டு வரமுடியுதுன்னா அதுக்கு காரணம் பத்மா மாதிரி ஒரு அடக்க ஒடுக்கமான பெஞ்சாதி கிடைச்சதுதான்.. எனக்கு அவ இன்னமும் ஒரு சின்ன பிள்ளையாத்தான் தெரியறா.. மீனா, வீனாவோட சேர்த்து எனக்கு அவளும் ஒரு குழந்தை மாதிரி.. அவ தப்பு பண்ணும்போது தலையைல் குட்டுறதுக்கும் புத்திசாலித்தனமா பண்ணும்போது தட்டிக் குடுத்தறதுக்கும் எனக்கு மட்டும்தான் உரிமையிருக்கு. அவள யார்கிட்டயும்.. அது எங்க அம்மாவும் இருந்தாலும் சரி, விட்டுக்கொடுக்க நான் தயாரா இல்ல. அதனாலதான் அவளை வேலைக்காரி மாதிரி நடத்துன எங்கம்மாகிட்டருந்தும் என் மதனிமார்ங்க கிட்டருந்தும் பிரிச்சி கூட்டிக்கிட்டு வந்தேன். இவ்வளவு ஏன், உங்ககிட்ட கூட பத்மாவ காட்டிக்குடுக்க நான் தயாராயில்லை.. இன்னைக்கி நீங்க அவளை கண்டபடி திட்டினதக்கூட என்னால தாங்கிக்க முடியல மாமி.. அவ இத வேணும்னு செய்யலை.. உங்க ஊர் பழக்கம் மட்டும்தான் இப்ப அவளுக்கு இப்ப கண் முன்னால நிக்குது.. ஐயோ, எம்பொண்ணுக்கு சடங்கு பண்ணலன்னா ஊர்ல சாதிசனம் என்ன சொல்லுமோ.. அதனால எம்பொண்ணுக்கு ஏதாச்சும் போல்லாப்பு வந்திருமோங்கற ஒரு மூட எண்ணத்துனாலதான் என்னையும் எதுத்துக்கிட்டு இத நடத்தியே தீரணும், அதனால என்ன வந்தாலும் பரவாயில்லைங்கற பிடிவாதத்துல இருக்கறா. அந்த குணம்தான் எனக்கு அவகிட்ட பிடிச்சது.. நானும் கோபப்பட்டு காரியத்த சிக்கலாக்கிட்டேன். கோபப்படாம நிதானமா எடுத்து சொன்னா என் பத்மாவுக்கு நிச்சயம் புரிஞ்சிருக்கும்.. அவள நான் பாத்துக்கறேன்.. நீங்க ரெண்டுபேரும் வந்ததுக்கு அவளுக்கு என்ன செய்யணுமோ அத செஞ்சிட்டு போயிருங்க.. மத்தபடி இந்த சடங்கெல்லாம் வேணாம்..’
தாழ்வாரத்தில் நின்று மதன் கூறியதை கேட்டுக்கொண்டிருந்த பத்மா கண்கள் கலங்கி அறைக்குள் நுழைந்து மதனைப் பார்த்தாள். காலடியோசை கேட்டு திரும்பிய மதன் அழுத கோலத்தில் நின்ற தன் மனைவியைப் பார்த்தான். அவனுக்குத் தெரியும் பத்மாவின் குழந்தை குணம்.. திரும்பி மரகதத்தைப் பார்த்தான். ‘பாத்தீங்களா மாமி, நான் சொன்னேனே.. பத்மா ஒரு குழந்தைன்னு.. இந்த பத்மாதான் என் மனைவி.. இவளால மட்டுந்தான் இந்த ஹிட்லரோட குப்ப கொட்ட முடியும்..’
பத்மா இந்த வார்த்தைகளால் மேலும் உணர்ச்சிவசப்பட்டு மதனின் கால்களில் விழப்போனாள். அவளை தடுத்து நிறுத்தியவனின் தோள்களில் சாய்ந்துக்கொண்டு குரலெடுத்து அழ.. மரகதம் ஒரு நாண புன்னகையுடன் வெளியேறி தன் பேத்தியினருகில் சென்று அமர்ந்தாள். ‘பார்த்தியா கண்ணு.. நீ சாமிகிட்ட வேண்டனது கிடைச்சிருச்சி பாத்தியா? உங்கம்மாவ சரியா புரிஞ்சி வச்சிருக்கறது உங்கப்பா தான்.. சரி.. உனக்கு என்ன வேணும்? அம்மே செஞ்சி போடறேன்.’
***
மாணிக்கம் நம்ப முடியாமல் தன் தாயையும் தந்தையையும் மாறி மாறிப் பார்த்தான். ‘என்னம்மா சொல்றீங்க? நாம வந்த விஷயத்த மறந்துட்டு என்ன பேசறீங்க? நாம இப்ப ஊருக்கு திரும்பிப் போயி நாங்களே மீனாவுக்கு வேண்டியத செஞ்சிட்டு வந்துட்டோம்னு சொன்னா ஊர்ல காறித் துப்புவாங்க. அவருக்கு இங்க வச்சி செய்ய இஷ்டமில்லன்னா மீனா ஒரு வாரத்துக்கப்புறம் ஊருக்கு கூட்டிக்கிட்டு போயி அங்க வச்சி செய்வோம். அத விட்டுட்டு சடங்கே வேணாம்னா? இங்க பாருங்கம்மா.. நீங்களும் பத்மா மாதிரி பயந்துக்கிட்டு மாப்பிள்ளை சொல்றதுக்கு சரின்னு சொல்லீட்டீங்கன்னு நினைக்கிறேன். நான் பேசறேன்.’
‘டேய் மாணிக்கம். என்ன உங்கம்மா இவ்வளவுதூரம் சொன்னதுக்கப்புறமும் நீ பாட்டுக்கு முட்டாளாட்டம் பேசிக்கிட்டிருக்கே.. நீ முதல்ல பெட்டிய எடுத்துக்கிட்டு ஊர் போய் சேரு..’ தான் இதுவரை கண்டிராத கோபத்துடன் தன் முன் நின்ற தன் தந்தையைப் பார்த்து திடுக்கிட்டான் மாணிக்கம்.
கோபத்தால் சிவந்து நின்ற தன் கணவனின் கண்களைப் பார்த்த மரகதம் பதற்றத்துடன் எழுந்து அவருடைய தோள்களைப் பற்றினாள். ‘ஐயோ நீங்க என்னங்க? டாக்டர் சொன்னத மறந்துட்டீங்களா? பேசாம உக்காருங்க. டேய் மாணிக்கம். ஒன்னும் பேசாம, கிளம்பு. இப்பவே போனீனா ராத்திரிக்குள்ள ஊர் போய் சேர்ந்துரலாம். இப்போதைக்கு ஊர்ல யார்கிட்டயும் ஒன்னும் சொல்ல வேணாம். ரெண்டு நாள்ல நாங்க ரெண்டு பேரும் வந்தப்புறம் என்ன சொல்லலாம், எப்படி சொல்லலாம்னு யோசிக்கலாம். அப்பாவ வீணா கோபப்படுத்தி ஒன்னு கெடக்க ஒன்னு பண்ணிராத. போ.. குளிச்சிட்டு கிளம்பு..’
‘ஆமா.. அப்பாவுக்கு ஏதாவது வந்துரும்னு சொல்லியே மாப்பிள்ளை சொல்ற எல்லாத்துக்கு பணிஞ்சி போயிருங்க.. அது அவருக்கும் தெரியனுமில்லே.. அவர் பாட்டுக்கு தான் புடிச்ச முயலுக்கு மூனே காலும்பாரு.. நீங்களும் தலைய தலைய ஆட்டிக்கிட்டு நிப்பீங்க.. எப்படியோ போங்க.. அங்க போனா எம்பொண்டாட்டி என்ன குதி குதிக்க போறாளோ, தெரியல..’
பத்மா கோபத்துடன் முனகும் தன் சகோதரனைப் பார்த்தாள். ‘அண்ணே, அவர் கோபம் அடங்கட்டும். மீனாவுக்கு பரீட்சை முடிஞ்சதும் அவர்கிட்ட சமாதானமா பேசி ஊருக்கு கூட்டிக்கிட்டு வரேன். அங்க வச்சி என்ன செய்யணுமோ செஞ்சிரலாம்.. நீங்க இப்ப போங்க.. அப்பாவுக்காகவாவது பொறுத்துக்கிட்டு போங்கண்ணே..’
மாணிக்கம் திரும்பி அவளைக் கேலியுடன் பார்த்தான். ‘ஆமா.. எங்க கிட்ட புத்திசாலித்தனமா பேசு.. அவரப் பார்த்ததும் கோட்ட விட்டுரு.. நல்ல புருஷன்.. நல்ல பொஞ்சாதி.. எப்படியோ போ..’
மரகதம் குறுக்கிட்டு.. ‘ஏய் பத்மா.. அதெல்லாம் அப்புறம் பாக்கலாம். நீயா ஏதாச்சும் சொல்லிட்டு இவன் போய் அங்க அதே மாதிரி சொல்லி வைக்கப் போறான். போய் மதிய சமையலுக்கு என்ன வேணும் பார்.. நான் போய் வாங்கிட்டு வாரேன். ரெண்டு நாளைக்கு இருந்து பிள்ளைக்கு வாய்க்கு ருசியா செஞ்சி போட்டுட்டு போறேன். மத்தத அப்புறம் பாத்துக்கலாம். மாப்பிள்ளைக்கு பிடிக்காத எதையும் செய்ய வேணாம். சாதி சனங்க கிட்ட என்ன சொல்லணுங்கறது அப்பாவுக்கு தெரியும். டேய் மாணிக்கம்! நீ சும்மா பேசிக்கிட்டிருக்காம கிளம்புறா..’ என மாணிக்கம் வேண்டா வெறுப்புடன் குளியலறைக்குள் நுழைய கிளம்ப பத்மா அடுக்களைக்குள் புகுந்தாள்.
***
'மதறாசிலிருந்து அறுநூறு கிலோ மீட்டர் தொலைவில் வங்காள வளைகுடாவில் மையம் கொண்டிருந்த சூறாவளி காற்று இன்று பகல் மதராஸ் நகர் அருகே கரையை கடக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென இன்று அதிகாலை நேரப்படி அது முழுவதும் வலுவிழந்ததென மதறாஸ் வானிலை நிலையம் அறிவிக்கிறது. ஆகவே கடந்த இரண்டு நட்களாக நம் நகரத்துக்கு வருவதாகவிருந்த பேராபத்து நீங்கியது."
அடுக்களையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி வழியாக ஒலித்த வானிலையறிக்கையைக் கேட்ட வீனா ஒரு குறும்புப் புன்னகையுடன் தன் தாத்தாவைப் பார்த்தாள். ‘தாத்தா, நம்ம வீட்டையும் பயமுறுத்திக்கிட்டிருந்த புயல் ஒன்னுமில்லாம போயிருச்சில்ல?’
‘சீ போக்கிரி. உங்கப்பா கேட்டா கொன்னுருவாரு.’ என்று தன் தலையில் குட்ட வந்த தாத்தாவின் கையில் அகப்படாமல் கட்டிலிலிருந்து இறங்கி ஓடிய வீனா அறை வாசலில் நின்ற மதன்மேல் மோதி நின்றாள்.
‘ஐயோ.. அப்பா..’ என்றவள் தன் தந்தையை நிமிர்ந்து பார்த்தாள். ‘புயல்னு நா உங்கள சொல்லைப்பா. மாமாவைத்தான் சொன்னேன். அவங்க ஊருக்கு திரும்பி போயிட்டாங்கள்ள? அதத்தான் அப்படி சொன்னேம்பா’ என்றாள்.
மதன் சிரித்தான். ‘ஏய் ரவுடி.. நீ யார சொன்னேன்னு புரிஞ்சிக்காத அளவுக்கு நா முட்டாள் இல்லே..’ என்றவாறே வீனாவின் காதைப் பிடித்து செல்லமாக திருகினான். ‘எப்படியோ இந்த கலாட்டாவுக்கு நடுவுல நீ ஸ்கூலுக்கு போகாம மட்டம் போட்டுட்டே.. சரி.. கொட்டம் அடிச்சது போறும்.. வா வந்து புஸ்தகத்த எடு..’
வீனா அவனைக் கட்டிப் பிடித்து.. ‘அப்பா.. நீங்க செல்லம்லே.. இன்னைக்கி மட்டும் படிப்பிலருந்து லீவு தாங்கப்பா.. ப்ளீஸ்.’ என்று கெஞ்ச மதன் சிரித்தவாறே அவளுடைய தலையில் லேசாக குட்டினான். ‘திருடி.. அப்பாவை எப்படி சமாளிக்கறதுன்னு நல்லா படிச்சி வச்சிருக்கே.. சரி நீ கேட்டா மாதிரி இன்னைக்கி முழுசும் லீவ் சாங்க்ஷண்டு.. போ.. போயி அக்காகிட்ட உக்கார்ந்து பேசிக்கிட்டிரு..’
துள்ளிக்குதித்துக்கொண்டு ஓடிய வீனா தன் அக்காவைப் பார்த்து .. ‘அப்பா ஹிட்லர்தான்.. ஆனா நல்ல ஹிட்லர்.' என்றாள் உரத்த குரலில் அடுக்களையிலும் படுக்கையறையிலும் இருந்த அனைவருக்கும் கேட்கும்வண்ணம்.
அடுக்களையிலிருந்த பத்மா ஒருவித அச்சத்துடன் எட்டி படுக்கறை வாசலில் நின்ற மதனைப் பார்த்தாள். அதே நேரத்தில் திரும்பி தன் மனைவியைப் பார்த்த மதன், ‘உன்னை மாதிரி இல்லடி உன் பிள்ளைங்க.. ரெண்டும் ஊரையே வித்துறும்..’ என்றான் சிரித்தபடி..
படுக்கையறை கட்டிலில் அமர்ந்திருந்த தங்கபாண்டி தன் மனைவியைப் பார்த்தார். மரகதம் புன்னகையுடன் தலையை அசைத்தவாறு மதனைப் பார்க்க மூவர் முகத்திலும் புன்னகை விரிந்தது!
முற்றும்
***
‘மிஸ்டர் மதன். இவருக்கு ப்ரஷர் மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியாயிருக்கு. அதர்வைஸ் ஹி ஈஸ் ஓகே. ரெண்டு மூனு நாள் ரெஸ்ட் எடுத்தா போறும். இவர் இப்போ எடுத்திக்கிட்டிருக்கற டாப்லெட்சே போறும்னு நினைக்கிறேன். ஊருக்கு போனதும் ப்ளட் சுகர் லெவல் செக் பண்ணிடறது நல்லது. டென்ஷனாகாம இருக்கணும். அதான் முக்கியம்.’
மதனின் மாமனாரை பரிசோதித்த மருத்துவர் அவரை சற்று நேரம் கூர்ந்து பார்த்துவிட்டு கேட்டார். ‘அய்யா நீங்க தப்பா நினைக்கலேன்னா ஒன்னு கேக்கலாங்களா? எழுந்திருக்காமயே பதில் சொல்லுங்க போதும்.
‘கேளுங்க தம்பி.’
‘நீங்க தங்கபாண்டி நாடார் மளிகைக் கடை ஓனர் தானுங்களே.’
‘ஆமாம் தம்பி. நீங்க யாருன்னு தெரியலையே!’
மருத்துவர் அறையிலிருந்த எல்லோரையும் ஒருமுறை பார்த்து புன்னகையுடன் பார்த்தார்.
‘என்னை உங்களுக்கு அடையாளம் தெரியலீங்களாய்யா? அம்மா உங்களுக்கும் தெரியலையா?’
மரகதம் தன் கணவனைப் பார்த்தாள். பிறகு மீண்டும் மருத்துவரைப் பார்த்து சட்டென்று நினைவுக்கு வந்தவளைப் போல் வியப்புடன், ‘தம்பி நீங்க நம்ம ராஜம்மாவோட பிள்ளை.... உங்க பேருதான் தம்பி மறந்துபோச்சி..’ என்றாள்.
‘அட! நம்ம வீட்டுக்கு தெனம் வந்து என் தம்பி கூட வம்பு பண்ணிக்கிட்டு இருப்பீங்களே அந்த சவுந்தரா நீங்க?’ என்ற பத்மாவைப் பார்த்தார் மருத்துவர்.
‘ஆமாங்க.. நானேதான்.’ திரும்பி பத்மாவின் தந்தை தங்கபாண்டியைப் பார்த்த மருத்துவர் ‘ஐயா, சமயத்துல அன்னைக்கி நீங்க செய்த உதவிதாங்க என்னை இன்னைக்கி ஒரு டாக்டாரா இந்த நிலைமைக்கு ஒசத்தியிருக்கு. மதன் சார் உங்க மருமகன்னு தெரியாம போயிருச்சி. இல்லன்னா முன்னாலயே வந்து பார்த்திருப்பேன். இவ்வளவு பக்கத்துல இருந்துக்கிட்டும் முன்னே பின்னே தெரியாதவங்க மாதிரி இருந்திருக்கோம் பாருங்க. அதாங்கய்யா நம்ம ஊருக்கும் பட்டணத்துக்கும் இருக்கற வித்தியாசம்.’
தங்கபாண்டி ஒன்றும் சொல்லாமல் தன் மனைவியையே பார்த்தார். பிறகு, ‘தம்பி நீங்களே உங்கள அறிமுகப்படுத்திக்கிட்டதால கேக்கறேன். உங்கம்மா ராஜம்மா இப்ப எங்க இருக்காங்க?’
மருத்துவருடைய முகம் சட்டென்று மாறிப்போனது.
‘ஐயா அவங்க...’ என்று தடுமாறினார்.
‘தெரியும் தம்பி. நான் செஞ்சதா சொன்னீங்களே அந்த உதவி.. அதுக்கு உங்களுக்காக செஞ்சது இல்லே. எங்கப்பாரு காலத்துலருந்து எங்க வீட்டுல விசுவாசமா வேல செஞ்ச உங்கம்மா ராஜம்மாவுக்காக. நீங்களே சொன்னீங்க.. நீங்க இப்ப நல்ல நிலைமைல இருக்கறதுக்கு நான் காரணம்னு.. இல்ல தம்பி.. உங்கம்மாத்தான் காரணம். ஆனா.. இப்ப உங்கம்மா இருக்கற நிலைக்கு யார் காரணம் தம்பி? நீங்களா இல்ல ஒங்க பெஞ்சாதியா?’
பதில் பேசமுடியாமல் மருத்துவர் மவுனமாயிருக்க தங்கபாண்டி தொடர்ந்தார். ‘இதோ நிக்கறாளே என் மக பத்மா. இவள கல்யாணம் ஆன புதுசுல என் சம்மந்தியம்மா வீட்டு வேல செய்யச் சொன்னதுக்காக கோச்சிக்கிட்டு கூட்டிக்கிட்டு தனிக்குடித்தனம் வந்தாங்க மாப்பிள்ளை. இப்ப குழந்தைகளுக்கு ஒரு நல்லது, கெட்டதுக்கு என்ன செய்யணும், ஏது செய்யணும்னு சொல்றதுக்குக்கூட இவங்களுக்கு யாருமில்ல.. பெரியவங்கன்னு ஒருத்தர், ரெண்டுபேர் கூட இருந்தா இந்த அவலம் இருக்குமா தம்பி?’ என்றவர் மருத்துவருக்கு அருகில் தலைகுனிந்து நின்ற தன் மருமகனைப் பார்த்தார்.
‘ஐயோ, போதும் சும்மாயிருங்க’ என்று சாடையால் தன்னை எச்சரித்த தன் மனைவியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தார். ‘நீங்க தப்பா நினைச்சிக்கிட்டாலும் இத நான் சொல்லாம இருக்க முடியல மாப்பிள்ளை.. உங்களமாதிரியும் இதோ நிக்கற டாக்டர் மாதிரியுமான படிச்ச பிள்ளைங்களே பெத்தவங்களையும் பெரியவங்களையும் மதிக்காம உதாசீனப் படுத்தனா அது நல்லாவா இருக்கு? இப்ப பாருங்க.. மீனாக்குட்டியோட விஷயத்துக்கு ஊர்லருக்கற எங்கள கூப்பிட்ட எம்பொண்ணுக்கு இந்த ஊர்லயே இருக்கற தன் மாமியார கூப்பிட தோணலையே..’
மதன் பத்மாவைப் பார்த்து, ‘எல்லாம் உன்னால் வந்த வினை’ என்பதுபோல் பார்த்தான்.
மருத்தவர் சங்கடத்துடன் நெளிந்தார். பிறகு, ‘ஐயா.. நீங்க சொல்றது தப்புன்னு நான் சொல்லலைய்யா. எங்க குடும்பத்துல இப்படி நடந்ததுக்கு சில காரணங்கள் இருக்கு.. ஆனா அத விவாதிக்கறதுக்கு ஏத்த இடமும் நேரமும் இது இல்லன்னு நினைக்கிறேன். நீங்க உங்க உடம்ப பார்த்துக்குங்க.. நீங்க ஊருக்கு போறதுக்கு முன்னால என் பெஞ்சாதியையும் கூட்டிக்கிட்டு வரேன்.. நீங்களே அவகிட்டருந்து கேட்டுக்கலாம். அதுக்கப்புறம் நீங்க என்ன சொன்னாலும் அதுபோலவே செய்யறேன்.. நான் வரேன் பத்மா, நான் வரேம்மா.. மிஸ்டர் மதன், ப்ளீஸ் கம் வித் மி..’ என்றவாறு அறையை விட்டு வெளியேறிய மருத்துவரைப் பின்தொடர்ந்து மதனும் வெளியேற மரகதம் தன் கணவனைப் பார்த்தார்.
‘ஏங்க இது உங்களுக்கு தேவையா? அதுவும் இந்த நேரத்துல. நம்ம வீட்லருக்கற பிரச்சினைய பார்ப்பீங்களா? மருமகனைக் குத்தம் சொல்ற நேரமா இது? பேசாம படுத்து ஓய்வெடுங்க. மாணிக்கம் நான் சொன்ன ஜாமான்களையெல்லாம் வாங்கிட்டியா.. ஏய் பத்மா, இங்க என் கூட வா. பகல் சமையல் வேலையைப் பார்க்கலாம்.’ என்று இருவரும் அடுக்களைக்குள் நுழைய மாணிக்கம் நான் வாங்கி வந்திருந்த பைகளை இரண்டு கைகளிலும் எடுத்துக்கொண்டு அவர்கள் பின்னால் சென்றான்.
‘ஏய் வீனாக்குட்டி.. இந்த கலாட்டாவுல ஸ்கூலுக்கு நீ மட்டம் போட்டுட்டே இல்ல?’ என்றவாறு தன் செல்ல பேத்தியை அணைத்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்தார் தங்கபாண்டி..
***
‘ஏய் பத்மா. அப்பா சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது. எங்க உங்க மாமியார காணோம். நீ சொன்னியா இல்லையா?’
‘இல்லம்மா.. நீங்க வந்ததும் உங்கள் என்ன பண்ணலாம்னு கேட்டுக்கிட்டு கூப்பிடலாம்னு இருந்தேன்.’ என்றாள் பத்மா.
‘அவங்கள எதுக்கும்மா கூப்பிடணும்?’ என்றான் மாணிக்கம்.
மரகதம் தன் மகனையும் மகளையும் மாறி, மாறி பார்த்தாள்.
‘நீ சும்மா இரு மாணிக்கம். உனக்கு ஒன்னும் தெரியாது. இது உங்க மாமியார் வீடு மாதிரி இல்லே. நீ சொல்லுடி. இதுல எங்கள என்னடி கேக்க வேண்டியிருக்கு? இப்ப நீ கூப்பிட்டு அவங்க உடனே புறப்பட்டு வந்தாங்கன்னா, நாங்க இங்க இருக்கறத பார்த்துட்டு என்ன நினைப்பாங்க? அநாவசியமா பிரச்சினைதான் வரும். என்ன பொம்பளையோ நீ.’
‘இல்லம்மா. மீனா அப்பாவ பத்தி உங்களுக்கு தெரியாது.’
மரகதம் எரிச்சலுடன் தன் மகளைப் பார்த்தாள். ‘என்னடி தெரியாது? எதுக்கெடுத்தாலும் மாப்பிள்ளைய சாக்கா வச்சி நீ தப்பிச்சிக்க. ஒரு ஆம்பிளைய கைக்குள்ள போட்டுக்க தெரியாத பொம்பள என்ன பொம்பளடி? கல்யாணம் ஆயி பதினஞ்சு வருஷமாவுது. இப்பவும் ஆம்பளைக்கு பயந்து செத்தா அப்புறம் குடுத்தனம் எப்படி நடத்தறது? கூறு கெட்டவளே.’
‘ஆமா.. என்னையே குத்தம் சொல்லுங்க. அவர் கூட வேலை செய்யற ஆளுங்க அவருக்கு என்ன பேரு வச்சிருக்காங்க தெரியுமா உங்களுக்கு?’
மரகதத்திற்கு தன் மகள் மீது எரிச்சல் கூடியது. ‘என்னடி சொல்றே?’
‘அண்ணே நீங்களும் கேளுங்க. அவர்கூட வேலை செய்யறவரோட வீட்டு விசேஷத்து ஒரு நா கூட்டிக்கிட்டு போயிருந்தார். அங்க ரெண்டு பேர் எங்க ரெண்டு பேரையும் பார்த்ததும் என்ன பேசிக்கிட்டாங்க தெரியுமா?’
மாணிக்கம் ஆவலுடன் தன் தங்கையைப் பார்த்தான். ‘என்ன சொல்லு?’
‘ஒருத்தர் இன்னொருத்தர்கிட்ட சொல்றார். பார்த்தீங்களா நம்ம ஹிட்லரோட வொய்ஃப.. பாவம். என்ன சாதுவா இருக்காங்க? எப்படிதான் இவர் கூட இத்தனை வருஷமா எப்படித்தான் குடும்பம் நடத்தறாங்களோ..' அப்படீன்னு. அப்புறமா நான் அவங்க பின்னால நின்னுக்கிட்டிருந்தத ரெண்டு பேரும் பார்த்துட்டு எங்கிட்ட ‘மேடம், மேடம்..சார்கிட்ட சொல்லிறாதீங்க.. அப்புறம் எங்க கதி அதோகதிதான் மேடம்.. ப்ளீஸ் மேடம்னு அவங்க கெஞ்சினத நீங்க பார்க்கணுமே..’ அபிநயத்துடன் பத்மா கூற விழுந்து விழுந்து சிரித்தான் மாணிக்கம்.
மரகதம் ஒன்றும் புரியாமல் தன் மக்கள் இருவரையும் கோபத்துடன் பார்த்தாள். ‘டேய் மாணிக்கம், அவ தான் சொல்றான்னா நீயும் என்னடா சின்ன பிள்ளையாட்டம் சிரிச்சிக்கிட்டு? ஏய் பத்மா, போ போய் மாப்பிள்ளை வந்துட்டாரான்னு பார்.. டேய் மாணிக்கம், போறுண்டா சிரிச்சது.. ஹிட்லராம்.. யார்ரா அது?’
மாணிக்கம் குழப்பத்துடன் தன்னைப் பார்க்கும் தன் தாயைப் பார்த்து மீண்டும் சிரித்தான். பத்மா தலைநிமிர்ந்து அடுக்களைவாசலில் தங்களையே பார்த்துக்கொண்டு நின்ற மதனைப் பார்த்து வெளிறிப்போய் சிரித்துக்கொண்டிருக்கும் தன் அண்ணனைப் பார்த்து கையால் சைகை செய்ய.. மரகதம் பத்மாவின் பார்வை போன திசையை நோக்கினாள்.
கோபத்துடன் நின்ற மதனைப் பார்த்தவள் எழுந்து நின்றாள். ‘டேய் மாணிக்கம்.. சிரிச்சது போறும். எழுந்து சித்த வெளிய போ.. மாப்பிள்ளை வந்துட்டார்.’
சிரிப்பை சட்டென்று நிறுத்திவிட்டு திரும்பி வாசலைப் பார்த்த மாணிக்கம் எந்தவித பதற்றமும் இல்லாமல் எழுந்து மதனை முறைத்து பார்த்தவாறே வெளியேறி தன் மருமகள் மீனாவின் அருகில் சென்றமர்ந்தான். ‘என்ன மாமா?’ என்று பார்வையால் கேட்ட மீனாவைப் பார்த்து ரகசியமாய் கண்ணடித்தான். ‘ஆமா உங்கப்பாவுக்கு அவரோட ஆஃபீஸ்ல ஹிட்லர்னு பேர் வச்சிருக்காங்களாம்மே.. உண்மையா.. கரெக்டான பேர்தான்.. அத பத்மா சொன்னதும் சிரிப்பு தாங்கல..’ என்றான் ரகசிய குரலில்.
மீனா சிரிப்பதற்கு பதில் கோபப்பட்டாள். ‘என்ன மாமா நீங்க? அப்பா ஏற்கனவே கோபமா இருக்காங்க. இப்ப எதுக்கு இதப் போயி அம்மா உங்க கிட்ட சொல்லணும்?’ என்றாள்.
மாணிக்கம் சிரிப்பை சட்டென்று நிறுத்திவிட்டு தன் மருமகளை ஆச்சரியத்துடன் பார்த்தான். ‘பாரேன்.. ஏய் என்ன பெரிய மனுஷியாயிட்டியா?’ மீனா அவனைப் பார்த்து முறைக்க, ‘சரி, சரி. சிரிக்கலை.. உனக்கு ஏதாச்சும் சாப்பிட வேணாம்? இன்னும் கொஞ்ச நேரத்துல உங்கப்பா வெடிக்கப் போறார். உங்கம்மா சமையல் எங்க பண்ணப்போறா? மாமா வீனாவுக்கு வெளிய போயி சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வரப்போறேன்.. உனக்கும் வாங்கிட்டு வாரேன். உனக்கு என்ன பிடிக்கும்? சொல்லு, மாமா வாங்கி வாரேன்.’
மீனா முகத்தை முறுக்கிக் கொண்டு, ‘எனக்கு ஒன்னும் வேணாம்.’ என்றாள்.
மாணிக்கம் சிரித்துக்கொண்டு அவளுடைய தலையை பாசத்துடன் தடவி விட்டான். ‘சாரிடா கண்ணா.. மாமா சும்மா தமாஷ்தான் பண்ணேன். சத்தியமா உங்கப்பா கூட சண்டை போட மாட்டேன். அதனாலதானே இப்ப வெளியவே போறேன். மாமா இங்க இருந்தா நிச்சயமா சண்டை போடுவேன். நான் போயிட்டு அரை மணி நேரம் கழிச்சி வாரேன், என்ன?’
அவன் தடதடவென படியிறங்கி போவதைப் பார்த்த மீனா, ‘அப்பாடா.. இப்பவாவது மாமாவுக்கு புத்தி வந்துச்சே..’ என்று நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
***
‘நம்ம பேசிக்கிட்டிருந்தத கேட்டிருப்பாங்களோ...’ எதிர்பாராமல் வந்து நின்ற மதனின் முகத்திலிருந்த கோபத்தை பார்த்து தனக்குள் நினைத்தாள் பத்மா. ‘கேட்டா கேக்கட்டுமே.. நா கேட்டதைத் தானே சொன்னேன். எனக்கொன்னும் பயமில்லே.. இந்தம்மா வேற.. ஒரேயடியா மாப்பிள்ளைய தலையில தூக்கி வச்சிட்டு ஆடறதுனாலதான் இவர் ரொம்பவும் முறுக்கிக்கிராறு..’
மரகதம் பதற்றத்துடன் மதனை நெருங்கினாள். ‘நீங்க ஒன்னும் மனசுல வச்சிக்காதீங்க மாப்பிள்ளை. பத்மாவ பத்தித்தான் உங்களுக்கு தெரியுமே.. கூறு கெட்டவ.. நீங்க போய் முன் ரூம்புல இருங்க.. நான் மாமாவ கூப்பிட்டுக்கிட்டு வாரன்.’
மதன் நொடியில் முகம் மாறி சகஜ நிலைக்கு வந்தான். தன் மாமியாரைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தான். ‘மாமாவை எதுக்கு சிரமப்படுத்தணும்? எனக்கும் உங்க கூட கொஞ்சம் பேசணும். பத்மா இங்கயே இருக்கட்டும். நீங்க வாங்க.. தேவைப்பட்டா மாமாகிட்ட பேசலாம்.’ என்றவன் அவர்களுடைய பதிலுக்கு காத்திராமல் வெளியேறி தன் அறைக்குச் சென்றான்.
‘எதுக்கு என்ன வேணாம் சொல்றாருன்னு கேளுங்கம்மா. அவரு பேசப்போறது என் பொண்ணப்பத்தி. நா இல்லாம எப்படி? நானுந்தான் வருவேன்.’ என்று முரண்டு பிடித்த தன் மகளைப் பார்த்தாள் மரகதம்.
‘ஏய் என்ன நீ அவரு, இவருன்னு மாப்பிள்ளைய மரியாதையில்லாம பேசற? இரு, அவங்ககிட்ட பேசிட்டு வந்து பேசிக்கறேன். நீ வந்தா ஏட்டிக்கு போட்டியா பேசி வம்புதான் வளரும்.. நீ இங்கயே இரு.. இல்லன்னா அப்பாக்கிட்ட பேசிக்கிட்டிரு. நான் மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு வாரேன்..’
மரகதம் பத்மாவின் முறைப்பை லட்சியம் செய்யாமல் அடுத்திருந்த பிள்ளைகளுடைய அறைக்குள் நுழைந்து கட்டிலில் படுத்திருந்த தன் கணவரிடம் குசுகுசுத்தாள். ‘ஏங்க.. மாப்பிள்ளை ஒருவேளை இந்த சடங்கெல்லாம் வேணாம்னு சொல்லிட்டார்னா என்னங்க பண்றது?’
சிறிது நேரம் ஒன்றும் பதில் பேசாமல் தன் பேத்தியை பார்த்த தங்கபாண்டி, ‘வீனா, நீ போய் அக்காகிட்ட பேசிட்டிரு போ. தாத்தா கூப்பிடற வரைக்கும் வரக்கூடாது.. என்ன?’ என்றார்.
வீனா விருப்பமில்லாமல் கட்டிலைவிட்டு இறங்கி வெளியேற.. அவர் தன் மனைவியைப் பார்த்தார். ‘இங்க பார் மரகதம். நமக்கு இந்த சடங்க விட மாப்பிள்ளைக்கும் பத்மாவுக்கும் இடையிலருக்கற இந்த பிணக்க தீக்கறதுதான் இப்ப முக்கியம். முதல்ல அவர் என்ன சொல்றார்னு கேளு. அதுக்கப்புறம் நாம் என்ன செய்றதுன்னு முடிவு பண்ணலாம். போய் பேசிட்டு வா..’
‘சரிங்க.. நீங்க சொல்றதுதான் சரி.’ என்ற மரகதம் தாழ்வாரத்தில் வாளியிலிருந்த தண்ணீரை அள்ளி முகத்தை கழுவி துடைத்துக்கொண்டு ‘பழனி ஆண்டவா ஒரு குளப்பமுமில்லாம முடியணும்பா..’ என்று முனகியவாறு மூலையில் அமர்ந்திருந்த பேத்தியிடம் சென்று அவளுடைய தலையைப் பாசத்துடன் தடவி, முகத்தாடையில் விளையாட்டாய் தட்டினாள். ‘அம்மே அப்பாகிட்ட பேசிட்டு உனக்கு பிடிச்சத ஆக்கிப்போடறேண்டா செல்லம்..’என்று கொஞ்சினாள்.
மரகதத்தின் இரு கரங்களையும் பற்றிக்கொண்டு கண்கலங்கினாள் மீனா.. ‘எனக்கு ஒன்னும் வேணாம்மே.. நீங்க அப்பாவையும் அம்மாவையும் மறுபடியும் ஒன்னாக்கிருங்கம்மே.. அது போதும்..’
கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீருடன் தன் கரங்களைப் பற்றிக்கொண்டு விம்மும் மீனாவை தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக்கொண்டாள் மரகதம். ‘வேணாம்டி செல்லம். இந்த நேரத்துல நீ அழக்கூடாது. குதிர்ந்து நிக்கற நேரத்துல குமரிப் பொண்ணு கண்கலங்குனா குடும்பத்துக்கு ஆவாதுடீம்மா.. கண்ண துடைச்சிக்கிட்டு சாமி கிட்ட வேண்டிக்கோ.. எல்லாம் நல்ல படியா முடியும்..’ மீனாவின் கண்களைத் துடைத்துவிட்டாள். ‘இப்படியே சுவத்துல சாஞ்சி உக்காந்து சாமிகிட்ட வேண்டிக்கிட்டே இரு.. அம்மே வந்துட்டேன்.’
முன் அறையில் தன் இருக்கையிலமர்ந்து மீனாவின் வார்த்தைகளை ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த மதன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் ‘சொல்லுங்க மாப்பிள்ளை.’ என்று தன் எதிரில் வந்து நின்ற மரகதத்தை நோக்கினான்.
பத்மா அடுக்களைக்குள் இருந்து வெளியே வந்து தன் மகளைப் பார்த்தாள். மீனா, ‘நீங்க போங்கம்மா. ப்ளீஸ்..’ என்று சாடையால் கெஞ்ச... ‘நீ பேசாம இரு’ என்று சாடையால் பதிலளித்துவிட்டு முன் அறையை நோக்கி ஓசைபடாமல் முன்னேறினாள்.
தன் முன் யோசனையுடன் அமர்ந்திருந்த மதனைப் பார்த்த மரகதத்தின் மனம் வேதனையடைந்தது. ‘சொல்லுங்க மாப்பிள்ளை.. என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்களோ அத தயங்காம சொல்லுங்க..’
மதன் அவளைப் பார்க்காமல் பேசினான். ‘நேராவே சொல்லிடறேன் மாமி. எனக்கு இந்த சடங்கு சாஸ்திரத்திலெல்லாம் நம்பிக்கையில்லங்கறது உங்களுக்கும் மாமாவுக்கும் தெரியும். முக்கியமா மீனாவுக்கு நடத்தணும்னு நினைக்கற இந்த சடங்குல எனக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லே.. அதனாலதான் நான் எங்கம்மாவுக்கே சொல்லலை. ஒரு அம்பது வருஷத்துக்கு முன்னால வேணும்னா இந்த மாதிரியான சடங்கெல்லாம் தேவைப்பட்டிருக்கலாம். ஆனா இப்ப, அதுவும் மெட்றாஸ் மாதிரி பட்டணத்துலல்லாம் இது தேவையே இல்ல. அதுவுமில்லாம மீனாவுக்கு இன்னும் மூனு வாரத்துல முக்கியமான பரீட்சை வருது.. இந்த நேரத்துல அவளுடைய கவனத்த சிதற விடறாமாதிரியான இந்த மாதிரி விஷயங்கள நடத்துறதுல எனக்கு துளிகூட இஷ்டமில்ல.. மாமா, டாக்டர் முன்னால சொன்ன விஷயங்கள்ல கூட எனக்கு சம்மதமில்ல.. நான் என் அம்மாமேல இன்னமும் பாசத்தோடத்தான் இருக்கேன். டாக்டர் விஷயத்துல என்ன நடந்துச்சின்னு எனக்கு தெரியாது.. ஆனா என் அம்மாவுக்கு நான் இன்னும் நல்ல பிள்ளையாத்தான் இருக்கேன். ஆனா அதே நேரத்துல எனக்கு என் மனைவியும் குழந்தைகளும்தான் முக்கியம். என் மனைவிய நானா இஷ்டப்பட்டுத்தான் கட்டிக்கிட்டேன். அவ கிட்ட எந்த குறை இருந்தாலும் எனக்கு ஒரு நல்ல மனைவியா, என் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல அம்மாவா இருந்திருக்கா.. நான் என் பிள்ளைங்கள விட்டுட்டு ஊருக்கு தைரியமா போயிட்டு வரமுடியுதுன்னா அதுக்கு காரணம் பத்மா மாதிரி ஒரு அடக்க ஒடுக்கமான பெஞ்சாதி கிடைச்சதுதான்.. எனக்கு அவ இன்னமும் ஒரு சின்ன பிள்ளையாத்தான் தெரியறா.. மீனா, வீனாவோட சேர்த்து எனக்கு அவளும் ஒரு குழந்தை மாதிரி.. அவ தப்பு பண்ணும்போது தலையைல் குட்டுறதுக்கும் புத்திசாலித்தனமா பண்ணும்போது தட்டிக் குடுத்தறதுக்கும் எனக்கு மட்டும்தான் உரிமையிருக்கு. அவள யார்கிட்டயும்.. அது எங்க அம்மாவும் இருந்தாலும் சரி, விட்டுக்கொடுக்க நான் தயாரா இல்ல. அதனாலதான் அவளை வேலைக்காரி மாதிரி நடத்துன எங்கம்மாகிட்டருந்தும் என் மதனிமார்ங்க கிட்டருந்தும் பிரிச்சி கூட்டிக்கிட்டு வந்தேன். இவ்வளவு ஏன், உங்ககிட்ட கூட பத்மாவ காட்டிக்குடுக்க நான் தயாராயில்லை.. இன்னைக்கி நீங்க அவளை கண்டபடி திட்டினதக்கூட என்னால தாங்கிக்க முடியல மாமி.. அவ இத வேணும்னு செய்யலை.. உங்க ஊர் பழக்கம் மட்டும்தான் இப்ப அவளுக்கு இப்ப கண் முன்னால நிக்குது.. ஐயோ, எம்பொண்ணுக்கு சடங்கு பண்ணலன்னா ஊர்ல சாதிசனம் என்ன சொல்லுமோ.. அதனால எம்பொண்ணுக்கு ஏதாச்சும் போல்லாப்பு வந்திருமோங்கற ஒரு மூட எண்ணத்துனாலதான் என்னையும் எதுத்துக்கிட்டு இத நடத்தியே தீரணும், அதனால என்ன வந்தாலும் பரவாயில்லைங்கற பிடிவாதத்துல இருக்கறா. அந்த குணம்தான் எனக்கு அவகிட்ட பிடிச்சது.. நானும் கோபப்பட்டு காரியத்த சிக்கலாக்கிட்டேன். கோபப்படாம நிதானமா எடுத்து சொன்னா என் பத்மாவுக்கு நிச்சயம் புரிஞ்சிருக்கும்.. அவள நான் பாத்துக்கறேன்.. நீங்க ரெண்டுபேரும் வந்ததுக்கு அவளுக்கு என்ன செய்யணுமோ அத செஞ்சிட்டு போயிருங்க.. மத்தபடி இந்த சடங்கெல்லாம் வேணாம்..’
தாழ்வாரத்தில் நின்று மதன் கூறியதை கேட்டுக்கொண்டிருந்த பத்மா கண்கள் கலங்கி அறைக்குள் நுழைந்து மதனைப் பார்த்தாள். காலடியோசை கேட்டு திரும்பிய மதன் அழுத கோலத்தில் நின்ற தன் மனைவியைப் பார்த்தான். அவனுக்குத் தெரியும் பத்மாவின் குழந்தை குணம்.. திரும்பி மரகதத்தைப் பார்த்தான். ‘பாத்தீங்களா மாமி, நான் சொன்னேனே.. பத்மா ஒரு குழந்தைன்னு.. இந்த பத்மாதான் என் மனைவி.. இவளால மட்டுந்தான் இந்த ஹிட்லரோட குப்ப கொட்ட முடியும்..’
பத்மா இந்த வார்த்தைகளால் மேலும் உணர்ச்சிவசப்பட்டு மதனின் கால்களில் விழப்போனாள். அவளை தடுத்து நிறுத்தியவனின் தோள்களில் சாய்ந்துக்கொண்டு குரலெடுத்து அழ.. மரகதம் ஒரு நாண புன்னகையுடன் வெளியேறி தன் பேத்தியினருகில் சென்று அமர்ந்தாள். ‘பார்த்தியா கண்ணு.. நீ சாமிகிட்ட வேண்டனது கிடைச்சிருச்சி பாத்தியா? உங்கம்மாவ சரியா புரிஞ்சி வச்சிருக்கறது உங்கப்பா தான்.. சரி.. உனக்கு என்ன வேணும்? அம்மே செஞ்சி போடறேன்.’
***
மாணிக்கம் நம்ப முடியாமல் தன் தாயையும் தந்தையையும் மாறி மாறிப் பார்த்தான். ‘என்னம்மா சொல்றீங்க? நாம வந்த விஷயத்த மறந்துட்டு என்ன பேசறீங்க? நாம இப்ப ஊருக்கு திரும்பிப் போயி நாங்களே மீனாவுக்கு வேண்டியத செஞ்சிட்டு வந்துட்டோம்னு சொன்னா ஊர்ல காறித் துப்புவாங்க. அவருக்கு இங்க வச்சி செய்ய இஷ்டமில்லன்னா மீனா ஒரு வாரத்துக்கப்புறம் ஊருக்கு கூட்டிக்கிட்டு போயி அங்க வச்சி செய்வோம். அத விட்டுட்டு சடங்கே வேணாம்னா? இங்க பாருங்கம்மா.. நீங்களும் பத்மா மாதிரி பயந்துக்கிட்டு மாப்பிள்ளை சொல்றதுக்கு சரின்னு சொல்லீட்டீங்கன்னு நினைக்கிறேன். நான் பேசறேன்.’
‘டேய் மாணிக்கம். என்ன உங்கம்மா இவ்வளவுதூரம் சொன்னதுக்கப்புறமும் நீ பாட்டுக்கு முட்டாளாட்டம் பேசிக்கிட்டிருக்கே.. நீ முதல்ல பெட்டிய எடுத்துக்கிட்டு ஊர் போய் சேரு..’ தான் இதுவரை கண்டிராத கோபத்துடன் தன் முன் நின்ற தன் தந்தையைப் பார்த்து திடுக்கிட்டான் மாணிக்கம்.
கோபத்தால் சிவந்து நின்ற தன் கணவனின் கண்களைப் பார்த்த மரகதம் பதற்றத்துடன் எழுந்து அவருடைய தோள்களைப் பற்றினாள். ‘ஐயோ நீங்க என்னங்க? டாக்டர் சொன்னத மறந்துட்டீங்களா? பேசாம உக்காருங்க. டேய் மாணிக்கம். ஒன்னும் பேசாம, கிளம்பு. இப்பவே போனீனா ராத்திரிக்குள்ள ஊர் போய் சேர்ந்துரலாம். இப்போதைக்கு ஊர்ல யார்கிட்டயும் ஒன்னும் சொல்ல வேணாம். ரெண்டு நாள்ல நாங்க ரெண்டு பேரும் வந்தப்புறம் என்ன சொல்லலாம், எப்படி சொல்லலாம்னு யோசிக்கலாம். அப்பாவ வீணா கோபப்படுத்தி ஒன்னு கெடக்க ஒன்னு பண்ணிராத. போ.. குளிச்சிட்டு கிளம்பு..’
‘ஆமா.. அப்பாவுக்கு ஏதாவது வந்துரும்னு சொல்லியே மாப்பிள்ளை சொல்ற எல்லாத்துக்கு பணிஞ்சி போயிருங்க.. அது அவருக்கும் தெரியனுமில்லே.. அவர் பாட்டுக்கு தான் புடிச்ச முயலுக்கு மூனே காலும்பாரு.. நீங்களும் தலைய தலைய ஆட்டிக்கிட்டு நிப்பீங்க.. எப்படியோ போங்க.. அங்க போனா எம்பொண்டாட்டி என்ன குதி குதிக்க போறாளோ, தெரியல..’
பத்மா கோபத்துடன் முனகும் தன் சகோதரனைப் பார்த்தாள். ‘அண்ணே, அவர் கோபம் அடங்கட்டும். மீனாவுக்கு பரீட்சை முடிஞ்சதும் அவர்கிட்ட சமாதானமா பேசி ஊருக்கு கூட்டிக்கிட்டு வரேன். அங்க வச்சி என்ன செய்யணுமோ செஞ்சிரலாம்.. நீங்க இப்ப போங்க.. அப்பாவுக்காகவாவது பொறுத்துக்கிட்டு போங்கண்ணே..’
மாணிக்கம் திரும்பி அவளைக் கேலியுடன் பார்த்தான். ‘ஆமா.. எங்க கிட்ட புத்திசாலித்தனமா பேசு.. அவரப் பார்த்ததும் கோட்ட விட்டுரு.. நல்ல புருஷன்.. நல்ல பொஞ்சாதி.. எப்படியோ போ..’
மரகதம் குறுக்கிட்டு.. ‘ஏய் பத்மா.. அதெல்லாம் அப்புறம் பாக்கலாம். நீயா ஏதாச்சும் சொல்லிட்டு இவன் போய் அங்க அதே மாதிரி சொல்லி வைக்கப் போறான். போய் மதிய சமையலுக்கு என்ன வேணும் பார்.. நான் போய் வாங்கிட்டு வாரேன். ரெண்டு நாளைக்கு இருந்து பிள்ளைக்கு வாய்க்கு ருசியா செஞ்சி போட்டுட்டு போறேன். மத்தத அப்புறம் பாத்துக்கலாம். மாப்பிள்ளைக்கு பிடிக்காத எதையும் செய்ய வேணாம். சாதி சனங்க கிட்ட என்ன சொல்லணுங்கறது அப்பாவுக்கு தெரியும். டேய் மாணிக்கம்! நீ சும்மா பேசிக்கிட்டிருக்காம கிளம்புறா..’ என மாணிக்கம் வேண்டா வெறுப்புடன் குளியலறைக்குள் நுழைய கிளம்ப பத்மா அடுக்களைக்குள் புகுந்தாள்.
***
'மதறாசிலிருந்து அறுநூறு கிலோ மீட்டர் தொலைவில் வங்காள வளைகுடாவில் மையம் கொண்டிருந்த சூறாவளி காற்று இன்று பகல் மதராஸ் நகர் அருகே கரையை கடக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென இன்று அதிகாலை நேரப்படி அது முழுவதும் வலுவிழந்ததென மதறாஸ் வானிலை நிலையம் அறிவிக்கிறது. ஆகவே கடந்த இரண்டு நட்களாக நம் நகரத்துக்கு வருவதாகவிருந்த பேராபத்து நீங்கியது."
அடுக்களையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி வழியாக ஒலித்த வானிலையறிக்கையைக் கேட்ட வீனா ஒரு குறும்புப் புன்னகையுடன் தன் தாத்தாவைப் பார்த்தாள். ‘தாத்தா, நம்ம வீட்டையும் பயமுறுத்திக்கிட்டிருந்த புயல் ஒன்னுமில்லாம போயிருச்சில்ல?’
‘சீ போக்கிரி. உங்கப்பா கேட்டா கொன்னுருவாரு.’ என்று தன் தலையில் குட்ட வந்த தாத்தாவின் கையில் அகப்படாமல் கட்டிலிலிருந்து இறங்கி ஓடிய வீனா அறை வாசலில் நின்ற மதன்மேல் மோதி நின்றாள்.
‘ஐயோ.. அப்பா..’ என்றவள் தன் தந்தையை நிமிர்ந்து பார்த்தாள். ‘புயல்னு நா உங்கள சொல்லைப்பா. மாமாவைத்தான் சொன்னேன். அவங்க ஊருக்கு திரும்பி போயிட்டாங்கள்ள? அதத்தான் அப்படி சொன்னேம்பா’ என்றாள்.
மதன் சிரித்தான். ‘ஏய் ரவுடி.. நீ யார சொன்னேன்னு புரிஞ்சிக்காத அளவுக்கு நா முட்டாள் இல்லே..’ என்றவாறே வீனாவின் காதைப் பிடித்து செல்லமாக திருகினான். ‘எப்படியோ இந்த கலாட்டாவுக்கு நடுவுல நீ ஸ்கூலுக்கு போகாம மட்டம் போட்டுட்டே.. சரி.. கொட்டம் அடிச்சது போறும்.. வா வந்து புஸ்தகத்த எடு..’
வீனா அவனைக் கட்டிப் பிடித்து.. ‘அப்பா.. நீங்க செல்லம்லே.. இன்னைக்கி மட்டும் படிப்பிலருந்து லீவு தாங்கப்பா.. ப்ளீஸ்.’ என்று கெஞ்ச மதன் சிரித்தவாறே அவளுடைய தலையில் லேசாக குட்டினான். ‘திருடி.. அப்பாவை எப்படி சமாளிக்கறதுன்னு நல்லா படிச்சி வச்சிருக்கே.. சரி நீ கேட்டா மாதிரி இன்னைக்கி முழுசும் லீவ் சாங்க்ஷண்டு.. போ.. போயி அக்காகிட்ட உக்கார்ந்து பேசிக்கிட்டிரு..’
துள்ளிக்குதித்துக்கொண்டு ஓடிய வீனா தன் அக்காவைப் பார்த்து .. ‘அப்பா ஹிட்லர்தான்.. ஆனா நல்ல ஹிட்லர்.' என்றாள் உரத்த குரலில் அடுக்களையிலும் படுக்கையறையிலும் இருந்த அனைவருக்கும் கேட்கும்வண்ணம்.
அடுக்களையிலிருந்த பத்மா ஒருவித அச்சத்துடன் எட்டி படுக்கறை வாசலில் நின்ற மதனைப் பார்த்தாள். அதே நேரத்தில் திரும்பி தன் மனைவியைப் பார்த்த மதன், ‘உன்னை மாதிரி இல்லடி உன் பிள்ளைங்க.. ரெண்டும் ஊரையே வித்துறும்..’ என்றான் சிரித்தபடி..
படுக்கையறை கட்டிலில் அமர்ந்திருந்த தங்கபாண்டி தன் மனைவியைப் பார்த்தார். மரகதம் புன்னகையுடன் தலையை அசைத்தவாறு மதனைப் பார்க்க மூவர் முகத்திலும் புன்னகை விரிந்தது!
முற்றும்
Subscribe to:
Posts (Atom)