3.10.06

சூரியன் 128

‘May I come in Sir?’ என்றவாறு தன்னுடைய அறையின் வாயிலில் தயங்கி நின்ற சுபோத் மிஷ்ராவை நிமிர்ந்து பார்த்தார் ஃபிலிப் சுந்தரம்.

‘Yes.’

வாயிற்கதவை மூடிவிட்டு உள்ளே வந்து நின்றவாறு தன்னைப் பார்த்தவனை சற்று நேரம் கூர்ந்து பார்த்தார் சுந்தரம். இவனை எந்த அளவுக்கு நம்பலாம்?

முன் பின் அறிமுகமாகாத ஒருவருக்காக தன்னுடைய உயர் அதிகாரியையே ஏமாற்றியவனாயிற்றே? இவனை உடனே தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றிவிட்டுத்தான் மறுவேலை என்ற சேதுமாதவனின் எண்ணம் நிறைவேறினால் இவனுடைய கதி என்னவாகும்? ஆனால் அப்படியொரு சூழ்நிலை ஏற்படுமானால் சேர்மன் மாதவனின் ஆதரவு தனக்கு இருக்கும் என்ற கணக்கில்தானே விமானநிலையத்தில் வந்து மறைவாய் காத்திருந்தவரை வரவேயில்லையென்று சற்றும் தயங்காமல் சர்வசாதாரணமாக பொய் சொன்னான்?

அவ்வளவு நெஞ்சழுத்தம் உள்ள இவனே ஏன் அந்த பத்திரிகை நிரூபரிடம் வந்தனாவின் காரியதரிசி என்று பொய் சொல்லியிருக்கக் கூடாது? அப்படி இவன் செய்யவில்லையென்றால் யார் இவனுக்கு அந்த செய்தியை ஃபேக்ஸ் மூலம் அனுப்பியிருக்க முடியும்? இவனுக்கு முன் பின் பரிச்சயமில்லாத யாரோ ஒருவன் இவனை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?

‘Sir you wanted to see me?’

சுந்தரம் தன்னையே பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பதை சங்கடமாக உணர்ந்தான் சுபோத். ஒருவேளை அந்த முரளி தனக்கு அனுப்பிய ஃபேக்சைப் பற்றித்தான் கேட்கப்போகிறாரோ? ஏற்கனவே சேது சாரிடம் பொய் சொல்லி அது எங்கே தெரிந்துவிடப்போகிறதோ என்ற பயத்தில் இருக்கிறேன். இதில் இந்த விஷயமும் அம்பலத்துக்கு வந்துவிட்டால் வேறு வினையே வேண்டாம். சேது சாரையாவது சமாளித்துவிடலாம். அந்த முரளி சரியான விஷம்.. இந்தியாவில் எந்த கிளைக்கு மாற்றம் பெற்று சென்றாலும் ஆளை வைத்து அடிக்கவும் தயங்க மாட்டான்.

‘Sit down Subodh. I want to ask you two or three questions. Please be truthful.’

சுபோத்துக்கு லேசாக விளங்கியது. இது அந்த ஃபேக்ஸ் சமாச்சாரம்தான். ‘Yes Sir.’ அவனையுமறியாமல் குரல் நடுங்கியது. ஏ.சி அறையிலும் வியர்த்துக் கொட்டியது.

அவனுடைய குரலிலிருந்த நடுக்கத்தையும் முகமெல்லாம் வியர்த்துப்போனதையும் கவனிக்கத் தவறவில்லை சுந்தரம். He must know.. He is tensed.. If I handle him properly.. he may spill the beans.

‘என்ன தைரியத்துல நேத்தைக்கி ஏர்போர்ட்ல சேர்மன் வரலேன்னு சேது சார்கிட்ட சொன்னீங்க சுபோத்.. He is extremely angry that you had intentionally lied to him. He wants to shunt you to the farthest corner in the world. Do you know that?’

சுந்தரத்தின் குரலில் இருந்த கோபம் அவனை ஒரு நிமிடம் திடுக்கிட வைத்தாலும் அவர் தன்னை அழைத்தது அந்த qபேக்ஸ் விஷயமல்ல என்றதும் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

Aனால் அந்த ஒரு நொடி.. அவனுடைய முகத்தில் தோன்றி மறைந்த அந்த நிம்மதியை கவனிக்க தவறவில்லை சுந்தரம். வேண்டுமென்றேதான் சம்பந்தமில்லாத ஒரு கேள்வியை அவன் முன் வீசினார்.

‘Yes Subodh.. சொல்லுங்க.. எதுக்கு அந்த பொய்ய சொன்னீங்க? சேது சார் கண்டுபிடிக்க மாட்டார்ன்னு நினைச்சீங்களா? இப்ப அவரோட கோபத்துலருந்து எப்படி தப்பிக்கப் போறீங்க?’

சுந்தரம் இவ்வளவு கண்டிப்புடன் தன்னிடம் பேசியதேயில்லையே? உண்மையிலேயே இதற்குத்தான் தன்னை இவ்வளவு அவசரமாக அழைத்தாரா? இதை எப்படி சமாளிப்பது? சேர்மன் சார் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னாரே? மறந்திருப்பாரோ?

‘என்ன சுபோத் என் கேள்விக்கு பதிலையே காணோம்?’

தலையைக் குனிந்துக்கொண்டு எப்படி பதிலளிக்கலாம் என்ற யோசனையில் இருந்த சுபோத், ‘சார்.. சேர்மன் அப்படி என்னெ சொல்ல சொல்றப்போ நா எப்படி சார் முடியாதுன்னு சொல்றது? ஒனக்கு ஏதாச்சும் இதனால பிரச்சினை வந்தா நா பார்த்துக்கறேன்னு சொன்னார் சார்... அதனாலதான்..’ என்று இழுத்தான்..

இந்த பதிலுடன் சுந்தரம் சமாதானமாகிவிடுவார் என்று எதிர்பார்த்த சுபோத் அவருடைய அடுத்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை.

‘சரி அது போகட்டும்.. சேது சாரையாவது என்னால சமாளிக்க முடியும்.. ஆனா இன்னைக்கி ஒரு முட்டாள்தனமான காரியத்த செஞ்சிட்டு வந்து நிக்கறீங்களே இதுலருந்து எப்படி தப்பிக்கப் போறீங்க?’

சுந்தரம் என்ன சொல்ல வருகிறார் என்பது லேசாக புரிந்தாலும் ஒருவேளை இதுவும் வேறு ஏதாவது விஷயமாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், ‘இன்னைக்கா? நான் என்ன சார் செஞ்சேன்?’ என்றான் சாமர்த்தியமாக.

சுந்தரம் அவனையே வியப்புடன் பார்த்தார். சரியான கல்லுளி மங்கனாருப்பான போலருக்கே.. தெரியாத மாதிரி நடிக்கிறான்?

‘உண்மையிலயே ஒங்களுக்கு தெரியல சுபோத்?’

சுபோத் பிடிவாதமாக, ‘சாரி சார்.. எனக்கு என்னன்னு தெரியல.. Please don’t mistake me..’ என்றான்.

‘அந்த ஃபேக்ஸ் விஷயம்..’

சுபோத் அதிர்ச்சியுடன் அவரை பார்த்தான்.

அவனுடைய முகத்தில் தெரிந்த அதிர்ச்சியே அவனைக் காட்டிக்கொடுத்துவிட்டது என்று நினைத்தார் சுந்தரம். இன்னும் சற்று மிரட்டினால் உண்மையைக் கக்கிவிடுவான்..

‘அத யார் ஒங்கள நேரா சேர்மன் கிட்ட கொடுக்கச் சொன்னது? அதுவும் போர்ட் மீட்டிங் நடந்துக்கிட்டிருக்கறப்ப? நீங்க சேர்மனோட காரியதரிசின்னா.. Do you think you have direct access to Chairman for everything?’

ஓ! அதுதான் விஷயமா? நேரா சேர்மன் கிட்ட குடுத்ததுதான் தன்னுடைய முட்டாள்தனமா? நல்லவேளை.. யார் ஒனக்கு அத அனுப்பினார்னு கேக்காம விட்டாரே..

‘சாரி சார்.. அத சேர்மன் கிட்ட குடுக்கணும்னுதான் அனுப்பினவர் சொன்னார்.. அதான்..’ தன்னுடைய தவறை உணர்ந்த சுபோத் நாக்கைக் கடித்துக்கொள்ள அதைக் கண்டுக்கொள்ளாமல் தன்னுடைய அடுத்த கேள்விக்கு தாவினார் சுந்தரம்..

‘Did you go through the contents of the fax?’

‘Yes Sir. I just wanted to ensure that it is really serious enough to disturb the Chairman during the Board meeting. That’s why.. I just glanced through the fax’

‘That’s OK.. You knew that it was something about one of the senior most members in the Board.. Am I right?’

‘yes Sir.. It was about..’ சுந்தரம் வேண்டுமென்றே அவனை மேலே பேச விடாமல் தடுத்தார்.

‘I am not concerned with that.. Tell me..  இது சீரியசான விஷயம்னு தெரிஞ்சதும் ஒன்னு சேது சார்கிட்ட குடுத்துருக்கணும் இல்லன்னா சுந்தரலிங்கம் சார்கிட்ட குடுத்துருக்கணும்.. அதெப்படி நேரா சேர்மன்கிட்ட குடுக்கலாம்?’

இதென்னடா ரோதனை.. இந்த கேள்வியத்தான் ஏற்கனவே கேட்டு நானும் முட்டாத்தனமா பதில் சொன்னேனே சார்? அப்பவே என்னெ நீங்க மடக்கியிருக்கலாம்.. விட்டுட்டீங்க.. மறுபடியும் அதே பதில சொல்றதுக்கு நான் என்ன முட்டாளா?

‘எனக்கு அந்த நேரத்துல வேற ஐடியா வரல சார்.. அதோட..’

‘ஒங்களுக்கு அத அனுப்புனவர் நேரா சேர்மன் கிட்டத்தான் குடுக்கணும்னு சொன்னார். அப்படித்தானே?’

சுபோத் திடுக்கிட்டு சுந்தரத்தைப் பார்த்தான்.. அடடா.. மாட்டிக்கிட்டோமே.. மனுஷன் கவனிக்கலைன்னு நினைச்சா.. இப்ப என்ன சொல்றது.. ஏற்கனவே நான் சொன்ன பதில நினைவுல வச்சிருப்பாரோ?

இல்லை என்று தலையை அசைத்தான்.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால அனுப்பினவர்தான் அப்படி சொன்னார்னு சொன்னீங்க?’

சை! நாம இதுவரைக்கும் சந்திச்ச சார் இல்லையே இந்த சார்.. இப்ப என்ன பண்றது? அனுப்பினது யார்னுதான அடுத்த கேள்வி வரும்? முரளிதான் சார் அனுப்புனார்னு சொல்லிட்டா என்ன?

ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தான்..

சுந்தரம் எழுந்து மேசையை சுற்றிக்கொண்டு வந்து அவனருகில் அமர்ந்தார். ‘I told you one thing in the beginning.. Do you remember that?’

சுபோத் புரியாமல் அவரையே பார்த்தான். ‘Sir?’

‘I requested you to be truthful.. Now tell me.. Who sent you the fax?’

சற்று முன் வரை அவருடைய குரலிலிருந்த கோபம் காணாமல் போனதை உணர்ந்த சுபோத் சற்று நேரம் என்ன சொன்னால் தப்பித்துக்கொள்ள முடியும் என்று யோசித்தான்.

‘Is it Vandana’s PA?’

சுபோத் குழப்பத்துடன் அவரை பார்த்தான். வந்தனா மேடத்தோட பி.ஏவா? இதென்ன புது குழப்பம்? அவங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? ஆமான்னு சொல்லிட்டா என்ன? ஆனா அது சரியாயிருக்காதே.. She would be able to easily prove that she was not the person.. She was here right in the office when the fax came from outside..

‘என்ன சார் சொல்றீங்க.. வந்தனா மேடத்தோட பி.ஏவா.. No Sir.. she was not the person.’

சுந்தரம் ஒரு மர்ம புன்னகையுடன் பார்த்தார். ‘How can you be so sure?’

‘He spoke to me for a few seconds before sending the fax Sir.’

அப்படி வா வழிக்கு.. ‘Who was that?’

சுபோத் தான் மடக்கப்பட்டுவிட்டது புரிந்தது. இருப்பினும் நடப்பது நடக்கட்டும் என்று சட்டென்று தன்னுடைய மனதில் தோன்றியதை எடுத்து விட்டான்.. ‘சாரி சார்.. He did not identify himself.. He just said that he is sending a fax and that it should be immediately handed over to our Chairman.. Before I could refuse he disconnected the phone..’

சுந்தரம் எழுந்து நின்றார். ‘I am sure that you could not identify the voice in those few seconds, am I right?’

சுந்தரம் தன்னுடைய பதிலில் கோபப்படுவார் என்று நினைத்திருந்த சுபோத்திற்கு அவருடைய குரலில் தொனித்த நிதானம் லேசான அச்சத்தை ஏற்படுத்தியது.

‘Yes Sir.. I could not..’ என்றான் தயக்கத்துடன்..

சுந்தரம் குனிந்து அவனை நிதானமாகப் பார்த்தார். ‘You may go..’

சுபோத் குழப்பத்துடன் அமர்ந்தவாறே அவரைப் பார்த்தான். இத்தனை எளிதாக இதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. மெள்ள எழுந்து நின்றான்.. ‘சார்..’ என்று தயங்கினான்..

‘I said you may go..’ என்றவாறு சுந்தரம் தன்னுடைய அறை வாசலைக் காட்ட வேறு வழியில்லாமல் சுபோத் வாசலை நோக்கி நடந்தான்..

தயக்கத்துடன் நடந்த அவனையே பார்த்தவாறு நின்றிருந்தார் சுந்தரம். அவன் வாசலை அடைந்து வெளியேறாமல் தயங்கி நிற்பதைக் கண்டார்.. ‘Yes Subodh? Is there anything you forgot to tell me?’

சுபோத் தயக்கத்துடன் திரும்பி அவரைப் பார்த்தான்.. ‘Sir.. I could recognise the voice.. but I am not sure.. that’s why..’

சுந்தரம் புன்னகையுடன் அவனை நெருங்கி அவனுடைய தோள்மேல் கை வைத்தார். ‘Don’t worry.. You tell me who you thought it could be.. I will find out who it could be.. Just give me a name..’

சுபோத் தயக்கத்துடன் ஒரு நொடி அவரையே பார்த்தான்.. ‘Sir.. it could be... could be.. Murali..’

சுந்தரம் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தார்.. ‘You mean.. the Union leader? Are you sure..?’

சுபோத் அச்சத்துடன் அவரைப் பார்த்தான். ‘சார்.. I am not sure.. I just for a second thought.. நான் அவரோட பேர சொன்னேன்னு..’

சுந்தரம் புன்னகையுடன் அவனை தட்டிக் கொடுத்தார்.. ‘Don’t worry.. I will not reveal to anyone.. You may go..’

அறைக்கதவை மூடிக்கொண்டு சுபோத் வெளியேற.. சுந்தரம் யோசனையுடன் தன் இருக்கையில் சென்று அமர்ந்தார்..

தொடரும்..

4 comments:

krishjapan said...

விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது....நடவடிக்கை கைவிடப்பட்டது....

டிபிஆர்.ஜோசப் said...

விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது....நடவடிக்கை கைவிடப்பட்டது.... //

அடடடடா.. இப்பத்தான் நிம்மதியாருக்கு.. நன்றிங்க:))

siva gnanamji(#18100882083107547329) said...

இதுதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்
சமர்த்தா இனி நேரத்துக்கு வந்துடனும்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

இதுதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்
சமர்த்தா இனி நேரத்துக்கு வந்துடனும்//

Yes Sir:)