13.8.09

முதல் பார்வையில் 10

பாஸ்கரின் வாகனம் அந்தேரியில் அமைந்திருந்த ஒரு பெரிய குடியிருப்பின் வாசலில் சென்று நிற்கிறது. பாஸ்கர் இறங்கி வாயிலில் இருந்த பொத்தானை அமுக்குகிறான்...

கதவைத் திறக்கும் பாஸ்கரின் முன்னாள் மனைவி ரேவதி உறக்க சிரிக்கிறாள்... என்ன பாஸ்கர் சார்... ஆச்சரியமா இருக்கு... எங்க இந்த பக்கம்.

பாஸ்கர் - ஷாலிமாவ எங்கூட அனுப்பு.... I will drop her back in two hours...

ரேவதி - எதுக்கு? ஃப்ரைடேதானே கூப்டுக்கிட்டு போனீங்க... வாரம் ஒரு நாள்னா இந்த ஃப்ரைடே இன்னும் வரலையே.... ஓ... அங்க புது கேர்ள் ஃப்ரெண்ட் வெய்ட் பண்றாங்களோ.... இன்னைக்கே திரும்பி வரேன் டார்லிங்னு சொல்லிட்டு வந்திருப்பீங்க....

பாஸ்கர் - (கோபத்துடன்) என் பொறுமைய சோதிக்காத... before I create a scene... please send her with me...

ரேவதி - (போலி வியப்புடன் அவனைப் பார்க்கிறாள்...) Sceneஆ... என்ன சீன்? I don't care how you feel... You are allowed a visit only once a week... It is not due till next Friday... I am sorry... கதவை அடைக்க முயல்கிறாள்... ஆனால் பாஸ்கர் அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைகிறான்... தன்னுடைய மகளின் அறையை நோக்கி விரைகிறான்... ஷாலிமா... are you there? டாடி வந்துருக்கேன்...

பாஸ்கரின் குரலைக் கேட்டதும் ஒரு அறையிலிருந்து அவனுடைய மகள் ஓடி வந்து அவனைக் கட்டிக்கொள்ள அவளை அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டு திரும்புகிறான்...

ரேவதி வாயிலை அடைத்துக்கொண்டு நிற்கிறாள்...

பாஸ்கர் - வழிய விடு ரேவதி... I will take her to the nearest park... get her an ice cream and drop her back... நாலு மணி ஃப்ளைட்ல நா திரும்பணும்... உங்கிட்ட சண்டை போட்டுக்கிட்டிருக்க எனக்கு நேரமில்லை....I will not disturb you at least for another one month...

ரேவதி உறக்க சிரிக்கிறாள்... ஏன்... லாங் லீவ்ல போங்கன்னு சொல்லிட்டாரா சேர்மன்?

பாஸ்கர் பதிலளிக்காமல் தன் மகளுடன் விளையாடுகிறான்...

ரேவதி - அவர்தான் ஒங்க பெஸ்ட் சப்போர்ட்டராச்சே... என்னாச்சி... அவரும் ஒங்க எனிமி ஆய்ட்டாரா? என்னெ மாதிரி?

பாஸ்கர் தன் மகளுடன் விளையாடுவதிலேயே குறியாயிருக்கிறான்... ஷாலிமா கலகலவென சிரிக்கிறாள்...

ரேவதி - என்ன பதிலையே காணம்? என்னெ விரோதிச்சிக்கிட்டு நீங்க நல்லா இருக்க முடியாதுங்கறத இப்ப உணர்றீங்களா?

பாஸ்கர் ரேவதியை பார்க்கிறான் - கோபப்படுவதில் பயனில்லை என்பதை உணர்கிறான் - Yes... உங்கிட்ட தோத்துட்டேங்கறத ஒத்துக்கறேன்.... Can I take her out now?

பாஸ்கரின் உடனடி ஒப்புதலை எதிர்பாராத ரேவதி வியப்புடன் அவனை பார்க்கிறாள்... பிறகு வாயிலை விட்டு ஒதுங்கி நிற்கிறாள். பாஸ்கர் மகளை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறான்...

அவன் மகளுடன் காரில் ஏறி செல்வதை பார்த்தவாறு ரேவதி நிற்கிறாள்...

........


நளினியின் வாசற்கதவு திறக்கப்படுகிறது. மல்லிகா தன் மகள்கள் இருவருடன் நுழைகிறாள். ஹாலில் படுத்துக்கிடக்கும் ஸ்வீட்டி எழுந்து வாலை ஆட்டிக்கொண்டு பாய்ந்து சென்று மல்லிகாவின் குழந்தைகள் மீது மோதுகிறது. இருவரும் அப்படியே தரையில் அமர்ந்து அதை அணைத்துக்கொள்கின்றனர்.

மல்லிகா ஹாலுக்குள் நுழைந்து தன் கைப்பையை சோபாவில் எறிந்துவிட்டு டீப்பாய் மீது கிடந்த பூங்கொத்தை பார்க்கிறாள். பிறகு திரும்பி நளினியின் அறையை நோக்கி நடக்கிறாள்... நளினி படுக்கையில் படுத்து கிடப்பது தெரிகிறது...

மல்லிகா பதற்றத்துடன் நுழைந்து அவளுடைய நெற்றியில் கைவைத்து பார்க்கிறாள்... என்னடா உடம்புக்கு ஏதும் பண்ணுதா? எதுக்கு இந்த நேரத்துல படுத்து கிடக்கே...

நளினி எழுந்து அமர்கிறாள்... ஒன்னும் இல்லக்கா... சும்மாத்தான்... போரடிச்சுது...

மல்லிகா - இன்னைக்கி பார்லர் இல்லையா?

நளினி வியப்புடன் மல்லிகா இருந்த திசையில் பார்க்கிறாள்.. என்னக்கா நீதான ரெண்டு நாளைக்கி பார்லருக்கெல்லாம் போவேணான்னு சொன்னே....

ஸ்வீட்டியுடன் அறைக்குள் நுழையும் இரு மகள்களும் படுக்கையில் அமர்ந்து நளினியை கட்டிக்கொள்கின்றனர். ஹாய் ஆண்ட்டி... ஹவ் ஆர் யூ?

நளினி புன்னகையுடன் ஐ ஆம் ஃபைன்... நேத்து நீங்க ரெண்டு பேரும் அம்மாவ டென்ஷனாக்கிட்டீங்க அப்படித்தானே...

மல்லிகா சொல்ல வேண்டாம் என்று கண்சாடை கேட்டுகிறாள்..

இளையவள் நீலா - ஏன் சொல்ல வேணாங்கறே?

நளினி (புன்னகையுடன்.) அம்மா சொல்ல வேணாம்னு சொல்றாங்களா?

நீலா - ஆமா சித்தி... நா சொல்றேன்... நேத்து அப்பா வந்து பாட்டி வந்துருக்காங்க ஒங்க ரெண்டு பேரையும் பாக்கணும்னு சொல்றாங்க, வறீங்களான்னு கேட்டாங்க... நாங்க சரின்னு சொல்லிட்டு அவங்க கூட போனோம்.. அம்மா அத தப்பா புரிஞ்சிக்கிட்டு போலீஸ்ல போயி சொல்லி அவங்க அப்பா வீட்டுக்கு வந்து எங்களையும் அப்பாவையும் புடிச்சி ஸ்டேஷனுக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டாங்க... போலீஸ் அப்பாவை நல்லா திட்டி எங்கள அம்மா கூட அனுப்பி வச்சிட்டாங்க... இதான் நடந்தது...

நளினி புன்னகையுடன் எழுந்து நிற்கிறாள்... இவ்வளவுதானா...நேத்து ஒங்கம்மா பதறிக்கிட்டு ஓடினப்போ நா என்னவோன்னு பயந்துட்டேன்... சரி நீங்க ரெண்டு பேரும் ஸ்வீட்டிய கூட்டிக்கிட்டு போயி டெரஸ்ல விளையாடுங்க...

இரு சிறுமிகளும் மாடிப்படிகளை நோக்கி ஓடுகின்றனர். ஸ்வீட்டியும் குலைத்துக்கொண்டே பின் செல்கிறது..

மல்லிகா அறையிலிருந்து வெளியில் செல்கிறாள்.

நளினி - கொஞ்சம் இருக்கா...

மல்லிகா - (கோபத்துடன்) என்ன சொல்ல போறே? எதுக்கு இப்படி இருக்கே, அதானே...

நளினி மல்லிகாவின் தோள்களை பற்றிக்கொண்டு அறையிலிருந்து வெளிவந்து டைனிங் டேபிளில் அமர்கிறாள். - நீயும் ஒக்காருக்கா..

மல்லிகா விருப்பமில்லாமல் அவளருகில் அமர்கிறாள்.

நளினி - எதுக்குக்கா போலீஸ் எல்லாம்?

மல்லிகா - ஒனக்கு தெரியாது நளினி... அந்தாள் செஞ்சதையெல்லாம் மறந்துட்டியா?

நளினி - அது என்னாலதான?

மல்லிகா - எது உன்னால? உன்னோட டிசெபிளிட்டிய தனக்கு சாதகமா ஆக்கிக்க பார்க்க ஒரு ராஸ்கல்டி அந்தாளு...

நளினி - இருக்கலாம்க்கா... அது முடிஞ்ச போன கதை...

மல்லிகா - அதுக்காக? அத மறந்துற முடியுமா?

நளினி - சரி... உனக்கு அவர் வேணாம்னு டிசைட் பண்ணிட்டே... ஆனா பிள்ளைங்க? அவங்களுக்கு அவர் அப்பாதான?

மல்லிகா - அது ஊருக்கு...

நளினி - போலீஸ் அவங்க வீட்ல போயி பெரிய ரகளை ஏதும் பண்ணிட்டாங்களா?

மல்லிகா - அதெல்லாம் ஒன்னுமில்லை... மரியாதையாத்தான் நடந்துக்கிட்டாங்க... அந்தாளும் பிரச்சினை ஏதும் பண்ணாம கூப்ட்டதும் வந்து ஜீப்ல ஏறிட்டார்..

நளினி - அவங்க அம்மா?

மல்லிகா - (கேலியுடன் )அதுதான் வாசல்ல வந்து நின்னு நீ நாசமா போயிருவேடின்னு சாபம் விட்டுது..

நளினி - இது தேவையாக்கா... அக்கம்பக்கத்துல எல்லாரும் பாத்துருப்பாங்க இல்ல?

மல்லிகா சலிப்புடன் எழுந்து நிற்கிறாள்... இந்த பேச்ச விடு நளினி... என்னோடது முடிஞ்சி போன கதை... டீப்பாய்ல கிடக்குதே ஒரு பொக்கே அத அனுப்புன ஆள்தான நேத்து ஃபோன் பண்ணது?

நளினி எழுந்து சென்று சோபாவில் அமர்ந்து டீப்பாயில் கிடந்த பூங்கொத்துக்கு அருகில் தடவிப் பார்க்கிறாள்..

மல்லிகா என்ன வேணுமாம், அந்தாளுக்கு.. ஒன் ஃப்ரெண்ட்ஷிப்பா இல்ல....?

நளினி - சோர்வுடன்... மறுபடியும் ஆரம்பிச்சிராதக்கா...

மல்லிகா கோபத்துடன் எழுந்து நிற்கிறாள் - சரிம்மா... கேக்கலை... எல்லா ஆம்பிளைங்களும் ஒரே மாதிரிதான். அத மட்டும் மறந்துறாத...

நளினி - அக்கா ப்ளீஸ்... இது வெறும் ஃப்ரெண்ட்ஷிப்தான்... அவர பார்த்தா அந்த மாதிரி தெரியல..

மல்லிகா வியப்புடன் தன் தங்கையை பார்க்கிறாள் - பார்த்தா தெரியலையா?

நளினி சட்டென்று திரும்பி அவளுடைய கரத்தை பற்றுகிறாள் - அக்கா நீயுமா?

மல்லிகா - தன் தவறை உணர்ந்து - சாரிடா... நா அந்த அர்த்தத்துல சொல்லல...

நளினி - வேதனையுடன் புன்னகை செய்கிறாள் - பரவால்லைக்கா. நா அவர் கிட்ட பேசினத வச்சி சொல்றேன்... ஒருத்தர் கிட்ட கொஞ்ச நேரம் பேசினால அவங்கள பத்தி ஓரளவுக்கு புரிஞ்சிக்கற சக்தி எங்கள மாதிரி ஆளுங்களுக்கு இருக்குங்கறது ஒனக்கு தெரியுமில்ல?

மல்லிகா - ஒத்துக்கறேன்... ஆனா ஆம்பிளைங்கள அதுல சேர்க்காத... அவனுங்க நடிப்பானுங்க...

நளினி - உன்னுடைய கசப்பான அனுபவத்தால அப்படி சொல்றே?

மல்லிகா - எரிச்சலுடன் ஏன்? ஒனக்கு மட்டும் அப்படி ஒரு அனுபவம் இல்லையா?

நளினி - இருக்கலாங்க்கா... ஆனா எல்லா ஆண்களுமா அப்படி இருப்பாங்க.. எனக்கென்னவோ இவர் அப்படி பட்டவர் இல்லைன்னு தோனுது...

மல்லிகா - எழுந்து நிற்கிறாள். சரி நளினி... நா இனிமே ஒன்னும் சொல்றதுக்கில்லை.... நீ படிச்ச பொண்ணு... நாலு ஆம்பளங்களோட பழகுறதால இப்படியெல்லாம் சிந்திக்க முடியுது... இந்த ஃப்ரெண்ட்ஷிப்பால ஒனக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும்னா.... செய்யி... நா இனி ஒன்னும் சொல்ல மாட்டேன்.... சமையல பாக்கறேன்...

நளினி அவளுடையை கரங்களைப் பற்றி இழுக்கிறாள்... இன்னைக்கி எங்கயாச்சும் வெளியில போயி சாப்பிடலாங்க்கா... பிள்ளைங்களுக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்லே... இன்னைக்கி என்னோட ட்ரீட்டா வச்சுக்கலாமே...

மல்லிகா புன்னகையுடன் தன் தங்கையை அணைத்துக்கொள்கிறாள் - ரொம்ப நாளைக்கப்புறம் உன் முகத்துல உண்மையான சந்தோஷத்த பாக்க முடியுதுடி... அதுவும் நீ ட்ரீட் குடுக்கறேன்னு சொல்றப்ப... (சிரிக்கிறாள்)

நளினியும் சிரிக்கிறாள் - அதானே பாத்தேன்... ஓசின்னா ஒடனே ஓக்கேன்னு சொல்லிறுவியே...

மல்லிகா எழுந்து உரக்க - ஏய் பிள்ளைங்களா.. இறங்கி வாங்க... சித்தி ட்ரீட் தறாளாம்..

இருவரும் சிரிக்க பிள்ளைகள் ஸ்வீட்டியுடன் படிகளில் தடதடவென இறங்கி வந்து... என்னது ட்ரீட்டா? என்கின்றனர் மகிழ்ச்சியுடன்...

மூத்தவள் ராஜி - சித்தி ஒங்க ஹோட்டலுக்கே போலாம்... முடியாதுன்னு மட்டும் சொல்லிறாதீங்க...ப்ளீஸ்

நளினி - இருவரையும் நோக்கி கைகளை நீட்டுகிறாள். அவர்கள் ஆளுக்கு ஒரு கை பற்றிக்கொள்ள நளினி இருவரையும் இழுந்து அணைத்துக்கொள்கிறாள்... சரி.. அங்கேயே போலாம்... சித்தி ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு வந்துடறேன்...

மல்லிகா - என்ன நளினி நீ? அதுங்கதான் கேக்குதுன்னா? அங்க ரொம்ப காஸ்ட்லியா இருக்குமே...

நளினி - என்னக்கா தெரியாத மாதிரி... அங்கதான் எனக்கு 25% டிஸ்கவுண்ட் இருக்கே.... இல்லன்னாலும் என்னைக்காவதுதான?

தன் அறையை நோக்கி செல்ல மல்லிகா தன் குழந்தைகளை முறைத்து பார்க்கிறாள்.....

தொடரும்...
.........

No comments: