17.7.06

சூரியன் 109

ரவியும் மஞ்சுவும் அவனுடைய பழைய அலுவலகத்தில் நுழைந்தபோது அவன் முற்றிலும் எதிர்பார்த்திராத வரவேற்பு கிடைத்தது.

அவனுக்கு பதிலாக கிளைக்கு பொறுப்பேற்றிருந்த மேலாளர் ரவிக்கு  பரிச்சயமில்லாதிருந்தவர் என்பதால் அவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் சி.ஜி.எம் ஃபிலிப் சுந்தரம் சற்று முன்பு தொலைப்பேசியில் அறிவுறுத்தியது நினைவுக்கு வர அவனையும் மஞ்சுவையும் புன்னகையுடன் வரவேற்று உபசரித்தார்.

‘ஒங்கள இதுக்கு முன்னால சந்திச்சிருக்கலன்னாலும் ஒங்களபத்தி இந்த மூனு மாசமா தெரிஞ்சிக்கிட்டேன் மிஸ்டர் ரவி. But don’t worry, my opinion about you is immaterial as far as this enquiry is concerned. We take so many risky decisions in our career as a branch manager. Some succeed, some fail. While successful decisions are noticed by only a very few wrong decisions are noticed by everyone. நானும் ஒங்கள மாதிரி எல்லாவித பிராஞ்சுகள்லயும் வேலை செஞ்சிருக்கேன். நீங்க இங்க செஞ்ச மாதிரி தப்புகளையும் செஞ்சிருக்கேன். கடவுள் புண்ணியத்துல இது வரைக்கும் நான் செஞ்ச எந்த தப்பாலயும் பேங்குக்கு நஷ்டம் ஏற்படல. அதனால எந்த என்க்வயரிலயும் மாட்டிக்கல. இருந்தாலும் இப்போதைய ஒங்க மனநிலை எனக்கு புரியுது மிஸ்டர் ரவி. அதனால ஒங்களுக்கு எந்த டாக்குமெண்ட்லாம் தேவைன்னு சொல்லுங்க.. நான் காப்பீஸ் எடுத்து வைக்கிறேன்.’

ரவி நன்றியுடன் அவரைப் பார்த்தான். தான் கையோடு கொண்டுவந்திருந்த லிஸ்ட்டை எடுத்து அவரிடம் நீட்டினான். அவர் அதை பெற்றுக்கொண்டு தன் முன்னாலிருந்த கோப்பில் வைத்துக்கொண்டார்.

ரவி சற்று தயக்கத்துடன், ‘இத்தோட நான் சில ஃபைல்சையும் இங்கயே ஒக்காந்து படிச்சி குறிப்பெடுத்துக்கறதுக்கு ஒங்க பர்மிஷன் வேணும். அதுக்கும் செப்பரேட்டா ஒரு ரிக்வெஸ்ட் எழுதி கொண்டு வந்திருக்கேன்.’ என மேலாளர் யோசனையுடன் அவனுடைய கோரிக்கை கடிதத்தை படித்து பார்த்தார்.

இதைப் பற்றி சி.ஜி.எம் ஒன்றும் தன்னிடம் கூறவில்லையே என்று சிறிது நேரம் யோசித்தார்.

‘ஒங்களுக்கு ஏதும் சிரமம் இருந்தா நீங்க ஃபிலிப் சார கூப்ட்டு கேட்டுட்டு பெர்மிட் பண்ணா போறும். சார் இப்ப ஒருவேளை கமிட்டி மீட்டிங்ஸ்ல இருப்பார்னு நினைக்கிறேன். அதனால நீங்க கேட்டு வைங்க. நானும் மஞ்சுவும் அப்புறமா வரோம்..’ என்றவாறு ரவி எழுந்திருக்க மேலாளர் அவனை அமரும்படி சைகைக் காட்டினார்.

‘இந்த ஃபைல்ஸ் எல்லாமே ஒங்க என்க்வயரி சம்பந்தப்பட்டதா இருக்கும்னுதான் தோனுது. அதனால நீங்க படிக்கறதுக்கு இந்த ஃபைல்ஸ் எல்லாம் தரேன். ஆனா ஃபைல்ஸ்லருக்கற எந்த பேப்பரையும் நீங்க அதுலருந்து எடுத்துராம இருந்தா போறும்.’

ரவி மஞ்சுவைப் பார்த்தான். அவள் சரியென்பதுபோல் தலையை அசைத்தாள். ‘Don’t worry. I will not remove any paper from the files. I will simply read and record in this portable recorder. I hope you don’t mind.’

மேலாளர் புன்னகையுடன், ‘ரொம்ப ஹைடெக்கா இருக்கீங்க. சரி. ஃபைல்ச கொண்டுவந்து அடுத்த கேபின்ல வைக்க சொல்றேன். நீங்க படிச்சி முடிச்சதும் சொல்ங்க.’ என்றவாறு தன்னுடைய சிப்பந்தியை அழைக்க ரவியும் மஞ்சுவும் அவருக்கு நன்றி செலுத்திவிட்டு அவர் சுட்டிக்காட்டிய அறைக்குள் நுழைந்து சற்று நேரத்தில் தங்களுக்கு முன் வைக்கப்பட்ட கோப்புகளை படிக்க ரம்பித்தனர்.

*******

சிவகாமி சீனிவாசனையும் மைதிலியையும் மாறி, மாறி பார்த்தாள்.

இவாக்குள்ள மறுபடியும் பிரச்சினை போலருக்கே. இவன் கால ஒடச்சிக்கிட்டு நிக்கற நேரத்துல இந்த பொண்ணோட ஆறுதலான பேச்சும் இல்லாம போனா இவன் மனசு ஒடஞ்சி போயிருவானே..

மைதிலியின் கலங்கிய கண்கள் அவளை என்னவோ செய்ய இதுக ரெண்டையும் செத்த நேரத்துக்கு தனியா விட்டுட்டு போவோம். ஒருக்கா ரெண்டும் பேசி ஏதாவது முடிவுக்கு வந்தாலும் வருங்க என்று நினைத்தாள்..

‘என்னடீம்மா வாடிப் போயிருக்கே? ரெண்டு இட்லியும் சட்னியும் சாப்ட்டு ஒரு வா காப்பியும் குடிச்சேன்னு வச்சிக்க, மொகம் தெளிச்சியாயிரும். சீனி.. நோக்கும் எடுத்து வைக்கவா?’

சீனி வேண்டாம் என்று தலையை அசைத்தான். ‘வேணாம் மாமி.. எனக்கு பசியில்லை. எனக்கு கொஞ்ச நேரம் படுத்து எழுந்தா போறும்னு தோணுது. நான் கீழ அப்பா ரூம்ல கொஞ்ச நேரம் படுக்கலாம்னு பாக்கறேன்.’

பிறகு திரும்பி மைதிலியைப் பார்த்தான்.

‘You look terribly tired yar.. பிரேக்ஃபாஸ்ட் ஒன்னும் செஞ்சிருக்கமாட்டேன்னு நினைக்கறேன். மாமி கையால சூடா ஒரு காப்பி குடிச்சிட்டு போ.. You will feel alright. Thanks for everything.’

சோபாவிலிருந்து எழுந்திருக்க முயன்று முடியாமல் மீண்டும் சோபாவிலேயே சோர்ந்து போய் விழுந்தவனை ஓடிவந்து பிடித்தாள் சிவகாமி மாமி. மைதிலி செய்வதறியாது அமர்ந்திருந்தாள்.

‘டேய், டேய்.. இப்ப என்ன அவசரம்? செத்த நேரம் அப்படியே ஒக்காந்து இவ கிட்ட பேசிண்டிரு. நா காப்பிய கலந்து கொண்டாரேன்..’ என்ற மாமி மைதிலியை பார்த்து இவனாண்ட பேசிண்டிரு என்று கண்ணால் சைகை காட்டியவாறு சமையலறையை நோக்கி நகர்ந்தாள்.

மைதிலி கண்களை மூடியவாறு சோபாவில் சாய்ந்தமர்ந்திருந்த சீனியையே பார்த்தாள். இவன் மனசுல என்னத்த நினைச்சிண்டு அந்த வார்த்தைய சொன்னான்? இவன மறக்கவும் முடியாம அவன் கேக்கறதுக்கு ஒத்துக்கவும் முடியாம நா படற அவஸ்தை இவனுக்கு தெரியுதா? எவ்வளவு ஈசியா I need time to sort out my lifeனு சொல்லிட்டான்.  அதுக்கு என்ன அர்த்தம்? இன்னைக்கி இது தெரியாம இங்கருந்து போப்படாது..

‘என்ன சீனி.. என் கேள்விக்கு நீ இன்னும் பதில் தரலை.’

சீனிவாசன் அவளை பார்த்தான். எங்கிட்டருந்து என்ன பதில நீ எதிர்பார்க்கறே? What do you want me to say? I want you to be with me, forever.. Can you do that? Will your parents agree to that? They can’t. I know that. That’s why I thought..

‘என்ன சீனி, என்ன யோசிக்கறே? I need time to sort out my lifeனு சொன்னியே.. அதுக்கு என்ன அர்த்தம்? என்னைய மறந்துட்டு சென்னைக்கே போயிரலாம்னா? நீ சென்னைக்கு போகத்தான் வேணும்.. I agree.. ஆனா என்னைய மறந்துரமுடியுமா ஒன்னால? முடியும்னா சொல்லு. We will part as friends.. முடியாம இருக்கறச்சே முடியும்னு நினைச்சிக்கிட்டு ஒன்னையே நீ டார்ச்சர் பண்ணிக்காத. வெக்கத்த விட்டு சொல்றேன் சீனி.  என்னாலயும் இந்த செப்பரேஷன தாங்க முடியும்னு தோணலை.. I will also come with you.. I don’t think it will be that difficult to get a job there. என்ன சொல்ற?’

சீனிவாசன் கண்களை மூடி அமர்ந்திருந்தான். She has decided to leave everything in her life for my sake. ஆனா அதுக்கு ஒத்துக்குறது சரியா? அவ அப்பா, அம்மாவால இந்த செப்பரேஷன தாங்கிக்க முடியுமா? நீ ஏன் மைதிலிய எங்களுக்கு விட்டுத் தரப்படாதுன்னு கேட்டாரே..

‘என்ன சீனி, ஏதாச்சும் சொல்லேன். இப்படியோ ஒக்காந்திருந்தா என்ன அர்த்தம்?’

சீனி கண்களை திறந்து அவளைப் பார்த்தான்.

அவனுடைய கண்களில் ததும்பி நின்ற கண்ணீர் மைதிலியை சங்கடப்படுத்தியது. எழுந்து அவனருகில் சென்றமர்ந்து அவனுடைய கரங்களைப் பற்றினாள். இருவரும் அப்படியே மவுனமாய் அமர்ந்திருப்பதை பார்த்தவாறே சமையலறையிலிருந்து காப்பி கோப்பைகளுடன் வந்த சிவகாமி உதட்டில் தவழ்ந்த புன்னகையுடன் கையிலிருந்த கோப்பைகளை அவர்களிடம் நீட்டினாள்.

‘டேய் சீனி.. முதல்ல காப்பிய குடி. ஒங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வர்றது சகஜம்தானடா? இன்னும் கொஞ்ச நேரத்துல ஒங்கம்மா கூப்ட்டாலும் கூப்டுவா. அவ இவ்வளவு நேரம் கூப்டாம இருந்ததே ஜாஸ்தி.’

இருவரும் மவுனமாக காப்பியை அருந்த சிவகாமி அவர்கள் இருவரையும் சில நொடிகள் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு நின்றாள்.

ஜோடிப் பொருத்தம் நன்னாத்தான் இருக்கு. சரோஜாவுக்கும் இவா ரெண்டு பேரையும் சேர்த்துவச்சிட்டா என்னன்னு தோணும்னு நேக்கு தெரியும். ஆனா மாதவன் என்ன சொல்வானோன்னுதான் யோசிக்கறா போலருக்கு.

அதுக்கு முன்னால வத்ஸோட கல்யாணத்த முடிச்சிடணும். அது என்னடான்னா ஆம்பள மாதிரி பேண்டையும் சர்ட்டையும் போட்டுண்டு கல்யாணத்த பத்தன சிந்தனையே இல்லாம சுத்திக்கிட்டிருக்கு. மெட்றாஸ் போன நேரம் ஒரு வரண் குதிர்ந்து வந்தா நல்லாருக்கும்..

ஹ¥ம்.. நாம ஒன்னு நினைக்க பகவான் என்ன நெனச்சிண்டிருக்காரோ..

அவர்கள் மூவர் மவுனத்தையும் கலைப்பதுபோல் ஹாலில் இருந்த தொலைப்பேசி அலற மூவரும் திடுக்கிட்டு அதை பார்த்தனர்.

சிவகாமி சென்று எடுத்தாள். ‘யாரு சீனியா? இருக்கான். நீங்கள்ளாம் சேஃபா போய் சேர்ந்தேளோல்லியோ.. சரி.. இதோ வந்துண்டே இருக்கான்.’ ஒலி வாங்கியை கையால் பொத்திக்கொண்டு சீனியை பார்த்தாள். ‘டேய் ஒங்கம்மா.. ஒன்னால இங்க வரமுடியுமா?’

சீனிவாசன் சிரமப்பட்டு எழுந்து மைதிலியின் தோள்களை பற்றியவாறே தத்தி தத்தி வந்து ஒலிவாங்கியை வாங்கி, ‘Hi Ma.. How are you?’ என்றான்.

சிவகாமி மைதிலியைப் பார்த்து இங்க வா என்று சைகைக் காட்டி தன்னுடன் அழைத்து சென்றாள்..

‘இல்ல மாமி. I want to be here for three more weeks. நான் அப்பாவோட பி.ஏ கிட்ட சொல்லி இந்த வீட்ட இன்னும் ஒரு மாசத்துக்கு ரீட்டெய்ண் பண்ணிக்கறதுக்கு பர்மிஷன் வாங்கிக்கறேன். என்ன மம்மி? Yes, I need some time to think about my future. My friendship with Mythili.. ஆமாம் மம்மி.. Please give me this.. I want to be alone.. அப்பாக்கிட்ட சொல்லி நீதான் பர்மிஷன் வாங்கி தரணும்.. இந்த மாச கடைசியில மெட்றாஸ் வந்துருவேன்..’

எதிர்முனையில் சரோஜா சம்மதிக்க தயங்கியும் சீனிவாசன் பிடிவாதமாக நிற்கவே வேறு வழியில்லாமல் சம்மதிக்க அவன் நிம்மதியுடன் இணைப்பைத் துண்டித்தான்..

தொடரும்..



2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

இரு இணைகளுக்கும் இப்பதிவிலிருந்து
திருப்பு முனை தோன்றட்ட்டும்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

இரு இணைகளுக்கும் இப்பதிவிலிருந்து
திருப்பு முனை தோன்றட்டும் //

ஆமாங்க.. அதான் என் ஆசையும்..