2.5.07

சூரியன் 196

ஃபிலிப் சுந்தரம் அலுவலகம் சென்றடைந்ததுமே தன்னுடைய காரியதரிசி ராஜியை அழைத்தார்.

'இன்னைக்கி ஈவ்னிங் நாலு மணிக்கு நம்ம மீட்டிங் ஹால்ல ஒரு கண்டோலன்ஸ் மீட்டிங்குக்கு ஏற்பாடு பண்ணுங்க ராஜி. மிஸ்டர். மாணிக்கவேலோட வய்ஃபும் ஃபாதரும் அப்புறம் அவங்க டாட்டர் மிஸ் கமலியோட மரணத்துக்கு அஞ்சலிக்காக இந்த கூட்டம்னு ஒரு டி.ஓ. லட்டர் அடிச்சி கொண்டு வாங்க. Whoever wants to attend the funerals can go after the meeting அப்படீன்னு ஒரு ஜெனரல் பர்மிஷனையும் லாஸ்ட்ல சேத்துருங்க.' என்றார். 'Yes Sir.' என்றவாறு ராஜி வாசலை நோக்கி நடக்க, 'சுந்தரலிங்கம் சார் கேபின்ல இருக்காரான்னு பாருங்க. If he is there check up with his secretary if I could come straightaway.' என்றார்.

'Yes Sir.'

ராஜி வெளியேறவும் அவருடைய பிரத்தியேக தொலைபேசி சிணுங்கவும் சரியாயிருந்தது. 'Philip here.' என்றார்.

எதிர்முனையிலிருந்து வந்த செய்தி அவரை அதிர்ச்சியடைய செய்தது. 'என்ன சுபோத் சொல்றீங்க? Are you sure?'

'Yes Sir. I just got the information from the Secretary.'

'Where is Mr.Murali now?'

'He has admitted himself to the ---------- hospital Sir. I am told that he is still in the ICU.' என்ற சுபோத் ஏதோ சொல்லவந்து தயங்குவது தெரிந்தது.

'என்ன, சொல்லுங்க' என்றார். 'whatever it is..'

'சார் நம்ம --------------- ஸ்டாஃப் யூனியன் ஆஃபீஸ் முன்னால நம்ம ஸ்டாஃப் மெம்பர்ஸ் டெமோ பண்ணி போலீஸ் வர்ற அளவுக்கு போயிருச்சி சார்.'

ஃபிலிப் சுந்தரத்திற்கு அவருடைய செவிகளையே நம்பமுடியவில்லை. அவருக்கு தெரிந்து அவருடைய வங்கியில் இதுவரை ஊழியர்களுடைய போராட்டமோ, மறியலோ பெரிதாக நடந்ததில்லை. அதுவும் தொழிற்சங்க ஊழியர் தலைவரை ஒருவர் ஆள் வைத்து அடித்து அதனைத் தொடர்ந்து தொழிலாளர்களுடைய சாலை மறியல்... காவல்துறையினர் வந்து தலையிடும் அளவுக்கு!

மாதவன் வந்து பதவியேற்றதிலிருந்து கடந்த ஒருவார காலத்தில்தான் என்னவெல்லாம் நடந்து முடிந்திருக்கிறது. நம்பமுடியவில்லை அவரால்....

'சார் இன்னொரு விஷயம்.' சுபோத் எதிர்முனையிலிருந்து மீண்டும் தயங்குவது தெர்ந்தது.

'Is there anything else Subodh?'

'Yes Sir...'

'Then go ahead...' என்றார் சலனமில்லாமல். இதற்கு மேல் என்ன நடக்க முடியும்?

'The Union VP has lodged a police complaint against our ED Sir.....' மேலே தொடர முடியாமல் சுபோத் தயங்க ஃபிலிப் அதிர்ச்சியடைந்தார்.

'Is it? But why...? How could he..'

'தெரியல சார். I just received a phone call from one of my friends who was in the gathering... I don't have the details... If you want I'll get it.'

'Please do that.' என்றவர் தொடர்ந்து, 'Where is our ED? In the Office?' என்றார்.

'No Sir.. he hasn't come in yet.'

'OK.. Please find out the details of the complaint loged against him and let me know... make it fast.'

எதிர்முனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டும் சில நொடிகள் ஒலிவாங்கியை கையிலேயே வைத்திருந்த ஃபிலிப் அவருடைய இண்டர்காம் ஒலிப்பதை உணர்ந்து கையிலிருந்த ஒலிவாங்கியை வைத்துவிட்டு இண்டர்காமை எடுத்தார்.

'CGM is in his cabin Sir... his PA says he is free.' என்றார் அவருடைய காரியதரிசி ராஜி. 'நீங்க வரீங்கன்னு சொல்லட்டுமா சார்?'

'Yes.. I am going...' என்ற ஃபிலிப் உடனே எழுந்து அறையை விட்டு வெளியேறினா. ராஜியின் இருக்கையை கடக்கும்போது, 'If Subodh called divert the call to CGM's cabin.. I'll be there for another ten to fifteen minutes...' என்று கூறிவிட்டு ஆங்காங்கே ஊழியர்களும் கடைநிலை அதிகாரிகளும் சிறு, சிறு குழுவாக தங்களுக்குள் விவாதிக்கொண்டு நிற்பதை கவனியாதவர்போல் சுந்தரலிங்கத்தின் அறையை நோக்கி நடந்தார். அவர் நினைத்திருந்ததைவிடவும் அன்றைய தினம் வில்லங்கம் நிறைந்ததாகவே இருக்கும் என்று தோன்றியது.

*********
நந்தக்குமார் மருத்துவமனையை அடைந்தபோது வாசலைவிட்டு சற்று தள்ளி காவல்துறையினரின் வாகனம் நிற்பது தெரிந்தது. அதனருகில் எஸ்.ஐ. போன்ற தோரணையுடன் இருவர் நிற்பதும் அவர்களிடமிருந்து சற்று ஒதுங்கி சில காவலர்கள் நிற்பதும் தெரிந்தது. அவர்களிடமிருந்து சற்று தொலைவிலேயே ஆட்டோவை கட் பண்ணிவிட்டு இறங்கியவன் உள்ளே நுழைவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் நின்றான்.

பிறகு வந்ததுதான் வந்தோம் உள்ளே சென்று பார்த்துவிட்டு போய்விடலாம் என்று நினைத்தவாறு மருத்துவமனை வாசலை நோக்கி மெள்ள நகர்ந்தான். அவன் உள்ளே நுழையவும் அவனை உரசிக்கொண்டு ஒரு வாகனம் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அதிலிருந்து சற்றுமுன் ஊழியர் சங்க அலுவலகத்திற்கு முன்பு அவன் சந்தித்த சங்க துணைத் தலைவரும் வேறு சிலரும் இறங்குவதைப் பார்த்தான். 'ஹலோ சார்.' என்றான் துணைத் தலைவர் ஜேக்கப்பைப் பார்த்து. அவரும் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர் என்பது அவனுக்கு தெரியும். நந்தக்குமாரை அவருக்கும் நன்றாக தெரியும் என்றாலும் அவன் அதிகாரி என்பதால் முரளியை பழைய நண்பன் என்ற முறையில் சந்திக்க வந்திருக்கலாம் என்று நினைத்து வெறுமனே பதிலுக்கு ஹலோ என்று கூறிவிட்டு தன் சகாக்களுடன் முன்னே நடந்தார். அவர்கள் முன்னே செல்ல சற்று நேரம் கழித்து நந்து அவர்களை பின் தொடர்ந்தான்.

மருத்துவமனை லாபியில் நுழைந்ததுமே அந்த சிறிய கூட்டத்தை கவனித்துவிட்ட காவல்துறை அதிகாரிகளுள் ஒருவர் அவர்களை நோக்கி வந்தார். 'சார் நீங்க மிஸ்டர் முரளியைப் பாக்க வந்திருந்தீங்கன்னா.. சாரி.. இப்ப அவர பாக்கறதுக்கு பர்மிட் பண்ண முடியாது. He is still in ICU. அடி பலமா படலைன்னாலும் டாக்டர் அவர் இன்னும் நார்மலுக்கு வரலைன்னு சொல்றார். அதனால....'

ஜேக்கப்புடன் வந்திருந்தவர்களுள் ஒருவர் கோபத்துடன் இடைமறிக்க அவர் கையை உயர்த்தி, 'பேசாம இருங்க... நா பேசிக்கறேன்.' என்று கட்டுப்படுத்தினார். பிறகு, 'சார்... அடி பலமா இல்லேங்கறீங்க. அப்புறம் எதுக்கு சார் ICU ல வச்சிருக்காங்க..?' என்றார் சற்று கோபத்துடன்.

'சார்... டாக்டர்ஸ் எங்களையே இன்னும் அவர பாக்க விடல.. அவர் கான்ஷியஸ்ல இல்லேன்னு அவங்க சொல்றப்போ எங்கள என்ன பண்ண சொல்றீங்க?'

ஜேக்கப் திரும்பி தன் சகாக்களைப் பார்த்தார். 'என்ன பண்ணலாம் சொல்லுங்க. போலீசே இன்னும் பாக்கலைன்னா நாம பாக்கணும்னு அடம்புடிச்சா பிரச்சினைதான் வரும்... அதனால...'

சகாக்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பிறகு அதிலொருத்தர், 'சார் நாம குடுத்த கம்ப்ளைண்ட் என்னாச்சின்னு கேளுங்க. இவர்தான ஸ்டேஷன்ல வந்து குடுங்கன்னு சொன்னார்?' என்றார் உரத்த குரலில்.

ஜேக்கப் திரும்பி அதிகாரியைப் பார்த்தார்.

'சார்... நீங்க குடுத்த கம்ப்ளைண்ட்ட வச்சி மட்டும் ஆக்ஷன் எடுக்க முடியாத சூழ்நிலையில நாங்க இருக்கோம்.'

'எதுக்கு சார்? அப்படியென்ன சூழ்நிலை. நாங்கதான் எங்க ஈ.டி சேதுமாதவன்தான் இதுக்கு காரணம்னு க்ளியரா சொல்லியிருக்கோம்லே?' என்றார் சகாக்களுள் ஒருவர் சூடாக.

எஸ்.ஐ. அவரை முறைத்தார். 'சரி.. அப்போ பாபு சுரேஷ்ங்கறது யாரு?'

ஜேக்கப் அதிர்ச்சியடைந்து தன் சகாக்களைப் பார்த்தார் பிறகு எஸ்.ஐயிடம், 'என்ன சார் சொல்றீங்க? அவர் பேர யார் ஒங்கக் கிட்ட சொன்னா?'

'கொஞ்ச நேரத்துக்கு முன்னால எங்களுக்கு ஒரு போன் வந்துது. ஒங்க பேங்க்லருந்துதான் பேசறோம்னு சொன்னார். அதுல போன சனிக்கிழமை ஒங்க மவுண்ட்ரோட் ப்ராஞ்ச் மேனேஜர் பாபு சுரேஷ அடிபட்டுருக்கறவரும் அவரோட யூனியன் ஆளுங்களும் போயி கேரோ பண்ணாங்களாமே. அதுக்காக அவர்தான் இவர ஆள வச்சி அடிச்சிருக்கலாம்னு சொன்னார். இதுக்கு என்ன சொல்றீங்க?'

ஜேக்கப் திரும்பி தன் சகாக்களைப் பார்த்தார். அவர் சென்ற சனிக்கிழமை ஊரில் இல்லை. 'என்னய்யா? சார் சொல்றது உண்மையா?'

'ஆமாம் தலைவரே.. நம்ம சப்ஸ்டாஃப் ஒருத்தர் போன மாசம் ட்ரெய்ன்ல அடிபட்டு செத்ததுக்கு அந்தாள்தான் காரணம்னு போய் கேரோ பண்ணோம்.' என்றார் சகாக்களுள் ஒருவர். 'ஆனா அவர் இப்படி செஞ்சிருக்க மாட்டார் சார்.'

எஸ்.ஐ குறுக்கிட்டு, 'எப்படீங்க சொல்றீங்க? அவர ஏறக்குறைய ரெண்டு மணி நேரமா கேரோ செஞ்சிருக்கீங்க. மன்னிப்பு லெட்டர் எழுதித் தரலன்னா விடமாட்டோம்னு மெரட்டியிருக்கீங்க. அவரும் ஒங்கள வைக்கற எடத்துல வைக்கறேன்னு வார்ன் பண்ணிருக்காரு. அவர் ஏன் இத செஞ்சிருக்கக் கூடாது?'

'இருக்கலாம் சார். ஒங்களுக்கு சந்தேகம் வர்றதுல தப்பில்லை... ஆனா எங்க ஈ.டி. முரளிய அடிக்கறதுக்கு ஆள் ஏற்பாடு செஞ்சிருக்கறதா அவர் ஏற்பாடு பண்ண ஆளே இவர்கிட்ட வந்து சொன்னதா முரளி இவங்கக் கிட்ட சொல்லியிருக்காரே.' என்றார் ஜேக்கப்.

சற்று தள்ளி நின்றிருந்த நந்தக்குமாருக்கும் தன்னிடம் முந்தைய நாள் முரளி சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனாலும் நளினியின் முகம் நினைவுக்கு வர மெளனமாக நடப்பதை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். 'நந்து நாம எதுக்கு வந்தமோ அத மட்டும் பார்ப்போம். முரளி ஒங்களுக்கு ஃப்ரெண்டாருக்கலாம். ஆனா அவனெ நிறைய பேருக்கு பிடிக்காதுங்கறது நமக்கு தெரியும். நீங்க அவனெ பாக்க போறதே எனக்கு புடிக்கலை. இருந்தாலும் வேற வழியில்லாம பொறுத்துக்கிட்டிருக்கேன்.' முரளியை அடிக்க சேதுமாதவன் ஏற்பாடு செய்திருந்ததாக தன்னிடம் அவன் கூறியதை நளினியிடம் கூறியபோது தனக்கு விழுந்த அர்ச்சனை அவனுக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

'அதனால மிஸ்டர் முரளியா நினைவுக்கு வந்து இன்னார் மேல தனக்கு சந்தேகம் இருக்குன்னு சொன்னப்புறம்தான் எங்களால ஆக்ஷன் எடுக்க முடியும். இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சி நீங்க அவர்கிட்ட விசாரனை பண்லாம்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. அதுவரைக்கும் வேற யாரையும் அவர சந்திக்க பர்மிட் பண்ண முடியாது... அதனால நீங்க வெளியில வெய்ட் பண்ணுங்க. இது ஹாஸ்ப்பிடல்... ஒங்க கோபதாபத்த காட்டறதுக்கு இது இல்ல இடம்... ப்ளீஸ்...' என்றவாறு அவர் வாயிலை நோக்கி கைகாட்ட ஜேக்கப் தன் சகாக்களை கண்சாடைக் காட்டி வெளியே அழைத்துச் சென்றார்.

நந்தக்குமார் அவர்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாததுபோல் விலகி லாபியில் கிடந்த இருக்கைகள் ஒன்றில் அமர்ந்தான்.

தொடரும்...

No comments: