அன்று பகல் காவல்துறை அத்துமீறி கல்லூரி வளாகத்தினுள் நுழைந்து பரத்தை கைது செய்ததை எதிர்த்து டேவிட் தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாணவர்களை ஒட்டுமொத்தமாக காவல்துறையினரின் உதவியுடன் கல்லூரியிலிருந்து அகற்றியிருந்தது. ஆயினும் கல்லூரி வாசலில் நின்று தொடர்ந்து ட்ட மாணவர் காவல்துறை கும்பலை வேனில் அள்ளிக்கொண்டு செல்ல மறியலில் நேரடியாக பங்குபெறாவிட்டாலும் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த ப்ரியா, சுந்தர் போன்றவர்களையும் கல்லூரி நிர்வாகம் கல்லூரியிலிருந்து இருவாரங்களுக்கு சஸ்பெண்ட் செய்துவிடவே என்ன செய்வதென தெரியாமல் கல்லூரி வாசலில் நின்றிருந்தாள் ப்ரியா.
ஏற்கனவே அன்று காலையில் தன் தாயுடன் நடந்து முடிந்திருந்த வாக்குவாதம் வேறு அவளை நிலைகுலை செய்திருந்தது. இனியும் தன் தாயுடன் ஒரே வீட்டில் இருக்க முடியுமா என்பதிலேயே கல்லூரிக்கு வரும் வழியெல்லாம் அவளுடைய மனம் உழன்றுக்கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் ஜோதிகா கூறிய அறிவுரையும் அவளுக்கு நினைவு வரவே ஜோதிகாவிடம் தன்னுடைய நிலைமையை விளக்கிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிவிட வேண்டுமென்று என்ற தீர்மானத்துடந்தான் கல்லூரிக்கே வந்திருந்தாள் ப்ரியா.
அவள் இருந்த மனநிலையில் கல்லூரியில் நடந்த மறியலில் கலந்துக்கொள்ள வேண்டுமென்று தோன்றவில்லை. ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக சம்பவங்கள் நடந்துமுடிந்துவிட தன்னுடைய தலைவிதியை நொந்துக்கொண்டு கல்லூரி பேருந்தும் இல்லாத நிலையில் எங்கு செல்வது, எப்படி செல்வது என்பது புரியாமல் நின்றிருந்தவள் துக்கம் மேலிட முகத்தை மூடிக்கொண்டு விசும்ப துவங்கினாள் தன்னையுமறியாமல்.
அவள் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி நின்றிருந்த சுந்தர் அவளை தயக்கத்துடன் திரும்பி பார்த்தான். அவனுடன் சிறு கும்பலாக நின்றிருந்த மாணவர்களுள் ஒருவன் 'தோ பார்றா.... இதுக்கெல்லாம் போயி எமோஷனலாயி எல்.கே.ஜி பொண்ணாட்டம் அழுவறத...' என்றான் கேலியுடன்.
ப்ரியாவின் காதுகளில் அவனுடைய கேலி பேச்சு விழ சட்டென்று மூண்ட கோபத்தில் அவனை நெருங்கி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
'Mind your business....' என்றாள் கோபம் அடங்காமல்.
இதை எதிர்பாராத மாணவன் கன்னத்தை பிடித்தவாறு அங்கிருந்த அகல அவனுடன் நின்றிருந்த மாணவ கும்பல் அதிர்ச்சியுடன் ப்ரியாவை பார்த்தது.
சுந்தர் என்ன நினைத்தானோ, 'என்ன ப்ரியா இப்படி செஞ்சிட்டீங்க... Control yourself...' என்றான் தன்னையுமறியாமல்.
'மிஸ்டர், ஒங்க வேலைய பாத்துக்கிட்டு போங்க...'
இதை சுந்தர் எதிர்பார்க்கவில்லையென்பது அவன் சட்டென்று விலகி நடந்ததிலிருந்தே தெரிந்தது. அவனைத் தொடர்ந்து குழுமியிருந்த மாணவர் கும்பல் அவளை வெறுப்புடன் பார்த்துவிட்டு கலைந்து செல்ல ஒரு நிமிடத்தில் தன்னையிழந்து நடந்துக்கொண்ட விதத்திற்காக தன்னையே
நொந்துக்கொண்டு நின்றாள் ப்ரியா....'ச்சே.... What a stupid thing to do.... சுந்தர் சொன்னாமாதிரி I should have controlled myself... என் ப்ராப்ளம் கமெண்ட் அடிச்சவனுக்கு தெரிய சான்ஸ் இல்லையே.... இப்ப என்ன பண்றது? காலேஜுக்குள்ளயும் போமுடியாது... ஜோதிகாவையும் வேன்ல ஏத்திக்கிட்டு போய்ட்டாங்க... ஸ்டேஷன் வரைக்கும் கொண்டுபோயிருப்பாங்க போலருக்கு... போலீஸ் ஸ்டேஷன் எங்கருக்குன்னு தெரிஞ்சாலாவது போய் பாக்கலாம்...'
சுற்றும் முற்றும் பார்த்தாள். கல்லூரியை தவிர வேறெந்த கட்டிடங்களும் அருகில் இல்லாததால் தூரத்தில் சென்றுக் கொண்டிருந்த ஓரிருவர்களைத் தவிர ஆள் அரவம் இல்லாமல் பகல் பொழுதிலும் அச்சத்தை உண்டுபண்ணியது. தனக்கு முன்னால் சாலையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த சக மாணவர்களை பார்த்தாள். இவர்களுடன் சேர்ந்து சென்றால்தான் தனக்கு பாதுகாப்பு என்பதை உணர்ந்தவளாய் துப்பட்டாவால் முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டு சாலையை நோக்கி நடந்தாள்.
தனக்கு முன்னால் சென்ற மாணவ கும்பல் நான்கைந்து சிறு குழுக்களாக பிரிந்து சற்று முன் நடந்த சம்பவங்களை அலசியவாறு கல்லூரியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த நகர பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க அவர்களிடமிருந்து சற்று தொலைவில் நடந்து பேருந்து நிலையத்தை ப்ரியா அடைந்தபோது களைத்துப்போயிருந்தாள். காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருந்ததோ அல்லது சுட்டெரிக்கும் வெயிலில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்துவந்ததோ அல்லது அவள் இருந்த மனநிலையோ பேருந்து நிலைய வாசலில் மயங்கி விழுந்தாள்.
அதற்குப் பிறகு அவள் கண்விழித்தபோது பேருந்து நிலையத்திலிருந்த இருக்கைகளுள் ஒன்றில் அவளும் அவளுக்கெதிரில் சுந்தரும் அவனுடன் சற்று முன்பு அவள் கோபித்துக்கொண்ட சக மாணவர்களும்.....
பேருந்துகளுக்காக காத்திருந்தவர்களுள் பலரும் தன்னை நோக்கி பார்ப்பது தெரிய கலைந்துக் கிடந்த ஆடைகளை சரிசெய்துக்கொண்டு எழுந்திருக்க முயன்று முடியாமல் இருக்கையிலேயே அமர்ந்தாள். 'எனக்கு என்னாச்சி?' என்றாள் நடுங்கும் குரலில்.
'எழுந்துக்காதீங்க இத குடிங்க.. வெயில்ல நடந்துவந்த களைப்புன்னு நினைக்கேன். மயங்கி விழுந்துட்டீங்க... நம்ம ஸ்டூடன்ஸ்தான் உங்கள இங்க
கொண்டு வந்து ஒக்கார வச்சோம்... இப்படியே கொஞ்ச நேரம் ஒக்காந்து இருந்தீங்கன்னா சரியாயிரும்னு நினைக்கேன்.' என்று பதிலளித்த சுந்தர் எழுந்து நின்றான்.
குழுமியிருந்த மாணவ, மாணவிகள் பலரும் ஒருவித கேலியுடன் தன்னை பார்ப்பதுபோல் உணர்ந்தாள் ப்ரியா. ஆனாலும் சுந்தரின் கரிசனம் அவளை தொட்டது. 'Thanks Sundar....' என்றாள் மெல்லிய குரலில். பிறகு தன்னை சூழ்ந்து நின்ற மாணவர்களைப் பார்த்தாள். 'I feel ashamed of myself for what happened at the College. Sorry friends..'
மாணவர்கள் குழு சட்டென்று நடந்ததை மறந்து புன்னகைத்தது. 'It's OK.' என்றான் சுந்தர் உடனே. 'ஒங்களால பஸ்ல போக முடியுமா இல்ல ஆட்டோ ஏதாச்சும் வேணுமா?'
ப்ரியா மெல்லிய புன்னகையுடன் அவனை நன்றியுடன் பார்த்தாள் 'If you could get me an auto...'
'I'll do that' என்றவாறு சுந்தர் கூட்டத்திலிருந்து விலகி ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தான். 'பார்றா... இதான் சாக்குன்னு இவன் லைன்
போடறத? காலேஜ் தொடங்குன நாள்லருந்து இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்தான்... திடீர்னு ஹீரோவாய்ட்டான்... ஹூம்...' என்றது கும்பலிலிருந்து ஒரு குரல்...
ப்ரியாவின் உதடுகளில் அவளையுமறியாமல் ஒரு புன்னகை விரிந்தது... ஆட்டோ ஸ்டாண்டில் நின்றிருந்த ஒரு ஆட்டோ டிரைவரிடம் அவளை நோக்கி சைகை செய்து பேசிக்கொண்டிருந்த சுந்தரைப் பார்த்தாள்...
அதன் பிறகு ஆட்டோவில் ஏறவும் அவள் சிரமப்பட, 'பிரதர் இவ்வளவு செஞ்சீங்க கூடவே போய் வீட்ல ட்ராப் பண்ணிருங்க...' என்றவாறு சில மாணவர்கள் கிண்டலடித்தது.... இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் சங்கடத்துடன் சுந்தர் அவளைப் பார்த்தது... 'வாங்களேன் ப்ளீஸ்'
என்பதுபோல் அவள் அவனைப் பார்த்தது... பிறகு தயக்கத்துடன் அவளுடன் ஆட்டோவில் அவன் ஏறியது.... தன்னையுமறியாமல் தன்னுடைய பிரச்சினைகளை ஒன்றுவிடாமல் அவனிடம் கொட்டி தீர்த்தது.. அவளை தடை செய்யாமல் முழுவதையும் அனுதாபத்துடன் கேட்டுவிட்டு...
இறுதியில்.. 'I fully understand your problems Priya....Give me one or two days.. I will try to help you. ஒங்க மொபைல் நமபர மட்டும் குடுங்க...If you don't mind.' என்று பதிலளித்தது....
'நான் முதல்ல சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொல்றான்னு நினைச்சேன் ஜோதி. ஆனா அடுத்த நாளே என்னெ மொபைல்ல கூப்ட்டு ------- டிவி ஸ்டேஷன் அட்றச குடுத்து 'இங்க போய் ப்ரேமா மேடம்னு கேளுங்க... அவங்கக்கிட்ட ஒங்களபத்தி சொல்லியிருக்கேன்.. She will help you.' னு சொன்னப்ப கூட நா நம்பல. இருந்தாலும் போய்த்தான் பாப்பமேன்னு போனேன். ப்ரியா மேடம்னு சுந்தர் சொன்னவங்கள நீ கூட டிவியில பாத்துருப்பே... வாரம் ஒரு சினி ஆக்ட்ரோட சேந்து ப்ரோக்ராம் குடுப்பாங்க... டிவியில பாக்கறத விட யங்கா, செகப்பா... She was very sweet when I introduced myself....போன அன்னைக்கே ஒரு ஸ்க்ரீன் டெஸ்ட்டுன்னு சொல்லி ஒரு ஷீட்ட கைல குடுத்து இதுலருக்கற மனப்பாடம் செஞ்சி சொல்லுன்னு சொன்னாங்க... எனக்கு எப்படியும் அந்த வேலை வேணும்னு ஒரு வைராக்கியம்... ஒரே டேக்குலயே ஓக்கே ஆயிருச்சி... டேக் முடிஞ்சதும் அந்த மேடம் என்னெ கட்டிபுடிச்சிட்டு ஒன் வயசுலதாம்மா நானும் இந்த ஃபீல்டுக்கு வந்தேன்.. நா அப்ப இருந்தா மாதிரியே நீ இருக்கேன்னு சொன்னப்ப I was very thrilled Jothi...'
அவள் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்பதுபோன்ற முகபாவனையுடன் அவளை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் ஜோதிகா...
சட்டென்று நினைவுக்கு வந்தவளாய் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள் நான்கு மணியை கடந்திருந்தது. ஏறக்குறைய ஒரு மணி நேரம்! நேரம் போனதே தெரியவில்லை...
'என்னடி அப்படி பாக்கறே... நம்ப முடியல இல்ல?'
'ஆமாடி... ஆனா நம்பித்தான ஆவணும்? காலையில ஒன்னெ பாக்கறப்பவே என்ன இது இவ்வளவு பளிச்சின்னு இருக்கான்னு நெனைச்சேன்... எப்படியோ நீ சந்தோஷமா இருக்கறத பாத்து மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடி.' என்றவாறு எழுந்து நின்றாள் ஜோதிகா. 'ஏய் ஒரு மணி நேரத்துக்கும் மேல இங்க ஒக்காந்துருந்துருக்கோம் இப்பவே கெளம்புனாத்தான் அப்பா வர்றதுக்குள்ள நா வீடு போய் சேர முடியும்...'
அப்போதுதான் தன்னுடைய வாட்சைப் பார்த்தாள் ப்ரியா. 'ஏய் ஆமாடி....' என்றவள் பதற்றத்துடன், 'ஐயையோ... அந்த ஆட்டோ டிரைவர்...' என்றவாறு பூங்கா வாசலை நோக்கி ஓடினாள். ஆட்டோ நின்றிருந்த இடம் காலியாயிருந்தது. 'ச்சே.. பணத்து குடுத்துட்டாவது போயிருக்கலாம்...'
'என்னடி ஆட்டோவையே காணோம்... நொந்துபோயி போய்ட்டார் போலருக்கு... சரி வா வேற ஒரு ஆட்டோவ புடிப்போம்... ஒன்னெ இறக்கிவிட்டுட்டு நா போறேன்....' என்றவாறு ஜோதிகா சாலையில் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ நோக்கி கையசைத்தாள்...
இருவரும் சிறிது நேரம் மவுனமாக பயணித்தனர். சட்டென்று, 'ஏய் ஒங்கிட்ட சொல்ல மறந்துட்டேன்...' என்றாள் ப்ரியா.
'என்ன... மூவி ஆஃபர் ஏதாச்சும் வந்துருக்கா?' என்றாள் ஜோதிகா கிண்டலுடன்..
'ச்சீ இல்லடி... அந்த ப்ரேமா மேடம் யார் தெரியுமா?'
'எனக்கென்ன தெரியும்?'
'நம்ம சுந்தரோட அம்மா....'
ஜோதிகா திடுக்கிட்டு தன் தோழியைப் பார்த்தாள். 'என்னடி சொல்றே?'
'ஆமாடி... ஆனா அவங்கதான் நம்ம சுந்தரோட பிரச்சினையே....'
'அப்படீன்னா?'
'We are in the same boatடுன்னு சொன்னனே....'
'ஆமா...'
'எங்கம்மா மாதிரிதான்... ஆனா இது வேற மாதிரி...'
'என்னடி சொல்றே? ஒன்னும் புரியல... This is differentடுன்னு tomatto ketchup ஆட்ல சொல்றா மாதிரி இருக்கு...'
'ஏய் வெளையாடாத... I am serious...'
‘சொல்லு...’
தொடரும்...
4 comments:
sir enna aachu?? almost 2 months aaga porathu??
Sorry Narasimhan, I am frequently on tour as one of our Projects is in the implementation stage. I hope to resume in about a month's time. Please bear with me.
Sorry Narasimhan, I am frequently on tour as one of our Projects is in the implementation stage. I hope to resume in about a month's time. Please bear with me.
enna sir 5 months aaga porathu??? innum netru namathaey range la thaan irukku.. velai bend edukuthaa??
Post a Comment