6.10.06

சூரியன் 130

மனைவியின் முதுகையே பார்த்தவாறு நின்றிருந்த மாணிக்கவேல் சந்தோஷிடம் தான் கூறியதை இவள் ஒட்டு கேட்டிருப்பாளோ என்று நினைத்தார்.

தன் மனைவி எந்த நேரத்தில் என்ன செய்வாள் என்பதை அறிந்திருந்த மாணிக்கம் கடந்த சில நாட்களாக அவர் தனக்கு ஒரு புதிராகவே மாறிப்போயிருப்பதை உணர்ந்தார்.

அவர் பொறுப்பிலிருந்த பல்லாவரம் கிளை வர்த்தக அளவைப் பொறுத்தவரை சென்னையிலுள்ள கிளைகளில் ஓரளவுக்கு முக்கியமானதாக இருந்ததால் தொடர்ந்து விடுப்பு எடுக்க இயலாது என்பதை உணர்ந்திருந்தாலும மனைவியை நம்பி எப்படி தன்னுடைய தந்தையையை விட்டுவிட்டு அலுவலகம் செல்வதெனவும் யோசித்தார்.

எப்படியும் இன்னும் ரெண்டு நாள்ல நாம ஆஃபீசுக்கு போயாகணும். ஜோ திறமையானவர்தான் என்றாலும் அவருடைய அனுபவம் அதிக நாட்களுக்கு கிளையில் அன்றாடம் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்று தோனலை.. ஆனா அப்பாவையும் தனியா விட்டுட்டு போ முடியாது. என்ன செய்யலாம்? பேசாம அப்பாவ கவனிக்க ஒரு நர்ச ஏற்பாடு செஞ்சா என்ன?
அப்பாவ பாக்கற டாக்டர் கிட்ட சொல்லி இதுக்கு ஏற்பாடு செஞ்சிர வேண்டியதுதான்.. நாளையிலருந்தே வரச்சொல்லிட்டா ஒரு ரெண்டு நாள் அவங்க கூட இருந்து செய்ய வேண்டியத சொல்லிக் குடுத்துட்டு நாம ஆஃபீஸ் போயிரலாம்.

அவருடைய குடும்ப மருத்துவரை அவருக்கு பல வருடங்களாக பழக்கம் இருந்ததுடன் அவர் அருகிலேயே குடியிருந்ததால் தன்னுடைய தந்தைக்கு பணிவிடை செய்ய பிரத்தியேகமாக ஒரு நர்சை அவர் மூலமாக அமர்த்தலாம் என்று நினைத்தார். அதை உடனே செயல்படுத்தினாலென்ன என்ற எண்ணமும் தோன்ற தன்னுடைய செல் ஃபோனை எடுக்க அறைக்குள் திரும்பினார்.

‘என்ன டாட்.. வாசல்லயே நின்னுக்கிட்டு என்னமோ யோசனையில இருந்தீங்க? என்ன விஷயம்?’

‘இல்ல சந்தோஷ்.. பேசாம தாத்தாக்கு ஒரு நர்ச ஏற்பாடு செஞ்சா என்னன்னு தோனிச்சி.. அதான் யோசிச்சி பார்த்தேன். நம்ம டாக்டர்கிட்டவே கேக்கலாம்னு பாக்கேன். தெரிஞ்ச ஆளாருந்தா நல்லதில்ல? என்ன சொல்றே சந்தோஷ்?’

சந்தோஷ் குழப்பத்துடன் தன் தந்தையைப் பார்த்தான். ‘இப்ப எதுக்கு டாட் திடீர்னு இந்த ஐடியா? அதான் அம்மா இப்ப ஃப்ரீயாத்தான இருக்காங்க?’
மாணிக்கம் இல்லையென்பதுபோல் தலையை அசைத்தார். ‘இல்ல சந்தோஷ்.. அம்மா இப்பருக்கற மனநிலையில தாத்தாவ சரியா கவனிச்சிக்க முடியும்னு எனக்கு தோனல..’

‘ஏன் டாட்.. ஏன் அப்படி சொல்றீங்க?’

மாணிக்கம் தன் மகனையே சிறிது நேரம் பார்த்துவிட்டு கட்டிலில் கிடந்த தன்னுடைய செல்ஃபோனை எடுத்து குடும்ப மருத்துவரின் எண்ணை தேடலானார். ‘ஒங்கிட்ட சொல்றதுக்கென்ன சந்தோஷ். I am unable to believe that she has changed completely.. I am not sure.. she may be faking it.. அதனாலதான்.. நா நிம்மதியா ஆஃபீசுக்கு போணும்னா தாத்தாவ கவனிக்க ஒரு ஆள் இந்த வீட்ல இருக்கணும்.. அட்லீஸ்ட் அம்மா தாத்தாவ சரியா கவனிச்சிக்கிறாங்களான்னு பாக்கறதுக்காவது.. நா சொல்ல வர்றது ஒனக்கு புரியும்னு நினைக்கேன்..’

சந்தோஷ் மெள்ள தலையை ஆட்டினான். ‘புரியுது டாட்.. இதுக்கு மேலயும் இதப்பத்தி ஆர்க்யூ பண்ண நான் விரும்பல.. If that’s what you want.. go ahead.. ஆனா ஒன்னு டாட்..’

டயல் செய்வதை நிறுத்திவிட்டு தன் மகனைப் பார்த்தார் மாணிக்கம். ‘என்ன சந்தோஷ்..?’

‘நீங்க செய்யற இந்த காரியமே அம்மாவ நீங்க இன்னமும் நம்பலைங்கறத காட்டிரும்..’

மாணிக்கம் தன் மகனை வியப்புடன் பார்த்தார். ‘காட்டட்டுமே.. அதுவும் நல்லதுக்குத்தான். அவ மனசுக்குள்ள வேற ஏதாவது ஐடியா இருந்தா அது நடக்காதுங்கறதையும் அவ புரிஞ்சிக்கணும்.. அதுக்குத்தான் இது.. Don’t try to stop me Santhosh.. Something inside me tells me that she is hiding something from you and me..’

சந்தோஷ் கவலையுடன் தன் தந்தையையே சிறிது நேரம் பார்த்துவிட்டு வாசலை நோக்கி நடந்தான்.. ‘As you wish Dad.. Go ahead..’ என்றவாறு அவருடைய பதிலுக்கு காத்திராமல் வெளியேறினான்.

மாணிக்கம் வருத்தத்துடன் வெளியேறிய தன் மகனையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றார். பிறகு தலையை அசைத்தவாறு தேடிப்பிடித்திருந்த மருத்துவரின் எண்ணை மீண்டும் டயல் செய்வதில் முனைந்தார்.
எதிர் முனையில் நெடு நேரம் பதில் இல்லாமல் இருக்கவே துண்டித்துவிட்டு கட்டிலில் படுத்து கண்களை மூடினார்..

அவரையுமறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சு வெளியேறியது. அடுத்த நிமிடமே அவருடைய தொலைப்பேசி சிணுங்க யாரென பார்த்தார்.

வந்தனா!

*******

அவளுடைய கரங்களில் அப்படியே கவிழ்ந்து வந்தனா அழ செய்வதறியாது கலங்கிப் போனாள் நளினி..

எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ..

சற்று நேரத்தில் வந்தனா சுதாரித்துக்கொண்டு எழுந்து நளினியின் கரங்களை விடுவித்தாள்.

‘I am sorry Nalini..’

‘பரவால்லை மேடம்.. நீங்க இப்படி உணர்ச்சிவசப்படறது ஒங்க ஒடம்புக்கு நல்லதில்லன்னு எனக்கு தெரிஞ்சாலும்.. ஒங்களோட துக்கத்துக்கு இது ஒரு அவுட்லெட்டா இருக்குமேன்னுதான் நான் தடை பண்ணாமல் ஒக்காந்திருந்தேன்.. How do you feel now madam, relieved?’

வந்தனா மெலிதாக புன்னகைத்தாள் தலையைக் கோதியவாறே..

‘ஆமாம் நளினி.. நீயும் நந்தக்குமாரும் வந்தது எனக்கு எவ்வளவு ஆறுதலா இருக்கு தெரியுமா? I am really grateful to you. எப்படா அந்த இருட்டடிச்ச வார்டுலருந்து போவோமோன்னு இருந்தது. சரியான நேரத்துல நீங்க ரெண்டு பேரும் வந்தீங்க.’

நளினி வந்தனாவின் கரங்களைப் பற்றி லேசாக அழுத்தினாள். ‘It’s OK Madam.. நந்து மாணிக்கம் சாரோட டாட்டர் ஃப்யூனரலுக்காக சென்னைக்கு போறேன்னு சொன்னப்போ எனக்கு வரணுங்கற ஐடியா இல்லை. அவர் ஒங்கள ICUல சேர்த்திருக்குன்னு ஜோ சொன்னார்னு சொன்னப்பத்தான் ஒடனே அவரோட வரணும்னு தீர்மானிச்சேன்.. வந்தது இப்ப எவ்வளவு நல்லதா போயிருச்சி மேடம்.. அத்தோட மேடம்.. இதுல எனக்கு வேறொரு நல்லதும் நடந்திருக்கு..’

வந்தனா வியப்புடன் அவளைப் பார்த்தாள். என்ன என்பதுபோல் புருவத்தை உயர்த்தினாள்.

தன்னையுமறியாமல் வந்து விழுந்த வார்த்தைகள் நளினையையே ஒரு நொடி திகைக்க வைத்தது. இந்த நேரத்தில் இதைப் பற்றி பேச வேண்டுமா என்று தயங்கினாள்..

‘என்ன நளினி.. ஏதோ சொல்ல வந்தே.. என்ன நல்லது நடந்தது.. நானும் தெரிஞ்சிக்கறேனே.. சொல்லேன்..’ என்றாள் வந்தனா..

நளினி தயக்கத்துடன் அவளைப் பார்த்துவிட்டு தலையைக் குனிந்துக் கொண்டாள். ‘எனக்கும் நந்துவுக்கும் கல்யாணம் ஏறக்குறைய எட்டு வருசமாயிருச்சி மேடம்.. குழந்தைன்னு இதுவரைக்கும் இல்லை. அதனாலயே எங்க ரெண்டு பேருக்கும் இடையில பிரச்சினை. அத்தோட எனக்கு போன தடவ கிடைச்ச ப்ரமோஷன் வேற. கொஞ்ச நாளாவே எங்க ரெண்டு பேருக்கும் இடையில ஈகோ ப்ராப்ளம். நீ பெருசா நான் பெருசாங்கற மாதிரி... பிரிஞ்சி போய்ட்டா என்னன்னு கூட நினைச்சிக்கிட்டிருந்த நேரத்துலதான் இந்த பயணம் செய்ய வேண்டி வந்தது.. வர்ற வழியில மனச விட்டு பேச நேரமும் கிடைச்சது.. நந்துவுக்கும் எனக்கும் இடையிலருக்கற கம்யூனிக்கேஷன் கேப்பும் இப்ப சரியாயிருச்சி மேடம்.. இந்த நேரத்துல ஒரு குழந்தையும் இருந்துட்டா.. I think.. it would save our marriage..’

நளினியின் குரல் மேலே தொடரமுடியாமல் நடுங்க வந்தனா சில்லிட்டுப்போயிருந்த அவளுடைய கரங்களை எடுத்து தன்னுடைய கரங்களில் பொதிந்துக்கொண்டாள்..

‘ஏய்... what is this? உன் மனசுல கெடந்த பாரத்த எறக்கி வச்சாச்சு இல்லே.. Relax.. Let Nandakumar come back.. we will sit and discuss.. நீ சென்னைக்கு வந்ததும் நல்லதா போச்சி.. இங்க எத்தனையோ எக்ஸ்பர்ட் டாக்டர்ஸ் இருக்காங்க.. This is not a major issue.. நீ இப்ப இந்த பிரச்சினைய எங்கிட்ட சொன்னதும் என் பிரச்சினை எனக்கு மறந்தே போச்சி.. I feel energised.. சீக்கிரமே சரியாயிரணுங்கற ஆசை வந்திருச்சி.. I should thank you for this..’
நளினி கண்களைத் துடைத்துக்கொண்டு வந்தனாவைப் பார்த்தாள்..

‘Thank you Madam...’

வந்தனா கட்டிலில் கிடந்த செல்ஃபோனைப் பார்த்தாள். சட்டென்று நினைத்துக்கொண்டவளாய்.. ‘நளினி என் செல்ஃபோன்ல மாணிக்கத்தோட நம்பர் இருக்கும் பார்.. அத டயல் பண்ணி குடேன்.. அவர் கிட்ட பேசணும் போல இருக்கு.. பாவம் அவர் எந்த மனநிலையில இருக்காரோ.. ராணிக்கிட்டயும் பேசணும்போல இருக்கு நளினி.. ப்ளீஸ்..’ என்றாள்.

‘இது இப்ப தேவையா மேடம்..ஏற்கனவே எமோஷனலாருக்கீங்களே?’ என்றாள் நளினி..

வனிதா லேசான புன்னகையுடன் அவளைப் பார்த்தாள். ‘நோ நளினி.. உன்கிட்ட பேசனதுக்கப்புறம் I feel Ok.. Nothing will disturb me anymore.. Please dial the number..’

அப்போதும் நளினி பிரியமில்லாமல் நம்பர் கிடைக்கக் கூடாதே என்ற எண்ணத்துடன் டயல் செய்ய எதிர் முனையில் மாணிக்கத்தின் குரல் கேட்டதும் தயக்கத்துடன் வந்தனாவிடம் செல்ஃபோனைக் கொடுத்துவிட்டு கவலையுடன் அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

"பறவைகள் பலவிதம்........
ஒவ்வொன்றும் ஒருவிதம்...."

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

பேராசிரியர் பாடகராய்ட்டீங்க போல:)