13.10.06

சூரியன் 133

தனபால்சாமி, SP(Crime Branch)..

என்ன வேணும் இவருக்கு? ஏதாவது லோன் சமாச்சாரமா? அதற்கெதுக்கு நம்மள வந்து பாக்கணும்? ஏதாச்சும் ஃபங்ஷனுக்கு இன்வைட் பண்ண வந்திருப்பாரோ..

‘May I come in?’ என்ற கம்பீரமான குரல் கேட்டு நிமிர்ந்தவர் தன் முன்னால் விரைப்புடன் நின்றவரைப் பார்த்தார். நல்ல வேளை, சீருடையில் இல்லாமல் இருந்தார்.

மாதவன் எழுந்து புன்னகையுடன், ‘Yes, Mr.Dhanapal.. please come in..’ அவரை வரவேற்று எதிரிலிருந்த இருக்கைகளில் ஒன்றைக் காட்டினார்.

‘சொல்லுங்க.. ஏதாவது முக்கியமான விஷயம் இல்லாம வந்திருக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன். இன்னைக்கித்தான் நான் சார்ஜ் எடுத்திருக்கேன்.. கொஞ்சம் பிசி..’

தனபால் சாமி புன்னகையுடன், ‘You are right Mr.Madhavan, it is an important matter. நீங்க இன்றைக்குதான் சேர்மனாக சார்ஜ் எடுத்திருக்கீங்கன்னும் தெரியும். இருந்தாலும் what I am going to tell you now is so important I thought you should be forewarned about what you should expect...’

மாதவன் ஒன்றும் விளங்காமல் அவரையே பார்த்தார். என்ன சொல்றார் இவர்.. Forewarning? About what?

‘நான் சொல்றது ஒங்களுக்கு வியப்பா தெரியலாம் Mr.Madhavan. ஆனா ஒரு பத்து நிமிஷம் எனக்காக ஸ்பேர் செஞ்சீங்கன்னா ஒங்களுக்கும் நல்லதுன்னு நினைக்கிறேன்.’

என்னடா இது? இன்னைக்கி இதுவரைக்கும் நடந்தது போறாதுன்னா இவர் வந்து.. பத்து நிமிஷம் சொல்ற அளவுக்கு அப்படி என்ன நடந்திருக்கப் போவுது. ஒரு வேள அந்த சோமசுந்தரம் விஷயமாருக்குமோ..

‘சொல்லுங்க.. பத்து நிமிஷத்துக்குள்ள முடிச்சிட்டீங்கன்னா நல்லாருக்கும்.’

தனபால் சாமி மீண்டும் புன்னகையுடன், ‘Thank you Mr. Madhavan. You won’t regret it.’ ஆரம்பித்தார்.

‘If you don’t mind.. could you tell me at what time you reached Chennai?’

மாதவன் வியப்புடன் அவரை பார்த்தார். Is he interrogating me? But why?

‘எதுக்கு இந்த கேள்வின்னு நா தெரிஞ்சிக்கலாமா?’ என்றார்.

தனபால் சாமி, ‘Sir Please cooperate with me.. I have reason to believe that someone in your own organization has intentionally used your name for a nefarious act when you were not even in Chennai.. That’s why this question. Please answer my question.’ என்றார் பொறுமையுடன்.

‘Used your name for a nefarious act’ என்ற வாக்கியம் மாதவனை பயமுறுத்தியது. என்னவாருக்கும்? கொலையா? கடத்தலா?

‘Mr.Madhavan?’

மாதவன் நிமிர்ந்து எதிரிலிருந்தவரைப் பார்த்தார். ‘நேற்று சாயந்தரம் சுமார் ஆறு மணி இருக்கும். மும்பையிலருந்து நான், என் மனைவி, என் மகள்னு மூனு பேர் ஜெட் ஏர்வேஸ் ஃப்ளைட்ல வந்தோம். என்னெ ரிசீவ் பண்ண வந்திருந்த என்னோட சீனியர் எக்ஸ்க்யூட்டிவ்ஸ் will vouch this.’

தனபால் சாமி தேவையில்லை என்பதுபோல் தலையை அசைத்தார். ‘நீங்க எந்த ஃப்ளைட்ல எத்தன மணிக்கு வந்தீங்கன்னு ஏற்கனவே தெரிஞ்சிக்கிட்டுத்தான் ஒங்கள பாக்கவே வந்தேன்.. Don’t mistake me.. I just wanted to confirm..’

‘சொல்லுங்க Mr.தனபால்.. நீங்க கேட்ட கேள்விக்கு என்ன அர்த்தம்? You said someone in my organization used my name for unwanted act.. You actually said nefarious act. Is it an illegal act, a crime.. or..’

‘சொல்றேன். அதுக்கு முன்னால இங்க ஒங்க பேருக்கு சிமிலரா பேர் இருக்கற எக்ஸ்க்யூட்டிவ்ஸ், ஐ மீன் மேல்மட்டத்துல, யாராவது இருக்காங்களா?’

மாதவன் யோசித்தார். வேறு யார் இருக்க முடியும் சேதுமாதவனைத் தவிர.. அவர் காலையில் கமிட்டி கூட்டங்களுக்கு செல்வதற்கு முன்னரே அவருடன் தலைமையகத்திலிருந்து அனைத்து உயர் அதிகாரிகளுடைய பெர்சனல் கோப்பையும் மேல்வாரியாக ஆராய்ந்திருந்ததால் சேதுமாதவனைத் தவிர தன்னுடைய பெயரில் வேறு யாரும் இருக்க முடியும் என்று தோன்றவில்லை. ‘இல்லன்னுதான் நினைக்கேன். அட்லீஸ்ட் நீங்க சொன்ன மேல் மட்டத்துல யாரும் இல்லை.. மிஸ்டர் சேதுமாதவனைத் தவிர.’

தனபால்சாமியின் முகம் சட்டென்று ஒரு நொடி பிரகாசமானது. ஆனால் அடுத்த நொடியே தன்னுடைய உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு, ‘What is he?’ என்றார்.

‘He is our Executive Director. ஏறக்குறைய முப்பது வருட வங்கி அனுபவம் உடையவர். He is my number two..’

‘I see..’ என்று தனபால்சாமி சற்று நேரம் கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தார்.

‘இப்ப சொல்லுங்க மிஸ்டர் தனபால்.. What was the thing that he or someone else had done in my name? I would like to know.’

தனபால்சாமி அவரைக் கூர்ந்து பார்த்தார். ‘அவரோ அல்லது அவருடைய உத்தரவின்பேரில் வேறு சிலரோ தமிழ்நாட்டின் ஒரு பெரிய தொழிலதிபரை கடத்திச் சென்று, இரண்டு நாட்கள் சென்னையில் ஒரு அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துவிட்டு அவர்களுடைய காரியம் நிறைவேறியதும் விடுவித்திருக்கிறார்கள்.’

மாதவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடத்தல், துன்புறுத்தல் அல்லது கொலை மிரட்டல்.. சேதுமாதவன் தன்னோட காரியத்த சாதிக்க என்ன வேணும்னாலும் செய்வார் போலருக்கே.. will he attempt these things on me as well? ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்.. சரீஈஈஈ.. எதுக்கு என் பேரை உபயோகிச்சார்.. அதுவும் நான் சென்னையில் இல்லாத சமயத்தில்.. நான் சம்பந்தப்பட்ட சம்பவம் நடந்த அன்று சென்னையில் இல்லை.. அல்லது இந்த வங்கிக்கு எந்தவிதத்திலும் தொடர்பு இல்லை என்பதை எளிதாக நிரூபிக்கக் கூடிய சூழ்நிலையில் என் பெயரை உபயோகிக்கும் அளவுக்கு அவர் ஒரு முட்டாளா என்ன?

‘அதெப்படி சார்.. அவர்தான் இந்த சம்பவத்துக்கு பின்னால இருக்கார்னு அவ்வளவு உறுதியா சொல்றீங்க? Do you have any evidence?’

ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தார் தனபால்சாமி. ‘அவரோட ஆட்களால கடத்தப்பட்ட தொழிலதிபர் ஒரு கணிசமான தொகையை ஒங்க பேங்க்லருந்து கடனா வாங்கிட்டு கட்ட முடியாம தவிச்சிக்கிட்டிருக்கறவர். ஆனால் அவர் வேண்டுமென்றே கடனை அடைப்பதை தவிர்க்கிறார் என்று நினைத்து அவரை அடியாட்களை வைத்து கடத்தி, மிரட்டி, துன்புறுத்தி ஒரு வாரத்திற்குள் அவர் கடனில் பாதியை அடைப்பதாக வாக்குறுதியளித்தவுடன் விடுவித்திருக்கிறார்கள்..’

மாதவன் வியப்புடன் தனபால்சாமியைப் பார்த்தார். ‘இப்பவும் நீங்க circumstantial evidence வைத்துத்தான் பேசறீங்கன்னு நினைக்கிறேன். How can you be so sure that it was Sedhumadhavan who is behind this.. Then, how do you say that he used my name?’

தனபால் என்ன சொல்வதென தனக்குள்ளேயே ஒத்திகைப் பார்ப்பதுபோல் சற்று நேரம் மவுனமாய் இருந்தார். பிறகு, ‘அந்த தொழிலதிபர் விடுவிக்கப்பட்டதும் நேரா வந்தது எங்கக்கிட்டதான். அவர் கொடுத்த புகார்ல டிஸ்க்ரைப் பண்ண ஆட்கள தற்செயலா வேறொரு கேஸ்ல புடிச்சோம். அதுல ஒருத்தன் எங்கள அனுப்புனவர் மாதவன்.. இந்த பேங்க்ல பெரிய ஆஃபீசர்னு ஒத்துக்கிட்டான். அதுக்கப்புறம் அவன்கிட்டருந்து வாங்குன நம்பருக்கு ஒரு எஸ்.ஐ ஃபோன் செஞ்சப்போ இவர் நான் மாதவன் இல்லன்னு சொல்லியிருக்கார். கொஞ்சம் ஸ்டேஷனுக்கு வந்து போக முடியுமான்னு எங்க எஸ்.ஐ கேட்டப்போ இவர் தான் இன்னார்னு சொல்லி அவரையே மிரட்டியிருக்கார். அதுக்கப்புறம் ஒரு மணி நேரத்துல மினிஸ்டர் லெவல்லருந்து ஃபோன் வந்து அந்த ஆளுங்கள கேஸ் ஒன்னும் ஃபைல் பண்ணாம விட்டிருக்காங்க. அதனாலதான் அவ்வளவு உறுதியா சொல்றேன். இவர் அந்த வேலைய செஞ்சதுமில்லாம தன்னோட ஆட்கள் சொன்ன ஆளே தான் இல்லேன்னு மறுத்திருக்கார். அதுக்கப்புறந்தான் நான் கேள்விப்பட்டேன் புதுசா சேர்மனா வர்றவர் பெயர் மாதவன்னு.. அதனாலதான் சொல்றேன் அவர் ஒங்க பெயர யூஸ் பண்ணிருக்கார்னு..’

கடன் வாங்கிவிட்டு இன்சால்வன்சி பெட்டிஷன் கொடுத்து ஏமாற்ற நினைக்கும் பெரும் பணமுதலைகளை அடியாட்களை வைத்து மிரட்டும் வேலை அவருடைய முந்தைய வங்கியிலும் உள்ளதுதான். ஆனால் அத்தகைய செயலில் வங்கியின் உயர் அதிகாரிகள் எவருமே நேரடியாக தலையிடமாட்டார்கள். அப்படியே தலையிட்டாலும் தங்களுடைய பெயர் அத்தகைய அடியாட்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள்..

ஆனால்.. சேது.. ச்சே.. ஒன்று சரியான முட்டாளாக இருக்கவேண்டும் அல்லது என்னை யார் என்ன செய்துவிட முடியும் என்ற ஆணவமாக இருக்க வேண்டும். முட்டாளாக இருந்தாலும் பரவாயில்லை.. என்னை யாரும் எதுவும் செய்யமுடியாது என்று நினைப்பவர்தான் மிகவும் ஆபத்தானவர் என்பது மாதவன் அறிந்ததுதான்..

‘I understand Mr.Dhanapal.. you said they were caught in some other case as well.. Was my name used in that case also?’

‘இருக்கலாம்..’

‘அது என்ன கேஸ்னு நா தெரிஞ்சிக்கலாமா?’

தனபால் சற்று யோசித்தார். வீனாக அந்த இளம் பெண்ணின் பெயரை சந்திக்கு கொண்டுவரவேண்டுமா என்ன? பாவம் முன் பின் யோசியாமல் செய்த காரியந்தானே.. அதுவும் தன் மகளுடைய சிநேகிதியாயிற்றே.. வேண்டாம் என்ற முடிவுடன், ‘சாரி மிஸ்டர் மாதவன்.. That is still under investigation.. அதுவுமில்லாம அதுல ஒங்க பெயர யூஸ் பண்ணதும் இன்னும் தெளிவாகவில்லை.. உங்களை எச்சரித்துவிட்டு போகலாம் என்ற எண்ணத்துடனேயே இங்கு வந்தேன். தேவைப்பட்டால் மீண்டும் சந்திப்பேன்.. உங்களுடயை முழு ஒத்துழைப்பும் எனக்கு தேவைப்படும். பெரிய அதிகாரிகள் என்ற போர்வையிலும், அரசில் உள்ளவர்களுடன் ஒத்துழைப்பு இருக்கிறது என்பதாலும் இத்தகைய கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களை சட்டம் பார்த்துக்கொண்டிருக்காது என்பதையும் தெளிவுபடுத்தவே முன்னறிவிப்பில்லாமல் உங்களை சந்திக்க வந்தேன்.. குட் பை..’

விறைப்புடன் வெளியேறிய தனபால்சாமி அறைக்கதவை மூடிக்கொண்டு செல்லும்வரை தன் இருக்கையில் அமர்ந்திருந்த மாதவன்.. what a day.. என்று முனுமுனுத்தவாறு தன் செல்ஃபோனை எடுத்து மகளை அழைத்தார். எதிர் முனையில் எடுத்ததும், ‘டேய்.. அப்பா பொறப்பட்டுட்டேன்.. ரூமுக்கு வந்துட்டீங்களா?’ என்றார்.

‘எஸ் டாட்.. சீக்கிரம் வந்து சேருங்க.. அம்மா ஃபோன கையில பிடிச்சிக்கிட்டு டென்ஷனோட இருக்காங்க.. நீங்க இன்னும் கால் மணியில இங்க இல்லன்னா அம்மா சீனிக்கு ஃபோன் பண்ணிருவாங்க போலருக்கு.. சீக்கிரம்.’

மாதன் புன்னகையுடன் இணைப்பைத் துண்டித்துவிட்டு தன்னுடைய லாப்டாப்பை எடுத்துக்கொண்டு வெளியேற அறை வாசலில் காத்திருந்த அவருடைய ஓட்டுனர் அதை பெற்றுக்கொண்டு முன்னே சென்றான். ‘ஓக்கே சுபோத் நாளைக்கு பாக்கலாம்..’ என்றவாறு வெளியேறி லாபியில் அவருக்காக காத்திருந்த உயர் அதிகாரிகளிடம் கையைசைத்து விடைபெற்று வாகனத்தில் ஏறி அமர்ந்தார் மாதவன்..

தொடரும்..

2 comments:

அருண்மொழி said...

What a day!!!.

மாதவனுக்கு மாதவனால் தொல்லைதான். எப்போது இது எல்லாம் சரியாகும்?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அருண்மொழி,

எப்போது இது எல்லாம் சரியாகும்?//

அது சரியாகும்போது கதை முடிஞ்சிரும்:)