28.3.07

சூரியன் 187

எதிர்முனையில் சிலுவை மாணிக்கம் நாடாராக இருக்கும்பட்சத்தில் என்ன செய்வதென ஆலோசித்தவாறே எடுத்த ஃபிலிப் சுந்தரம் எதிர்முனையில் தன்னுடைய முதல்வர் மாதவன் என அறிந்ததும், 'சார் நீங்களா? நானே ஒங்கள கூப்பிடணும் இருந்தேன்.. ஆனா எப்படின்னு தெரியாமத்தான் தயக்கத்தோட...' என தடுமாறினார்.

'It's ok.. Mr.Philip.. நா ஒங்கள கூப்ட்டது எதுக்குன்னு சொல்லிடறேன்.. கொஞ்ச நேரம் பொறுமையா கேளுங்க.'

ஃபிலிப் ஏதோ முக்கியமான விஷயமென ஊகித்து உஷாரானார். 'சார் அதுக்கு முன்னால நீங்க போன விஷயம் என்னாச்சி சார்? அதச் சொல்லுங்களேன்.. ப்ளீஸ்.'

'சொல்றேன்.. என்னோட சன் போலீஸ்ல சிக்கிட்டது ஒங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அதுலருந்து விடுபட்டாலும் அவசரப்பட்டு அவனொரு சூயிசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டான்.. பட் நவ் ஹி ஈஸ் ஒக்கே.. ஆனா..'

'ஆனா என்ன சார்? அவர் பாம்பேயிலயே இருக்கணும்னு கண்டிஷன் போட்டததான சொல்ல வரீங்க.. கவலைப்படாதீங்க சார்.. அதுவும் விலகிரும்.'

மாதவன் விரக்தியுடன் சிரிப்பது கேட்டது. 'ஐ நோ தட் ஃபிலிப்.. That's not the issue..'

அவரே தொடரட்டும் என காத்திருந்தார் ஃபிலிப்..

'My wife has suffered a stroke.. டாக்டர் இன்னும் ஃபார்ட்டியெட் அவர்சுக்கப்பறந்தான் எதுவும் சொல்லமுடியும்னு சொல்லிட்டார்..'

இதை முற்றிலும் எதிர்பாராத ஃபிலிப் கவலையில் ஆழ்ந்தார். இதை எப்படியோ தெரிந்துக்கொண்டுதான் சேது ஆட்டம் போடுகிறார் போலிருக்கிறது என்று நினைத்தார். 'அப்படியா சார்?' என்றார் கவலையுடன். 'நா ஏதாச்சும் ஹெல்ப் பண்ண முடியுமா சார்? நமக்கு அங்க அஞ்சாறு பிராஞ்சஸ் இருக்கு சார். யாரையாச்சும் ஒங்கள வந்து பாக்க சொல்லட்டுமா.. அவங்களுக்கு யாராவது நல்ல டாக்டர்ஸ் தெரிஞ்சிருக்குமே..'

'இல்ல மிஸ்டர் ஃபிலிப். நேத்து ராத்திரியே டாக்டர் சோமசுந்தரத்துக்கிட்ட பேசினேன். அவர்கிட்ட சொல்லாம கொள்ளாம வந்துட்டேனில்லையா அதனால நேத்து மிட்நைட் கூப்ட்டேன். அவர் உடனே அவரோட ஆஸ்ப்பிட்டல்லருந்து ரெண்டு ந்யூரோ சர்ஜன்ச இன்னைக்கி காலைல ஃப்ளைட்ல அனுப்பி வைக்கறேன்னு சஜ்ஜஸ்ட் பண்ணார். நானும் சரின்னு சொல்லியிருக்கேன். அதவிட வேற எதுவும் நம்மால செய்ய முடியாது. நான் ஒங்கள் கூப்ட்டது அதுக்கில்லை.'

'சொல்லுங்க சார்.'

'நான் நேத்து சோமசுந்தரத்துக்கிட்ட பேசினப்போ என்னால இப்போதைக்கி சென்னை திரும்ப முடியாது போலருக்கு சார்னு சொன்னேன்.'

சரிதான்.. சேது சாரோட மூவ பத்தி இவருக்கும் தெரிஞ்சிட்டதுபோல.. பாவம் இவர் மனசு என்ன பாடுபட்டிருக்கும்! எப்படி பதிலளிப்பதென தெரியாமல் ஃபிலிப் தயங்க மாதவனே தொடர்ந்தார். 'சோமசுந்தரம், ரெண்டு பேரையும் ஏர் லிஃப்ட் பண்ணி கொண்டு வந்துருங்க மாதவன், நம்ம ஆஸ்பட்லயே வச்சி பாத்துக்கலாம்.அதுக்காக நீங்க அங்கயே இருக்கணும்னு இல்லன்னு சொன்னார். எனக்கும் அதுல ஆட்சேபனையில்லதான்.. ஆனா அதுக்கும் இன்னும் ரெண்டு வாரமாவது ஆகும்னு இங்கத்த சீஃப் டாக்டர் ஃபீல் பண்றார். அத்தோட என்னோட சன் சீனியோட விஷயமும் முடியணும்.. I am planning to go and meet the Mumbai DGP also today. அப்பத்தான் விஷயம் சட்டுன்னு முடியும்.. ஆனாலும் அதாவது நான் சென்னை திரும்பினாலும் உடனே என்னால வந்து ஜாய்ன் பண்ண முடியுமான்னு தெரியலை மிஸ்டர் ஃபிலிப். இத நான் சோமசுந்தரத்துக்கிட்டயும் சொல்லிட்டேன்.. That's why I called you now..'

ஒருவேளை இவரும் ஆக்டிங் சேர்மன் பதவிய பத்தி பேசப்போறாரோ என்று நினைத்தார் ஃபிலிப். 'சொல்லுங்க சார்.' என்றார் பட்டும்படாமலும்.

'I don't have anything personally against Mr.Sethu.. But.. நேத்து டாக்டர் சோமசுந்தரம் எங்கிட்ட சொன்னத வச்சி சொல்றேன். சேதுமாதவன விட நீங்கதான் ஆக்டிங் சேர்மன் போஸ்ட்டுக்கு பொருத்தமான ஆள்னு நம்ம டைரக்டர் நாடார் சொன்னாராம்.. நானும் அப்படித்தான் நினைக்கேன்.. I am told that our Management Committee members are meeting at the Doctor's place today.. நீங்க என்ன சொல்றீங்க ஃபிலிப்.. I want you to accept this proposal.. It may not be long.. may be for three or four months.. I mean till I feel that I could peacefully return and assume charge.. What do you say?'

என்ன சொல்வதென தடுமாறினார் ஃபிலிப். அவரையுமறியாமல் அவருடைய பார்வை சுவரிலிருந்த கர்த்தரின் படத்தை நோக்கி செல்ல அவர் அதே மாறா புன்னகைய்டன் தன்னை பார்ப்பதைப் பார்த்தார். 'ஏற்றுக்கொள்ளேன்.. நானிருக்கிறேன்.' என்பதுபோலிருந்தது அந்த பார்வை..

இருப்பினும், 'Is it necessary to think about this Sir.. நீங்க வர்ற வரைக்கும் மிஸ்டர் சேதுமாதவனே இருந்துக்கட்டுமே.' என்றார் மிருதுவாக.

'இல்ல மிஸ்டர் ஃபிலிப்.. Whether I agree or not majority of the Board members may not agree to post him..especially Mr.Nadar. That's the fact. So.. please think about what I said and call me before you reach the office. I'll pass on the information to Dr.Somasundaram.. bye' அவருக்கு பதிலளிக்க வாய்ப்பளிக்காமலே இணைப்பு துண்டிக்கப்பட அமைதியாகிப்போன ஒலிவாங்கியை சிந்தனையுடன் அதனுடைய இடத்தில் வைத்துவிட்டு சோபாவில் சென்று அமர்ந்தார் ஃபிலிப்.

*******

தனபால்சாமி கையிலிருந்த காப்பி கோப்பையுடன் அன்றைய பத்திரிகைகளை மேலோட்டமாக வாசித்துக்கொண்டிருந்தார். பக்கத்திற்குப் பக்கம் முந்தைய தினம் மும்பையில் நடந்த குண்டு வெடிப்புகளைப் பற்றிய செய்தியாகவே இருந்தன.

அதிலும் பிரசுரமாகியிருந்த சில புகைப்படங்களைப் பார்த்ததும் அவரையுமறியாமல் கோபம் பீறிட்டு எழ கையிலிருந்த பத்திரிகையை டீப்பாயில் வீசியெறிந்துவிட்டு எழுந்து நின்றார்.

ச்சை.. ரிப்போர்ட் பண்றதுக்கும் ஒரு விவஸ்தையில்லாம போயிருச்சி.. கை, கால் இல்லாத சடலங்களையெல்லாம் எப்படி கூசாம பப்ளிஷ் பண்றானுங்க.. இவனுங்களையெல்லாம் சுடணும்..

அவரையுமறியாமல் உரக்க பேசிவிட்டாரோ என்னவோ, 'என்னப்பா காலையிலயே சூடா இருக்கீங்க?' என்றவாறு தன்னைப் பார்த்தவாறு வந்து நின்ற தன் மகள் புவனாவைப் பார்த்தார்.

'பின்ன என்னம்மா? இந்த ரிப்போட்டர்சுக்கு மனசாட்சின்னு ஒன்னுமே கிடையாது போலருக்கு. எந்த மாதிரி படங்கள பப்ளிஷ் பண்றதுங்கற விவஸ்தையேயில்லாம போட்டுருக்கறத பார். இதுக்குத்தான் எமர்ஜன்சியிலருந்தா மாதிரி ஒரு சென்சார்ஷிப் வரணுங்கறது..'

புவனா பதிலளிக்காமல் டீப்பாயில் கிடந்த பத்திரிகையில் வெளியாகியிருந்த புகைப்படங்களைப் பார்த்தாள். தன் தந்தை கோபமடைந்ததில் எவ்வித வியப்பும் இல்லையென்பதுபோலிருந்தது அந்த புகைப்படங்கள். வெறுப்புடன் பத்திரிகையை மடித்து டீப்பாயில் வைக்க முனைந்தவள் சட்டென்று, 'அப்பா இங்க பாருங்க. இவர் நம்ம ரம்யா அப்பா பேங்க் சேர்மன் இல்லை?' என்றவாறு பத்திரிகையில் வெளியாகியிருந்த புகைப்படத்தை காட்டினாள்.

தனபால்சாமி அதை வாங்கி பார்த்தார். முந்தைய தினம் வங்கியில் நடைபெற்ற பத்திரிகை நிரூபர் கூட்டத்தைப் பற்றிய செய்தியுடன் மாதவனின் புகைப்படமும் அருகில் கூட்டம் நடைபெற்றபோது எடுத்த புகைப்படமும் வெளியாகியிருக்க அதில் மேடையில் அமர்ந்திருந்த வங்கி அதிகாரிகள் புகைப்படத்தின் அடியில் திரு.சேதுமாதவன் இ.டி என்று குறிப்பிட்டிருந்ததை கவனித்தார். ஓ! இவந்தானா நம்ம வில்லன்! என்று நினைத்தார். பாக்கறதுக்கே வில்லன்மாதிரிதான் இருக்கான்.. இவனெ இன்னைக்கி எப்படியும் அமுக்கிரணும்..

'என்னப்பா அப்படி பாக்கறீங்க.. இவர்தானே சேர்மன்?'

'ஆமாமா... முந்தா நேத்து சாயந்தரம்தான் இவர போய் மீட் பண்ணேன்.. மனுசன் பிடிகுடுத்தே பேசல..' என்றார் சலிப்புடன்.

புவனா வியப்புடன் தன் தந்தையைப் பார்த்தார். 'பிடிகுடுக்கலன்னா.. நீங்க எதுக்கு அவர போய் பாத்தீங்க?'

'அதாம்மா ஒன் ஃப்ரெண்ட் விஷயமாத்தான் சில சந்தேகம் இருந்துச்சி.. அத கேக்கத்தான் போயிருந்தேன்..'

'ரம்யா விசயமா?'

'ஆமா.. அந்த பொண்ண கடத்த ட்ரை பண்ணதா சொல்லி ரெண்டு பேர அரெஸ்ட் பண்ணமே..'

புவனா திடுக்கிட்டு தன் தந்தையை பார்த்தாள். 'என்னது ரம்யாவ கடத்த இருந்தாங்களா? என்னப்பா சொல்றீங்க?'

தனபால்சாமி தன் தவறை உணர்ந்து பேச்சை மாற்றினார். 'ச்சை... நா ஒருத்தன்.. அது ரம்யா இல்லம்மா.. வேற ஒரு பொண்ணு.. சரி அத விடு.. அதுல இந்த பேங்க் அதிகாரி ஒருத்தர் இண்டைரக்டா சம்பந்தப்பட்டிருக்கறதா சந்தேகம்.. அத க்ளாரிஃபை பண்ணிக்கலாம்னுதான் போனேன்..' என்றவாறு எழுந்து குளியலறையை நோக்கி நடந்தார் இனியும் தன் மகளிடம் பேச்சை வளர்த்தால் எதையாவது உளறிவிடுவோமோ என்ற அச்சத்தில். காவல் நிலையத்தில் குற்றவாளிகளிடமிருந்து தகவலை வரவழைப்பதில் பெயர்போனவருக்கு தன்னுடைய மகளிடம் உரையாடுவதில் அச்சம்!

புவனா விடவில்லை அவர் பிறகே ஓடினாள். 'அப்பா மறைக்காம சொல்லுங்க.. நீங்க சொல்லவந்தது ரம்யாவ பத்தித்தான? சொல்லுங்கப்பா ப்ளீஸ்..'

தனபால்சாமி நின்று திரும்பி தன் மகளைப் பார்த்தார். 'இங்க பார்மா.. அப்பாவோட ட்யூட்டிய பத்தி ஒன்னும் கேக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனில்ல.. அது ரம்யா இல்லன்னு சொன்னா விட்டுரணும்.. இப்ப போயி நல்ல பொண்ணா ப்ரேக்ஃபாஸ்ட ரெடி பண்ணு.. அப்பா குளிச்சிட்டு வர்றதுக்குள்ள டேபிள்ல வச்சிரணும்.. என்ன சரியா?'

புவனா நம்பிக்கையில்லாமல் தன் தந்தையைப் பார்த்தாள். 'இல்லப்பா கேக்கலை.. ஆனா எங்கிட்டருந்து நீங்க எதையோ மறைக்கறீங்கன்னு மட்டும் தெரியுது.. நா அவள போய் பாக்கணும்.. அப்பத்தான் என் மனசுக்கு ஆறுதலாருக்கும்.. பாத்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு.'

தனபால்சாமி சிரித்தார். 'ஏய் என்ன நீ என்னவோ ஒரு மாசத்துக்கு முன்னால பாத்தா மாதிரி சொல்றே... அந்த பொண்ண கொண்டுவிட்டு முழுசா மூனு நாள் ஆகல.. அதுக்குள்ள என்ன?'

'இருக்கட்டுமே.. எனக்கென்னவோ மாசக் கணக்கான மாதிரிதான் இருக்கு.. ஜீப்பெல்லாம் வேணாம் ஆட்டோவுலயே போய்க்கறேன்..'

தனபால்சாமி ஒருநோடி யோசித்தார். 'சரி.. ஆனா ஒரு கண்டிஷன்.. பகலுக்குள்ள திரும்பிரணும்.. இன்னைக்கிம் பாம்ப் ப்ளாஸ்ட் ட்யூட்டி இருக்கு. அதனால அப்பா ஆஃபீஸ்ல இருக்க மாட்டேன்.. நீ திரும்பி வந்ததும் என் மொபைலுக்கு ஃபோன் பண்ணணும்.. என்ன சரியா..'

'சரிப்பா..' என்று தலையை அசைத்தாள் புவனா சட்டென்று.. 'நீங்க குளிச்சிட்டு வாங்க.. அஞ்சே நிமிஷத்துல ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியாயிரும்..'

தன் சிநேகிதியைக் காண அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில் சிட்டென பறந்த தன் மகளைப் பார்த்தவாறே குளியலறையை நோக்கி நடந்தார் எஸ்.பி.தனபால்சாமி...

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

//நேத்து டாக்டர் சோமசுந்தரம் எங்கிட்டெ சொன்னத வச்சு சொல்றேன்//
ஓ! அப்படி போகுதா......?

தனபால்சாமி துணையிருப்பார்..

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

ஓ! அப்படி போகுதா......?//

ஆமா:)

தனபால்சாமி துணையிருப்பார்.. //

அப்படித்தான் நானும் நெனக்கேன்..