22.12.06

சூரியன் 157

ஃபிலிப் சுந்தரம் மாதவனின் அறைக்குள் நுழைந்தபோது அவர் அன்றைய தபாலில் வந்த கடிதங்களில் மூழ்கியிருந்ததைக் கவனித்தார்.

முந்தைய முதல்வர் மூர்த்தி பதவியிலிருந்த காலத்தில் அவரால் இதற்கெனவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கோப்புகள் இவை என்பது அவருக்கு தெரியும்.

அரசு இலாக்காக்களில் காணப்படுவது போலவே அவசரமானவை (Urgent), ரகசியமானவை (Confidential), முதல்வரின் பிரத்தியேக பார்வைக்கு (For the personal attention of the Chairman) என்ற அடிப்படையில் கடிதங்கள் தரம் பிரிக்கப்பட்டு தனித்தனி கோப்புகளில் வங்கி முதல்வரின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்ற வழக்கத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.

‘வாங்க மிஸ்டர் ஃபிலிப். There are certain letters which I thought I should discuss with you.. That’s why I called you..’ என்று துவங்கிய மாதவன் தன்னுடைய பார்வைக்கு என்று பிரிக்கப்பட்டிருந்த கடிதங்களிலிருந்து இரண்டு கடிதங்களை அவர் முன் நீட்டினார்.

ஃபிலிப் சுந்தரம் அவற்றைப் பெற்று வாசிக்க துவங்கினார்.

முதல் கடிதம் வங்கியின் முதன்மை தொழிற்சங்கத் தலைவரிடமிருந்து வந்திருந்தது. மாதவனை சந்திக்க அனுமதி கோரி. முந்தைய முதல்வரின் பதவிக் காலத்தில் ஒத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப் படாமல் இருக்கும் சலுகைகளைப் பற்றி விவாதிக்க விரும்புவதாகவும் இரண்டு நாட்களுக்குள் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

ஃபிலிப் சுந்தரம் சற்று முன்னர் ஃபேக்ஸ் மூலம் வந்திருந்த இரண்டாவது கடிதத்தைப் பார்த்தார்.

சென்னை பத்திரிகை நிரூபர்களின் கழகத்திலிருந்து வந்திருந்தது. அன்று காலை பத்திரிகைகளில் வந்திருந்த இயக்குனர் சோமசுந்தரத்தின் பதவி விலகலைப் பற்றி வங்கி முதல்வரின் விளக்கம் கோரப்பட்டிருந்தது.

ஃபிலிப் சுந்தரம் வாசித்து முடித்து நிமிர்ந்து மாதவனைப் பார்த்தார்.

‘What should I do?’ என்றார் மாதவன்.

‘நம்ம யூனியன் லீடர்ஸ் சாதாரணமா நம்ம ஈ.டியத்தான் மீட் பண்ணுவாங்க. ஏன்னா அவர்தான் நம்ம எச்.ஆர் கமிட்டியோட சேர்மன். நானும் சுந்தரலிங்கம் சாரும் கமிட்டி மெம்பர்சா இருக்கோம். வந்தனா கமிட்டியோட கன்வீனர். நாங்க நாலு பேரும் கூட்டா தீர்த்து வைக்க முடியாத விஷயங்கள மேனேஜ்மெண்ட் மட்டும் கமிட்டிக்கு ஃபார்வேர்ட் பண்ணுவோம். அவங்க சில விஷயங்கள சேர்மனே டிசைட் பண்ணட்டும்னு ஒங்கக்கிட்ட அனுப்பிருவாங்க. அந்த டைம்லதான் சேர்மன் யூனியன் லீடர்ச சேர்மன் மீட் பண்றது வழக்கம். இது நம்ம பேங்க்லருக்கற மூனு யூனியன் லீடர்சுக்கும் நல்லாவே தெரியும்.. அப்படி இருக்கறப்ப இப்ப மட்டும் ஏன் இந்த மாதிரி லெட்டர் வந்திருக்குன்னு யோசனையா இருக்கு. There must be some compelling reasons for this request.. If you permit me I can talk to them and find out.’

மாதவன் வியப்புடன் அவரைப் பார்த்தார். ‘எதுக்கு என் பெர்மிஷன்..? As a CGM of Operations I think you have the right to talk to the union leaders.. H.R. issues come directly under your domain only, no?’

ஃபிலிப் சுந்தரம் சங்கடத்துடன் இல்லையென்று தலையை அசைத்தார். ‘It is not that way Sir, எச்.ஆர் டிவிஷன் என் கண்ட்ரோல்லதான் வருதுன்னாலும் நம்ம organisation chart பிரகாரம் ஆப்பரேஷன்ஸ் டிப்பார்ட்மெண்ட் முழுசும் நம்ம ஈ.டிக்கு கீழதான் ஃபங்ஷன் பண்ணுது. சாதாரணமா யூனியன் மேட்டர்ஸ்ல அவர கேக்காம நாங்களா எதுவும் செய்ய முடியாது. அதான் யோசிக்கேன்.’

‘I see..’ என்ற மாதவன் யோசனையுடன் ஃபிலிப்பை பார்த்தார். ‘It appears that the Bank continues to function in the old format.. சரி.. I will try to change that.. நீங்க இந்த யூனியன் லீடர் கிட்ட பேசி என்ன விஷயம், எதுக்காக சம்பிரதாயப்படி இல்லாம நேரடியா என்னெ பாக்கணும்னு லெட்டர் குடுத்துருக்காங்கன்னு கேளுங்க.. Then I will decide what to do..’

மாதவனின் உரலிலிருந்த உறுதி ஃபிலிப் சுந்தரத்தை மறுத்து பேச முடியாமல் ஒத்துக்கொள்ள வைத்தது.

‘What about the request from the Chennai Press Club? How do we respond to that?’

‘எழுத்து மூலம் நம்ம பதில சொல்றத விட நாமளே ஒரு Press Meetக்கு ஏற்பாடு செஞ்சிரலாம்னு நினைக்கேன் சார். நீங்க சார்ஜ் எடுத்ததும் இந்த மாதிரி ஒரு மீட் தேவைதானே. அதுலயே இதுக்கு நம்ம பேங்கோட ரெஸ்பான்சையும் சொல்லிரலாமே?’

மாதவன் சரி என்பது தலையை அசைக்க, ‘I will make the arrangements Sir.’ என்றவாறு எழுந்து நின்றார் ஃபிலிப். அவருக்கு நாடாரின் தொலைப்பேசி வருமே அதை எப்படி சமாளிப்பது என்ற சிந்தனை. அத்துடன் மாணிக்கவேல் என்ன ஆனார் என்பதையும் அறிந்துக்கொள்ள வேண்டும். அவர் கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வராமலிருக்க இப்போதே ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வேறு.

‘One more thing Mr.Philip.. Please sit down.’ என்றார் மாதவன்.

ஃபிலிப் சுந்தரம் மீண்டும் அமர்ந்து அவரையே பார்த்தார்.

‘நேத்து அந்த ஃபேக்ஸ் விஷயமா விசாரிக்கச் சொல்லியிருந்தேனே?’

இந்த கேள்வி மாதவனிடமிருந்து வரும் என்று அவர் எதிர்பார்த்திருந்தாலும் சட்டென்று என்ன பதில் சொல்வதென தெரியாமல் தடுமாறினார் ஃபிலிப்.

‘விசாரிச்சீங்களா?’

‘விசாரிச்சேன் சார்.’

‘Then, why are you reluctant to share with me?’

ஃபிலிப் சங்கடத்துடன் நெளிந்தார். சற்று முன் வாசித்த முரளியின் கடிதத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமோ என்று யோசித்தார். அதனால்தான் நடைமுறைக்கு புறம்பாக சேர்மனை நேரில் சந்திக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருப்பாரோ?

‘Yes?’ என்ற கேள்வியுடன் தன்னையே பார்த்த மாதவனின்  நம்பகமில்லாத பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார் ஃபிலிப்.

‘It’s only this Murali Sir.. the Union leader who has sought your appointment. அவருக்கும் சோமசுந்தரத்திற்கும் இருந்த பகை அவரை இப்படி செய்ய தூண்டியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.’

மாதவன் விளங்காமல் பார்த்தார். ‘அப்படியென்ன பகை அவங்க ரெண்டு பேருக்கும் இடையில?’

ஃபிலிப்பின் சங்கடம் மேலும் கூடியது. ‘டாக்டர் சோமசுந்தரம் எப்பவுமே யூனியன் லீடர்ச மதிச்சதில்ல சார். ரொம்பவும் ரூடா பேசுவார். அதான் காரணம்.’

‘I see.. nothing strange in that.. It’s OK. I now understand the motive that prompted him to fax that news item.. சரி அத விடுங்க.. We will deal with that later as it has already come in the papers. எனக்கு ஒங்கக்கிட்ட வேறொரு விஷயம் டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கு.’ என்ற மாதவன் தொடர்ந்து, ‘நேத்து ஈவ்னிங் ஒரு போலீஸ் டி.எஸ்.பி. என்னெ வந்து சந்திச்சார்ங்கறது ஒங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.’ என்றார்.

‘Yes Sir.. Subodh told me after you left yesterday.’

‘ஏன், எதுக்குன்னு நீங்க கேக்கவே இல்லையே?’

ஃபிலிப் புன்னகையுடன், ‘தேவைப்பட்டா நீங்களே சொல்வீங்கன்னு எனக்கு தெரியும் சார்.’ என்றார்.

மாதவன், ‘Yes.. You should know..’ என்றவாறு தொடர்ந்து முந்தைய தினம் தனபால் அவரிடம் கூறியதை சுருக்கமாக கூறினார். இறுதியில், ‘I would like to know whether his allegations against Mr.Sethu are true or not..’ என்றார் கண்டிப்பான குரலில்.

ஃபிலிப் சங்கடத்துடன் நெளிந்தார். ‘I don’t think.. It would not be fair on my part to offer my comments on this allegations Sir.. Sorry..’

மாதவனிம் முகம் சட்டென்று கோபத்தில் சிவந்துபோக ஃபிலிப் சுந்தரத்தின் சங்கடம் மேலும் அதிகரித்தது. சேதுமாதவனின் நடவடிக்கைகளைப் பற்றி அவரும் அறிந்துதான் இருந்தார். செயலிழந்த கடன்களை (non performing assets) வசூலிக்க அதிரடி நடவடிக்கைகளில் அவர் இறங்குவதை வங்கியிலிருந்த அனைத்து மேலதிகாரிகளும் அறிந்துதான் இருந்தனர். ஆனால் இயக்குனர் குழுவின் மூத்த அங்கத்தினர்கள் சிலருடைய  மறைமுக ஆதரவுடந்தான் அவர் இவ்வாறு செயல்படுகிறார் என்பதையும் அறிந்திருந்ததால் யாரும் அதில் தலையிட விரும்பவில்லை.

ஆனால் தன்னுடைய பதில் மாதவனை இந்த அளவுக்கு எரிச்சலடையச் செய்யும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, ‘I am extremely sorry Sir.. You should know my limitations.. After all he is our E.D. and reports directly to the Board..’

‘Does it mean he is not answerable to me?’ என்றார் மாதவன் கோபத்துடன்.

ஃபிலிப் சுந்தரம் சங்கடத்துடன் மவுனமாய் அமர்ந்திருந்தார்.

அவருடைய சங்கடத்திற்கு விடுதலையளிப்பதுபோல் மாதவனின் இண்டர்காம் சிணுங்க அவர் கோபத்துடன் எடுத்து, ‘Who is this?’ என்று உரும முந்தைய தினம் நாம் கண்ட சேர்மன் அல்ல இவர் என்று மனதுக்குள் நினைத்தார் ஃபிலிப். ஆனால் இப்படியொரு கண்டிப்பான சேர்மந்தான் சேதுவை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்றும் அவருக்கு தோன்றியது.

‘Sethu? What does he want?’

‘...’

‘Tell him that I am busy.. Let him not come now.’ எதிர்முனையில் இருந்தவருக்கு பதிலளிக்க வாய்ப்பளிக்காமல் இணைப்பைத் துண்டித்துவிட்டு மாறாத கோபத்துடன் தன்னைப் பார்த்த பார்வையை சந்திக்க இயலாமல் மேசையில் கிடந்த கோப்புகளை நோக்கி தன் பார்வையைத் திருப்பினார் ஃபிலிப்.

‘It’s Sethu.. He wants to meet me now..’

நிச்சயம் அந்த RBI கடிதத்தைப் பற்றித்தான் இருக்கும் என்று நினைத்தார் ஃபிலிப். அதைப்பற்றி நாமே இவரிடம் தெரிவித்துவிட்டாலென்ன என்று சிந்தித்தார். சொல்லிவிடுவதென தீர்மானித்து வாயை திறந்தவர் பிறகு இப்போது வேண்டாம் என்ற நினைப்பில் வாயை மூடிக்கொண்டார்.

‘என்ன மிஸ்டர் ஃபிலிப், ஏதோ சொல்ல வந்தாப்பல இருக்கு. கமான் ஷ¥ட்..’

இனியும் தாமதிப்பதில் பலனில்லை என்று கருதிய ஃபிலிப் முந்தைய தினம் நாடார் தன்னை தொலைப்பேசியில் அழைத்ததிலிருந்து சற்று முன் அவர் சுந்தரலிங்கத்தை சந்தித்ததுவரை ஒன்றுவிடாமல் கூறி முடித்தார்.

அவர் பேசி முடிக்கும்வரை பொறுமையுடன் இருந்த மாதவன் ஒரு ஏளன புன்னகையுடன் அவரைப் பார்த்தார். ‘அதாவது நாடாருக்கு இந்த லெட்டர் வேணும்.. ஆனா சோமசுந்தரத்துக்கு இது அவர் கைக்கு கிடைக்கக் கூடாது. இடையில பகடைக் காயா நீங்க.. Very good.. நா இதுக்கு முன்னால வேல செஞ்ச new generation bankலயும் இப்படியொரு சூழ்நிலைய சந்திக்கல.. Board Room quarrels would end in the board room itself.. It has never reached the executives.. To be frank, no executive, except the Chairman would be allowed to take part in the proceedings of the Board.. Except of course, for furnishing the clarifications required by the members.. அந்த வகையில we were fortunate not to get involved in the board room wrangling, you know.. நமக்கெதுக்கு அந்த தொல்லையெல்லாம்?.. இன்னைக்கி அடிச்சிக்கிற டைரக்டர்ஸ் நாளைக்கு ஒன்னாயிருவாங்க.. Executivesதான் தேவையில்லாம ரெண்டு க்ரூப்பா.. You can’t run an organisation like this.. You don’t trust me, I don’t trust you.. This is not the way.. ஏதாவது செஞ்சாகணும்.. ஒன்னும் சரிவரலன்னா இறங்கி போயிரவும் நா தயங்கமாட்டேன் மிஸ்டர் ஃபிலிப்.. I don’t have any particular attachment to this seat.. I just can walk out.. any day,  anytime.. I just can..’

மாதவனின் குரலில் தொனித்தது சலிப்பா, இயலாமையா அல்லது ஆதங்கமா என்பது விளங்காமல் அமர்ந்திருந்தார் ஃபிலிப் சுந்தரம்.

******

4 comments:

Meenapriya said...

sir romba suprea poguthu... ana last rendu episode konjam slow... niraya suspense appadiye irukkumbodhu ippadi slow panitingale

siva gnanamji(#18100882083107547329) said...

பிலிப் இன்னும் சிறிது துணிவுடன் செயல்படலாமே.......

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க மீனாப்ரியா,

ana last rendu episode konjam slow... niraya suspense appadiye irukkumbodhu ippadi slow panitingale //

என்ன செய்யிறது, வங்கி விஷயங்களையும் சொல்ல வேண்டுமே. முடிந்தவரை விறுவிறுப்புட கொண்டுசெல்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

பிலிப் இன்னும் சிறிது துணிவுடன் செயல்படலாமே....... //

இது நமக்கு தெரியுது. அவருக்கு தெரியலையே. சிலர் இப்படித்தான். எல்லா திறமைகளிருந்தும் தைரியமில்லாமல் இருந்த இடத்திலேயே இருப்பார்கள். அடாவடி செய்பவர்களுக்குத்தான் இது காலம்.