21.8.09

முதல் பார்வையில் 14

மாலை - நளினியின் வீடு - வரவேற்பறை - பாஸ்கர் சோபாவுக்கு எதிரில் இருந்த டீப்பாயின் மீது தன் கால்களை நீட்டி அமர்ந்திருக்கிறான் - சற்று தள்ளி நளினி - பின்புறத்தில் மெல்லிய இசை

பாஸ்கர் - அம்மா இறக்கறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாலதான் எனக்கும் ரேவதிக்கும் டைவர்ஸ் ஆயிருந்தது... அத தடுக்கறதுக்கு அம்மா எவ்வளவோ ட்ரை பண்ணாங்க, ஆனா ரேவதிக்கிட்ட அவமானப்பட்டதுதான் மிச்சம். அவங்களால எங்க டைவர்ச டைஜஸ்ட் பண்ணிக்கவே முடியல கடைசி வரைக்கும் - அத்தோட என் மூனு வயசு டாட்டரும் அவங்களும் ரொம்பவும் க்ளோசா இருந்தாங்க - அவள இனி பாக்கவே முடியாம போயிருமோங்கற ஏக்கம் வேற அவங்கள ரொம்பவே பாதிச்சிருச்சின்னு நினைக்கறேன்...

நளினி எப்படி ஆறுதல் சொல்வதென தெரியாமல் மவுனமாயிருக்க பாஸ்கர் தொடர்கிறான்...

பாஸ்கர் - என்னோட பேரண்ட்ஸ் எப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் பொருத்தமில்லையோ அதே மாதிரிதான் நானும் ரேவதியும்.

நளினி - ஏன் அப்படி சொல்றீங்க?

பாஸ்கர் - She is highly ambitious... தோல்விய ஏத்துக்கவே முடியாத அளவுக்கு ambitious - நானும் அவளும் ஒரே பேட்ச்மேட்ஸ் - அதாவது ஒரே டேட்ல ப்ரொபேஷனரி ஆஃபீசர்சா பேங்க்ல சேர்ந்தோம் - அவளோட பேச்சுத் திறமைய பார்த்து, மயங்கி லவ் பண்ணி என் அப்பாவ எதிர்த்துக்கிட்டு போயி அவள ரிஜிஸ்தர் மேரேஜ் செஞ்சிக்கிட்டேன் - It was a huge emotional blow for my Dad - He just could not accept the fact that someone in his own family could challenge him - அடுத்த ரெண்டு நாள்லயே இதே நினைப்புல கார ஓட்டிக்கிட்டு போயி ஒரு மேஜர் ஆக்சிடெண்ட்ல ஸ்பாட்லயே....

நளினி - கலக்கத்துடன் - போறும் பாஸ்கர் - I never thought you would have gone through so much of pain in your life - நாந்தான் இந்த உலகத்துலயே பெரிய துரதிர்ஷ்டசாலின்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்...

பாஸ்கர் - துரதிர்ஷ்டசாலின்னு இந்த உலகத்துல யாரும் இல்ல நளினி - யாருக்கு வேணும்னாலும் நல்லதும் நடக்கலாம் கெட்டதும் நடக்கலாம் - நல்லது நடக்கறப்ப நாம அதிர்ஷ்டசாலின்னோ இல்ல கெட்டது நடக்கறப்ப துரதிர்ஷ்டசாலின்னோ நினைச்சி நம்மள நாமளே தேத்திக்கிறோம் - That's quite natural - அதுமாதிரிதான் நீ சொல்றதும் - Let me complete what I started, I mean if you are still interested..

நளினி - என்ன பாஸ்கர் இப்படி கேட்டுட்டீங்க - Of course I am interested... நீங்க சொல்லுங்க...

பாஸ்கர் - தாங்ஸ் - எனக்கும் ரேவதிக்கும் மேரேஜ் நடந்ததே ஒரு விபத்து மாதிரிதான் - எதிரெதிர் துருவங்க ஒன்னா சேந்தது மாதிரி - அப்பாவோட சடன் டெத் எங்க ரெண்டு பேரையுமே ஒரு உலுக்கு உலுக்கத்தான் செஞ்சிது - தனியா இருக்க வேணாம் அம்மா கூட சேர்ந்து இருப்போம்னு நா சொன்னப்ப சரின்னு சொல்லி எங்க வீட்டுக்கு வந்துட்டா - அம்மாவுக்கும் அவளுக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இல்லன்னா கூட எல்லா குடும்பத்துலயும் நடக்கறதுதானேன்னு நா பெரிசா எடுத்துக்கல - எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல கூட அப்பப்ப difference of opinion வந்துக்கிட்டேதான் இருக்கும் ஆனா அதுவும் கூட எல்லா குடும்பத்துலயும் நடக்கற சின்ன, சின்ன சச்சரவுங்கதான். அவ எம்.பி.ஏ (எச்.ஆர்)ங்கறதால ஆரம்ப முதலே எங்க ஹெட் ஆபீஸ்ல இருக்கற எச்.ஆர். செல்லதான் இருந்தா - ஆனா நா எம்.பி.ஏ (ஃபைனான்ஸ்). அதனால என்னோட கெரியர்ல பாதிக்கும் மேல பிராஞ்சஸ்லதான் இருந்தேன் - ஆனா லக்கிலி என்னுடைய போஸ்டிங்ஸ் எல்லாமே மும்பை சிட்டி, இல்லன்னா பக்கத்துலருக்கற பூனேன்னு We were never separated. ரேவதி highly career mindedஆ இருந்ததால ஒரு குழந்தை வேணுங்கற எண்ணமே அவளுக்கு இருக்கல - மேரேஜ் ஆயி ஏறக்குறைய பத்து வருசம் கழிச்சிதான் ஷாலிமா பொறந்தா - பேருக்குத்தான் ரேவதி அம்மாவே தவிர அவள வளர்த்தது என்னோட அம்மாதான் - ரேவதிக்கு எங்க எச்.ஆர் டிபார்ட்மெண்டோட டாப் பொசிஷன ரீச் பண்ணனுங்கறதுதான் ஒரே ஏய்ம். அதுக்காக எதையும் இழக்க அவ தயாராயிருந்தா - அவளோட அந்த வெறிய பாக்கறப்போ எனக்கு பயமா இருக்கும் - ஏஜிஎம் லெவல் வரைக்கும் எங்க ரெண்டு பேருக்கும் ஒரே டைம்ல ப்ரொமோஷன் கிடைச்சதையே அவளால ஜீரணிச்சிக்க முடியல. she somehow felt that I was being promoted only because I am her husband - எனக்கு மட்டும் ப்ரொமோஷன் குடுத்துட்டு உங்களுக்கு குடுக்கலன்ன நம்ம குடும்பத்துல பிரச்சினை வந்துரும்னு நினைச்சித்தான் உங்களுக்கும் ப்ரொமோஷன் குடுக்கறாங்க தெரியுமான்னு வெளிப்படையாவே கிண்டல் பண்ணுவா - I knew what I am. அதனால அவளோட tauntsஐ நா பெரிசா எடுத்துக்கறதில்ல - ஆனா கடைசியா டிஜிஎம் ப்ரோமஷன் இண்டர்வியூவுக்கு கால் லெட்டர் வந்தப்ப முதல்ல ரேவதி 'நா இண்டர்வியூவுக்கு வரலை பாஸ்கர்னு' சொன்னா. நான் கம்பெல் பண்ணி அட்டெண்ட் பண்ண வச்சேன். அதான் நா செஞ்ச தப்பு. இண்டர்வியூல எனக்கு ப்ரொமோஷன் ஆச்சி. அவளுக்கு ஆகல. அப்புறந்தான் தெரிஞ்சது அவளுக்கு அந்த வருஷத்து இண்டெர்னல் ரிவியூவில அவளோட பாஸ் வேணும்னே மார்க்க குறைச்சிட்டார்னு - அதுவே எங்களோட ரிலேஷன்ஷிப்ல விரிசல் விழறதுக்கு காரணமாயிருச்சி. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ஆர்க்யூமெண்ட்ஸ்னு ஆரம்பிச்சி, அம்மா கூட இருக்க பிடிக்கல நா வேணும்னா என்னோட வாங்க இல்லன்னா நீங்க ஒங்க அம்மா கூடவே இருந்துக்குங்க நா போறேன்னு சொல்லிட்டு என் டாட்டர தூக்கிக்கிட்டு வீட்ட விட்டு போய்ட்டா - சரி போகட்டும் கோபம் குறைஞ்சதும் வருவான்னு நினைச்சி நானும் அம்மா கூடவே இருந்துட்டேன் - அவ வரவேயில்ல - ஒரு மாசம் கழிச்சி டைவர்ஸ் நோட்டீஸ்தான் வந்துது

வாசற் கதவைத் திறந்துக்கொண்டு மல்லிகா நுழைகிறாள் - சோபாவில் அமர்ந்திருந்த பாஸ்கர் டீப்பாயிலிருந்த கால்களை இறக்கிக்கொள்கிறான் - சோபாவிலிருந்து எழுந்து மல்லிகாவைப் பார்த்து என்ன சொல்வதென தெரியாமல் நிற்கிறான் - மல்லிகா அவனைக் கண்டுக்கொள்ளாமல் விலகியிருந்த டீப்பாயை அதன் பழைய இடத்தில் வைத்துவிட்டு முனுமுனுக்கிறாள் - 'தயவு செஞ்சி எந்த பொருளையும் அது இருக்கற இடத்துலருந்து மாத்தாதீங்க'

அவளுடைய குரலில் இருந்த எரிச்சலை எதிர்பாராத பாஸ்கர் திடுக்கிட்டு 'சாரி மேடம்... I didn't realise it.' என்கிறான்.

நளினிக்கும் மல்லிகாவின் குரலிலிருந்த கோபம் பிடிக்கவில்லை என்பது அவளுடைய முகம் போன போக்கிலிருந்தே தெரிகிறது - என்னக்கா நீ வந்ததும் வராததுமா.. அவர் என்ன வேணும்னா செஞ்சார்?

மல்லிகா - இங்க பார் நளினி நா மனசுல பட்டத சொன்னேன் - அவருக்கு தெரியலங்கறத தெரிஞ்சிக்கிட்டுத்தான் சொன்னேன்.

பாஸ்கர் - It's Ok Nalini - இதுதான் நா கத்துக்க வேண்டிய முதல் பாடம் - Don't move things - தாங்ஸ் மேடம்.

மல்லிகா ஒரு லேசான புன்னகையுடன் பாஸ்கரை பார்க்கிறாள் - (தனக்குள்) இவன் பயங்கரமான ஆள்... அடிபட்டாலும் சிரிக்கிற ஆள். ஜாக்கிரதையா இருக்கணும் - என்னெ நீங்க மல்லிகான்னே கூப்பிடலாம், மேடம்னு சொன்னா என்னவோ மாதிரி இருக்கு -

பாஸ்கர் புன்னகையுடன் - சரி மல்லிகா - நீங்களும் என்னெ பாஸ்கர்னே கூப்பிடலாம் - நளினியை பார்க்கிறான் - ஓக்கே பை நளினி - நாளைக்கி நானும் பார்லர்ல அப்பாய்ண்ட்மெண்ட் எடுத்திருக்கேன் அங்க வச்சி பாக்கலாமா?

நளினி - சரி பாஸ்கர் - பை..
...........

பகல் - ஸ்பென்சர் சூப்பர் மார்க்கெட், கோடம்பாக்கம்

பாஸ்கர் அவனுக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டிருக்கிறான்.

அதே கடையில் மல்லிகாவும் அவளுடைய இளைய மகள் நீலாவும்... பாஸ்கர் அவர்களை கவனிக்கவில்லை.

மல்லிகா பாஸ்கரைப் பார்த்தும் பார்க்காததுபோல் ஷெல்ஃபில் இருந்த பொருட்களை பார்ப்பதில் மும்முரமாக இருக்கிறாள். நீலா பாஸ்கரைப் பார்த்ததும் 'அம்மா அங்க பார் அந்த அங்கிள்' என்று கிசுகிசுக்கிறாள் 'ஏய் தெரியும்... சும்மா இரு' என்று அதட்டுகிறாள் மல்லிகா. ஆனால் அதை பொருட்படுத்தாமல் பாஸ்கரிடம் ஓடுகிறாள்.

நீலா - ஹாய் அங்கிள்... என்னெ தெரியுதா?

பாஸ்கர் - திடுக்கிட்டு அவளைப் பார்க்கிறான் - ஹாய் நீலா... சுற்றிலும் பார்க்கிறான் - நீ தனியாவா வந்தே?

நீலா - இல்லையே அம்மா அங்க நிக்கிறாங்க - (குரலை தாழ்த்தி) ஆனா ஒங்கள பார்த்தும் பாக்காத மாதிரி நடிக்கிறாங்க பாருங்க (சிரிகிறாள்) - அவங்களூக்கு ஒங்கள அவ்வளவா பிடிக்கல அங்கிள்.

பாஸ்கர் புன்னகையுடன் - அதெப்படி ஒனக்கு தெரியும்?

மல்லிகா அப்போதுதான் அவனைப் பார்த்ததுபோல் அவர்களை நெருங்கி தன் மகளை பார்த்து முறைக்கிறாள்.

பாஸ்கர் - நீங்க எங்க இங்க....

மல்லிகா - அது நா கேக்க வேண்டிய கேள்வி. நாங்க இங்கதான் குடியிருக்கோம்...

நீலா - உடனே கடகடவென - யூ.ஐ.காலனி 2ண்ட் மெயின் ரோட்.. அப்சரா அப்பார்ட்மெண்ட்ஸ் ஃப்ளேட் நம்பர் 10 2ண்ட் ஃப்ளோர்.

மல்லிகா - ஏய்... ஒன்னெ அவர் கேட்டாரா?

பாஸ்கர் - நானும் இங்கதான் ஃபர்ஸ்ட் மெய்ன் ரோட்... சன் ரைஸ் ஆப்ஸ்... நேத்து ஈவ்னிங்ல இருந்து...

மல்லிகா - நீங்க பெசண்ட் நகர்லன்னுல்ல நளினி சொன்னா?

பாஸ்கர் - ஆமா... அது எங்க பேங்க் கெஸ்ட் ஹவுஸ்... ரெண்டு வாரத்துக்குன்னு வந்ததால அங்க இருந்தேன்... ஆனா இப்போ ஒரு மாசத்துக்கு மேல இருக்கறதா ப்ளான்... இதுவும் பேங்கோடதுதான்...

மல்லிகா - (தனக்குள்) இவன் என்னவோ திட்டத்தோட வந்துருக்கான் போலருக்கு - சரிங்க... எனக்கு வீட்ல வேல இருக்கு - நீலா வா...

பாஸ்கருடைய பதிலுக்கு காத்திராமல் மல்லிகா நீலாவை இழுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடக்க சற்று நேரம் அவர்களைப் பார்த்தவாறு நிற்கிறான்...

...........

தொடரும்...

No comments: