18.4.06

சூரியன் 61

மும்பை உள்ளூர் விமானநிலைய வாசலிலேயே இருந்த தனியார் விமான நிறுவனத்தின் செக் இன் கவுண்டரில் தங்களுடைய பயணச்சீட்டைக் காண்பித்து தங்களுக்கு  பிடித்த இருக்கைகளை தேர்வு செய்து போர்டிங் சீட்டைப் பெற்றுக்கொண்ட மாதவன் திரும்பி தன்னுடைய மனைவி மற்றும் மகளைப் பார்த்து புன்னகைத்தார்.

‘At last goodbye to Mumbai. எத்தனை வருஷ பழக்கம்? விட்டுட்டு போறதுக்கு என்னவோ போலருக்கு, என்ன வத்ஸ்?’

வத்ஸலா திரும்பி தன் தாயைப் பார்த்தாள். சே..  How attractive she is? இவங்களோட நின்னா நாந்தான் அக்கா மாதிரி இருக்கேன் என்று நினைத்தவாறு தன்னையே ஒருமுறை பார்த்துக்கொண்டாள். Hip is spreading bothways. Unless I take serious note of this bulging waist line I am going to be in trouble.

‘என்ன வத்ஸ்.. நீ என்ன நினைக்கறேன்னு நான் சொல்லவா?’ என்றார் கேலியுடன் மாதவன்.

வத்ஸலா கோபத்துடன் அவரை முறைத்தாள். ‘தேவையில்லை. எனக்கு தெரியும்.’

சரோஜா இருவரையும் மாறி மாறி பார்த்தாள். என்னாச்சி இந்த மனுஷனுக்கு? அப்படியே டோட்டலா மாறிட்டார்.. அதுவும் ரெண்டே நாள்ல.. பழைய சிடுசிடுப்பும், கோபமும் போய் ஜாலியான ஆளா மாறிட்டாரே. எல்லாம் அந்த சனியன் பிடிச்ச பேங்க் வேலையாலத்தான்னு நினைக்கிறேன். எப்ப பார்த்தாலும் போட்டி, பொறாமைன்னு.. போறுண்டாப்பா இந்த பம்பாய் பரபரப்பும் வேகமும். நிம்மதியா கொஞ்ச நாளைக்கு மெட்றாஸ் லைஃப அனுபவிக்கலாம். அந்த ஸ்லோ லைஃப் ஒருவேளை என்னையும் மாத்தினாலும் மாத்திரும்..ஆமா, இவர் மாறினா மாதிரியே நாமளும் மாறித்தான் பார்ப்போமே.. வத்ஸ¤க்கும் வயசாய்ட்டே போவுது.. சீனிக்கும் இதுவரை லைஃப்லே ஒரு பிடிப்பும் வரலை.. போறும் இந்த லேடீஸ் க்ளப்ங்கற போலித்தனமான வாழ்க்கை. மெட்றாஸ்ல போயி கொஞ்ச நாளைக்கு இதையெல்லாம் மூட்ட கட்டி வச்சிட்டு இவளுக்கு ஒரு மாப்ளைய பார்த்து முடிக்கணும்.. சீனிய ஒரு வழிக்கு கொண்டு வரணும். அவன தனியா ரொம்ப நாளைக்கு பம்பாய்ல விட்டு வைக்கக் கூடாது. மெட்றாஸ்ல இறங்கனதுமே அவன கூப்டு பேசணும்.

‘என்ன சரோ ஏதோ பலமான யோசனைல இருக்கா போலருக்கு. Shall we go to the departure lounge? I think the flight is on time.’

சரோஜா நினைவுகள் கலைந்து தன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள். ‘சரிங்க.. போலாம். எல்லாம் இந்த சீனிய நினைச்சித்தான். அவந்தான் கேட்டான்னா நீங்க அதுக்கு ஒத்துக்குவீங்கன்னு நா எதிர்பார்க்கவே இல்லே.. தனியா அவன் என்ன பண்ணிக்கிட்டிருக்கானோ.. அந்த மைதிலியோட அப்பாவுக்கு இவன் பேர கேட்டால பிடிக்காது..’

மாதவன் ஆதரவுடன் அவளுடைய தோளில் கைவைக்கவே அவருடைய செயலை எதிர்பார்க்காத சரோஜா தன்னையுமறியாமல் பின்வாங்கினாள்.  அவளுடைய செய்கையைப் பார்த்த வத்ஸலா புன்னகையுடன் தன் தந்தையைப் பார்த்து விஷமத்துடன் கண்ணடித்தாள்.

‘Don’t Worry Saro. He should be all right. அவன நம்பலைன்னாலும் அந்த மைதிலிய நம்பலாம். She will take care of him.’ என்ற கணவனைப் பார்த்தாள் சரோஜா. அந்த பொண்ண பத்தியும் தெரிஞ்சி வச்சிருக்கார் போலருக்கு?

‘என்ன பாக்கறே சரோ? அந்த பொண்ண எப்படிறா இவனுக்கு தெரியும்னுதானே.. அந்த பொண்ண ஒருதரம்தான் சீனியோட பாத்திருக்கேன்னாலும் அந்த ஒரு பார்வையிலயே என்னை Impress பண்ணிட்டா.. I think she would be a good match for Seeni. ஆனா நம்ம சீனிக்கிட்ட என்னத்த பார்த்துட்டு அந்த பொண்ணு...’

சரோஜா சுர்ரென்று எழுந்து வந்த கோபத்துடன் தன் கணவனைப் பார்த்தாள். ‘எதுக்கு அப்படி சொல்றீங்க? நம்ம சீனிக்கு என்ன?’

மாதவன் புன்னகையுடன் அவளைப் பார்த்தார். ‘Ok.Ok. I take back. Don’t get upset. நான் அந்த அர்த்தத்துல சொல்லலே..’

சரோஜா சமாதனமடைந்து, ‘சரி அதையெல்லாம் நாம் மட்றாஸ்ல போயி பேசிக்கலாம். வாங்க செக்யூரிட்டி செக் இன் சைன் வந்திருச்சி.. வா வத்ஸ்..’ என்றவாறு அவர்களுக்கு முன்னால் நடந்தாள்.

மூவரும் பாதுகாப்பு பரிசோதனை முடிந்து புறப்பாடு லவுஞ்சிலிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர்.

‘Will anybody come to receive us Dad?’ என்றாள் வத்ஸலா.

தூரத்தில் ஓசையில்லாமல் வந்து இறங்கிக்கொண்டிருந்த விமானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மாதவன் அதிலிருந்து கண்ணெடுக்காமலே, ‘Yes. I think the acting Chairman Mr.Sundaralingam will be at the airport.’ என்றார்.

பிறகு, ‘நமக்கு ஏதாச்சும் flat அரேஞ் பண்ணியிருக்காளாங்க?’ என்ற மனைவியைப் பார்த்தார்.

'ஆமாம்னு நினைக்கிறேன். பெசண்ட் நகர்லருக்கற ஒரு ட்யூப்ளெக்ஸ் அபார்ட்மெண்ட் அரேஞ் பண்ணியிருக்காங்களாம். நமக்கு அது பிடிச்சிருந்தா I think the Bank will buy that for us. பிடிக்கலேன்னா நாம வேற ஏதாச்சும் பாக்கலாம்.’

‘அது வரைக்கும் டாட்..?’

மாதவன் அவளுடைய ஜீன்ஸ் கால் முட்டியில் செல்லமாக தட்டினார். ‘அதுவரைக்கும் ரோட்லதான்.’ என்றார் கேலியுடன்.

‘விளையாடாதீங்க.’ என்ற தன் மனைவியைப் பார்த்தார்.

‘ஒரு வாரத்துக்கு தாஜ்ல ஒரு எக்ஸ்யூட்டிவ் சூட் புக் பண்ணியிருக்கேன்னு என்னு பி.ஏ. பொண்ணு சொன்னா.. போய் பாக்கலாம். வீட்ட ஃபிக்ஸ் பண்ணிட்டுத்தான் நம்ம திங்க்ஸ மும்பையிலருந்து கொண்டு வர முடியும். அதுவரைக்கும் தாஜ்ல தங்கலாம்னு நினைக்கிறேன். Getting an accommodation should not be a problem in Chennai. நாம ஏற்கனவே இருந்த ஊர்தானே..?’

சரோஜாவுக்கும் அப்படித்தான் தோன்றியது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு தான் பல வருடங்கள் வசித்திருந்த இடம்தானே..

சட்டென்று நினைவுக்கு வந்தவளாய் தன் கணவனைப் பார்த்தாள். ‘ஏங்க நாம கடைசியா இருந்த காலனியில நம்மளோட ஒரு மலையாளி ஃபேமிலி இருந்தாங்களே.. நாங்கூட லேடீஸ் க்ளப் பிரசிடெண்ட் எலக்ஷன்ல...’

மாதவன் சிரித்தார். ‘யாரு சேது மாதவனும் அவனோட வொய்ஃபும்தானே? அவங்கள அவ்வளவு ஈசியா மறந்துர முடியுமா என்ன? அவர் இப்ப யார் தெரியுமா?’

சரோஜா வலுடன் தன் கணவனைப் பார்த்தாள், ‘அவர் இப்ப என்னவா இருக்கார்?’ என்றாள்.

‘அவர்தான் இப்ப எம்.டி. ஆனாலும் ஏனோ அவர ஆக்டிங் சேர்மனா ஆக்காம சி.ஜி.எம்மா  இருக்கற சுந்தரலிங்கத்த ஆக்கியிருக்காங்க. ஆக, இப்பவும் அவர் மாறலைன்னு நினைக்கறேன்.’

சரோஜா முகத்தை சுளுக்கினாள். ‘அதெப்படிங்க மாறும்..? வயசாச்சிங்கறதுக்காக சிறுத்தைக்கு புள்ளி போயிருமா என்ன?’

வத்ஸ்லா உரக்க சிரித்தாள். ‘இந்த மாதிரி நீங்க ரெண்டு பேரும் பேசி எவ்வளவு நாளாச்சிம்மா.. Dad our Chennai shift is really going to do wonders in our family.’

சரோஜா தன் கணவனைப் பார்த்தாள். ‘அவரால உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வருமாங்க? What do you think?’

மாதவன் யோசனையுடன் தன் மனைவியைப் பார்த்தார். ‘இருக்கலாம்.. யார் கண்டா? ஆனா ஒன்னு.. Now I am not prepared to play cat and mouse with him anymore. I want to do something constructive. ஆனா அவர் பழையபடி ஏதாச்சும் வில்லங்கம் பண்ணலாம்னு வந்தா நிச்சயம் விடமாட்டேன்.. பாக்கலாம்.. Maybe he would have changed.. Let us see.. I have an open mind.. So long he keeps his place.. I think he will..’

வத்ஸலா தன்னுடைய தந்தையின் மனநிலையை உணர்ந்து, ‘போறும்பா இந்த போரிங் டாப்பிக். வேற ஏதாச்சும் பேசலாம்..’ என்று பேச்சை மாற்றினாள்.

அடுத்த பத்து நிமிடங்களில் மூவருமே சென்னையை மறந்து கலகலப்பானார்கள்..

***

‘ஃப்யூனரல் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு போறதுக்கு டைம் இருக்குமா பிலிப்?’ என்ற தன்னுடைய நண்பரைத் திரும்பி பார்த்தார் பிலிப் சுந்தரம்.

‘நாம் சர்ச்சுக்குத்தான போறோம்.. ஃப்யூனரல் க்ரவுண்டுக்கு போனாத்தான் அப்படியே ஏர்போர்ட்டுக்கு போறது நல்லாருக்காது. ஆனா இதுல நீங்க என்ன நினைக்கறீங்களோ அப்படியே பண்ணலாம். எனக்கு இதிலெல்லாம் அவ்வளவா நம்பிக்கையில்லை.’

சுந்தரலிங்கம் லேசான புன்னகையுடன் தன் நண்பரைப் பார்த்தார். நியாயம்தான். இதிலெல்லாம் எனக்கும் நம்பிக்கையில்லைதான். ஆனாலும் வீட்டு பெண்களுக்காகவாவது இதை பார்க்க வேண்டியிருக்கிறதே. ‘என்ன நீங்க ?மொத தடவையா ஒருத்தர வரவேற்கறதுக்கு அப்படியே சாவு வீட்லருந்து போனா நல்லாவா இருக்கும்? நாள பின்ன அவருக்கு தெரியவந்தா தப்பா நினைப்பாருங்க.. பேசாம சிரமத்த பாக்காம வந்து குளிச்சிட்டு போங்க. அவரயும் நம்ம வீட்லயே குளிச்சிட்டு போச்சொல்லுங்க.’ என்று பலமுறை வற்புறுத்தி கூறிய தன் மனைவியை நினைத்துக்கொண்டார்.

‘நீங்க சொல்றது சரிதான் பிலிப். இருந்தாலும் வீட்லருக்கறவங்களோட நம்பிக்கைக்கும் மதிப்பு குடுக்கணுமே..’

‘கரெக்ட் சார். அப்புறம் நாளைக்கு ஏதாச்சும் அசம்பாவிதமா நடந்திருச்சின்னா நா அப்பவே சொன்னேன்னு ஒருவேளை உங்க மேலயே பழிய தூக்கி போட்டாலும் போட்ருவாங்க..’

பிலிப் சுந்தரத்தின் குரலிலிருந்த கேலியை உணர்ந்து சுந்தரம் லிங்கம் சிரித்தார். முன் இருக்கையிலிருந்த ராஜியும் புன்னகையுடன் திரும்பி ஓட்டுனரைப் பார்த்தாள்.

வாகனம் தாம்பரம் லெவல் க்ராசிங்கை நெருங்குவதை உணர்ந்த ஓட்டுனர் திரும்பி, ‘ஐயா கோவில் வந்திருச்சிங்க..’ என்றான்.

தொடரும்

No comments: