27.7.07

நாளை நமதே - 20

பரத் அன்று காலை கல்லூரிக்கு கிளம்புவதற்கு முன்பு ஹாலில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த தன் தாயின் புகைப்படத்தின் முன் கண்களை மூடி ஒரு நிமிடம் நின்றான். Be with me Mom throughout these four years... என்று அவனுடைய உதடுகள் முனுமுனுத்தன.

'என்ன பரத் கிளம்பிட்டியா?' என்றவாறு வந்து நின்ற தன் தந்தை ராஜசேகரை திரும்பிப் பார்த்தான்.

'Yes dad...'

அவனுடைய குரலில் இருந்த சோகத்தை புரிந்துக்கொண்ட ராஜசேகர் ஒரு மெல்லிய புன்னகையுடன் அவனுடைய தோளைச் சுற்றி தன் கரத்தை இட்டு வாசலை நோக்கி அழைத்துச் சென்றார். 'I know how you feel Bharath... உன்னுடைய நண்பர்களுக்காகத்தான் யூனிவர்சிட்டியிலயே சீட் கிடைச்சும் இந்த செல்ஃப் ஃபைனான்ஸ் காலேஜ ஆப்ட் பண்ணே.. But நீ நினைச்சது நடக்கல... These things happen... Man proposes God disposes...நாம நெனைக்கறதெல்லாம் நடந்துட்டா லைஃப்ல ஒரு த்ரில் இல்லாம போயிரும் பரத்... சோ, லைஃப் ஹேஸ் டு கோ ஆன்.'

'I know dad... இருந்தாலும் மனசுல லேசா ஒரு வலி... தேவையில்லாம அவனுங்க மனசுல ஒரு ஆசைய ஏற்படுத்தி அத நிறைவேத்தி வைக்க முடியாம போயிருச்சேங்கற ஒரு சின்ன ஏமாற்றம்...'

ராஜசேகர் தன் மகனை பெருமையுடன் பார்த்தார். 'I am really proud of my son... நான் ஒங்கம்மாவுக்கு குடுத்த வாக்க நல்லாவே ஃபுல்ஃபில் பண்ணிருக்கேன் போலருக்கு... ஆல் தி பெஸ்ட்' என்றவாறு பரத்தின் கையிலிருந்த சாவியைப் பார்த்தார். 'பைக்கிலயா போகப்போறே பரத்? இங்கருந்து முப்பது கிலோமீட்டர் இருக்கும் போலருக்கே? காலேஜ் பஸ் இல்ல?'

'இருக்கு டாட்.. ஆனா நாந்தான் பைக்லயே போய்ட்டு வந்துரலாமேன்னு கட்டலை...'

'என்ன பரத்... டெய்லி அப் அண்ட் டவுன் சிக்ஸ்ட்டி கிலோ மீட்டர். தேவையா இது? பேசாம இன்னைக்கே பஸ் ஃபீச கட்டிரு... பணம் தரவா?'

வேண்டாம் என்று தலையை அசைத்தான் பரத். 'வேணாம் டாட்... ஒரு வாரம் போய் பாக்கறேன்... முடியலன்னா கட்டிடறேன்... என்ன சொல்றீங்க?'

ராஜசேகர் விருப்பமில்லாமல் தலையை அசைத்தார். 'உன் இஷ்டம் பரத். ஆனா திங்க் அபவுட் வாட் ஐ செட்...'

பரத் குடியிருப்பின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை முடுக்கி தன் தந்தையைப் பார்த்து கையசைத்துவிட்டு புறப்பட்டு ஒரே சீரான வேகத்தில் கல்லூரி வளாகத்தை அடைந்ததும் ஸ்பீடோ மீட்டரைப் பார்த்தான்... இருபத்தெட்டு கிலோ மீட்டர் என்றது... நாம நினைச்சத விட தூரம்தான்... இந்த டிராஃபிக்ல டெய்லி ஓட்டிக்கிட்டு வர்றதுனா கஷ்டம்தான் போலருக்கு... திரும்பிப் போகும்போது எப்படி இருக்குன்னு பார்ப்பம்... சரி வரலைன்னா பஸ் ஃபீச கட்டிறவேண்டியதுதான் என்று நினைத்தவாறு கண் முன் தெரிந்த கல்லூரி வளாகத்தை நிமிர்ந்து பார்த்தான்.

ஏற்கனவே இணையதளத்தில் பார்த்ததுதான் என்றாலும் கண் முன் விரிந்த கல்லூரியின் பிரம்மாண்டம் அவனை கவர்ந்தது. It must be a good place to be in for the next four years.... Let's hope for the best....

வாசலில் நின்ற இரும்பு கேட்டுக்கு அருகில் வரிசையாக மாணவ, மாணவியர் நிற்பதையும் அவர்களிடமிருந்து செல்ஃபோன்களை வாங்குவதையும் கவனித்தான். பரத்துக்கு செல் ஃபோன் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை. ஆகவே அதைப் பொருட்படுத்தாமல் இரு சக்கர வாகனங்கள் சில நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் தன்னுடைய வாகனத்தையும் நிறுத்திவிட்டு வரிசையில் கலந்துக்கொண்டு தன் முறை வந்ததும் தன்னிடம் செல் ஃபோன் இல்லை என்றான்.

'தெரியும் தம்பி. எதுக்கும் உங்க ஹேண்ட் பேக காட்டிருங்க.' என்ற பணியாளரை பார்த்து புன்னகைத்தவாறு தன் கைப்பையை திறந்து காட்டினான்.

இந்த காலத்துல செல்ஃபோன் இல்லாத மாணவனா என்பதுபோல் அவனை நம்பிக்கையில்லாமல் பார்த்த பணியாளரிடம், 'நம்பிக்கையில்லன்னா இந்தாங்க பேண்ட் பாக்கெட்டையும் பாத்துக்குங்க..' என்றான் புன்னகையுடன்.

'இல்ல தம்பி... நீங்க போங்க...'

'தாங்ஸ்...' என்றவாறு கேட்டைக் கடந்து உள்ளே நுழைந்தான்... Please be with me mummy... என்று முனுமுனுத்தவாறு..

'உண்மையிலேயே ஒங்கக்கிட்ட செல்ஃபோன் இல்லையா, இவங்க கலெக்ட் பண்றத பார்த்துட்டு பைக்ல வச்சிட்டீங்களா?'

குரல் வந்த திசையில் திரும்பிய பரத் தன் எதிரில் புன்னகையுடன் நின்ற மாணவனைப் பார்த்தான். 'சேச்சே.. எனக்கு செல்ஃபோன் வச்சிக்கற பழக்கம் இல்லை.'

'நானும் அப்படித்தான்...' என்றவாறு தன்னை நோக்கி நீட்டிய கையை புன்னகையுடன் பற்றினான் பரத்.

'I am Bharath'

'I am vasan... சீனிவாசன்னு பேரு.. .வாசன்னு கூப்டுவாங்க.' என்ற வாசன். 'நான் சிஎஸ்சி... நீங்க?'

'மெக்கானிக்கல்.. ஆனா ஃபர்ஸ்ட் இயர்ல எல்லாருமே ஒன்னுதானே?'

இருவரும் பேசிக்கொண்டே கல்லூரி வளாகத்தினுள் நுழைந்து 'Welcome to First year Students... Please go to the Madam Karpagam auditorium. H Block..' என்ற அறிவிப்பு பலகையை படித்துவிட்டு வளாகத்தின் அடுத்த கோடியிலிருந்த கட்டிடத்தை நோக்கி நடந்தனர்.

*****

கற்பகம் ஹால் நினைத்ததற்கும் மேலாக பிரம்மாண்டமாகவும் ஒரே சமயத்தில் ஆயிரம் மாணவ, மாணவியர் அமரும் அளவுக்கு விசாலமாகவும் இருந்தது.

ஹாலுக்கு ஏற்றாற்போல் விசாலமான மேடையும் நவீன விளக்கு வசதிகளுடன் பிரகாசித்தது. அத்தனை பெரிய மேடையில் இரண்டே இரண்டு நாற்காலிகள் இடப்பட்டிருந்தன.

முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் பலரும் முன் வரிசைகளில் உள்ளே அமர்ந்திருக்க அவர்களுடன் கல்லூரிக்கு வந்திருந்த பெற்றோர்கள் ஹாலின் கடைசி இறுதி வரிசைகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

பரத்தும் வாசனும் வாசலில் ஒரு சிறிய மேசையுடன் அமர்ந்திருந்த பணியாளர் ஒருவரை அணுகினர்.

'ஒங்க அட்மிஷன் நம்பரை சொல்லுங்க. அன்னைக்கி ஃபீஸ் கட்டும்போது குடுத்த அட்மிஷன் கார்ட்ல இருக்கும், பாருங்க.'

பரத்தும் வாசனும் தங்கள் எண்ணைக் கூற இருவருக்கும் அவர்கள் பெயர் மற்றும் அவர்கள் தெரிவு செய்திருந்த க்ரூப், மற்றும் அவர்களுடைய வகுப்பு அறையின் எண் ஆகியவை பொறிக்கப்பட்டிருந்த பேட்ஜ் வழங்கப்பட்டன. 'இத சட்டையில குத்திக்கிருங்க... ஒங்க பேட்ச் ஸ்டூடன்ஸ் ஒக்காந்துருக்கற ரோவுலதான் நீங்களும் ஒக்காரணும்...சீக்கிரம் போங்க... சாரும் மேடமும் வந்துக்கிட்டிருக்காங்க...'

பரத் தன்னுடைய பேட்ஜை பெற்றுக்கொண்டதும், 'ஒங்களுக்கு எந்த க்ளாஸ் ரூம் பாருங்க வாசன்.' என்றான்.

வாசன் பரத்தின் பேட்ஜை பார்த்தான். 'ரெண்டு பேருக்கும் ஒரே க்ளாஸ்தான்... வெல்கம் அபோர்ட்.' என்றான் புன்னகையுடன்... 'அட்லீஸ்ட் ஃபார் தி ஃபர்ஸ்ட் இயர்...'

'சந்திச்ச முதல் ஆளே ஒரே க்ளாஸ்ல வர்றது சந்தோஷமாருக்கு... ஆனா இந்த போங்க, வாங்கல்லாம் போறும்... என்ன வாசன்?' என்றான் பரத் உண்மையான மகிழ்ச்சியுடன். ஏனோ அவனுக்கு வாசனைப் பார்த்தவுடன் பிடித்துப் போனது. 'கம்... சேர்ந்தே ஒக்காரலாம்..'

அடுத்த சில நிமிடங்களில் மேடைமீது ஒரு சிறிய கும்பல் நுழைய நடுநாயகமாக அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் இருவர் அமர உடன் வந்தவர்கள் அனைவரும் மேடையின் இருமருங்கிலும் சென்று நிற்பதைப் பார்க்க முடிந்தது. 'I think நாம ஃபீஸ் கட்டும்போது பார்த்தவங்கதான் இவங்க... மிஸ்டர் அண்ட் மிசஸ் வெங்கடேஸ்வரலு...' என்று கிசுகிசுத்த வாசனை திரும்பிப் பார்த்தான் பரத். 'I think so... He is the correspondent of this College... அவங்கதான் மிசஸ் கற்பகம் போலருக்கு....'

மேடையின் விளிம்பில் அமைக்கப்பட்டிருந்த மைக்கின் முன் நின்றிருந்த ஒருவர், 'As the Principal of this college I extend a warm welcom to our correspondent Mr.Venkatesh and Madam Karpagam.' என்றவாறு தன் உரையை துவக்க.. அதற்கடுத்து தெலுங்கு கலந்த ஆங்கிலத்தில் வெங்கடேஷும் அவரைத் தொடர்ந்து தங்லீஷில் மேடம் கற்பகமும் ஆற்றிய உரையைக் கேட்டு சில மாணவியர்கள் தங்களையும் அறியாமல் சிரித்துவிட ஹாலின் இரு மருங்கிலும் நின்றிருந்த கல்லூரி பணியாளர்கள் (அடியாட்கள் என்பதுதான் சரி) முறைத்த முறைப்பைக் கண்டு வாயை மூடிக்கொண்டனர்.

'Thank you so much for your enlightened speech Madam.' என்று ஐஸ் வைத்த கல்லூரி முதல்வர் மாணவ, மாணவியரைப் பார்த்து, 'ஆல் தி பெஸ்ட் அண்ட் வெல்கம் டு அவர் கேம்பஸ்' என்றார் புன்னகையுடன்.

அவர் முடிப்பதற்குள் அவரை அகலுமாறு கையை அசைத்தார் வெங்கடேஷ்... பிறகு மேடையின் ஓரத்தில் நின்றிருந்த தன் மூத்த மருமகன் நாகராஜுலுவைப் பார்த்தார்.

அவர் பதறியடித்துக்கொண்டு மைக்கை நெருங்கி அவசர, அவசரமாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கல்லூரி நிர்வாகி என்ற முறையில் மாணவர்களிடமிருந்து நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை தட்டுத்தடுமாறி எடுத்துரைக்க மாணவர்கள் சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டனர்.

அவரையடுத்து அடியாட்கள் தலைவர் போலிருந்த ஒருவர் கரகரத்த குரலில், 'காலேஜுக்கு மோட்டர் சைக்கிள்ல வந்தவங்கள தவிர மத்த ஸ்டூடன்ஸ் அவங்கவங்க பேட்ஜில போட்டுருக்கற ரூமுக்கு போலாம்.' என்றார்.

பரத் சட்டென்று திரும்பி வாசனைப் பார்த்தான்... 'நீ எதுல வந்தே?'

'காலேஜ் பஸ்ல, ஏன்?'

'நான் பைக்கில வந்துருக்கேன்... எதுக்கு நிக்க சொல்றாங்க வாசன்?'

வாசன் உதட்டை பிதுக்கினான். 'ஒருவேளை ஒங்க ரிஜிஸ்திரேஷன் நம்பரை நோட் பண்ணிக்கறதுக்காருக்கும்... க்ளாஸ்ல வச்சி பாக்கலாம்... பை..'

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

very good feedback!

TBR. JOSPEH said...

வாங்க சிஜி,

very good feedback//

அப்படியா? அப்போ நான் பாசாய்ட்டேன்:-)