21.9.06

சூரியன் 125

‘How do you feel Madam?’

வந்தனா தன் எதிரில் நின்றிருந்த நந்தக்குமாரைப் பார்த்து புன்னகைத்தாள். ‘Fine Mr.Nandakumar. Thanks to you and Nalini.’

நந்தக்குமார் சங்கடத்துடன் நெளிந்தான். ‘என்ன மேடம் என்னெ போயி மிஸ்டர்னெல்லாம் அட்றெஸ் பண்றீங்க? நான் வெறும் ஸ்கேல் டூ ஆஃபீசர்தான் மேடம்.’

சமையல்கட்டில் வேலையாய் இருந்த நளினிக்கு நந்தக்குமாரின் சங்கடம் வேடிக்கையாக இருந்தது. தன்னிடம் எப்படி ஆட்டம் போடுவான்? ஒரு வாரத்துக்கு அவஸ்தைப்படட்டும்..

வந்தனா கட்டிலின் தலைமாட்டில் நளினி அமைத்திருந்த தலையணையில் சாய்ந்தவாறு நந்துவையும் சமையலறையில் படு மும்முரமாய் வேலையிலிருந்த அவனுடைய மனைவியையும் பார்த்தாள்.

‘நீங்க ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர்னு நினைக்கேன். அதான் ரெண்டு பேரும் ஒரே மாதிரியா நினைக்கீங்க.’

நந்தக்குமாருக்கு இத்தகைய புகழ்ச்சி பழக்கமில்லாததால் சங்கடத்துடன் சமையலறையைப் பார்த்தான். நளினி திரும்பி அவனைப் பார்த்தாள். ‘என்ன நந்து, மேடம் சொல்றது சரிதானே.. We are made for each otherதானே?’  

வந்தனா அவளுடைய குரலில் தொனித்த கேலியை கவனித்தாள். இருப்பினும் சமையலறையிலிருந்த நளினிக்கு கேட்கும் அளவுக்கு குரலையெழுப்பி பேசமுடியாமல் தடுமாறினாள்.

‘மேடம் don’t strain yourself.’

வந்தனா சரியென்று தலையை அசைத்துவிட்டு தலையணையில் சாய்ந்து ஆயாசத்துடன் கண்களை மூடினாள். What’s happening to me? Why do I feel so tired? ரெண்டு நாளைக்கு முன்னால இருந்த வந்தனாவா நான்? கமலி.. நீ இருந்தா எனக்கு இப்படியொரு நிலைமை வந்திருக்குமாடி.. பாவி மவளே.. இப்படி அநியாயமா என்னெ புலம்ப வச்சிட்டு போய்ட்டியேடி.. நா எப்படி ஒன்னெ மறந்துட்டு இருக்கப் போறேன்...

அவளையுமறியாமல் கண்கள் கலங்கி ஓரமாய் கண்ணீர் வடிய அதைப் பார்த்த நந்தக்குமார் பதறிப்போய் சமையலறையை நோக்கி விரைந்தான். ‘ஏய்.. மேடம் கரையுன்னு.. போய் எந்தான்னு ச்சோய்க்கி..’

நளினி புன்னகையுடன் வேண்டாம் என்று தலையை அசைத்தாள். ‘மேடத்த டிஸ்டர்ப் செய்யேண்டா.. Leave her alone for sometime.. மேடம் மறுபடியும் பழைய நிலமைக்கு வர்றதுக்கு எப்படியும் ரெண்டு மூனு நாள் ஆவும்.. முன்ன பின்னெ பாக்காத எனக்கே  ஆக்குட்டியோட மரணம் பாதிச்சிருக்கே நந்து.. எந்தொரு செளந்தர்யம்?  குட்டியோட பெஸ்ட் ஃப்ரெண்டாத்றெ மேடம்.. எப்படி மறக்க முடியும் நந்து? சேட்டன் போய்ட்டு ஹோட்டல் ரூம் வெக்கேட் செய்துட்டு சாதனங்களோட இங்கோட்டு வா.. போக்கோ..’

நந்து சங்கடத்துடன் அவளைப் பார்த்தான். ‘அது வேணோ நளினி.. மேடத்தோட நாம ரெண்டு பேரும் தாமசிக்கறது சரியானோ?’

நளினி வியப்புடன் அவனைப் பார்த்தாள். ‘பின்னே.. அங்கனெ பறஞ்சிட்டல்ல மேடத்த டிஸ்சார்ஜ் செய்து கொண்டு வந்தது? இப்ப எந்தாயி?’

நந்தக்குமார் அவளையும் ஹாலில் கட்டிலில் படுத்திருந்த வந்தனாவையும் மாறி, மாறி பார்த்தான். ‘அதுக்கில்ல நளினி.. மேடத்தோட சிஸ்டர்ஸ் உண்டுல்லே.. அவரெ விளிச்சி பறஞ்சாலோ.. எதுக்கு சொல்றேன்னா அப்புறம் அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சி வந்து நம்மள ஏதாச்சும் சொன்னா? அதுகொண்டான ஆலோய்க்கன.’

நளினிக்கும் அவனுடைய பேச்சிலிருந்த நியாயம் விளங்கியது. உறவினர்கள் எப்போதுமே அப்படித்தானே.. தேவைப்படும் நேரத்தில் அருகில் இருக்க மாட்டார்கள்.. ஆனால் அவர்கள் அருகில் இல்லாத நேரத்தில் ஏதேனும் விபரீதம் நடந்துவிட்டால் போதும்... ‘எங்களுக்கு சொல்லாம ஒங்கள யாருங்க பாக்க சொன்னா?’ என்று சண்டைக்கு வருவார்கள்..

இருப்பினும் வந்தனா மேடத்திற்கு தன்னுடைய சகோதரனையோ, சகோதரிகளையோ துணைக்கு அழக்க வேண்டும் என்று தோன்றியிருந்தால் தங்களிடம் கூறியிருப்பார்களே.. ஒருவேளை எதற்கு அவர்களை சிரமப்படுத்த வேண்டும்.. இது சாதாரண நோய்தானே என்று நினைத்திருக்கலாம்..

‘சரியான நந்து.. பட்சே இப்போ மேடத்திடத்து இத பறயாம் பற்றோ.. பின்னே நோக்காம்.. நந்து போயி வெக்கேட் செய்துட்டு வா..’ என்று அவனை வற்புறுத்தி அனுப்பி வைத்துவிட்டு சமையல் வேலையை முடிக்கும் நோக்கில் சமையலறையை நோக்கி விரைய வந்தனாவின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது.

‘எந்தா மேடம்?’ என்று திரும்பிப் பார்த்தாள்.

‘இங்க வா.. வந்து ஒக்கார்.’ என்று வந்தனா சைகை செய்ய நளினி, ‘ஒரு நிமிஷம் மேடம்..’ என்று சமையலறையில் கொதித்துக்கொண்டிருந்த சோற்றுப் பாத்திரத்தை மூடி இறக்கி வைத்துவிட்டு ஸ்டவ்வை அனைத்துவிட்டு திரும்பி படுக்கைக்கு அருகிலிருந்த சோபாவில் அமர்ந்து வந்தனாவின் கரங்களைப் பற்றினாள். ‘என்ன மேடம்..?’

வந்தனா படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயல நளினி அவளை அப்படியே அணைத்து தூக்கி தலைமாட்டில் தலையணையை வைத்து அமர்த்தினாள்.

‘தாங்ஸ் நளினி.. நீ மட்டும் சமயத்துல வரலன்னா இன்னும் ஒரு வாரத்துக்கு என்னெ விட்டுருக்க மாட்டார் அந்த டாக்டர். அந்த இருட்டு பிடிச்ச ரூம்லருந்து வந்ததிலிருந்தே எனக்கு தேவலைன்னு தோனுது.. It was really a nightmare..’

நளினி ஆதரவுடன் வந்தனாவின் கரங்களைப் பற்றி அழுத்தினாள்.. ‘இப்பத்தான் வந்துட்டீங்களே மேடம்.. Don’t worry.. You will be alright in no time..’

‘Yes I should.. I’ve got lot of things to do.. புது சேர்மன் வேற ஜாய்ன் பண்ணிருப்பார். அங்க என்ன நடக்குதோ ஏது நடக்குதோ தெரியல.. அந்த சேது வேற எதையாச்சும் குட்டைய குழப்பிக்கிட்டிருப்பார்.. இந்த கமலி குட்டியோட சாவு என் வாழ்க்கையையே புரட்டி போட்டிருச்சி நளினி.. I do not know what I am going to do.. I miss her terribly Nalini.. I miss her very much..’

அவளுடைய கரங்களில் அப்படியே கவிழ்ந்து வந்தனா அழ செய்வதறியாது கலங்கிப் போனாள் நளினி..

******

தனக்கு மிகவும் பழக்கமான பத்திரிகை நிரூபருக்கு ஃபோன் செய்துவிட்டு காத்திருந்த ஃபிலிப் சுந்தரம் தன்னுடைய பிரத்தியேக தொலைப்பேசி சிணுங்கியதும் உடனே எடுத்து, ‘ஃபிலிப் ஹியர்.’ என்றார்.

‘சார் நாந்தான்..’ என்று மறுமுனையிலிருந்து குரல் வந்ததும்.. ‘சொல்லுங்க, யார் செஞ்ச வேலை இது..’ என்றார் சற்றே கோபத்துடன்.

எதிர் முனையிலிருந்த தயக்கம் அவருடைய கோபத்தை மேலும் கூட்டவே.. ‘என்ன சார் சைலண்டாய்ட்டீங்க? எதுவாருந்தாலும் சொல்லுங்க.’ என்றார்.

‘சார்.. ஒங்க எச்.ஆர் ஹெட் இருக்காங்க இல்ல..’

ஃபிலிப் சுந்தரத்திற்கு அதிர்ச்சியாய் இருந்தது.. ஆனால் அடுத்த நொடியே அதெப்படி ஹாஸ்பிட்டல்லருக்கற வந்தனா இந்த காரியத்தை செய்திருக்க முடியும் என்று தோன்றியது.. ‘என்ன சொல்றீங்க.. வந்தனா நேத்தைக்கு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயி இன்னும் அங்கதான் இருக்காங்க.. அவங்க எப்படிங்க.. என்ன சொல்றீங்க நீங்க..?’

‘அவங்கன்னா அவங்க இல்ல சார்..’

ஃபிலிப் எரிச்சலுடன், ‘என்ன சார் சொல்ல வரீங்க..? தெளிவா சொல்லுங்க..’

‘சார் நா சுருக்கமா சொல்றேன்.. நான் சொல்றத முழுசையும் கேட்டுட்டு அப்புறமா சொல்லுங்க.. இப்படி இடையில கேள்வி கேட்டா என்னால தெளிவா சொல்ல முடியாது.. ப்ளீஸ்..’

ஃபிலிப் சுந்தரத்திற்கு அவருடைய பதற்றம் புரிந்தது. ‘ சரி சொல்லுங்க.. வந்தனா மேடம் பெயர யூஸ் பண்ணி யாரோ இந்த காரியத்த செஞ்சிருக்காங்கன்னு நினைக்கேன்.. சொல்லுங்க.. யார் ஒங்க Press ஃப்ரெண்ட காண்டாக்ட் பண்ணது?’

‘சொல்றேன் சார்.. இன்னைக்கி காலைல பதினோரு மணி இருக்கும் சார்..’ என்று துவங்கி வந்தனா மேடத்தின் காரியதரிசி தன்னுடைய பத்திரிகை நண்பரை அழைத்து அவர் மறுத்தும் வற்புறுத்தி சேர்மனின் காரியதரிசிக்கு ஃபேக்ஸ் செய்ய வைத்ததை சுருக்கமாக கூறி முடிக்க ஃபிலிப் சுந்தரத்திற்கு நடந்தது என்ன என்று விளங்கியது.

‘வந்தனா மேடத்தோட பி.ஏ அவங்க பெயர் என்னன்னு சொன்னாங்களாமா.. கேட்டீங்களா?’

‘பேர் ஏதும் சொல்லலையாம் சார்..ஆனா அது ஒரு மேல் (Male)னு மட்டும் சொன்னார். அவங்களுக்கு ஒரு பி.ஏ தான சார்.. அவர கூப்ட்டு கேளுங்களேன்.. நான் வச்சிடறேன் சார்.. நாந்தான் இந்த விஷயத்த ஒங்கக்கிட்ட சொன்னேன்னு எங்க எடிட்டருக்கு தெரிஞ்சா பிரச்சினையாயிரும் சார்.. நீங்க ஒரு உதவி கேட்டா மாதிரி நானும் இந்த உதவிய கேக்கேன்..’ என்ற கோரிக்கையுடன் இணைப்பு துண்டிக்கப்பட ஃபிலிப் சுந்தரம் அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தார்.

வந்தனாவின் காரியதரிசி பெண்ணாய் இருக்க யார் அவருடைய பொசிஷனை உபயோகித்து இதை செய்திருக்க முடியும்?

சட்டென்று நினைவுக்கு வந்தவராய் தன்னுடைய இண்டர்காமை சுழற்றி, ‘சுபோத்.. ப்ளீஸ் கம் டு மை கேபின்.. ஃபாஸ்ட்..’ என்றார்.

‘சார்.. சேர்மன் ஒரு சின்ன அசைன்மெண்ட் குடுத்துருக்கார். அத முடிச்சிட்டு வந்தா போறுமா?’

ஃபிலிப் சுந்தரத்திற்கு வேறு வழி தெரியவில்லை.. புது சேர்மன் குடுத்த வேலை கிடக்கட்டும் நீங்க இங்க வாங்க.. என்று கூறவா முடியும்? ‘Ok.. But make it fast.. It is urgent.’ என்றவாறு இணைப்பைத் துண்டிக்கவும் அவருடைய பிரத்தியேக தொலைப்பேசி அலறவும் சரியாக இருந்தது.

எதிர்முனையிலிருந்து சிலுவை மாணிக்கம் நாடாரின் குரல் ஒலிக்க என்னடா இது ரோதனை என்ற நினைப்புடன், ‘சொல்லுங்க சார்?’ என்றார்.


தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

பிலிப் சுந்தரம் ஸார்,
சீக்கிரம் அந்த ப்ரெஸ்ஸோட அதிக ட்ரான்ஸாக்சன் உள்ள ப்ரான்சை பிடிச்சுடுவார்லெ?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

பிடிப்பாரா இல்லையான்னு தெரிஞ்சிக்கிறதுக்கு நீங்க இன்னும் ஒரு வாரமாவது காத்திருக்கணுமே:)