11.4.06

சூரியன் 59

மருத்துவரின் அறையை நோக்கி நடந்த மைதிலி சற்று முன் சீனிவாசன் கூறியதை யோசித்துக்கொண்டே சென்றாள்.

தனக்கும் சீனிக்கும் இடையே உள்ளது வெறும் நட்பா அல்லது அதற்கும் மேலா என்று தன்னுடைய உள்மனதையே கேட்டாள். You can only say that என்றது மனது.

அவளை விட மூன்று வயது இளையவன் சீனி. இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகாதவன். ‘இப்படியே இருக்கியே சீனி. வயசு இருபத்தஞ்சாறதே?’ என்று அவள் கேட்டபோதெல்லாம் ‘Why are you so much worried about material things My? You need food three times a day. A top and bottom to wear. A room to live in. What else you need? I think I can easily earn that much for both of us.’ என்பான்.

அவனால் மட்டும் எப்படி வாழ்க்கையை இத்தனை எளிதாக எடுத்துக்கொள்ள முடிகிறது என்று வியந்துபோவாள். அவள் மனித மனத்தை ஆராய்ச்சி செய்து எடுத்த டாக்டர் பட்டம் அவனுடைய இந்த பதிலில் முற்றிலும் அடிபட்டுப் போகும்.

அவனை முதன் முதலாக சந்தித்த நாளை இன்றும் நினைத்துப் பார்க்கிறாள்.

அவளுடைய எச்.ஆர். துறையிலான ஆராய்ச்சி தீசீஸ்சுக்காக மும்பை மத்திய நூலகத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம். அவள் முதல் முதலாக நூலகத்திற்கு சென்றபோது தாடியும் மீசையுமாய், தோள்வரை வளர்ந்திருந்த முடியுடன் இருக்கையில் சாய்ந்து காலைநீட்டி அமர்ந்துக்கொண்டு படுசீரியசாய் விட்டத்தில் சுழன்றுக்கொண்டிருந்த மின்விசிறியையே பார்த்தவாறு அமர்ந்திருந்த அந்த இளைஞனை பார்த்தமாத்திரத்திலேயே அவனிடம் இருந்த ஏதோ ஒன்றால் கவரப்பட்டு அவனையணுகி ‘Excuse me?’ என்றாள்.

அப்போதும் எதிரே நின்ற தன்னை சற்றும் பொருட்படுத்தாமல் விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்த அந்த இளைஞனுடைய நீலக் கண்கள்தான் தன்னை கவர்ந்திருக்க வேண்டும் என்று நினைத்தாள் மைதிலி. அவளுக்குத் தெரிந்தவரை அத்தனை கவர்ச்சியான கண்களைக்கொண்ட ஆணை அவள் சந்தித்ததே இல்லை.

சரி அவனுடைய ஆழ்ந்த மோனத்தைக் கலைக்க வேண்டாம் என்ற நினைப்புடன் அவள் அங்கிருந்த நகர, ‘என்ன மேடம் எக்ஸ்க்யூஸ்மின்னீங்க. ஒன்னும் சொல்லாம போறீங்க?’ என்ற அவனுடைய குரல் அவளை சுண்டியிழுக்க ஆச்சரியத்துடன் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

சுற்றிலும் அமைதியாயிருந்த அந்த நூலகத்தில் அவனுடைய குரல் ஐந்தாறு தலைகளை அவள் இருந்த திசையில் திரும்ப வைத்தன. அவன் மீண்டும் எங்கே குரல் எழுப்பிவிடுவானோ என்ற பயத்தில் அவனை நெருங்கி சென்று, ‘Nothing. I just wanted to ask some clarification about a book I wanted. I thought you worked here.’ என்றாள் அடிக்குரலில்.

‘Now you don’t?’ என்றான் சீனி விட்டத்திலிருந்து கண்ணை எடுக்காமலே..

அவளுக்கு எரிச்சலாக வந்தது. அதென்ன? அடிப்படை நாகரீகம் இல்லாமல்... பேசிக்கொண்டிருப்பவரின் முகத்தைக் கூட பார்க்காமல்... பதிலளிப்பது? சரியான திமிர் பிடித்தவனாய் இருப்பான் போலருக்கே என்று அவனுடைய பதிலைச் சட்டை செய்யாமல் நூலகத்தின் பணியாளர்களுள் யாராவது தென்படுகிறார்களா என்று தேடிக்கொண்டு சென்றாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவளுக்கு தேவையாயிருந்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மேசையில் பரப்பிவைத்துக்கொண்டு தான் கொண்டு வந்திருந்த குறிப்பேட்டில் தன்னுடைய தீசிஸுக்கானவற்றைக் குறிப்பெடுக்க ஆரம்பித்தாள்.

நேரம் போனதே தெரியாமல் தன்னுடைய அலுவலில் மூழ்கிப்போன மைதிலி தன்னுடைய குறிப்பெடுக்கும் பணி முடிந்ததும் அத்தனை புத்தகங்களையும் வாரி எடுத்துக்கொண்டு தான் அவற்றை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வரலாம் என்ற நினைப்புடன் எழுந்தாள்.

‘Don’t worry, you can leave it there. We will do that.’ என்ற குரல் கேட்டு திரும்பியவள் சற்று முன் கண்ட அதே நீலக் கண்களைச் சந்தித்தாள்.

குழப்பத்துடன், ‘You work here?’ என்றாள்.

‘Yeah. Part time.’ என்று அலட்சியமாகக் கூறிவிட்டு அவள் மீண்டும் மேசையின் மேல் வைத்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஹாலின் வேறொரு மூலையிலிருந்த மேசையின் மேல் பரப்பி அருகிலிருந்த கணினியில் ஒவ்வொரு புத்தகத்தின் எண்களையும் குறித்துக் கொண்டதை அவள் நின்ற இடத்திலிருந்தே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு நூலக வாசலை நோக்கி நடந்தாள் மைதிலி.

அடுத்த ஒரு வாரகாலமும் அவள் அதே புத்தகங்களை அதன் இருப்பிடத்திலிருந்து எடுப்பதும் குறிப்பெடுத்துக்கொள்வதும் தொடர்ந்தது. ஆனால் அவளைக் கவர்ந்த அந்த நீலக்கண்ணனைக் காணாமல் போனதில் அவளுக்கு லேசான வருத்தம்தான்.

அன்று அப்படித்தான், அவளுடைய குறிப்பெடுக்கும் வேலை முடிந்தவுடன் நூலகத்திலிருந்து வெளியே வந்து சுட்டெரிக்கும் வெய்யிலில் வி.டி. ஸ்டேஷன்வரை நடக்க வேண்டுமே நூலக தோட்டத்தில் சற்று அமர்ந்துவிட்டு சென்றால் என்ன எண்ணத்தில் அருகில் இருந்த மரத்தின் கீழ் புல்தரையில் அமர்ந்து கையிலிருந்த குறிப்பேட்டில் தான் குறித்திருந்ததை நோட்டம் விட்டாள்.

‘It is difficult to understand the human mind. It’s deeper than the deepest ocean.’ என்ற வரிகள் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தன. சற்றே அதை வாய்விட்டு படித்தாள்.

‘Yeah, that’s why you should know swimming!’

சட்டென்று கேலியுடன் ஒலித்த அந்த குரலைக் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரையும் காணாமல் குழம்பிப் போய் கைகளை புல்வெளியில் ஊன்றி எம்பி பின்னாலிருந்த புதருக்கு அப்பால் பார்த்தாள்.

அங்கே ஒரு இளைஞன் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு படுத்திருப்பது தெரிந்தது.

‘ஏய் மிஸ்டர். என்ன கிண்டலா?’ என்றாள் கோபத்துடன் ஹிந்தியில்.

‘No, why should I? Do I know you?’ முகத்திலிருந்த துணியை விலக்காமலே பேசியவனைப் பார்க்கப் பிடிக்காமல்... அவனும் அவனுடைய ட்ரெஸ்சும்.. துவைத்து ஒரு வாரமாவது ஆகியிருக்கும் என்று நினைத்தாள்.

புல்வெளியில் வைத்திருந்த அவளுடைய கைப்பையையும் குறிப்பேட்டையும் எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தாள். வாசலை நெருங்கியதும் திரும்பி தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அவன் எழுந்து நூலகத்தை நோக்கி நடப்பது தெரிந்ததும் அவன் ஒருவேளை நூலக ஊழியனாயிருந்தால் அவனுடயை நடத்தையைக் குறித்து நூலக அதிகாரிகளிடம் முறையிட்டால் என்ன என்று யோசித்தாள். அதற்கு அவன் யாரென்று அடையாளம் தெரிய வேண்டுமே? அவன் உள்ளே செல்வதற்குள் அவனுடைய முகத்தைப் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்து வேகமாக அவன் பின்னே ஓடினாள்.

அவள் நூலக அலுவலக அறையை நெருங்கவும் அவளுடைய காலடி ஓசை கேட்டு அவன் திரும்பி அவளைப் பார்க்கவும் சரியாக இருந்தது. அதே நீலக் கண்ணன்!

‘Yes madam? You forgot something?’ என்ற அவனுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தாள்.

அவன் தன்னுடைய தோள்களைக் குலுக்கிக்கொண்டு உள்ளே செல்ல அவள் வரவேற்பு கவுண்டரில் அமர்ந்திருந்த பெண்ணிடம், ‘Does he work here?’ என்றாள்.

அவள் ஒருவித அருவெறுப்புடன் சென்று மறைந்த அந்த இளைஞனைப் பார்த்துவிட்டு, ‘Yes Mam. He is Srinivasan, a Madrassi. He is a volunteer. Works here part time . In fact, he is a research student.’ என அவளுடைய கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

‘Is it? What does he research? He doesn’t look like one!’

அந்தப் பெண் அலட்சியத்துடன், ‘I really don’t know. That’s what he tells us. Why can’t you ask the Reader? She is there!’ என்று அந்த அறையின் கோடியிலிருந்த ஒரு சிறு கேபினை கைகாட்ட மைதிலி இது நமக்குத் தேவையா என்று ஒரு விநாடி யோசித்தாள். பிறகு என்ன தோன்றியதோ அந்த கேபினை நோக்கி நடந்தாள்.

இடுப்பு வரையே அமைந்திருந்த அந்த கேபினின் தடுப்பின் முன் பக்கத்திலிருந்த கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது பெண்ணை - நிச்சயம் மராத்திக்காரிதான்.. மூக்கிலிருந்த வளையமே சொல்கிறதே - அணுகி, ‘Excuse me’ என்றாள்.

‘க்யா ஹை?’ என்று தன்னை நிமிர்ந்து நோக்கிய பெண்ணின் முகத்திலிருந்த அலட்சியத்தைப் பொருட்படுத்தாமல், ‘நான் ஒரு ஆராய்ச்சிக்காக இந்த நூலகத்திற்கு அடிக்கடி வருவதுண்டு.. இங்கு மிஸ்டர் சீனிவாசன் என்பவர் என்னுடைய பிரிவிலேயே ஆராய்ச்சி செய்வதாக கேள்விப்பட்டேன். அவரை சந்திக்க முடியுமா என்று கேட்கத்தான்..’

அவளுடைய கேள்வியைக் கேட்டதுமே குலுங்கி குலுங்கி அந்த பெண் சிரிக்க மைதிலி என்ன செய்வதென தெரியாமல் குழப்பத்துடன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

‘கோன்.. ஓ பத்மாஷ்? யாரு, அந்த சோம்பேறியா? அவன் ஒரு யூஸ்லெஸ்.. உங்களுக்கு வேற வேலையிருந்தா பாருங்க. அவனோட அம்மாவுக்காக அவன இங்க அலவ் பண்றோம். Otherwise he would have been thrown out long back.’

மைதிலி நின்ற இடத்திலேயே நிற்கவே அந்த பெண் கேள்வியுடன் அவளைப் பார்த்தாள். ‘நான் சொன்னது கேக்கலையா? உங்க நேரத்த வீணாக்காதீங்க. போங்க.’

‘It is OK. Please call him. I just want to talk to him for a minute.’ என்று அவள் நிர்பந்திக்க மைதிலியை  ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, ‘ஒக்கே, ஓக்கே. இன்னைக்கு நீங்க முளிச்ச மூஞ்சி சரியில்லை போலருக்கு. அங்க போய் உக்காருங்க. அவன வரச்சொல்றேன். ஆனா ஒன்னு, அவனுக்கு எப்ப வரணும்னு தோனுதோ அப்பத்தான் வருவான். It could take an hour or even more than that.’ என்றாள்.

அவள் ஒருவேளை அதிகப்படியாய் பேசுகிறாளோ என்று நினைத்த மைதிலி அவளுடைய எச்சரிக்கையை புறக்கணித்துவிட்டு அவள் கைகாட்டிய இருக்கையில் சென்று அமர்ந்தாள்..

ஆனால் ஒரு மணி நேரமாகியும் அவன் வராததால் வெறுப்புற்று தன்னுடைய மடத்தனத்தை நொந்துக்கொண்டு எழுந்து வாசலை நோக்கி நடந்தாள்..

அவள் வாசலை நெருங்கியிருப்பாள்..

‘You wanted me?’ என்ற குரல் தன் பின்னால் கேட்கவே கோபத்துடன் திரும்பி, ‘who said?’ என்றாள்.

இருப்பினும் தன்னையே குறும்புடன் பார்த்துக்கொண்டிருந்த அந்த நீலக்கண்களிலிருந்து கண்களை விலக்க இயலாமல் தடுமாறியதை இப்போதும் நினைத்துப் பார்த்தாள்..

அந்த சந்திப்பிற்குப் பிறகு அவனை அன்றும் அதற்கடுத்த நாளும்.. ஏன், ஏறக்குறைய அடுத்த இரண்டு மாதங்களில் தினமும்..

அவனை நெருங்கி சென்று பழகியபோதுதான் புரிந்தது அவனுடைய உளமனதிலிருந்த ஒட்டுமொத்த சமுதாயத்தின் மேலிருந்த அசாத்திய ஆனால் அவசியமில்லாத கோபம்..

இலக்கியம் படிக்க விரும்பிய அவனுடைய விருப்பத்தை புறக்கணித்துவிட்டு பொறியாளனாக தன்னை கட்டாயப்படுத்திய தன் தந்தையின் மேலிருந்த கோபம் எப்படி அவனை பொறியாளர் படிப்பின் இறுதியாண்டு தேர்வை வேண்டுமென்றே எழுதாமலிருக்க வைத்தது,... அதற்காக தன்னை கண்டித்த தந்தையை எதிர்த்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மும்பை தெருக்களில் றுமாத காலம் சுற்றித் திரிந்தது,.... போதை பொருளுக்கு அடிமையாகிப் போனது,... தன்னுடைய குடும்ப நண்பர் ஒருவரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது,... பிறகு போதைப் பொருளின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டு அப்போது மும்பை மேயரின் துணைவியின் நெருங்கிய தோழியாகவிருந்த அவனுடைய தாயின் பரிந்துரையின் பேரில் மும்பை பல்கலைக்கழக மனித வள மேம்பாடு துறையில் ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது.. அதனைத் தொடர்ந்து அந்த அரசு நூலகத்தில் பகுதி நேர வாலண்டியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது..

அவனுடைய அந்த நோக்கமில்லாத வாழ்க்கைப் பாதை அவளை சந்தித்தப்பிறகும் பெரிதாய் எந்தவித மாற்றமுமில்லாமால் போனாலும் அவனுடனான அவளுடைய நட்பு மைதிலியை அவளுடைய சீரான பாதையிலிருந்து சற்றே விலகிச் செல்ல வைத்துவிட்டது என்றால் மிகையாகாது ..

இந்த இரண்டாண்டு நட்பை விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் அவள் படும்பாடு..

‘என்ன மைதிலி.. என்னையா பார்க்க வந்தே..? ஏன் இங்க ஒக்காந்திருக்கே..? நேரா ரூமுக்கு வர வேண்டியதுதானே..?’ என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்த மைதிலி தன்னெதிரில் புன்னகையுடன் நின்ற தன்னுடைய குடும்ப நண்பர் மருத்துவர் ராஜகோபாலனை பார்த்தாள்..

தொடரும்..


No comments: