'எனக்கு நாளைக்கு கவுன்சிலிங்டா. நாம எந்த காலேஜ்ல சேரணுங்கறத இன்னைக்கி டிசைட் பண்ணிறணும்... அதுக்குத்தான் ஒங்கள மறுபடியும் வரச்சொன்னேன்.' என்றான் பரத்.
அவனுடைய நண்பர்கள் பலரும் கவுன்சிலிங் துவங்கி ஒரு வாரத்திற்குப் பிறகுதான் செல்ல முடியும் என்பதால் அவர்கள் சேரவிருக்கும் கல்லூரியையே எப்படி அவனும் தெரிவு செய்வது என்பதை தீர்மானிக்க மீண்டும் என்ற எண்ணத்துடன் அவனுடைய நண்பர்கள் குழுவுடன் அமர்ந்து விவாதத்தில் ஈடுபட்டான்.
'அதெப்படிறா இப்பவே டிசைட் பண்றது? நீ போற டைம்ல சீட் இருக்கற காலேஜுங்கள்ல நாங்க போறப்போ சீட் இல்லன்னா?' என்றான் பரத்தின் நெருங்கிய சிநேகிதனான கணேஷ்.
பரத் சிரித்தான். 'டேய் டென்ஷனாகாத.. அதுக்குத்தான் நேத்தைக்கி நானும் அப்பாவும் ஒக்காந்து ராத்திரி முழுசும் நெட்டுல தேடி ஒரு நாலஞ்சி காலேஜ் செலக்ட் பண்ணிருக்கோம்... இந்த காலேஜஸ்ங்கதான் போன வருசம் அவங்கக்கிட்டருக்கற சீட்டுங்கள்ல எழுபத்தஞ்சி பெர்சண்ட் அண்ணா யூனிவர்சிட்டி கவுன்சிலிங்குக்கு அலாட் செஞ்சிருக்காங்க.. அதனால நீங்க போறப்போ இங்கல்லாம் நிச்சயமா சீட் இருக்கும்... எல்லாமே சபர்ப்லதான் இருக்கு... ஒவ்வொரு காலேஜ்லருக்கற ஃபெசிலிட்டீஸ், போன ரெண்டு வருசத்தோட ரிசல்ட் எல்லாத்தையும் நானும் அப்பாவும் ஒக்காந்து அனலைஸ் பண்ணி ஒரு குட்டி ரிப்போர்ட்டே ரெடி பண்ணிருக்கேன்... மொதல்ல அத வாசிக்கறேன்... அப்புறமா டிஸ்கஸ் பண்ணி டிசைட் பண்லாம். ஓக்கேவா?'
நண்பர்கள் குழு ஒருவர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டது... பிறகு ஒருவன், 'சரிடா, நீ வாசி, கேப்போம்... நீ எது சொன்னாலும் சரியாத்தான் இருக்கும்.. அப்புறமா தேவைப்பட்டா டிஸ்கஸ் பண்ணிக்கலாம்...' என்றான்.
பரத் புன்னகையுடன் தன் கையில் இருந்த அறிக்கையைப் பார்த்தான்...'அதுக்கு முதல்ல நாம என்ன கோர்ஸ் எடுக்கணும்னு ஒரு டிசிஷன் எடுத்துருப்போம் இல்லே அதச் சொல்லுங்க, கேப்போம்... முதல்ல நா சொல்லிடறேன்.. எனக்கு மெக்கானிக்கல்... கணேசன் சி.எஸ்.சிதான்னு ஏற்கனவே சொல்லியிருக்கான்... மத்தவங்க என்ன எடுக்க போறீங்க?'
ஒரு நொடி மவுனத்திற்குப் பிறகு ஒவ்வொரு திசையிலிருந்து ஒவ்வொரு பிரிவின் பெயர்கள் ஒலிக்க பரத் தன் கையை உயர்த்தி, 'டேய்... டேய்... இப்படி சொன்னா ஒன்னும் புரியாது...' என்றான்... 'நா ஒவ்வொரு கோர்சா படிக்கேன்... வேணுங்கறவன் கைய தூக்குங்க.'
அதுவும் சரிதான் என்று கூட்டம் ஆமோதித்தது...
சி.எஸ்.சி - ஏறக்குறைய எழுபது சதவிகிதம் கைகள் உயர்ந்தன...
பரத் சிரித்தான்... 'என்னடா எல்லாருமே சாஃப்ட்வேர் எஞ்சினியராப் போகப் போறீங்களா?'
'என்ன பண்றது பாஸ்? அதுக்குத்தான ஃப்யூச்சரே இருக்குன்னு சொல்றாங்க... அத்தோட எடுத்தவுடனேயே டீசண்டான சாலரியும் கிடைக்குதாமே..' என்றான் எப்போதுமே கிண்டலடிக்கும் ஒருவன்.
'ஆமா பரத்... மிட்ல் க்ளாஸ் ஃபேமிலிலருந்து வர்ற எங்கள மாதிரி பசங்களுக்கு படிச்சி முடிச்சவுடனெயே வேல கிடைக்கணும்னா இந்த மாதிரி கோர்ஸ்தாண்டா சரியாருக்கும்...' என்றான் கணேசன்...
குடும்பத்திற்கு மூத்தவனான அவனுடைய ஊதியத்தை நம்பி ஒரு பெரிய குடும்பமே இருப்பது பரத்துக்கு தெரிந்திருந்தது. 'எனக்கு தெரியும்டா... நா சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்... ஆனா எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜின்னு நிறைய கோர்ஸ் இருக்கேடா... அதுலயும் சாஃப்ட்வேர் எஞ்சினீயரிங் மாதிரியே ஸ்கோப் இருக்குமே... Why can't some of you try that?'
'ட்ரை பண்ணி பாக்கறதுல தப்பில்ல பரத்... ஆனா படிச்சி முடிச்சதுமே கேம்பஸ்ல வேலை கிடைக்கலன்னு வச்சிக்கோ அப்புறம் யாரு வீட்ல திட்டு வாங்கறது? ஒங்கப்பா மாதிரி ஒரு அண்டர்ஸ்டாண்டிங் அப்பா இல்லையேடா எங்கப்பா... இப்பவே தெண்ட சோறுன்னு திட்டறாரு... இதுல படிச்சி முடிச்ச வருசமே வேல கிடைக்கலன்னு வச்சிக்கோ... அவ்வளவுதான் வீட்டுக்குள்ளவே விடமாட்டார்...'
'ஆமாடா... இவன் சொல்றது சரிதான்.. எங்க வீட்லயும் இதே கதைதான்...' என்று அறை எங்கும் குரல்கள் எழும்ப பரத்தின் கண்கள் அவனையுமறியாமல் கலங்கின... எத்தன குடுத்து வச்சவன் நான்... அப்பா என்னைக்காவது ஒரு வார்த்த கடிஞ்சி சொல்லிருப்பாரா? நீ எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும் பரத்... You don't need my permission... நீ என்ன செஞ்சா ஒனக்கு நல்லதுன்னு நீயே முடிவு எடுக்க பழகிக்கணும்... அம்மாவும் அப்படித்தான்... எனக்குக் கூட அம்மாவ குடும்பத்த விட்டு பிரிச்சி கல்யாணம் பண்ணிக்கணும்னான்னு ஒரு டயலமா இருந்திச்சி... ஆனா அம்மா ரொம்ப தெளிவா இருந்தா... என்னோட வாழ்க்கை எனக்குத்தாங்கற ஒரு தெளிவு... ஒரு கொழந்த பொறந்தா நம்ம உயிருக்கே ஆபத்துன்னு தெரிஞ்சும் ஒரு கொழந்தைய பெத்துக்கணும்கற தெளிவு... அத எந்த ஒரு காரணத்துக்கும் அந்த பிரச்சினைய தன் கணவன்கிட்டக் கூட பகிர்ந்துக்கறதில்லங்கற ஒரு தெளிவு... அவ எடுத்த முடிவு எனக்கு தப்புன்னுதான் தோனுது... ஆனா அம்மாவுக்கு? She felt that her decision was absolutely right... So, she stood by that.. பிரவசத்துலயே நம்ம உயிர் போறதுக்கு சான்ஸ் இருக்குன்னு தெரிஞ்சும் அப்படியொரு டிசிஷன் எடுக்கறதுக்கு எவ்வளவு மனதைரியம் வேணும்...? She had that.... கன்னு போட்டதுமே செத்துப்போற வாழ மரம் மாதிரி... நா இல்லன்னாலும் பரத்துக்கு ஒங்களால ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சிக் குடுக்கமுடியும்னு எனக்கு தெரியும் சேகர் அந்த தைரியம்தான் இப்படி ஒரு டிசிஷன் எடுக்கறதுக்கு எனக்கு ஒரு ஸ்டிமுலெண்டா இருந்ததுன்னு அம்மா டெத் பெட்ல சொன்னத என்னால மறக்கவே முடியல பரத்... அத எந்த அளவுக்கு நான் செஞ்சிருக்கேன்னு தெரியல.. ஆனால் ஒன்னெ ஒரு செல்ஃப் ரிலையண்ட் பையனா வளத்துருக்கேன்னு நினைக்கேன்... So try to take decisions on your own... I am always available for consultation... not advice...'
'டேய்... பரத்... என்ன திடீர்னு சைலண்டாய்ட்டே....'
நண்பர்களின் குரல் அவனை நினைவுகளிலிருந்து மீட்டு வந்தது... 'சாரி... ஃப்ரெண்ட்ஸ்... அப்பா எப்பவோ சொன்னது.... நீங்க ஒங்கப்பாவப் பத்தி சொன்னதும்.... சரி... மேல பாக்கலாம்...' என்றவன் மீண்டும் தன் கையிலிருந்ததைப் பார்த்தான்... 'நா என்ன சொல்ல வரேன்னா சி.எஸ்.சி மாதிரியே நான் சொன்ன கோர்ஸ்சுலயும் ஜாப் அப்பர்சூனிட்டி இருக்கு... அப்பா சொல்லிருக்கார்... அதனாலத்தான் சொன்னேன்...'
'நீ சொல்றதும் சரிதாண்டா... ஆனா அத ட்ரைப் பண்ணி பாக்கறதுக்கு எங்களுக்கு தைரியம் இல்லேன்னு வச்சிக்கயேன்...' என்றான் கணேசன்...
'சரி அத விடு பரத்.. ஏதோ காலேஜஸ் செலக்ட் பண்ணிருக்கேன்னு சொன்னியே... அந்த லிஸ்ட்ட படியேன்...'
பரத் முந்தைய தினம் வலைத்தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்த கல்லூரிகளின் பெயர்களை வாசித்தான்..
'நா கடைசியா சொன்னா மூனு காலேஜஸ் எல்லாம் ஒரே க்ரூப்ப சேர்ந்ததுன்னு நினைக்கேன்... காலேஜ் கேம்பஸ்சும் பக்கத்துல, பக்கத்துல இருக்கு... மூனு காலேஜசும் சேர்த்து கவுன்சிலிங்குக்கே ஏறக்குறைய ஐநூறு சீட்டுங்க அலாட் பண்ணிருக்காங்க... போன ரெண்டு வருசத்துல அவங்க காலேஜஸ்ல ஏறக்குறைய எல்லா சீட்டுங்களுமே, அதாவது கவுன்சிலிங்குக்கு சரண்டர் பண்ண சீட்டுங்க, ஃபில்லாயிருக்கு.... நா கொஞ்ச நேரத்துக்கு முன்னால சொன்னேனே அந்த கோர்ஸ் எல்லாமே இந்த காலேஜஸ்ல இருக்கு... அத்தோட ட்ரிப்பிள் ஈ, இன்ஸ்ட்ருமெண்டேஷன், ஐ.டில பி.டெக் கோர்ஸ்சல்லாம் கூட இருக்காம்...'
'சரிடா... அவங்க infrastructure எப்படி? லேப் எல்லாம் இருக்குமா... போன வருசம் என் ஃப்ரெண்ட் சேந்த காலேஜ்ல லேப்னு பேருக்குத்தான் இருக்காம்.. மொத்தமா இருபது பி.சி கூட லேப்ல இல்லையாம்.. ஒவ்வொருத்தனும் அத யூஸ் பண்றதுக்கே க்யூவுல மணிக் கணக்கா நிக்கணுமாம்...' என்றான் கணேசன்..
பரத் புன்னகயுடன் அவனைப் பார்த்தான்... 'நீ சொல்றது உண்மைதாண்டா... ஆனா சைட்டுல பாத்த வரைக்கும் இந்த காலேஜ் லேப்ல நூறு பிசி இருக்காம்... இண்டெர்நெட்டுக்குன்னு அவங்க காலேஜ் காம்பஸ்லருந்து வி.எஸ்.என்.எல் வரைக்கும் ரெண்டு எம்பிபிஸ் லைன் எடுத்துருக்காங்களாம்.. மொத்த காம்பசும் சேத்து அம்பது ஏக்கருக்கு மேல இருக்காம்டா... எல்லாத்தையும் டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன்.. ஆளுக்கு ஒரு காப்பி கூட எடுத்து வச்சிருக்கேன்.. போறப்ப தரேன்... அதனால இந்த காலேஜஸ்ல எதுலயாவது ஒன்னுல பேமெண்ட் சீட் எடுக்கலாம்னு அப்பாக் கிட்ட சொன்னேன்... ஒன் இஷ்டம்னு சொல்லிட்டார்...'
கணேசன் வியப்புடன் தன் நண்பனைப் பார்த்தான். 'பேமெண்ட் சீட்டா? எதுக்குடா... அதான் ஒன் மார்க்குக்கு ஃப்ரீ சீட்டே கிடைக்குமே?'
'அதானே...' என்றது நண்பர்கள் குழு கோரசாக...
பரத் இல்லையென்று தலையை அசைத்தான்... 'இல்லடா.... அப்பாக்கிட்ட நா பேமெண்ட் சீட்தான் எடுக்கப் போறேன்னு சொன்னதும் I presumed that... we should not grab free seats...that's for those who are in need..னு ஒரே வார்த்தைல சரின்னு சொல்லிட்டார்....'
அடுத்த ஒருசில நொடிகள் நண்பர்கள் குழு அமைதியாகிப் போனது....
'டேய் பரத்... ஒன்னோட ஃப்ரெண்ட்சுன்னு சொல்லிக்கறதுக்கு எங்களுக்கு ரொம்ப பெருமையாருக்குடா...' என்றான் கணேசன் குரல் தழுதழுக்க....
'ஆமாடா பரத்... நீயும் சரி... ஒங்கப்பாவும் சரி... யூ ஆர் சிம்ப்ளி க்ரேட்..' என்றது நண்பர் குழு ஒருமித்த குரலில்...
தொடரும்...
No comments:
Post a Comment