1.3.07

சூரியன் 180

அறைக்கதவுகளை தாளிட்டுவிட்டு தத்தி தத்தி நடந்து கட்டிலை அடைந்த சீனி தன் கைத்தாங்கிகளை உதறிவிட்டு படுக்கையில் விழுந்தான்.

கண்கள் உத்திரத்திலேயே நிலைகுத்தி நின்றன..

Why should this happen? Why only to me? What did I do to deserve this?

எவ்வளவு கஷ்டப்பட்டு மைதிலிய சம்மதிக்க வச்சேன்..

அப்பாவும் மனசு மாறி மைதிலிய ஏத்துக்க ஆரம்பிச்சிருக்கறப்போ ஏன் இப்படியெல்லாம் நடக்குது?

Where do I go from here?

மைதிலிக்கிட்டருந்து ஃபோனையே காணமே.. நா சொன்னத அவ நம்பலையா? நாம போன் செஞ்சி இவ்வளவு நேரமாகியும் அவ ஃபோன் ஏன் வரலை?

அதான் எவன் எவன்கிட்டருந்தோ கால்ஸ் வந்துக்கிட்டே இருக்கே.. ஒருவேளை டயல் பண்ணி, பண்ணி சோர்ந்துப் போய்ட்டாளோ என்னமோ?

அலைபாயும் மனதை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தடுமாறினான் சீனிவாசன்..

இந்த ராஜன் அங்கிள் வேற.. எல்லாத்துலயும் மூக்க நீட்டுறத பழக்கம்.. சட்டென்று நினைவுக்கு வந்தவனாய் எழுந்து கட்டைகளை எடுத்துக்கொண்டு சன்னலை நெருங்கி திரையை முழுவதும் ஒதுக்காமல் வாசலைப் பார்த்தான். அவர் இரண்டு கைகளையும் ஆட்டி, ஆட்டி நிரூபர்களிடம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.. ஒரு வறட்டுப் புன்னகையுடன் அதையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு திரும்பினான்.

I don't know what he is talking about.. இவர் வழியாவே நம்மளோட பழைய ட்ரக் பழக்கம் வெளிய தெரிஞ்சிருமோ.. Newspaper men could bring anything out of a person like him.. It is possible, even if it is remote..

சரி.. அப்படியே வெளியே தெரிஞ்சிருச்சின்னு வச்சிப்போம்.. What then? இது ஏற்கனவே மைதிலிக்கும் தெரியும் அவளோட பேரண்ட்சுக்கும் தெரியும்.. வேற யாருக்கும் தெரிஞ்சா தெரிஞ்சிட்டுப் போட்டுமே.. Does it matter anymore?

'டேய் சீனி.. ஒரு வா காப்பியாவது குடிறா.. காலையிலருந்து ஒன்னும் சாப்பிடலையே?'

சீனி கேட்காததுபோல் படுக்கையில் விழுந்தான். மூடிய கண்களுக்குள்ளே மைதிலி புன்னகையுடன்.. தலையை உதறிக்கொண்டு எழுந்து அமர்ந்தான்..

சிவகாமி மாமி தொடர்ந்து கதவைத் தட்ட, 'எனக்கு ஓன்னும் வேணாம் மாமி.. என்னெ கொஞ்ச நேரம் தனியா விடுங்கோ.. பசிக்கறப்ப வரேன்.' என்றான்.

கதவைத் தட்டும் ஓசை சட்டென நின்றது. ஆனால் மாமி கதவுக்கப்பால் நிற்கும் நிழல் மட்டும் கதவுகளின் கீழே...

சீனி கண்களை மூடிக்கொண்டு யோசனையில் ஆழ்ந்தான். அப்பா கூப்டதுமே பேசாம சென்னைக்கு போயிருந்தா.. ஒரு வாரம் கழிச்சி மைதிலிய ஃபோன்ல கூப்ட்டு பேசியிருக்கலாம். அவளும் ஆற அமர ஒக்காந்து யோசிக்க டைம் கிடைச்சிருக்கும்.. அந்த ஒரு முட்டாத்தனமான டிசிஷனால இப்ப என்னல்லாம் நடந்திருச்சி... சரி.. போலீஸ் வந்துப்போனவுடனேயாவது டாடிக்கு போன் செஞ்சிருக்கலாம்.. செய்யல.. அதனால என்னாச்சி திரும்பி வந்தப்பவும் சொல்ல முடியல..

சிவகாமி மாமி மீண்டும் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. 'என்ன மாமி என்னெ தனியா விடச்சொன்னேனே?' என்றான் எரிச்சலுடன்.

'டேய்.. ஒங்கம்மாவும் அப்பாவும் வத்ஸலா கூட வந்துண்டிருக்காளாம்.. ஏர்போர்ட்லருந்து ஃபோன் வந்தது.. நீ ரூமுக்குள்ள இருக்கேன்னு சொன்னேன்.. சர்ப்ரைஸா இருக்கட்டும் நீங்க சொல்லாதீங்கோன்னு வத்ஸலா சொல்லிட்டு வச்சிட்டா.. நீ எழுந்து மொகத்த அலம்பிண்டு வேற ட்ரெஸ் போட்டுண்டு வெளிய வாடா.. வாசல்லருந்தவாளும் போய்ட்டா.. அந்த ஐயங்கார் என்னமோ சொல்லி அனுப்பிச்சிட்டார் போலருக்கு.. இப்ப யாரையும் காணம்.. கொஞ்ச நேரமா பழையபடி போனும் வர்றது நின்னு போச்சிடா.. நீ வெளியில வா..'

சீனிக்கு சந்தோஷத்தைவிட கோபமே வந்தது.. யார் சொல்லியிருப்பா.. மாமியா? ஒருவேளை மைதிலியாருக்குமோ..

இப்ப எப்படி அப்பாவை ஃபேஸ் பண்ணுவேன்.. என்னெ ஒரு வழியா ஏத்துக்க தயாரா இருந்தாரே.. இப்போ ஊருக்கெல்லாம் பையன் ஒரு டெர்ரரிஸ்ட்ங்கறா மாதிரி ஆயிருச்சேன்னு நினைப்பாரோ.. Will he look at me with contempt? ஏற்கனவே நம்மாலதான் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவுல பிரச்சினையே வரும்.. ட்ரக் அடிக்டுங்கற முத்திரையோட ஆஸ்பட்ல இருந்தப்போ டைவோர்ஸ் வரைக்கும் போனவங்க.. அது மறுபடியும் நாளைக்கி ப்ரெஸ் காரங்களால ஊர் முழுசுக்கும் தெரியவந்தா.. How will he react? அம்மாவுக்கு எப்பவுமே நம்ம மேல இருக்கற சிம்பதி ஒருவேள அவங்க பேச்ச கேக்காம மும்பையில நின்னதுனாலதான இதெல்லாம் வந்துதுன்னு கோபமா மாறிருமோ.. Will she also turn against me? Will Vaths be sore at me? She could definitely do without me.. Yeah! she can.. she can..

தன் மீதே ஏற்பட்ட அனுதாபம் சோகமாக மாற படுக்கையில் விழுந்து முகத்தை கைகளில் புதைத்தவாறு கிடந்தான் சீனி.. கண்களின் ஓரத்தில் கண்ணீர் வழிந்தோட....

இதை அறியாத சிவகாமி மாமி சமையலறையில் பரபரப்பாயிருந்தாள்...

*********

ஃபிலிப் சுந்தரம் டிவியை அணைத்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தார்.

சுந்தரலிங்கம் சார் நிச்சயமா நியூச கேட்டிருப்பார். ஆனா ஏன் நம்மள இன்னும் கூப்டவேயில்ல? ஒருவேளை நாம அப்ரெப்டா ஆஃபீஸ்லருந்து கெளம்புனத அவர் விரும்பலையோ? வேணும்னா அவனே கூப்டட்டும்னு இருக்காரோ.. அதானே.. நாமளே அவரெ கூப்டா என்ன?

சோபாவில் கிடந்த செல்ஃபோனை எடுத்து எண்களை தேடிப்பிடித்து சுழற்ற எதிர்முனையில் அடித்துக்கொண்டே இருந்தது. பத்து முறை அடித்தப் பிறகும் எடுக்காமலிருக்கவே இணைப்பைத் துண்டித்துவிட்டு எழுந்து ஹால் விளக்கைகளை அணைத்துவிட்டு கையிலிருந்த குறு மேசையிலிருந்த பால் தம்ளரை எடுத்துக்கொண்டு சமையலறையை நோக்கி நடந்தார். சமையல் மேடையில் கிடந்த சில்லறை பாத்திரங்களை சிங்கில் போட்டு நனைத்துவிட்டு விளக்கை அணைத்துக்கொண்டு தன்னுடைய செல்ஃபோனில் காலை ஐந்து மணிக்கு அலாரம் வைக்க முயலவும் அது அடிக்கவும் சரியாக இருந்தது. திரையைப் பார்த்து முகத்தை சுளித்தார். இருப்பினும் வேறு வழியில்லாமல், 'சொல்லுங்க சார்..' என்றார்.

'நீர்தாம்யா சொல்லணும்.. எங்கருக்கீர்?'

இதென்னய்யா கேள்வி? எரிச்சலாக இருந்தாலும்.. 'வீட்லதான் சார்..' என்றார் தயக்கத்துடன்..

எதிர்முனையிலிருந்து சிரித்தார் நாடார். 'பின்னே எங்க ஏதாச்சும் க்ளப்புலயா இருக்கப் போறீரு.. சரி அது கெடக்கட்டும்.. எதுக்கு சேர்மன் பாம்பேக்கு போன விஷயத்த எங்கிட்ட சொல்லவேயில்லை? நா வேற வழியாத்தான் கேட்டு தெரிஞ்சிக்கணும் போலருக்கு.. பேங்க்ல எல்லாரும் பேசிக்கறாங்களேய்யா.. ஒம்ம வழியாத்தான எனக்கு எல்லா நியூசும் வருதாமே.. ஆனா நீரு எதையுமே சொல்ல மாட்டேங்கறீரு?'

அப்படியே இன்னைக்கி நடந்த ப்ரெஸ் மீட்டோட விஷயமும் தெரிஞ்சிருக்கணுமே.. நல்ல வேளை இந்த களேபரத்துல அதப்பத்தி ஒன்னும் நியூஸ்ல வரல.. பத்து மணி சன் நியூஸ்ல வருதோ என்னமோ..

'என்னய்யா பதிலையோ காணம்? சரி அதுபோட்டும்.. இதுதான் சாக்குன்னு ஒங்க ஈ.டி. சில்மிஷம் பண்றாராமே.. அதாவது தெரியுமா?'

நாடாரின் குரலிலிருந்த கேலி அவருக்கு எரிச்சலை மூட்டினாலும் அது என்னவென்று தெரிந்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.. எல்லாவற்றையும் உதறியெறிந்துவிட்டு செல்வதென முடிவெடுத்தபின் யார் என்ன திட்டம் போட்டாலும் நமக்கென்ன என்று நினைத்தார் அவர்.

'ஒமக்கெங்க தெரிஞ்சிருக்கப் போவுது.. அடுத்த வாரம் சர்ச்சுல என்ன மீட்டிங்.. அதுல என்ன பேசணும்னே நினைச்சிக்கிட்டிருக்கற ஆளூ நீரு.. நானே சொல்றேன்.. ஒங்க ஈ.டிக்கு ஆக்டிங் சேர்மனா ஆகணுமாம்.. என்ன போட்டுரலாமா? அத கேக்கத்தான்யா கூப்ட்டேன்..'

அவருக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயத்தைக் கூறிவிட்டவர்போல் நாடார் எதிர்முனையில் சிரிக்க இது எதிர்பார்த்ததுதான் என்பதுபோல் அமைதியாய் இருந்தார் ஃபிலிப்.

'என்னய்யா இதுக்கு மவுனம்தானா.. அதாவது சம்மதம்கறீர். சரிதானே?'

இனியும் மவுனமாயிருந்தால் நல்லதல்ல என்ற நினைத்த ஃபிலிப், 'இது நா எதிர்பார்த்ததுதான் சார்.' என்றார்.

'அப்படியா?' என்றா நாடாரின் குரலில் கேலி கொப்பளித்தது. 'பரவாயில்ல... நல்லாவே தேறிட்டீங்க.. சரிய்யா.. நம்ம சோமசுந்தரம் அய்யாவும் அதுல தீவிரமா இருக்கார் போலத்தான் தெரியுது.. போன தடவ ஒங்க லிங்கம் சார போட்டுட்டு பட்ட அவஸ்த போறும்னு நினைக்காரோ என்னமோ..நாளைக்கு காலைல நம்ம எம்.சி கூட்டத்த கூட்டி பேசலாம்னு இருக்கோம்..' என்றவர் ஒரு நொடி தாமதித்து, 'ஒமக்கு ஏதும் சொல்றதுக்கு இருக்கா?' என்றார் சீரியசாக..

நானா? என்ன சொல்ல? என்று தயங்கினார் ஃபிலிப்.. 'இதுல நா சொல்றதுக்கு....'

'அதான பார்த்தேன்.. என்னைக்கித்தான் நீரா எதையும் கேட்டிருக்கீரு? சரி.. அது கெடக்கட்டும்.. என் மனசுல பட்டத சொல்றேன்.. நான் நாளைக்கு ஒம்ம பேரத்தான் சொல்லப்போறேன்.. என்ன சொல்றீரு?'

ஃபிலிப் சுந்தரம் திடுக்கிட்டு தன்னையுமறியாமல், 'I am not interested.' என்றார்.

'என்னய்யா.. என்ன சொன்னீரு.. நாட் இண்டரெஸ்டடா? எதுக்கு?'

என்னன்னு சொல்றது? எனக்கு போறும்னுட்டு ரிசைன் பண்ணிரலாம்னு இருக்கேன்னா? இவர்கிட்ட சொன்னா வேற வெனையே வேணாம்..

'தப்பா நினைச்சிக்காதீங்க சார்.. எங்கள்ல சீனியர் நம்ம ஈ.டிதான்.. போனதடவையே அவர இக்னோர்.. அதாவது கண்டுக்காம இருந்துட்டோம்னு சுந்தரலிங்கம் சார் என்ன செஞ்சாலும் முட்டுக்கட்டையாவே இருந்தார்.. அதனாலதான் எனக்கு விருப்பமில்லேன்னு சொன்னேன்..'

நாடார் கேலியாக சிரித்தார். 'அவன் கெடக்கறான்.. ஒங்க லிங்கத்து தைரியம் பத்தாது. அதான் அவன் அப்படி துள்ளிக்கிட்டு திரிஞ்சான்..ஒமக்கென்னய்யா.. அதான் நாங்க இருக்கோம்லே.. சமாளிச்சிருவோம்.. நீரும் தொடநடுங்கிமாதிரி ஆயிராதேயும்.. நாளைக்கு வெள்ளனே ஆஃபீசுக்கு போய் என் ஃபோன் காலுக்கு வெய்ட் பண்ணும். கமிட்டி முடிஞ்சதும் கூப்டறேன்.. இப்போதைக்கு அந்த ஈ.டி பயலுக்கோ இல்லே அந்த லிங்கத்துக்கோ தெரியவேணாம்.. வச்சிடறேன்..'

அவர் பதில் பேசுவதற்கு முன் இணைப்பு துண்டிக்கப்பட 'கர்த்தாவே என்ன இது புது சோதனை' என்றவாறு 'பிதாவே உமக்கு சித்தமானால் இத்துன்பக் கலம் என்னை விட்டு அகலட்டும்..' என்ற வார்த்தைகள் பொறித்திருந்த எதிரே சுவரில் தொங்கிய யேசுபிரானின் திருவுருவ படத்தைப் பார்த்தார் ஃபிலிப் சுந்தரம்..

4 comments:

krishjapan said...

அதான பார்த்தேன். என்னடா வண்டி தடம்புரளுதேன்னு.... இப்ப வண்டி தண்டவாளத்தில மறுபடியும் ஏறிட்ட மாதிரி தெரியுது...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கிருஷ்ணா,

அதான பார்த்தேன். என்னடா வண்டி தடம்புரளுதேன்னு..//

என்ன சொல்றீங்க?

siva gnanamji(#18100882083107547329) said...

நாடாரும், சோமசுந்தரமும்,சேதுவும்
இப்படி சிந்திக்காமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியம்?
அதேபோல் பிலிப்சுந்தரமும்.....

சிவஞானம்ஜி

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

நாடாரும், சோமசுந்தரமும்,சேதுவும்
இப்படி சிந்திக்காமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியம்?
அதேபோல் பிலிப்சுந்தரமும்.....//

எல்லாரையும் கரெக்டா எடை போட்டு வச்சிருக்கீங்க..